மின்சார சாதனங்களின் கழிவு பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்குவோம் (Post No 2638)

electronics

WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)

 

Date: 17 March 2016

 

Post No. 2638

 

Time uploaded in London :–  5-59 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 e-waste

எலக்ட்ரானிக் வேஸ்ட் எனப்படும் மின்சார சாதனங்களின் அபரிமிதமான கழிவு உலகின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்று ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும்.

 

ஐரோப்பாவில் மட்டும் 50 மில்லியன் டன் என்ற பெரும் அளவில் மின் சாதனக் கழிவு ஏற்படுகிறது என்றால் உலகெங்கும் எவ்வளவு கழிவு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கும்.

 

கணினிகள், அலைபேசிகள், அலுவலக மின்சார சாதனங்கள், பொழுது போக்கு மின்னணுச் சாதனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் என்ற இவை அனைத்திலும் ஏற்படும் கழிவுகள் மலைக்க வைக்கும் ஒன்று.

 

இவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல், வாங்குவோர், கழிவு எனத் தூக்கி எறிந்து விடுகின்றனர். சி ஆர் டி எனப்படும் காதோட் ரே டியூப் (Cathode ray tubes) மறுசுழற்சிக்கு உட்படாத ஒன்று. இதில் உள்ள ஈயம், பாஸ்பார்ஸ் (phosporsபாஸ்பரஸ் அல்ல) அபாயம் விளைவிக்கும் வீட்டு சாதனக் கழிவு என அறிவியல் வல்லுநர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்சாதனக் கழிவுகளால் ஏற்படும் திரவ மற்றும் வாயுக் கழிவுகள் மிகப் பெரும் அபாயத்தைச் சுற்றுப் புறச் சூழலில் ஏற்படுத்துகின்றன. இவை நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண், காற்று ஆகியவற்றுடன் கலப்பதால் மனிதர்களுக்கு பல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும் ஜந்துக்களும் கூட இவற்றால் பாதிக்கப்படுகின்றன. பாதரஸம், ஈயம், காட்மியம், பெரில்லியம், க்ரோமியம் மற்றும் இதர இரசாயன நச்சுப் பொருட்கள் இவற்றில் இருப்பதால் இவற்றை உரிய முறையில் அகற்ற இதற்காக பிரத்யேகமாக உள்ள அரசு அல்லது தனிப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

 

மின்னணு சாதனங்களில் அலுமினியம், தாமிரம், தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக், இரும்பு போன்ற அரிய உலோக வகைகள் இருப்பதால் இவற்றைக் கழிவாகத் தூக்கி எறிவது அரிய தாது வளத்தைத் தூக்கி எறிவதாகும். இவற்றை உரிய முறையில் பிரித்தெடுத்து மறு சுழற்சிக்கு உட்படுத்தினால் அரிய செல்வத்தைக் காத்தவர்கள் ஆவோம்.

 

மின் சாதனக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதன் மூலம் ஆற்றலை சேமிக்கலாம்; சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதைத்யுடுக்கலாம்; பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்; ஆதார வளங்களைக் காக்கலாம்; அரிய உலோகங்களைச் சேமிக்கலாம். சிந்திப்போம்; செயல்படுவோம்.

 

recycle_electronics

-subham-

பாரதியார் பற்றி அமுதன் வானொலி உரை

bharati patal, picture,fb

Compiled by ச.நாகராஜன்

Date : 7 September  2015

Post No. 2132

Time uploaded in London: – காலை 8-50

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 6

ச.நாகராஜன்

பாரதியார் பிறந்த நாள்

அரவிந்த ஆசிரமம் அமுதன்

இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.

பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.

அமுதன் அவர்கள் சிறுவயதிலேயே பாரதியாருக்கு அறிமுகமானவர். பின்னால் அரவிந்த ஆசிரமத்தில் மஹரிஷி அரவிந்தருடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. அன்னை அவர்களின் அந்தரங்கக் காரியதரிசியாகவும் அவர் ஆனார்.

வைகறை என்ற இதழ் அரவிந்த ஆசிரமம் வெளியிடும் ஒரு அழகிய தமிழ் இதழ். பிப்ரவரி, ஏப்ரல்,ஆகஸ்டு, நவம்பர் மாதங்களில் வெளி வர ஆரம்பித்த இந்த இதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்த அவர் அழகுற அருமையான தங்கம் நிகர் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தார். இந்த வைகறையில் 1970ஆண்டு மலர் 1இல் இவரது வானொலி உரை முழு வடிவில் அப்படியே பிரசுரமானது.

பாரதி அன்பர்கள் அரவிந்தரின் தொடர்பினால் மஹாகவி எவ்வளவு மகிழ்ச்சியுற்றார், அரும் படைப்புகளைப் படைத்தார் என்பதை அறிவர். அந்த நெருங்கிய தொடர்பைப் பற்றியும் மஹாகவி பற்றியும் நன்கு விளக்கிக் கட்டுரைகளைப் படைத்தவர் அமுதன் அவர்கள்.

அமுதன் அவர்களின் வானொலி உரை

அவரது உரையின் பெரும் பகுதி, அரவிந்த ஆசிரமத்திற்கும் வைகறைக்கு நாம் செலுத்தும் உரிய நன்றியுடன், அவரது சொற்களிலேயே இதோ:-

“பாரதியார் புதுவையில் இருக்கும்போது அவருடன் நெருங்கிப் பழகினவர்களில் நானும் ஒருவன்; இந்த ஒரு காரணத்தினாலேயே நான் அவரை நன்கு தெரிந்து கொண்டு விட்டதாகவும் நான் ஏதோ ஏனையோர் இதுவரை சொல்லியிராத விவரங்களை சொல்லப் போவதாகவும் நினைக்கக் கூடாது. என்னை விட அவரை அறிந்து தெரிந்தவர்கள் இருக்கத்தான் வேண்டும். பாரதியாரைப் பற்றி எண்ணிறந்த கட்டுரைகள் வெளி வந்துள்ளன – பாரதியாரின் நாட்டுப்பற்று, பாரதியாரின் இலக்கியம், முக்கியமாக – அவர் கவிதை, பாரதியாரின் புதுவை வாழ்க்கை முதலிய.

சுருங்கச் சொல்லின் இவை எல்லாவற்றையும் விட அவர் நம் தமிழ்வானின் கீழ்த்திசையில் முளைத்த வெள்ளி.

நான் பாரதியாரை முதன் முதலில் பார்த்தது 1909. அவரை தரிசித்த ஒரு வாரத்திற்குள்ளேயே அவர் சாதாரண மனிதன் அல்ல என்பது பசுமரத்தில் அடித்த ஆணி போல் என் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது. அன்று நானோ சிறுபிள்ளை.

பாரதியாரின் அசாதாரணத் தன்மை அவர் நடையிலும் உடையிலும், பாவனையிலும் பளிச்சென்று பிரகாசிக்கும்; அதை நாம் வேண்டாவிடினும் அதை கவனித்தே ஆக வேண்டியிருக்கும்.

பாரதியார் ஆதர்ச புருஷன் – கொண்ட ஆதர்சத்தில் முழுக்க ஈடுபட்டவர்; அவரிடம் எதிலும் அரைகுறை என்ற பேச்சே கிடையாது. ஒரு கொள்கையை அவர் உள்ளம் கண்டதும், அதைக் கொண்டதும், உடனே அந்த க்ஷணமே அதைக் கைக்கு மெய்யாக ஆக்கி விடப் பார்ப்பார், ஆக்கியும் விடுவார். கொள்கைக்கும் செய்கைக்கும் மத்தியில், அவர் வரை, இடைவெளி கிடையாது.

இன்று போல் அல்ல அன்று. இன்று நாம் ஒளியை விட்டு விலகி, மண்ணோடு மண்ணாய் விட்டோம். இன்று, “வருமானம் என்ன, செலவு என்ன, சாப்பாட்டிற்கு வழி என்ன, எவ்வளவு சேகரம் செய்தோம்?” என்பன போன்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் தனி மனிதனையும் மக்கள் குழாத்தையும் ஆட்டிக் கொண்டிருக்கின்றன. அன்றோ மக்கள் உள்ளத்தில் தீ சுடர் விட்டெரியக் கண்டோம். அச்சுடரை மூர்த்திகரிக்கும் ஆதர்ச புருஷர்கள் மக்களிடை சஞ்சாரம் செய்தார்கள். அத்தகைய மூர்த்திகளில் ஒருவர் பாரதியார். அவர் மண்ணுலகில் நடமாடிய போது நாம் விண்ணுலகில் வாழ்வதாக நினைத்தோம். அவர் ‘விடுதலை’ என்னும் மந்திரச் சொல்லைக் கர்ஜித்த போது நாம் நமது தளைகள் அறுந்து இறக்கை கட்டி விண்ணில் பறப்பதாக எண்ணினோம். மண்ணும் ஒளிர்ந்தது.

பாரதியார் வாழ்ந்த காலம் மண்ணில் விண்ணைக் கண்ட காலம்.பாரதியார் தன் பாடல்களைப் பாடிய மாதிரி வேறெவரும் பாடி நான் கேட்டதில்லை – அந்த ஆவேசம், அந்த சக்தி, அந்த உத்ஸாஹம், அந்த தாண்டவம் நான் மீண்டும் காணவில்லை.

பாரதியார் வாக்கில், அவர் சொல்லில் ஓர் அமாநுஷ்யம், தைவதம் மிளிர்ந்தது – அது தெய்வ சம்பத்தல்லவா?

எவரிடமும் அவருக்கு அவநம்பிக்கையே கிடையாது – பச்சைக் குழந்தை உள்ளம். தன் பொருள், பிறர் பொருள் என்பதும் அவரிடம் கிடையாது – ஒருவித சரளம், அவர் பிறரிடம் சல்லாபம் செய்யும்போது.

பட்டினத்துப்பிள்ளை: “பொய்யாய்ப் பழங்கதைக் கனவாய் மெல்லப் போனதுவே”

பாரதி: “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற்புதிது, சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை”

மேனி சிலிர்க்க வைக்கும் மெய்யுரை

எப்படிப்பட்ட உரை! மண்ணகத்தில் விண்ணகத்தைக் கண்ட காலத்தில் மஹாகவியுடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற பெரியவர் அல்லவா அமுதன்!

அவர் உரை மேனி சிலிர்க்க வைக்கிறது. பாரதி அன்பர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அற்புத உரை இது!

*************