அதிசய புத்த துறவி ஸு யுன்! – 13 (Post no.3220)

buddha-face-sudhakar-chalke

Written by S. NAGARAJAN

Date: 5 October 2016

Time uploaded in London: 8-11 AM

Post No.3220

Pictures are taken from various sources; thanks

 

 

.நாகராஜன்

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 13

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 67. பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளிடம் மடாலயத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான வரிகளைத் தள்ளுபடி செய்யுமாறு ஸு யுன் கோரிக்கை விடுத்தார்.

 

 

அதிசயமாக அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அடுத்து அங்கு திரிபிடகத்தின் ஒரு நகலை வைக்க ஸு யுன் விழைந்தார். அதுவும் ஏற்கப்பட்டது. அனைவரும் மன மகிழ்ச்சி அடைந்தனர்.

வருட முடிவு நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பீஜிங்கிலேயே ஸு யுன் தங்கி இருந்தார்.

 

 

அடுத்த வருடம், ஸு யுன்னின் 68ஆம் வயதில் அவர் ஷாங்காய் மற்றும் அமாய் நகர்களுக்குச் சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு துயரச் செய்தி கிட்டியது. மவுண்ட் கு வில் இருந்த வ்யதான துறவி மியாவோ-லியான் மறைந்து விட்ட செய்தி கேட்டு ஸு யுன் மிக்க வருத்தமுற்றார். அவரது தகன கிரியைக்கு ஏராளமான துறவிகள் அங்கு சென்றனர்.

ஸு யுன்னும் அங்கு விரைந்தார்.

 

 

அவருக்கு நினைவுச் சின்னமாக வழக்கமான முறையில் ஒரு பகோடா நிறுவப்பட்டது.

நான்காம் மாதம் 10ஆம் நாளில் பகோடா முடிந்த நாளனறு சரியான மழை.

 

siddhartha_by_elvis882.jpg

அந்த ம்ழை 15 நாட்கள் தொடர்ந்தது. அடுத்த மாதம் எட்டாம் நாள் மழை நின்றது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பத்தாம் நாள் பகோடாவின் மீது ஸ்தூபி நிறுவப்பட்டது. நூறு மேஜைகளில் சைவ உணவு பரிமாறப்பட்டது. சூத்ரங்கள் சொல்லப்பட்டன.

 

 

உணவு படைக்கப்படும் போது சொல்லப்படும் மந்திரங்கள் ஓதப்பட்ட்ன.

திடீரென ஒரு சுழல் காற்று வீச ஆரம்பித்தது.ஸ்தூபியிலிருந்து ஒரு பிரகாசமான சிவப்பு ஒளி வீச ஆரம்பித்தது. படைக்கப்ப்ட்ட உணவு அனைத்தையும் ஸ்தூபத்தின் உச்சிக்கு  காற்று மேலே தூக்கிச் சென்றது. இந்த அற்புதமான காட்சியைக் கண்டு அனைவரும் மெய் சிலிர்த்துப் போற்றினர்.

அனைவரும் மடாலயம் திரும்பிய பின்னர் அடை மழை ஆரம்பித்தது.

 

 

மியாவோ-லியானின் அஸ்தியுடன் ஸு யுன் பினாங்கு வந்தார். அங்கு அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.\

 

அங்கும் சூத்ரங்கள் சொல்லப்பட்ட பின்னர் ஒரு சுழற்காற்று தோன்றியது படைக்கப்பட்ட அனைத்தும் ஆயிரக்கணக்கான மலர்களுடன் மேலே தூக்கிச் செல்லப்பட்டது. ஒரு சிவப்பு நிற ஒளி பகோடாவின் உச்சியிலிருந்து வீசியது.

 

 

 

இந்த இரு நிகழ்ச்சிகளை ஸு யுன் நேரில் கண்டு அனுபவித்தார். அவருக்கு புத்தரின் பொன்னான வாசகம் நினைவுக்கு வந்தது.

“ தொன்று தொட்டு இருந்து வரும் சடங்குகள் ஏற்கப்படும் விதம் மிகவும் மர்மமானது”

பின்னர் ஸு யுன் தாய்லாந்திற்கு – அப்போதைய சயாமிற்கு – கப்பலில் சென்றார்.

 

 

அப்போது ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அவரிடம் வந்து, “எங்கு செல்கிறீர்கள்” என்றார்.

ஸு யுன் : யூனானுக்கு

“அங்கு எங்கு தங்குவீர்கள்?”

 

 

“காக் ஃபுட் மலையில் உள்ள மடாலயத்தில்”

அவர் தன்னைப் பற்றித் தெரிவித்தார்.

டெங்கு யு வில் அவர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியாக இருந்தவர்.

ஸு யுன் நன்கொடை திரட்டுவதை அறிந்த அவர் உடனே முன்னூறு டாலர்களைத் தந்தார்.

இது அவரது நல்ல கர்மாவின் விளைவே என்பதை ஸு யுன் உணர்ந்தார்.

 

 

கப்பல் சயாமை அடைந்தது.

ஸு யுன் பிரிட்டிஷ் அதிகாரியிடம் விடை பெற்றார்.

யூனானில் போதிசத்வரின் க்ஷிதிகர்ப சூத்ரங்களை ஸு யுன் விளக்கலானார்.

 

ஒரு நாள் அதே பிரிட்டிஷ அதிகாரி ஸு யுன்னைப் பார்க்க வந்தார். அவரிடம் 3000 டாலர்களை நன்கொடையாகத் தந்தார்!

திரிபிடகத்தை நிறுவ ஏராளமான பணம் ஸு யுன்னுக்குத் தேவையாக இருந்தது. இந்தப் பணத்தை சந்தோஷமாக அவர் பெற்றார்.

 

ஒரு நாள் கால்களை சம்மணம் போட்டு அமர்ந்த நிலையில் ஸு யுன் சமாதி நிலையை எய்தினார்.

ஒன்பது நாட்கள் அதே நிலையில் இருந்த அவர் சகஜ நிலைக்கு மீளவில்லை.

 

 

செய்தி நகரெங்கும் பரவியது. மக்கள் திரளாக அவரை தரிசிக்கக் கூடினர்.

 

 

ஒன்பது நாட்களுக்குப் பிறகு சமாதியிலிருந்து அவர் மீண்டார். தாய்லாந்து மன்னர் அவரை தரிசித்து தன்னை அவரது சிஷயனாக ஏற்குமாறு பணிவன்புடன் வேண்டினார்.

இப்போது பல்லாயிரம் பேர் அவரது சிஷ்யர்களாக மாறினர்.

ஒன்பது நாள் அமர்ந்த நிலையில் முதலில் கால்கள் நகர முடியாமல் மரத்துப் போயின. உடலிலும் அதே உணர்ச்சி!

இதை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. ஒரு வேளை மரணம் அணுகினால் காக் ஃபுட் மலையில் உள்ள அறை கட்டப்பட மாட்டாது. அதில் திரிபிடகம் இடம் பெறாது.

என்ன செய்வது?

 

 

அவர் உறங்குகையில் ஒரு கனவு வந்தது.

 

 

அதில் ஒரு வயதான மனிதன் தோன்றினான். அவரிடம், “பிட்சுவே! உன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாதே!

உனது துவராடையை  மடி. உன் திருவோட்டை அதை வைத்து  மூடி தலைகாணியாக அதை வைத்துக் கொண்டு தூங்கு” என்றார்.

விழித்தவுடன் ஸு யுன் அப்படியே செய்தார். உடலெல்லாம் வியர்த்தது.

 

 

இரண்டு நாளில் உடல் நலம் சீரடையத் தொடங்கியது. இருபது நாட்களில் அவர் பூரண குணமடைந்தார்.

 

 

அவர் சூத்ரங்களை விளக்கி ஆற்றிய் உரைக்காக அரசர் டாங் லி என்னும் இடத்தில் 4550 ஏக்கர் நிலத்தைப் பரிசாக அளித்தார். அதை ஏற்ற ஸு யுன் அந்த நிலத்தை ஜி லுவோ மடாலயத்திற்கு அளித்தார். அங்கு ஒரு ரப்பர் தொழிற்சாலையை நிறுவி ஒரு நிரந்தர வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

 

 

புது வருடம் தொடங்கிய போது தொழிற்சாலை தயாரானது. அந்தத் தொழிற்சாலையிலேயே ஸு யுன் புது வருடத்தை வரவேற்றார்

– தொடரும்

, “

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -2

hsuyunportrait3

Written  BY S NAGARAJAN

Date: 22 April 2016

 

Post No. 2751

 

 

Time uploaded in London :–  15-47

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் (Xu Yun or Hsu Yun) பற்றிய இரண்டாவது கட்டுரை இது.)

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -2

.நாகராஜன்

பொதுவாக தனது நீண்ட நெடும் வாழ்க்கையில் காலால் நடந்தே அனைத்து தலங்களுக்கும் சென்றிருக்கிறார் ஸூ யுன் (Xu Yun). நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் மட்டும் படகில் ஏறிப் பயணம் செய்வார்.

அத்துடன் அவருடைய அதிசயமான ஒரு பழக்கம் ஒவ்வொரு மூன்று அடிகளிலும் புத்த மதத்தின் த்ரி ரத்தினங்களுக்குமூன்று ரத்தினங்களுக்குநமஸ்காரம் செய்வார். புத்தமதத்தின் த்ரி ரத்தினங்கள் என்று போற்றப்படுபவை புத்தர், தர்மா, சங்கம்!

இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மூன்று அடிக்கும் த்ரி ரத்தின நமஸ்காரம் செய்து சென்றதால் இவரது நடைப்பயணம் சற்று மெதுவாகவே நடந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம்.

ஏராளமானோர் இப்படி அதிசயிக்கத்தக்க விதத்தில் மூன்று அடிக்கு நமஸ்காரம் செய்வதைப் பற்றிக் கேட்டு வியப்பர். அவரைப் பற்றிய மரியாதை கூடி பயபக்தியும் அதிகமாகும்கம்யூனிஸ்ட் கயவர்களைத் தவிர!

தனது வயிற்று உணவுக்கு இவர் பின்பற்றியது  பை ஸாங் ஹுய்ஹாய் (Master Bai zhang Hu-hai) என்பவரது வழியை. ஆங்காங்கே உள்ள ஆலயங்கள் மடாலயங்களுக்கு உரிய நிலத்தில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் பயிரை வைத்து வாழ்க்கையை நடத்துவது இவர் பாணி!

வேலை செய்யாத ஒரு நாள், உணவு அருந்தாத ஒரு நாள்என்பது இவரது  கொள்கை. ஆகவே வாழ்நாள் முழுவதும் வேலை செய்து  கொண்டே இருந்தார்.

ஸூ யுன் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி க்வான் ஜோ (Quanzhou) என்ற இடத்தில் பிறந்தார். (1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மறைந்தார்.)

அவரது தாயார் பிரசவ வேதனையால் துடித்து கடைசியில் ஒருபையைகருப்பையிலிருந்து வெளியேற்றினார்.

ஆசை ஆசையாக ஒரு மகன் பிறப்பான் என்று எண்ணியிருந்த அந்தத் தாய் தன் வயிற்றிலிருந்து ஒரு பை வெளியானதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

இன்னொரு குழந்தை தனக்கு பிறக்கவே முடியாது என்ற மனவிரக்தியில் ஆழ்ந்தார்.மயக்கமுற்றார்.

இந்த மனவேதனையில் உடனடியாக அவர் மரணம் சம்பவித்தது.

அடுத்த நாள் மருந்துகள் விற்கும் வயதான முதியவர் நடந்ததைக் கேட்டுப் பையைக் கீறினார்.

அதற்குள்ளிருந்து வந்தார் ஸூ யுன். இப்படி அவரது பிறப்பே அதிசயமாக அமைந்தது! குழந்தையை பாட்டி கண்காணித்து வளர்த்தார். மாமாவின் ஆதரவில் குழந்தை வளர்ந்து 11 வயது ஆனது.

பாட்டிக்கு ஒரு ஆசை டியான் மற்றும் டான் (Tian and Tan families) குடும்பங்களிலிருந்து குடும்பத்திற்கு ஒன்றாக இரு பெண்களைத் தன் பேரன் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று. ஆனால் அந்த ஆண்டு குளிர் காலத்தில் பாட்டி காலமானார்.

13ஆம் வயதில் வீட்டிலிருந்த புத்த மத நூல்களை ஸூ யுன் படிக்க ஆரம்பித்தார். தன் மாமாவுடன் நான் யுயே (Nan Yuye)என்ற இடத்திற்குச் சென்று பல புத்த மடாலயங்களுக்குச் சென்றார்.

பூர்வ ஜென்ம நல்வினையின் காரணமாக அவருக்கு வீடு திரும்ப மனம் இல்லாமல் போனது.

ஆனால் மாமாவோ கூட இருந்து அவரை வீடு திரும்ப வற்புறுத்தினார். வேறு வழியில்லாமல் வீடு வந்தார் ஸூ யுன்!

                                          –தொடரும்

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1 (Post No. 2747)

Hsu-Yun-

Compiled  BY S NAGARAJAN

Date: 22 April 2016

 

Post No. 2747

 

 

Time uploaded in London :–  11-23  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது இன்னும் சிலர் பற்றி அறிவோம்.)

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1

 

.நாகராஜன்

ஒவ்வொரு புத்த மடாலயத்திலும், சீனாவில் ஒவ்வொரு இல்லத்திலும் மிக்க பயபக்தியுடன் உச்சரிக்கப்படும் பெயர் ஸு யுன்!

 120 ஆண்டுகள் வாழ்ந்ததோடு நேரடியாக ஆன்மீக வாழ்க்கையை 101 ஆண்டுகள் புத்த துறவியாக இருந்து வாழ்ந்து காட்டிய ஒரு பெரியவர் என்பதால் அவர் ஒரு அதிசய புருஷர்!

அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நிறைந்திருப்பதால் அவர் வாழ்க்கை சரிதம் ஒரு அபூர்வ சரிதம்!

நூற்றுக்கணக்கான சீடர்களை அவர் ஆங்காங்கே உருவாக்கினார். சில சமயம் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டது.

மிங் வமிசத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) என்பவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு பெரும் சீடர் கூட்டம் இருந்தது.

 

 

அவர் காலத்திலும் ‘தர்மா’ (புத்த தர்மம்) நலிவுற்று அழியும் தருணத்தில் இருந்தது. அதற்குப் புத்துயிரூட்டி நலிவடைந்திருந்த ஏராளமான ஆலயங்களை புனருத்தாரணம் செய்தார் அவர்.

அதே போல ஸூ யுன் காலத்திலும் சீனாவில் மாசேதுங் ஆட்சியால் புத்த தர்மத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அந்தக் காலத்திலும் கூட இவர் தளரவில்லை. இவர் பட்ட கொடுமைகள் சகிக்க முடியாதவை.

இருந்தாலும் ஏராளமான புத்த ஆலயங்களை இவர் புதுப்பித்தார். புத்த தர்மத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அளித்தார்.

ஆகவே இந்த இரு புத்த குருமார்களையும் வரலாறு ஒப்பிடுகிறது. இவரை ஹான் – ஷான் திரும்பி வந்து விட்டார் என்று சீன மக்கள் செல்லமாகக் குறிப்பிட்டனர்.

இருவரின் வாழ்க்கையிலும் ஏராளமான ஒற்றுமை சம்பவங்கள் உண்டு.

 

1840 ஆம் ஆண்டு ஸூ யுன் பிறந்தார்.ஓபியம் போர் முடிவுக்கு வந்த காலம் அது.1843ஆம் ஆண்டு ஹாங்காங் நகரம் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மஞ்சு வமிசம் 1911இல் முடிவுக்கு வந்தது. சீனாவின் புதிய தலைவர்கள் புத்த மதத்திற்கு எதிராகவே திரும்பி விட்ட தருணம் ஆரம்பித்தது.

ஏராளமான புத்த மடாலயங்கள் கம்யூனிஸ கொடுங்கோலர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே சிதிலமாக இருந்த மடாலயங்கள் வேறு இடிந்து வீழ்ந்தன. பஞ்சம், கொடும் நோய்கள் என சீனாவை துயரம் பிடித்து ஆட்டியது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பானிய படை வேறு வட சீனாவை ஆக்கிரமித்தது.

hsu yun 2

இப்படிப்பட்ட ஒரு மோசமான கால கட்டத்தில் தான் ஸூ யுன் தோன்றினார்.

ஆனால் அவர் மதிப்போ மிகவும் பெரிது. அவர் தாய்லாந்து விஜயம் செய்த சமயம் அந்த நாட்டின் மன்னரே அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

தான் வாழ்ந்த நீண்ட 120 ஆண்டுகள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் அவர்.

ஒரு மடாலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிச்சயித்து அந்த  இடத்திற்கு அவர் சென்றால் கையில் ஒரு கம்புடன் மட்டுமே செல்வார். அந்த கம்பு ஒன்றே அவரது உடைமை.

அந்த மடாலயம் அல்லது கோவிலின் புனருத்தாரண வேலை முடிந்து விட்டால் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார் – கையில் இருந்த ஒரே உடைமையான கம்பை அந்த இடத்தில் போட்டு விட்டு!

அபூர்வமான அந்த அற்புத புருஷரின் வாழ்க்கை சரிதத்தை இங்கு வழங்குவதில் பெருமிதப்படுகிறோம்.

                                        -தொடரும்