கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1454; தேதி 3 டிசம்பர், 2014.
பகவத் கீதையைப் படிக்க நேரமில்லையா? இதோ முக்கியமான பத்து கட்டளைகள். ஒரே நிமிடத்தில் படித்து முடிக்கலாம். நேரம் கிடைக்கும் போது சித்பவானந்த சுவாமிகள் எழுதிய பகவத் கீதை உரையை வாங்கி முழு அர்த்தத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
1.உத்தரேத் ஆத்மநாத்மானம் (அத்தியாயம் 6- ஸ்லோகம் 5)
உன்னையே நீ உயர்த்திக் கொள்
2.உத்திஷ்ட! யசோ லப! (11-33)
எழுந்திரு ! புகழ் அடை!
3.க்லைப்யம் மாஸ்ம கமஹ (2-3)
பேடித்தனத்தை அடையாதே
4.கர்மண்யேவ அதிகாரஸ்தே, மா பலேஷு கதாசன (2-47)
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே (வேலை செய்வது உன் கடமை)
5.மாம் ஏகம் சரணம் வ்ரஜ, மா சுசஹ (18-66)
என்னையே சரண் அடைவாய்! கவலையைக் கை விடுக.
6.ந சாந்திம் ஆப்னோதி காமகாமி (2-70)
ஆசையை விடாதவனுக்கு அமைதி என்பதே இல்லை
7.சம்சய ஆத்மா விநஸ்யதி (4-40)
சந்தேகப் பேர்வழிகள் அழிவார்கள்
8.ஸ்ரத்தவான் லபதே ஞானம் (4-39)
நம்பிக்கை உடைவோர் ஞானத்தைப் பெறுவார்கள் ( நம்பினார் கெடுவதில்லை)
9.ஸ்ரேயான் ஸ்வ தர்மோ (18-47)
அவரவர் தொழிலே (தர்மமே) சிறந்தது
10.ந ஹி கல்யாண க்ருத் கஸ்சித் துர்கதிம் (6-40)
நல்லது செய்பவனுக்கு ஒரு போதும் கெடுதல் வராது.
Please read my previous articles on Bhagavad Gita
Contact swami_48@yahoo.com



You must be logged in to post a comment.