Honour and Hypocrisy Anecdotes (Post No. 2358)

Flag-Pins-France-Switzerland

Compiled by London swaminathan

Date: 24 November 2015

Post No. 2358

Time uploaded in London :– 14-46

( Thanks for the Pictures  ) 

 

French and Swiss

“Why is it”, asked a Frenchman of a Swiss, “that you Swiss always fight for money, while we French only fight for honour?”

“I suppose,” said the Swiss, “that each fight for what they most lack.”

 

Xxx

German, French and the British!

A German officer, talking to a senior member of British embassy in Berlin in 1933 the made the odd remark that the British are gentlemen, but the French are not.

 

Asked what he meant, he explained: “One day in 1920, some of the military control commission under a French and British officer, came to the barracks of which I had charge. They said that they had reason to believe that I had a store of rifles concealed behind a brick wall, contrary to the terms of the Peace Treaty. I denied this. ‘I give you my word of honour as a German officer,’ I said, ‘that I have no rifles concealed in the barracks’.

 

“Well, your British officer was a gentle man. He accepted my word of honour and went away. But the French officer was not a gentleman. He would not accept my word of honour. He pulled down the brick wall. And he took away my rifles.”

Flag-Pins-Germany-Great-Britain

Xxx

Informer

An officious informer came to tell Cardinal Richelieu of certain free expressions that some persons had used in speaking of him. “Why how now!” said the cardinal, “do you dare to come and call me all these names to my face, under the pretence of their having been said by honest gentlemen?”

 

Ringing his bell, he said to the page in waiting, “Kick that fellow down the stairs.”

 

Xxx

Room for more Hypocrites

The Bishop of Hertford was once being patronised by a great lord who talked very insolently.

“I never go to church,” boasted the lord. “Perhaps you have noticed that, Bishop?”

“Yes, I have noticed it” answered the Bishop gravely.

 

“Well, the reason I don’t go is that there are so many hypocrites there.

“Oh, you don’t let that keep you away”, said the Bishop smiling blandly. “There is always room for one more, you know.”

 

Xxx

 

yellow-canaries

Am  I a Brute?

Julius Streicher, Hitler’s No.1 Jew persecutor, complained recently to foreign correspondents about the way the foreign press portrays him as a depraved brute. “Of course”, he explained, “I do fight the Jews in every way I can, but in private life I am far from heartless. For example, I have two pet canaries, and whenever I am late coming home I stumble around in the dark rather than turn on the light on and wake them up.”

 

–From an old Encyclopaedia of Anecdotes.

தாசியை ஏமாற்றிய ஜோசியர்! (Post No. 2357)

astrologer

Compiled by London swaminathan

Date: 24 November 2015

Post No. 2357

 

Time uploaded in London :– 9-04 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

எமகாத ஜோஸிய கிண்டன், மோச நாச தர்மராஜ ஜோஸியர்—கதை 2 (முதல் கதை நேற்று வெளியாகியது)

 

தர்மராஜ ஜோஸியர், சிப்பாயைப் புலியின் கையில் ஒப்படைத்துவிட்டு அமிர்தபுரி என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தாசிகள் வசிக்கும் தெரு வழியாகச் செல்லுகையில் ஆங்குள்ள ஒரு பெரிய மாடி வீட்டில் நுழைந்தார். அந்த இடத்தில் வரைந்த படத்தைப் பார்த்து, அதன் கீழே எழுதியிருந்ததை வாசித்தார். “ஜெகம் புகழ், சங்கீத பரத நளின, சரச உல்லாச லீலாவமிர்த பூஷணியாகிய சரசவல்லி என்ற மனோன்மணியிடம் வரப் பிரியப் படுபவர்கள் இரவு ஒன்றுக்கு ரூபாய் இரு நூறு கொடுக்கவேண்டுமென்று கண்டிருக்க இவளையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உள்ளே நுழைந்தார்.

 

அங்கேயிருந்த தாய்க்கிழவியுடன் சம்பாஷித்து, சம்மதித்த பின்னர் சரசவல்லியிடம் சாதுர்யமாகப் பேசினார். அப்போது கிழவியைக் கூப்பிட்டு, இந்தா அரை ரூபாய், இதற்கு குதிரைக்குப் போட நயமான கொள்ளு வாங்கிவா வென்று அனுப்பினார். அவள் பின்னாலேயே அவளுக்குத் தெரியாமல் சென்றார். அவள் கால் ரூபாய்க்கு கொள்ளு வங்கியதைக் கண்டறிந்தார். சட்டென்று தாசி வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

 

free_horse_lines_by_s1088-d4rfsuo

அன்றிரவு அம்மனோகரியிடம் மனம்போனபடி சுகானுபவங்களை அனுபவித்துவிட்டு, இரவு இரண்டு மணிக்கு குதிரை லாயத்துக்கு வந்து, குதிரை லத்திகளைக் கையிலெடுத்து ஆயிரம் ரூபாய் நாணயங்களை அதனுள்ளே திணித்தார். பின்னர் படுக்கச் சென்றார். விடிந்ததும் காப்பி சாப்பிட்டுவிட்டு கிழவியை அழைத்தார். அவளை ஒரு பெரிய அண்டாவைக் கொண்டுவரச் செய்து, அதில் குதிரை லத்திகளைப் போட்டு தண்ணீர்விட்டுக் கலக்கினார். அப்போது கிழவிக்கு முன், ஆயிரம் ரூபாய் நாணயங்களையும் எடுத்து வைத்தார் அதைக் கண்ட தாசி சரசவல்லி, குதிரை லத்தியில் ஆயிரம் ரூபாய் நாணயங்கள் எப்படி வந்தன என்று வியப்புடன் கேட்டாள்.

ஜோஸியர்: ஏ கிழவி! நீ கால் ரூபாய்க்குத் தானே கொள்ளு வாங்கினாய்?

கிழவி: இல்லை, சாமி. தாங்கள் கொடுத்த அரை ரூபாய்க்கு வாங்கினேன்.

ஜோஸியர்: ஏ, துஷ்டி! பொய் சொல்லாதே. அரை ரூபாய்க்கு கொள்ளு வாங்கியிருந்தால் 2000 ரூபாய் கிடைத்திருக்குமே, பொய் சொல்லாமற் சொல் என்றார். கிழவியும் உண்மையை ஒப்புக்கொண்டாள்.

 

இதையெல்லாம் பார்த்த தாசிக்கு குதிரையை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை எழுந்தது.

 

சரசவல்லி: என் பிராண நாதரல்லவா நீங்கள்! அந்தக் குதிரை என் வீட்டிலேயே இருக்கட்டும்.நான் 16,000 ரூபாய் தருகிறேன் என்றாள்.

 

ஜோஸியர்: இந்தா சரசம்! அதெல்லாம் சொல்லாதே. இந்தக் குதிரையை நான் சம்பாதிக்க பட்டபாடு பகீரதப் பிரயத்தனமென்பது போல் நிரம்பக் கஷ்டப்பட்டுக் கிடைத்தது. அதையன்றி வேறு சமாச்சாரம் பேசு, இன்னும் ஐநூறு வேண்டுமேனாலும் நான் உனக்குத் தருவேன் என்றான். ஆசை யாரை விட்டது? வெகுநேரம் தர்க்கமாடிப் பிறகு 20,000 ரூபாய் பெறுமான நகைகளையும், ரொக்கம் 16000 ரூபாயையும்  பெற்றுக் கொண்டு குதிரையைக் கொடுத்துவிட்டு ஜோசியர் கம்பிநீட்டினார்.

wedding

அப்படிப் போகையில் ஒரு ஊரில் ருது சாந்திமுகூர்த்தம் – அதாவது ருதுவான பெண்ணுக்குச் சாந்தி செய்யக் கூட்டம் கூடியிருந்தது. இந்த தர்மராஜ ஜோசியரும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து போஜனம் முதலானவற்றைச் செய்துமுடித்தார். கலியாண மாப்பிள்ளையை தனியாக அழைத்து வேடிக்கையாகப் பேசி கையில் கஞ்சா லேகியத்தைக் கொடுத்தார். இது ஒரு சஞ்சீவி மருந்து சாப்பிட்டால் நல்ல சுகம் கிடைக்குமென்று சொல்ல மாப்பிள்ளையும் அதை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜோசியர் அவனுடைய புது வஸ்திரங்களைப் போட்டுக்கொண்டு, கலியாண வீட்டுக்குப் போய்நி ற்க, ஒருவர் அவரை “மாப்பிள்ளை, மாப்பிள்ளை” என்றழைக்க இவர் என்ன கூப்பிட்டீர்களா? என்று முன்னால் சென்றார். முகூர்த்த லக்னம் தவறிவிடப் போகிறதேயென்று கவலைப்பட்ட புரோகிதர் ஜோசியரை மாப்பிள்ளை என்று நம்பி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து இருவரையும் சயன கிருகத்துக்கு (படுக்கை அறை) அனுப்பிவைத்தார். ஜோசியர் காலையில் எழுந்து புதுமணப்பெண்ணை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தார்.

 

சில நாட்கள் சென்றதும், ஜோசியரிடம் ஆட்டை விலைகொடுத்து வாங்கிய பிராமணனும், குதிரை வாங்கிய தாசியும், கஞ்சா லேகியம் சாப்பிட்ட மாப்பிள்ளையும் ஜோசியரைத் தேடி வந்தார்கள். அபோழுது ஜோசியர், போஜனம் முடிந்து வெற்றிலைச் செல்லத்துடன் திண்ணையில் வந்து அமர்ந்தார். அவகளைப் பார்த்து, எப்படி இங்கே வெகு தூரம் வந்தீர்கள்? சாப்பாடு ஆகிவிட்டதா? இல்லாவிட்டால் ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு வாருங்கள். உங்கள் முகத்தைப் பார்த்தாலே பசிக் களைப்பு தெரிகிறது என்றார். இதெல்லாம் பசப்பு வார்த்தைகள் என்று அறிந்து, சாப்பிடச் செல்வதாக வெளியே வந்தனர். மறைவாக நின்றுகொண்டு, ஜோதிடர் வெளியே வரும்போது, அவரைப் பிடித்து ஒரு சாக்கில் போட்டுக் கட்டினர். ஜோதிடர் இருந்த சாக்குப் பையை மலையிலிருந்து உருட்டிவிட ஏற்பாடு செய்தனர்.

 

ஒரு வேலைக்காரன், ஜோதிடர் அடைக்கப்பட்ட மூட்டையை தலைமேல் சுமந்து சென்றான். அவனுக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டுமென்பதால், மூட்டையைக் கிழே வைத்துவிட்டு வயல் வரப்புக்குச் சென்றான். ஜோதிடர் யாரோ நடந்து வரும் காலடிச் சப்தம் கேட்டு, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்”, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்” என்று கத்திக் கொண்டேயிருந்தார். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறத்தான், அந்த மூட்டையை அவிழ்த்துவிட்டு என்ன செய்தி? என்று கேட்டான்.

அப்பா! எனக்கு ஒரு அழகிய ராஜா மகளைக் கலியாணம் செய்துவைத்து ராஜாவாகப் பட்டபிஷேகம் செய்ய வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். நான் வேண்டாமென்கிறேன் என்றார். அதைக் கேட்ட நாட்டுப்புறத்தான, ஐயா, கவலைப்படாதீர்கள் என்னை மூட்டையில் வைத்துக் கட்டுங்கள். நான் போகிறேன் என்றான். உடனே ஜோஸியர், அவனை சாக்குப் பையில் கட்டிவைத்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் மறைவாக நின்று வேடிக்கை பார்த்தார். சிறுநீர் கழித்துவிட்டுக் கைகால் கழுவிய வேலைக்கரன் அந்த மூட்டையைச் சுமந்து சென்றதைப் பார்த்தபின்னர் நிம்மதியாக வீடுபோய்ச் சேர்ந்து சுகமாக வாழ்ந்தார்.

–சுபம்–

 

மரங்கள் மடியும் அபாயம்! விழிப்புணர்வு தேவை !! (Post No. 2356)

GREEN, BEAUTY

Radio Talk written by S NAGARAJAN

Date: 24 November 2015

Post No. 2356

 

Time uploaded in London :– 6-05 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகெங்கும் மரங்கள் இன்று மடிய ஆரம்பித்துள்ளன.இதற்கு கனடாவிலும் ரஷியாவிலும் உள்ள அழிந்து வரும் காடுகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

கிரேக்க நாட்டிலோ பைன் (Pine) மரங்கள் அழிந்து வருகின்றன.ஆப்பிரிக்காவிலோ செடார் (Cedar) மரங்கள் அழிந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் (Eucalyptus)  மரங்கள் உள்ள காடுகள் தீப்பற்றி அந்த மரங்கள் அழிந்துள்ளன. அற்புதமான அமேஸான் பிராந்தியமோ இரு முறை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது!

 

28tv_elephant_jpg_2324750g

இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள விஞ்ஞானிகள் ஏன் இப்படி மரங்கள் மடிகின்றன என்று ஆராயப் புகுந்தனர். தங்கள் ஆய்வின் விளைவாக நீர் பற்றாக்குறை, பூச்சிகளின் தாக்கம் மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகிய காரணங்களே மரங்களின் அழிவுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

 

 

இந்த மரங்களின் ஆய்வில் பெரும் விஞ்ஞானியும் நிபுணருமான மக்டவல் ஈடுபட்டுள்ளார்.உலகின் பிரம்மாண்டமான மர ஆய்வு மையம் ஒன்றை லாஸ் அலாமாஸில் (Los Alamos) நிறுவி பட்டுப் போகும் மரங்களுக்கான சிகிச்சையையும் அவர் அளித்து வருகிறார். 63 பின்யான் (Pinyon) மற்றும் ஜுனிபர் (Juniper) மரங்கள்  இந்த மையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள  12 தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு உஷ்ணநிலை இனி வரப்போகும் ஆண்டுகளில் உயரப்போகும் 7 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

இது தவிர உலகெங்கும் உள்ள 81 இடங்களில் உள்ள காட்டில் வளரும் 226 தாவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

 

 

ஆய்வு மையத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் அதி நவீன சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை  சோதனை அளவுகளும் எடுக்கப்படுகின்றன. சில அளவுகள் மாதம் ஒரு முறை எடுக்கப்படுகின்றன.

இந்த பிரம்மாண்டமான ஆய்வை மேற்கொண்டுள்ள மக்டவல் மரங்களும் தாவரங்களும் பசியால் தண்ணீரின்றி மடிகின்றன என்ற வருத்தமூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.

 

 

காட்டுச் செல்வமும் அதற்கு ஆதாரமான நீரும் எவ்வளவு இன்றியமையாத தேவை என்பதை இந்த ஆய்வு உணர்த்துவதோடு புவி வெப்பமாகும் போது என்ன விபரீதம் ஏற்படும் என்பதையும் அறிவியல் ரீதியாக உணர்த்துகிறது. ஆகவே புவி வெப்பமாதல் என்ற மாபெரும் அபாயத்தைத் தடுக்க ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

****

 

U S President Anecdotes (Post No. 2355)

16_abraham_lincoln[1]

16th President of the United States Abraham Lincoln

Compiled by London swaminathan

Date: 23 November 2015

 

Post No. 2355

 

Time uploaded in London :– 18-15

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

When Abraham Lincoln was criticized by a deputation sent to call on him he said,

“Gentlemen, suppose all the property you were worth in gold, and you had put it in the hands of Blondin to carry across Niagara River on a rope. Would you shake the cable and keep shouting – Blondin stoop a little more – go little faster—lean a little more to the north — lean a little more to the south? No, you would hold your breath as well as your tongue, and keep your hands off until he was safe over. The Government is carrying an immense weight. Untold treasures are in our hands. We are doing the very best we can. Don’t badger us. Keep quiet, and we will get you safe across”.

 

Xxx

Proud Peacock

A newspaper correspondent visited Coolidge at Plymouth, watched the automobiles rolling by, and said:

 

“It must make you proud to see all these people coming by here, merely to see you sitting on the porch. It shows although you are an ex-President you are not forgotten. Just look at the number of those cars.”

 

“Not as many as yesterday,” replied Mr Coolidge. “There were 163 then.”

coolidge

30th President of the United States

XXX

Mrs Coolidge became Mrs Lincoln

When Mrs Calvin Coolidge went abroad after her husband’s death she feared there would be an unnecessary fuss made over the wife of an ex-President. But the friend with whom she was travelling said, “Don’t worry. In the little places where we will be stopping they don’t know one President of the United States from another. People won’t bother you.”

And no one did – until in a small Italian town they received word that reservations had been made for them in the next town. This sounded ominous. When they reached the hotel in question they were pompously by the manager. Bowing profoundly, he said, “We are proud to welcome the wife of the Great President of the United States. Will you register, Mrs Lincoln?”

 

Xxx

Not for the Senators, but for the country

When Everett Hale was chaplain of the Senate (US), someone asked him, “Do you pray for the Senators, Dr.Hale?”

“No, I look at the Senators and pray for the country”, he replied

–Subham–

 

எமகாத ஜோஸிய கிண்டன், மோச நாச தர்மராஜ ஜோஸியர்—கதை1 (Post No. 2354)

Goats

Compiled by London swaminathan

Date: 22 November 2015

 

Post No. 2354

 

Time uploaded in London :– காலை 9 -49 மணி

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

தர்மாபுரம் என்ற ஊரில், அணித, கணித நிகா கணித, மகா கணித, தர்மராஜ ஜோஸியர் என்ற பிராமணர் ஒருவர் வயல்களைச் சுற்றிப்பார்த்து வருகையில் புதுக் காலணா ஒன்று கீழே கிடந்ததை எடுத்துப் பார்க்கையில் தற்செயலாய் அவ்விடத்தில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடைப்பையன், “சாமி அது  என்னெ”வென்று கேட்டான்

தர்மராஜ ஜோஸியர்: “அடே அது பவுன்”.

 

இடைப்பையன்: சாமி, எங்கே பார்ப்போம். காசை எனக்குக் கொடுங்கள். நல்ல ஆடு ஒன்று தருகிறேன் என்று சொல்லி காசைப் பெற்றுக்கொண்டு ஒரு ஆட்டைக் கொடுத்துவிட்டு தன் போக்காக சந்தோஷமாய் அக்காசை திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான்.

ஆட்டைப் பெற்றுக்கொண்ட பிராமணன் அதை வெகு ஆதரவாக வைத்துக் காப்பாற்றினான். அடுத்தவீட்டு

அச்சுதராமையன்: – “ஓய் ஜோஸியரே! ஏதுகாணும் பிராமணன் ஆடு வாங்கி வளர்க்கிறீரே?”

 

ஜோஸியர்: போங்காணும், போம், போம். அந்த ஆடு சாமான்யமான ஆடு என்று நினைத்தீரா? அது மிருகண்டு மகரிஷி யாகம் செய்தபின் உற்பவித்த ஆடு. நேற்று என் கனவில் தோன்றி இன்ன இடத்தில் ஆடு ஒன்று நிற்கிறது. அதைப்பிடித்துக் கொண்டுபோய் ஒரு வருஷம் வளர்த்தால் சொர்ண (தங்க) புழுக்கையாய்ப் போடும் என்று சொன்னதின் பேரில்தான் இதைப் பிடித்துக் கொண்டுவந்து நான் வளர்த்து வருகிறேன்

 

அச்சுதராமையன்: ஓய் ஜோஸியரே! என்னகாணும் புளுகுகிறீர்! காலம் கலி காலம், போம்!!

 

ஜோஸியர்:- சரி சரி போம். உம்ம ஜோலியைப் பார்த்துக்கொண்டு போம். உம்மிடம் புளுகினால் எனக்கு என்ன லாபம்?

 

 

பிறகு தினம் ஒவ்வொரு பிராமணனாக வந்து வந்து மேற்கண்ட சங்கதிகளை விசாரித்துச் செல்லுவதைப் பார்த்த அச்சுதராமய்யன் பேராசை என்னும் வலையில் சிக்குண்டு, மறுபடி ஜோஸியரிடம் போய் ஜோஸியரே! என்ன சமாசாரம், ஆட்டின் விஷயமெப்படி யிருக்கிறது?

 

ஜோஸியர்: ஓய் பிராமணா! ஆட்டின் விஷயம் மாத்திரம் என்னைக் கேட்காதீர். அதுவுமக்கு நம்பிக்கையில்லை. அதுவிஷயமெனக்குத் திருப்திதான். நீர் போரும்

அச்சுதராமய்யன்: ஓய் ஜோஸியரே! இங்கு வாரும் கோபிச்சுகாதேயும். ஒருத்தர் கிட்டேயும் சொல்லாதேயும். அந்த ஆட்டின் விலையென்ன சொல்லும். இப்பொழுதே வேணுமென்றாலும் ரொக்கத்தை எண்ணித் தருகிறேன்.

 

ஜோஸியர்: இந்தாரும் ஆட்டுச் சமாசாரத்தைப் பேசாதேயும். அது நீர் ஐநூறு கொடுத்தாலும் முடியாது. ஆயிரம் கொடுத்தாலும் முடியாது. நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன். அதைத் தவிர வேறு ஏதாவது பேசும்.

அச்சுதராமய்யன்: ஓய் உம்மைக் கெஞ்சுகிறேன் காணும். இந்தாரும் ஓய் ஆயிரம் ரூபாய். இதைப் பெற்றுக்கொண்டு ஆட்டைக்கொடுங்காணும்.

amur-tiger1_100608

ஜோஸியர்:- “சரி, ஒருவரிடமும் சொல்லாதேயும்”

 

என்று சொல்லி ஆட்டைக் கொடுத்து ரூபாயை வாங்கிக் கொண்டு இனி இங்கிருக்கக் கூடாதென்று நினைத்துக் காட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது ஒரு வேங்கைப் புலி இவரைத் துரத்திக்கொண்டுவர இவர் ஒரு ஆலமரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார். புலியோவெனில் அவருக்கு எதிர்ப்புறம் நின்று கொண்டு இவரைப் பிடிக்க இரு புறமும் கைகளை நீட்டியது. உடனே ஜோஸியர் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடிக்க, புலியும் அவரும் பலமுறை மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அப்போது அவர் ஆடு விற்று மடியில் கட்டிவைத்திருந்த பணம் ஒவ்வொன்றாக விழத் துவங்கியது. அதுசமயம் ஒரு சிப்பாய் குதிரைமேல் சவாரி செய்துகொண்டு வந்தான். அவனைக் கூப்பிட்டு, ஓய் சிப்பாய், இந்தப்புலியைக் கொன்றுவிடு என்று கெஞ்சினார்.

 

சிப்பாய்: போம் ஓய் பொம்மன். என் மாமனார் பெயர் புலியப்பக் கவுண்டர். ஆகையினால் புலியை நாம் கொல்ல மாட்டோம்- என்று சொல்லி நெருங்கிவர ரூபாய் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்த சிப்பாய்க்கு பேராசை பிடித்துக் கொண்டது. எப்படி எங்கேயிருந்து ரூபாய் நோட்டுகள் விழுகின்றன? என்று சிப்பாய் கேட்டான்.

 

ஜோஸியர்: இந்த மரத்தில் ஒரு முனி இருக்கிறது. புலியின் கைகளைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தால், ரூபாய் நோட்டுகள் விழ ஆரம்பித்துவிடும் என்றார்.

 

சிப்பாய்: நல்லது ஓய்! கொண்டாரும் கையை என்று சொன்னவுடனே புலியின் கையை சிப்பாயிடம் கொடுத்துவிட்டு, ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சிப்பாயின் குதிரை மீதேறிக்கொண்டு,சிட்டாக பறந்தார்.

 

சிப்பாய் கூவினான்: “ என்ன இது? ரூபாய் நோட்டுகள் எதுவும் விழவில்லையே! என்றான். உன்னைக் கொன்று போடுவேன் என்று கத்தினான்.

ஜோஸியர்: போடா போ, புத்தியில்லாத மடையா! எங்கள் சித்தப்பா வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்). நான் புலியைக் கொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டு குதிரையைச் சிட்டாகப் பறக்கவிட்டார்.

 

CAPTIVE Bengal Tiger

683999257 Bengal Tiger Panthera tigris CAPT Young Male Native to Indian Subcontinent Wildlife Rescue

–இரண்டாவது பகுதியில் ஒரு கிழவியையும் விபசாரியையும் மாப்பிள்ளையையும் ஜோஸியர் ஏமாற்றிய கதைகளைக் காண்போம்.

–தொடரும்…………………………..

 

 

கார்பன் தரும் சவால்! Post No. 2353

factory-smoke-pollution-g-001

Radio Talk written by S NAGARAJAN

Date: 23 November 2015

Post No. 2353

 

Time uploaded in London :– 6-14 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒளிச்சேர்க்கை எனப்படும் PHOTOSYNTHESIS மூலமாகவே ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பூமியின் வளி மண்டலம் அமைந்துள்ளது ஆனால் அற்புதமான இந்த வளி மண்டலத்தை நச்சுப் புகையை அதிகமாகக் கக்குவதன் மூலம் மாசு படுத்துகிறோம்.மரங்கள் இயற்கையாகவே கார்பனை உறிஞ்சி ‘இயற்கைச் சமநிலையை’ ஏற்படுத்தினாலும் கூட  செயற்கையாக மனிதன் வெளிப்படுத்தும் கார்பன் இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அளவு அதிகமாக இருக்கிறது.

 

 

கார்பன் CARBON அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை ஆராய பன்னாட்டு விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை ஐரோப்பிய கமிஷன் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆப்பிரிக்காவில் வளரும்  இரோகோ (IROKO) என்ற ஒரு மரம் MICROBES எனப்படும் சில நுண்ணுயிர்களுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ள புகையை சுண்ணாம்பாக மாற்றுகிறது என்பதை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்துள்ளது.

 

 

புவி வெப்பமாதல் எனப்படும் குளோபல் வார்மிங் Global Warming  அபாயத்தால் உலகெங்கும் உள்ள காடுகள் தாங்கள் மண்ணில் சேமித்து வைத்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் இது தக்க ஒரு மாற்றாக அமையும் என்பது  நல்ல செய்தி. வறண்ட அமில மண்ணில் இந்த மரங்கள் நடப்பட்டால் மண்ணில் காணப்படும் கால்சியத்துடன் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட கனிமத்தை இரோகோ மரங்கள் உருவாக்குகின்றன. இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப்புகையினால் மாசு படுத்தப்படும் வளி மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது. சிலவகை பாக்டீரியாக்களுடனும் காளான்களுடனும் இது உரிய முறையில் சேர்க்கப்பட்டால் இந்த மரம் உருவாக்கும் கனிமம் சுண்ணாம்பாக மாறுகிறது பொலிவியா, ஹைதி, இந்தியா ஆகிய நாடுகளில் இப்போது கார்பன் சவாலைச் சமாளிக்க இந்த இரோகோ மரங்களை நட்டு சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Igi-Iroko

 

இந்த மரம் தொழிலகத் திட்டங்களுக்குப் பயன்படுவதோடு இதனால் உருவாகும் சுண்ணாம்பின் மூலம் ஒரு ‘பயோ சிமெண்டை’ உருவாக்கவும் இப்போது அறிவியல் ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

இந்த இரோகோ மரத்தை ஆப்பிரிக்காவின் தேக்கு மரம் என்று ஆப்பிரிக்கர்கள் கூறுகின்றனர். அத்தோடு அதை வெட்டி வீட்டு உபயோகத்திற்காக அனாவசியமாகப் பயன்படுத்தினால் பயன்படுத்துபவருக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

 

இது போன்ற மரங்களை இனம் கண்டு கார்பன் சவாலைப் புது விதமாக நவீன அறிவியல் முனைந்திருப்பது உலக மக்கள் அனைவரும் வரவேற்கும் ஒரு நல்ல செய்தி தானே!

iroko 2

iroko tree

***

Sanskrit has been a Spoken Language from Time Immemorial! Post No. 2352

IMG_9008 (2)

 

Compiled by London swaminathan

Date: 22 November 2015

POST No. 2352

 

Time uploaded in London :– 18-40

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

There was a Sanskrit scholar in a town in India. He spent most of his time in looking at dictionary to find meanings for new words. Knowing that he lives alone after the death of his wife, a thief entered the house after sunset. He opened the door with a loud noise just to test anybody is wide awake.

 

The Sanskrit scholar heard the noise while browsing through the dictionary. Immediately he asked, “ Kapaada sabdam kim?” (What is that noise at the door?). The thief answered the question at once with a sound CHO. The scholar was puzzled and began to flip through the dictionary pages to find out the meaning of ‘Cho’. He was very happy to get an answer in Sanskrit (from the thief)! Unfortunately he could not find any meaning for the word ‘Cho’. By the time, he finished his search, the thief looted the house completely and ran out with the booty. But to mock at the scholar, he made a big noise again by slamming the door. The scholar asked “Puna Kapaada sabdam him?” (What is that door noise again?). The thief answered ‘RAN’ and ran away. The scholar who was puzzled by this word started looking at the dictionary again. When he couldn’t find the meaning his brain worked out a word by joining the two sounds CHO+RAN = Choran.

 

Oh, My God! Choran, Choran!! It means a thief. Let me go and check. When he did that it was too late. The thief took all the valuables in the house (Choran mean thief).

IMG_9007 (2)

Stories like this show that Sanskrit has been a spoken language in India from time immemorial. From the Upanishadic “Da, Da, Da story” we come to know that Sanskrit was spoken by Asuras, Devas and Humans. Stories such as Vrtra Vs Indra, Kumbakarna V Brahma, Nahusa Vs Agastya (Sarpa, Sarpa), King Hala Vs his wife (Modaka thadaya) and Asvattama hatha: (Dharma Vs Drona) Vataapi Jeerno Bhava (Vataapi Vs Agastya) show that Sanskrit was spoken. Otherwise these stories have no meaning. And these stories are there from Vedic days. That means Sanskrti was spoken during Vedic days, Epic days and Puranic days.

 

–Subham–

இளிச்சவாய் ஏகநாத ஐயர் (POST No. 2351)

ப்ரஹ்மின்1 (2)

மேலும் ஒரு சம்ஸ்க்ருத ஜோக்!

Compiled by London swaminathan

Date: 22 November 2015

POST No. 2351

 

Time uploaded in London :– காலை 9 -13 மணி

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

“ஒரு நாள் என் மாமனார் வீட்டுக்குச் சென்றேன். அங்குப் பத்துப்பதினைந்து நாள் வயிறு குறையாமல் திருப்தியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு சம்ஸ்க்ருத பாஷையில் தேர்ச்சி அதிகமாதலால் ஒருநாள் யோஜித்து மாமியார் வீட்டுச் சுவற்றில்,

 

“ஸ்வஸ்ருகிருகநிவாஸ

ஸ்வர்கதுல்யோநராணாம்”

அதாவது மாமியார் வீட்டில் வசிப்பதானது மனுஷர்களுக்குச் சொர்க்கத்துக்குச் சமானம் என்று எழுதி வைத்தேன். மறுநாள் மத்தியான போஜனத்துக்குப் பிறகு நான் எழுதிய சுவற்றைப் பார்க்க, நான் எழுதியதற்குக்கீழே

 

“எதிபதி குணக்ஞஹா

பஞ்சமேஷஸ்தினாதி”

 

அதாவது மாப்பிள்ளை நல்ல குணமுள்ளவனாக இருந்தால் ஐந்து, ஆறு தினத்துக்கு மேலிருக்க முடியாது என்று யாரோ எழுதிவைத்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குப் பகீரென்று அடிவயிற்றில் நெருப்பு வைத்தது போலிருந்தது.

 

உடனே அதன் கீழே நான்

“ததிகிருத மதுவர்ஜியம்

மாஸமேகம்வஸாமி

 

அதாவது தயிர், நெய், பால் இவைகளில்லாமல் ஒரு மாஸம் வசிக்கலாமல்லவா? என்று எழுதிவிட்டேன். அதற்கு மறுநாள்தான் எனக்குச் சனியன் பிடித்தது. நான் யெழுதிவைத்ததற்குக் கீழே மறுநாள்  பார்த்தேன்.

“ததுபரி தினமேகம்

பாதரக்ஷப்ரயோககா”

 

அதாவது இதனைக் கண்டதற்கு மேல் ஒருநாளிருப்பதாயிருந்தாலும் ஆற்காடு ஜோட்டடிதான் கிடைக்கும் என்று எழுதியிருந்தது. அதைத் திருப்பித்திருப்பி வாசித்துக்கொண்டிருந்தேன். அங்கு மறைவில் ஒளிந்துகொண்டிருந்த என் மைத்துனன் இடதுகையாலே இடது கால் ஜோட்டடி மகோற்சவம் நடத்தி, “இளிச்சவாயா, மாமியார் வீட்டுச் சொத்து என்ன பிள்ளையில்லா வீட்டுச் சொத்து என்று நினைத்தாயா?” என்று சொல்லி வழியனுப்பினான் அதனால்தான் நான் இளிச்சவாயன் ஆனேன்”.

“ஸ்வஸ்ருகிருகநிவாஸ ஸ்வர்கதுல்யோநராணாம்

எதிபதி குணக்ஞஹா பஞ்சமேஷஸ்தினாதி

ததிகிருத மதுவர்ஜியம் மாஸமேகம்வஸாமி

ததுபரி தினமேகம் பாதரக்ஷப்ரயோககா”

 

–சுபம்–

பாபாவின் அருள் விளையாடல்கள்!(Post No.2350)

baba-kalam

Baba with President Abdul Kalam

ஶ்ரீ சத்யசாயிபாபாவின் ஜயந்தி தினம் நவம்பர் 23. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை! ஞான ஆலயம் நவம்பர் இதழில் வெளியானது.

WRIITEN BY S NAGARAJAN

Date: 22 November 2015

Post No.2350

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பாபாவின் அருள் விளையாடல்கள்!

.நாகராஜன்

 

லட்சக்கணக்கானோர் அருள் பெற்ற நவீன அவதாரம்

 

நம்முடைய காலத்திலேயே நம்முடன் வாழ்ந்து வந்த ஶ்ரீ சத்ய பாபாவின் அவதாரம் ஒப்பற்ற தனித் தன்மை உடைய ஒரு அவதாரமாக இலங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக் கணக்கான பக்தர்களை வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகி உபதேசித்தவர். பல நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மந்திரிகள், தொழில் துறை கோடீஸ்வரர்கள், ஞானிகள், விளையாட்டு வீரர்கள், நடிக, நடிகையர், பாடகர்கள், வேத விற்பன்னர்கள், சமயப் பெரியோர், கலைஞர்கள் என அனைத்துத் துறைகளிலிருந்தும் அவரிடம் வந்த பிரபலங்கள் மட்டுமே ஆயிரக் கணக்கில் உண்டு; அருளாசியுடன் உத்வேகமும் பெற்று அவர்கள் தம் பணியைத் தொடர்ந்ததை நம் கண் முன்னாலேயே கண்டோம் என்பது அவரது அவதார மஹிமைகளில் தனிச் சிறப்பு கொண்ட ஒன்று. முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா வாஜ்பாயி, பிரபல பாடகி பாரத் ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, பிரபல கிரிக்கட் வீரர் பாரத் ரத்னா சச்சின் டெண்டுல்கர் போன்ற ரத்தினங்கள் அவரைப் போற்றி வணங்கி அவர் அருள் சங்கமத்துள் இணைந்த காட்சியைக் கோடிக் கணக்கானவர்கள் கண்டு மகிழ்ந்தது நிதரிசனமான சரித்திர உண்மை!

 

baba-stamps

மர்யாதா புருஷோத்தமனான கம்பீர ராமனாகவும், தீராத விளையாட்டுப் பிள்ளை கிருஷ்ணனாகவும் அவர் திகழ்ந்து நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஆயிரக் கணக்கில் உண்டு.

அவதாரங்களின் நகைச்சுவை உணர்வு (Humour sense) பாபாவிடம் இருந்ததைப் போல இன்னொரு அவதாரத்தில் நாம் பார்த்ததில்லை.

 

 

நீங்கள் அனைவருமே எனது மிராக்கிள் தான்!

அணுக்கத் தொண்டரான கஸ்தூரி அவர் அருகில் கூடவே பழகினாலும் அவர் ஒரு நெருப்புப் பிழம்பு என்ற பயத்துடனேயே இறுதி வரை பழகி வந்தார். சாதாரண மனிதர் போல அவர் இருந்தாலும், ஒவ்வொரு க்ஷணத்திலும்  தெய்வீகப் பொறி அவரிடமிருந்து தெறிக்கும் என்பது அவரது அனுபவம்.

 

ஒரு நாள் கஸ்தூரி பாபாவிடம், ‘இன்று பௌர்ணமி. சித்ராவதி நதிக்குப் போகலாம்’ என ஆவலுடன் தெரிவித்தார். அங்கு மாலை நேரங்களில் செல்லும் பாபா, குழுமியோருக்கு மணலிலிருந்து லாக்கட், மோதிரம் போன்ற எதையாவது ‘உருவாக்கி’ அற்புதங்கள் நிகழ்த்துவது வழக்கம்.

 

பாபா சிரித்தவாறே, ‘சித்ராவதி மணல் இருந்தால் தான், நான் அற்புதங்களை நிகழ்த்துவேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய் போலும்!” என்றார்.

‘இல்லை, பௌர்ணமி நிலவில் உங்களுடன் இருக்க ஆசை’, என்றார் கஸ்தூரி.

“மிராகிள்! மிராகிள்!  அற்புதங்களுக்காக அலைகிறீர்கள்!” என்று நிறுத்திய பாபா பளீரென்று கூறினார்:” நீங்கள் ஒவ்வொருவருமே என் மிராகிள் தான், தெரியுமா?!”

baba-vibhutim

ஒரு கணம் கஸ்தூரி அசந்து நின்று விட்டார். மனித சரித்திரத்திலேயே ஒரு பிரம்மாண்டமான அவதாரம் தசை, எலும்பு, ரத்தத்துடன் தன் எதிரில் இருப்பதை எண்ணிய அவர் உடலும் உள்ளமும் சிலிர்த்தது.

அனைத்துக்குமான ஆதி விதை – ஆதி பீஜம் தான் தான் என்ற இரகசியத்தை ஒரு க்ஷணத்தில் மின்னல் வெட்டுவதைப் போலக் கூறி விட்டாரே!

 

 

கேமரா ட்ரிக்!

பக்தர்களுடன் விளையாடிக் கொண்டே இருப்பார்; ஆனால் ஒவ்வொரு விளையாட்டிலும் பெரும் அவதார மஹிமை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்!

ஒரு முறை பார்த்தசாரதி என்ற அன்பர், சோபாவில் பாபா அமர்ந்திருக்க, அவர் அருகில் அனைவரும் இருப்பதை போட்டோ எடுக்க எண்ணித் தன் கேமராவை எடுத்தார்.

பாபா, ‘அந்தப் போட்டோவை நானே எடுக்கிறேன். நீங்கள் அவரவர் இடத்தில் அமருந்திருங்கள்’ என்று கேமராவை வாங்கி சோபாவின் எதிரில் சென்று நின்றார்.

 

பாபாவே போட்டோவை எடுத்தால், அவர் அதில் விழ மாட்டாரே! அழாக்குறையாக அப்படி அவரே எடுக்க வேண்டாம் என்பதைச் சொன்ன போதும் அவர் கேட்கவில்லை.

‘போட்டோவை பிரிண்ட் போடு. அதில் நான் நிச்சயம் இருப்பேன்’ என்று அருளினார் பாபா. சொன்னபடியே பிரிண்ட் போட்ட போது நடுநாயகமாக போட்டோவில் அவர் இருந்தார்.

 

எங்குமே  எல்லாமாய் ஒரே சமயத்தில் இருப்பவருக்கு பிரிண்டில் ‘உட்கார்வது’ கஷ்டமான காரியமா என்ன?

ஒரு நாள் கஸ்தூரியை அழைத்த பாபா ஹைதராபாத்திலிருந்து வெளி வரும் நாளிதழ் ஒன்று கஸ்தூரியின் போட்டோவைக் கேட்டிருப்பதாகவும் போட்டோவைத் தானே எடுக்கப் போவதாகவும் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த கஸ்தூரி வேக வேகமாகச் சென்று நல்ல ஆடை அலங்காரம் செய்து கொண்டு பாபாவின் முன்னர் வந்து நின்றார்.

 

 

கேமராவுடன் இருந்த பாபா, ஸ்டடி, ரெடி என்று அவரைத் தயாராகுமாறு கூறி க்ளிக் செய்தார். அப்போது திடீரென்று வாலுடனும் முடியுடனும் இருந்த ஒரு சின்ன கறுப்பு உருவம் அவர் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத கஸ்தூரி அலறினார். எலியா? வேறு ஏதாவதா? எது தன் மீது பாய்ந்தது?

மெதுவாக பயத்துடன் கீழே விழுந்ததை அவர் ஆராய்ந்த போது அது பஞ்சினால் செய்யப்பட்ட ஒரு பொம்மை எலி என்று கண்டார். மிகவும் தந்திரமாக கேமராவுக்குள் அது வைக்கப்பட்டிருந்தது. க்ளிக் செய்தால் பாயும் படியான ஏற்பாடுள்ள கேமரா அது!

 

கஸ்தூரியின் பயத்தைக் கண்டு பாபா சிரித்தார். கஸ்தூரியும் சிரித்தார். அதில் அடங்கி இருந்த செய்தியை கஸ்தூரி உணர்ந்து கொண்டார். சனாதன சாரதியின் ஆசிரியர் பொறுப்பால் அவருக்கு அகங்காரம் வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த  விளையாட்டு செய்யப்பட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். பின்னால் மிகப் பெரும் பொறுப்பையெல்லாம் பாபா அவரிடம் தந்த போது அவருக்கு அகங்காரமே தோன்றவில்லை. அவர் மீது பாய்ந்த எலி தந்த படிப்பினை அவரிடம் கடைசி மூச்சு வரை இருந்தது.

sathya-sai-padapujya-deva

பாத நமஸ்காரத்தில் ஒரு லீலை!

பாபா நிகழ்த்திய இன்னொரு எளிய விளையாட்டு சுவையான ஒன்று. பிரசாந்தி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறந்த காலம் அது. அடிக்கடி மாணவர்களைப் பார்க்க வந்து விடுவார் பாபா. சுய தேவைப் பூர்த்தி என்ற கொள்கையின் அடிப்படையில் மாணவர் விடுதியில் பராமரிப்பு, சமையல் போன்ற பல பிரிவுகள் அங்கு உருவாயின. ஒரு புது ஸ்டோரை  உருவாக்கி அங்கு பாபாவை அழைக்கலாம் என மாணவர்கள் திட்டம் போட்டனர். இன்னொரு முறை பாபாவை அருகிலிருந்து தரிசனம் செய்ய அவர்களின் டெக்னிக் திட்டம் அது! அதில் “முக்கிய” மாணவர்கள் ஸ்டோரை நிர்வகிக்கும் சாக்கில் பாபாவின் பாத நமஸ்காரம் பெறவும் தீட்டம் தீட்டப்பட்டது.

 

ஆனால் அவர்களிடம் மிகவும் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தது. பாபா அனுமதி கொடுத்தால் மட்டுமே பாத நமஸ்காரம் பெறலாம்!

 

தங்களுக்குள் அவர்கள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர் : அப்படி அனுமதி தந்தால் சில விநாடிகளுக்குள் அவரை நமஸ்கரித்து எழ வேண்டும். நெடுநேரம் அவர் பாதங்களின் முன் இருந்தால் பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் விடக் கூடும். எச்சரிக்கை! ஓரிரு வினாடிகள் தான் ஒவ்வொருவருக்கும்!

 

பாபாவும் வந்தார். ஸ்டோருக்கும் விஜயம் செய்தார். திரும்பிப் போகையில் கதவருகே சென்று விட்ட அவரிடம் பாத நமஸ்காரம் செய்ய அனுமதி கேட்டனர் மாணவர்கள். ‘சரி’ என்றார் அவர்.

முதல் மாணவன் ஓரிரு விநாடிகளில் பாத நமஸ்காரத்தை முடித்தான். அடுத்தவன் பாதங்களிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அனைவருக்கும் ஆத்திரம், கோபம், அவசரமும் கூட!

fdc-baba

ஒரு ஊழிக் காலம் கடந்தது. மெதுவாக அந்த மாணவன் எழுந்தான். அவன் கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீரோ! மூக்கு சிவந்திருந்தது. மற்ற அனைவரும் விரைவில் பாத நமஸ்காரம் செய்ய, பாபாவும் புறப்பட்டார்.

எல்லோரும் இப்போது அந்த மாணவன் பக்கம் திரும்பினர் கோபத்துடன்!

“கோபப்படாதீர்கள்! என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். அவர் பாதங்கள் இரண்டிலும் என் முகம் பட்டவுடன் இரு கால்களுக்கு இடையே என் மூக்கு சிக்கி விட்டது. அவர் அதை விடவே இல்லை. எனது முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அவரே விட்டார், எழுந்தேன். அதனால் தான் என் மூக்கு சிவந்திருக்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது

 

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். கோகுலத்தில் அந்த அவதாரத்தில் கோபியருடன் லீலை செய்தது கிருஷ்ணன். இங்கோ பிரசாந்தியில் இளம் சிறுவர்களிடையே ஆனந்த விளையாடலை அருளாகப் புரிந்தவன் சாயி கிருஷ்ணன்.

stamp-baba-project

உள்ளத்தில் நிலையாக என்னை பிரதிஷ்டை செய்

பிரபல விஞ்ஞானியான பகவந்தத்திடம் தங்கத்தையும் கரைக்கும் ராஜ திரவத்தில் சாயி போட்ட தங்க மோதிரம் கரையவில்லை! விநாடியில் நூற்றில் ஒரு பங்கு நடக்கும் எதையும் படம் பிடிக்கும் அதி நவீன கேமாராவின் துணை கொண்டு பிரபல விஞ்ஞானி கார்லிஸ் ஓஸிஸ் சாயி கை அசைவில் எப்படி எந்தக் கணத்தில் செயின், விபூதி  உருவாகிறது என்பதை எடுக்க முடியவில்லை!

 

பாரத் ரத்னாக்கள் ஆனாலும் சரி, விஞ்ஞானிகள் ஆனாலும் சரி, சாமானியரானாலும் சரி, பக்தர்கள் என்ற நிலையில் அவர்களிடம் பகவானின் அணுகுமுறை ஒன்றே தான்; அதுவும் தனித்தன்மை கொண்டது தான்! அருள் விளையாடலே அது! கணம் தோறும் ஆனந்தம் பூரிக்கும் அவர்கள் உள்ளத்தில் நிலையாக நிற்பதே அவரது அவதார நோக்கம்!

 

அவரது ஜயந்தி நாளில் அவரை மனதில் பிரதிஷ்டை செய்து இருத்துவோம்; ஆனந்த அருளைப் பெறுவோம்!

*******************

 

 

Father Anecdotes (Post No.2349)

64348-father-and-son-walking

Compiled by London swaminathan

Date: 21 November 2015

Post No.2349

 

Time uploaded in London :– 14-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

From an old Encyclopaedia of Anecdotes:–

Tit for tat!

Paul Bourget: life can never become entirely dull to an American. When he has nothing else to do he can always spend a few years trying to discover who his garn father was.

Mark Twain: Right, your Excellency, But I reckon a Frenchman has got his little standby for a dull time too; he can turn in and see if he can find out who his father was!

m twain

xxx

Too many Questions, No Answer!

A father was walking with his young son. The

boy said, “Daddy, what is electricity?”

“Well, now, I don’t really know”, said the father. “I never knew much about electricity. All I know about it is that it makes things run.”

A little farther on, the boy said, “Daddy, how does the gasoline make the automobiles go?”

The father replied, “Well, I don’t know. I don’t know much about motors.”

Several more questions followed with much the same result; until at last, the boy said, “Gee, I hope you don’t mind my asking so many questions?”

“Not at all son”, said his father, you go right ahead and ask. How else will you ever learn anything?”

 

Xxx

Are you the father of my children?

Getting on a trolley car, a kindergarten teacher sat down next to s man who appeared familiar to her. Smiling pleasantly, she turned as if to speak to him. Noticing his lack of response, she realized her error, and said, “Oh, excuse me. I mistook you for someone else.  I thought you were the father of two of my children.”

He got out at next corner.

 

Xxx

Girl and Home

We are told a story of a girl of the roaring 20’s who said to a real estate agent when he wanted to sell her a house:

“A home? Why do I need a home? I was born in a hospital, educated in a college, courted in an automobile, and married in a church. I live out of the delicatessen and paper bags. I spend my mornings on the golf course, my afternoons at the bridge-table, and my evenings at the movies. And when I die I am going to be buried at the undertaker’s. All I need is a garage.”

Xxx

30th Wedding Anniversary invitations

No Quarrel for 30 years in the family!

In course of his pastoral visitations, Rev. Dr. Chalmers called upon a worthy shoe maker who, in recounting his blessings, said that he and his family had lived happily together for thirty years without a single quarrel. This was too much for the doctor, who struck his cane on the floor and exclaimed

“Terribly monotonous man! Terribly monotonous!”

 

Xxx

–subham–