
Compiled by london swaminathan
Post No. 2536
Date: 13th February 2016
Time uploaded in London:- 8-30 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஜோக்குகள்; சிரிப்பு வராவிட்டால் என்னைக் கோவிக்காதீர்கள்!
ஒரு பிரசங்கியின் பிரசங்கத்தைக் (சொற்பொழிவு) கேட்க அநேக ஜனங்கள் கூடினார்கள். முதலில் பிரசங்கியார் (சொற்பொழிவாளர்) நான் பேசப்போகும் விஷயம் தெரியுமா? என்றார். ஜனங்கள் தெரியாதென்றனர். அப்படியானால் நான் சொல்லிப் பிரயோஜனமில்லை என்று சொல்லி பிரசங்க மேடையைவிட்டுக் கீழே இறங்கினார்.
சிறிது நேரம் பொறுத்து மறுபடியும் மேடையேறி, “இப்பொழுது நான் கூறுவது உங்களுக்குத் தெரியுமா?” என்றார். ஜனங்கள் தெரியும் என்றனர். அப்படியானால் நான் கூற வேண்டியதில்லை என்று சொல்லி, முன்போல் கீழே இறங்கி ஒதுங்கி நின்றார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் மேடையேறி, “இப்பொழுது நான் சொல்லப்போவது உங்களுக்குத் தெரியுமா?” என்றார். சிலர் தெரியுமென்றும், வேறு சிலர் தெரியாதென்றும் சொன்னார்கள். “அப்படியானால் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கீழே இறங்கிப் போய்விட்டார்.
Xxx

இவனா எனது மகன்?
ஒருவன் தன் மகன் மீது கோபித்துக்கொண்டு, அவனை நடுத்தெருவில், “கழுதை மகனே!” என்று அடிக்க ஆரம்பித்தான். உடனே தெருவில் போன கழுதை ஒன்று, “அட! இவனா எனது மகன்?” – என்று கூச்சலிடத் துவங்கியதாம்.
Xxx
தாடியைப் பறிகொடுத்த முட்டாள்!
ஒருவன் இரவில், கதைப் புத்தகமெடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். அதில் நீண்ட தாடியும் சின்னத் தலையும் யாருக்குண்டோ, அவன் முட்டாளென்று எழுதியிருந்தது. அதைக்கண்டு தன் தலையையும், தாடியையும் தடவிப்பார்த்து அப்படியேயிருக்க, “ ஓகோ, ஈதென்ன ஆச்சரியம்1 நாம் தலையைப் பெருக்க முடியாது, தாடியை வேணுமென்றால் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் அறிவாளியாகலாமென்று எண்ணி கததரிக்கோலைத் தேடினான்; கிடைக்கவில்லை.
கடைசியில் அவன் தாடியைக் குறைப்பதற்காக, படுக்கைக்கு அருகிலிருந்த தீபத்தில் தாடியின் நுனியைக் காட்டினான். தாடி முழுதும் குப்பென்று பற்றி எரிந்து, முகம் வெந்து, தாடி கோவிந்தாவாய்ப் போயிற்று. புத்தகத்தில் சொல்லியிருப்பது மெய்தான், நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க சொல்லிப்புட்டாங்க’ என்று நினைத்துக் கொண்டான்.

Xxx
எனக்கு அம்மா வேண்டாம், ஐயா!
ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின் வாசலில் நின்று, அம்மா, பசிக்குதே; கொஞ்சம் சோறு இருந்தா போடுங்க” என்றான். வீட்டெஜமானன் அம்மா, வீட்டில் இல்லை, போ, போ” என்றான். அதற்குப் பிச்சைக்காரன், “நான் பிச்சை கேட்டேனே தவிர, அம்மாவைக் கேட்கவில்லை, ஐயா” என்று கூறிச் சென்றான்.
–சுபம்-
You must be logged in to post a comment.