
Compiled by london swaminathan
Date: 7 May 2016
Post No. 2790
Time uploaded in London :– 12-56
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
திருடர்களைப் பற்றி ஒரு சம்ஸ்கிருத பழமொழியைப் படித்தேன். உடனே இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ்நாட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகளின் படம் என் மனக் கண் முன்னால் ஓடியது. நீங்களும் படியுங்கள்; பகற்கொள்ளையர்களின் படங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் தெரியும்:–
“ப்ரகாசாஸ்ச அப்ரகாசாஸ்ச த்வி வித அஸ்தி தஸ்கரா: ஸ்ம்ருதா:” (திருடர்கள் இரண்டு வகை என்று சொல்லப்படுகிறது; தெரிந்தும், தெரியாமலும் (ஒளிந்து) திருடுபவர்கள்)
பகல் ஒளியில் பகிரங்கமாகத் திருடுபவர்கள் (ப்ரகாச), இருட்டில் யாருக்கும் தெரியாமல் திருருடுபவர்கள் (அப்ரகாச) என்று இரண்டு வகை! திருடர்களைக் கூட அக்காலத்திலேயே வகைப்படுத்தியது மட்டுமின்றி திருடர்கள், திருட்டுத்தொழில் பற்றி ஒரு சம்ஸ்கிருத நூலும் உள்ளது!

ஞானம் இரண்டு வகை
ஞானம் து த்வி விதம் ப்ரோக்தம் சாப்திகம் ப்ரதமம் ஸ்ம்ருதம்
அனுபவாக்யம் த்விதீயந்து ஞானம் தத் துர்லபம் ந்ருப
–தேவீ பாகவதம் 15-52
ஞானம் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது: 1. முதலாவது, வேத சாஸ்திரம் மூலம் கிடைக்கும் அறிவு (சாப்திகம்= சப்தம்/ஒலி மூல அறிவு) 2.இரண்டாவது, அனுபவ அறிவு, அதாவது பட்டறிவு. அரசனே! இவை இரண்டும் அரிதானவை.
என்னதான் படித்தாலும் அனுபவ அறிவுக்கு ஈடாகாது. அதனால்தான் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்றனர். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், மருத்துவம், ஜோதிடம் போன்ற தொழில்களில் அனுபவ அறிவே முக்கியம் என்பதைக் காட்டுகிறது.
படிப்பறிவு மூலம் மட்டும் ஒருவன் ஞானியாவதல்ல. விட்டகுறை தொட்ட குறையாக – பூர்வ ஜன்ம புண்ணியம் காரணமாக—ஞான வேட்கை இருப்பவனே ஆன்மீகப் பாதையில் அடிவைக்கிறான். பின்னர் குரு மூலம் சந்தேகம் தெளிகிறான்.அப்போது மேலும் மேலும் பல நூல்களைக் கற்கிறான் அல்லது கேட்டு அறிகிறான்.

–Subham–
You must be logged in to post a comment.