சந்தியா வந்தனம் – 2 பாகங்கள்- 24 பகுதிகள் (Post No.2984)

IMG_4222

Article Written S NAGARAJAN

Date: 19 July 2016

Post No. 2984

Time uploaded in London :– 5-34 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 ஒரு சிறிய அணுவில் பெரும் விளைவை ஏற்படுத்தும் சக்தி இருப்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. பெரும் அழிவை ஏற்படுத்துவதற்கான சக்தி ஒரு அணுகுண்டில் உள்ளடங்கி இருக்கிறது. முறைப்படி அதை வெடிக்க வைத்தால் அதன் அழிவு சக்தி வெளிப்படுகிறது. இதை நாகசாகி, ஹிரோஷிமாவில் பார்த்தோம்.

அதே பிரம்மாண்டமான ஆக்க சக்தியை- தெய்வீக சக்தியை – இறை சக்தியை ஒரு சிறிய அனுஷ்டானத்தில் முன்னோர் அடக்கி வைத்துள்ளனர்.
அது தான் சந்தியாவந்தனம்.
காலை, நடுப்ப்கல், மாலை ஆகிய வேளைகளில் செய்யப்பட வேண்டிய அனுஷ்டானம் இது. முறைப்படி செய்தால் செய்பவருக்கு பெரும் சக்தி உண்டாவதோடு உலகமும் நன்மையை அடைகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!
இதில் இரு பாகங்கள் உள்ளன. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம்.
பூர்வபாகத்தில் 11 பகுதிகளும் உத்தரபாகத்தில் 13 பகுதிகளும் உள்ளன. அனைத்துமே முக்கியம் தான் என்றாலும் முக்கியத்தில் முக்கியம் அர்க்கியப்ரதானம், பிராணாயாமம் மற்றும் காயத்ரீ ஜபம் ஆகிய மூன்றாகும்.
இனி பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகத்தில் உள்ளனவற்றைப் பார்ப்போம்.
பூர்வ பாகம்
1) ஆசமனம்
2) கணபதி தியானம்
3) பிராணாயாமம்
4) ஸங்கல்பம்
5) மார்ஜனம்
6) ப்ராசனம்
7) புனர்மார்ஜனம்
8) அர்க்கியப்ரதானம்
9) பிராயசித்தார்க்கியம்
10) ஐக்கியானுஸந்தானம்
11) தேவ தர்ப்பணம்
உத்தர பாகம்
12) ஜப ஸங்கல்பம்
13) ப்ரணவ ஜப: ப்ராணாயாமம்
14) காயத்ரீ ஆவாஹனம் மற்றும் காயத்ரீ ந்யாஸம்
15) காயத்ரீ ஜபம்
16) காயத்ரீ உபஸ்தானம்
17) ஸூர்ய உபஸ்தானம்
18) ஸமஷ்டி அபிவாதனம்
19) திக்தேவதா வந்தனம்
20) யம வந்தனம்
21) ஹரிஹர வந்தனம்
22) ஸூர்யநாராயண வந்தனம்
23) ஸமர்ப்பணம்
24) இரக்ஷை
இந்த பகுதிகளில் உள்ள மந்திரங்களின் அர்த்தம் மகத்தானது. சிறிய செயல்கள் மூலம அரிய சக்தியைப் பெற வழி வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
இதைச் செய்வதால் ஏற்படும் மகத்தான பலன்களை ரிஷிகளும், மகான்களும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
ஹிந்து தர்மத்தில் உள்ள அநேக சாஸ்திரங்கள் மற்றும் நூல்கள் இந்த ஸந்தியா வந்தனத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கின்றன.
அவற்றைப் படித்தாலேயே இதன் அருமையை உணர்ந்து நாம் கடைப்பிடிக்க ஆரம்பிப்போம்.

 

Previous Articles:

“Brahmins deserve an entry in to Guinness Book of Records”  (Posted in Tamilbrahmins.com and swamiindology.blogspot.com until 3rd December 2011 in 9 parts over nine days); written by London swaminathan
***

Leave a comment

Leave a comment