Part- 3 Strange Stories from Ganesh Temples in Tamil Nadu (Post No. 3125)

ganesh in drama

Written by London swaminathan

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 18-25

 

 

Post No.3125

 

Pictures are taken from various sources; thanks.

ganesh dinamalar

One of the oldest or the oldest of Ganesh temples in Tamil Nadu is Pillayarpatti. Pillayar is the Tamil name for Lord Ganesh. Pillayar patti is in between Karaikkudi and Tiruppattur, very near Kundrakkudi. The small town itself is named after Ganesh. It is a cave temple, probably older than the Pallava cave temples of Tamil Nadu. Scholars who studied the inscriptions around the temple came to the conclusion that Pandyas made it before the Pallava Temples.

 

Other clues come from the statue carved out of the rock. It is six-foot-tall and the trunk turns towards right hand side. Most of the Ganesh statues will have the trunk turning towards left.

 

Apart from this, the big statue has got only two arms unlike other statues which have four arms. This Ganesh sits in Ardha Padma asana and the tusks are long and short. No ankusam and Pasam (weapons); modakam in right hand. This Ganesh is known as Karpaka Vinayakar and Desi Vinayakar Pillayar in the inscriptions. Ganesh shrine here is the main shrine and bigger than other shrines.

pillayarpatti

image of Pillayarpatti Vinayaka

Ganesh Temples in North Arcot Area

In the Northern Tamil Nadu we have three important Ganapathy temples. One of them is at Senpakkam near Vellore. Two hundred years ago a minister by name Tukoji Rao was travelling in a cart which hit a stone protruding from the ground. The stone was bleeding and the cart couldn’t move any further. Tukoji  Rao had to spend his night there. He had a dream of Ganesh asking him to build a temple.  Actually the bleeding stone was a Ganesh statue. He got grant from the king and built a temple over Ganesh that was dug out of the ground.

 

Another miracle happened some decades ago. When Kanchi Paramacharya (Senior Shankaracharya of Kamakoti Mutt) visited Vellore he asked the Mutt staff to break 108 coconuts for the Ganesh. It is a tradition followed in Ganesh temples. Somehow the staff forgot it. When he was coming towards Vellore his junior came behind him, on the elephant in a procession. The elephant refused to move in to Senpakkam road when it came to the junction and was goiing circles in the same junction. Suddenly the staff remembered Senior Shankaracharya’s instruction. Immediately they broke 108 coconuts for Senpakkam  Ganesh. The elephant moved and made their journey smooth.

 

GINGER GANAPATHY ganesh pepper

Ganesh shaped in ginger and capsicum

Tiruvalam is another place where Vinayaka has a small shrine. It is believed that Vinayaka went around his father and mother to get the mango fruit (please see the story in the first part). Ganesh statue is on the banks of the River Ponnai. Famous Saivaite saint Nambi Andar Nambi praised this Ganesh in his hymn.

 

Another Ganapathy is called Mayapillayar (Magical Ganesh). It is said that he appeared there magically. He came out of nothing. He is in Tiruppattur (North Arcot).

 

To be continued…………………………..

 

 

புதிய புராணம் பகுதி-3 வலஞ்சுழி,இடஞ்சுழிப் பிள்ளையார்கள் (Post No.3124)

ganesh dinamalar

Written by London swaminathan

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 9-33 AM

 AM

 

Post No.3124

 

Pictures are taken from various sources; thanks.

 

pillayarpatti

Picture: Pillayarpatti Ganesh

முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்பட்டுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பதை யும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு.

 

முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்படுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பஹையும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு. பெரும்பாலும் இடமாகச் சுழிக்கப்பட்டிருக்கும்.

 

புகழ்பெற்ற, மிகப் பழமையான பிள்ளையார்பட்டிக் கோவிலில் விநாயகர் துதிக்கை வலமாகச் சுழித்திருப்பதைக் காணலாம். இது ஒன்பது நகரத்தார் கோவில்ல்களில் ஒன்று. சுமார் 1600 ஆண்டுப் பழமையுடையது. திருச் செங்காட்டங்குடி வாதாபிக் கணபதிக்கும் முந்தையவர் இவர் என்பதற்கு அங்கே இருக்கும் கல்வெட்டுகள் சான்று பகரும். இது பாண்டியர் காலக் குடைவரைக் கோவில்.

 

காரைக்குடி- திருப்புத்தூர் வழித்தடத்தில் குன்றக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. ஏனைய சிவன் கோவிலகளில் பிள்ளையார் ஒரு துணைச் சந்நிதியில் அமர்ந்திருப்பார். ஆனால் இங்கோ பிள்ளையார்தான் முதலிடம். ஊரின் பெயரும் பிள்ளையாரின் பெயரில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இந்த ஊரின் பழைய பெயர் எருக்காட்டூர். பிள்ளையாரின் உயரம் ஆறு அடி.

 

பிள்ளையார்பட்டி குடைவரையில் உள்ள பெருபரணன் கல்வெட்டைக் கொண்டு ஆராய்ந்தால் இது பல்லவர் காலத்துக்கும் முன்னர் அமைந்த கோவில் என்பது விளங்கும் என்பார் கம்பன் அடிப்பொடி சா. கணேசன்.

 

இந்தப்பிள்ளையரை தேசி விநாயகப் பிள்ளையார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடும்.

 

இவர்தான் பழைய பிள்ளையார் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் காட்டும் சான்றுகள்:–

துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்தது

நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரத்துடன் விளங்குவது

அங்குச பாசங்கள் காணப்படாமை

வயிறு ஆசனத்தில் படாமல் அர்த்தபத்ம ஆசனம் போலக் கால்கள் மடிந்திருப்பது.

வலக்கரத்தில் மோதகம் வைத்திருப்பது

இடக்கரத்தை கடிக ஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் கொண்டிருப்பது.

வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகியும் காணப்படுவது.

 

வலஞ்சுழிப் பிள்ளையார்தான் ஓம்கார ஸ்வரூபமென்பதையும், சிலைகளாகப் பிள்ளையார் உருப்பெருமுன், ஓம்கார சொரூபமாக அவர் வணங்கப்பட்டார் என்பதற்கும் இது சான்று ஆகும்.

ganesh in drama

சேண்பாக்கம் ஏகாதச (11) ஸ்வயம்பு கணபதி மூர்த்தங்கள்

 

இங்குள்ள 11 கணேச மூர்த்திகளும் ஓம்கார வடிவில் அமைந்திருக்கின்றன. 1865 ஆம் ஆண்டு மந்திரி துக்கோஜி ராவ் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது, பூமியில் சிறு அளவில் வளர்ந்திருந்த பிள்ளையார் சிலை மீது இடித்தவுடன் ரத்தம் வந்ததாகவும் உடனே வண்டி நகரவில்லை என்றும் சொல்லுவர். துக்கோஜிராவ் அன்றிரவு முழுவதையும் அங்கேயே செலவிட நேரிட்டது. அவரது கனவில் தோன்றிய கணபதி தமக்குக் கோவில் எழுப்புமாறு சொன்னவுடன் அவர் ராஜ மான்யங்களோடு ஒரு கோவிலை எழுப்பினார்.

 

இதே போல காஞ்சிப் பெரியவர் அங்கு சென்றபோதும் ஒரு அற்புதம் நடந்தது. அவர் வேலூர் விஜயம் மேற்கொள்ள இருந்தபோது சேண்பாக்கம் கணபதிக்கு 108 சிதறு தேங்காய்கள் உடைக்கும்படி கூறி இருந்த போதும் சிஷ்யர்கள் அதை மற ந்துவிட்டனர். அவ்வழியே பெரியவர்களுக்குப் பின்னால் யானை மீது புதுப் பெரியவர் வந்து கொண்டிருந்தார். நெடுஞ்சாலையிலிருந்து சேண்பாக்கத்துக்கு பிரிந்து செல்லும் இடத்துக்கு யானை வந்தபோது, இருந்த இடத்திலேயே சுற்றத் துவங்கியது. இது ஏன் என்று மடத்து நிர்வாகிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது பெரியவர் 108 தேங்காய் உடைக்கச் சொன்னதும் அதைத் தாங்கள் மறந்ததும் மடத்து நிர்வாகிகளுக்குந் நினைவுக்கு வந்தது. உடனே 108 தேங்கய்களைக் கொண்டுவந்து சிதறுகாய் போட்டதும் யானை நகரத் துவ ங்கியது. பெரியவர்கள், அதையடுத்து சேண்பக்கத்துக்கு விஜயம் செய்து அங்கு ஒரு நாள் முழுதும் தங்கி அபிஷேக ஆராதனைகளை நடத்தினார்.

 

வடஆற்காடில் இது தவிர திருப்பத்தூர் மாயப்பிள்ளையார்,திருவலம் வந்த விநாயகர் ஆகியோரும் பிரபலமானவர்கள்.

திருப்பத்தூர் மாயப் பிள்ளையார் திடீரென்று பூமியிலிருந்து தோன்றியதாக பக்தர்கள் கூறுவர்.

திருவலம் என்னும் தலம் நம்பியாண்டார் நம்பியால் பாடப்பெற்ற இடம் ஆகும். பொன்னை நதிக்கரை யில் அமைந்த ஆலயத்தில் அம்மை அப்பனை வலம் வந்து மாங்கனி பெற்ற பிள்ளையாருக்கு தனி சந்நிதி ஒன்று உள்ளது.

GINGER GANAPATHY  ganesh pepper

Picture of Ganesh shaped vegetables

ஏனைய பிள்ளையார் கதைகளை 4-ஆவது பகுதில் பார்ப்போம்.

 

Source Books:

பிள்ளையார் பட்டி தல வரலாறு -சா.கணேசன், 1983

காணாபத்யம்- செந்தில் துறவி, 1968

 

 

 

 

 

 

பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! (Post No.3123)

ganesh laddu

Written by S NAGARAJAN

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 5-05 AM

 

Post No.3123

 

Pictures are taken from various sources; thanks.

 

ச.நாகராஜன்

 

ganapathy, mysore

இணைய தளம் வந்து விட்ட காலத்திலிருந்து எல்லோரும் அறிஞர்களே!

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி இணையத்தில் “போடுவதைக்” கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டு விட்டு விடலாம்.

ஆனால் நச்சுக் கருத்துக்களைப் பரப்புவர்களை மன்னிக்க முடியாது!

 

 

தீய சக்திகளின் கொள்கை பரப்பாளர்களுக்கு இணைய தளம் ஒரு வேடிக்கையான விளையாட்டுக் களம்

ஆரியர், ஐயர் என்று திட்டுவது, பிள்ளையாரில் ஆரம்பித்து கிராமத்து ஐயனார் வரை எல்லாக் கடவுளரையும் (இயேசு அல்லா நீங்கலாக – இவர்களைத் திட்டினால் தீட்டி விடுவார்களே) திட்டுவது – இதுவே இவர்களுக்குப் பொழுது போக்கு.

 

 

இவர்களின் எழுத்துக்களில் கருத்துக்களை விட ஆபாசமான வார்த்தைகளுக்கே முதலிடம் தருவது வழக்கம்.

இப்போது விநாயக சதுர்த்தி வருவதை  முன்னிட்டு பிள்ளையார் தமிழர் தெய்வமே இல்லை, பிள்ளையார் வழிபாடு பிற்காலத்தில் புகுத்தப்பட்ட வழிபாடு என்று ஒரு புரளியை தீய சகதியின் ‘அறிஞர்’ ஒருவர் இணையதளத்தில் பதிய விட்டிருக்கிறார்.

 

 

ஆனால் அது பதிய விட்ட போதே வாடி வதங்கி விட்டது.அந்தக் கருத்து பதிய விட்ட போதே அதைத் தமிழர்கள் அபார்ஷன் செய்து விட்டார்கள்!

 

ஏனெனில் பிள்ளையார் தமிழரின் தெய்வம் இல்லை என்றால் வேறு யார் தான் தமிழர் தெய்வம்!

 

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது தமிழர்களின் முழக்கம்.

 

சிவன் அமைத்த தமிழ்ச்சங்கத்தை இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்டு மகிழலாம்.

 

புலவர்கள் புடை சூழ இறையனார் அமர்ந்திருக்கும் கம்பீரமே கம்பீரம். அங்கு முழக்கமிட்ட தமிழ் மொழியே உண்மையில் தெய்வ மொழி.

 

 ganapathy swastik

சிவனின் அருமை மகனான பிள்ளையார் அல்லவா சங்கத் தமிழ் மூன்றையும் தருபவர். அவரது தம்பியான முருகன் அல்லவா தமிழ் முருகன்! அப்பனுக்கு மந்திரத்தின் பொருள் விளக்கம் சொன்ன தகப்ப்ன் சாமி தமிழுக்கும் அல்லவா பொருளுக்கும் பொருளானவர்!

 

ஆக இந்தப் பிள்ளையாரை தமிழர்களாகிய நாம் கும்பிடவே இல்லை என்பது தீய சக்திகளின் இமாலயப் பொய்!

 

திருமுருகாற்றுப்படை என்பது சங்க இலக்கியத்தில் பழமையான நூல். இதன் காலம் குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு  முந்தையது.இதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார்.

 

 

தமிழ் மூதாட்டியும் உலக அறிஞர்களில் ஒருவருமான ஔவையார் யாரிடம் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினார்?

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

சங்கத் தமிழ் மூன்றும் தா!”

 

 

அடடா, என்ன ஒரு வணிக நேர்த்தி!

 

நான்கு தருகிறாராம், ஆனால் மூன்று கொடுத்தால் போதுமாம்!

பாகும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் பெற்ற பிள்ளையார் முத்தமிழையும் அள்ளித் தராமலா இருப்பார்!

அருளினார்! ஔவையைப் பாட வைத்தார்! இறவாப் புகழை அளித்தார்.

 

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்               

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு                       

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்                

தப்பாமல் சார்வார் தமக்கு!

 

 ganesa shrine,thailand

ஔவையின் வாக்கைக் கடைப்பிடித்து பூக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று தப்பாமல் பிள்ளையாரை வணங்குவோம்!

தீய சக்திகள் அழிந்து தமிழ் நாடு நல்ல சக்திகளின் இருப்பிடமாக ஆக வேண்டுவோம்!

*********

விநாயகப் பெருமானின் 16 நாமங்கள் (Post No.3122)

ganesh muslim

COMPILED by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 18-20

 

Post No.3122

 

Pictures are taken from various sources; thanks.

 

(நாமம் = பெயர்)

 

மங்களம் வாய்ந்த ஸுமுகன்

ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்

கபில நிறம் வாய்ந்த கபிலன்

யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்

பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்

குள்ளத் தோற்றமுள்ள விகடர்

சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்

தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்

நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது

பூத கண ங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்

நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய பாலசந்திரன்

யானை முகத்தையுடைய கஜானனன்

வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்

முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்

தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்

கந்தப் பெருமானின் அண்ணனான ஸ்கந்தபூர்வஜன்

–இவ்வாறு சொல்லப்படும் பிள்ளையாரின் 16 நாமங்களையும்

கல்வி கற்கும் போதும், வீட்டைவிட்டுப் புறப்படும்போதும்,

போர்க் காலத்திலும், இன்னலுற்றபோதும்

யாராவது வாசித்தாலும், கேட்டாலும் அவர்களுக்கு

எந்த இடையூறும் வராது.

–கந்த புராணம்

 

எளிதில் நினைவிற்கொள்ள ஸ்லோக வடிவில்

 

ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:

லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:

தூமகேதுர்கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானன:

வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:

 

32 வகைப் பிள்ளையார்

 

 

–SUBAHM–

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? (Post No.3121)

96910-kkish1

Written by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 13-11

 

Post No.3121

 

Pictures are taken from various sources; thanks.

 

 

கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.

 

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).

 

இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து கருணையின் கடல் அனையர் என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-

 

சதமன் அஞ்சுறு நிலையர்

தருமன்  அஞ்சுறு சரிதர்

மதனன்  அஞ்சுறு வடிவர்

மறலி அஞ்சுறு விறலர்

 

jaya hanuman

பொருள்:–

 

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,

தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,

மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,

யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

 

என்ன அழகான வருணனை!

 

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான் என்ற  அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .

 

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

 

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

 

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

 

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

 

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

 

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

 

–subham–

 

 

Ganesh who ate the Prasad: Strange Stories from Tamil Temples-Part 2 (Post No. 3120)

ganesh lanka

Written by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 11-30 AM

 

Post No.3120

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Maharashtra and Tamil Nadu celebrate Ganesh Chathurthy on grander scales than other states in India. And in the same way more temples are here for Vinayaka (Ganesh/Ganapathy) with lot of local stories. One speciality about Tamil Nadu is that some of the stories are over thousand years old. We have Ganesh stories associated with Tamil Saint Sundarar of eighth century CE.

 

Nambiandar Nambi was a famous Saivaite who compiled the Saivaite books. He was credited with rediscovering the Tamil Thevara Hymns hidden in the Chidambaram Nataraja Temple. He got the clue only from a Ganesh statue on the banks of a river in Tirunaraiyur. When he was a boy he used to accompany his father to the temple. One day his father could not go to the temple for his regular daily Puja (worship) and so the work was entrusted to Nambi. He went to the temple and did the Puja like his father and offered the Prasad (cooked food) to the God. But the Stony Ganesh never opened his mouth. Innocent Nambi thought that it was his erroneous Puja that made the Ganesh to shut his mouth. So he started banging his head on the granite stones of the temple in frustration. Suddenly Ganesh came out of the rock and ate the food offering he brought from home. From that day he was called Polla Pillayar (the naughty Ganesh). It is believed he was the one who guided Nambi to Chidambaram to find the Thevaram Hymns.

vinayaka girls

Sundarar and Gold coins

Following story is from my previous post:-

Teleportation Miracles in Hindu scriptures

Posted on 6 March 2013

“Sundarar was one of the great Four Saivaite saints of Tamil Nadu. He lived in 8th century AD. Like other three saints he also did several miracles. One of the miracles involves teleportation. Sundarar was empty handed when he went to Vriddhachalam temple near Chennai. He was always generous in asking, in fact demanding.  He never acted like a beggar while he was begging. He sought “only gold” whenever he prayed for money. Knowing his status Shiva was also generous in giving. When Sundarar prayed for gold coins Shiva gave him 12,000 gold coins. Money always comes with problems. How to carry such a big load safely? was Sundarar’s worry. His home town Tiruvarur is not nearby. Again he went to Shiva for a solution. He told him to throw them in to the river Manimutharu and collect them at the Kamalalayam Tank in Tiruvarur temple! If it was hard earned money Sundarar would have hesitated, but it was money that came easily. So he left them in the river and went to Tiruvarur.

 

Sundarar told his wife Paravai that he was going to collect the coins from the local temple tank at Tiruvarur and asked her to accompany him. She would have thought that Sundarar had gone mad. But yet like a faithful wife, she followed him with lot of doubts in her mind. Sundarar stood on the banks of the vast tank (biggest temple tank in Tamil Nadu) and started singing hymns praising Lord Shiva. Surprise! Surprise! All the 12,000 coins came out intact as if they were minted under the tank!

Vridhachalam also known as Tirumudukundram is situated between Chennai and Trichy very near Viluppuram.”

 

And here comes our Ganesh!

When Sundarar threw the money into the river, he tested the god coins whether they were real gold coins. He made the Ganesh as a witness for all his activities there. So the Ganesh is called Maatru Uraiththa Pillayar, meaning Ganesh who tested the fineness of the gold coins.

ganesh making2

Uchchi Pillayar of Trichy

It is unusual for a Ganesh temple to be located on a hill top. And in Trichy we have a very famous temple on the top of a hill. Since he is at the top he is called Uchchi Pillayar (Ganesh at Top)

 

Manakkulam (Pondicherry) Vinayakar

Vinayaka means one who has none above him. He is the leader. Manakkulam Vinayaka very near the beach in Pondicheri is famous for two reasons. The greatest of the Tamil poets of modern era is Bharatiyar. When he fought for independence of India, he used to hide in the French ruled Pondicheri of Tamil Nadu (now it is a separate state). He used to worship at the temple and he sang hymns on this Ganesh naming his in poem as Manakkula Vinayaka. Thus Manakkulam Ganesh became immortal in his poems.

 

The second reason was that the French rulers of Pondicheri never liked big crowd assembling in front of the temple and making ‘noise’. So they threw the Ganesh statue into the sea. Surprise! surprise! The stony Ganesh (Manakkulam Vinayakar) was there in his original place the very next morning. When it came to the knowledge of the surprised authorities they helped Hindus to build a temple. Till today he is attracting a large crowd.

ganapathy rangoli

To be continued……………………….

புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)

ganesh lanka

புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)

 

Written by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 5-55 AM

 

Post No.3119

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பகுதி ஒன்றில் மதுரை முக்குறுணி விநாயகர், கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதைகளை  அறிந்தோம். நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர்.

ganapathy rangoli

அவர் கதையையும் கேளுங்கள்!

சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் திருநாரையூர் இருக்கிறது. ஆனந்தேச சிவாச்சாரியார் இங்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவரால் பூஜைக்குச் செல்ல முடியாததால், தனது மகன் நம்பியாண்டார் நம்பியை அழைத்து, கணபதிக்குப் பூஜை செய்துவிட்டு இறைவனுக்கு அமுதும் படைத்து வா என்று அனுப்பிவைத்தார். கள்ளமில்லா உள்ளம் படைத்த நம்பி, பூஜையை முறைப்படி செய்துவிட்டு, பிள்ளையாருக்கான நைவேத்தியத்தைப் படைத்துவிட்டு பிள்ளையார் உண்ட பின் வீடு திரும்புவோம் என்று காத்திருந்தான். நெடு நேரம் ஆகியும் கல்லுப் பிள்ளையார் கல்லாகவே காட்சிதந்தார். ஒரு அங்குலம் கூட நகரவில்லை; வாயையும் திறக்கவில்லை.

 

தான் செய்த பூஜையில் தவறு இருந்ததால்தான், கணேசன் வாய் திறக்கவில்லை என்று அருகிலுள்ள கருங்கல்லில் தலையை மோதிக்கொள்ளத் துவங்கினார். தனது “தவற்றுக்கு” தானே தண்டனை கொடுத்தபோது, பிள்ளையார் அவர் முன் தோன்றி உணவு வகைகளை வாங்கி வயிறு புடைக்கத் தின்றார். பொல்லாப் பிள்ளையார் அல்லவா!! அந்தப் பிள்ளையாரின் அருளால்தான் சிதம்பரத்தில் இருக்கும் தேவாரப் பதிக ரகசியமும் அவருக்குத் தெரிய வந்தது.

தேவாரத் திருமுறைகளைத் தமிழ்கூறு நல்லுலத்துக்குக் காப்பாற்றிக் கொடுத்த பிள்ளையாரை நல்ல பிள்ளையார் என்றே சொல்ல வேண்டும்.

உச்சிப் பிள்ளையார்

தமிழ்நாடு முழுவதும் குன்றுதோராடுவது குமாரக் கடவுள்தான். ஆனால் திருச்சியில் மட்டும் மலை உச்சிக்குப் போய்விட்டார் குமரனின் அண்ணனான பிள்ளையார். ஆகையால் அவர் உச்சிப் பிள்ளையார் ஆகிவிட்டார்.

 ganesh making2

பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்!

 

சொற்தேரின் சாரதியாம் பாரதியின் வாயினால் வாழ்த்தப் படாத தெய்வம் இல்லை. ஆனால் அவை எல்லாம் பொதுவான பிரார்த்தனைகள். புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் மட்டும் ஊர்ப்பெயருடன் பாடப் பெற்றார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

 

புதுவை கடற்கரையில் கோயில் கொண்டுள்ள இந்தப் பிள்ளையாரைத் தரிசிக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, கோபம் கொண்ட அந்நிய ஆட்சியாளர்கள், விநாயகர் சிலையை அகற்றி கடலில் போட்டுவிட்டனராம். ஆனால் மறு நாளே பிள்ளையார், இருந்த இடத்துக்கே வந்துவிட்டார். இதைக் கண்டு வியந்த அந்நிய ஆட்சியாளர் அவருக்குக் கோயிலும் எழுப்பிச் சிறப்பித்தனரம்.

 

இதோ பாரதியின் பாடல்:-

 

வாழ்க புதுவை மணக்குளத்து

வள்ளல் பாத மணி மலரே;

ஆழ்க உள்ளஞ் சலனமிலா

தகண்ட வெளிக்கண் அன்பினையே

சூழ்க; துயர்கள் தொலைந்திடுக;

தொலையா (இன்பம் விளைந்திடுக)

வீழ்க! கலியின் வலியெல்லாம்!

கிருத யுகந்தான் மேவுகவே.

vinayaka girls

மாற்றுரைத்த பிள்ளையார்

விருத்தாசலம் (திரு முதுகுன்றம்) மாற்றுரைத்த பிள்ளையார், சுந்தரர்- பரவை நாச்சியார் வாழ்வுடன் தொடர்புடையவர். பரவை நாச்சியாருக்கென வேண்டி சுந்தரர், சிவ பெருமானிடமிருந்து பொற்காசுகளைப் பெற்றார். அவற்றை மணிமுத்தாற்றில் இடுவ்தற்கு முன் அப்பொன்னை மாற்றுரைத்து, அதற்கு இப்பிள்ளையாரைச் சாட்சியாக வைத்ததால், அவர் மாற்றுரைத்த பிள்ளையார் எனப் பெயர் பெற்றார்.

 

To be continued…………………………………………………….

 

Strange Stories about 50 Ganesh Temples in Tamil Nadu (Post No.3118)

gaja puja ganesh

Written by London swaminathan

 

Date: 3 September 2016

 

Time uploaded in London: 17-14

 

Post No.3118

 

Pictures are taken from various sources; thanks.

 

Lord Krishna is known for his pranks, naughty deeds and sometimes mischiefs to help his devotees. Next comes Lord Ganesh, popularly known as Pillayar in Tamil, in that line. There are lot of stories about fifty famous Ganapathy/ Ganesh shrines in Tamil Nadu. But he does all these to help his devotees. His name Vigna +Eswaran has positive and negative connotations. He gives troubles to those who ignore him and removes troubles of those who worship him.

 

Tamils are familiar with two old legends. When Narada came with a single mango fruit with a condition that it should not be cut into two and if it is cut it will lose its magical properties. So Lord Shiva set up a contest to his two children, Lord Ganesh and Lord Kartikeya, that whoever circles the world first would get that fruit. Lord Ganesh was very clever and he circled his father and mother and said that he had done it. Hindus believe that Parvati and Parameswara are Jagata Pitarau (Parents to the entire world) and so he won the contest. But Lord Subrahmanya/ Kartikeya went very fast on his peacock Vahana around the world and came back as quickly as possible. When he came to know how his elder brother Ganesh won the contest he became angry and left home for a mountainous abode called Palani.

ganesh gold

Another episode is that Shiva went on a mission without worshipping Ganesh and his chariot wheels broke down. Later he pacified Lord Ganesh and went on his way. Tamil poet Arunagirinathar has sung about it.

 

Both of these stories are very old stories. There are new stories, mostly local, about Ganesh shrines in 50 plus odd places.

 

Let me start from my old Home Town Madurai. The famous Meenakshi Temple has an 8 feet tall Ganesh statue. Every year on the  Ganesh Chathurthy day, a big Modakam (Round sweet ) is made with 21 kilo ingredients. In the same temple there is another small Vignesh which is bathed with holy ash (Vibhuti). And another famous street corner Ganapathy (Ganesh) is Nehru Alala Sundara Vinayaka. When atheist Prime Minister Jawaharlal Nehru visited Madurai, his motorcade was stopped in front of the temple and he worshipped that Ganesh (made to worship!!). From that day the Ganesh temple was named after Nehru, the atheist.

 

1000 Sugarcane Pillayar of Kumbakonam

There is an interesting story about a small Ganapathy temple in Kumbakonam. A sugar merchant came with a cart load of sugar cane just harvested, to the town. There came a little boy and asked for a sugar cane. He refused to give him the sugar cane. Next day when he woke up all the sugar cane were crushed and only the stems were remaining. Later he realised that the boy was actually Lord Ganesh and then he offered 1000 sugarcanes to Lord Ganesh and from that day the shrine is called Karumbaayiram Pillayar i.e. 1000 sugarcane Ganesh shrine.

Very near Madurai, there is a cave temple in Tirupparankundram, where there is a carved figure of Ganesh.

 

colour ganesh from madur kulasekar

There are more stories about Tirusegattankudi Vatapi Ganapathy, Pillayarpatti Cave Temple Ganapathy, Naughty Vinayaka (Polla Pillayar), “Tap on the temples” Ganesh (Thada Pada Kuttu), Uchi Pillayar, Manakkulam Pillayar etc.

In London (United Kingdom), there are four Ganesh Temples, all run by Tamils.

 

I will tell you more stories in the next post.

 

To be continued………………

புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப்பிள்ளையார் வரை! – பகுதி 1 (Post No. 3117)

 

gaja puja ganesh

புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப்பிள்ளையார் வரை! – பகுதி 1 (Post No. 3117)

 

Written by London swaminathan

 

Date: 3 September 2016

 

Time uploaded in London: 9-53 AM

 

Post No.3117

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்து மதத்தில் கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அதிக சேஷ்டைகள், விஷமங்கள் செய்ததது பிள்ளையார்தான்! ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிள்ளையார் கதை உண்டு. இவை எல்லாவற்றையும் தொகுத்தால் புதிய விநாயகர் புராணம் வந்துவிடும். ஆனால் பிள்ளையாரின் குறும்புத்தனங்கள் எல்லாம் நன்மையிலேயே முடியும். பெயரிலேயே பிள்ளை (யார்) என்று இருக்கும்போது குறும்புத்தனங்கள் இருப்பது நியாயம்தானே!

 

புதிய பிள்ளையார் புராணம் மிக நீண்டது. முதலில் பட்டியலைக் கொடுத்துவிடுகிறேன். பிறகு ஒவ்வொரு பிள்ளையாரின் பெருமையையும் சுருக்கி வரைகிறேன்.

பொல்லாப் பிள்ளையார் முதல் கள்ளப் பிள்ளையார் வரை! வாதாபி கணபதி முதல் வரசித்தி கணபதி வரை !! எல்லோரையும் காண்போம்.

madurai pillayar

மதுரை மேலமாசிவீதி – வடக்கு மாசிவீதி சந்திப்பிலுள்ள பிள்ளையார் மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார். நாஸ்தீகரான நேருவே , மதுரை வந்தபோது காரை நிறுத்தி கும்பிடு போட்ட (காங்கிரஸ் பக்தர்களால் கும்பிடு போடும்படி செய்யப்பட்ட) பிள்ளையார் என்பதால் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

 

(ஆலமரத்துக்கடியில் குடிகொண்ட இப்பிள்ளையாரை நான் லண்டனில் குடியேறும்வரை வழிபட்டு வந்தேன். இப்போதும் இந்தியாவுக்குப் போகும் போதெல்லாம் மதுரைக்குச் சென்று மீனாட்சியையும் இந்தப் பிள்ளையாரையும் தரிசிக்காமல் திரும்புவதில்லை).

 

மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள கவர்ச்சிகரமான , பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் மிகப் பெரிய கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர். அ து மட்டுமல்ல இந்தப் இள்ளையார் சிலை, மதுரைக் கோவிலைக்கட்ட மண்  தோண்டியபோது, மாரியம்மன் தெப்பக்குளப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாம். முஸ்லீம் ஆட்சியில் அழிந்த பல கோவிலகளில் ஒன்று அப்பகுதியில் இருந்திருக்கலாம். (எனது பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க: – “21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?”, posted on 30 May 2013)

 

மதுரைக் கோவிலுக்குள் உள்ள மற்றொரு புகழ்மிகு பிள்ளையார், (அம்மன் சந்நிதிப்) பொற்றமரைக் குளத்தின் தெற்குப் பிரகாரத்திலுள்ள விபூதிப் பிள்ளையார் ஆவார். பக்தர்கள் அனைவரும் அவரை வலம் வந்து ஒரு பிடி விபூதியை அவர் தலையில் அபிஷேகம் செய்து பாதத்திலுள்ள விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ளுவர். விபூதியும் அவர் வைக்கப்பட்டுள்ள மரத்தொட்டியில் விழுவதால், நாம் தனியாக விபூதி கொண்டுபோக வேண்டிய அவசியமில்லை.

கோவிலில் இன்னும் பல இடங்களில் பிள்ளையார் சிலைகள் உண்டு. ஆனால் அவைகளின் சிறப்புகளைச் சொல்லும் கதைகள் ஏதும் இல்லை.

 

colour ganesh from madur kulasekar

கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதை

ஒரு கரும்பு வியாபாரி வண்டி நிறைய கரும்பு கொண்டுவந்தான். பிள்ளையார், ஒரு சிறு பையன் வேடத்தில், அவனிடம் சென்று கரும்பு கேட்டார். அவன் அந்தப் பையனை விரட்டி விட்டான். மறுநாள் அவனுடைய கரும்புகள் அனைத்தும் யாரோ சாப்பிட்டுவிட்டுத் துப்பிய சக்கையாக கிடந்தன. உடனே அவன் தன து தவற்றை உணர்ந்தான். பிள்ளையாரே தமக்கு அருள்புரிய இப்படி வந்தாரென்றும், அவன் சிறுவனுக்குக் கரும்பு கொடுக்காமல் திட்டி விரட்டியது தவ று என்றும் உணர்ந்து ஆயிரம் கரும்புகளை கணபதிக்குப் படைத்தான். அன்று முதல் அவன் செழிப்பு அதிகரித்தது. இந்தப் பெருமை ஊரெங்கும் பரவவே அந்தப் பிள்ளையாரின் பெயர் கரும்பு ஆயிரம் பிள்ளையார் ஆயிற்று

 

 

50 பிள்ளையார்களின் நீண்ட பட்டியல்:–

 

இதோ தமிழ் நாட்டின் பிள்ளையார் கோவில்களின் (சந்நிதிகளின்) நீண்ட பட்டியல்:–

 

முக்குறுணி விநாயகர்  — மதுரை மீனாட்சி கோவில்

விபூதிப் பிள்ளையார் – மதுரை மீனாட்சி கோவில்

நேரு ஆலால சுந்தர விநாயகர் – மதுரை

குடைவரைப் பிள்ளையார் — திருப்பறங்குன்றம் கோவில்

கரும்பாயிரம் பிள்ளையார்  – கும்பகோணம்

 

அழகிய விநாயகர் – திருவாவடுதுறை

ஆண்ட பிள்ளையார் – நறையூர் சித்தீச்சுரம்

ஆதி விநாயகன் – திருவையாறு

ஆழத்துப்பிள்ளையார் – திருமுதுகுன்றம்

உச்சிப்  பிள்ளையார் – திருச்சிராப்பள்ளி

ஓலமிட்ட பிள்ளையார் – திருவையாறு

கங்கைக் கணபதி – குடந்தை கீழ்க்கோட்டம்

கடுக்காய்ப் பிள்ளையார் – திருக்காறாயில்

கருக்கடி விநாயகர் – திருக்கச்சூர்

கள்ள வாரணப்  பிள்ளையார் – திருக்கடவூர்

கற்பகப் பிள்ளையார் – கடிக்குளம், திருக்காவூர்

கற்பக விநாயகர்– பிள்ளையார்பட்டி

கூப்பிடு பிள்ளையார் – திருமுருகன் பூண்டி

கைகாட்டு பிள்ளையார் – திரு நாட்டியத்தான்குடி

கோடி விநாயகர் – கொட்டையுர்

சிந்தாமணி கணபதி-திருமறைக்காடு

சுந்தர கணபதி- கீழ்வேளூர், திருமழபாடி

சூதவனப் பிள்ளையார்- திருவுச்சாத்தனம்

செவிசாய்த்த விநாயகர் – அன்பிலாந்துறை

சொர்ண விநாயகர் – திருநள்ளாறு

 

ganesh gold

தாலமூல விநாயகர் – திருக்கச்சூர்

துணையிருந்த பிள்ளையார் – திருப்பனையூர்

நாகாபரண விநாயகர் – நாகைக் காரோணம்

நீர்த்தன விநாயகர் – இன்னம்பர்

படிக்காசு விநாயகர் – திருவீழிமிழலை

மணக்குள விநாயகர் – பாண்டிச்சேரி

மாணிக்க விநாயகர் திருச்சி

நவசக்தி  விநாயகர் – மைலாப்பூர், சென்னை

அஸ்வத்த விருட்ச  விநாயகர் – தி.நகர், சென்னை

படித்துறை விநாயகர் – திருவிடை மருதூர்

பிரளயங்காத்த பிள்ளையார் -திருப்புறம்பியம்

பொய்யா விநாயகர் – திருமாகறல்

பொல்லாப்  பிள்ளையார் – திருநாரையூர்

மாவடிப் பிள்ளையார் – நாகைக் காரோணம்

மாற்றுரைத்த பிள்ளையார் – திருவாரூர்

முக்குறுணிப் பிள்ளையார் – சிதம்பரம், மதுரை

வரசித்தி விநாயகர் – திருவல்லம்

வலம்புரி விநாயகர் – திருக்களர்

வாதாபி கணபதி – திருப்புகலூர் (திருச்செங்காட்டங்குடி, கணபதீச்வரம்)

வீர உறத்தி  விநாயகர் – திருமறைக்காடு

வெள்ளை விநாயகர் – திருவலஞ்சுழி இடும்பாவனம்

வேதப்  பிள்ளையார் – திருவேதிகுடி

தொடரும்……………..

 

விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?! (Post No.3116)

space-court

Written by S NAGARAJAN

 

Date: 3 September 2016

 

Time uploaded in London: 5-28 AM

 

Post No.3116

 

Pictures are taken from various sources; thanks.

 

 

26-8-16 பாக்யா இழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!

.நாகராஜன்

 

 

        குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்  -லெமனி ஸ்னிக்கட்

 

 space-law-

விண்வெளியில் சுற்றுலாப் பயணம் என்பது நிச்சயமாகி விட்ட நிலையில் பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போதே கவலைப் படுகின்றனர் விண்வெளி ஆர்வலர்கள்.

குறிப்பான ஒன்று விண்வெளிச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி!

 

 

அறிவியல் புனைகதை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, விண்வெளியில் பறக்கும் போது விண்கலத்தில் இருக்கும் ஒருவர் பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ தன்னுடன் கூடப் பறக்கும் ஒருவருக்குத் தீங்கை இழைத்து விட்டால்? குற்றவாளி எப்படி எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார், தண்டிக்கப்படுவார்?

 

கிறிஸ்டோபர் ஜே நியூமேன் என்பவர் இந்த விஷயத்தைக் குறித்து மிகத் தீவிரமாக ஆராய்ந்து தனது யோசனைகளைத் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் உள்ள சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தில்  பொதுச் சட்டம் பற்றிப் போதிக்கும் பேராசிரியர்.

 

 

விண்வெளிச் சுற்றுலா பெரிய அளவில் நடக்கும் போது அனைவருமே நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதல்லவா என்பது அவரது கேள்வி.

விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பின்பற்றப்படும் கடுமையான விதிகளை சுற்றுலாப் பயணிகளின் மீது பின்பற்ற முடியாதல்லவா?

வர்ஜின் காலக்டிக் என்ற  நிறுவனம் இப்போதே பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டது.

 

 

இப்படிப்பட நிறுவனங்கள் பெருகி விடும் போது தங்களின் லாபத்திற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் அதிகமாக ஈர்த்து விண்வெளிப் பயணத்தில் ஈடுபட வைப்பதிலே தான் அவைகள் குறியாக இருக்கும்.

சட்டம் ஒழுங்கை யார் விண்வெளியில் பராமரிப்பது?

 

ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவுடர் ஸ்பேஸ் ட்ரியடி (Outer Space Treaty)   என்ற ஒரு ஒப்பந்தத்தில் நூறு நாடுகள் கையெழுத்திட்டன. இதன்படி விண்வெளியில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. அத்துடன் அந்தந்த நாட்டின் விண்கலம் சேதம் அடைந்தால் அதுவே மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

 

 space_law

     இத்துடன் சரி.  குற்றங்களைப் பற்றி அந்த ஒப்பந்தத்தில் ஒன்றுமே இல்லை. 1991இல் மனிதனால் இயக்கப்படும் விண்கலத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் என்று ஒரு வரைவு விதிமுறை உருவாக்கப்பட்டது,

அதில் விண்கலத்தின் காப்டன் யாரோ அவருக்கு அதில் பயணிக்கும் அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பது நிர்ணயிக்கப்பட்டது. விண்கலத்தின் இதர பணியாளர்கள் விண்பயண பணிகளைக் கண்காணிக்கும் டைரக்டருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படது.

 

 

1963ஆம் ஆண்டு டோக்கியோ கன்வென்ஷன் விதிமுறைகள் என்ற சட்டம் விமானத்தின் பைலட் அதில் பயணம் செய்யும் பயணிகளின் மீது அவர்கள் ஒழுங்காக நடக்காத பட்சத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் உசிதம் போல எடுக்கலாம் என்று அனுமதி தந்துள்ளது.

 

 

ஆனால் இந்த விமானப் பயணச் சட்ட விதிகள் மட்டும் விண்வெளியில் பறக்கும் போது போதாது என்கிறார் நியூமேன்.

 

 

ஒரு விண்கலத்தில் பல தேசத்து பயணிகள் பறக்கிறார்கள். அந்தக் கலம் ரஷிய கலம் என்று வைத்துக் கொள்வோம். அதில் பறக்கும் ஜெர்மானியர் ஒருவர் ஒரு இத்தாலியரின் மீது ஒரு குற்றத்தை இழைத்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஜெர்மானிய தேசத்தின் சட்டமே பொருந்தும் – இப்போதுள்ள பன்னாட்டு விமானப் பயண சட்ட விதிகளின் படி!

 

 

இந்தச் சட்டம் போதாது, விண்வெளியில் இழைக்கப்படும் குற்றங்கள் பற்றி பன்னாட்டு விண்வெளி நிலையம் ஒரு வழிகாட்டுதலைத் தரலாம் என்பது நியூமேனின் யோசனை.

பன்னாட்டு விண்வெளி நிலையக் கமாண்டரே அவரது கலத்தில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு. அவரில் ஆரம்பித்து ஒரு சங்கிலித் தொடர் போல ஆணைத் தொடர் நிர்ணயிக்கப்பட வேண்டும். விண்வெளிப் பயணிகளுக்கென ஒரு தனியான சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். இவை போன்ற யோசனைகளை நியூமேன் முன் வைக்கிறார்

குறுகிய காலப் பயணத்திற்கு இந்தச் சட்டங்கள் பொருந்தலாம். ஆனால் மிக நீண்ட காலப் பயணங்களுக்கு?

குற்றம் இழைத்தவர்களை என்ன செய்வது. இதற்கும் நியூமேன் ஒரு தீர்வை முன் வைக்கிறார்.

 

 

விண்வெளியில் ஒரு சிறைச்சாலை அமைக்கப்பட வேண்டும். குற்றம் இழைத்தவரை அதில் அடைத்து விட வேண்டும். அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

 

 

ஆனால் இந்த நெடுந்தொலைவுப் பயணங்கள் எல்லாம் சமீபத்தில் நடைபெற வாய்ப்புகள் இருக்கிறதா? இல்லை. அப்படிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளப் போகிறவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் அரிதான சில வீரர்களே

ஆகவே குறுகிய காலப் பயணங்களுக்கான குற்றச் சட்ட விதிகளை உடனே உருவாக்க வேண்டும் என்பது தான் இன்றைய பரபரப்பான வேண்டுகோள்!

 

 

பூமியில் சிறைச்சாலைகள் இருப்பது போதாது என்று விண்வெளியில் ஒரு சிறைச்சாலையா?! விண்வெளி க்ரைம், விண்வெளி சிறைச்சாலை என்பதெல்லாம் கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா?

 gazzaniga

 Picture of Michael S.Gazzaniga, Split Brain Research

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

மைக்கேல் எஸ் கஜானிகா (Michael S. Gazzaniga தோற்றம் 12-12-1939)) என்பவர் சாண்டா பார்பாராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் உளவியல் பேராசிரியர்.  உலகின் முதல் நம்பர் மூளையியல் நிபுணர். பெரிய விஞ்ஞானியும் கூட. அங்கு அவர் மனம் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு ஆய்வு மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.அவர் தான் முதல் முதலில் ஸ்பிளிட் ப்ரெய்ன் எனப்படும் மூளையின் இருவித செயல்பாடுகளைக் கண்டறிந்தார். இதற்காக ஏராளமான பரிசோதனைகளை அவர் நோயாளிகளின் மீது மேற்கொண்டார்.

ஏராளமான விசித்திரமான சோதனை முடிவுகளை அவர் கண்டு உலகிற்குக் கூறினார் அது அனைவரையும் பிரமிக்க வைத்தது டபிள்யூ. ஜே என்ற ஒருவர் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது தலையில் துப்பாக்கியின் முனையினால் அடிக்கப்பட்டு காயம் அடைந்தார். அதிலிருந்து அவருக்கு அடிக்கடி வலிப்பு  வர ஆரம்பித்தது. அவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது.     

 

 

     அதைச் செய்வதற்கு முன்னால் கஜானிகா  அவரது மூளை செயல்பாட்டை ஆராய விரும்பினார்.  அவர் கண்களால் காண முடியாதபடி அவர் கையில் பல பொருள்கள் கொடுக்கப்பட்டன. இடது மற்றும் வலது பக்க பார்க்கும் தளங்களை கஜானிகா சோதித்தார். அவர் மிகவும் சரியாகப் பொருள்களை இனம் கண்டார். ஆபரேஷன் பின்னர் நடத்தப்பட்டது. ஆபரேஷனுக்குப் பின்னால் அவர் மீண்டும் சோதனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்குப் பல விதமான எழுத்துக்கள் மற்றும் வர்ணங்கள் இடது பக்க மற்றும் வலது பக்க பார்க்கும் தளங்களில் காண்பிக்கப்பட்டன.    

rightleftbrain-mine

        ஆச்சரியப்படும் விதமாக இடது பக்க பார்க்கும் தளமானது வலது பக்க மூளையால் செய்முறைப் படுத்தப்பட்டது. அதே போல வலது பக்க பார்க்கும் தளமானது இடது பக்க மூளையால் செய்முறைப்படுத்தப்பட்டது. இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவை நல்குகிறது!

 

 

     சோதனைக்கு உட்பட்டவரின் மூளைப் பகுதியான கார்பஸ் கலோஸம் பல்வேறு விதமான முரண்பாடுகளை அவரை அடையச் செய்து விட்டது. உதாரணமாக அவரது வலது கையை இடது பக்க மூளையும் இடது கையை வலது பக்க மூளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த இரு மூளைகளுக்கு இடையே ஒரு வித தகவல் தொடர்பும் இல்லை.

 

 

       இதனால் அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.காரின் கதவை அவரது இடது கை திறக்க முனைந்த போது அவரது வலது கையோ அதைத் தடுத்தது.

 

      இப்படிப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தான் ஸ்பிளிட் ப்ரெய்ன் (Split Brain) பற்றிய கண்டு பிடிப்பையும் இடது மற்றும் வலது பக்க மூளையின் செயல்பாட்டையும் கஜானிகா உலகிற்கு அறிவித்தார். மூளை பற்றிய புதிய கண்டுபிடிப்பை உலகம் அறிந்து பிரமித்தது.

TalesfromBoth hc c (2)

 

**********