வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி? ராமாயண அறிவுரை (Post No.3572)

Written by London swaminathan

 

Date: 24 January 2017

 

Time uploaded in London:- 9-53 am

 

Post No.3572

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதற்கு ராமாயண, மாபாரத இதிஹாசங்களில் நிறைய அறிவுரைகள் உள்ளன. இதோ ஒரு ஸ்லோகம்:

ஒருவன் நன்ங்கு செயல்பட நான்கு குனங்கள் இருக்க வேண்டும். அவை யாவன?

 

ஸ்ம்ருதி – நினைவாற்றல்

த்ருதி – லட்சியத்தில் உறுதி

மதி – அறிவு

தாக்ஷ்யம் – திறமை

யஸ்ய த்வேதானி சத்வாரி வானரேந்த்ர யதா தவ

ஸ்ம்ருதித்ருதிர்மதிர்தாக்ஷ்யம்  ச கர்மசு ந சீததி

–வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், 1-198

 

இவை நான்கும் இருந்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம். வேலை வாய்ப்பு இன்டெர்வியூக்களில் எளிதில் வெற்றி பெறலாம். இதில் இரண்டவதாகச் சொல்லப்பட்ட லட்சிய உறுதி இருந்தால் மற்ற மூன்று குணங்களும் தன்னாலே யே அதிகரிக்கும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

 

யாராவது ஒருவரிடம் ஒரு உதவியோ, வேலையோ கேட்டுச் சென்றீர்களானால், உங்கள் பலவீனத்தைச் சொல்லக்கூடாது. உங்களுக்கு எதில் எதில் பலம் அதிகம், திறமை அதிகம் என்பதைப் பட்டியலிடுங்கள். எந்த இன்டர்வியூவிலும் பொய்யும் சொல்ல வேண்டாம்; உங்கள் பலவீனத்தையும் சொல்லவேண்டாம்.

 

எங்கள் லண்டனில், சிலர் குறிப்பாக உன் பலவீனம் என்ன? என்று இன்டெர்வியூவில் கேட்பார்கள் அப்பொழுது உண்மையைச் சொல்லிவிட்டு அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள், அல்லது எப்படி அந்த பலவீனதை உடைத்தெறிவீர்கள் என்றும் சொல்லிவிடுங்கள்.

 

இதோ பகவத் கீதையில் கண்ணனும் சொல்கிறான்:-

 

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மனஹ (கீதை 6-5)

 

தன்னால் தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னை தாழ்த்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன், தனக்குத்தானே பகைவன் என்பது நிச்சயமான (உண்மை).

 

ஆத்மனா- தன்னாலேயே

ஆத்மானம் – தன்னை

உத்தரேத் – உயர்த்திக் கொள்ள வேண்டும்

ஆத்மானம் – தன்னை

ந அவசாதயேத் – தாழ்த்திக் கொள்ளக் கூடாது

ஹி – நிச்சயமாக

ஆத்மா ஏவ – தானே

ஆத்மனஹ – தனக்கு

பந்துஹு – உறவினன்

ஆத்மா ஏவ- தானே

ஆத்மனஹ – தனக்கு

ரிபுஹு – பகைவன்.

 

தம்மபதத்தில் (380) புத்தர் பிரானும், அத்தாஹி அத்தனோ கதி (தனக்குத் தானே எஜமானன்) என்பார்.

 

திருவள்ளுவன் இதற்கும் ஒரு படி மேலே சென்று, கடவுளே உனக்குத் தரமாட்டேன் என்றாலும், முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்பது இயற்கை நியதி; அதவது கடவுளே மீற முடியாத விதி என்பார்

 

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய்வருத்தக் கூலி தரும் (619)

 

நசிகேதன், சாவித்ரி, மார்கண்டேயன் கதைகள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகள்.

 

முயற்சி திருவினை ஆக்கும்!

 

–சுபம்-

 

Leave a comment

Leave a comment