Written by S NAGARAJAN

 

Date: 2 February 2017

 

Time uploaded in London:-  5-11 am

 

 

Post No.3597

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

by Santhanam Nagarajan

 

Sanskrit is one of the richest languages in the world. There are thousands and thousands of manuscripts which are not at all touched by anybody. These are being preserved in various countries.

One area in which everybody is interested in Sanskrit Literature is called Subhasitas. What is Subhasita?

There are thousands of moral maxims, ethical teachings and wise sayings in the Sanskrit literature. These are generally called as subhasita verses.

The great scholars of India used to quote very many subhasita verses in their discourses. Because these are well spoken words filled with Dharma, the ethics.  We may find riddles also in these short verses.

A very rough estimate indicates that there are about 20000 verses in this category.

Given below are a few wonderful, inspirational verses to make us understand its significance.

 

Sickness

Sickness arises in six ways; through too much water-drinking, and through eating irregularly (as a quantity and time), through sleeping by day and through staying awake by night, and through retention of urine and excrement.

 

The following five are considered as fathers: giver of food, the protector from fear, the giver of the young girl (in marriage), the natural father, and the preceptor.

 

The giving of food is a great gift, but the giving of education is a greater one; the satisfaction that comes out of taking food is momentary, whereas the good result of education is life-long.

 

Proficiency in other sciences is only a pastime, for at the time of need they mean nothing. But medicine (the art of curing), astrology and Mantravada (Science of Spells) infuse confidence are useful at every step.

 

Those who are acquainted with the nature of the Eternal and the Transient, do not lament for either of them; when some among these beings even are seen to mourn, it is to be understood, that nature rules supreme in them.

 

Some of the verses will give double meanings. For example let us go through this one:

Dear girl, you are affected by high fever (or, you suffer from the fever of love). I consider fasting good for you (or, the kindling of sacred fire for our marriage will be for your happiness).  The other meaning of this verse will be: O, best of physicians, prescribe mercurial preparation, for I am not able to undergo the fast as prescribed by you (or give me love, for I am not able to disregard what you have said.

 

Those who know Sanskrit could enjoy the verses for its beauty, words and meaning.

Several attempts have been made in the last two hundred years to compile as many subhasitas as possible.

We may assign some time daily to read and grasp the meaning of these beautiful verses which will enrich our knowledge to lead a better life.

*********

This article first appeared in EzineArticles.com on 23-1-2017. You may read it in the following link.

http://ezinearticles.com/?Wonderful,-Inspirational-Sanskrit-Subhasita-Verses&id=9626334

அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 2 (Post No.3596)

Picture of Kancheepuram Garuda Sevai

 

Compiled by London swaminathan

 

Date: 1 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  10-30 am

 

Post No. 3596

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஜயங்கொண்ட தொண்டை மண்டலத்தில், புலியூர்க் கோட்டத்தில், புத்தவேடனு நத்தத்தில், விற்பெற்ற துளுவ வேளாளர் குலத்தில், பூவிருந்த வல்லியார் மரபில், அறுபான்மும்மை நாயன்மார்களில் ஒருவரான வாயிலா நாயனார் பரம்பரையில், சென்னவராய கோத்திரத்தில், அண்ணாசாமி முதலியாருக்கும்-உண்ணாமுலை அம்மாளுக்கும் புதல்வனாக 10-5-1854-ல் பிறந்தார் பூவை கலியாணசுந்தர முதலியார்.

 

ஒரே நேரத்தில் எட்டு வகை காரியங்களைச் செய்யும் அஷ்டாவதானம் என்னும் கலையில் தேர்ச்சிபெற்ற பூவை கல்யாணசுந்தரம், தாலுக்கா பாடசாலையில் மாணவராக இருந்தபோது, ஆசிரியர் சேஷாத்திரி அய்யங்கார் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல் ஒன்றைக் கற்பித்துக் கொண்டிருந்தார்:

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்

தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் யான்முகமாய்

அந்தாதி மேலீட்டறிவித்தே   னாழ்பொருளை

சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து

 

(அந்தாதி மேலீட்டறிவித்தே   னாழ்பொருளை

சிந்தாமற் கொண்மினீர் தேர்ந்து = அந்தாதி, மேலிட்டு, அறிவித்தேன், ஆழ் பொருளை, சிந்தாமல், கொள்மின், நீர், நேர்ந்து– திருமழிசை ஆழ்வார் பாடிய நான்முகன் திருவந்தாதி)

 

 

என்ற திவ்வியப் பிரபந்த பாடலைச் சொல்லிக்கொண்டிருக்கையில் சிறுவன் கலியாணசுந்தரம் கற்பலகையில் (ஸ்லேட்)

 

சங்கரனே நாரணனைத்தான் படைத்தானம்மாலே

பங்கயனைப் பெற்றெடுத்தான் பார்மிசையில் – துங்கமுடன்

சத்தியமாரணங்கள் சாற்றியது மேயுணர்வீர்

நித்தியத்தைப் பெற்றுய்ய நீர்

 

(பங்கயன்=பிரம்மா, ஆரணங்கள் = வேதங்கள்)

–எனவெழுதி வாத்தியாரிடம் காட்டினார். அவர் இது யாருடையது என்று கேட்க முதலியார் மவுனமாயினார். பக்கத்திலிருந்த சிறுவர், இது கலியாணசுந்தரம் செய்த கவிதைதான் என்றும் அவர் இப்படிப் பாடல்கள் பல எழுதுவது வழக்கம் என்றும் சொன்னார்கள்.

 

உடனே அய்யங்காருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு, இன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை; எங்கே ஒரு கவிதை எழுது பார்க்கலாம் என்றார்.

 

கலியாணசுந்தரமும் சலிக்கவில்லை.

 

மெச்சும் புகழ்வரதர் மென்கருடன் மீதேறிக்

கச்சியினிலே அடைந்தார் கம்பீர– முச்சிதமாய்

மன்னியவே கம்பர் வலனுரைகா மாட்சியெனு

மன்னையினைச் சுற்றுவதால்

 

என்று பாடவே ஆசிரியர் வியப்புற்றார். அழுக்காறுமுற்றார். “ஏகம்பர் வலனுரை காமாட்சி என்னும் அன்னையைச் சுற்றுவதால்” – என்று பாடியதால் கலியாணசுந்தரத்துக்கு சமயத் வேஷம் இருப்பதாகக் கருதி அவருக்கு சரியாகப் பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருந்தார். பின்னர் முதலியார் வேறு பாடசாலையில் சேர்ந்து பயின்றார்.ராமலிங்க சுவாமிகளையும்கண்டு அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

 

1873-ல் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருமயிலைக்கு (மைலாப்பூர்) வந்தபோது

 

சீர்பெருஞ் சிரபுரத்து மீனாட்சி சுந்தரநற் செம்மலேறே

ஏர்பெருகு நின் வீட்டு வாயலினிற்கின்றே நெனையழைத்துப்

பேர்பெருகுங் கல்விநல மென்மேலு மென்றனக்குப் பிறங்கியோங்க

வார்பெருகு நின்னாசி யினைக்கூறி யன்புடனே யாட்கொள்வாயே

 

எழுதி அனுப்பியவுடன் பிள்ளை அவர்கள், முதலியாரை அழைத்து அவர் எழுதிய புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.

 

கலியாண சுந்தர வென்கண்மணியே நின்பால்

மலிவாகக் கல்வி வளரும்– பொலிவாகப்

பொற்புவியிற் கற்றோர் புகழச் சிவஞான

விற்பனனாய் வாழ்ந்திருக்கவே

 

–என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிக்கொடுத்தார்.

1875 முதல் செங்கல்பட்டு மிஷன் பாடசாலையில் பயின்றார். அங்கு இலக்கணக் கடல் தசாவதானம் பேறை ஜெகநாதபிள்ளை யவர்களிடம் இலக்கணம் கற்றார்

 

1876-ஆம் ஆண்டில் சென்னையிலில்ருந்து செங்கல்பட்டுக்குப் புகைவண்டிவிட்டபோது, சக மாணாக்கர் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கவி பாடினார்:

ஆயிரத் தெண்ணூற்றெழுபத்தாறாமாண்டணி செப்டம்பர்

தூயமுற்றிகதி சுக்ரவாரந்தோன்றும் பதினோரு மணியதனில்

பாய வுலகில் பலமாக்கள் பலனையடையப் புகைவண்டி

நேய செங்கை நகரென்னு நிலத்து வந்து நிலவிற்றால்

–என்று எழுதிக்கொடுத்தார்.

 

உடனே அவரது ஆசிரியர் தசாவதனியார்

 

பாருங்களோர் நொடியிற் பன்னுமிடம் போய்வரலாம்

வாருங்களென்ன தடை மாநிலத்தீர்

 

என்று இரண்டு வரிகளை எழுதிச் சேர்த்தார். உடனே முதலியார் மேலும் இரண்டடிகளை எழுதினார்.

நீருங்கள்

காலா நடவாமல் காசு மிகநல்காமல்

மேலாக வாழ்வினி மேல்.

 

பின்னர் இந்து தேச சரித்திரத்தையும், இந்திய பீனல் கோடு சடத்தையும் முறையே 700, 500 விருத்தங்களால் பாடிப் பரத கண்ட இதிஹாசம், நீதிசாகரம் எனப்பெயரிட்டனர்.

 

1877-ல் செங்கல்பட்டு சுந்தரவிநாயகர் பதிகம், ஏகாம்பரேசர் பதிகம், காமாட்சியம்மன் பதிகம் இயற்றினார்.

 

1878-ல் தசாவதனியார் முன்னிலையில், திருக்கழுக்குன்ற வேதமலை அடிவரத்தில் அஷ்டாவதானம் செய்து காட்டினார்.

பதிகங்களைத் தவிர முதலியார் இயற்றிய நூல்கள் 40. பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் 96. அவ்வவ்வமயங்களிற் பாடிய சாத்து கவிகள் முதலியன 864.

(இவையனைத்தும் இந்த மலர் வெளியிட்ட நாள் வரையுள்ள கணக்கு)

 

அஷ்டாவதானத்தில் அவர் செய்த செய்யுட்களை அடுத்த பகுதியில் காண்போம்.

 

–தொடரும்

 

–subham–

TYPES OF FRIENDS (Post No.3595)

Compiled by London swaminathan

 

Date: 1 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  9-32 am

 

Post No. 3595

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Who is your reliable friend?

At home your wife is your reliable friend

In a foreign country, your knowledge or your wisdom is your best friend.

For a sick person, his or her medicine is the friend.

When you are dead Dharma is your best friend. Nothing else can accompany you. Whatever you have done good when you are alive will help you.

This is what our forefathers have found in course of thousands of years and have summarised their wisdom in two beautiful lines:-

Pravaase vidyaa- Knowledge in foreign country

Grhe bhaaryaa – Wife at home

Vyaadhitah ausadam- Medicine for the sick

Mrtasya dharma- Dharma for the dead

 

Vidyamitram pravaseshu bharyamitram Genesis ca

Vyaditasyausadam mitramdharmo mitram mrtasya ca

—-Sushasita Ratna Bhandagara159-287

xxx

How do you get Friends?

 

Aurasa-Born of same parents

Krtasambhandha-Related by marriage

Vamsa-Lineage

Rakshaka-Protector in suffering

 

Aurasam krtasambandhamtatha vamsakrmaghatam

Rakshakam vysanebhya ca  mitral njeyam caturvidham

—Kamandakiya Nitisastra

 

The protector in suffering is a very interesting one. In Tamil and Sanskrit literature, we come across several poems where in a girl falls in love with someone who protected her. This is a theme widely used in feature films as well. It may be saving someone is who is drowning or someone who is attacked by a tiger or someone dying in poverty.

 

Xxx

 

Tamil Wisdom

Tamil saint Tiruvalluvar has summarised the good things about friendship in ten couplets in the Tail Veda ‘Tirukkural’

 

Valluvar compares good and friends with the moon in one of his couplets:

The friendship of the worthy develops day by day like like the waxing crescent moon,

but foolish alliances deteriorate as the waning thereof –(Kural 782)

 

He says good friends are like great books:

As one sees greater beauty and derives enhanced pleasures, from the deeper study of a great book, Noble friendships gain in worth and grace day by day (783)

Swimmer Flavia Zoccari’s wardrobe malfunction (valluvar used this as a simile)

He adds,

Friendship is not for laughing and merry making. It is to hit at wrong movements by harsh advice.(784).

But Valluvar is at his best when he talks about how quick one should help one’s friend in distress:

Like the hand that, that goes to the rescue when a garment slips, stepping into help

When a friend faces adversity, is true friendship (788)

This is reflex action. When one’s garments slips, the hand picks it up quickly. We have seen many such awkward moments in the public events. Valluvar must also have seen such slips!

 

There are beautiful quotations about Friendship in Panchatantra and Valmiki Ramayana. I will give them in another post.

 

–subham–

 

புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (Post No.3594)

Written by S NAGARAJAN

 

Date: 1 February 2017

 

Time uploaded in London:-  6-39 am

 

 

Post No.3594

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

13-1-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

ச.நாகராஜன்

t

“சுமார் நூறு கோடி கடற்பறவைகள் மற்றும் மிருகங்கள் பிளாஸ்டிக் பைகளினால் மடிந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகள் அவற்றின் குடலைச் சுற்றி இறுக்கவே அவை இறக்கின்றன”

                                                                 – அறிவியல் தகவல்

 

சுற்றுப்புறச்சூழல் மேம்பாட்டிற்காக முனைந்து பாடுபடும் இன்னும் சிலரைப் பார்ப்போம்.

 

 

மரீனா சில்வா

1958ஆம் ஆண்டு பிறந்த மரீனா சில்வா ஒரு அரசியல்வாதி. பிரேஸிலைச் சேர்ந்த இந்த பெண்மணி ரப்பரை எடுக்கும் ஒருவரின் மகளாகப் பிறந்து அமேஸான் காடுகளில் ரப்பரை எடுத்துக் கொண்டிருந்தவர். சட்டத்திற்கு விரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்கூடாகக் கண்டு மனம் நொந்து போன இவர் காடுகளைக் காக்க தீவிரமாக களத்தில் இறங்கினார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட இவர் பிரேஸில அமைச்சரானார். பல லட்சம் சதுரமைல் பரப்புள்ள காட்டு வளம் இவரால் காப்பாற்றப்பட்டது. காடுகளை அழிப்பவரை 75 சதவிகிதம் ஒழித்துக் கட்டினார். திடீரென்று 1500 கம்பெனிகளை ரெய்டு செய்து பத்து லட்சம் கியூபிக் அளவுள்ள சட்ட விரோதமாக வெட்டப்பட்ட ம்ரங்களைக் கைப்பற்றி அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கக் கூடிய வகையில் இவருக்கு நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் தான் உலக வளம் காப்பாற்றபபட முடியும் என்ற கொள்கையை ஆணித்தரமாக உலகெங்கும் முழங்கி வரும் துணிச்சல்கார பெண்மணி இவர்.

 

ரெபக்கா ஹாஸ்கிங்

பிபிசியில் காமரா உமனாகப் பணியாற்றிய பெண்மனி ரெபக்கா ஹாஸ்கிங். ஹவாய்க்குப் படம் எடுக்கச் சென்ற போது அங்கு பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று இறந்து போன மிருகங்களைக் கண்டு மனம் நொந்து பரிதாபப்பட்டார். விளைவு, பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. மாட்பரி என்ற சிறு நகரில் உள்ள வர்த்தகர்களிடம் சென்று பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதற்கு பதிலாக மாற்று வழியைக் கையாளுங்கள் என்று வேண்டினார். நல்ல ஆதரவு கிடைக்கவே பிரிட்டனில் பிளாஸ்டிக் இல்லாத முதல் நகரம் என்ற பெயரை 2007ஆம் ஆண்டு மாட்பரி எடுத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனில் இன்னும் 80 நகரங்கள் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்தன.

ஆண்டு தோறும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் பிரிட்டனை பிளாஸ்டிக் பை இல்லாத நாடாக மாற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் இந்த உத்வேகமூட்டும் பெண்மணி. ‘அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்’ என்பது இவர் மக்கள் முன் வைக்கும் கோஷம்!

 

ஆப்ரே மேயர்

தென்னாப்பிரிக்க இசைக் கலைஞரான இவர் லண்டனில் வசிப்பவர். உலக நாடுகளை பணக்கார நாடு ஏழை நாடு என்று பிரிப்பதற்குப் பதிலாக சுற்றுப்புறச் சூழல் அடிப்படையில் வெப்ப மாறுதலை வைத்துப் பிரிக்க வேண்டும் என்கிறார் இவர். நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடை ஒரு நாடு எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பது இவரது வாதம்.

இசையை விட்டு விட்டு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக மாறிய இவர், 1990இலிருந்து வாழ்க்கை வாழ்வதற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார். என்றாலும் தான் எடுத்துக் கொண்ட நல்ல பணியை விட்டு விடாமல் தொடர்கிறார்..

முதலில் இவர் கொள்கையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட பிரிட்டன் இப்போது இவரது கொள்கையை ஆதரிக்கிறது. பல நாடுகளும் நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டன.

இசையை எழுதுவதும் நச்சுப்புகையைத் தடுப்பதும் பல விஷயங்களில் ஒன்று தான் என்று கூறும் இவர் அதை அழகுற விளக்குகிறார். இசைக்கான நோட்ஸை பேப்பரில் எழுதிப் பார்த்தால் அது என்னவென்றே யாருக்கும் புரியாது. ஆனால் நோட்ஸின் படி இசையை இசைத்தாலோ அனவரும் சொக்கி விடுவர். அதே போல எவ்வளவு நச்சுப்புகையை எந்த நாடு வெளியிடுகிறது என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால் நச்சுப் புகை கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் வாழ ஆரம்பித்தால் அதன் சுகமே தனி. அப்போது தான் அதன் மஹிமையை உணர முடியும் என்கிறார் இவர்.

பிரபல வயலின் வித்வானான இவர் தினந்தோறும் வயலினை இசைப்பதை இன்றும் தொடர்கிறார். ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தான் விட்டு விட்டார்.

உலகத்தை மாற்ற இவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாமல் போயிற்றே என்று அங்கலாய்க்கிறார் இந்த இசைக் கலைஞர்.

 

ஜியா ஜாங்கே

நடிகரும் இயக்குநருமான ஜியா ஜாங்கே ஸ்டில் லைஃப் (Still Life) என்ற திரைப்படத்தை எடுத்து உலகப் புகழ் பெற்றார். வெனிஸில் 2006ஆம் ஆண்டு நடந்த விழாவில் இந்தப் படத்திற்காக கோல்டன் லயன் விருதினைப் பெற்றார். சீனாவில்  மூன்று அணைகள் கட்டப்பட்டதால் ஏற்பட்ட சுற்றுப்புறச் சூழல் கேட்டினைச் சித்தரிக்கிறது படம். ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் ஒன்றிற்காக கட்டப்பட்ட இந்த அணைகளால் லட்சக் கணக்கானோர் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் துணையைத் தேடி அலைகின்றனர். நகரிலோ வெள்ளப் பெருக்கு. லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, வன்முறை ஆகிய எல்லாவற்றையும் காட்டும் இந்தப் படம் சீன நாட்டு சென்ஸாரிடம்  என்ன பாடுபடுமோ என்ற கவலை முதலில் இருந்தாலும் சென்ஸார் படத்தை அனுமதித்து விட்டது. சீனாவின் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை திரைப்படத்தில் அற்புதமாகச் சித்தரித்துக் காட்டிய சிறந்த படம் இது. இவரைப் பார்த்து உத்வேகம் கொண்ட இதர கலைஞர்களும் இப்போது சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக சீனாவில் பாடுபட ஆரம்பித்து விட்டனர்.

 

இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் புத்துலகைக் காண விழையும் வித்தகர்களாக இன்று திகழ்கின்றனர். நாம் தெரிந்து கொண்டது இங்கு சிலரைப் பற்றி மட்டுமே!

உத்வேகமூட்டும் இவர்களைப் பின்பற்றி நாமும் ஒரு சிறு செயலைச் செய்தால் கூட உலகம் புத்துணர்ச்சியுடன் கூடிய புத்துலகமாக மாறும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. ..

 

ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் (Svante August Arrhenius)   ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி.தோற்றம் (19-2-1859 மறைவு 2-10-1927) பூமியில் உயிரினம் ஏற்பட்டதற்குக் காரணம் அயல் கிரகங்களிலிருந்து வந்த உயிரினத்தாலேயே என்று ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டிலேயே முதன் முதலில் அவர் கூறினார். அதை இதர விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. ஆனால் இதே கருத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல பிரிட்டிஷ் விண் இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரெட் ஹாயிலும் கூறிய பின்னர் இந்தக் கருத்தின் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பு ஏற்பட்டு விட்டது.

 அர்ஹேனியஸிற்கு ஏராளமான விஷயங்களில் ஆர்வமும் ந்ல்ல அறிவும் உண்டு. பூமி வெப்பமயமாதல் என்ற கருத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1905ஆம் ஆண்டில் முதலில் சொன்ன அவர், கார்பன் டை ஆக்ஸைடே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

1903ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோப்ல பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. முதல் உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சாமர்த்தியமாக பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அர்ஹேனியஸ் விடுவித்தார்.

1901 லிருந்து 1927ஆம் ஆண்டு  முடிய இயற்பியல் மற்றும் இரசாயனம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெறத் தகுதியானோரைத் தேர்ந்தெடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். பல் துறை விற்பன்னர் என்ற பெயரைப் பெற்ற பெரிய விஞ்ஞானி இவர்.

**********