மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி! (Post No.4002)

Written by S NAGARAJAN

 

Date: 15 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.4002

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 26-5-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

 

by ச.நாகராஜன்

 

 

கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

 

 

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

 

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

 

 

இவற்றை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி இந்த மூளைக்குச் சொந்தக்காரர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிரது.

2017, ஜூன் மாதம் துவங்கி மூன்று ஆண்டு காலம் 15 லட்சம் யூரோ (ஒரு யூரோ என்பது சுமார் 70 ரூபாய்) செலவில் இந்த பிரம்மாண்டமான ஆய்வு தொடங்க உள்ளது

இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

 

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

 

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 

 

இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 

மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் ப்ரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

 

 

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 

1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 

எழுபது ஆண்டுகள் கழித்து செய்யப்பட இருக்கும் இந்த மூளை ஆராய்ச்சி மிக பிரம்மாண்டமானது.

 

இதில், கொல்லப்பட்டோரை அடையாளம் கண்டு பிடித்து அவர்கள் பெயருடன் உரிய விதத்தில் அந்த மூளைகளைப் புதைப்பதும் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்புவதும் இந்த ஆய்வின் முடிவில் செய்யப்படும்.

 

எதிர்காலத்தில் யாரும் இப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை விஞ்ஞானத்தின் பெயரால் செய்யக்கூடாது என்பதற்கும் வரலாற்றை முறைப்படுத்துவதற்குமான ஒரு ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது.

 

உலகம் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வந்து விட்டது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மர்யா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Sklodowska)  என்ற இயற் பெயருடைய பெண்மணி தான் பின்னால் நோப பரிசு பெற்று பிரபலமான விஞ்ஞானி மேடம் க்யூரி (1867-1934) ஆவார். இளமையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பின்னால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்.

 

 

சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம் செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.

 

படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன முட்டாள்தனமான் காரியம் செய்திருக்கிறாய் என்பது தான் அவரது ஒரே கமெண்ட்..

 

மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் 1891இல் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பாரிஸில் தான் தன் எதிர்காலக் கணவரான பால் அபெல்லை (Paul Appelll) அவர் சந்தித்தார். தனது பரிசாக அவர் இளம் பெண்மணியான கியூரிக்கு அவர் தந்தது எலக்ட்ரோ மாக்னெடிஸம் பற்றிய ஒரு கட்டுரை தான்!

 

க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை. லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்ப்ட்ட டேவி மெடலை தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள் விளையாடுவதற்காகத் தந்தனர். (ஐரீன் பின்னால் தன் கணவருடன் இணைந்து ஒரு நோபல் பரிசைப் பெற்றவர்). அதை ஐரீன் பிக் கோல்ட் பென்னி – பெரிய தஙகத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.

1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம் கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க விருப்பமா என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க விரும்பவில்லை.

 

தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த இந்த மேதை.

****

 

 

Leave a comment

Leave a comment