பாரதி போற்றி ஆயிரம் – 19 (Post No.4558)

Date: 29  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-45 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4558

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 19

  பாடல்கள் 120 முதல் 125

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

அமரகவி (பாரதி)

(பாடல் தொடர்ச்சி)

                    

குயிலின் பாட்டிலே – காதல்

   கொப்புளிக்குதடா!

செயல் மறந்தேனடா – லாகிரி

    சிரசிற் கொண்டதடா!

 

‘சுதந்திரப் பாட்டில் – உள்ளம்

        துடிதுடிக்குதடா!

பதமெழும்புதடா – கையும்

       பதைபதைக்குதடா!

 

‘தொண்டு செய்யுமடிமை – என்னும்

       சுடுச ரம்ஓடி

மண்டையைத் தாக்குதடா! – நெஞ்சம்

      மடியப் பாயுதடா!

 

பெண்டுபிள்ளைகளின் – பெருமை

      பெரித றிந்தேனடா!

சண்டைகள் செய்ததெல்லாம் – எண்ணித்

    தலைக விழ்ந்தேனடா!

 

ஏழை துயரெல்லாம் – அவனும்

     எடுத்த டுக்கையிலே

மூளை கலங்குதடா! – விம்மி

    மூச்சும் முட்டுதடா!

 

பாவின் நயமெல்லாம் யானும்

    பகர வல்லேனோ!

ஆவின் பாற்சுவையை நாழி

    அளந்து காட்டிடுமோ!

                  ******        அமரகவி பாடல் முற்றும்

 

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.

பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைமகளில் வந்தவை. (1944)    

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

Leave a comment

Leave a comment