பாரதி போற்றி ஆயிரம் – 33

 

Date:- 22 January 2018

Time uploaded in London- 7-55 am

Compiled by S Nagarajan

Post No.4646

Share it, but with author’s name and blog name; Dont use it without author’s name or blog name; pictures are noot ours; they are mostly from Facebook friends and newspapers. Beware of copy right laws.

பாடல்கள் 188 முதல் 193

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

பாரதியும் பாரதிதாசனும் (தொடர்ச்சி)

பாரதி பாரதி தாசன்இரு

     பைந்தமிழ்ப் பாவலர் தம்மிடை யேயும்

பாரதி பல்லவி சொன்னான்தாசன்

     பாக்கியைப் பாடித்தன் பாட்டை முடித்தான்!

 

பாரதி பாட மறந்தஒரு

     பக்கம் திராவிட நாட்டின் எழுச்சி

யாரதைப் பாடிய வீரன்? – வேறு

    யாரவன், பாரதி தாசனல் லாமல்!

 

இன்றைய மாந்தரின் எண்ணம்நன்(கு)

     ஏற்றமு றத்தந்த பாரதி தாசன்

பின்றைய நாளில் தனக்கே ஒரு

     பேரிடம் தந்தனன் மூடுதற் கில்லை!

 

பெண்கள் விடுதலை காதல்திறம்

     பேசுந் தமிழின் கனிரசம், இன்பம்

மண்ணில் அனைவரும் ஒன்றேஎன

    வாழ்த்தும் புதுக்குரல் வாழ்க்கையின் நீதி!

 

சாத்திரம் பொய்யெனும் சூதுதண்டச்

     சாகசப் பார்ப்பனர் செய்கையின்மீது

ஆத்திரங் கொள்ளும் குணங்கள்இவை

     யாவிலும் பாரதி மூத்தவன் என்பேன்!

 

இந்த வகைகளில் ஒன்றைதாசன்

      எப்படிப் பாடி எழில்தந்த போதும்

தந்தையர் பாரதிஎன்றால்அவன்

      தாச னுரைத்தது தானிந்த வார்த்தை!

                                    ****                           (இக்கவிதை முடிந்தது)

தொகுப்பாளர் குறிப்பு: இந்தக் கவிதையில் உள்ளதிராவிட எழுச்சிமற்றும்பார்ப்பனர் எதிர்ப்புபோன்ற கருத்துக்களை பின்னாளில் கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொண்டுள்ளார்.

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

‘***

Leave a comment

Leave a comment