வரி விதிப்பது எப்படி? பர்த்ருஹரி, வள்ளுவன், மநு அறிவுரை (Post No.5793)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 December 2018
GMT Time uploaded in London – 8-33 am
Post No. 5793


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43

பர்த்ருஹரியின் நீதி சதகத்தைத் தொடர்ந்து காண்போம்

ஏழையாய் இருப்போனுக்கு ஒரு சில தானிய மணிகள் கிடைத்தால் மகிழ்ச்சி; ஆனால் அவனுக்கே நிறைய செல்வம் கிடைத்து கோடீஸ்வரன் ஆகிவிட்டாலோ உலகத்தையே ஒரு சிறு புல் என மதிப்பான். ஆக செல்வத்தின் தன்மை நிலையற்றது. ஒருவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம்  உள்ளது

பர்த்ருஹரி நீதி சதகம் , ஸ்லோகம் 40

அதாவது செல்வம் ஒருவனை மாற்றி விடும். முதலில் சோற்றுக்கே லாட்டரி அடித்தவனுக்கு, லாட்டரி விழுந்து விட்டாலோ உலகத்தையே மதிக்கமாட்டான்

பரிக்ஷீணஹ கஸ்சித் ப்ருஹயதி யவானாம் ப்ரஸ்ருதயே

ஸ பஸ்சாத் ஸம்பூர்ணஹ கலயதி தரித்ரீம் த்ருண சமம்

அதஸ்சானே காந்தா குருலகுதயார்தேஷு தனினா

மவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச- 40

இது செல்வம் வந்துவிட்டால் ஒருவன் தலைகால் புரியாமல் திரிவான் என்பதைக் காட்டும்.

தமிழிலும் பழமொழி உண்டு:

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான் – என்று.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு ஸர்மன் இதை இன்னும் அழகாக வருணிப்பான். முதலில் சோர்ந்து கிடந்த எலிகள், வயிறு கொழுக்கச் சாப்பிட்டவுடன் எகிரிக் குதிக்க ஆரம்பிக்கும் இதுவே செல்வம் வந்தவர்களின் நிலையும் என்பது விளங்கும்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் செல்வம் வந்தவுடன் ஒருவன் எப்படி மாறினான்  என்று சொல்லுகிறார்.

பரமஹம்ஸர்  சொல்கிறார்:-

பணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.

ஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து க்கு வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.

படகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,

‘என்ன, ஸ்வாமி, சௌக்கியமா? ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா? என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.

xxxx

வரி விதிப்பது எப்படி?

ஓ அரசனே! இந்தப் பூமி என்னும் பசுவிடம் இருந்து பால் கறக்க விரும்பினால், முதலில் கன்றுகள் என்னும் மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்க வேண்டும். உனது மக்களை அன்புடனும் பரிவுடனும் போற்றிப் பாதுகாத்தால், பூமியானது கற்பக மரம் போல வேண்டியதை எல்லாம் உனக்கு அளிக்கும்.–41

இது எல்லா அரசுக்கும் இன்றும் பொருந்தும். முதலில் மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால் அரசனின் வரி விதிப்புகள் எதிர்ப்பையே சந்திக்கும்.

காளிதாசனும் கூட இதை வேறு விதமாகச் சொல்லுவான். ஆயிரம் கிரனணங்களால் கடல் நீரை சூரியன் உறிஞ்சுவது எதற்காகத் தெரியுமா? அதை மழை போல பூமியில் கொட்டதான் என்பான். ஆக அரசனுடைய வரிவிதிப்பு மக்களுக்காகவே!

வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர்.

அட்டை போல உறிஞ்சு!

மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப் பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.

இந்துமத நுல்களில் நாடும் பூமியும் பசுவுடன் ஒப்பிடப்படுகிறது. பசு பால் தருவது போல பூமியும் வற்றாது வளம் கொழிக்கும்.

ராஜன் துதுக்ஷஸி யதி க்ஷிததேனுமேனாம்

தேனாத்ய வத்ஸமிவ லோகமமும் புஷாண

தஸ்மிஞ்ச ஸம்யகனிசம் புரிபுஷ்யமாணே

நானாபலம் பலதி கல்பலதேவ பூமிஹி-41

ஒரு அரசன் நியாயமாக ஆட்சி செய்தால் வளம் கொழிக்கும். அநியாய ஆட்சி செய்தால் வறட்சி நிலவும் என்னும் பர்த்ருஹரியின் கொள்கையில் வள்ளுவனுக்கும் உடன்பாடு  உண்டு

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் – குறள் 559

நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையும் தொக்கு – குறள் 559

தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.-559

இதையே காளிதாசனும் ரகு வம்ச காவியத்தில் செப்பினான் (5-29/33)

xxxx

அரசனும் விலை மாதும்

ஒரு அரசன் விலை மாதர் போன்றவன் என்று பர்த்ருஹரி சொல்லுவான். இக்கருத்து சங்க இலக்கிய நூலான புற நானூற்றிலும் (365) உள்ளது.

ஸத்யான்ருதா ச பருஷா ப்ரியவாதினீ ச

ஹிம்ஸ்ரா தயாலுஅபி சார்த்தபரா வதான்யா

நித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச

வாராங்கனேவ ந்ருபனீதிரனேகரூபா -42

ஒரு அரசனுடைய வாழ்வு ஒரு விபசாரியைப் போல பல உருவங்களை எடுக்கும். அவன் பொய்யும் பேசுவான்; மெய்யும் உரைப்பான். அவன் சுடு சொற்களும் பெய்வான்; இனிய சொல்லும் அருள்வான். கருணையுடன் இருப்பான்;சில நேரங்களில் கொடுங்கோலனாகக் காட்சி தருவான். அவன் கொடயாளியாகவும் இருப்பான்; கருமியாகச் செல்வத்தையும் சேர்ப்பான். சில நேரங்களில் பணத்தை விரயமும் செய்வான்- ஸ்லோகம் 42

இதை அடுத்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறான் என்று பார்த்து ஒப்பிட வேண்டும். ஒருவனுடைய போக்கு எப்படியும் இருக்கலாம். அவனுடைய     அப்போதைய மனநிலையே இதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம் அல்லது அரசனானவன் இப்படி எல்லாம் இருக்கும் நிர்பந்தம் உண்டு என்றும் கருதலாம். ஆனால் அடுத்த ஸ்லோகத்தில் ஆறு நல்ல குணங்களைப் பட்டியலிட்டு  விடுகிறான். ஆகையால் பர்த்ருஹரியின் கொள்கை நமக்குத் தெளிவாகி விடுகிறது.

ஆக்ஞா கீர்த்திஹி பாலனம் ப்ராஹ்மணானாம்

தானம் போகோ மித்ரஸம்ரக்ஷனாம் ச

யேஷாமேதே ஷட்குணா நப்ரவ்ருத்தாஹா

கோஅர்த்தச்தேஷாம் பார்த்திவோபாஸ்ரயேண- 43

பொருள்

ஒரு அரசனுக்கு கீழ்க் கண்ட ஆறு குணங்கள் இல்லாவிடில் அந்த அரசனின் கீழ் வாழ்வதில் அர்த்தமே இல்லை; அரசனுக்குத் தேவையான ஆறு குணங்கள்–

ஆணை இடும் அதிகார தோரணை, புகழ், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், நண்பர்களைக் காப்பாற்றுதல், தானம், அதே நேரத்தில் இன்பமான வாழ்வு

வள்ளுவனும் இவைகளைச் சொல்லுகிறான்.

அரசனுடைய நீதி வழுவினால், பசுக்கள் பால் தராது; பிராமணர்களுக்கு வேதம் மறந்துவிடும் என்பான். இதன் பொருள்

கோ ப்ராஹ்மணேப்ய ரக்ஷதி (பசுவையும் பார்ப்பனர்களையும் போற்றுவதே நல்லாட்சியின் சின்னங்கள்)- குறள் 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் -560

ஆக பாரதீய சிந்தனை இமயம் முதல் குமரி வரைஒன்றே!

परिक्षीणः कश्चित्स्पृहयति यवानां प्रसृतये
स पश्चात्सम्पूर्णः कलयति धरित्रीं तृणसमाम् ।
अतश्चानैकान्त्याद्गुरुलघुतया‌உर्थेषु धनिनाम्
अवस्था वस्तूनि प्रथयति च सङ्कोचयति च ॥ 1.40 ॥

राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां
तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण
तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे
नानाफलैः फलति कल्पलतेव भूमिः ॥ 1.41 ॥

सत्यानृता च परुषा प्रियवादिनी च
हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।
नित्यव्यया प्रचुरनित्यधनागमा च
वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.42 ॥

आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां
दानं भोगो मित्रसंरक्षणं च
येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः
को‌உर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.43 ॥

tags-வரி விதிப்பது,  விலை மாது, பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43

–சுபம்—

Xxxx

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 2 (Post No.5792)

Written by S Nagarajan

Date: 17 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 52 am


Post No. 5792

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 2

ச.நாகராஜன்

வாங்க, வாங்க! இன்னும் கொஞ்சம் கலாய்க்கலாமா, சார்?!

அரசியல்வாதிகளின் தொழில் என்ன?

அரசியல்வாதிகளின் தொழில் என்ன தெரியுமா? சொல்லுங்க!

சொல்றேனே! பிரச்சினை இல்லேன்னா ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கனும். ஒரு பிரச்சின இருந்தாலோ அதை ஊதிப் பெரிசாக்கனும்.

அட இருக்கிற பிரச்சின அமுங்கிட்டு வரதுன்னா?

ஓ அப்படி கேக்கறீங்களா?

எதானாலும் ஒரு பொது தியரி இருக்குங்க! ஒண்ணு நீங்க Convince பண்ணுங்க, இல்லை confuse பண்ணிவிட்டுடுங்க! இப்படிச் செஞ்சா நிரந்தரமா நீங்க பொது வாழ்க்கையிலே இருக்க முடியுங்க! இது தாங்க இன்றைய Trend!

உதவி : Harry S.Truman

If you can’t convince them confuse them – Harry S. Truman

*

சரி, அரசியல்வாதி எப்படிப்பட்டங்க?

அவன் ஒரு நண்டு மாதிரி. வளைஞ்சு வளைஞ்சு தான் போகத் தெரியும். நேராகவே போக மாட்டான்!

உதவி : அரிஸ்டோபெனஸ்

Aristophanes : You cannot make a crab walk straight!

*

அண்ணே! என்னை ஒரு கமிட்டிலே போட்டிருக்காங்க! உங்க அட்வைஸ் தேவை!

ஆஹா! சொல்றேனே! நிறைய கமிட்டிங்களிலே நான் இருந்திருக்கிறதினாலே பல ரூல்களை ஃப்ரேம் செய்து வச்சிருக்கேன்! உனக்குச் சொல்லாம யாருக்குச் சொல்லப் போறேன்!

எப்பவுமே குறிப்பிட்ட நேரத்துலே கமிட்டி மீட்டிங்கிற்குப் போகாதே! அப்படிப் போனீன்னா நீ ஒரு கத்துக்குட்டின்னு நினைப்பாங்க!

மீட்டிங் ஆரம்பிச்சு பாதி நேரம் ஆகிற வரைக்கும் வாயையே திறக்காதே! அப்படி இருந்தா இந்த ஆள் விஷயம் தெரிஞ்ச ஆள்ன்னு நெனச்சிக்குவாங்க!

முடிஞ்ச மட்டும் எதுலயும் பட்டுக்காம பேசு; அப்ப யாரோட எதிர்ப்பும் உனக்கு வரவே வராது. எல்லாருக்கும் உன்ன பிடிச்சுப் போகும்!

ஏதாவது ஒரு விஷயம் பத்தி சந்தேகம் வந்தாக்க, உடனே ஒரு சப்-கமிட்டி போடச் சொல்லு. எல்லாருக்கும் அது பிடிக்கும்; இன்னும் பலபேரை உள்ள நுழைக்கலாம், இல்லையா! மீட்டிங்கை ஒத்திப் போடு அப்படீன்னு சொல்றதுலே முதல்லே நில்லு.அடடா! அப்புறம் பாரு!! அதுக்காகத் தான் எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க! நீ ஃபேமஸ் ஆயிடுவே!

“அண்ணே! நீங்க தெய்வம்’ ண்ணே!”

உதவி : ஹாரி சாப்மேன்

Harry Chapman : Having served on various committees, I have drawn up a list of rules. Never arrive on time; this stamps you as a beginner. Don’t say anything until the meeting is half over, this stamps you as being wise. Be as vague as possible; this avoids irritating the others. When in doubt, suggest that a subcommittee be appointed. Be the first to move for adjournment ; this will make you popular; it is what everyone is waiting for.

*

அரசியல்வாதிக்கும் ராஜதந்திரிக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு ராஜதந்திரி, தான் தேசத்துக்குச் சொந்தம்னு நினைக்கிறான்; அரசியல்வாதியோ தேசமே தனக்குச் சொந்தம்னு நினைக்கிறான்; அவ்வளவு தான்!

உதவி : யாரோ சொன்னது.

Anonymous :A statesman thinks he belongs to the nation, but a politician thinks the nation belongs to him.

*

அரசியல்வாதிக்குச் சுதந்திரமாகச் செயல்பட உரிமை கொடுத்தால்?

அரசியல்வாதிகிட்ட போய் உன் கைகளை நான் கட்ட மாட்டேன்; சுதந்திரமாகச் செயல்படுன்னு சொன்னா, அவன் என்ன செய்வான், முதலில் உன் பாக்கட்ல தான் கையை விடுவான்.

Anonymous : Give a politician a free hand and he will put it in your pocket.

*

அரசியலில் மோசமான எதிரிகளை எப்படிச் சமாளிப்பது?

சொல்றேன். சில சமயங்களில் அரசியலில் நாத்தமடிக்கிற விலங்குகளோட சண்டை போட வேண்டியிருக்கும். ஆனா எந்த ஆயுதம் எடுக்கணுங்கறதை அந்த நாத்தமடிக்கிற விலங்குகள்கிட்ட விடற அளவுக்கு முட்டாளா இல்லாம நீ இருந்தா அது போதும்; ஜெயிச்சடலாம்! புரியுதா?

உதவி : ஜோ கனான்

Joe Cannon : Sometimes in politics one must duel with skunks, but no one should be fool enough to allow the skunks to choose the weapons.

*

இப்படி இன்னும் பல விஷயங்கள் பற்றிக் கலாய்த்துக் கொண்டே இருக்கலாம்,

கலாய்ப்புக்குப் பஞ்சமா என்ன? பிறகு பார்ப்போம்!

tags–கலாய்க்கலாம் – 2

**** 

Edison failed thousands of times! (Post No.5791)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 20-59
Post No. 5791


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Experimenters Anecdotes 

Edison failed thousands of times!

Results! Exclaimed Edison to an assistant marvelling at the bewildering total of his failures— 50000 experiments for example, before he succeeded with a new storage battery.
Results? Why man, I have gotten a lot of results. I know fifty thousand things that won’t work.

Xxx


Shelley s Secret Experiments

Shelley s lifelong Interest in science, especially chemistry, was a roused by a quack lecturer who visited his first school, Sion House. At Eton he was forbidden to study chemistry, and so performed experiments in his room.

One day his tutor Mr Bethel, heard strange noises from his room, entered and found Shelley envelope d in blue flames.
What on earth are you doing, Shelley? Asked the teacher.
Please, Sir, I am raising the devil.
The startled tutor put his hand on some apparatus which being a Leyden jar gave him a bad shock.



Xxx


Fluke and Luck

Edison s school of scientific experimentation was essentially empirical. Once he was seeking a solvent for hard rubber. Many scientists, seeking it through theory or formula, were yet helpless. Edison went to his impressive and remarkably complete store room of chemical s. He immersed a small fragment of hard rubber in a vial of each one of these many chemical s. It was an enormous number. But Edison found his solvent.

Xxxsubhamxxx


ENGLISH CROSS WORD 16-12-18 (Post No.5790)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 20-17
Post No. 5790


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND THE SIX WORDS IN THIS SQUARE.

ACROSS

2.—vow, fasting, religious observance in a day or over a period of time

4.- eternal; original name Hinduism

5. – garden, park, pleasure place in Sanskrit

DOWN

1. – supreme god in Vaishnavism; astakshara mantra

2. – great compiler of Vedas

3. – untimely, people pray to god not to have this type of death; Sanskrit word

Answers

2.VRATA—vow, fasting, religious observance in a day or over a period of time

4.SANATAN- eternal; original name Hinduism

5.ARAMA- garden, park, pleasure place in Sanskrit

DOWN

1.NARAYAN- supreme god in Vaishnavism; astakshara mantra

2.VYASA- great compiler of Vedas

3.AKALA- untimely, people pray to god not to have this type of death; Sanskrit word

XXXNXXX
XVRATAX
XYXRXKX
SANATAN
XSXYXLX
XARAMAX
XXXNXXX

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 16-12-18 (Post No.5789)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 14-09
Post No. 5789


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் கண்டுபிடிக்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கை குறைந்தது 9.

கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் இதோ:

குறுக்கே

1. மிக மோசமானவர் என்று பெயர் எடுத்த நவக்கிரஹம்

4. குதிரையைக் கொண்டு நடத்தும் யாகத்தினால் கிட்டும் பலம்.

6. தில்லை அம்பலத்தில் கூத்தாடும் கடவுள்

8. தேவர்களின் குரு

கீழே

1. ஆயிரம்; எல்லாக் கடவுளருக்கும் இந்த எண்ணிக்கையில் துதிகள் உண்டு

2. அறிவு; மேதாவிகளிடத்தில் இருப்பது;கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்

3. குதிரைக்குப் போடுவது; கடிவாளம்; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்.

5. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை யாத்த முனிவர்

7. லயித்துப் போகும் நிலை (ஸம்ஸ்க்ருதச் சொல்)

X
னீஸ்ன்
X
XXXகா
ஸ்மே


X
XXXX
ம்

வான்


XXXந்X
பிருஸ்
திX

ANSWERS:–

குறுக்கே

1.சனீஸ்வரன் (சரியான பெயர்- சனைஸ்சரன்)- மிக மோசமானவர் என்று பெயர் எடுத்த நவக்கிரஹம்

4.அஸ்வமேத பல- குதிரையைக் கொண்டு நடத்தும் யாகத்தினால் கிட்டும் பலம்.

6.அம்பலவாணன்  — தில்லை அம்பலத்தில் கூத்தாடும் கடவுள்

8.பிருஹஸ்பதி– தேவர்களின் குரு

கீழே

1.சஹஸ்ரம்– ஆயிரம்; எல்லாக் கடவுளருக்கும் இந்த எண்ணிக்கையில் துதிகள் உண்டு

2. மேதஸ் – அறிவு; மேதாவிகளிடத்தில் இருப்பது; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும் (ஸம்ஸ்க்ருதச் சொல்)

3.லகான்  — குதிரைக்குப் போடுவது; கடிவாளம்; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்.

5.பவணந்தி- நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை யாத்த முனிவர்

7.லயஸ்- லயித்துப் போகும் நிலை (ஸம்ஸ்க்ருதச் சொல்)

–SUBHAM–

கம்பனும் காளிதாசனும் கடலில் கண்ட திமிங்கிலம்! (Post No.5788)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 11-43
Post No. 5788


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கம்ப ராமாயணத்தைப் பக்திசுவைக்காகப் படித்து அதில் முத்து எடுப்போர் பலர்.

கம்பனை இலக்கிய நயத்துக்காகப் படித்து பவளம் எடுப்போர் பலர்.

ஆனால் கம்பனை விஞ்ஞானியாக, உயிரியல் விஞ்ஞானியாகப்– பார்த்து ரஸிப்போர் சிலரே.

கம்பன் போகிறபோக்கில் கப்பல், கடல் வாழ் பிரணிகளைப் பற்றிச் சொல்லுவ தால்,  அந்தக் காலத்தில் தமிழர்களுக்குக் கடல் பற்றி எவ்வளவு தெரிந்திருந்தது என்பது நமக்குத் தெரிகிறது.

சோழ சாம்ராஜ்யம், ‘சிங்களம் புட்பகம், சாவகம் எனத் தீவு பலவினும் குடியேறி’ -நல்லாட்சி தந்த காலம் அது.

மாபூப்பாளம், மாநக்கவாரம், மாயிருடிங்கம் எனப் பல்வேறு தீவுகளில் சோழனின் புலிக்கொடி பறந்த காலம் அது.

இதே போல காளிதாசனும் கடல் பற்றிச் சொல்லுவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரத நாடு கடல் வணிகத்திலும், கடல் ஆதிக்கத்திலும் சிறந்து விளங்கியதைக் காட்டும்.

ரகு வம்ஸ மன்னர்களின் சிறப்பு பற்றி ஒரு பட்டியல் தருகையில் ‘இரு கடலையும் தொடும் நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்டனர்’ என்பான்.; கடலில் கப்பல் மூழ்கினால் அவற்றில் சென்றோரின் சொத்து யாருக்குச் சொந்தம் என்றும் விவாதிப்பான். அந்த அளவுக்குப் பாரதக் கொடி பட்டொளி வீசிப் பறந்த காலம் அது

.

கடல்வாழ் பிராணிகளை உவமையாகப் போகிற போக்கில் கம்பனும் காளிதாசனும் சொல்லுவது இரண்டு உணமைகளைக் காட்டும்

1.அந்தக் காலத்தில் இந்தியக் கடற்பரப்பிலும் திமிங்கிலங்கள் வாழ்ந்தன. (இப்போது கிடையாது).

2. மக்களுக்குத் திமிங்கிலம், சுறாமீன் போன்ற கடல் வாழ் பிராணிகள் பற்றி நன்கு தெரிந்து இருந்தது. ஏனெனில் உவமையாகக் கையாளப்படும் விஷயம் பலரும் அறிந்ததாக இருக்க வேண்டும் என்பது கவிகளின் மரபு இலக்கணம்.

கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில், வானரர் களம் காண் படலத்தில், ராமன் விட்ட அம்புகளால் என்ன நிகழ்ந்தது என்பதை விளக்கும் பாடல் இதோ:-

ஒழுகிப்பாயும் மும்மத வேழம் உயிரோடும்

எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற

பழகிற்கில்லா பல்திரை தூங்கும் படர் வேலை

முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்

பொருள்

முதல் பாட்டில் ராமன் செலுத்திய அம்பால் வீழ்ந்தவர்களின் முகம் ரத்த வெள்ளதில் மிதந்தது; தாமரைக்குளம் போல இருந்தது என்றான்.

இந்தப் பாட்டில்,

ஒழுகிப் பாய்கின்ற மூன்று மத நீர்களையுடைய யானைகள்  இன்னும் சாகவில்லை. அவைகள் ரத்த வெள்ளத்தில் இருந்து தலைகளைத் தூக்கி எழுந்திருக்க முயலும்; மீண்டும் விழும். இது எப்படி இருக்கிறது என்றால், பழகிய,  அலை வீசும் கடலில் திமிங்கிலங்கள் கடலுக்குள் முழுகுவதும் எழுவதுமாக இருப்பதுப் போலக் காட்சி தந்தது.

இங்கே கடல் வாழ் பிராணிகளில் மிகப் பெரியதான திமிங்கிலத்தை ‘’மீன் அரசு என்பான். மீனவர்களும் அப்படித்தான் நினைப்பர். ஆனால் திமிங்கிலமோ மீன் வகையை சேர்ந்தது அல்ல. குட்டி போட்டு பாலூட்டும் (mammal) பிராணிகளை சேர்ந்தது. அது சுவாசிப்பதற்காக ஒவ்வொரு முறையும் வெளியே வரும். அப்படிச் சுவாசிக்கையில் அதன் அருகிலுள நீர் மேலே பீச்சி அடிக்கும். ஆனாலும் மீன் போலவே வடிவம்!

ஆகையால் மீன் அரசு என்று கம்பன் சொல்லுவதை ஏற்போமாக.

காளிதாசனும் இக்காட்சியை, கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே செப்பிவிட்டான். இதோ அந்தப் பாடல்…………………… (please follow the link given below)

கம்பன் கிட்கிந்தாக் காண்டத்திலும் திமிங்கிலம் பற்றிப் பேசுகிறான். எனது முந்தைய கட்டுரைகளில் சங்கப் பாடல்கள், காளிதாச ஸ்லோகம், கம்பன் பாடல்கள் உள. கண்டு களிக்கவும்.

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் …



https://tamilandvedas.com/…/திமிங்கிலம்-பற்றிக…

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426). Research Article Written by London swaminathan. Date: 7 December 2016. Time uploaded …

https://swamiindology.blogspot.com/2016/12/post-no3426.html

tags–கம்பனும் காளிதாசனும் , திமிங்கிலம்

–subham–

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 1 (Post No.5787)

Written by S Nagarajan

Date: 16 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 31 am


Post No. 5787

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 1

ச.நாகராஜன்

நம்ம நாட்டு நடப்பைப் பத்தி பல பேர் பல காலத்திலேயும் சொல்லிட்டாங்க சார்!

சிலதைப் பார்ப்போம்; சிரிப்போம்!

உடம்பு சரியில்லீங்க; என்ன பண்றது?

உடம்பு சரியில்லாம போச்சு; என்ன பண்றது? டாக்டர் கிட்ட போனேன். அது இரட்டை மோசடியாப் போச்சு; அவர் என் வியாதி பத்தி இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கன்ஸல்ட் பண்றாரு! அவருக்கு ஒரு ஃபீஸ்; இவருக்கு ஒரு ஃபீஸ். இரட்டை மோசடி சார்!

இது தாங்க இப்ப எல்லா ஆஸ்பத்திரிலேயும் நடக்குது!

A Cynic says that double jeopardy, which we hear so much of nowadays, is when your doctor calls in a consulting physician.

*

கணவன் மனைவி பத்தி மாமியார் கிட்ட என்ன சொன்னான்?

மாமியார் தன் பெண்ணைப் பத்தி மாப்பிள்ளை கிட்ட வந்து, ‘அவ எப்படி செய்றா? அவ ஸ்பீடு எப்படி’ன்னு கேட்டா!

கணவன் சொன்னான்: ப்ரமாதம்!அவ சூப்பர்மார்கெட்ல நடந்தா ஒரு மணிக்கு 3000 ரூபாய்ங்க்ற ரேஞ்சில இருக்கு அவ ஸ்பீடு!

சொன்னவர் ஜோசப் சலக்

 Today women often push carts through supermarkets at speeds over $ 65 an hour : Joseph Salak

*

பிஸினஸ்ல யார் பார்ட்னர்?

உங்க பிஸினஸ்ல யார் சார் பார்ட்னர்?

அட என்னங்க, நீங்க! தெரியாதது மாதிரி கேட்கறீங்க! வழக்கமான பார்ட்னர் தான். ஒவ்வொரு பிஸினஸ்லயும் அரசாங்கம் தானே சீனியர் பார்ட்னர். லாபம் வந்தாலும் வராட்டியும் அவருக்கு பங்கை பிஸினஸ் ஆரம்பிக்கறதுக்கு  முன்னாடியே கொடுத்துடறோம் இல்ல!!!

உதவி : நார்மன் கஸின்ஸ்

Government in the U.S. today is a senior partner in every business in the country.  – Norman Cousins

*

நாளைய பத்தி சொல்லுங்க!

நாளைய பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!

நேத்து இன்னியபத்தி நாளைன்னு சொன்னோம்; அவ்வளவு தான்!

உதவி :ஜேனட் கேரி

Yesterday we called today tomorrow! – Janet Cary

*

உங்க வேலை என்னங்க?

‘உங்க வேலை என்னங்க? கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?’

‘சொல்றேனே, விவரமாவே சொல்றேனே!

தொழிலாளிகள் வேலை பார்க்கறாங்க!

ஊதாரிகள் வெட்டிச் செலவு செய்றாங்க!

வங்கிக்காரங்க கடன் கொடுக்கறாங்க!

பொம்பளைங்க செலவழிக்கறாங்க!

திருட்டுப்பசங்க போலியா தயாரிக்கறாங்க!

வரிகளால எடுத்துகறாங்க!

சாவறங்க விட்டுட்டுப் போறாங்க!

வாரிசுங்க வாங்கிக்கிறாங்க!

சேர்க்க ஆசைப்படறவங்க சேர்க்கறாங்க!

கருமிகள் ஏங்குறாங்க!

கொள்ளைக்காரங்க கொள்ளையடிக்கிறாங்க!

பணக்காரங்க அதிகமாக்கிக்கறாங்க!

சூதாடிங்க சூதாடறாங்க!

இவ்வளவையும் நான் பயன்படுத்திக்கிறேங்க; அவ்வளவு தாங்க, என்னோட வேலை! நான் ஒரு அரசியல்வாதி!’

சொன்னவர் – யாரோ!

Workers earn it,

Spendthrifts burn it,

Bankers lend it,

Women spend it,

Forgers fake it,

Taxes take it,

Dying leave it,

Heirs receive it,

Thrifty save it,

Misers crave it,

Robbers seize it,

Rich increase it,

Gamblers lose it  ….

I could use it

*

இலக்கியவாதி என்ன ஆனார்?

ஏம்பா! நீ ஒரு இலக்கியவாதி தானே? இப்ப என்ன பண்றே?

நான் ஒரு ஜர்னலிஸ்ட் ஆயிட்டேங்க!

அப்படீன்னா?

அதாங்க! இலக்கியங்கறது பரபரப்பா சூடா வித்தியாசமா அப்பப்ப தர ஜர்னலிஸம் தாங்க!

உதவி : மாத்யூ ஆர்னால்ட்

Journalism is literature in a hurry – Mathew Arnold

*

நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்ன்ன்ன்!

நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், என் காதலியை! நீடிச்சிருக்க ஆசிர்வாதம் பண்ணுங்க!

பண்றேனே!

உன்னோட மணவாழ்க்கை

காதல் ததும்பி வழிய ஒரே வழி

இரண்டு பேர்ல எப்பல்லாம் நீ தப்பு செய்யறயோ, உடனே அவகிட்ட ஒத்துக்க!

எப்பல்லாம் நீ சரியா இருக்கயோ, உன் வாயை அவகிட்ட மூடிக்க!

உதவி : யாரோ!

To keep your marriage brimming

With love in the laving cup,

Whenever you’re wrong, admit it,

Whenever you’re right, shut up!

*

உன்னைப் பற்றி நீயே சரியாகப் புரிந்து கொள்!

சார்! உன்னை நீ அறிவாய்ன்னு சாக்ரடீஸ் மாதிரி அடிக்கடி சொல்றீங்களே,எப்படி சார் அறியறது!

“அட, உன் ஃபிரண்டு மாதிரி இருக்கணும்னு சொல்றேம்பா!”

“அவன் மாதிரின்னா?”

அவன் என்ன பண்ணான்! ரூம் வாசல்லே ஒரு சீட்டை எழுதி வச்சான்’ல்லே அது மாதிரிப்பா! சீட்ல என்ன எழுதி இருந்தான்:

வாட்ச்மேன்! நிச்சயமா என்னை காலம்பற ஏழு மணிக்கு எழுப்பிடு. ரொம்ப முக்கியமான தவிர்க்க முடியாத வேலை சரியா ஏழு  மணிக்கு இருக்கு. மறந்துடாம எழுப்பிடு. சரியா டயத்துக்கு அதை முடிக்கணும். அதுனாலே நான் எழுந்துட்டேன்னு குரல் கொடுக்கற வரைக்கும் திருப்பித் திருப்பிக் கதவைத் தட்டு. மறந்துடாதே!

இந்த வரிகளுக்குக் கீழே ஒரு குறிப்பு இப்படி இருந்தது – எதுக்கும் பத்து மணிக்கும் ஒரு முறை வந்து பாத்துடு!

KNOW THYSELF!

A Yale undergraduate left on his dooe a placard for the janitor on which was written, “Call me at 7 O’Clock; it is absolutely necessary that I get up at seven. Make no mistake. Keep knocking until I answer. Under this he had written: “Try again at ten”.

*

என்னங்க, கலாய்ப்பு எப்படி இருக்கு? இன்னும் கொஞ்சம் கலாய்க்கலாமா?

Tags- கலாய்க்கலாம் சார், வாங்க! – 1 

*** 

ENGLISH CROSS WORD 15-12-18 (Post No.5786)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 December 2018
GMT Time uploaded in London – 18-09
Post No. 5786


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

FIND AT LEAST TEN WORDS IN THE SQUARE, MOST OF THEM, FROM MAHA BHARATA.

ACROSS

1. A WISE RISHI WHO ASKED DASHARAJA FOR THE HAND OF HIS DAUGHTER SATYAVATI IN MARRIAGE BUT WAS REFUSED

3. A YADAV MESSENGER BETWEEN KAMSA AND KRISHNA

6. -ONE OF THE BROTHERS OF DURYODHANA WHO OPPOSED EVIL DEEDS OF DUSHASANA AND SAKUNI

9. -ANOTHER NAME OF VASISHTHA

10. – WIFE OF GAUTAMA RISHI; MOLESTED BY INDRA

DOWN

1. GRAND FATHER OF KING GADHI

2. SON OF KING AKAMPANA; SEPARATELY HARI= VISHNU; KUMARA= SKANDA

4. CONSORT OF SHIVA

5. – DISCIPLE OF VISHWAMITRA; HE PROMISED HIM TO BRING 800 HORSES.

6. – FATHER OF THE EAGLE WHO HELPED GALAVA TO PROCURE 800 HORSES.

8. – ANOTHER NAME OF RIVER NARMADHA

1
2










3

4








5
6
7
8















9












10





Answer:–

A1SH2ITA
J
A



AKRURA


IM

G5
V6IK7AR8NA
I
U
E
L
N
M
V
A
A9PAVA
V
T
R


A
A10HALYA

ACROSS

1.ASHITA, 3.AKRURA, 6. VIKARNA, 9.APAVA, 10.AHALYA

DOWN

1.AJA, 2.HARI (7)KUMARA,4.UMA, 5.GALAVA, 6.VINATA-, 8.REVA

ACROSS

1.ASHITA- A WISE RISHI WHO ASKED DASHARAJA FOR THE HAND OF HIS DAUGHTER SATYAVATI IN MARRIAGE BUT WAS REFUSED

3.AKRURA- A YADAV MESSENGER BETWEEN KAMSA AND KRISHNA

6. VIKARNA-ONE OF THE BROTHERS OF DURYODHANA WHO OPPOSED EVIL DEEDS OF DUSHASANA AND SAKUNI

9.APAVA-ANOTHER NAME OF VASISHTHA

10.AHALYA- WIFE OF GAUTAMA RISHI; MOLESTED BY INDRA

DOWN

1.AJA- GRAND FATHER OF KING GADHI

2.HARI (7)KUMARA-  SON OF KING AKAMPANA; SEPARATELY HARI= VISHNU; KUMARA= SKANDA

4.UMA- CONSORT OF SHIVA

5.GALAVA- DISCIPLE OF VISHWAMITRA; HE PROMISED HIM TO BRING 800 HORSES.

6.VINATA- FATHER OF THE EAGLE WHO HELPED GALAVA TO PROCURE 800 HORSES.

8.REVA- ANOTHER NAME OF RIVER NARMADHA

tags- cross word, 15-12-18

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 15-12-18 (Post No.5785)

Written by London Swaminathan


swami_48@yahoo.com



Date: 15 December 2018


GMT Time uploaded in London – 16-49

Post No. 5785


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மிகவும் எளிய குறுக்கெழுத்து; ஐந்தே சொற்கள்; முயன்று பாருங்கள் விடையும் உளது

1. சாளுக்கிய மன்னன்; இவன்பெயரில் இரண்டு மன்னர்கள் ஆண்டனர்.

4. அச்சம் தரும் (வலது கோடியில் எழுத்து துவங்கும்)

5. -சமணர்களின் மலை

2. சிவனுடைய உருவமற்ற நிலையில் அர்ச்சித்தல்

3. ஐந்தெழுத்து மந்திரம்

TAMIL CROSS WORD 15-12-18

புலிகேசி
x
ங்
வா
ங்


பூ



ஜைலை

1.புலிகேசி- சாளுக்கிய மன்னன்; இவன் பெயரில் இரண்டு மன்னர்கள் ஆண்டனர்.

4.பயங்கர- அச்சம்தரும்

5.ஜைன மலை- சமணர்களின் மலை

2.லிங்கபூஜை- சிவனுடைய உருவமற்ற நிலையில் அர்ச்சித்தல்

3.சிவாயநம- ஐந்தெழுத்து மந்திரம்

tags–குறுக்கெழுத்துப் போட்டி 15-12-18 

–SUBHAM–

Amazing Americium, Curious Curium! Announced in Kids Radio Show! (Post No.5784)

Written by London Swaminathan


swami_48@yahoo.com



Date: 15 December 2018


GMT Time uploaded in London – 13-42

Post No. 5784


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.



The story of the discovery of two elements is very interesting. America kept it as a top secret, but it was announced in a ‘Kids Quiz Radio Show’ in 1945!
The discoverers of americium chose an unusual way to announce their discovery in a children’s radio show in USA called Quiz Kids, broadcast on 11 November 1945.


The guest scientist on the panel that week was a 33 year old chemist, Glen T Seaborg, who had worked on the top secret atomic weapons programme that had produced two new elements, curium and americium. Americium came to light as part of the Allied project to develop nuclear weapons, so its discovery was kept secret until the end of Second World War. Its existence was officially announced a few days after the broadcast, and the following year Seaborg proposed naming it americium, after the continent on which it was first produced.



Americium is named after America. It is a radioactive, silvery metal.
Americium was first made in 1944 at the University of Chicago by a team which included Glen T Seaborg, Ralph A James, Leon. O Morgan and Albert Ghiorso. It was produced as a result of the bombardment of plutonium with neutrons in a nuclear reactor. It was in fact discovered after curium, the element which follows it in the Periodic Table.



Smoke Detector
It is widely used in smoke detectors. A smoke detector contains 150 micro grams of americium oxide. The price of americium oxide per gram was $1500 in the year 2000. 5000 detectors can be made in one gram.


Americium 243 is produced from plutonium 239 with a half -life of 7370 years. Americium 241 is used in smoke detectors. It is extracted from nuclear reactors.

Americium probably does occur naturally on earth, but only in incredibly tiny amounts in uranium minerals where nuclear fission may occasionally produce an atom.

Chemical Element


Chemical symbol –Am
Atomic number– 95
Melting point– 994 degree C



Curium for Pace makers


Curium 242 is produced in nuclear reactors by bombarding plutonium with neutrons. This isotope is used as power source for pacemakers and navigational buoys, and on space missions because it gives off 3 watts of heat energy per gram of metal. Its radiation can easily be shielded against.


Nuclear weapon tests from 1945 have pumped some curium into atmosphere.
Curium is a synthetic, radioactive metal belonging to the actinide group. It is silver in colour. Altogether there are 14 known isotopes. The ones made in kilogram quantities are curium 242 ( half- life 163 days) and curium 244 ( half- life 18 years). The longest lived isotope is curium 247, with a half-life of 16 million years.


Chemical properties


Chemical symbol Cm
Atomic number 96
Melting point 1340 degree C

The production of curium in large quantities in nuclear reactors solves a big problem. This helps to reduce the stockpile of plutonium which may be otherwise used for making nuclear weapons. Curium is relatively short lived and useful.



—- Subham—-