
WRITTEN BY R. NANJAPPA
Post No.7849
Date uploaded in London – – 19 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 11 – சினிமா இசையின் பொற்காலம்!
R.Nanjappa
சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சமாகத்தான் கருதப்படுகிறது. பணம் ஈட்டுவதே அதன் குறிக்கோளாக இருக்கிறது.. ஆனாலும் சில டைரக்டர்கள் தங்கள் ஈடுபாடு, திறமை, அறிவாற்றல், கலை நோக்கு , உலகம்–வாழ்க்கை பற்றிய தங்கள் அடிப்படைத் தத்துவம், அணுகுமுறை ஆகியவற்றால் அதைக் கலையம்சம் மிக்கதாகச் செய்கிறார்கள். வி.சாந்தாராம், பிமல் ராய், ரிஷிகேஷ் முகர்ஜி போன்றவர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள். ‘கலைப்படம்‘ என்றே வருபவை தோல்வி யடைகின்றன, ஆனால் கலையம்சம் மிக்க சாதாரணப்படங்கள் வெற்றி பெறுகின்றன.
இதில் இசைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்திய சினிமா 30களிலிருந்தே இசைக்கு இன்றியமையாத ஒரு சிறப்பு இடம் கொடுத்து வந்திருக்கிறது. மிகை அம்சம் என்று இல்லாமல் கதைப்போக்குடன் கலந்தே இசை
மலர்ந்தது. இது ஹாலிவுட்டிலும் நடக்காதது. 40களில் வளர்ந்தது. 50களில் மிகச்சிறந்த உயர்ந்த நிலையை எய்தியது. 60களுக்குப் பிறகு வீழ்ச்சி கண்டது. இன்று இசை என்ற பெயரில் ஏதோ சப்தம் எழும்புகிறது, அவ்வளவுதான்.
1950- 65 க்கு இடைப்பட்ட ஆண்டுகளை நமது சினிமா இசையின் பொற்காலம் என்று கருதுகிறார்கள்.
யோசித்துப் பார்த்தால் இதற்கு சில முக்கிய காரணங்கள் புலப்படும். பாடலாசிரியர்களின் பணி பற்றிப் பார்த்தோம் இன்று வேறு ஒரு கோணத்தில் பார்ப்போம்.
பாரம்பரிய சங்கீதத்தின் புதிய பரிணாமம்– பரிமாணம்: Evolution -Dimension
இந்திய சினிமா இசை நமது பாரம்பரிய சங்கீதத்தின் அடிப்படையிலேயே எழுந்ததுதான். இது சாஸ்த்திரீயம், நாட்டுப்புறம், பக்தி–பஜனை என்ற பல பிரிவுகளை உள்ளடக்கியது.
இதில் 50 முதல் ஒரு புதிய சகாப்தம் தோன்றியது. சுதந்திரத்திற்குப் பிறகு மேலை இசையில் தேர்ந்த பல கோவாக்காரர்கள் பம்பாய்க்கு வந்தனர். அங்கிருந்த கிளப்புகளில் சேர்ந்தனர். மேற்கத்திய இசையை முறைப்படிக் கற்றிருந்த இவர்கள், பல மேற்கத்திய இசைக்கருவிகளில் தேர்ந்திருந்ததோடு, பல மேற்கத்திய உத்திகளில் சிறந்திருந்தனர்.
Chord, counter-melody, arrangement, orchestration, prelude,interlude, notation என்று பற்பல உத்திகளில் தேர்ந்திருந்தனர்.
நமது இசை அமைப்பாளர்கள் இவர்களை Assistant, Arranger என்ற பெயர்களில் அமர்த்திக்கொண்டனர். [[இவர்களில் Anthony Gonsalves, Chic Chocolate, Frank Fernand, Sebastian D’Souza, Alfred Rose, Remo Fernandes போன்றோர் முக்கியமானவர்கள்.ஆனால் இவர்கள் பெயர் அதிகம் வெளியில் வரவில்லை! ]
இவர்கள் வரவினால் 50களில் ஹிந்தி திரை இசை புதுப் பொலிவு பெற்றது. பாடல்களின் மெட்டு நமது பாரம்பரிய சங்கீதத்தின் அடிப்படையில் இருந்தாலும் Background, interlude, countermelody, orchestration போன்ற அம்சங்களில் மேற்கத்திய உத்திகளும் நுணுக்கங்களும் புகுந்தன– திரை இசை புத்துயிரும் புதிய பரிமாணமும் dimension பெற்றது! அவற்றின் ஈர்ப்பு மிகுந்தது! இந்த மேற்கத்திய அம்சங்களை நீக்கிவிட்டுக்கேட்டால் பல பாட்டுக்கள் ‘சப்‘பென்று போய்விடும்! Mitti Mein Sona என்ற படத்தில் ” பூசோ ந ஹமே ஹம் உன் கேலியே” என்று ஆஷா போன்ஸ்லே பாடும் அருமையான பாடல் வரும்.இதில் பியானோ இசை கூடவே வரும். இதில் பியானோ இசையை நீக்கிவிட்டுக் கேளூங்கள்– ‘சப் ‘தான்! Everybody praises O.P.Nayyar for the tune but the piano was played by Castelino senior who is forgotten.
[குறிப்பு: இந்த அந்தோனி கொன்ஸால்வஸ் இசை அமைப்பாளர் (லக்ஷ்மிகாந்த்-)பியாரேலாலுக்கு வயலின் ஆசிரியராக இருந்தவர். அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில்தான் அவர் பெயரில் “My name is Anthony Gonsalves” என்ற Amar Akbar Anthony படப் பாடல் அமைந்தது.
சிக் சாக்லேட் ( இயற் பெயர் Antonio Vaz” ஆக்ரி கத்” என்ற படத்தில் ஒரு சீனில் வருவார் plays Trumpet. சில படங்களுக்கு இசை அமைத்தார்.]]
Film music acquired a modern face with an ancient base!
“மேல் நாடு வேறு–கீழ் நாடு வேறு; இரண்டும் சேரின் பேறு” என்று 50களில் எழுதினார் தமிழறிஞர் அ.சிதம்பர நாதன் செட்டியார், திரை இசை விஷயத்தில் எவ்வளவு உண்மையாகி விட்டது!
காதல் இல்லாமல் சினிமா இல்லை!
நமது சினிமாவின் ஜீவனாடியாக இருப்பது காதல்! இபோது அடி தடி யெல்லாம் அதிகமாகிவிட்டாலும், போக்கிரி கேரக்டர்களை பெருமைப்படுத்திக் காட்டினாலும், காதல் என்ற அம்சம் இல்லாமல் சினிமா கதை இல்லை. 50 களில் வெளிவந்த காதல் அம்சம் இல்லாத பூட் பாலிஷ், தோ ஆங்கே பாரஹ் ஹாத் போன்ற லட்சியப் படங்கள் இன்று ஓடுமா என்பது சந்தேகமே.
காதல் கதையுடன் நல்ல இசை சேருவது பாலும் தேனும் கலப்பது போலாகும்.
இது நம் மரபுடன் நன்கு ஒத்துப் போகும் விஷயம்! சிருங்கார ரசம் என்று இது நம் இலக்கியங்களில் புகழப்படும் . நாயக–நாயகி பாவம் என்று பக்தி இலக்கியத்தில் இது முக்கிய இடம் பிடித்து விட்டது!
ஜயதேவரின் மஹாகாவியமான ‘கீத கோவிந்தம்‘ இதற்குச் சிறந்த எடுத்துகாட்டு, உலகப் புகழ் பெற்றுவிட்டது.
நமது ஹிந்துமதம் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவது அல்ல. To run away from life is not the way to lead life!அறம், பொருள், இன்பம் வீடு என மனித வாழ்க்கைக்கு நான்கு லட்சியங்களை வகுத்து வைத்திருக்கிறது. இதில் இன்பம் என்பது இவ்வுலக இன்பம் அனைத்தையும் குறிக்கிறது. இதில் காதலும் அடங்கும். தமிழ் தொல்காப்பியமும் திருக்குறளும் இதற்கு இலக்கணம் வகுத்திருக்கின்றன. சம்ஸ்கிருதம், தமிழ் இரு மொழி இலகியத்திலும் காதல் உயர்வாகவே பேசப்பட்டிருக்கிறது.
நமது சமய இலக்கியமும் இதைப் புகழ்ந்தே வந்திருக்கிறது. உலகின் முதல் காதல் கடிதம் ருக்மிணி ஸ்ரீ கிர்ஷ்ணருக்கு எழுதியதாகத்தான் இருக்கும்! இது ஸ்ரீமத் பாகவத்தில் வருகிறது. கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்:
தர்ம அவிருத்தோ பூதேஷு காமோஅஸ்மி 7.11
உயிரினங்களில் தர்மத்திற்கு விரோத மில்லாத காமமாக நான் இருக்கிறேன்.
சாஸ்திரங்களீன் நோக்கம் மனிதனின் நியாயமான ஆசைகளை நிராகரிப்பதல்ல, அவற்றை முறைப்படுத்துவதே ஆகும். “இக பர சௌபாக்யம் அருள்வாயே” என அருணகிரி நாதர் வேண்டுகிறார்.. எனவே நம் படங்களில் காதல் இடம்பெறுவது தவறல்ல, அது சித்தரிக்கப்படும் முறையே பல சமயங்களீல் வரம்பு மீறியும் முறை தவறியும் போகிறது.
காதல் பற்றி நம் சினிமாவில் எண்ணிலடங்காத அளவில் பாடல்கள் இருக்கின்றன. இவை பல நிலைகளில் வருபவை. சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ஸுஹானீ ராத்
सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे
जहां की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे
ஸுஹானி ராத் டல் சுகீ, நா ஜானே துப் கப் ஆவோகே
ஜஹா(ன்) கீ ருத் பதல் சுகீ, நா ஜானே தும் கப் ஆவோ கே
அழகிய இரவு கழிந்துவிட்டது, நீ எப்பொழுது வருவாய் என்று தெரியவில்லையே!
உலகில் பருவங்களும் மாறிவிட்டன, நீ எப்பொழுது வருவாய் என்று தெரியவில்லையே!
नज़ारे अपनी मस्तियाँ, दिखा–दिखा के सो गये
सितारे अपनी रोशनी, लुटा–लुटा के सो गये
हर एक शम्मा जल चुकी, ना जाने तुम कब आओगे
सुहानी रात ढल…
நஃஜாரே அப்னீ மஸ்தியா(ன்) திகா திகா கே சோ கயே
ஸிதாரே அப்னீ ரோஷ்னீ , லுடா லுடா கே ஸோ கயே
ஹர் இக் ஷம்மா ஜல் சுகீ, நா ஜானே தும் கப் ஆவோகே
ஸுஹானீ ராத்…..
அழகிய காட்சிகளும் தங்கள் தோற்றத்தைக் காட்டிவிட்டு மறைந்து விட்டன.
தாரகைகளும் மின்னி மின்னிப் பின் உறங்கச் சென்று விட்டன!
ஒவ்வொரு விளக்கும் எரிந்துத் தீர்ந்துவிட்டது!
நீ எப்பொழுது வருவாயோ, தெரியவில்லையே!
ஸுஹானீ ராத்…
तड़प रहे हैं हम यहाँ, तुम्हारे इंतज़ार में
खिजां का रंग, आ–चला है, मौसम–ए–बहार में
हवा भी रुख बदल चुकी, ना जाने तुम कब आओगे
सुहानी रात ढल…
தடப் ரஹே ஹை ஹம் யஹா(ன்), தும்ஹாரே இன்தஃஜார் மே
கிஃஜா கா ரங்க், ஆ சலா ஹை, மௌஸ்ம்–ஏ– பஹார் மே
ஹவா பீ ருக் பதல் சுகீ, நா ஜானே தும் ஆவோ கே
ஸுஹானீ ராத்.
நான் மனது துடிக்க இங்கே உனக்காகக் காத்திருக்கிறேன்
வஸன்த காலத்தின் நிறம் இங்கே அழகான இந்தப் பருவத்தில் வந்துவிட்டது
காற்றும் திசை மாறி வீசத்தொடங்கி விட்டது
நீ எப்பொழுது வருவாயோ, தெரியவில்லையே
Song: Suhani Raat Film: Dulari 1949 Lyrics: Shakeel Badayuni
Music Naushad Singer: Mohammad Rafi.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. 1201
ஒருநாள் எழுநாள் போல் செல்லும் சேண்சென்றார்
வருநாள் வைத்(து) ஏங்குபவர்க்கு. 1269
One of the most beautiful melodies in Hindi movies, in the young, sweet voice of Rafi. This song catapulted Rafi to the top and became one of his most iconic, trademark songs. Even after 70 years it has not lost its appeal. One of the masterpiece creations of Naushad. He is one of our old veterans.
In those days, Naushad was not above using Western techniques, though later he championed the cause of Hndustani and folk Indian music. Even then he continued to use Western instruments. In fact, he composed on the piano. In one meeting, he was extolling the virtues of Indian music. Some one in the audience asked him why then was he using Western instruments liberally in his songs? Naushad could not answer!

வோ மேரீ தரஃப்
वह मेरी तरफ यूं चले आ रहे हैं
वह मेरी तरफ यूं चले आ रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं
வோ மேரீ தரஃப் யூ(ன்) சலே ஆ ரஹே ஹை(ன்) 2
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
அவள் என்னை நோக்கி நடந்துவருகிறாள்–
இதயத் துடிப்புடன் எதிர்பார்ப்பும் துடிக்கிறது!
उन्हें देखने को उठी मेरी नज़रें
मुझे देखते ही झुकी उनकी पलकें
न जाने वह क्यों हम से शर्मा रहें हैं
உன்ஹே தேக் நே கோஉடீ மேரீ நஃஜ்ரே(ன்)
முஜே தேக் தே பீ ஜுகீ உன்கீ பல்கே(ன்)
ந ஜானே வோ க்யோ(ன்) ஹம்ஸே ஷர்மாரஹே ஹை(ன்)
அவளைப் பார்க்க என் பார்வை உயர்ந்தது–
என்னைப் பார்த்ததும் அவள் கண்கள் தாழ்ந்து கொண்டன!
என்னைக் கண்டதும் ஏன் அவள் வெட்கப்பட வேண்டும்?
न जाने वह क्यों हम सेशर्मा रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं
ந ஜானே வோ க்யோ(ன்) ஹம்ஸே ஷ்ர்மா ரஹே ஹை
கீ அர்மான் தட்கன் சே டக்ரா ரஹே ஹை
வோ மேரீ தரஃப்……..
என்னைக் கண்டதும் ஏன் அவள் வெட்கப்படவேண்டும்?
மனதுத் துடிப்புடன் எதிர்பார்ப்பும் துடிக்கிறது!
जो कलियाँ खिली हैं तो गुल भी खिलेंगे
निगाहे मिली है तो दिल भी मिलेंगे
की साँसों में पैगाम आ जा रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं
ஜோ கலியா(ன்) கிலீ ஹை தோ குல் பி கிலேங்கே
நிகாஹே(ன்) மிலீ ஹை தோ தில் பீ மிலேங்கே
கீ ஸா(ன்) ஸோ மே பைகாம் ஆ ஜா ரஹே(ன்) ஹை
கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை
வோ மேரீ தரஃப் …….
மொட்டு வந்துவிட்டது எனில் மலரும் பூத்துவிடும்!
கண்கள் கலந்துவிட்டன, எனில் மனமும் கலந்துவிடும்!
ஸ்வாசத்திலேயே செய்திகள் வருகின்றனவே!
இதயமும் எதிர்பார்ப்பும் துடிக்கின்றனவே!
उन्हें देख कर दिल लगा रंग लाने
है दिल क्या कहीं बात माने न माने
की हम दिल की हरकत से घबरा रहे है
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं चले आ रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं.
உன் ஹே தேக் கர் தில் லகா ரங்க் லானே
ஹை தில் க்யா கஹீ பாத் மானே ந மானே
கீ ஹம் தில் கீ ஹர்கத் ஸே கப்ரா ரஹே ஹை(ன்)
கீ அர்மான் தகன் ஸே டக் ரா ரஹே ஹை(ன்)
வோ மேரீ தரஃப் யூ சலே ஆரஹே ஹை (ன்),
கே அர்மான் தட்கன் ஸே டக் ரா ரஹே ஹை(ன்)
அவளைப் பார்த்ததும் மனதில் புதிய உற்சாகம் பிறந்துவிட்டது!
ஆனால் மனது என் சொல்லைக் கேட்குமோ,கேட்காதோ!
மனதின் இந்த நிலை கண்டு பயம் வந்து விட்டதே!
மனதுடன் சேர்ந்து எதிர் பார்ப்பும் துடிக்கிறதே!
அவள் என்னை நோக்கி நடந்து வருகிறாள்!
Song: Wo meri taraf yun Film: Kaafila 1952 Lyricist: Vrajendra Gaud
Music: Husnlal Bhagatram Singer: Kishore Kumar.

One of the best ever songs of Kishore, before he became the singing sensation of the 70s. In fact some of his earlier songs are superb, but he went unrecognised for twenty years, even though he sang some of his best songs in the earlier period. This is a very fine composition and the lyrics are sublime. The song will have magical effect on serious listeners due to the fusion of melody, lyrics and the fantastic voice quality of early Kishore. LIstening is believing.
Pandits Husnlal Bhagat Ram were popular and successful composers of the late 40s and early 50s but ran out of luck. They had to work in the orchestra of Laxmikant-Pyarelal later for a living!
Please do listen to this gem on YouTube.
இந்தப் பாடல் ஒரு சீரிய கவிதை! எளிய சொற்கள், ஆனால் magical effect! கம்பதாசன் போன்ற கவிதான் இதை மொழிபெயர்க்க முடியும்!
என்ன இனிய கருத்துக்கள், எத்தனை பண்பட்ட உணர்ச்சிச் சித்திரம்.
இதில் பயன்படுத்தியுள்ள சொற்கள் இலக்கிய பாரம்பரியத்தில் ஊறியவை. eg armaan அர்மான் என்ற பெர்ஷிய மொழிச் சொல்.. Excellent poem and excellent romantic song.
நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள்; அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். 1093
யான் நோக்குங் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகரும் 1094
மை தில் ஹூ(ன்)
मैं दिल हूँ एक अरमान भरा तू आ के मुझे पहचान ज़रा
एक सागर हूँ ठहरा ठहरा तू आ के मुझे पहचान ज़रा
மை தில் ஹூ(ன்) எக் அர்மான் பரா, தூ ஆகே முஜே பஹசான் ஃஜரா
ஏக் ஸாகர் ஹூ (ன்) டஹ்ரா டஹ்ரா, தூ ஆகே முஜே பஹசான் ஃஜரா
நான் ஆசைகளும் எதிர்பார்ப்பும் நிறைந்த ஒரு இதயம்
இங்கு வந்து என்னிடம் பரிச்சயம் செய்துகொள்
நான் ஓர் அசையாத கடல்; நீ இங்கு வந்து என்னை அறிந்துகொள்
खुद मैने हुस्न के हाथों में शोखी का छलकता जाम दिया
गालों को गुलाबों का रुतबा कलियों को लबों का नाम दिया
आँखों को दिया सागर गहरा तू आ के मुझे पहचान ज़रा
குத் மை நே ஹுஸ்ன் கே ஹாதோ(ன்) மே,
ஷோ கீ கா சலக்தா ஜாம் தியா
காலோ(ன்) கோ குலாபோ(ன்) கா ருத்வா,
கலியோ(ன்) கோ லபோ(ன்)கா நாம் தியா
ஆன்கோ கோ தியா ஸாகர் கஹரா
தூ ஆகே முஜே பஹசான் ஃஜ ரா
நான் தானே அவள் அழகை பெரிதாகப் புகழ்ந்தேன்!
அவள் கன்னங்களை ரோஜாவுக்கு நிகராகச்சொல்லி பெருமைப் படுத்தினேன்!
அவள் உதடுகளை மொட்டுக்கள் என்றேன்!
அவள் கண்களை ஆழ்ந்த நீலக் கடல் என வருணித்தேன்!
வா, இங்கே வந்து என்னை அறிந்துகொள்!
ये सच है तेरी महफील में मेरे अफ़साने कुछ भी नहीं
पर दिल की दौलत के आगे दुनिया के खजाने कुछ भी नहीं
यूँ मुझसे निगाहों को ना चुरा तू आ के मुझे पहचान ज़रा
யே ஸச் ஹை தேரீ மஹஃபில் மே
மேரே அஃப்ஸானேகுச் பீ நஹீ
பர் தில் கீ தௌலத் கே ஆகே,
துனியா கே கஃஜானே குச் பீ நஹீ
யூ(ன்) முஜ் ஸே நிகாஹோ(ன்) கோ ந சுரா
தூ ஆகே முஜே பஹ் சான் ஃஜரா
ஆம், இது உண்மைதான்: உன்னுடைய களியாட்டக் கூட்டத்தில்
நான் ஒரு பொருட்டே அல்ல!
ஆனல் ஒன்று: மனதின் செல்வத்திற்கு முன்பு
இந்த உலகத்தின் பணப்பெருக்கெல்லாம் துச்சமே! ( என்று அறிந்துகொள்)
நீ என்னிடமிருந்து உன் பார்வையைத் திருப்பிக் கொள்ளாதே
நீ இங்கு வந்து என்னை அறிந்துகொள்!
இப்பாட்டிற்கு இணையே இல்லை
Song: Main dil hun Film: Anhonee 1952 Lyricist: Satyendra Athaiyya
Music: Roshan Singer: Talat Mahmood

This is one of the best ever love songs in our movies. Sublime melody and superb poetry elevate it to the status of supreme flower of sentimental love. Belonging to the genre Ghazal, it is rendered by Talat, the King of Ghazals. No one can match him in rendering expressive Urdu words with great feeling, sensitivity, imagination and art. Listen to the way he renders ” “mere afsaane kuch bhi nahi” – the heart will miss a beat or two! Such artists are born, gift of the heavens. Beyond imitation.
Roshan was a sensitive composer, but not the pushy type. Unfortunately, he died rather early. This is one of his most memorable creations.
This was conceived as a piano song- one of the popular ways of picturising a love song in Hindi movies, but was wasted on Raj Kapoor in the movie, whose film persona did not match the lofty sentiments of this Ghazal. Yet, the mastery of Talat was such that the song soared above all limitations of filmy faults and reigns even today as a great example of Ghazals in our movies. Such songs just happen, do not appear even once in a decade!
Ghazal: ” is a form of amatory poem or ode, originating in Arabic poetry. A ghazal may be understood as a poetic expression of both the pain of loss or separation and the beauty of love in spite of that pain.”
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. 1112
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 1113
I have given some passages from our great Tirukkural. See how such images, thoughts and feelings are universal! This is how our literary forms and traditions are carried on by great poets, may be unconsciously, nevertheless effectively!
In love, the world is One.
…… ஆதலினால் காதல் செய்வீர்: உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
…………… மஹாகவி பாரதியார்.
[ மேலும் பார்ப்போம் ]
tags – ஹிந்தி படப் பாடல்கள் – 11 , Kaafila, Anhonee, Dulari