சித்தர் பாடலில் எண்கள்; ரிக் வேத எதிரொலி (Post No.7835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7835

Date uploaded in London – 16 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சித்தர்கள் என்போர் யார்?

முதலில் இதை புரிந்து கொள்ள சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க  வேண்டும்.

சித்தி அடைந்தவர்கள் சித்தர்கள்.

அது என்ன சித்தி?

அஷ்டமா சித்திகள். அதாவது எட்டுவகை அதிசய சக்திகள்.

அணுவாகவும் மாறலாம். மலைபோல எடை கூடலாம். கூடு விட்டு கூடும் பாயலாம்.

இவை எப்படி கிடைக்கும்?

பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி யோக முறைகள் மூலம் கிடைக்கும்.

இது தவிர வேறு சக்திகள் உண்டா ?

அவர்கள் ‘காயகல்பம்’ செய்து நீண்ட காலம் வாழும் முறையைக் கண்டுபிடித்தனர். மூலிகைகளின்

அபூர்வ குணங்களைக் கண்டுபிடித்து அகஸ்தியர், போகர் முதலிய பெயர்களில் மருத்துவ நுல்களைப் படைத்தனர்.

ரசவாதம் செய்து இரும்பு, ஈயம் முதலிய சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்றினர்.

இவைகளை எதற்காக செய்தனர்?

சமுதாயத்துக்கு உதவ, சீடர்களைக் கவர, அற்புத சக்திகளை பயன்படுத்தினர்

அவர்களின் நோக்கம்தான் என்ன?

இறைவனை, குறிப்பாக சிவபெருமானை அடைந்து முக்தி பெறவேண்டும்.

மண், பெண், பொன் ஆகிய மூன்றும் சிற்றின்பமே தரும். அவைகளை மறந்து பேரின்பம் பெறுவதே குறிக்கோள்.

இதை எப்படிச் சொல்ல முடியும்?

அவர்கள் விட்டுச் சென்ற பாடல்களால் அறிகிறோம். அவர்கள் உட்கார்ந்து நூல்கள் என்று எதுவும் எழுதி அரங்கேற்றவில்லை. அவர்களுடைய சீடர்கள் பிற்காலத்தில் இவைகளை எழுதினார்கள் .

அவர்களின் வாழ்க்கை வரலாறு  கிடைக்குமா?

பெரிய புராணத்தை சேக்கிழார் பெருமான் உட்கார்ந்து எழுதியதால் 63 நாயன்மார்கள் சரிதமும் திருவாதவூர்ப் புராணம் முதலியவற்றால் மாணிக்க வாசகர் சரிதத்தையும் நாம் அறிய முடிகிறது. தேவாரம், திருவாசகம் அதற்கு உறுதுணையாக நிற்கிறது. ஆனால்  சித்தர் வரலாறுகள் அப்படி முறையாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் சிலர் செவி வழிச் செய்திகளைப் புஸ்தகமாகப் போட்டுள்ளனர். சித்தர் பாடல்களையும் அச்சேற்றியுள்ளனர்

எவ்வளவு சித்தர்கள் இருந்தனர்?

18 சித்தர்களும் அவர்கள் சமாதி அடைந்த இடங்களும் அதன் அருகில் எழுந்த புகழ் பெற்ற கோவில்களையும் நாம் அறிவோம். ஆனால் நுற்றுக்கணக்கான சித்தர்கள் உளர். அதை அந்தந்த ஊர் மக்களே அறிவர். ‘தருமமிகு சென்னை’ என்று ராமலிங்க சுவாமிகளால் போற்றப்பட்ட சென்னையைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேலான சித்தர் சமாதிகள் இருக்கின்றன.

சித்தர்கள் எப்போது வாழ்ந்தனர்?

பொதுவாக பக்தி இலக்கிய காலம் முடியும் தருவாயில் , அதாவது  எட்டு, ஒன்பது நுற்றாண்டுகளுக்குப் பின்னரே இவர்கள் வாழ்ந்தனர்.

இவர்களுடைய பாடல்களின் சிறப்பு என்னவென்றால் பாமர மனிதனின் பேச்சுத் தமிழில் இவர்கள் பாடினர் . ஆயினும் யோகம், தியானம், குண்டலினி, சமாதி ஆகியன பற்றி அறிந்தவர்களே முழு அர்த்தத்தையும் உணர முடியும்.

இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நால்வர் அடங்கிய நாயன்மார்களுக்கும் இவர்களுக்கும், வேறுபாடு உண்டா?

நிறையவே உண்டு. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் கோவில்களையும், சடங்குகளையும், அவற்றைப் பற்றிய ஆகம நுலகளையும் மதித்தனர். சித்தர்களோவெனில் அவைகளை உடைத்தறிந்து பேசினர் ; பாடினர்.

மேலும் அவர்களைப் போல ஸ்னாநம் , பூஜை, புனஸ்காரம் என்ற கட்டு திட்டங்களில் இவர்கள் வாழவில்லை. தெருவிலுள்ள குப்பை கூலங்களில் உருண்டனர்.

பேச்சுத் தமிழில் பாடினார. ஆனால் நாயன்மார்கள் பாடியதோ செந்தமிழ்.

இவர்களில் பெரும்பாலோர் சிவனைப் பாடினாலும் நாதமுனிகள் போன்ற சில வைஷ்ணவப் பெரியார்களை யோகி என்றும் சித்தர் என்றும் குருபரம்பரை நூல்கள் பகர்கின்றன,

சைவர்கள் இவர்களை ஒதுக்கினார்களா?

ஆமாம். பல சைவ நூல்கள் இவர்களை பகிரங்கமாகவே சாடின. ஆயினும் திருமூலர், கருவூர் சித்தர், திருமாளிகைத் தேவர் போன்ற சில சித்தர்களின் பாடல்களை பன்னிரு திருமுறைகளில் ஏற்றிப்  போற்றுகின்றனர்.

இவர்களின் சிறப்புத் தன்மை என்ன?

ரிக்வேத ரிஷிகளைப் போல மறைபொருளில் பாடுவர் . வேதங்களை சங்க காலத் தமிழர்கள் நான்’மறை’ என்று போற்றினர். ‘மறை’பொருளில் இறைபொருள் பற்றிப் பாடியதால் இப்படி அழைத்தனர். அதாவது சொல்ல வரும் பொருளை நேரடியான மொழியில் சொல்லாமல் அடையாள சொற்களால், சங்கேதக் குறியீடுகளால் (Symbolic language, coded language) சொல்லுவார்கள்.

வேதகால ரிஷிகள்  நாங்கள் இப்படித்தான் படுவோம் என்று மந்திரங்களில் பகிரங்கமாகவே கூறியுள்ளனர். குறிப்பாக எண்களை — நம்பர்களை — அதிகம் பயன்படுத்துவர்.

அந்த ஒரு அம்சத்தைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சித்தர்கள் மூலிகைகளின் பெயர்களைக் கூட சங்கேத மொழியில் உரைத்தனர். கண்ட கண்ட தோழான் , துருத்தி எல்லாம் டாக்டர் என்று சொல்லிக்கொண்டு திரியக்கூடாது, ஈ னர்கள் எல்லோரும் காவி உடை போட்டுக்கொண்டு தத்துவம் பேசக்கூடாதென்பதற்காக இப்படிச் செய்தனர் போலும்.

திருமூலர், திருவள்ளுவர்  போன்றார் ‘ஐந்து அடக்கு’ என்றால் அவர்கள்  ஐம்புலன்களை குறிப்பிடுகின்றனர் என்று தெரியும். ஆனால் ஒரேயடியாக எண்களாகப் பாடினால், நமக்கு உரைகார ர்களின் பாஷ்யம் இல்லாவிடில் எதுவும் புரியாது .

ரிக்வேதம் போன்றவற்றுக்கு அர்த்தம் பார்க்கத் தேவையில்லை; அவைகளின் மந்திர சக்தியே பலன்தரும் என்ற பாரம்பர்ய நம்பிக்கை காரணமாக, சாயனர் போன்றோர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய  உரையைக் கூட சங்கராச்சார்யார்கள் பயன்படுத்துவதில்லை.இதை அப்படியே ஆங்கிலத்தில் , பிரெஞ்சில்,ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தோரும், இடையிடையே தங்களுடைய கருத்துக்களைப்  புகுத்தி  உளறிக்கொட்டி இருக்கின்றனர் .

வேதத்தில் உள்ள 30 குட்டி தெய்வங்களுக்கு (அஜ ஏக பாத, அபாம் ந பாத் , வ்ருஷாகபி) வெள்ளைக்காரர்கள் பத்துப் பதினைந்து வெவ்வேறு விளக்கங்களைக் கூறுவது நமக்கு நகைப்பை உண்டாக்கும்.

ரிக்வேதத்தில் முதல் மண்டலத்தில் உள்ள அந்தகக் கவிஞர் (blind poet)  தீர்க்க தமஸின் பாடல்கள் மிகவும் பேசப்படுகினறன. RV.1-164 பாடலில் இறைவன் ஒருவனே; அவனை அறிஞ ர்கள் பல பெயர்களால் அழைப்பர் என்ற வரிகள் வருவதால் எல்லோரும் மேற்கோள் காட்டுவர் . ஆயினும் அதிலுள்ள 52 மந்திரங்களுக்கும் பொருள் கூற முடிவதில்லை. சாயனர்கூ ட ‘புரியவில்லை’ என்று சில மந்திரங்களுக்கு உரை எழுதினார். அதில் முதல் மூண்று மந்திரங்களில் வரும் எண்களை சிவவாக்கியர் என்னும் சித்தர் பாடலுடன் ஒப்பிடுவோம்.

(18 சித்தர்களின் பட்டியல், அஷ்டமாசித்திகள் பட்டியல் பற்றித் தனியே கட்டுரைகளை முன்னரே இங்கு வெளியிட்டதால் அவைகளை இன்று விளக்கவில்லை)

xxxx

சிவவாக்கியரும்,  ரிக் வேதமும்

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர்  ஏழும் ஏழும் ஏழுமாய்

எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே

எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே

எட்டு எழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே — சிவவாக்கியர் பாடல்

இதிலுள்ள எண்களை யார் எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்ய வாய்ப்புண்டு. மேலும் இதே பாடல் ஒரு சிறிது மாற்றத்தோடு திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் வருவதால் இருவரும் ஒருவரா? சமயம் மாறினார்களா? என்ற சர்ச்சைகளும்  இருக்கின்றன.

சிவவாக்கியரும் ஆழ்வாரும் ஆறு, ஐந்து, பத்து முதலிய எண்களைக் கொண்டும் அடுத்தடுத்துப் பாடினார்.

இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  தீர்க்கதமஸும்,  ரிக் வேதத்தில் இப்படி பாடி இருக்கிறார்.

ரிக்.1-164-1 முதல் 1-164-3 வரை

இந்த நன்மைதரும் புரோகிதன் சாம்பல் நிறத்தவனின் நடு  சகோதரன் எங்கும் பரவியுள்ளான் . மின்னல் போல ஒளி வீசுகிறான் . மூன்றாவது  சகோதரன்  நெய் முதுகு உடையவன். நான் இந்தச் சகோதரர்களிடையே ஏழு புதல்வர்களோடுள்ள தலைவனைக் காண்கிறேன்.

ஏழு பேரும் ஒரே சக்கரமுள்ள தேரை ஏந்துகிறார்கள். ஏழு பெயர்களைக் கொண்ட குதிரை அதை இழுக்கிறது. சக்கரத்துக்கு மூன்று நாபிகள் – இருசுகள் – உண்டு. சக்கரம் தேயாது, தளராது மக்கள் அனைவரும் அங்கே ஜீவிக்கிறார்கள்.

ஏழு சக்கரங்கள் கொண்டதும் , ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதுமான இந்த தேரிலே ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இதன் முகப்பில் ஏழு சகோதரிகள் வருகிறார்கள். இதில் பசுக்களின் ஏழு நாமங்கள்/பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.”

இதன் பின்னர் வரும் 49 மந்திரங்களில் மேலும் 20 எண்களைப் பயன்படுத்துகிறார் . அதில் 1000,  720, 360 முதலிய எண்கள் அடக்கம் . எளிய தமிழில், நமது காலத்துக்கு நெருக்கமான காலத்தில், பாடிய சிவவாக்கியர்/ திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்குப் பொருள் காணவே நாம் திணறும் போது   சுமார் 6000  ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலுக்கு வெள்ளைத் தோலினர் சொல்லும் பொருளை நம்பலாமா ?


அஷ்டமா சித்திகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › அஷ்டமா-சித…

29 May 2018 – ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், … திருமண வகைகள் | Tamil and Vedas · https://tamilandvedas.com › tag › திருமண-வக… 1. 9 Apr 2015 …

Missing: அஷ்டமாசித்திகள் ‎| Must include: அஷ்டமாசித்திகள்


சித்தர்கள் செய்த எட்டு வகை …

tamilandvedas.com › 2018/02/13 › சித்தர்க…

13 Feb 2018 – Date: 13 FEBRUARY 2018. Time uploaded in London- 8-43 am. Compiled by London swaminathan. Post No. 4738. PICTURES ARE TAKEN from various sources. WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T …

Missing: அஷ்டமாசித்திகள் ‎| Must include: அஷ்டமாசித்திகள்

பதினெட்டு சித்தர் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பதினெட்டு-ச…

  1.  

Translate this page

6 Nov 2018 – தமிழ் சித்தர்கள் 18 பேர் என்று சொல்லுவர். ஆனால் அந்த பதினெட்டு பேர் யார் என்பதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்கும்.

‘பாரதி கண்ட சித்தர்கள்’ | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பாரதி-கண்ட-ச…

  1.  

Translate this page

21 Aug 2018 – 1837ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிகள் ஜீவ சமாதி எய்தினார். இன்றும் அவரது குருபூசை ஆண்டு …

Missing: பதினெட்டு ‎| Must include: பதினெட்டு

நெரூர் மஹான் சதாசிவ … – Tamil and Vedas

tamilandvedas.com › 2019/05/01 › நெரூர்-…

  1.  

Translate this page

1 May 2019 – … swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள்.

அற்புதங்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › அற்புதங்கள்

  1.  

Translate this page

((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.


6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas

tamilandvedas.com › tag › 6-நாட்களில்-…

  1.  

Translate this page

4 Apr 2019 – கருவூர் சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.தேர்தல் (Election Inscription) …

tags –  சித்தர் பாடல்கள் , எண்கள்; ரிக் வேதம் 

–சுபம்-

ஹிந்தி படப் பாடல்கள் – 8 – குறை நிறைந்த உலகம்! (Post No.7834)

WRITTEN BY R.NANJAPPA                         

Post No.7834

Date uploaded in London – – 16 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 8 – குறை நிறைந்த உலகம்!

R.Nanjappa

உலகம் அதன் போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. அதில் வாழ்பவர்கள், அதைப் பற்றிச் சிந்திப்பவர்கள் வெவ்வேறு விதத்தில் அதை அனுபவிக்கிறார்கள், உணர்கிறார்கள், கருதுகிறார்கள்.

பலருக்கு இந்த உலகம் பிடிப்பதில்லை. சொந்தக் காரணமாக இருக்கலாம், தொழிலில் நஷ்டமாக இருக்கலாம், குடும்பச் சூழ்நிலை  சரியாக இல்லாமலிருக்கலாம்ஏதோ காரணம், உலகம் பிடிக்கவில்லை. ஒர் ஊர் பிடிக்காவிட்டால் வேறு ஊருக்குப் போகலாம், வீட்டை மாற்றலாம், வேறு தொழில் செய்யலாம், வேறு வேலை தேடிக்கொள்ளலாம். “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகிலேஎன்று நம் கவிஞர் பாடினார். வீட்டு  நிலை சரியில்லை என்றால் என்ன செய்வது? ஔவையார் சொல்கிறார்:

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்நியாசம் கொள்

ஆனால் இந்த உலகமே பிடிக்கவில்லையென்றால்? யோசிக்கிறார் கவிஞர்.

பிடிக்காத இடத்தில் இருக்காதே

दुखी मन मेरे, सुन मेरा कहना
जहाँ नहीं चैना, वहाँ नहीं रहना
दुखी मन मेरे

 துகி மன் மேரே, சுன் மேரா கஹனா

ஜஹா(ன்) நஹீ சைனா, வஹா(ன்) நஹீ ரஹனா

துக்கப்படும் மனமே, நான் சொல்வதைக் கேள்

எங்கு உனக்கு சாந்தி இல்லையோ அங்கு வசிக்காதே



दर्द हमारा कोई जाने
अपनी गरज के सब हैं दीवाने
किसके आगे रोना रोएं
देस पराया, लोग बेगाने
दुखी मन मेरे..

தர்த் ஹமாரா கோயீ ஜானே

அப்னீ கரஜ் கே ஸப் ஹை தீவானே

கிஸ்கே ஆகே ரோனா ரோயே(ன்)

தேஸ் பராயா, லோக் பேகானே .

என் வருத்ததை யாரும் அறிய மாட்டார்கள்

ஒவ்வொருவரும் தங்கள் வேலையிலேயே குறியாக இருக்கிறார்கள்

இவர்களுக்கு எதிரில்  எவ்வளவு அழுதால் தான் என்ன ?

இது அன்னியர் தேசம், இந்த மக்கள் அன்னியர்கள்

 

लाख यहाँ झोली फैला ले
कुछ नहीं देंगे इस जग वाले
पत्थर के दिल मोम होंगे
चाहे जितना नीर बहाले
दुखी मन मेरे

லாக் யஹா(ன்) ஜோலீ ஃபைலாலே

குச் நஹீ தேங்கே இஸ் ஜக வாலே

பத்தர் கே தில் மோம் ஹோங்கே

சாஹே ஜித்னா நீர் பஹாலே

நீ எவ்வளவு துணியை விரித்துப் போட்டு பிச்சை கேட்டால் தான் என்ன?

இந்த  இடத்து வாசிகள் ஒன்றும் தரமாட்டார்கள்.

இவர்கள் கல் மனது எதற்கும் கறையாது

நீ எவ்வளவு கண்ணீஈர் விட்டும் பயனில்லை.

अपने लिये कब हैं ये मेले
हम हैं हर इक मेले में अकेले
क्या पाएगा उसमें रहकर
जो दुनिया जीवन से खेले
दुखी मन मेरे

அப்னே லியே ஹை கப் யே மேலே

ஹம் ஹை ஹர்  இக் மேலே மே அகேலே  

க்யா பாயேகா உஸ் மே ரஹகர்

ஜோதுனியா ஜீவன் ஸே கேலே

துகி மன் மேரே……

எனக்காக இந்தக் கொண்டாட்டங்கள் எப்போது நிகழும்?

எந்தக் கொண்டாட்டத்திலும் நான் தனித்தே இருக்கிறேன்!

எந்த உலகம் உன் வாழ்க்கையுடன் விளையாடுகிறதோ

அந்த உலகில் இருந்து நீ என்ன லாபம் அடையப்போகிறாய்?

Song: Dukhi man mere Film: Funtoosh 1956 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman Singer : KIshore Kumar

 [இது கிஷோர்குமாரின் iconic, landmark பாடல்களில் ஒன்று.இதன் பின்னனியில் இருபுராணங்கள்உண்டு. இது சோகப்பாடல்இதைப் பாடுவது சரிவராது என்று கிஷோர் நினைத்தார். ஆனால் பர்மன் தாதா விடவில்லை. கட்டாயமாகப் பாடவைத்தார்பாட்டு படு ஹிட் ஆனது.

இன்னொரு விஷயம். கிஷோருக்குப்  பெரிய பாடகனாக ஆசை. நடிக்கச் சான்ஸ் வந்ததே தவிர, அதிகம் பாடக் கிடைக்கவில்லை. 1956 வாக்கில் பம்பாயை விட்டுப் போக நினைத்தார். அந்தச் சமயத்தில் தான்  பர்மன் இவரை அழைத்தார். ” தாதா, நான் பாடவெல்லாம் வரமாட்டேன்என்றார் கிஷோர். தாதா விடவில்லை. ” மடையா, உனக்கு என்னடா பாட வரும், நீ சாப்பிட வாஎன்றார்.  { Gaane ko nahi, khaane ko aa[ பர்மனுக்கு கிஷோரை சிறு வயது முதல் தெரியும்.]வந்த கிஷோர் சாப்பிட்ட பிறகு. ரிஹர்சல் ரூமிற்கு கைப்பிடியாக இழுத்துச் சென்று இந்தப் பாடலைப் பாடவைத்தார். ” எங்கு சாந்தியில்லையோ அங்கு இருக்காதேஎன்ற வரி கிஷோர் மனதைத் தொட்டிருக்கவேண்டும். இப்பாட்டு மிகுந்த உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.]

ஒரு குறிப்பு: இந்த Funtoosh படம் பின்னர்பலே பாண்டியாஎன்ற பெயரில் தமிழில் வந்தது.அதில் வந்த பாட்டுதான்வாழ நினைத்தால் வாழலாம்“.

இந்தப் பாடல் ஒரு மனிதனின் சொந்த அனுபவம். சிலர் உலக நடப்புகளையே பொதுவாக விமர்சிக்கின்றனர். நமது இடதுசாரிகள் இதில் தேர்ந்தவர்கள்.[ பணக்காரர்களைத் திட்டுவார்கள், ஏழைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் பல இடது சாரிகள் பணக்காரர்களாக இருக்கிறார்கள்- யாரும் தங்கள் பணத்தையோ, சொத்தையோ ஏழைகளுடன் பகிர்ந்துகொண்டதாக சரித்திரம் இல்லை!]  கவிஞர் ஸாஹிர் லுதியான்வி பக்கா இடதுசாரி, பல பாடல்களில்

உலகின் குறைகளைப் பாடியிருக்கிறார். அதில் ‘ப்யாஸா” படத்தில் வந்த ஒரு சீரியஸ் பாட்டில் சில வரிகள்:

கண்ணை உறுத்தும் , மனதை வருத்தும் காட்சிகள்

ये कूचे, ये नीलामघर दिलकशी के
ये लुटते हुए कारवाँ ज़िन्दगी के
कहाँ हैं, कहाँ है, मुहाफ़िज़ ख़ुदी के
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं

யே கூசே கே நீலாம்கர்  தில்கஷீ கே

யே லுட்தே ஹுயே கார்வான் ஜிந்தகீ கே

கஹா(ன்) ஹை, கஹா(ன்) ஹை, முஹாஃபிஃஜ் ஸுதீகே

ஜிநே நாஜ்  ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை

இந்தச் சந்துபொந்துகள்இந்தக் கவரும்  பரத்தையர் வீடுகள்

கொள்ளையடிக்கப்பட வாழ்க்கையின் இந்த நடப்பு

நம் கௌரவத்தைக் காப்பவர்கள்அவர்கள் எங்கே?

கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படும் அவர்கள்

அவர்கள்  எங்கே ? அவர்கள்  எங்கே ?


ये पुरपेच गलियाँ, ये बदनाम बाज़ार
ये ग़ुमनाम राही, ये सिक्कों की झन्कार
ये इस्मत के सौदे, ये सौदों पे तकरार
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं

யே புர்பேச் கலியா(ன்), யே பத்னாம் பாஃஜார்

யே கும்னாம் ராஹீ, யே சிக்கோ கீ ஃஜங்கார்

யே இஸ்மத் கே  ஸௌதே, ,யே ஸௌதே பே தக்ரார்

ஜிநே நாஃஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை

வளைந்து போகும் இந்தச் சந்துகள், பெயர் கெட்ட இந்த பஜார்,

இந்த அனாமதேய பயணி, நாணயங்களின் இந்த சப்தம்,

இங்கு நடக்கும் “மதிப்புமிக்க  வியாபாரம், அதன் விலை மீது எழும் தகராறு

கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படுகிறார்களே

அவர்கள் எங்கே? அவர்கள் எங்கே?

ये सदियों से बेख्वाब, सहमी सी गलियाँ
ये मसली हुई अधखिली ज़र्द कलियाँ
ये बिकती हुई खोखली रंगरलियाँ
जिन्हें नाज़ है हिन्द पर वो कहाँ हैं  

யே ஸதியோ(ன்) ஸே பேக்வாப், சஹமீ ஸீ கலியா(ன்)

யே மஸலீ ஹுயீ அத்கிலீ ஃஜர்த் கலியா(ன்)

யே பிக்தீ ஹுயீ கொகலீ ரங்ரலியா(ன்)

ஜிநே நாஃஜ் ஹை ஹிந்த் பர் வோ கஹா(ன்) ஹை

வளந்துபோகும் இந்தச் சந்துகள், நூற்றாண்டுகளாக சரிசெய்யப்படாதவை,

இந்த கசங்கிய, வெளிறிய பாதி விரிந்த மொட்டுக்கள்

இப்படி விலைபோகும் இந்தக் குழிவிழுந்தகளியாட்டங்கள்

கீழ்த்திசை நாடுகளைப் பற்றிப் பெருமைப்படும் அவர்கள்– 

அவர்கள் எங்கே, அவர்கள் எங்கே?

(இது நீண்ட பாடல். 3 சரணங்களே இங்கு தந்திருக்கிறேன் )

Song: Jinhe naaz hai Hind par  Film: Pyaasa 1957 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman Singer: Mohammad Rafi

இது உருது கவிதையின் உச்சம், கருத்திலும் காட்டம்! இதைப் படத்தில் பார்த்தால்தான் இதன் முழு உலகைப் பரிமாணம் விளங்கும்.

ஹீரோ ஒரு ஏழைக் கவி. இன்னமும் பெயர் எடுக்கவில்லை. லக்னௌ வீதியில் ( சந்துகளில்) நடந்து போகிறான் அது சிவப்பு விளக்குப் பகுதி. அங்கு பார்ப்பதை விவரிப்பது இந்தப் பாடல்.

வேறு யார் என்ன சொன்னாலும் தமிழ்ச் சங்க இலக்கியம் சிறிதாவது படித்த நாம் நிதானிக்கவேண்டும். சங்க இலக்கியத்தில் பரத்தையரைப் பற்றி வரவில்லையா? அருணகிரிநாதர் ( 15ம்  நூற்றாண்டு) எழுதவில்லையா? வள்ளுவர்வரைவின் மகளிர்என்று ஒரு அதிகாரமே வகுக்க வில்லையா?

ஸாஹிர் லுதியான்வி புதிதாக ஒன்றும்  எழுதிவிட வில்லைNo need to pretend we are shocked.

இவர் எழுதிய இந்த விஷயங்கள் சோஷலிச நாடுகளில் இல்லையா? இடதுசாரிகள் 35 ஆண்டுகள் ஆட்சி செய்த மேற்குவங்காளத்தில் மறைந்துவிட்டதா? இதுவேதான் முழு உலகமுமா?

இதை வைத்தே உலகை வைவது சரியா

உலகைத் தாக்க ஏதோ ஒரு சாக்கு வேண்டும் இந்தக் கவிக்கு இது கிடைத்தது!

இதே ரீதியில் இன்னொரு பெரிய கவிதை அதே படத்திற்கு எழுதினார்.

வேண்டாம் இந்த உலகம்!

ये  महलों, ये तख्तों, ये ताजों की दुनिया,

ये इंसान के दुश्मन समाजों की दुनिया,

ये दौलत के भूखे रवाजों की दुनिया,

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

யே மெஹ்லோ(ன்) யே தக்தோ(ன்) யே தாஃஜோ கீ துனியா,

யே இன்சான் கே துஷ்மன் சமாஜோ(ன்) கீ துனியா,

யே தௌலத் கே பூகே ரவாஃஜோ கீ துனியா,

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யாஹை

அரண்மனைகள், சிம்மாசனங்கள், கிரீடங்கள் நிறைந்த இந்த உலகம்

மனிதனுக்கு எதிரியான சமாஜங்கள் நிறைந்த இந்த உலகம்,

கட்டுப்பாடுகள் நிறைந்த, செல்வத்திற்கு ஏங்கும் இந்த உலகம்

இந்த உலகமே எனக்குக் கிடைத்துவிட்டாலும் அதனால் ஆவதென்ன?

हर इक जिस्म घायल, हर इक रूह प्यासी

निगाहों में उलझन, दिलों में उदासी

ये दुनिया है या आलमबदहवासी

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

ஹர் இக் ஜிஸ்ம் காயல், ஹர் இக் ருஹ் ப்யாஸீ

நிகாஹோ(ன்) மே உல்ஜன், திலோ(ன்) மே உதாஸீ,

யே துனியா ஹை யா ஆலம்பத்ஹவாஸீ

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ கயாஹை

ஒவ்வொரு உடலும் காயம் பட்டது, ஒவ்வொரு மனதிலும் ஒரு தாகம்,

அலையும் கண்கள்வெற்றிடமான மனது,

வக்கரித்து, தூய்மையிழந்த காற்று வீசும் இந்த உலகம்

இந்த உலகமே எனக்குக் கிடைத்து விட்டாலும் அதனால் என்ன?

यहाँ इक खिलौना है इसां की हस्ती

ये बस्ती हैं मुर्दा परस्तों  की बस्ती

यहाँ पर तो जीवन से है मौत सस्ती

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

யஹா(ன்) இக் கிலோனா ஹை இன்ஸான் கீ ஹஸ்தீ

யே பஸ்தீ ஹை முர்தா பரஸ்தீ கீ பஸ்தீ

யஹா(ன்) பர் தோ ஜீவன் ஸே ஹை மௌத் ஸஸ்தி

யே துனியா அகர் மில் பீஈ ஜாயே தோ க்யா ஹை

இங்கே மனிதன் ஒரு பொம்மை தான்

செத்தவர்களைக் கொண்டாடும் மக்கள் உள்ள இடம் இது

இங்கு உயிருடன் இருப்பதைவிட  மரணமே சல்லிசு

இந்த உலகமே கிடைத்து விட்டாலும் அதனால் ஆவதென்ன?

जवानी भटकती हैं बदकार बन कर

जवान जिस्म सजते है बाज़ार बन कर

यहाँ प्यार होता है व्योपार  बन कर

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

ஜவானீ படக்தீ ஹை பத்கார் பன் கர்

ஜவான் ஜிஸ்ம் ஸஜதே ஹை பாஃஜார் பன் கர்

யஹா(ன்) ப்யார் ஹோதா ஹை வ்யோபார் பன் கர்

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை

இளமை பாவத்தில் கிடந்து அலைகிறது

இளம் உடல்கள் சந்தைக்கடை போல் அலங்கரிக்கப்படுகின்றன

இங்கே அன்பு என்பதும் வியாபாரமாகி விட்டது

இந்த உலகமே கிடைத்து விட்டாலும் அதனால் என்ன லாபம்?

ये दुनिया जहाँ आदमी कुछ नहीं है

वफ़ा कुछ नहींदोस्ती कुछ नहीं है 

जहाँ प्यार की कद्र कुछ नहीं है  

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

யே துனியா ஜஹா(ன்) ஆத்மீ குச் நஹீ ஹை

வஃபா குச் நஹீ, தோஸ்தீ குச் ஹீஹை

ஜஹா(ன்) ப்யார் கீ கத்ர் குச் நஹீ ஹை

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை

இந்த உலகம்இதில் மனிதனுக்கு மதிப்பில்லை,

நம்பிக்கைக்கு மதிப்பில்லை, நட்புக்கு மதிப்பில்லை

இங்கு அன்புக்கு மதிப்பில்லை, அதைக் கருதுவார் இல்லை

இந்த உலகம் கிடைத்தாலும் அதனால் என்ன ஆகிவிடும்?

जला दो इसे फूक डालो ये दुनिया

जला दो, जला दो, जला दो

जला दो इसे फूक डालो ये दुनिया

मेरे सामने से हटा लो ये दुनिया
तुम्हारी है तुम ही संभालो ये दुनिया

ये दुनिया अगर मिल भी जाए तो क्या है .

ஜலாதோ இஸே பூங்க் டாலோ யே துனியா

ஜலாதோ, ஜலாதோ, ஜலாதோ

ஜலாதோ இஸே பூங்க் டாலோ யே துனியா

மேரே ஸாம்னே ஸே ஹடா லோ யே துனியா

தும்ஹாரீ ஹை தும் ஜஹீ ஸ்ம்பாலோ யே துனியா

யே துனியா அகர் மில் பீ ஜாயே தோ க்யா ஹை

இந்த உலகத்தைக் கொளுத்தி விடு, ஊதி ஒன்றுமில்லாமல்  செய்துவிடு

கொளுத்திவிடு, கொளுத்திவிடு, கொளுத்திவிடு

இந்த உலகத்தைக் கொளுத்திவிடு, ஊதி இல்லாமல் செய்துவிடு

என் கண்ணெதிரிலிருந்து  இதை அகற்றிவிடு

இது உங்கள் உலகம்நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள்!

இந்த உலகம் கிடைத்தாலும் அதனால் ஆவதென்ன?

Song: Ye mehlon, ye takhton   Film: Pyaasa, 1957

Lyricist: Sahir Sudhianvi Music: S.D.Burman

Singer: Mohammad Rafi.

இசை, சாஹித்யம், பாடியவர் குரல் சிறப்பு, படமாக்கிய விதம் ஆகிய எல்லா வகையிலும் இது நமது சினிமாவில் ஒரு உன்னத இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்றும் இது Classic தான்.

[ இவ்விரண்டு பாடல்களும் இலக்கிய வாதிகளால் இன்றும் கொண்டாடப்படுகின்றன. திரை இசை வரலாற்றிலேயே ஒரு மைல் கல்லாக, உச்சகட்ட சாதனையாகக் கருதப்படுவது. அதனால் இவற்றை இங்கே  பார்த்தோம்.]

இப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாயின. ஸாஹிர் லுதியான்வி  இதற்கு தன் சாஹித்யம் தான் காரணம்எஸ்.டி பர்மனின் இசையல்ல என்று வெளிப்படையாகவே சொன்னார்.. அதனால் இசையமைப்பாளரைவிட தனக்கு அதிகப் பணம் தரவேண்டும் என்று கேட்கத்தொடங்கினார். ஒரு ரூபாயாவது அதிகம் தரவேண்டும்  என்றார்

தவ்லத் கே பூகே ரவாஃஜோ கீ துனியா“- இந்த உலகம் அதிகச்செல்வத்திற்காக ஏங்குகிறது என்று இப்பாடலில் எழுதிய சோஷலிசக் கவிஞர் அதிகக் காசு கேட்டு நின்றார்! இந்த  நிலைப்பாடு முன்னணி இசையமைப்பாளர்களுக்குச் சம்மதமில்லை.அதனால் அவர்கள் ஸாஹிருடன் பணிசெய்ய இசையவில்லை.

 ஸாஹிர் பிரபல மடைய எஸ்.டி. பர்மன்  1951ல் இசையமைத்தநௌஜவான்என்ற படத்தில் வந்ததண்டீ ஹவாயே(ன்)” என்ற பாட்டுதான் காரணமானது. அதுமுதல் 1957ல் ப்யாஸா வரை இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பர்மன் இவருடன் தொடர்பை துண்டித்துக்கொண்டார்.

 [லதா மங்கேஷ்கர்  பாடிய இந்த தண்டீ ஹவாயே(ன்) பாட்டு நாடுமுழுதும் பிரபலமடைந்தது. இதன் மெட்டில் தமிழில்   “கொஞ்சும் புறாவே” என்று எம்.எல்.வசந்தகுமாரி பாடிய தமிழ்ப் பாடலும் ஹிட் ஆனது!  இது  நாகையாவின் “தாய் உள்ளம்” படத்தில் இடம்பெற்றது, இதன் இசையும் நாகையாவே அமைத்தார். இரவல் மெட்டாக இருந்தாலும் தமிழ் வடிவமும் சிறந்ததே எம்.எல் வி குரலும் இதற்கு வயலின் பின்னணி இசையும் அபாரம். பல முறை கேட்டு ரசிக்கலாம்.]

இந்தப் பாடல் முதல்பாடலை விடச் சிறப்பானது. பொதுவில் மனித நேயம், மனிதப் பண்புகள் குறைந்திருப்பதைச் சொல்கிறார். உலகம் வியாபார மயமாகி வருவதைச் சொல்கிறார். இதை 18ம் நூற்றண்டிலிருந்து கவிஞர்கள், கலைஞர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர். கோல்ட்ஸ்மித் 1770ல் எழுதினார்:

“If to the city sped—What waits him there?
To see profusion that he must not share;
To see ten thousand baneful arts combined
To pamper luxury, and thin mankind.

[ Oliver Goldsmith: The Deserted Village]

 To thin mankind–  

மனித நேயம் குறைந்துதான் வருகிறது! 

நம் கவிஞர் குறைகளைக் கண்டார்

ஆனால் தீர்வு சொல்ல வில்லை! உலகைக் கொளுத்துவது தீர்வாகுமா

தலைவலி வந்தால் தலையையே வெட்டுவார்களா?

இந்த உலகம் பிரச்சினைகள் நிறைந்தது தான், குற்றம் குறைகள் உள்ளது தான்பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்துவருவதுதான்.It takes all sorts to make the world.

இது பழங்காலத்திலிருந்து நாம் பார்த்துவருவது

ஆனால் நாம் காணும்  குறைகள், குற்றங்கள் நாம் பார்க்கும் இடத்தைப் பொறுத்தது, நம் பார்வையைப் பொறுத்தது. சில சமயம் காலத்தைப் பொறுத்தது.Place and Time.

சமயம், அரசியல்சீர்திருத்தம், புரட்சி, பொருளாதாரம் , இப்போது விஞ்ஞானம் என்று எத்தனையோ வழிகளில் இதற்குத் திர்வு காண முயல்கின்றனர். இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்திய ஆன்மீகம் இதற்கு ஒரு வழி கண்டது. நீ உன் பார்வையை மாற்றிக்கொள் என்றது. இந்த உலகம் துக்கம் நிறைந்தது தான், அதை மாற்ற உன்னால் முடியாது, நீ உன்னை மாற்றிக்கொள் என்பது கீதை முதல் புத்தர் வரை வற்புறுத்திய விஷயம். உலகத்தையே ஒழித்துவிடு என்று சொல்லவில்லை!

We cannot control the events in the world, we can only control our reaction. This is also the essence of the Greek Stoic philosophy which reflects Indian (Hindu-Buddhist) thoughts.

ஆனால் உலகில் நல்ல விஷயங்களே இல்லையா? நல்ல இடங்களே இல்லையா? இதையும் திரைக் கவிஞர்கள் வழியில் பார்ப்போம்!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 8 , funtoosh, Pyasa, S D Burman, Dev anand, Guru dutt

****

உலகின் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்! (Post.7833)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7833

Date uploaded in London – – 16 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்

ஒன்பதாவது உரை

(9-3-2020 அன்று ஒலிபரப்பானது)

உலகின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்!

உலகின் இன்றைய மாபெரும் அபாயமாக கருதபப்டுவது Climate change எனப்படும் தட்பவெப்பநிலை மாற்றமே. உலகின் வெப்பம் கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு தனி மனிதனும் பாதிப்புக்குள்ளாவது நிச்சயமாகிறது.

கடந்த நூற்றாண்டுகளில் 2016ஆம் ஆண்டு தான் மிக அதிகம் வெப்பம் உடைய ஆண்டாக இருப்பது தெரிய வருகிறது. மிக அதிகமான வெப்ப அலைகள் உலகெங்கும் வீச ஆரம்பித்து விட்டது. இது இன்னும் அதிகமாகிக் கொண்டே போகும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

கார்பன் டை ஆக்ஸைடு வளி மண்டலத்தில் அதிக அளவில் கலக்கும் போது அது போர்வை போல செயல்பட்டு  வெப்பம் வெளியே தப்பிச் செல்ல வழியில்லாது செய்து விடுகிறது. இதனால் உலகில் உஷ்ணநிலை கூடுதலாகி  பல்வேறு பயிர்களின் நாசத்தை ஏற்படுத்துகிறது; விலங்கினங்களையும் பறவையினங்களையும் அழிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் உஷ்ணநிலை மொத்தத்தில் 10 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகி விடும்.

அடுத்து Glacier எனப்படும் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும். இதன் விளைவாக கடல் மட்டம் உயர ஆரம்பிக்கும். கடலோரப் பகுதிகள் அழிந்துவிடும். வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் சுமார் 8 அடி வரை உயரக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.

வெப்பமயமாதலால் பருவம் பொய்க்கும்; அத்துடன் சீரற்ற நிலையில் ஆங்காங்கே அதிக மழை பெய்யச் செய்து ஏராளமான வெள்ள பாதிப்பை உருவாக்கும். பாதிப்பை ஏற்படுத்தும்.

சூறாவளிகள் அடிக்கடி உருவாகி பெருமளவில் மக்கள் வாழும் குடியிருப்புகளை அழிக்கும் அபாயமும் ஏற்படும். மிகப் பெரும் சூறாவளிகள் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்ற நிலை மாறி 16 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து பெருமளவில் அழிவை ஏற்படுத்தும்.

மிகப் பெரிய அளவில் பஞ்சத்தை ஏற்படுத்தி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 80 கோடிப் பேரைப் பெருமளவில் பாதிக்கும். அத்துடன் வாழ்விடங்களும் குடியிருப்புகளும் அழிக்கப்படுவதால் சுமார் 10 கோடிப் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளை இழப்பர்.உலகில் உள்ள பவழப்ப்பாறைகளில் 70 விழுக்காடு அழியும் அபாயமும் ஏற்படும்.

இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர விடாமல் செய்வ்தே. இதற்கு வாகனங்களே காரணம் என்பதால் படிம எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீஸல் பயன்பாடு கட்டுப் படுத்தப்பட வேண்டும். பெட்ரோல் வாகனங்களைத் தவிர்ப்பதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அனைவரும் மாறுவதும் ஒரு சிறந்த வழியாக அமையும்.

Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

tags- உலக, தட்ப வெப்ப நிலை, விளைவுகள்.

SWAMI CROSSWORD 1542020 (Post No.7832)

SWAMI CROSSWORD 1542020 (Post No.7832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7832

Date uploaded in London – 15 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1. – (7) greatest Sanskrit poet, playwright

6.–(6) humans who through merit and yogic practices become semi divine, gaining psychic and super human powers, known as Siddhis

8.  –(6)- Mind born; a lake near Kailas; now both are in China

9. –(6)- Hindus preferred star day for marriages; Tamil Sangam verses Akam.86 and 136 praise this star

DOWN

1.—(7) – Indian state which got the name of Kashyapa Rishi with capital in Goddess name

2. (5)-  First of the 8 Supernatural Powers of Hindu Yogis, becoming minute like Anu/Atom

3.–(5) – Greeks and Persians called Bharat with this name.

4.AGAMA – (5) – Books of Rules for Temple Rituals and Temple priests.

5. – (7) – The celestial cow, fabled cow of plenty; Kamadhenu’s another name

7.– (5)- smiling, charming, laughing; it is masculine name ; if one adds ‘I ‘ sound it becomes feminine name

TAMIL SIDDHARS AND VEDIC SYMBOLISM IN POETRY (Post No.7831)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7831

Date uploaded in London – 15 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

It will be interesting to compare the symbolism in Vedas and Tamil Siidhar songs though they are separated in time by thousands of years. Vedic seers said openly they enjoy using mystic and mysterious language. They used coded language. Orthodox Hindus believe that Vedas are followed for its magical sound effect and literal meaning is not important. Even Shankaracharyas don’t quote Sayana’s commentaries. They still follow the orthodox school. But Westerners translated Vedas in French, German and English and started interpreting them in their own way. Tamil Siddhars are not known to them and so they don’t understand the symbolic language.

Who are Siddhars? What is the meaning of Siddhar?

Siddhar is a Sanskrit word. Siddhar means one who has attained ‘Siddhi’, i.e. special psychic and supernatural powers which has been defined eight fold in the science of Yoga (Ashta Ma Siddhi- Eight Great Supernatural powers) . The term has been loosely used and understood to denote a certain category of mystic poets , who were grim and uncouth ascetics credited with supernatural powers.

A floating tradition has it that there are Eighteen Siddhars; but there are more than 18 siddhars, some are known only locally.

Tamil literature is rich in religious and philosophic poetry. In fact, Tamils produced more religious poetry than Sanskrit writers if we take the last 15 centuries into account. Kanchi Paramacharya(1894-1994)  also highlighted this point in his discourses.

Siddha verses are famous for their brevity, terseness, epigrammatic and enigmatic symbolism. They are iconoclasts. They threw out the old rules and rituals in the wind. Because of this anti- Agamic approach orthodox Saivites ignored them. But some like Tirumular, Karuvur Thevar and Tirumaligai Thevar are recognised and their verses are included in the Saivite canonical literature known as Panniru Tirumurai (12 Holy Books/Compilations)

To almost all the Tamil Siddhars, Lord Shiva is the Supreme God. But there is a tradition recorded in the ‘Guruparampara’ that Vaishnavite Nathamuni was a Yogi and Siddhar. He taught Yoga to his disciple Kurugal Kavalappan. But when Nathamuni tried to teach Yoga to Uyyakkondar, another disciple of his, he declined it and remained as an ordinary devotee.

The siddhars are seers and highly evolved and realized souls. They are not agnostics. They had faith in the divine essence of man and his capacity to become a superman and even to work miracles by developing his latent powers by Yoga. They allowed all castes to follow them or practise what they teach. Unlike devotional poets most of the Siddhars were celibates. They criticised sensual pleasures

Bur they emphasised all that is said in devotional poetry, which are older by several centuries. Only difference was that devotional poets respected Agamic rules, Temples and Rituals. Following are the common things between the two groups:

1.Belief in Divine Essence of Man

2.Man is mortal and sensual pleasures are short lived .

3.Wealth and material comforts are impediments to virtue, moral well- being and spiritual endeavour.

4.Caste is no bar. Anyone can reach god .

Main difference is

1.To siddhars religious institutions , festivals or rituals and conformity of any kind whatsoever are not important.

2.Siddhars used herbs and Kaya kalpam (elixir) to prolong life span. They did research in herbal cure and wrote books.  They also believed in philosopher’s stone  which converted base metals in to silver and gold.

Sufis and Siddhas

A V Subramaniya Aiyar in his book ‘The Poetry and the Philosophy of the Tamil Siddhars’ compared the Tamil Siddhas with the Sufis of Islam and Gnostics of Europe:-

“ The Islamic Sufis appear to have been similar to the Tamil Siddhars. Sufism is defined ‘ as a total disengage ment of the mind from all temporal concerns  and worldly pursuits; an entire throwing off, not only of every superstition, doubt or the like , but of practical mode of worship, ceremonies etc. laid down in every religion’.

Christianity also had the antitypes of the Tamil Siddhars in the early Gnostics of Europe. St .Francis of Azzizi , can be compared to mystic poets of India

Characteristics of Siddha Poetry

On the whole , the literature of Siddhars  is inferior to the hymnal literature of Saivism and Vaishnavism

They adopted common speech for poetry.

They did not leave their life history or biographical details in their poems.

All we know about them comes from the traditional accounts written later.

Thiru vilaiyadal Puranam in Tamil, written by Paranjothi Munivar, refers to many Siddhas including Idaikkadar.

xxx

I will compare one or two Rig Vedic Mantras with the  Siddha Poetry:-

Tamil Siddha Sivavakkiyar and Tirumazisai Alvar (not a Siddhar but one of the 12 Alvars) both used same symbolism in their verses.

A rough translation of one of the verses runs like this-

8+8 and as 8 and 7+7 as 7

8 and 3 and became 1 as the original Deva

And as 8 pada/beda, reciting His name

Those who recite  8 letters will live without Troubles.

These verses are composed with rhyme and rhythm but wont make any sense without a commentary. And even commentators can interpret it differently.

This is approximately 1200 year old.

Let us compare it with the most difficult Hymn of the blind poet of Rig Veda Dirga Tamas (literally Mr Long Darkness) RV.10-164.

Ludwig and others consider it the most difficult one.

Out of the 52 mantras in this verse we will take the first three stanzas or mantras –

1).“Of this benignant priest with eld grey coloured , the brother of the 3 is lightning

 midmost

The THIRD is he whose back oil is sprinkled. Here I behold the chief with 7 children.

2.) Seven to the one wheeled chariot yoke the course; bearing 7 names the single courser draws it.

Three – naved the wheel is, sound and decaying, whereupon are resting all these worlds of being

3). The 7  who on the 7 wheeled car are mounted have horses , 7 in tale, who draw them onward.

7 sisters utter songs of praise together, in whom the names of 7 cows are treasured.

Out of 52 mantras in this particular hymn I have given the first three mantras/stanzas.

Further down he uses 720, 360, 12, 6, 3, 5, 33, 6, 2, 4 etc. in other mantras; we know he is singing about 360 nights and 360 days , but other numbers are with obscure meaning. Commentators use “it MAY mean”, “It is PROBABLY” , “PERHAPS he says”etc.

If we find it difficult to understand simple Tamil worded symbolism of yesterday’s Siddhas how are we going to get the meaning of Dirgatamas verse who lived many thousand years before our time?

tags – Tamil Siddhas, Siddhar, Symbolism, Sufi, Gnostic,Dirgatamas, RV 10-164, Sivavakkiyar, Tirumzisai alvar.

–subham–

ஹிந்தி படப் பாடல்கள் – 7 – உணவுக் கனவு! (Post No.7830)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7830

Date uploaded in London – – 15 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 7 – உணவுக் கனவு!

R.Nanjappa

உணவுக் கனவு!

வீட்டுப் பிரச்சினையை எவ்வளவு எளிதாகத் தீர்த்துவிட்டார் கவிஞர்! நிஜ உலகில் வீடு இல்லையென்றால்  என்ன? கனவுலகில் பெறலாமே!

சரி, வீடு வந்தாயிற்று, உணவு?

இதையும் தருகிறார் கவிஞர் ஷைலேந்த்ராஆம், கனவில்!

ஒர் இளைஞன்ஏழை, வேலை கிடைக்கவில்லை, சாப்பாட்டுக்கு வழியில்லை. என்ன செய்வது?

கற்பனைக் குதிரையில் ஏறுகிறான். சேரிக் குழந்தைகளைக் கூட்டிக்கொள்கிறான், பாடுகிறான்!

Suraj zara aa paas aa, 

Aaj sapno(n) ki roti pakayenge hum

Ae aasmaan tu bada meherbaan, 

Aaj tujh ko bhi dawat khilayenge hum.

Chulha hai thanda pada, aur pet me aag hai

Garma garam rotiya(n) kitna hasi(n) kwaab hai!

Aaloo tamatar ke saath, imli ki chutney bane,

Roti karari si ke, ghee uspe asli lagey!

Baite kahin chaaon mein Aa aaj picnic sahi

Aise hi din ki sada, humko tamanna rahi

அப்பா சூர்யனே! சற்று அருகில் வா!

இன்று கனவில் ரொட்டி சுடுவோம்!

வானமேநீ கருணை நிறைந்தவனில்லையா!

இன்று உனக்கும் விருந்து தருகிறோம்!

அடுப்பில் நெருப்பில்லை  குளிந்திருக்கிறது (அதனால் என்ன)

வயிற்றில் தான் அக்னி  எரிகிறதே!

சுடச் சுட ரொட்டி தயார் என்ன அழகான கனவு!

உருளைக்கிழங்கும் தக்காளியும் கலந்துசப்ஜி“!

அதனுடன்  புளியம்பிஞ்சு சட்னியும் தயார்!

அடுப்பிலிருந்து  சுடச்சுட ரொட்டி– 

அதன்மேல் அசல் நெய் தடவுவோம்!

அடே அப்பா, என்ன மணம்!

இப்படி எங்கோ நிழலில் அமர்ந்து

பிக்னிக் போக வேண்டும்!

அப்படிப்பட்ட நாட்களும் வருமா

அதுவே எங்கள் ஆசையாக இருக்கிறது!

Song: Suraj zara  Film: Ujala 1959 Lyricist: Shailendra

Music: Shankar Jaikishan  Singer: Manna Dey

கனவு என்றால் கூட ,கற்பனையே என்றாலும் எத்தனை யதார்த்தம் பாருங்கள்! 

ஏதோகல்யாண சமையல் சாதம்‘  என்று  பாடவில்லை. நாம் சாதாரணமாக உண்பதையே கேட்கிறார்!

“Seeking the food he eats” என்று ஷேக்ஸ்பியர் பாடவில்லையா!

சமையல் என்னும் சடங்கு!

சாதாரண ரொட்டி என்றாலும் அதை யாரோ சமைத்துத் தானே ஆகவேண்டும்

அம்மா தானே உணவு சமைப்பவள்!

தினமும் அடுப்படியில் புகையுடனும் நெருப்புடனும்  ரொட்டி சுடக் கஷ்டப்படுகிறாள்.

ஒரு சிறு பையன், இதைக் கவனிக்கிறான். அவனுக்கு சட்டென்று ஒரு ஐடியா

அம்மாவிடம் ஓடுகிறான்சொல்கிறான்:

मुन्ना बड़ा प्यारा, अम्मी का दुलारा

कोई कहे चाँद, कोई आँख का तारा

इक दिन वो माँ से बोला क्यूँ फूँकती है चूल्हा

क्यूँ ना रोटियों का पेड़ हम लगालें

आम तोड़ें रोटी तोड़ें रोटीआम खालें

काहे करे रोज़रोज़ तू ये झमेला

अम्मी को आई हंसी, हँसके वो कहने लगी

लाल मेहनत के बिना रोटी किस घर में पकी

जियो मेरे लाल, जियो मेरे लाल

जियो जियो जियो जियो जियो मेरे लाल

முன்னா படா ப்யாரா, அம்மி கா துலாரா

கோயி கஹே சாந்த் , கோயீ ஆங்க் கா தாரா

இக் தின் வோ மாஸே போலாக்யூ(ன்) ஃபூங்க்தீ ஹை சூல்ஹா

க்யூ ரோடியோ(ன்) கா பேட் ஹம் லகாலே(ன்)

ஆம் தோடே ரோடீ தோடே ரோடீஆம் காலே(ன்)

காஹே கரே ரோஜ் ரோஜ் தூ யே ஜமேலா!

அம்மீ கோ ஆயி (ன்)ஸீ, ஹன்ஸ்கே யே கஹனே லகீ

லால் மேஹனத் கே பினா ரோடீ கிஸ் கர் மே பகீ

ஜியோ மேரே  லால், ஜியோ மேரே லால்– 

துஜ்  கோ லகே மெரீ உம்ரு ஜியோ மெரே லால்

அம்மாவின் செல்லக் குழந்தை! அம்மாவுக்கு மிகவும் பிரியம்!

சிலர் சந்திரன் என்பர், சிலர் கண்ணின் மணி என்பர்!

ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான்:

அம்மா, நீ ஏன் இப்படி தினம் தினம் அடுப்பை ஊதிக்கொண்டிருக்கிறாய்.?

நாம் ரொட்டி மரத்தை வைத்துவிட்டால் என்ன!

கொஞ்சம் மாம்பழம், கொஞ்சம் ரொட்டி

இப்படிக் கலந்து சாப்பிடலாமே!

நீ ஏன் இப்படி  தினமும் அடுப்பைக் கட்டிக்கொண்டு அவதிப் படுகிறாய்?”

இதைக்கேட்டு அம்மாவுக்கு சிரிப்புத்தான் வந்தது!

சிரித்துக்கொண்டே அவள் சொன்னாள்:

என் செல்லமேஉழைக்காமல் யார் வீட்டிலப்பா சோறு வரும்?

நீ  நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்!

Song: Munna bada pyara  Film: Musafir 1957 Lyricist: Shailendra

Music: Salil Chaudhury Singer: Kishore Kumar.

இது டைரக்டர் ரிஷிகேஷ் முகர்ஜியின் முதல் படம். லட்சியக் கலைஞர். Decent and sensitiveசாதாரண மக்களைப் பற்றியே கதை. ஆபாசம் இருக்காதுகுடும்பத்துடன் பார்க்கலாம். ]

என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்துஜ் கோ லகே மெரீ உம்ருஇது வட இந்தியாவில் பெரியவர்கள் குழந்தைக்குச் சொல்லும் ஆசி வசனம்

என்ன கற்பனைகருத்து பாருங்கள்!

தாய் படும் கஷ்டத்தைச் சகிக்காத சிறு பையன்!

இதெல்லாம் நாம் சிறுவயதில் பார்த்தது தானேவிறகு அடுப்பு, கரிக் கும்மட்டி, ஊதி ஊதி யாக வேண்டும், புகையுடன் இருந்தே பழகவேண்டும்அன்று மின்சார அடுப்பா, கேஸ் அடுப்பா?

ஆனாலும் அவனுக்கு உழைப்பின் உயர்வைச் சொல்லித் தரும் தாய்!

ஷைலேந்த்ரா  சோஷலிசக் கவிஞர் என்றாலும்நீ சும்மயிரு, உனக்குச் சோறு போடவேண்டியது அரசின் கடமைஎன்று உபதேசம் செய்யவில்லை!

இன்று பாருங்கள்நமது அரசியல் கட்சிகளெல்லாம் எல்லோரையும்  எதற்கும் சர்க்காரையே நம்பி வாழும் பிச்சைக்காரர்களாக்கி விட்டன! மழையோ, புயலோஅரிசி, பருப்பெல்லாம் வீட்டிற்குப் பையில் வந்து சேர வேண்டும்!

கனவு தீர்த்த பிரச்சினைகள் !

எல்லாம் சரிதான்கனவு  பிரச்சினையைத் தீர்த்துவிடுமா

தீர்த்திருக்கிறது என்று சாஸ்திரத்தில் படிக்கிறோம். மனதால் கோயில் கட்டிய பூசலாரையும் அங்கு வந்த சிவபெருமானையும் பற்றி பெரிய புராணத்தில் படிக்கிறோம்!

ஐயா, இதெல்லாம் கட்டுக்கதை என்கிறீர்களா?

இன்று விஞ்ஞானமும் இதையே சொல்கிறதுஆம் கனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்!

கனவில் தீர்வுகண்ட பத்து விஷயங்கள் பார்க்கலாமா?

1. மேரி ஷெல்லி   Mary Shelley என்ற கவிஞருக்கு ஃப்ராங்கின்ஸ்டீன்  Frankensteinஎன்ற கதை கனவில் வந்தது!

2. ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன்  Robert Louis Stevenson என்ற நாவலசிரியருக்கு டாகடர் ஜெகில் மிஸ்டர் ஹைடு  Dr.Jekyll & Mr.Hyde என்ற கதை கனவில் வந்தது!

3. பால் மக்கார்ட்னீ   Paul McCartney என்ற பீடில்ஸ்  Beatles பாடகருக்குயெஸ்டர்டே”  Yesterday என்ற  ஹிட் பாட்டு கனவில் வந்தது.

இவர்கள் எல்லாம் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர் தானே, இதில் என்ன அதிசயம் என்பீர்களா?

கனவில் பிரச்சினைக்கு விடை கண்ட விஞ்ஞானிகளின் வரிசை இதோ-

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்Albert Einstein  ஓளியின் வேகத்தை Speed of Light கனவிலேயே கன்டறிந்தார்

 Imagination is everything.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.

–Albert Einstein

5. நீல்ஸ் போர்Niels  Bohr அணுவின் இயல்பை கனவிலேயே கண்டார்

6. எலியாஸ் ஹோவ் : Elias Howe தையல் மிஷினில் ஊசியின் கண் எங்கு இருக்கவேண்டும் என்பதை கனவில்  கண்டார்!

7. நமது கணித மேதை ராமானுஜம்: பல சூத்திரப் புதிர்களுக்கு விடை கனவிலேயே கண்டார்.

Srinivasa Ramanujam:

“While asleep I had an unusual experience. There was  red screen formed by flowing blood as it were.I was observing it. Suddenly a hand began to write on the screen. I became all attention. That hand wrote a number of results in elliptic integrals. They stuck to my mind. As soon as I woke up, I committed them to writing.”

8ஓட்டொ  லோவிOtto  Loewi நரம்புகளின் இயக்கத்தை  Nerve Impulse கனவில் கண்டறிந்தார்

9.ஆகஸ்ட் கெகூலேAugust Kekule பென்ஃஜீன் மாலிக்யூலின் அமைப்பை  structure of Benzene molecule கனவில் கண்டறிந்தார்.

10. ஃப்ரெடெரிக் பான்டிங்க்Frederic Banting இன்சுலினை Insulin கனவில்தான் கண்டுபிடித்தார்.

இப்படி இன்னும் எவ்வளவோ  சொல்லலாம்

அதனால் தான் நமது வேதாந்தத்தில் கனவைத் துச்சமாக நினைத்து ஒதுக்குவதில்லை. விழிப்பு நிலை, தூக்கம்அது கடந்த நிலை போன்று கனவு நிலைக்கும் அங்கீகாரம் தந்திருக்கிறார்கள்.

ஆனால் பகற் கனவு அல்ல! இவர்கள் அனைவருமே கடின உழைப்பாளிகள்.

கனவு காணவேணும்ஆனால் அது நமக்கு எஜமானனாகி விடக்கூடாது!

கனவுவெற்று மனக்கோட்டையல்ல!

“If you can dream – and not make dreams your master;
If you can think – and not make thoughts your aim;
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same;”

Yours is the Earth and everything that’s in it,   

 And—which is more—you’ll be a Man, my son!

என்று எழுதினார் ருட்யார்ட் கிப்லிங்க். Rudyard Kipling

 Take time to Work – It is the price of success. 

 Take time to Dream – It hitches the soul to the stars.

 கனவு வெற்றுக் கனவாக இருக்கக்கூடாது. இதை ஷேக்ஸ்பியர் அழகாகச் சொல்கிறார்:

O, who can hold a fire in his hand

by thinking of the frosty Caucasus?

Or cloy the hungry edge of appetite

by bare imagination of a feast?

Or wallow naked in December snow

by thinking of fantastic summer heat?

O,no, the apprehension of the good

gives but the greater feeling to the worse.

[Shakespeare: Richard II]

உழைப்பும் வேண்டும். அத்துடன் கற்பனை வளமும் லட்சிய நோக்கும்  Imagination வேண்டும்!

****

சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா? (Post No.7829)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7829

Date uploaded in London – – 15 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா? அது சரி, தலையெழுத்து….?

ச.நாகராஜன்

‘கிம்’ என்று தொடங்கும் சுபாஷிதங்கள் சம்ஸ்கிருதத்தில் ஏராளம் உள்ளன. இந்த வார்த்தையில் தொடங்கி, சாஸ்திரங்களைப் படித்து அறிவை அடையாதவன் வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்கும் சுபாஷிதங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

ஆனால் என்ன படித்து என்ன பிரயோஜனம், தலையில் எழுதிய எழுத்து சரியாக அல்லவா இருக்க வேண்டும் என்று ஒருவர் கூறுகிறார், அதுவும் சரிதான்.

படிக்காதவன் மதிக்கப்படுகிறான். சாஸ்திரம் அறிந்தவன் மதிக்கப்படுவதில்லை. ஏன்? தலையெழுத்து தானே?!

சுபாஷிதங்களைப் பார்ப்போம்.

கிம் குலேன ந சேத் ப்ராஞோ வித்யாஹீனாத் பசுர்வர: |

ப்ரஸஸ்யதே வித்யா லோகே ஸ்வயம் ப்ராஞோ நர: க்வசித் ||

நல்ல குலத்தில் பிறந்து கல்வியறிவு (வித்யா) இல்லாவிடில் என்ன பிரயோஜனம்? அறிவில்லாதவனை விட ஒரு விலங்கே உயர்ந்தது. அறிவு இந்த உலகத்தில் புகழப்படுகிறது. (அறிவில்லாமல்) ஸ்வயமாகவே நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதனை எங்கு காண முடியும்?

Of what avail is noble birth if there is no knowledge? An animal is better than an ignorant man. Knowledge is praised in this world. Where can one find a man who is intelligent on his own (but bereft of knowledge).  (Translation bu S. Bhaskaran Nair)

*

கிம் குலேன விசாலேன கிம் ரூபேன பவிஷ்யதி |

நானாசாஸ்த்ர குணான்வித: குரூபேண ஹி ஷோபதே ||

நல்ல குலத்தில் பிறந்து என்ன? நல்ல அழகு இருந்தால் தான் என்ன? எல்லா சாஸ்திரங்களிளும் தேர்ச்சி பெற்றவன் அழகற்றவானாக இருந்தாலும் கூட பிரகாசிக்கிறான்.

Of what avail is noble birth? Of what avail is handsomeness? A wise (man) well versed in the different sastra-s shines, indeed, even if he is plain in appearance.

(Translation by S. Bhaskaran Nair)

*

கிம் குலேன விசாலேன குணவான் பூஜ்யதே நர: |

தனுவம்சவிசுத்தோபி  நிர்குண: கிம் கரிஷ்யதி ||

இந்த சுபாஷிதத்தில் வரும் குண என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.

குண என்றால் நல்ல குணங்கள் என்று ஒரு பொருள்;  குண என்ற சொல் வில்லின் நாணையும் குறிக்கும்.

நல்ல குலத்தில் பிறந்து என்ன? நல்ல குணங்களை உடையவனே பூஜிக்கப்படுகிறான். நல்ல மூங்கிலில் வில் செய்யப்பட்டாலும் கூட, நாண் பூட்டப்படாவிட்டால் என்ன பயன்?

Of what avail is noble birth? Only the man with good qualities (guna-s) is honoured. What can a bow, though made out of high quality bamboo do, if it is not fitted with the bow-string (guna).    (Translation by K.V. Sarma)

*

கிம் குலேன விசாலேன வித்யாஹீனஸ்ய தேஹின: |

அகுலோனோபி சாஸ்த்ரஞோ தைவதைரைபி பூஜ்யதே ||

வித்யா ஹீனனாக இருக்கும் ஒருவன் நல்ல குலத்தில் பிறந்து என்ன பிரயோஜனம்? நல்ல குலத்தில் பிறக்காவிட்டாலும் கூட வித்யா வல்லவனாக இருந்தால் அவனை தேவதைகளும் பூஜிக்கும்.

Of what avail is high birth to a man who is destitute of  knowledge? One well read in the sastra-s though not of noble birth, is revered even by the gods.

*

சாஸ்திர ஞானம் உள்ளவனை – வித்யா எனப்படும் கல்வியறிவில் தேர்ந்தவனை – உலகம் எப்படிப் பாராட்டும் என்று மேலே உள்ள சுபாஷிதங்கள் விளக்குகின்றன. ஆனால் இப்படி நல்ல சாஸ்திர ஞானமுள்ள பண்டிதர்கள் பிரகாசிக்காமல் இருப்பதையும் அன்றாட வாழ்வில் பார்க்கத்தானே செய்கிறோம். அவர்கள் தலையெழுத்தும் சரியாக இருக்க வேண்டும் இல்லையா? இதை வலியுறுத்துகிறது இந்த சுபாஷிதம்:

கிம் சாஸ்த்ரைர்பஹுதாப்யஸ்தை: கிம் சாதுர்யேன கிம் தியா |

கிம் சௌர்யேணாநிவார்யேண லலாடே சேன்ன லிக்யதே ||

பல்வேறு சாஸ்திரங்களை தொடர்ந்து படித்து என்ன பயன்? நல்ல சாதுர்யம், அறிவு எல்லாம் இருந்தும் என்ன பயன்? ஒப்பற்ற வீரம் இருந்தும் என்ன பயன்? நெற்றியில் (தலையெழுத்தில்) வெற்றி எழுதப்படாவிடில் இவை அனைத்தும் இருந்தும் என்ன பயன் – ஒரு பயனுமில்லை!

What for is one’s constant study of the various discipline of knowledge and what use are one’s dexterity, intelligence and unimpeded valor, if success is not inscribed on one’s forehead (by destiny).    (Translation by S. Bhaskaran Nair)

tags — சுபாஷிதங்கள் ,சாஸ்திர ஞானம், வாழ்வு, ‘கிம்’,

***

More Folk Tales- Riches are Destructible, Learning is Indestructible (Post No.7828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7828

Date uploaded in London – 14 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Two young men named Sumugan and Sugunan, who lived in the town of Janarthanapuram in the Malayala country, set out for another country with the intention of getting property and return. Each taking hundred gold coins went to Benares in the north.

One of them, Sumugan, started business investing his hundred gold coins and made big profits. In course of time he obtained great wealth. Sugunan, in the meantime, spent all his money in learning all the subjects. Having studied all the sciences, he became very learned. But he was poor. Both of them decided to return to home town after two years. Sumugan loaded all his wealth on the back of camels and horses and asked Sugunan to accompany him.

As they were going along through a forest , robbers attacked them and took away all the money . Afterwards both of them became poor and reached their home town. Sumugan decided to start some business from the scratch.

Sugunan was waiting for an opportunity to use his studies. At the time, the  local king was looking for some learned man  for his assembly. Sugunan went and displayed his learning and got a post. Sumugan thinking about his lost property’s become sorrow full.

Moral of the story is….

Riches can be destroyed but learning can’t be destroyed.

Xxxx


Four and Three make a Difference

As four persons were traveling together toward a town , they found on the way a pot full of gold coins under a tree. One of them said because he saw it first he must be given more than others. Another said because he took it with his own hands they owe him more money. Each one was claiming more than what he deserved. Having quarrelled with each other and debating for a long time they could not find a solution. They saw a shop where there was a merchant. They decided to seek his advice. But they were all hungry. So they decided to deposit the pot of gold with the merchant and have shower and lunch first. They put all the coins in one leather bag and sealed it.

They went to the merchant and said,

Look , this is a sealed bag . Keep it please. We will be back soon. But you should give it only when four of us ask for it .

They went to the nearby tank, took bath, cooked food and ate it. They wanted to chew betel and nuts . They decided to buy it from the same merchant. So they sent one among them with the instruction to take away one coin and buy betelnuts and betel.

He went to the shop and demanded the bag. The merchant refused to give it saying all the four must ask for it . Immediately he shouted to his other three friends to give him permission. Those idiots asked the merchant,

“oh, merchant, give him the bag please”.

Because four of them asked together he gave him the bag full of gold coins. After receiving it, he went his own way. The other three got worried and came to the merchant and  asked for the bag.

He told them that he already gave it to one of them after they said yes. But they disputed it and took the merchant to town magistrate.

He asked them to put forth their arguments.

We deposited with the merchant a bag saying he should give it back only when FOUR of us asked for it.

Next the merchant said these THREE came back and asked for the bag.

Magistrate said the merchant did the right thing and dismissed the case.

Numbers are important in a case.

Xxx subham xxxx

அணுகுண்டுக்கு சக்தி தரும்; மரகதத்துக்கு ஒளியூட்டும் பெரில்லியம் (Post No.7827)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7827

Date uploaded in London – 14 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இதுவரை  அமெரிஷியம், ஆர்செனிக்,பேரியம் ,பிஸ்மத், காட்மியம், குரோமியம், கோபால்ட், க்யூரியம் , ப்ளோரின், அயொடின், லித்தியம், மக்னீஷியம், பொட்டாசியம், ரேடியம், செலீனியம் , தாலியம் , தோரியம், யுரேனியம் , துத்தநாகம், பாதரசம், மாலிப்டினம், நிக்கல் ஆகிய மூலகங்கள் பற்றிய சுவைமிகு செய்திகளை எடுத்துரைத்தேன். 

இன்று பெரில்லியம் (BERYLLIUM)  என்னும் மூலகம்  பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்

பிரபஞ்சம்  தோன்றியது எப்படி?

1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் வெடிப்பு (Big Bang) ஏற்பட்டது அதிலிருந்து உருவானதுதான் பல நூறு கோடி நட்சத்திர மண்டலங்கள். அதில் ஒன்றான சூரிய மண்டலம், அதற்குள் அடங்கிய பூமி முதலான நவக்  கிரஹங்கள்— என்பது விஞ்ஞான புஸ்தகத்தில் உள்ள தகவல்.

‘பிக் பேங்’ (BIG BANG) எனப்படும் மாபெரும் வெடிப்பு ஏற்றப்பட்டபோது  தோன்றிய மூலகங்கள் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் மூன்றுதான். அதற்கு அடுத்தபடியாகத் தோன்றிய  மூலகங்களில் அதிகம் காணப்படுவது  பெரில்லியம் . அதாவது நமது இன்றைய கதையின் கதாநாயகன்!

இதனால் பெரில்லியம்  ஒரு விண்வெளி மூலகமாகக் (COSMIC ELEMENT) கருதப்படுகிறது. சூப்பர்நோவா நட்சத்திரங்கள் வெடிக்கும்போது பெரில்லியம்  தோன்றியதாக முதலில் கருதினர். ஆனால் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகம் பெரில்லியமிருந்தவுடன் வேறு வழிகளிலும் இது வருமோ என்று விஞ்ஞானிகள் வியப்புற்றனர்.

இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?

பெரில்லியத்தைப் பிரபலப் பாடுத்தியது ஐசக் அஸிமோவ் ( ISSAC ASIMOV IN ‘SUCKER BAIT’, PART OF  ‘THE MARTIAN WAY’ , 1950 ) எழுதிய நாவல் ஆகும். ஆகும். அவர் விஞ்ஞான  புனைக்கதை மன்னன். அவர் எழுதிய ஒரு கதையில் மனிதர்கள் விண்வெளிப் பயணம் செய்து ஒரு வளமான கிரஹத்தைக் கண்டுபிடிக்கின்றனர் ; சுகமாக வாழ்கின்றனர். ஆனால் மனிதர்கள் மர்ம நோய் கண்டு, திடீர் திடீரென இறந்து போகிறார்கள். கடைசியில் ஆராய்ந்து பார்த்ததில் அங்குள்ள காற்று மண்டலத்தில்  பெரில்லியம்  அதிகம் என்பதும் அதை சுவாசித்தால் நோய் வரும் என்றும் கண்டுபிடிக்கின்றனர். இதை அவர் 1950-ம் ஆண்டு எழுதினார். 1992-ல் உண்மையையிலேயே பெரில்லியம்  அதிகமுள்ள ஆறு நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அப்படியானால் பெரில்லியம் விஷ உலோகமா?

ஆமாம். இதன் புகையையோ தூசியையோ  சுவாசித்தால் நுரையீரல் நோய்களும், மூச்சுத்திணறலும்  வரும்.  இந்த நோய்க்கு ‘பெரில்லியோஸ்’ என்று பெயர். மரணமோ, நிரந்தர சுவாசப் பிரச்ச னையையோ உண்டாக்கலாம்.

நாம் வாழும் உலகத்தில், சிலர் வேறு பிரபல மனிதர் போலவும், தலைவர் போலவும் நடித்து (Impersonation)  — ஆள் மாறாட்டம்  செய்து – மக்களை ஏமாற்றுவதை பத்திரிகைகளில் படிக்கிறோம். மூலக அட்டவணையில் மக்னீஷியம் என்னும் உலோகமும் பெரில்லியமும் பங்காளிகள். இது மக்னீஷியம் போலவே நடிப்பதால் நமது உடல் இதை அதுதான் என்று நம்பி எடுத்துக் கொண்டு திணறுகிறதாம். இரசாயன உலகில்தான் எவ்வளவு விந்தைகளள்  பாருங்கள்!  அது மட்டுமல்ல. பெரில்லியம்  மூலம் ஏற்படும் விஷம் , ரத்தம் மூலம் எலும்புகளுக்குச் சென்று அங்கு குடித்தனமும் செய்யத் துவங்குவதால் நமக்கு நிரந்தரப்  பிரச்ச னை ஏற்படுகிறது.

அதற்காக பெரில்லியம் மீது கோபம் கொள்ளாதீர்கள். ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது

மரகதமும் பச்சசைக் கல்லும் பெரில்லியமே!

ஒரே அளவு வைரம், மரகதம் ஆகிய இரண்டையும் கையில் எடுத்தால் மரகதத்துக்குதான் விலை அதிகம். நவரத்தினங்களில் பச்சை வண்ணத்தில் ஜொலிக்கும் மரகதத்திலும் அதைவிட விலை குறைந்த பெரில் என்னும் பச்சசைக் கல்லிலும் பெரில்லியம் இருப்பதே அந்த வண்ணத்தை அளிக்கிறது. இது பற்றி இரண்டு சுவையான விஷயங்களைச் சொல்கிறேன்.

இதைச் சுவைத்துப் பார்த்தால் இனிப்பாக இருக்குமாம். ஆகையால் முதலில் இதற்கு ‘கிளவ்ஸீனியம் ’  glaucinium  என்று பெயர் வைத்தனர். கிரேக்க மொழியில் கிளைகிஸ் glykys என்றால் இனிப்பு. விஞ் ஞான விஷயங்களுக்கு கிரேக்க மொழியில் பெயர் சூட்டுவது வழக்கம். ஏனெனில், உலகமே கிரேக்க நாடு மூலம்தான்  நாகரீகம்  அடைந்ததாக அரை வேக்காடுகள் நிறைந்த ஐரோப்பா, நம்பியது  பின்னர் பச்சை வண்ணத்தைப் பார்த்து பெரில் beryl  என்று நாமகரணம் செய்தனர்.

இரண்டவது விஷயம் என்னவென்றால் ஆதிகால எகிப்தியர்கள், யூதர்கள் ரோமானியர்கள் ஆகியோர் இந்த ரத்தினத்தைப் பயன்படுத்தினர். பிளினி (Pliny) என்ற ரோமானிய எழுத்தர் பெரில் , மரகதம் ஆகியன ஒரே வகைதான் என்று அறிந்து செங்கடல் அருகில் பெரில் கிடைப்பதாகவும், மரகதம் இந்தியாவிலிருந்து கிடைப்பதாகவும்  எழுதி வைத்து இருக்கிறார்.

ஐரோப்பாவில் CELTS கெல்ட் /செல்ட் இன  மக்களும் இதைப் பயன்படுத்தினர் ரத்தினக்  கல்லில் உள்ள ஆக்சிஜன் ஐசடோப்பை ஆராய்ந்தால் அது எங்கிருந்து வந்தது என்பது தெரிந்துவிடும். இப்படி ஆராய்ந்ததில் ஐரோப்பாவுக்கு வந்த பச்சைக் கற்கள் ஆஸ்திரியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்தது தெரிகிறது. பிளினி (Pliny)  இந்திய மரகதம் பற்றிச் சொன்னது உண்மையே. ஏனெனில் 1947க்கு முன்னர்  பாகிஸ்தான் என்ற நாடே கிடையாது. அது எல்லாம் இந்தியாவின் ஒரு பகுதியே.

கொலம்பியா

ஹைதராபாத் நிஜாம் பொக்கிஷத்த்தில் இருந்த மரகத நகைகளை ஆராய்ந்ததில் அவை கொலம்பியா (COLOMBIA IN SOUTH AMERICA)  நாட்டில் இருந்து வந்தது தெரிகிறது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில்  மரகதக் கற்கள் கிடைப்பதால், மொகலாயர் ஆடசிக் காலத்தில் இவை ஸ்பானியக் கப்பல்களில் பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு வந்து, அவர்கள் நமக்கு விற்று இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது .

 அணுகுண்டுப் போர் , பொருளாதார பயன்பாடுகள்

நியூட்ரான் என்ற அணுத்துகளை நமக்கு முதலில் காட்டிக்கொடுத்தது பெரில் லியம்தான் . 1932ல் ஜேம்ஸ் சாட் விக் என்பவர் பெரில் லியம் சாம்பிள் மீது ரேடியத்திருந்து ஆல்பா alpha rays கதிர்களை   பாய்சசினார். அதிலிருந்து வந்ததே நியூட்ரான்.  இதுவரை அறிந்திராத அந்த sub atomic particles சப் அட்டாமிக் பார்ட்டிக்கிளுக்கு  நியூட்ரான் neutron என்று பெயர் வைத்தனர்.

பெரில்லியத்துக்கு ஒரு அபூர்வ குணம் உண்டு நியூட்ரான்களை NEUTRON இது ஏற்காது . இதனால் இதை அணு ஆயுதங்களிலும் அணுசக்தித்  தொழில்களிலும் பயன்படுத்துகின்றனர் அணுகுண்டுகளில் யுரேனியத்திலிருந்து  நியூட்ரான் அலைகளை வீசி சக்தியை உண்டாக்குவர் அதைச் சுற்றி பெரில்லியம் கவசம் இருக்கும். அது அணு ஆயுதத்தின் சக்தியை ஓரிடத்தில் குவியச் செய்ய உதவும்.

பெரில்லியம் கிடைக்கும் இடங்கள்

பிரேசில், அமெரிக்கா , அர்ஜெண்டினா , மடகாஸ்கர், ரஷ்யா, இந்தியா

அமெரிக்காவில்  மைனே Maine என்னுமிடத்தில் ஐந்து மீட்டர் நீளம் – 20 டன் எடை கொண்ட பெரிலியம் படிகம் கிடைத்தது.

பெரில் , பெட்ராண்டைட் (BERTRANDITE )  என்ற இரண்டு தாதுக்களாக பெரில்லியம் கிடைக்கிறது

தாமிரத்தையும் நிக்கலையும் பெரிலியம் கலந்து உபயோகிக்கையில் மின் சாரம் கடத்தும் சக்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக மின்சார கருவிகளில் இதன் உபயோகம் அதிகம்.

எக்ஸ் ரே கதிர்களை பெரில்லியம்  உறிஞ்ச்சுவதால் எக்ஸ்ரே குழாய்களைச் சுற்றி இதை வைக்கின்றனர்.

பெரில்லியத்தை விமானம் கட்டும் தொழிலில் பயன்படுத்தும் யோசனையும், ராக்கெட்டின் வெடி மருந்தாக  உபயோகிக்கும் திட்டமும் கைவிடப்பட்டன.

பெரில்  (BERYL)  , க்ரைஸோ பெரில் (CHRYSO BERYL)  ஆகிய இரண்டுமே அலுமினியம்  சிலிகேட் (ALUMINIUM SILICATE) என்னும் இரசாயன உப்பு ஆகும். இவை ரத்தினைக் கல்லின் தரம் உடைத்தாயின் மரகதம் EMERALD  என்றும் அலெக்ஸாண்ட்ராய்ட் ALEXANDRITE / CAT’S EYE என்றும் அழைக்கப்படும் . இதில் இரண்டு சதவிகித குரோமியம் இருந்தால் இப்படி பச்சை வண்ணம் கிடைக்கும். குறைவான குரோமியம் இருந்தால்  ஆக்வா மரின் (AQUA MARINE)  எனும் நீலக்  கல்லாகும் .

இரசாயன குணங்கள்

அடையாளக் குறியீடு SYMBOL  – Be  

அணு எண் ATOMIC NUMBER 4

உ ருகு நிலை MELTING POINT  1278  டிகிரி ஸி DEGREE C

கொதி நிலை BOILING OINT – 2970 டிகிரி ஸி

பெரில்லியம் ஒரு வெள்ளி போன்ற நிறம் உடைய உலோகம் SILVERY, LUSTROUS, SOFT METAL OF ALKALINE GROUP .  கார குணம் உடைய உலோகங்களின் அணியில் இது இடம்பெறும். நாம் தோண்டி எடுக்கும் பெரில்லியத்துக்கு ஒரு ஐசடோப் ISOTOPE உண்டு. ஆனால் கதிரியக்கம் இராது

பூமியின் காற்று மண்டலத்தின் மேல் அடுக்கில் பெரில்லியம் பெ – 10 என்ற ஐசடோப் காணப்படுகிறது. இதில் கதிரியக்கம் இருக்கிறது. அதன் அரை வாழ்வு (HALF LIFE)  15 லட்சம் ஆண்டுகள். இதை காஸ்மிக் கிரணங்கள்  (COSMIC RAYS)  உண்டாக்குகின்றன

நியூட்ரான் பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்த பெரில்லியத்துக்கு ஒரு ஸலாம் ; மரகத்தைத்த நமக்களித்த பெரில்லியத்துக்கு ஒரு ஸல்யூட் .

tags – பெரில்லியம், மரகதம்,  பச்சைக் கல், பெரில், அணுகுண்டு, நியூட்ரான்

–SUBHAM–

ஹிந்தி படப் பாடல்கள் – 6 – உணவும் வீடும்! (Post no.7826)

Roti

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7826

Date uploaded in London – – 14 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 6 – உணவும் வீடும்!

R.Nanjappa

உணவும் வீடும்!

ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தேவை? 

chapati

உணவு, உடை, இருப்பிடம். இவற்றை அத்தியாவசியத் தேவைகள் என்போம். Basic or essential needs. ஆனால் நம் பொருளாதார “அறிஞர்கள்இத்துடன் திருப்தி அடைவதில்லை. அவர்கள் தேவை–  Need பற்றிப் பேசுவதில்லை. “விருப்பம்”  Want பற்றியே பேசுகிறார்கள்விருப்பம் திருப்திப் படுத்த முடியாதது, அவை திரும்பத் திரும்ப வரும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று பாடம் எடுப்பார்கள்ஒரு மனிதனோ, சமுதாயமோ எளிதில் திருப்தியடைந்தால் அதை Primitive என்பார்கள். பொருளாதார வளர்ச்சி என்பது இன்றைய நிலையில் விருப்பங்களின் கட்டற்ற தன்மையே!

மனிதனுக்கு எத்தனை நிலம் தேவை” (How Much Land Does a Man Need)  என்று லியோ டால்ஸ்டாய் 1886ல் ஒரு கதை எழுதினார். இதில் கடைசியில் ஒரு மனிதனுக்கு இறுதியில் தேவைப்படுவது 6 அடி மண் தான்அவன் சமாதிக்கு என்று காட்டினார். ஆனால் இதுகூட சிலருக்குக் கிடைப்பதில்லை!

பஹதூர் ஷா ஃஜஃபர் இந்திய முகலாயர்களின் கடைசி அரசர். 1857 முதல் இந்திய சுதந்திரப்போருக்கு ஆதரவாக இருந்தார் என்று சொல்லி இவரை நாடுகடத்தி பர்மாவில் ரங்கூனில் சிறைவைத்தனர்

ஆங்கிலேயர்.  இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் கொள்ள விடவில்லை. இந்த பஹதூர் ஷா “ஃஜஃபர்” ஒரு கவிஞர். சிறையின் சுவரில் கரித்துண்டு கொண்டு ஒரு கவிதை எழுதினார்.

Bahadur Shah

कितना है बदनसीबज़फ़रदफ़्न के लिए 
दो गज़ ज़मीन भी मिली कूयार [3] में   

கித்னாஹை பத்னஸீப்ஜஃபர்தஃப்ன் கே லியே

தோ கஜ் ஃஜமீன் பீ மிலீ குயேயார் மே

 இந்த ஃஜஃபர் தான் எவ்வளவு  துரதிருஷ்டம் பிடித்தவன்

அவனை அடக்கம் செய்ய அவனுக்கு இஷ்டமான நாட்டில்

இரண்டு கஜ இடம் கூடக் கிடைக்கவில்லையே! 

இவரை ரங்கூனிலேயே 1862ல் புதைத்துவிட்டனர். இவருடைய சமாதி இருந்த இடம் கூடத் தெரியாமலிருந்தது. 1891ல் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அரசனாக இருந்தாலும் என்ன நடக்கும் எது கிடைக்கும் எனச் சொல்லமுடியாது!

அன்ன விசாரம்அதுவே விசாரம்!

ஓரு சாண் வயிறே இல்லாட்டா

உலகத்தில் ஏது கலாட்டா

என்று ஒரு பழைய தமிழ்படப் பாட்டு உண்டு.

வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் தேடுவதிலேயே சராசரி மனிதனின் காலத்தின் பெரும்பகுதி செலவாகிறதுஎன்ன உணவு வேண்டும்? இதுவே பலருக்கும் தெரிவதில்லை!

Under The Greenwood Tree

Who doth ambition shun

And loves to live i’ the sun,

Seeking the food he eats,

And pleased with what he gets,

Come hither, come hither, come hither:

            Here shall he see

            No enemy

But winter and rough weather.

[Shakespeare; As You Like It.]

இது ஷேக்ஸ்பியர்  கவிதை. 

William Shakespeare

பேராசையை விட்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்து, தனக்கு இயல்பான உணவைத் தேடி, கிடைப்பதில் திருப்திப்பட்டு இருப்பவனுக்கு எங்கும் இயற்கை உத்பாதங்களைத் தவிற பிற எதிரிகளே இருக்கமாட்டார்கள்  (இன்னல்களே இருக்காது) என்கிறார். ஆனாலும் இது எல்லோருக்கும் சாத்தியமாக அமைவதில்லையே!

படியளக்கும் பரமன்

दाने दाने पे लिखा है खाने वाले का नाम
लेने वाले करोड़ देने वाला एक राम  

தானே தானே பே லிக்காஹை கானே வாலே கா நாம்

லேனே வாலே கரோட் தேனே வாலா ஏக் ராம்

தானியத்தின் ஒவ்வொரு மணியிலும் அதைச் சாப்பிடுபவனின் பெயர் எழுதப் பட்டிருக்கிறது.

சாப்பிடுபவர்கள் கோடிக்கணக்கில் என்றாலும் படி அளப்பவன் ஆண்டவன் ஒருவன் தானே!

कोई कितना अमीर हो या कितना गरीब
खाये उतना ही जीतना है उस का नसीब
आगे मालिक के चलता नहीं कोई दाम  

கோயீ கித்னா அமீர் ஹோ யா கித்னா கரீப்

காயே உத்னா ஹீ ஜித்னா ஹை உஸ் கா நஸீப்

ஆகே மாலிக் கே சல்தா நஹீ கோயீ தாம்

ஒருவன் எவ்வளவுதான் பணக்காரனாக இருக்கட்டுமே, ஏழையாகத்தான் இருக்கட்டுமே– 

அவன் தலையில் எந்த அளவு எழுதியிருக்கிறதோ அத்தனைதான் சாப்பிடமுடியம்!

அந்த ஆண்டவனை எந்த லஞ்சம் கொடுத்தும் வசப்படுத்த முடியாது!

तेरी किसमत की लिखी हुई है किताब
तेरे एक एक दिन का है उस में हिसाब  

तेरे बस में ना सुबह है ना तेरी शाम  

தேரீ கிஸ்மத் கீ லிக்கீ ஹுயீ ஹை கிதாப்

தேரே ஏக் ஏக் தின் கா ஹை ச் மே ஹிஸாப்

தேரே பஸ் மே நா சுபஹ் ஹை நா தேரீ ஷாம்

உன்னுடைய தலைவிதியானது எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறதே

அதிலே உன்னுடைய ஒவ்வொரு நாளின் கணக்கும் இருக்கிறது!

உன்னுடைய காலையோ மாலையோ உன் வசத்தில் இல்லை!

कभी गर्मी की मौज कभी बारिश का रंग
ऐसे चक्कर को देख सारी दुनिया है दांग
चाँद सूरज ज़मीन सब उसके गुलाम  

கபீ கர்மீ கீ மௌஜ் கபீ பாரிஷ்  கா ரங்க்

ஐஸே சக்கர் கோ தேக் சாரி துனியா ஹை தாங்க்

சாந்த் ஸூரஜ்  ஃஜமீன்  ஸப் உஸ்கே குலாம்

மகிழ்ச்சி  நிறைந்த வெப்பமான நாட்கள் , மழைக்காலத்தின் வண்ணங்கள்

இப்படி வரும் காலச் சக்கரத்தைக் கண்டு  பூரா உலகமும் கலங்கி இருக்கிறது!

சந்திரன், சூர்யன், இந்த பூமிஅனைத்தும் அந்த ஆண்டவனுக்கு அடிமைப் பட்டது தானே!

தானே தானே பே லிக்கா ஹை கானே வாலே கா நாம்

கானே வாலே கரோட் தேனே வாலா ஏக் ராம்

Song: Daane daane pe likha hai Film: Baarish 1957 Lyricist: Rajinder Krishan

Music: C. Ramchandra Singer: C.Ramchandra. 

எத்தனை சீரிய கருத்துக்கள்! உடனே நமக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வரும்:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!

உணவு கிடைப்பது, அதை புசித்து அனுபவிப்பதுஇது தெய்வ அருளால் நிகழ்வது. அதனால்தான் நமது வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்தில் பகவானை 300 நாமங்களால் துதித்தபின். “வாஜஸ்ச மேஎன்று உணவைப் பிரார்த்திக்கிறோம். ஏசு நாதர் சொல்லிக்கொடுத்த பிரார்த்தனையிலும்  “இன்று தேவையான உணவைத் தாரும்என்று பிரார்த்திக்கச் சொன்னார். [ Give us this day our daily bread” – The Lord’s Prayer.]

 உணவு அருந்தும் போதும் தெய்வ நினைவு வேண்டும்.

அருணகிரி நாதர் சொல்கிறார்:

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
 
தரு பிடி காவல் சண்முகவா எனச் சாற்றி நித்தம்
 
இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இருவினையோம் இறந்தால்
 
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே.  

ஒருபிடி வாயில் இடுவதற்கு முன்பும் அந்தப் படியளப்பவனை நினைக்கவேண்டும்.

வீட்டைக் கட்டித் / தேடிப் பார்

உணவின்  நிலை இவ்வாறாக , இருக்க இடம் பற்றி என்ன செய்வது?

இது இன்னும் பெரிய பாடாக இருக்கிறது. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஆண்டவன் ஒரு வழி செய்திருக்கிறான். மனிதன் மட்டும் கெட்டுக் கிடக்கிறான்

காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பராசக்தியை வேண்டினார்அது லட்சியக் கனவு. பாவம், பாரதியாருக்கே அது அமையவில்லை!

இங்கே வசதி படைத்தவர்கள் எல்லா இடங்களையும் வளைத்துப் போட்டு விட்டார்கள். நாம் எங்கிருந்தால் என்ன? வானமே கூரை, பூமியே பாய் என்றிருந்தால் நமக்கு யாதும் ஊர் தானே! உலகமே நமது தானே! பாடுகிறார் கவிஞர் ஸாஹிர் லுதியான்வி:

चीन अरब हमारा हिन्दोस्ताँ हमारा
रहने को घर नहीं है सारा जहाँ हमारा

சீன் அரப் ஹமாரா ஹிந்துஸ்தான் ஹமாரா

ரஹனே கோ கர் நஹீ ஹை  ஸாரா ஜஹா(ன்) ஹமாரா

சீனாவும் அரேபியாவும் நமதாக இருக்கலாம், ஹிந்துஸ்தானமும் நமதாக இருக்கலாம்

நமக்கோ இருக்க வீடில்லைஇந்த உலகம் முழுவதுமே நமதுதான்!

खोली भी छिन गयी है बैंचें भी छिन गयी हैं
सड़कों पे घूमता है  अब कारवां हमारा

கோலீ பி சின் கயீ ஹைபெஞ்சே பீ சின் கயீ ஹை

சட்கோ மே கூம்தா ஹை அப் கார்வா() ஹமாரா

எங்கள் சேரிப்பகுதியிலிருந்து தள்ளப்பட்டோம்இங்கிருந்த பெஞ்சைக்கூட எடுத்துக்கொண்டு விட்டார்கள்

இப்போது எங்கள் கூட்டம் வீதியில் திரிகிறது!


जेबें हैं अपनी खाली क्यों देता वर्ना गाली
वो संतरी हमारा वो पासबां हमारा 

ஜேபே ஹை அப்னீ காலி க்யோ தேதா வர்னா காலீ

வோ ஸந்தரீ ஹமாரா வோ பாஸ்பா ஹமாரா

எங்கள் பாக்கெட்டெல்லாம் காலிஇல்லையெனில் இங்கிருக்கும்  எங்கள் சொந்த காவல்காரன் எங்களை ஏன் வெளியே தள்ளூவான்?


जितनी भी बिल्डिंगें थीं सेठों ने बाँट ली हैं
फुटपाथ बम्बई के हैं आशियाँ हमारा

ஜித்னீ பீ பில்டிங்கே தீ ஸேட்டோனே பா(ன்)ட் லீ ஹை

ஃபுட்பாத் பம்பயீ கா  ஹை ஆஷியா(ன்) ஹமாரா
இங்கிருந்த பில்டிங்க் அனைத்தையும் வசதி உள்ளவர்கள்  வாங்கி வளைத்துப்

போட்டுக்கொண்டார்கள்.

இப்போது பம்பாயின் நடைபாதைகளே எங்களுக்கு இருப்பிடமாகிவிட்டது!


सोने को हम क़लन्दर आते हैं बोरी बन्दर
हर एक कुली यहाँ का है राज़दाँ हमारा

ஸோனே கோ ஹம் கலந்தர் ஆதே ஹை போரி பந்தர்

ஹர ஏக் குலீ யஹா(ன்) கா ஹை ராஃஜ்தா ஹமாரா

ஊர்சுற்றும் பரதேசிகள் போல் நாங்கள் தூங்குவதற்கு போரிபந்தர் (ஸ்டேஷனுக்கு) வருகிறோம்.

இங்கிருக்கும் ஒவ்வொரு கூலியும் எமக்கு அத்யந்தம்.

तालीम है अधूरी मिलती नहीं मजूरी
मालूम क्या किसी कोदर्दे निहाँ हमारा

தாலீம் ஹை அதூரி மில்தா நஹீ மஜூரி

மாலூம் க்யா கிஸீ கா தர்தே நிஹா(ன்) ஹமாரா

படிப்பு பாதியில் நின்றுவிட்டது; வேலை கிடைப்பதில்லை

எங்கள் மனதில் ஆழ்ந்து இருக்கும் துயரை யார் புரிந்துகொள்வார்கள்?

पतला है हाल अपना  लेकिन लहू है गाढ़ा
फौलाद से बना है हर नौजवां हमारा

பத்லா ஹை ஹால் அப்னா லேகின் லஹீ ஹை காடா

ஃபௌலாத் ஸே பனா ஹை ஹர் நௌஜவா(ன்) ஹமாரா

எங்கள் உடல் நலிந்துதான் இருக்கிறது; ஆனால் எங்கள்  ரத்தம்  கெட்டியானது!

இங்கிருக்கும் ஒவ்வொரு இளைஞன் உடலும் பட்டறையில்  உருவாக்கப்பட்டது!

मिल जुल के इस वतन को ऐसा सजायेंगे हम
हैरत से मुंह तकेगा सारा जहां हमारा

மில்ஜுல் கே ஹம் இஸ் வதன் கோ ஐஸா சஜாயேங்கே ஹம்

ஹைரத் ஸே முஹ் தகேகா ஸாரா ஜஹா() ஹமாரா

நாங்கள் அனைவரும் இணைந்து இந்த தேசத்தை உன்னதமாக்குவோம்

இதை இந்த உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும்!

Song: Cheen O arab hamara Film: Phir Shubah  Hogi  1958 Lyricist: Sahir Ludhianvi

MUsic: Khayyam  Singer: Mukesh Stunning song. Induces reflection

இந்தப் படத்தை நேருவின் சோஷலிச அரசு தடை செய்ய நினைத்தது.]

இது 1958ல் எழுதப்பட்ட பாடல். இப்போது நிலை  நல்லவிதமாக மாறியிருக்கிறதா?

அப்போது பம்பாயில் மட்டும் இருந்த நிலை இன்று ஒவ்வொரு ஊரிலும்வீட்டு நிலங்கள் எல்லாம் பில்டர்கள் கைவசம் வந்துவிட்டது! அரசினரும் இதற்கு உடந்தை! விலை ஆகாயத்தைத் தொடுகிறது!

அன்று படிப்பைப் பாதியில் விட்டவர்களுக்கு வேலை கிடைகவில்லை; இன்று படித்து முடித்தவர்களூக்கும் வேலையில்லை. மேலும் பட்டதாரிகள் கூட எந்த வேலைக்கும் தகுதியானவர்களாக  இல்லை. படிப்பு வேலைக்கான தகுதியைத் தருவதில்லை

According to surveys, more than 50% of the graduates, including engineering graduates, are considered “unemployable”.

சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் ஆகியும் அனைவருக்கும் வீட்டுவசதி கூட செய்துகொடுக்க இயலாத அரசுகள் அரசுகளா?

கீதையில் பகவான் சொல்கிறார்:

அநிகேத: ஸ்திரமதி: பக்திமான் மே ப்ரியோ நர:  12.19

வீடில்லாமல். ஸ்திர புத்தியுடன் உள்ள பக்தன் எனக்குப் பிரியமானவன்!

நம் அரசு நம்மையெல்லாம் வீடில்லாமல் செய்து பகவானுக்கு பிரியமானவர்களாக்குகிறது போலும்!

அல்லது யாதும் ஊரே என எண்ணவைக்கிறதோ!

மேற்கத்தியமுறை பொருளாதாரம் பரவிய இடங்களிலெல்லாம்அது முதலாளித்துவ மானாலும், கம்யூனிசசோஷலிச மானாலும்இப்படி மக்கள் அவதிக்குள்ளாயினர். நிலங்கள் எப்படி மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டன் என்பதை கோல்ட்ஸ்மித் எழுதுகிறார்:

The man of wealth and pride

Takes up a space that many poor supplied;

Space for his lake, his park’s extended bounds,

Space for his horses, equipage, and hounds:

The robe that wraps his limbs in silken sloth,

Has robbed the neighbouring fields of half their growth;

His seat, where solitary sports are seen,

Indignant spurns the cottage from the green:

Around the world each needful product flies,

For all the luxuries the world supplies.

While thus the land adorned for pleasure, all

In barren splendour feebly waits the fall.

[Oliver Goldsmith: The Deserted Village, 1770]

 200 ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் நடந்த கோரம் இன்று சுதந்திர இந்தியாவில் நடக்கிறது! Those who fail to learn from history are condemned to repeat it என்றார்  George Santayana. இதுதான் நடக்கிறது!

 கற்பனையில் வீடு!

நிஜ உலகில் வீடு கிடைக்காதவர்கள் என்ன செய்யவேண்டும்? கல்கி எழுதிய மாதிரி கற்பனை ஓடத்தில் ஏற வேண்டியதுதான்! இதையும் செய்கிறார் கவிஞர் ஷைலேந்த்ரா!

छोटा सा घर होगा बादलों की छाँव में आशा दीवानी मन में बंसुरी बजाये हम ही हम चमकेंगे तारो के उस गाँव में आँखों की रोशनी हर दम ये समझाये

சோடா ஸா கர் ஹோகா பாதலோ(ன்) கீ சாவ்(ன்) மே

ஆஷா தீவானீ மன் மே பன்ஸுரீ பஜாய்

ஹம் ஹீ ஹம் சம்கேங்கே தாரோ கே உஸ் காவ்(ன்) மே

ஆங்கோ கீ ரோஷ்னீ ஹர்தம் யே ஸம் ஜாய்

மேகங்களின் நிழலிலே நமக்கென்று ஒரு சிறிய வீடு இருக்கும்!

நம்பிக்கை அப்படித்தான் இந்த பித்து மனதில் பன்ஸூரி வாசிக்கிறது!

அந்த நட்சத்திர கிராமத்தில் நாமும் மின்னுவோம்

கண்ணின் ஒளி இதை நமக்கு உணர்த்துகிறது!

[ அந்த வீட்டில் என்ன நடக்கிறது? இதைச் சொல்கிறார் கவிஞர்]

चाँदी की कुर्सी पे बैठे मेरी छोटी बहना सोने के सिंहासन पे बैठे मेरी प्यारी माँ मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मी जी के पाँव में मेरा क्या मैं पड़ा रहूँगा अम्मी जी के पाँव में

சாந்தீ கீ குர்ஸீ பே பைடே மேரீ சோடீ பஹனா

ஸோனே கே ஸிம் ஹாஸன் பே பைடேமேரீ ப்யாரீ மா

மேரா க்யா மை படா ரஹூங்கா அம்மீ ஜீ கே பாவ் மே

என் தங்கைஅவள் வெள்ளி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள்

என் அருமை அம்மாவோ தங்கச் சிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்கிறார்

எனக்கென்னநான் அம்மாவின் காலடியில் விழுந்து கிடப்பேன்!

मेरी छोटी बहना नाज़ों की पाली शहज़ादी जितनी भी जळी हो मैं कर दूँगा इसकी शादी अच्छा है ये बला हमारी जाये दूजे गाँव में अच्छा है ये बला हमारी जाये दूजे गाँव में

மேரீ சோடீ பஹனா நாஜோ கீ பாலீ ஷஹ்ஜாதீ

ஜித்னீ பீ ஜல்தீ ஹோ மை கர் தூங்கி உஸ்கீ ஷாதீ

அச்சா ஹை யே பலா ஹமாரீ ஜாயே தூஜே காவ்(ன்) மே

என் தங்கைஅவள் ராஜகுமாரிபோல் அருமையாக வ்ளர்ந்தாள்

எவ்வளவு விரைவில் முடியுமோ அவளுக்கு மணம் முடித்து வைப்பேன்

நம் வீட்டு செல்லப்பெண் வேறொரு கிராமத்திற்குப் போவது நல்லது (புண்ணியம்)தானே

[ தங்கை மணமாகிப் போனதும் வீடு வெறிச்சோடிப்போகிறது. பையனுக்கு மணமாகி வீட்டிற்கு மருமகள் வரவேண்டுமே? கவிஞர் அடுத்து இதைச் சொல்கிறார்]

(different tune -) कहेगी माँ दुल्हन ला बेटा घर सूना सूना है मन में झूम कहूँगा मैं माँ इतनी जळी क्या है? गली गली में तेरे राज्दुलारे की चर्चा है आखिर कोई तो आयेगा इन नैनों की गाँव में आखिर कोई तो आयेगा इन नैनों की गाँव में

கஹேகீ மா துல் ஹன்லா பேடா கர் ஸூனா ஸூனா ஹை

மன் மே ஜூம் கஹூங்கா மை மா இத்னீ ஜல்தீ க்யா ஹை?

ஆகிர் கோயீ தோ ஆயேகா இன் நைனோ(ன்) கீ காவ்(ன்) மே

அம்மா சொல்லுவாள்: என் செல்லமே, வீடு வெறிச்சென்று இருக்கிறதே!

( விரைவில் மணம் செய்துகொள்)

மனதில் மகிழ்ச்சி பொங்க நான் சொல்வேன்: அம்மா, ஏன் இவ்வளவு அவசரம்?

ஆனால் கடைசியில் கண்ணின் மணியாக யாரோ வந்துதானே ஆகவேண்டும்!

என்ன கற்பனை பாருங்கள்! வீடு என்பது இன்றைய பில்டர்கள் காட்டுவதுபோல் நான்கு சுவர்களும் , ஃபர்னிசரும் பள பளக்கும் பாத்ரூம் ஃபிட்டிங்குகளும் அல்ல! எவ்வளவு இயற்கையான ஒரு நடுத்தரக் குடும்பத்தையும் அதன் ஆசை-லட்சியங்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். எல்லாம் உணர்ச்சி பொங்கும் எளிய சொற்கள்,

Song: Chhota sa ghar hoga Film: Naukri 1954 Lyricist: Shailendra

Music : Salil Chaudhury Singer: Happy version: Kishore KUmar { Sad version: Hemant Kumar] Sensitive movie, nice music.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு. கிஷோர் குமார் முறைப்படி சங்கீதம் பயிlலவில்லை.. அதனால் அவருக்கு சான்ஸ் தர ஸலில் சவுத்ரிக்கும் டைரக்டர் பிமல் ராய்க்கும் விருப்பமில்லை. இந்தப் படத்தில் கிஷோர்குமாரே நடித்தார் .ஆனாலும் அவரைப் பாடவைக்க ஸலில் சவுத்ரி இசையவில்லை. கிஷோர் யார்யாரிடமோ கெஞ்சிக் கூத்தாடி, கடைசியில் டைரக்டர் பிமல் ராயும் சலில் சவுத்ரியும் கிஷோரைப் பாடவைக்க அரை மனதுடன் இசைந்தனர்.இந்தப் பாட்டு கிடைத்தது. பெரிய ஹிட் ஆயிற்று. இது கிஷோரின் Iconic பாடல்களில் ஒன்றாக ஆனது. இந்தப் படத்தில் வேறு ஹிட் பாடல்களும் கிஷோர் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் சோக வடிவத்தை ஹேமன்த் குமார் பாடினார். இரண்டையும் யூட்யூபில் கேட்டு மகிழலாம்..

[ஆனால் கடைசிவரை பழம்பெரும் இசையமைப்பாளர் நௌஷத் கிஷோர்குமாரைப் பாடவைக்கவில்லை. ஒரே ஒரு பாட்டு ரிகார்ட் செய்து அதையும் பயன்படுத்தவில்லை. கிஷோர் குமார் பிரபலமான போது நௌஷதிற்கு மார்க்கெட்டே இல்லை!]

tags – ஹிந்தி  பாடல்கள் – 6 ,  உணவு, வீடு, R Nanjappa, Naukri, Baarish, பஹதூர்ஷாஃஜஃபர்

*********