பஞ்சாங்க ரகசியங்கள் – 3 (Post No.8535)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8535

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்னை நீ கிழித்தாய் இன்றைக்கு!


நீ என்ன கிழித்தாய் நேற்றைக்கு?

kattukutty

என்னை நீ கிழித்தாய் இன்றைக்கு!


நீ என்ன கிழித்தாய் நேற்றைக்கு?

தினசரி நாட்காட்டியில் நாம் தேதியையும் நல்ல நேரம் கெட்ட
நேரம் மட்டும் படித்துவிட்டு இன்று நல்ல நாளா, கரிநாளா,

நான் சட்டை துணி மணி வாங்கலாமா???கடைக்குப் போகலாமா??.?.
என்று மட்டுமே பார்த்து கொள்கிறோம்.

இதற்குமேல் இன்று அஷ்டமி, நவமி ,பிரதமை, இல்லாமல் இருக்கறதா என்றும் சிலர் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் தியாஜ் என்று போட்டிருக்கிறதே, அஹஸ் என்று போட்டிருக்கிறதே திரு தினஸ் ப்ருக், அவமா ஏன்

போட்டிருக்கிறதே என்று கவலைப்படுவதில்லை.

(இதையெல்லாம் எனது “பஞ்சாங்க ரகசியங்கள்” (Parts 1, 2, 3, 4, 5 )என்ற கட்டுரையில் பார்த்துக் கொள்ளவும்)


மேலும் நான் செய்யப்போகும் வேலைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை…..
அமிர்த யோகம், சித்த யோகம் என்றெல்லாம் பார்த்து விட்டுத்தான்
பால் கார்டு வாங்கவே போகிறோம் அல்லது வேலை செய்கிறோம்.

மரண யோகம், கரி நாள் என்றவுடன் பயந்து  நடுநடுங்கி தினசரி செய்ய வேண்டிய

வேலையெல்லாம் செய்யாமல் விட்டு விடுகிறோம்.

ஒன்றே ஒன்றை மட்டும் பார்த்து சந்தோஷப்படுகிறோம்.
இன்றைய ராசி பலன் மேஷம்- வெற்றி, ரிஷபம்-சந்தோஷம்,
மிதுனம்-பண வரவு …. அர்த்தம் புரியாமலே அந்த தேதியைக்
கிழித்து விடுகிறோம்.

அது கேட்கிறது
ஏ மனிதா! நீ என்னைக் கிழித்தாய் இன்றைக்கு ???
ஆனால்
நீ என்ன (வேலை செய்து) கிழித்தாய் நேற்றைக்கு???
24 மணி நேரத்தை வீணடித்து விட்டு, எனக்கு நேரம் சரியில்லை,
காலம் சரியில்லை, நாட்காட்டியில் போட்டிருக்கிறதே இன்று
மரண யோகம் என்று??? நான் என்ன செய்ய???? என்று புலம்பும்
மனிதா,

அவைகள் என்னென்ன எதற்காகப் போட்டிருக்கிறார்கள்
என்று நீ நினைத்துப் பார்த்தாயா, தேரிந்து கொண்டாயா??


சரி விஷயத்திற்கு வருவோம்.
ஒரு நாட்காட்டி பக்கத்தில் என்னன்ன போட்டிருக்கிறது
என்றால் ஏராளம் ஏராளம்…… ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
முக்கிய முதல் விஷயம்
நல்ல நாள் பார்ப்பது எப்படி??? என்பதை மட்டும் இன்று பார்ப்போம்

1)செவ்வாய், சனி, கிழமைகள் இருக்கக்கூடாது.
2)அஷ்டமி, நவமி பிரதமை திதிகள் ,கரிநாள் கூடாது.
3)சிலர் பரணி, கார்த்திகை நட்சத்திரங்களையும் தவிர்ப்பார்கள்
4)மரண யோகம் என்று இருந்தால் தவிர்க்கவும்
(சித்த யோகம், அமிர்த யோகம் மிக நல்லவை)
5)ராகு காலம், யமகண்டம் நேரங்களை அட்டவணையில் பார்த்து ஒதுக்கவும்
6)ஹோரை அட்டவணையைப் பார்க்கவும்


நல்ல ஹோரைகள்—சந்திரன், புதன், குரு, சுக்கிரன்
கூடாத ஹோரைகள்—சூரியன், செவ்வாய், சனி
7)நாட்காட்டியில் அன்றைய நட்சத்திரத்தைப் பார்த்து
சந்திராஷ்டம நாளை தவிர்க்கவும்
(சில நாட்காட்டியில் “சந்திராஷ்டம தினம்” என்றே
போட்டிருப்பார்கள்).


நான் குறிப்பிட்ட ஹோரை, ராகு கால, யம கண்ட அட்டவணையும்
காலண்டரின் பின்புறமே போட்டிருப்பார்கள்
அவ்வளவு தான் நல்ல நாள் குறித்தாகி விட்டாயிற்று!!!

இது பார்ப்பது மிக மிக முக்கிய காரியங்களுக்கே……
உதாரணமாக இடம் வாங்க அட்வான்ஸ் கொடுக்க,புது கட்டில் ,TV,

பணம் துணி, உடைகள் வைக்க பீரோ வாங்க
புது வாகனம் வாங்க………..
சும்மா பால் கார்டு வாங்க எலக்ட்ரிக் பில் பணம் கட்ட
கை பேசி ரீ சார்ஜ் செய்ய, பேங்க் பாஸ் புக் அப்டேட் செய்ய
உபயோகப்படுத்த வேண்டாம்.

வெற்றிகரமான வாழ்க்கை உங்களுக்கே !!!


காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர் – திருக்குறள் எண் 485 அதிகாரம் : காலமறிதல்

நன்றி!  வணக்கம்!

tags- பஞ்சாங்க ரகசியங்கள்-3,

Leave a comment

Leave a comment