Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இராமாயண வழிகாட்டி!
தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள்!
ச.நாகராஜன்
ஹிந்து தர்மத்தில் அனைத்து நல்ல சாஸ்திரங்களுக்கும் ஒரு இடம் உண்டு.
ஜோதிடம், சகுனம், நிமித்தம், கைரேகை, கால் ரேகை, சாமுத்ரிகா லக்ஷணம் என இப்படிப் பல்வேறு சாஸ்திரங்கள் – கலைகள் உண்டு.
அவை அனைத்தும் உண்மையே.
ஆனால் அவற்றை உரிய முறையில் கற்று வல்லவராக ஆனால் மட்டுமே நன்கு பயன்படுத்த முடியும்.
சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டு இருந்த சமயம் தனக்குத் தானே புலம்பித் தவிக்கின்ற இடங்கள் ஏராளம் உண்டு.
இராவணன் தனது தந்திரத்தால் இராமனும் இலக்குவனும் செத்து விட்டதாக சீதையை நம்ப வைக்க முயன்றான்.
இந்திரஜித் போரில் நாகபாசத்தை ஏவி ராமரையும் லக்ஷ்மணரையும் கட்டுவித்தான். செயலற்று அவர்கள் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்தனர். ராமனும் லக்ஷ்மணனும் போரில் இந்திரஜித்தால் கொல்லப்பட்டனர் என்று இலங்கை முழுவதும் தண்டோரா போடச் செய்தான் இராவணன்.
ஹிட்லரின் ஆணையின் பெயரில் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்ட கோயபல்ஸுக்கு முன்னோடியாக ராவணன் இருந்திருக்கிறான்!
பின்னர் அரக்கிகளை ஏவி விட்டு புஷ்பகவிமானத்தில் சீதையையும் திரிஜடையையும் ஏற்றி போர்க்களத்திற்கு அனுப்பினான். அங்கே வீழ்ந்து கிடந்த ராமரையும் லக்ஷ்மணரையும் பார்த்த சீதை லக்ஷ்மணரை நோக்கிப் புலம்பும் போது தன் சாமுத்ரிகா லக்ஷணங்களைக் கூறுகிறாள்; புலம்புகிறாள்.
இப்படிப்பட்ட லக்ஷணங்களைக் கொண்டவளைப் பெரும் பாக்கியசாலி என்று பெரியோர் கூறினரே, அது பொய்யா என்று கூறி அரற்றுகிறாள்.
சீதை கூறும் சில வாக்கியங்களைக் கீழே காணலாம்:-
“குலப் பெண்கள் எவைகளால் அரசர்களாகிய தம் கணவர்களோடு பட்டமஹிஷிப் பதவியில் அபிஷேகம் செய்யப்படுகிறார்களோ அந்த பத்ம ரேகைகள் என் பாதங்களில் இதோ இருக்கின்றனவே!” (வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் 48ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 6)
எனக்கு கூந்தல் மயிர்கள் தடிக்காதவை. ஒத்தவை! கறுத்தவை. புருவங்கள் இரண்டும் ஒன்று சேராமல் இருக்கின்றன. எனது கணைக்காலுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் உள்ள பாகங்கள் இரண்டும் தசைப்பற்று உள்ளவையாகவும் உரோமம் இல்லாமலும் இருக்கின்றன. பற்கள் இடைவெளியில்லாமல் இருக்கின்றன. (ஸ்லோகம் 9)
எனது நெற்றியின் இரு புறங்களும், கண்களும், கைகளும், கால்களும், தொடைகளும் சதைப்பற்று உடையவாக இருக்கின்றன. எனது விரல்கள் வட்டமான நகம் உடையனவாயும், மிருதுவானவைகளாகவும், ஒத்தவைகளாகவும் உள்ளன. (ஸ்லோகம் 10)
எனது இந்த மார்பகங்கள் இரண்டும் இடைவெளியின்றி, பருத்து, காம்புகள் உள்ளடங்கப் பெற்றிருக்கின்றன. எனது உந்தியானது ஆழ்ந்தும், வரம்பு தடித்தும் இருக்கிறது. விலாப்பக்கங்களுள்ளிட்ட மார்பின் மேற்புறமும் தசைப்பற்றுள்ளாத இருக்கிறது. (ஸ்லோகம் 11)
எனது நிறம் மாணிக்கத்தைப் போல இருக்கிறது. உரோமங்கள் மிருதுவாக இருக்கின்றன. (பத்து விரல்கள் மற்றும் இரு உள்ளங்கால்கள் ஆக) இந்தப் பன்னிரெண்டும் பூமியில் படியப் பெற்ற உத்தம லக்ஷணம் பொருந்தியவள் என்று என்னைப் பார்த்துச் சொன்னார்கள் (ஸ்லோகம் 12)
உள்ளங்கைகளும், உள்ளங்கால்களும் பூர்ணமான யவரேகைகளை உடையன. இடைவெளியற்றன. செந்நிறம் வாய்ந்தன. பெண்களின் லக்ஷணங்களை அறிந்தவர்கள் என்னைப் பார்த்து எப்போதும் புன்னகை உடையவள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் (ஸ்லோகம் 13)
சீதை மேற்கூறியபடி கூறிப் புலம்புகிறாள்.
இதில் ஒரு உத்தமமான பெண்ணுக்கு இருக்க வேண்டிய நல்ல லக்ஷணங்களை சீதைச் சுட்டிக் காட்டுவதைக் கவனித்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே ஹிந்து தர்மத்தில் சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிய கூரிய அறிவும் நம்பிக்கையும் இருந்திருப்பது புலனாகிறது.
சாமுத்ரிகா லக்ஷணம் என்ற கலை பெரியோர்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.
பின்னால் வரும் சம்பவங்களால் சீதை ராமனுடன் சேர்ந்து அயோத்தியை அடைந்து பட்டமகிஷியான விஷயத்தை நாம் அறிவோம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
There are lot of statements about semen and sperm in Tamil and Sanskrit literature . Hindus believed that saving semen would give them strength and good memory power. It is called URDHVA RETAS. Literally sending ‘semen upwards’.
Puranas have many stories of Rishis (seers) shedding semen in cups and leaves and transferring to women. Most of which sounds like Test Tube babies and artificial insemination.
Following is taken from wisdom library:
Urdhva retas
one who lives in perpetual celibacy or abstains from sexual intercourse; यतीनामूर्ध्वरेतसाम् (yatīnāmūrdhvaretasām) Mb.3.233.44. (-m.)
1) Name of Śiva.
2) Bhīṣma (who vowed not to marry)
Ūrdhvaretas is a Sanskrit compound consisting of the terms ūrdhva and retas (रेतस्).
Ūrdhvaretas (ऊर्ध्वरेतस्).—[adjective] chaste (lit. having the semen above).
Ūrdhvaretas (ऊर्ध्वरेतस्):—[=ūrdhva-retas] [from ūrdhva] mfn. keeping the semen above, living in chastity, [Gautama-dharma-śāstra; Mahābhārata; Harivaṃśa; Kathāsaritsāgara] etc.
Xxxx
Sri Ramakrishna and Vivekananda
“If one practises celibacy, a physiological change is produced in the body. A rudimentary nerve known as Medha will develop, the function of which is to transmute the lower energies in to higher. The knowledge of the higher Self is gained after the development of the Medha Nadi”.
Swami Vivekananda added some more interesting details about celibacy:- He says a person who observed celibacy for twelve years obtains tremendous memory power. Swami could remember anything he read, page after page. When someone wanted to test his thought reading power, he told the person even his disciple could do it who was sitting just beside him. The disciple was so scared to hear this, because he did not have that power. But when Swami Vivekananda told his disciple to read the person’s mind, he did it. Swami attributed everything to celibacy. In short, one can develop tremendous powers if one observed celibacy at three levels= Tri Karana Suddhi= word, thought and deed.
Xxxx
Tamil Siddhas on Sex Energy
Gorakkar, one of the 18 great siddhas , advises sick people taking herbal medicine to have union with women after taking cool milk with palm sugar. He adds ,
The cool milk along with the medicine mentioned earlier will help increase manliness and give joy with women. He talks about ‘lekiyam’ in verses 12 and 13 of karpa cuustiram (Kalpa sutra)
The commentator explains ,
Lekiyam – medicine brought to the consistency of a paste. This will help manliness and give joy with women without expenditure of semen by emission. It is like Tamil Viagra. In Buddhism ulta- sadhana is referred to as the culture of bodhi -citta , semen virile. In alchemy mercury symbolises semen and alchemist tries to find out ways and means of converting into a hard metal i.e. gold and using it for transubstantiation of body
Ulta- sadhana (the contrary practice of sublimating semen) and alchemy (a process of hardening semen ) are the two esoteric and exoteric methods of kaya sadhana – transformation of the body into an immortal essence. In the previous verses and in this verse
Gorakkar suggests the medicinal way of sublimating semen to an adamantine body.
—-This is taken from The Yoga of the 18 Siddhas, edited by T N Ganapathy.
Xxx
Greeks on sex and the games
The one time world heavy weight boxing champion Lennox Lewis , arguing that women weakened a boxer, avoided sex for three weeks before a big fight. The theory has certainly been around for some time. In the ancient world it was based on the idea that semen was a vital factor in keeping a man strong.
The doctor Aretaeus , in the first century CE said-“
“If any man is possession of semen, he is fierce, courageous, and physically mighty like beasts. Evidence for this is to be found in athletes who practise abstinence.
Even involuntary nocturnal emissions were thought to be enfeebling, threatening one’s endurance, and breathing. The doctor Galen , in the second century CE recommended that athletes take precautions
Sex before exercise was criticized;
Exercise before sex was strongly recommended.
Xxx
Manu on semen
“Once upon a time the universe was made up of darkness. Then the lord who is self existent, himself unmanifest, putting his energy into the great elements and everything else, he became visible and dispelled the darkness. He thought deeply , for he wished to emit various sorts of creatures from his own body. First, he emitted the waters and then he emitted his semen in them. That semen became a golden egg. As bright as the sun with his 1000 rays. Brahma himself, the grand father of all people, was born in that egg.
Manu mentioned semen in other places as well.
In short, Greeks identified semen with physical strength ; Hindus identified it with spiritual strength.
xxxxx
FOLLOWING ARE NEWS ITEMS FROM LONDON NEWSPAPERS
CHILDREN FROM DEAD BODIES
((I HAVE ALREADY WRITTEN ABOUT SUCH AN INCIDENT IN MAHABHARATA- ‘TEN MEDICAL MYSTERIES IN MAHABHARATA’.))
The authors state that doing so is “both feasible and morally permissible”, as it may help to ensure that “sufficient quantities of sperm“ are made available to individuals who wish to become parents through sperm donation.
So where does the law in the UK currently stand with regards to sperm donation? Here is everything you need to know.
Who is eligible to donate sperm?
According to the Human Fertilisation and Embryology Authority (HFEA), sperm donors are usually aged between 18 and 41.
xxxxxxxx
8 foods that increase sperm count
Oysters + pumpkin seeds. Both are very high in zinc, which may increase testosterone, sperm motility and sperm count.
Oranges. …
Dark, leafy vegetables. …
Dark chocolate. …
Salmon + sardines. …
Pomegranate juice. …
Brazil nuts. …
Water.
Xxxxxxxxxxxxxx
Carrots and lettuce linked to better sperm quality
Thursday 31 October 2013
“The secret to healthy sperm? Carrots,” the Mail Online website declares. The study it reports on found that certain vegetables may help improve sperm quality.
The researchers carrying out the study were interested in two important aspects of sperm quality:
sperm motility – how quickly a sperm can swim towards an egg
sperm morphology – the size and shape of a sperm (for the best chance of successfully conceiving, a sperm should have an oval head and a long tail)
They looked at young men’s diets and analysed their sperm samples. They found that men who ate a higher amount of three antioxidants found in fruit and vegetables had sperm with better motility and morphology.
The three antioxidants in question were:
beta-carotene – found in carrots, lettuce and spinach
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொடர்ந்து இலக்கண விஷயங்களைக் காண்போம்; இறுதியில் ஒவ்வொன்றுக்கும் உதாரணம் கொடுத்து அது தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் எப்படி அழைக்கப்படுகிறது என்று காட்டவும் ஆசை. முடிந்தவரை செய்கிறேன்
டாக்டர் K.மீனாட்சி, உலக மஹா சாதனை செய்து இருக்கிறார். பாணினியின் அஷ்டாத்யாயியில் உள்ள 4000 சூத்திரங்களையும் மொழிபெயர்த்து சுருக்கமான உரைகளையும் கொடுத்து இருக்கிறார். மூன்று பாகங்களாக வெளிவந்து இருக்கிறது. தொல்காப்பியத்தையும் கற்றவர் அவர். இந்தியாவில் தமிழ் மட்டும் படித்தவன் அரைவேக்காடு. சம்ஸ்கிருதம் மட்டும் படித்தவனும் அரைவேக்காடு. இரண்டு மொழிகளையும் கற்றவர்களே அறிஞர்கள் ; அந்தக் காலத்தில் பி.எஸ். சுப்ரமண்ய சாஸ்திரிகள் போன்றோர் இருந்தனர். இக்காலத்தில் டாக்டர் மீனாட்சி, டாக்டர் இரா. நாகசாமி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞர்களே உள்ளனர்
டாக்டர் என்ற பட்டத்துடன் தமிழ் மொழி பற்றி நூல்களை எழுதிய சிலரைக் கண்டு கண்டு சிரிப்புதான் வருகிறது. கிரேக்க மொழி செத்துப் போச்சு ; ஹீப்ரு மொழி செத்துப் போச்சு , லத்தின் மொழி செத்துப் போச்சு, ஸம்ஸ்கிருத மொழி செத்துப் போச்சு என்று உளறு கின்றனர். கிரேக்க மொழி, ஹிப்ரு மொழி பற்றி விக்கிபீடியாவில் கூட உள்ளது. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ‘தமிழ் வாழ்த்து’ என்று எழுதி வரிக்கு வரி சம்ஸ்கிருதத் சொல்லை புகுத்தி தமிழர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கியது போலத்தான் இதுவும் .
நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது தமிழ் வினைச் சொற்கள் 75-0ஐப் பட்டியலிட்டேன். ஆனால் அவை அனைத்தும் தற்கால வினைச் சொற்கள். ஸம்ஸ்க்ருதத்திலோ 2700 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 வினைச் சொற்களைப் பட்டியலிட்டு விட்டனர். அப்போது கிரேக்க, எபிரேய, சீன, பாரசீக மொழிகளுக்கு இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. தமிழும் லத்தினும் அப்போது இருந்ததற்குச் சான்றுகள் இல்லை.
பாணினி தனது இலக்கணத்தில் விகரணங்களையும் CONJUGATIONAL SIGNS , அவைகளுக்குரிய ஓட்டுக்கள், அவைகளை நீக்குதல் , ஆகியவைகளை பற்றிப் பேசும்போது அவைகளை தாதுக்களின் வகுப்பு மூலம் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக 2-4-72, 2-4-75, 3-1-69, 3-1-73, 77, 78, 79, 81 ஆகிய சூத்திரங்களைக் குறிப்பிடலாம்
ஸம்ஸ்க்ருத மொழியில் காணப்படும் தாதுக்கள் அனைத்தையும் அவைகளையடிச் சொல்லாக மாற்றும்போது அவைகளோடிணைக்கப்படும் விகரணங்களின் அடிப்படையில் பத்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு தாது பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத் தாதுக்களின் மொத்த எண்ணிக்கை 1970 ஆகும்.
பத்து வகைகளும் அதிலுள்ள தாதுக்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு—
பாணினி தனது சூத்திரங்களின் தாதுக்களை ‘கரம்’ அல்லது ‘இத்’ – தொடர்பாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய ‘கரம்’ பெற்ற தாதுக்கள் ‘இத்’ – தைக் கொண்ட தாதுக்கள் எவையெவை என்பதை அறிய தாது பாடத்தின் உதவியைத்தான் நாட்டை வேண்டியிருக்கும் ஏனென்றால் தாது பாடத்தில்தான் இவைகளின் பட்டியல் இருக்கிறது . இதனால் அதன் முக்கியத்துவம் விளங்குகிறது .
இதைப்போன்று 4-1-76 தொடங்கி ஐந்தாம் அத்தியாய இறுதிவரையில் ‘தத்தித’ ஓட்டுக்களைப் பற்றி பாணினி பேசுகிறார். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட வகுப்பின் பெயரை மட்டும்தான் குறிப்பிடுகிறார். அக்குறிப்பிட்ட வகுப்பினுள் அடங்கும் சொற்கள் எவை என்பதை அறிய கண பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும் ..
கணபாடம்
தாது பாடத்தில் தாதுக்களின் வகுப்பைக் கூறியிருப்பது போல், கணபாடத்தில் பெயர்ச் சொற்களை குறிப்பிட்ட ஒரு வரிசைக்ரமப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வகை —
1. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட சொற்கள்
2.பெயர்ச் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் அமைக்கப்பட்டவை .
யார் எழுதியது ?
தாது பாடம், கண பாடம் ஆகிய இரண்டின் ஆசிரியர் பாணினியா அல்லது வேறு ஒருவரா என்ற விவாதம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது . ஆயினும் இவை பாணினி காலத்தில் நன்கு அறியப் பட்டிருந்தன. அஷ்டாத்யாயியை விளங்கிக் கொள்ள இவை இன்றியமையாதவை.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
போதிசத்வர் கதைகள்! – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!
ச.நாகராஜன்
போதிசத்வர் பல ஜென்மங்களை எடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு ஜென்மத்திலும் அவர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம் என்று புத்த மத நூல்கள் கூறுகின்றன. இரு கதைகளை இங்கு மாதிரிக்காக பார்ப்போம்.
நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!
ஒரு சமயம் போதிசத்வர் ஒரு புனிதமான மரத்தில் ஆவியாகக் குடியிருந்தார். ஒருநாள் ஒரு ஏழை அந்த மரத்திற்கு அருகில் வந்தான். ஏழை என்பதால் அந்த புனித மரத்திற்கு எதையும் அவனால் நைவேத்யமாக அர்ப்பணிக்க முடியவில்லை. ஒரு சின்ன ரொட்டித் துண்டு தான் அவன் கையில் இருந்தது. மற்றவர்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த பொருள்களை அர்ப்பணித்த போது அவனால் ரொட்டித் துண்டை மரத்தின் முன்னால் வைக்க முடியவில்லை. அந்த புனிதமான மரம் இந்த ரொட்டித் துண்டை ஏற்காது என்று அவன் நினைத்தான். அவன் திரும்பிச் செல்ல யத்தனித்தான்.
திடீரென்று போதிசத்வர் அவர் முன் தோன்றினார். “ நண்பனே! எனக்கு ரொம்ப பசியாய் இருக்கிறது. உன் கையிலிருக்கும் ரொட்டித் துண்டை தர முடியுமா? என்று கேட்டார்.
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அந்த ஏழை தன் கையிலிருந்த ரொட்டித் துண்டை அவரிடம் கொடுத்தான்.
அதைச் சாப்பிட்ட பின்னர் போதிசத்வர் அவனிடம் கூறினார் : “நண்பனே! அதோ இருக்கும் அந்த மரத்தின் அடியில் தோண்டு. தங்கக் காசுகள் கிடைக்கும்!”
அந்த ஏழை மரத்தின் அடியில் தோண்ட நிறைய தங்கக் காசுகள் இருப்பதைப் பார்த்தான். ஆனால் அவற்றை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. மன்னனிடம் சொன்னான்.
மன்னன் அவனது நேர்மையை எண்ணி அவனை மெச்சினான். உடனடியாக அவனுக்குப் பல தங்கக் காசுகளைத் தந்ததோடு தன் பொக்கிஷத்தைக் காக்க நேர்மையான அந்த ஏழையே சிறந்தவன் என்று நினைத்து அவனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான்.
நேர்மைக்கு எப்போதுமே பரிசும் மரியாதையும் உண்டு.
*
மதம் பிடித்த யானை!
இன்னொரு சிறிய கதை.
ஒரு சமயம் போதிசத்வர் ஒரு ஜென்மத்தில் துறவியாக இருந்தார். அப்போது அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அதே கால கட்டத்தில் இன்னொரு துறவியும் வாழ்ந்து வந்தார். போதிசத்வருக்கு இருக்கும் சீடர்களையும் அவருக்கு இருந்த புகழையும் பார்த்து அவர் பொறாமைப் பட்டார்.
அவரை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அந்த பொறாமை பிடித்த துறவி நினைத்தார். சில மாவுத்தர்களை அணுகி எப்படியாவது யானையை போதிசத்வர் மீது ஏவி விடுமாறு சொன்னார். அவர்களில் ஒரு மாவுத்தன் யானைக்கு மதம் பிடிக்கும் அளவு சாராயத்தை ஊற்றிக் குடிக்க வைத்தான். வெறி பிடித்து மதம் கொண்ட யானையை போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கி விரட்டினான். அது அலறியவாறே போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கிச் சாலையில் ஓடியது.
மதம் பிடித்த யானை ஓடிவருவதைக் கண்ட மக்கள் தலை தெறிக்க ஓடினர். ஒரு பெண்மணி யானை வரும் வேகத்தைக் கண்டு பயந்து தன் கையிலிருந்த குழந்தையைப் பதற்றத்தில் போதிசத்வரின் காலடியில் கீழே நழுவ விட்டாள்.
வேகமாக ஓடி வந்த யானை அவர்களை நசுக்கி விடும் நிலையில் போதிசத்வர் அந்த யானையின் நெற்றியில் தன் கையைப் பதித்தார்.
அவ்வளவு தான், அந்த யானை சாந்தமடைந்தது. அதைத் தட்டிக் கொடுத்தார் போதிசத்வர்.
யானை அவர் முன்னால் மண்டியிட்டுப் பிளறியது.
அனைவரும் இந்த ஆச்சரியகரமான சம்பவத்தைப் பார்த்து பிரமித்தனர்;
*
இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்களை போதிசத்வர் கதைகள் தெரிவிக்கின்றன!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் இந்துக்கள் போல இலக்கணத்தை மதிப்பவர்கள் வேறு எவருமிலர். சம் ஸ்கிருதத்தில் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே இலக்கணம் பூஜிக்கத்தக்க நிலையை அடைந்தது என்பதைப் பார்க்கையில் உலகின் மூத்த சமுதாயமும் இந்துக்கள் என்று காட்டுகிறது. உலகில் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்தவர்களும் இந்துக்களே என்று காட்டுகிறது. அது மட்டுமல்ல சம்ஸ்கிருதத்தில் யாப்பு இலக்கணம், சொல் இலக்கணம் வளர்ந்தபோது உலகில் தமிழோ, லத்தினோ, எபிரேயம் எனப்படும் ஹீப்ருவோ , சீன மொழியோ, பாரசீக மொழியோ இலக்கியப்படைப்பு எதுவும் படைக்கவில்லை. இந்தப் பழைய மொழிகளில் தமிழ் இலக்கியம்தான் கடைசியாக வந்தது. அதாவது கடைக்குட்டி. ஆனாலும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. பிற் காலத்தில் தென் கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் கொ கட்டிப் பறந்தது தமிழ் மொழி. ஆயினும் இவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்குட்பட்டதே.
இங்கே இலக்கணம் (GRAMMAR) பற்றி மட்டும் காண்போம் . இது ஆறாவது பகுதி.
உலகிலேயே மிகவும் வியப்பான விஷயம் !
இந்துக்களின் பகவத் கீதையில் இலக்கணம்!
ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் துதியில் இலக்கணம்!
ஐயர்கள் நாள் தோறும் முக்காலமும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இலக்கணம்!!
இதற்கு மூலம் உலகிலேயே பழமையான ரிக்வேதத்தில் உளது .
அதைவிட பெரிய அதிசயம் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 வினைச் சொற்களின் பட்டியல்!
அதைவிட பெரிய அதிசயம் பத்துவகையான பெயர்ச் சொல் பட்டியல்.
ஆனால் தமிழிலோ சங்க இலக்கியத்தில் ‘இறந்த காலம்’ , ‘இறந்த காலம் இல்லாத காலம்’ என்ற இரண்டுதான்.
அதாவது அப்போதுதான் மொழி துளிர்விடத் துவங்கியது.
நான் சொல்வதெல்லாம் இலக்கணம் (GRAMMAR) பற்றிய விஷயம் என்பதை நினைவிற் கொள் க .
தமிழ் மொழி அதற்கும் முன்னரே இருந்தது. தமிழர்கள் அதற்கும் முன்னரே இருந்தனர். ஆனால் வளர்ச்ச்சி அடைந்த — இலக்கணம் பெற்ற மொழியாக —- தமிழ் இருக்கவில்லை. தொல்காப்பியர் புள்ளி வைத்த எழுத்துக்கள், ஆய்த எழுத்து என்னும் முப்பாற் புள்ளி பற்றிப் பேசுவது எல்லாம் அவரை சங்க இலக்கியத்தை ஒட்டி வைத்துவிடுகிறது.
(தொல்காப்பியர் காலம் என்னும் எனது தொடர் கட்டுரைகளில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன்; கண்டு கொள்க).
தினசரி பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தனத்தில் வணங்கும் காயத்ரீ மாதா 24 எழுத்துக்கள் உடைய யாப்பு இலக்கணச் சொல் ஆகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரீ , உஷ்ணிக் , அனுஷ்டுப், பிருஹதி, பங்க்தி , த்ருஷ்டுப், ஜகதி என்றும் அவர்கள் சொல்லி வணங்குகிறார்கள்
*****
விக்கிபீடியா தகவல்:–
வேத சந்தஸ்கள் (Vedic meter) :-
“இந்து சமய வேத மந்திரங்களில் எத்தனை அடிகள் (பதங்கள்), எத்தனை எழுத்துக்கள் (அட்சரங்கள்) இருக்க வேண்டும் என நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தஸ் எனப்படும். சமஸ்கிருத மொழியில் பல சந்தங்களைப் பற்றி சந்தஸ் தொடர்பான சாத்திரங்கள் கூறியிருந்தாலும், வழக்கில் ஏழு சந்தங்களே (சந்தஸ்கள்) உள்ளன. அவைகள்:
காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.
ஊஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு ஏழு எழுத்துக்கள்; மொத்தம் 28 எழுத்துக்களுடன் கூடியது.
அனுஷ்டுப் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு எட்டு எழுத்துக்கள்; மொத்தம் 32 எழுத்துக்களுடன் கூடியது.
ப்ருஹதி சந்தம்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, ,, 12, 8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.
பங்கதி சந்தம்: நான்கு அல்லது ஐந்து அடிகள்; மொத்தம் 40 எழுத்துக்களுடன் கூடியது.
திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன், ஓர் அடிக்கு 11 எழுத்துக்களுடன், மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது.
ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்துக்கள்; மொத்தம் 48 எழுத்துக்களுடன் கூடியது.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அனுஷ்டுப் சந்தஸ் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது”.
****
பிராமண , க்ஷத்ரிய, வைஸ்யர்கள் ஆகிய மூன்று ஜாதிக்காரர்கள் வேதங்களைப் பயில்வதோடு ஆறு அங்கங்களையும் பயில வேண்டும். அதில் வியாகரணம்(Grammar) என்னும் இலக்கணமும், நிருக்தம் (Etymology) என்னும் சொற்பிறப்பியலும் அடக்கம். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இப்படி சிலபஸ் Syllabus கிடையாது. இந்துக்களைப் பார்த்து பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொஞ்சம் அறிமுகப்படுத்தினர் கிரேக்க நாட்டில்.
இதைவிட வேடிக்கையான விஷயம், உலகில் சிறந்த பொருள்கள் யாவையும் நானே என் று அர்ஜுனனுக்குச் சொல்லிய கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் அகாரம் பற்றிப் பேசிவிட்டு ‘சமாசம்’ பற்றியும் பேசுகிறார். கிருஷ்ணனை ‘காப்பி’ copy அடித்த வள்ளுவரும் ஏசுவும் (Jesus) அகாரம் பற்றிச் சொன்னார்கள் . ஆனால் ‘சமாசம்’ பற்றிச் சொல்லவில்லை !
இதில் காலம் பற்றியும் , கருந்துளை எனப்படும் BLACK HOLE ‘பிளாக் ஹோல்’ பற்றியும் முன்னமே தனிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்
சமாசம் பற்றி பேரறிஞர் அண்ணா கூறுவதைக் காண்போம்; இவர் ராமகிருஷண மடத்தின் உரை ஆசிரியர்.
‘த்வந்த்வ’ ஸமாஸம்
சொற்களின் புணர்ச்ச்சி ஸம்ஸ்க்ருதத்தில் நான்கு வகை :
1.அவ்யயீ – (எடுத்துக் காட்டு) – அதிஹரி
2.தத்புருஷம் – ஸீதாபதி
3.பஹுவ்ரீஹி – பீதாம்பரஹ
4.த்வந்த்வ – ராம லக்ஷ்மணெள
த்வந்த்வ ஸமாஸத்தில் புணரும் பதங்கள் இரண்டும் ஸமப்ரதானம் .
இது அறிஞர் அண்ணா உரை.
கீதையில் இலக்கணம் பற்றிக் கதைப்பதிலிருந்து அது எவ்வளவு முக்கியம் என்று அறி கிறோம் .
அதிலும் கிருஷ்ணர், சமத்துவம் போதிக்கும் சமாசத்தை எடுத்தது சாலப்பொருந்தும் . இதையே வள்ளுவனும் , “சமன் செய்து தூக்கும் கோல் …. “ என்னும் குறளில் எதிரொலிக்கிறான்.
****
பஜ கோவிந்தம் துதியில் பாணினி இலக்கணம்
உலகம் புகழும் தத்துவ அறிஞர் ஆதிசங்கரர் இயற்றிய ‘பஜ கோவிந்தம்’ ஆழ்ந்த தத்துவங்களை, சின்னப் பிள்ளைகள் கற்கும் Nursery Rhyme ‘நர்சரி ரைம்’, போலச் சொல்லும்.
இதை எம். எஸ். சுப்புலெட்சுமியின் குரலில் அனைவரும் கேட்டு மகிழ்கிறோம்.
முதல் பாட்டில் இலக்கண விவாதங்களில் காலத்தை வீணடிப்போரை இடித்துரைக்கிறார் .
பஜகோவிந்தம் முதல் பாடல் —
“பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
.பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ருஞ் கரணே”
கோவிந்தனைத் துதி. யமன் வந்து கதவைத் தட்டும்போது உன் இலக்கண அறிவு உதவிக்கு வருமா? என்று கேட்கிறார்; இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .
டுக்ருஞ் – என்பது பாணினி சூத்ரம் 1-3-5 உரையில் உளது; ஒரு நாள் ஆதிசங்கரர், காசி நகர தெரு வழியே நடந்து சென்றார். அப்பொழுது ஒரு கிழவன் இந்த சூத்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் ; தள்ளாத வயதில் இறைவனை நினைத்து — அதிலும் காசி மாநகரத்தில் – வணங்காதபடி, இப்படி இந்தக் கிழவன் நேரத்தைச் செலவிடுகிறானே என்று பாடத் தொடங்கினார் ஆதி சங்கரர்.
27 பாடல்களில் முதல் சில பாடல்களை அவர் பாடியதாகவும் ஏனைய பாடல்களை அவருடன் வந்த சிஷ்யர்கள் பாடி முடித்ததாகவும் உரைகாரர்கள் புகல்வர் . கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவி பாடுகையில் ஆதி சங்கரரின் சிஷ்யர்கள் பாட முடியாதா என்ன?
கட்டுரையின் அடுத்த பகுதியில் ‘தாது’ (Verb Roots) பாடத்தில் வரும் 1970 வினைச் சொற்கள் பற்றியும் பெயர்ச் சொல் கூறும் கண பாடம் பற்றியும் காண்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் ருத்ராட்சம்! பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
By Kattukutty
ருத்ராட்சத்தை யார், யார்அணியலாம்???
பிரும்மச்சாரிகள், இல்லற வாசிகள், வானப் பிரஸ்தர்,
சன்யாசிகள், மற்றும் பெண்களும்அணியலாம்!
மாலைகட்டவேண்டியஉலோகம்
தங்கம், வெள்ளி, தாமிரம், பட்டு நூல், பருத்தி நூல்.
எதைருத்ராட்சமாலையுடன்கட்டலாம்???
தங்கத்தினால் ஆன மணி, வெள்ளியினால் ஆன மணி, பவழம், முத்து, ஸ்படிகம்.
மாலைஎப்படிஅமையவேண்டும்???
மாலை கட்டும் போது மணிகள் ஒன்றை ஒன்று தொடக் கூடாது.
மணிகள் அனைத்தும் ஒரே அளவாக (size) இருக்க வேண்டும்
ஒரு மணிக்கும் மற்றொரு மணிக்கும் நடுவில் போடும் முடிச்சு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.
21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் திருமூலர் யோகம் மற்றும் பதஞ்சலி முனிவர் யோகம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN
திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இப்போது நம் முன் இருக்கும் கேள்வி : யோகம் பற்றிய கேள்வி.
திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?
சுருக்கமான பதில், ஆம் ஒன்றே தான், ஆனால் அதில் சிறிய வேறுபாடும் உண்டு.
திருமூலர் பற்றி நாம் நன்கு அறிவோம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர்.
திருமந்திரம் என்ற நூலை உலகிற்குத் தந்தவர். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அருளியவர் அவர்.
ஒன்பது தந்திரங்களைக் கொண்ட நூல் திருமந்திரம்.
இதில் மூன்றாவது தந்திரத்தில் யோகம் பற்றிக் காணலாம்.
யோகம் என்ற சொல் மனதையும் ஆன்மாவையும் இணைப்பது என்ற பொருளைத் தருகிறது.
யோகத்திற்கு எட்டு உறுப்புகள் உண்டு. ஆகவே இதை அட்டாங்க யோகம் என்று கூறுகிறோம்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவதுமாமே (திருமந்திரம்)
என்று இந்த எட்டு உறுப்புகளைத் திருமூலர் விளக்குகிறார்.
பதஞ்சலி மாமுனிவர் யோக சூத்ரம் என்ற யோக நூலை உலகிற்கு அருளியவர்.
இதில் 194 சூத்திரங்கள் உள்ளன.
ஸ்வாமி விவேகானந்தர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரை அளித்துள்ளார். உலகம் முழுவதும் யோகா பிரபலமாக ஸ்வாமி விவேகானந்தர் முக்கிய காரணமாக அமைந்தார். தியாஸபிகல் சொஸைடியும் யோகாவில் ஆர்வம் காட்டியது.
யோக சூத்ரம் நான்கு பாகங்களைக் கொண்டது. சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் என்ற நான்கு பாதங்களில் சமாதி பாதத்தில் 51 சூத்திரங்களும் சாதனா பாதத்தில் 54 சூத்திரங்களும், விபூதி பாதத்தில் 56 சூத்திரங்களும் கைவல்ய பாதத்தில் 33 சூத்திரங்களும் உள்ளன.
அத யோகானுசாஸனம் என யோக சூத்ரம் ஆரம்பிக்கிறது.
Yogashchittavrittinirodhah -யோக சித்த விருத்தி நிரோத:
Yoga is restraining the mind-stuff (Chitta) from taking various forms (Vrttis)
யோகம் என்பது மனதை சித்த விருத்திகளிலிருந்து அடக்குவது தான்
என்பதை அடுத்த சூத்திரத்தில் இப்படிக் கூறி அருள்கிறார் பதஞ்சலி மாமுனிவர்.
இயமம் பற்றி பதஞ்சலி முனிவர் கூறும் போது கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, வெஃகாமை, புலன் அடக்கம் என்ற ஐந்தைக் கூறும் போது திருமூலரோ நடுநிலைமை, பகுத்துண்ணல், மாசற்ற தன்மை, கள் உண்ணாமை, காமம் இன்மை ஆகிய ஐந்தையும் சேர்த்து பத்து இயமங்களைச் சொல்கிறார்.
ஆசனங்கள் பற்றி பதஞ்சலி முனிவர் குறிப்பாகச் சொல்கிறார்.
ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.
வியாதி, யோகத்தில் வன்மை இன்மை,
இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு,
அலட்சியம், வைராக்கியம் இல்லாமை, திரிபுணர்ச்சி
சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல், கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பதஞ்சலி கூறுகிறார்.
திருமூலரோ 134 ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருமந்திரத்தில் 563வது பாடலாக மலர்வது இந்தப் பாடல்:
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே
மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.
அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள்
இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.
எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126.
இந்த 126 ஆசனங்கள் யாவை?
சுவஸ்திகாசனம்
கோமுகாசனம்
வீராசனம்
கூர்மாசனம்
குக்குடாசனம்
உத்தான கூர்மாசனம்
தனுராசனம்
மச்சேந்திராசனம்
பச்சிமதானாசனம்
மயூராசனம்
சவாசனம்
மச்சேந்திர சித்தாசனம்
சித்தாசனம்
வச்சிராசனம்
பதுமாசனம்
மச்சேந்திர பதுமாசனம்
முக்த பதுமாசனம்
சிம்மாசனம்
பத்திராசனம்
வல்லரியாசனம், இப்படிப் போகிறது பெரும் பட்டியல்.
ஆக, மொத்த ஆசனங்கள் நூற்றி இருபத்தாறையும் எட்டையும் கூட்டினால் வருவது 134.
கேசரி ஆசனம் என்றால் வானத்தில் பறப்பது. இப்படி அபூர்வமான ஆசனங்களைச் செய்வதன் மூலம் சித்திகள் பல கிடைக்கின்றன.
என்று எட்டு சித்திகளை இப்படி விளக்குகிறார் திருமூலர்.
அணிமா என்பது அணுவைப் போல சிறிதான தேகத்தை அடைதல்; மகிமா என்பது பெரிய உருவத்தை அடைதல்; லகிமா என்பது காற்றைப் போல லேசாக ஆதல், கரிமா என்பது கனமாக ஆதல்; ப்ராப்தி என்பது அனைத்துப் பொருள்களையும் தன் வசப்படுத்தல், பிராகாமியம் என்பது பர காய பிரவேசம் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்; ஈசத்துவம் என்பது தேவர்களிடம் கூட ஆணை செலுத்துதல்; வசித்துவம் என்பது அனைத்தையும் தன் வசப்படுத்துதல்
பதஞ்சலி, யோகத்தின் உச்ச பயனாக கைவல்ய நிலையைக் கூறுகிறார்.
திருமூலரோ யோகத்தைச் சிவயோகமாகக் கூறுகிறார். யோகத்தின் உச்ச பயன் சிவனை அடைவதேயாம்.
பதஞ்சலி, யோகத்துடன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். திருமூலரோ ஒன்பது தந்திரத்தில் உலகியலையும் வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகளையும் புகல்கிறார்.
பதஞ்சலி சம்ஸ்கிருதத்தில் அற்புதமான சொற்றொடர்கள் அடங்கிய 194 சூத்திரங்களைத் தரும் போது திருமூலரோ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று தமிழுக்குப் பெருமை சேர்க்கிறார்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, பெரியாருடன் கூடல் பேரின்பமாமே, பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின், நல்லாரைக் காலன் நணுக நில்லானே, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை, யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என இப்படி வாழ்வின் ரகசியங்களைக் கொடுத்தருள்கிறார் திருமூலர்.
பதஞ்சலி சிதம்பர ஸ்தலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; ஆடல் வல்லானின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தவர்.
திருமூலரோ திருவாவடுதுறையில் அரச மர நீழலில் வெகு காலம் தவம் புரிந்தவர்.
இப்படி இருவரையும் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு.
மிக முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. இந்த யோகத்தைத் தகுந்த குரு மூலமாகவே கற்க வேண்டும். பிராணாயாமம் என்பது மூச்சுக் கலை. இதை முறையாக ஆசானிடமே கற்க வேண்டும். இல்லையேல் விபரீதமான பக்க விளைவுகள் ஏற்படும்.
இன்னொன்று, இன்றைய கால கட்டத்தில் யோகா என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல வேறெந்தச் சொல்லும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.
சிரிப்பு யோகா, அழுகை யோகா, நடக்கும் யோகா, ஓடும் யோகா என்று தமக்குத் தோன்றியபடி பெயரைக் கொடுத்து சுயநல நோக்குடன் பயிற்சிகளை அளிக்கின்றவரை இனம் கண்டு தவிர்த்து பாரம்பரியமாக பதஞ்சலி முனிவர், திருமூலர் ஆகியோர் கூறிய யோகத்தில் பயிற்சி அளிப்பவரையே குருவாகக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் போலிகள் கற்பிக்கும் யோகம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடும்.
ஸ்வாமி விவேகானந்தர் அருளிய பதஞ்சலி யோக சூத்ரத்தின் விளக்கவுரை, திருமூலரின் திருமந்திரம் ஆகியவை இணையதளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் – டவுன் லோட் – செய்து கொள்ளலாம்.
படிப்போம்; யோகா பயில்வோம். இரு உலகிற்கும் தேவையானதைப் பெறுவோமாக.
இந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.