PLEASE JOIN ME AT 2 PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME TODAY/ MONDAY AT FACEBOOK.COM/ GNANAMAYAM. IF U WANT TO PARTICIPATE LIVE WE WILL SEND U THE ZOOM LINK. NEXT MONDAY WE ARE PAYING TRIBUTE TO GREAT SINGER SPB. WE R GOING TO DISCUSS ONLY HIS DEVOTIONAL MUSIC. PL. CONTRIBUTE 3 TO 4 MINUTES VIDEO OR AUDIO CLIPS. U CAN ALWAYS SEE US ON GNANAMAYAM.
கோரமான மஹாபாரதப் போர் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது.
பதினெட்டாம் நாள் போர்.
பீஷ்மர் கொல்லப்பட்டு விட்டார். துரோணர் கொல்லப்பட்டு விட்டார். கர்ணனும் கொல்லப்பட்டு விட்டான்.
அலறி அடித்தவாறே வந்த ஸஞ்சயன் திருதராஷ்டிரனிடம் நடந்த விவரங்களைக் கூறுகிறான்.
யாரை சேனாபதியாக ஆக்குவது என்று துரியோதனன் அஸ்வத்தாமாவிடம் யோசனை கேட்க அஸ்வத்தாமா, சல்யனை சேனாதிபதி ஆக்கலாம் என்று கூறுகிறார்.
“குலத்தாலும் உருவத்தாலும் தேஜஸினாலும் கீர்த்தியாலும் ஐஸ்வர்யத்தாலும் நிறைந்தவனும், எல்லாக் குணங்களும் நிறைந்தவனுமான இந்தச் சல்யன் நமக்குச் சேனாபதியாக ஆகட்டும். நன்றி அறிவுள்ள இந்தச் சல்யன் தன் மருமக்களை விட்டுவிட்டு நம்மை வந்தடைந்தான். இவன் பெரிய சேனையை உடையவன். நீண்ட கைகளை உடையவன். வேறொரு ஸ்கந்தருக்கு நிகரானவன். ஜயிக்கப்படாத சுப்ரமண்யரை எப்படி சேனாபதியாகக் கொண்டு தேவர்கள் வெற்றி அடைந்தார்களோ அதே போல இந்த அரசனை சேனாபதியாகக் கொண்டு நம்மால் ஜயம் அடையப்படட்டும்” என்று இவ்வாறு அஸ்வத்தாமன் கூற துரியோதனன் சல்யனை சேனாபதியாக இருக்க கை குவித்து வேண்டுகிறான்.
சல்யன் அதை ஏற்றுக் கொள்கிறான்.
யுத்தம் ஆரம்பிக்கிறது.
தர்மர் மத்ர ராஜனான சல்யனை எதிர்கொள்கிறார்.
அப்போது பற்பல உருவங்கள் உள்ள நிமித்தங்கள் பலவாறு தோன்றின.
மலைகளுடன் கூடிய பூமி சத்தத்தை வெளியிட்டுக் கொண்டு அசைந்தது.
தண்ட சூலங்களுடன் கூடியவைகளும், ஜொலிக்கும் நுனிகளை உடையவைகளும், நாற்பக்கத்திலிருந்தும் பிளவுபடுகின்றவைகளுமான உற்கைகள் சூரிய மண்டலத்தைத் தாக்கிக் கொண்டு ஆகாயத்திலிருந்து பூமியில் விழுந்தன.
மிருகங்களும், எருமைக்கடாக்களும், பட்சிகளும் அப்போது கௌரவர் சேனையை பல தடவை இடப்பக்கமாகச் சுற்றி வந்தன.
பூமி முழுவதையும் அனுபவிக்கப் போவதைக் காட்டும் விதமாக பாண்டவர்களின் முதல்வரான தர்மரை நோக்கி சுக்ரன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் அவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஏழாவது இடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பலத்தை உண்டுபண்ணுவையாக அமைந்திருந்தன.
இந்த மூன்று கிரகங்கள் பாண்டுபுத்திரர்களுக்குப் பின்னாலும் கௌரவர்களுக்கு எதிரிலும் இருந்தன.
சஸ்திரங்களின் நுனிகளில் ஜ்வாலை தோன்றியது. அது கண்களைக் கூசும்படி செய்து கொண்டு பூமியில் விழுந்தது.
காக்கைகளும், கோட்டான்களும், தலைகளிலும் கொடிகளிலும் அதிகமாக உட்கார்ந்தன.
2
ஒன்பதாம் பர்வமாக மஹாபாரதத்தில் அமைந்துள்ள சல்ய பர்வத்தில் பத்தாவது அத்தியாயத்தில் இந்த துர்நிமித்தங்களைப் பார்க்கிறோம்.
ஒரு விஷயத்தில் வெற்றி, தோல்வியைக் காண்பிப்பவை நம்மைச் சுற்றி நடக்கும் நல்ல அல்லது கெட்ட விஷயங்களே என்பதை இந்த அத்தியாயம் சுட்டிக் காட்டுகிறது.
துர் நிமித்தங்கள் என்னென்ன என்பதையும் பார்க்கிறோம். பூமி அசைதல் என்றால் பூமி அதிர்ச்சி அல்லது பூகம்பம் ஆகும்.
பட்சிகள், மிருகங்கள் இடப்பக்கமாகப் போகக் கூடாது.
கிரகங்களின் சேர்க்கை நல்ல பலத்தைத் தர வேண்டும்.
இப்படிப்பட்ட பல நிமித்தங்களை இந்த அத்தியாயம் தெரிவிக்கிறது.
பண்டைய காலத்திலேயே நல் நிமித்தங்கள் மற்றும் துர் நிமித்தங்கள் பற்றி இயற்கையைக் கூர்ந்து கவனித்த நமது அறிஞர்கள் அவற்றைத் தொகுத்து சாஸ்திரமாகத் தந்தனர்.
மஹாபாரதத்தில் இப்படி நல் நிமித்தங்கள் மற்றும் துர் நிமித்தங்கள், பக்ஷி பாஷைகள், சாமுத்ரிகா லக்ஷணங்கள் உள்ளிட்ட பல அபூர்வ கலைகளைக் காண்கிறோம்.
இவற்றைத் தொகுத்துப் படித்தால் இயற்கை நமக்குக் கூறும் கலைகள் பலவற்றையும் உள்ளது உள்ளபடி அறியலாம்.
பழநி என்ற பெயர் ஏன் வந்தது? அனைவருக்கும் தெரிந்த புராணக் கதை தான்!
முன்னொரு காலத்தில் பிரமதேவன் முன்னால் நாரத முனிவர் வீணையை வாசித்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நான்முகன் ஒரு மாங்கனியை நாரதருக்குத் தந்தார். மாங்கனியைப் பெற்றுக் கொண்ட நாரதர் நேராக திருக்கைலாயத்திற்குச் சென்று அந்த மாங்கனியை சிவபிரான் முன்னர் வைத்து வணங்கினார்.
சிவபிரான் அருகிலே விநாயகரும், முருகனும் இருந்தனர். யாருக்கு கனியைக் கொடுப்பது?
சிவபிரான் இருவரையும் நோக்கிக் கூறினார்: “உங்களில் யார் ஒருவர் இந்த உலகைச் சுற்றி முதலில் வந்து என்னிடம் கனியைக் கேட்பீர்களோ அவருக்கு இதைத் தருவேன்.”
முருகன் தன் மயில் வாகனத்தில் அமர்ந்து உலகைச் சுற்ற வேகமாகப் புறப்பட்டார்.
விநாயகரோ அம்மையையும் அப்பனையும் ஒரு வலம் வந்து கனியைக் கேட்டார்.
சிவபிரான் அவரைப் பார்க்க, “அனைத்து அண்டமும் சுற்றி வந்து விட்டேன் -உங்களைச் சுற்றியதால்!” என்றார்.
அந்த பதிலில் பொதிந்து கிடந்த உண்மையை உணர்ந்த சிவபிரான் மாங்கனியை விநாயகருக்கு வழங்கினார்.
பின்னால் வந்த முருகக் கடவுள் நடந்ததை அறிந்தார். மனச் சோர்வுற்றார்.
கோபத்துடன் நேராக திரு ஆவினன் குடி வந்தடைந்தார்.
உமாதேவியுடன் சிவபிரான் முருகனிடம் வந்தார். அவரை எடுத்து அணைத்துக் கொண்டார். “பழம் நீ”யே” என்றார் சிவபிரான.
உடனே முருகனின் கோபம் நீங்கியது.
இதனால் திரு ஆவினன் குடி தலமானது பழநி என்ற பெயரைப் பெற்றது.
வையாபுரி நாட்டில் உள்ள இந்தத் தலம் ‘பொதினி’ என்ற பெயராலும் வழங்கப்பட்டு வந்தது.
இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பழநி இருப்பது கொங்கு மண்டலத்தில் தான் என கொங்கு மண்டல சதகம் 22ஆம் பாடலில் கூறுகிறது.
பாடல் இதோ:-
தீத்திகழ் மேனி சிவன்கையி லோர்கனி தேவர்மெச்சி
ஏத்திய நாரதர் நல்கக் கண் டேயிப மாமுகத்து
மூத்தவன் கொள்ள விளையோனை யீசன் முகந்திருத்தி
வாய்த்த பழநியென் றோதின துங்கொங்கு மண்டலமே
பொருள் : நாரத முனிவர், சிவ பெருமான் திருவடியில் ஒரு மாம்பழத்தை வைத்து வணங்கினார். அதனை விநாயகக் கடவுள் பெற்றுக் கொண்டனர். கோபம் கொண்ட குமரக் கடவுளை சிவபிரான் சமாதானப்படுத்தி ‘பழம் நீ’ என்று சொல்லி அருளியதும் கொங்கு மண்டலத்திலேயாம்.
இந்த வரலாற்றை பழனித்தல புராணம் இப்படி விவரிக்கிறது:
ஈசனுருகி மடியினில் வைத்தென்று மிளையோயறிவுடைமை
தேசு தருநம் வாணுதற்கண் மணி நீ சிறுவனோபெரியை
வாச நறுமென் கனியுமொரு கனியோ மதுரமொழிவாயாற்
பேசவரிய மறை ஞானப் பிள்ளை பழநியெனப் புகன்றார்
பழனித்தல புராணம்
சிவ பிரானின் ஆனந்தத் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாணினி ஜீனியஸ் GENIUS
நீங்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியர் எனறு கற்பனை செய்துகொள்ளுங்கள் . வகுப்பில் 40 மாணவ மாணவியர். ஒவ்வொருவருக்கும் 1 முதல் 40 வரை நம்பர் கொடுத்துவிட்டீர்கள் . சாப்பாட்டு நேரம் வந்தது. ஆனால் சாப்பிடும் அறையில் 20 பேருக்குத்தான் மேஜை நாற்காலி இருக்கிறது. உடனே 1 முதல் 20 வரை சாப்பிடப் போங்கள் என்பீர்கள். 20 மாணவ மாணவ மாணவியரின் பெயரைச் சொல்லமாட்டீர்கள் . பின்னர் 21 முதல் 40 வரை சாப்பிடப் போங்கள் என்பீர்கள். பள்ளிக்கூடத்தில் விளையாட்டு விழா வந்தால் எல்லா வகுப்புகளையும் 4 அல்லது 5 வர்ணங்களின் அணிகளாகப் பெயர் சூட்டுவீர்கள் . நாளை சிவப்பு அணியும் மஞ்சள் அணியும் கூடைப்பந்தும், நீல அணியும் வெள்ளை அணியும் கால் பந்தும் விளையாடும் என்று போர்டில் எழுதி வைப்பீர்கள். உலக கால்பந்து போட்டிகளில் அந்தந்த நாட்டு கொடிகளின் வர்ணத்துக்கு ஏற்ப பனியன், சட்டை அணிவதை பார்க்கிறோம். இது போல ஒரு சுருக்க வழியை பாணினிதான் முதலில் உலகிற்குச் சொல்லிக்கொடுத்தார் . மஹா அறிவாளி . மஹா ஜீனியஸ் . ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பதில் வள்ளுவரை எல்லாம் முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார்.
அதுவும் 2700 ஆண்டுகளுக்கு முன்னர்!
இப்போதுள்ள எந்த மொழியிலும் இலக்கணம் என்பதே இல்லாத காலத்தில்!
இதனால்தான் இந்தப் பாணினியை இன்று உலகமே போற்றுகிறது .
ஒரு மனிதனுக்கு இவ்வளவு அறிவு இருக்க முடியுமா என்று வியக்கிறது. ஆயிரம் ஐன்ஸ்டைன்களை முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார் அவர் E = mc2.ஈ = எம் ஸி கொயர்ட் என்றார். இவரோ ‘இகோணசி’ என்றார். இதை பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை விளக்குவத்தைச் சொல்லுவதற்கு முன்னர் பாணினி இந்த உத்திக்கு இந்த டெக்கினிக்கிற்கு என்ன பெயர் கொடுத்தார் என்று காண்போம்.
பிரத்தியாஹாரங்கள்
பாணினி பிரத்தியாஹாரம் அமைக்கும் விதத்தை ஒரு சூத்திரத்தில் விளக்கியுள்ளார் 1-1-71
ஒரு சூத்திரத்தில் தேவையான எழுத்துக்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விவரித்துக் கூறாமல் அதற்குள் அடங்கும் எழுத்துக்கள் எல்லாவற்றையும் சுருக்கமாக பிரத்தியாஹாரங்கள் மூலம் சுட்டலாம் .இதற்காக சிவ சூத்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் பாணினி பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார்.
எடுத்துக்காட்டாக ‘அச்’ என்ற பிரத்தியாஹாரத்தைப் பயன்படுத்தினால் எல்லா உயிர் எழுத்துக்கள் என்று அர்த்தம்.
இதைப் போல ‘ஹல் ‘ என்ற பிரத்தியாஹாரம் எல்லா மெய் எழுத்துக்களையும் குறிக்கும்.
தமிழில் இதைப் பயன் படுத்தினால் உயிர் எழுத்துக்களுக்கு பிரத்தியாஹாரம் – ‘அஒள’
மெய் எழுத்துக்களுக்குப் பிரத்தியாஹாரம் – க்ன் அல்லது ‘கன’
இதனால் மீண்டும் மீண்டும் மெய் எழுத்து, உயிர் எழுத்து என்று சொல்ல வேண்டியதில்லை.
பாணினி இத்தோடு நிறுத்தவில்லை. இது போல 41 பிரத்யாஹார (PERMUTATIONS AND COMBINATIONS) சூத்திரங்களைப் பயன்படுத்துகிறார்.
பள்ளிக்கூடத்தில் விஞ்ஞான ஆசிரியர் வானவில்லின் 7 நிறங்களை அதே வரிசையில் நினைவிற்கொள்ள ‘விப்ஜியார்’ VIBGYOR என்று சொல்லித் தருவது போல இது.
VIOLET, INDIGO, BLUE, GREEN, YELLOW, ORANGE, RED வயலெட், இந்திகோ , ப்ளூ , க்ரீன் யெல்லோ , ஆரஞ்சு , ரெட் என்பது போல.
சுருங்க உரைப்பதில் , ஒரு அசை (SYLLABLE) லாபமானாலும் கூட அதைப் புத்திரப்பேறாக எண்ணி மகிழ்வர் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்
இகோயணசி
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார் :–
பாணினி , குறியீடுகளையும் தாமாகப் படைத்துக்கொண்ட சொற்களையும் ஆண்டிருக்கிறார் . இவை ALGEBRA பீஜ கணிதக் குறியீடுகள் — அல்ஜீப்ரா — போல, பணிநிய இலக்கணத்திற்கு உதவின; இவற்றைப் பயன்படுத்தித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மொழி பற்றிய பீஜ கணித — அல்ஜீப்ரா- நூலை இவர் எழுதினார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும் .
உதாரணமாக , நிலை மொழி ஈற்றில் இ, உ, ஐ, ஸ என்ற இவ்வெழுத்துக்கள் குறிலாகவேனும், நெடிலாகவேனும் நின்று வருமொழி முதலில் உயிர் வருமாயின் நிலை மொழியீறு ய் , வ் ,ர் , ல் என முறையே திரியும் . இவ்விதியை ‘இகோ யணசி’ என்ற சூத்திரத்தால் பாணினி குறித்துள்ளார்.
இங்கே ‘இக்’ என்பது இ உ ய ஸ என்பதையும் ‘யண்’ என்பது ய் , வ் , ர் , ல் என்பவற்றையும் ‘அச்’ என்பது உயிர் எழுத்துக்களையும் குறிக்கும் இவர் இலக்கணத்தை உணர்ந்து கொள்வதில் ஞாபக சக்தி பெரிதும் வேண்டப்படும்
ஒரு விதியின் பொருளை உணர வேண்டுமாயின், அவ்விதிக்கு முன்னருள்ள அனைத்து விதிகளையும் ஞாபகத்தில் வைத்தலோடு தாது பாடத்தையும் கண பாடத்தையும் மனனம் பண்ணியிருக்கவேண்டும்.