ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்??? (Post No.8839)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8839

Date uploaded in London – – 22 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 3                                                 

Compiled by Kattukutty

அம்மாவின் அன்பு தோசை மாதிரி

அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி,

தோசையின் ருசி தெரியும்

தோசைக்கல்லின் தியாகம் தெரியாது.

xxx

ஒருபொண்ணைப பிடிக்கல்லைன்னா அவ, சானியா மிர்சாவாக இருந்தாலும் தொடமாட்டோம்

அந்த பொண்ண பிடிச்சுப் போச்சுன்னா அவ, சாணி அள்ளறவளா இருந்தாலும் விடமாட்டோம்!!!

xxx

ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்???

ரேஷன்லே எடை குறையும் !!!

பேஷன்லே உடை குறையும்!!!

xxx

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்,

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் உன்னை மிதிக்கும்……

xxx

எல்லா துன்பங்களுக்கும் மருந்து இரண்டு உண்டு

ஒன்று காலம் , இன்னொன்று மவுனம்

Xxx

கோபம் மனதில் இருக்கக கூடாது,வார்த்தையில்தான் இருக்க வேண்டும்.

அன்பு என்பது வார்ததையில் மட்டுமே இருக்கக் கூடாது, மனதிலும் இருக்க வேண்டும்

Xxx

கடவுள்கிட்டையும் டாக்டர் கிட்டையும் கோபமா பேசக்கூடாது.

கடவுள் டென்ஷ tension னானா நோயை வரவழைச்சு டாக்டர் கிட்ட அனுப்பிச்சுடுவார்…….

டாக்டர் டென்ஷனானா tension கடவுள் கிட்ட அனுப்பிச்சுடுவார்!!!

xxxx

பணம் நிம்மதி தராதுன்னு எந்த ஏழையும் சொன்னதில்லை,

நிம்மதி இல்லாத பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாரில்லை !!!.

Xxxx

உலகத்தில மிக முக்கியமான விஷயம்……

தினசரி அசிங்கப்படுத்தப்பட்டு, ஒதுக்கிவைக்கப் பட்டு

இருந்தும், தினம் தினம் உபயோகப்படுத்தப்படுவது TOILET !!!

Xxx

நேற்று என்பது பழைய பேப்பர், இன்று என்பது நியூஸ் பேப்பர்

நாளை என்பது கொஸ்டின் பேப்பர், வாழ்க்கை என்பது ஆன்ஸர் பேப்பர்……கவனமாக எழுது, வெற்றி உனக்கே!!!!

xxxx

ரோட்ல போற பொண்ணப் பாத்தா, ,பொறுக்கி,ன்னு சொல்றாங்க

வீட்ல போய் பொண்ணப் பாத்தா வாங்க மாப்ளேன்னு கும்பிடறாங்க………

xxx

ஆணுக்குப் பெண் சமம்னு அறிவு மூலமா காட்டணும்,

அவுத்து காட்டக்கூடாது………

Xxx

தோல்வி என்று ஒண ணு இல்லவே இல்லை,

அனுபவத்தின் மறு பெயர்தான் தோல்வி

அதனால் வெற்றியைப் பெற்றுக்கொள், தோல்வியில் கற்றுக்கொள்!!!!

xxxx

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழாதே

உன் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை உனக்கு துணை வரும்…..

யார் கண்ணீரையும் நீ துடைக்க வேண்டாம்,

யார்கண்ணீருக்கும் நீ காரணமில்லாமல் இருந்தால் போதும்…….

xxx

உன் தாய் உனக்குப் பெயர் வைத்தது உன் கல்லறையில்

எழதுவதற்கல்ல, சரித்திரத்தில் எழுதுவதற்கு!!!

தவறே செய்யாத மனிதனேஇல்லை,

தவறைத் திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை!!!

xxxx

மொட்டை

இருக்கும் வரை தந்தையின் தலையை,

இறந்த பின் தந்தைக்காக தன் தலையை……

Xxx

xxx

ஆண்களின. உயிரை ஒரே சமயத்தில் எடுத்தால் யமன்,

தினம் தினம் எடுத்தால் WOMEN !!!

xxx

உன்னை மதிப்பவருக்கு மலராய் இரு,

உன்னை மிதிப்பவருக்கு முள்ளாய் இரு.

xxx

மயில் – நான் இந்தியாவிற்கே தேசீயப் பறவை

கிளி – போடா போ, நான் இந்தியாவிற்கே ஜோசீயப் பறவை!!!

xxx

உன் மனைவி எடுக்கும் முடிவுகளைப் பார்த்து நீ சிரிக்காதே!!!

உன்னை உன் மனைவி தான் தேர்ந்தெடுத்தாள் என்பதை மறவாதே!!!

xxx

எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன், நிறைய சட்டைகள்,

என் சட்டையைப் பார்த்தேன் நிறைய ஜன்னல்கள்!!!

xxxx

என் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது,

நடித்தால் நாடே கிடைக்கும்!!!

xxxx

எதையும் சிந்தித்துச் செயல்பட்டால் நமக்கு கிடைப்பது வெற்றி!!!

எதையுயும் செய்துவிட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பதுஅனுபவம்!!!

xxx

கை, கால்கள், எல்லாம் நல்லாதானே இருக்கு,

உழைச்சு வாழ வேண்டியதுதானே என்று பிச்சைகாரனிடம் கேட்கும்

இதே வார்த்தையை கோவிலில் இருக்கும் சாமி

நம்மிடம் சொன்னால்???.

tags-  நவீன ஞானமொழிகள் – 3                

—subham—

மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)-(Post No.8838)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8838

Date uploaded in London – – 22 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)

ச.நாகராஜன்

மஹரிஷி வியாஸரின் பூர்வ ஜென்மம் பற்றிய விவரம் ஒன்றை மஹாபாரதம் கூறுகிறது.

இதை சாந்தி பர்வம் 359வது அத்தியாயத்தில் காணலாம்.

இந்த வரலாறை ஜனமேஜயர் வைசம்பாயனரிடம் கேட்கிறார். ஜனமேஜயர் முன்னொரு காலத்தில் நடந்ததை விவரிக்கிறார்.

 வராகம், நரசிம்மம், வாமனம், முதலிய அவதாரங்களை எடுத்த பகவான் ஸ்ரீ ஹரியானவர் அசுரர்களை அழித்து பூபாரத்தை நீக்கினார்.

பின்னர் அவர் ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும்படியாக ‘போ:’ என்ற சப்தத்தை உச்சரித்து அருளினார்.

அதிலிருந்து ‘ஸாரஸ்வத்’ என்ற ஒரு ரிஷி உண்டானார். அவருக்கு அபாந்த்ரதமஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

அவர் மிகுந்த தவ மஹிமை உடையவர். முக்காலங்களையும் உணர்ந்தவர். சத்தியத்தையே பேசுபவர். திடமான விரதங்களை அனுஷ்டிப்பவர். அவர் அஞ்ஞானத்தை முற்றிலும் போக்கியபடியால் அவ்விதத் தன்மை உடையவர் என்ற பொருள் படும்படி மேலே கூறியபடி ‘அபாந்த்ரதமஸ்’ என்ற பெயரும்

ஸ்ரீமந் நாராயணருடைய வாக்கிலிருந்து ஜெனித்ததால் ‘ஸாரஸ்வதி’ என்றும் காரணப் பெயர்கள் உண்டாயின.

அம்முனிவர் நாராயணரை வணங்க அவர் முனிவரை நோக்கிக் கூறலானார் இப்படி :” ஓ! அறிவை உடையவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! நீர் வேதங்களைப் பகுக்கும் தொழிலை மிகவும் கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஆகவே, நீர் எனது கட்டளைப் பிரகாரம் செய்யக் கடவீர்”

அதன்படியே அந்த முனிவரும் வேதங்களைப் பிரித்து ஒழுங்காய் அமைத்தார்.

 அவருடைய அரிய செய்கையைக் கண்ட ஸ்ரீ ஹரி மிகவும் திருப்தி அடைந்தார். அவரது அரிய தவம், ஆசார ஒழுக்கம், விரதம், இந்திரிய நிக்ரஹம் ஆகியவற்றைக் கண்டும் பகவான் மகிழ்ச்சியுற்றார்.

பின்னர் அவர் முனிவரைப் பார்த்து, “ஓ! குமாரனே! ஒவ்வொரு மன்வந்தரத்திலும் நீர் இந்தப் பிரகாரம் வேதங்களை வகுத்துத் தருவீராக. இந்தப் பணியால் ஒருவராலும் மீற முடியாததும் மாறுதலை அடையாததும், சாஸ்வதமுமான உயரிய நிலையை அடையக் கடவீர்.

கலியுகம் ஆரம்பிக்கும் காலத்தில்  பரத வம்சத்தில் உதித்து கௌரவர்கள் என்ற பெயரை உடைய ராஜகுமாரர்கள் உம்மிடத்திலிருந்து பிறப்பார்கள். அவர்கள் சிறந்த நாடு நகரங்களை அரசாண்டு கீர்த்தி பெற்றவராய் விளங்குவர். நீர் இல்லாத காலத்தில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு நாசத்தை அடைவார்கள். அப்போது நீர் மிகுந்த சக்தி உடையவராய் வேதங்களை எல்லாம் பல பிரிவுகளாகப் பகுப்பீர். தர்மக் குறைவால் இருளுண்ட அந்த யுகத்தில், உம்முடைய தேகமும் கறுப்பு நிறமாக இருக்கும். அநேக தர்ம சாஸ்திரங்களையும், நியாய சாஸ்திரங்களையும் நீர் ஏற்படுத்துவீர். அவ்வளவு தவ மஹிமையை நீர் பெற்றாலும், உலகப் பற்றுகளிலும்,

ஆசாபசங்களிலுமிருந்து நீர் நீந்த முடியாதவராக இருப்பீர். ஆனால் உமது புத்திரனோ, மஹாதேவருடைய அருளால், எவ்விதப் பற்றும் அற்றவனாய் பரமாத்மாவைப் போல விளங்குவான். இப்படியே நடக்கும்.

பிரம்மாவினுடைய மானஸீக புத்ரர் என்று கற்றறிந்த பிராமண சிரேஷ்டர்களால் கூறப்படும் மஹா புத்திமானாகிய சிறந்த தேஜஸும் கொண்ட வசிஷ்ட முனிவருடைய வம்சத்திலிருந்து பராசரர் என்ற ஒரு சிறந்த முனிவர் பிறப்பார். அவர் நீர் கலியுகத்தில் அவதரிக்கும் போது உமக்குப் பிதாவாக இருப்பார்.

மூன்று காலத்தையும் அறியும் சக்தி உடையவராக நீர் இருப்பீர். உமது தவ மஹிமையினாலும், எனது அருளாலும் அநேகமாயிரம் வருடங்களுக்கு  முன்னர் நடந்ததைக் கூட அறியும் சக்தியை நீர் கொண்டிருப்பீர்.

நீர் அந்தப் பிறப்பில் என்னை யது வம்சத்தில் அவதரித்த கையில் சக்ரமேந்திய கிருஷ்ணனாகக் காண்பீர்.

என்னிடம் உமக்குள்ள இடையறா பக்தியால் இவையெல்லாம் உமக்குச் சம்பவிக்கும்.

நீர் மஹாத்மாக்களில் ஒருவராக இருப்பீர்.

சூரியபுத்ரரான சனி பகவான் இனி வரும் கல்பத்தில் மனுவாகப் பிறப்பார்.

அந்த மன்வந்தரத்தில் உமது தவ மஹிமை முந்தைய மன்வந்தரங்களை விட அதிகமாக இருக்கும்.

உலகத்தில் நடக்கும் அனைத்துச் செயல்களும் என்னுடைய செயலின் பயனே அன்றி வேறல்ல.”

     இப்படி நாராயணர், ஸாரஸ்வத் மஹரிஷியிடம் கூறி அருளினார்.

இவரே ஹரியின் அருளால் வஸிஷ்டருடைய வம்சத்தில் ‘க்ருஷ்ணத்வைபாயனராகப் பிறந்தார். இவரே வியாஸர்.’

இதை ஒரு காலத்தில் வியாஸரே தமது சீடர்கள் கோரிய பிரகாரம் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

ஆக வேத வியாஸரே ஸாரஸ்வத் என்னும் அபாந்த்ரதமஸ் மஹரிஷி! இவரது சரித்திரம் மஹாபாரதத்திலிருந்து நமக்குக் கிடைக்கிறது.

tags- வேத வியாஸர், ஸாரஸ்வத், அபாந்த்ரதமஸ், மஹரிஷி 

TAMIL WORDS IN ENGLISH – PART 7 (Post No. 8837)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8837

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 7

What I am trying to prove is

1.TAMIL AND HIS ELDER BROTHER SANSKRIT CAME FROM SAME SOURCE.

2.BOTH OF THEM SHOW HOW A LANGUAGE CAN DEVELOP IN TWO DIFFERENT WAYS

3.EVEN IF INDUS-SARASVATI RIVER CIVILISATION SCRIPT IS DECIPHERED TOMORROW, YOU WILL SEE 70 % SANSKRIT AND 30% TAMIL WORDS

4.ANY ANCIENT LANGUAGE WORD CAN BE TRACED BACK TO TAMIL OR SANSKRIT

5. OLD LINGUISTIC THEORIES ARE FLAWED

6.THERE IS NO DRAVIDIAN FAMILY OF LANGUAGES. IT IS A BRANCH OF INDIAN LANGUAGE FAMILY

7.WHERE IS THE PROOF FOR ALL THE ABOVE HYPOTHESIS?

IT IS IN THOUSANDS OF TAMIL WORDS IN ENGLISH

IT IS IN THE TAMIL WORDS FOUND IN OLD GREEK

IT IS IN THE ABSENCE OF THOUSANDS OF SANSKRIT WORDS IN SO CALLED INDO-EUROPEAN LANGUAGE FAMILY

ALL INDIAN LANGUAGES EXCEPT TAMIL HAVE OVER 70 PERCENT SANSKRIT WORDS.

XXXXX

Now let us look at E words.

E.1. E/QUIT- KUTHIRAI; குதிரை, துரக , துருக்கி /துரகஸ்தான்

KUTHI IN TAMIL IS JUMP; IT IS A JUMPING/GALLOPING ANIMAL

IF YOU LOOK A THE MIRROR IMAGE, YOU WILL GET ‘THURAGA’ WHUCH LENT THE NAME TO TURKEY TO THE COUNTRY. ARCHAEOLOGICAL EVIDENCE SHOWS TURKEY WAS RULED BY SANSKRIT SPEAKERS FROM 1800 BCE.

KUTHIRAI- THURAGA-TURKEY

E.2. ENEMY – INNAAR, ONNALAR, ETHIRI; இன்னார், ஒன்னலர், எதிரி

ALL 3 TAMIL WORDS STAND FOR ENEMY.

E.3. K/ELEPHANT – IBHAM/ KALABHAM, KALIRU, VEZAM ; இபம், களபம், களிறு வேழம்

THESE TAMIL AND SANSKRIT WORDS SHOW THE ROOT CAN BRANCH OUT IN TWO WAYS

E.4. ERECT – ELU, EZUMBU ; R AND L ARE INTERCHANGEABLE IN ALL THE WORLD LANGUAGES எழு , எழும்பு

E.5 ECLACT – EKKAALAM; VICTORIOUS MUSIC/TRUMPETING; ECLACT MEANS FAME, ACCLAIM, APPROVAL IN ENGLISH. எக்காளம்,

E.6. EAVES- EAR- SEVI IN TAMIL; S/EAVE= SEVI செவி

E.7. ELEMENTUM- LATIN FOR LETTER- ELUTHU IN TAMIL; SAME BRANCHED OUT TO LIPI IN SANSKRIT, GLYPH IN EUROPEAN LANGUAGES. எழுத்து, லிபி

SANSKRIT LIPI GAVE BIRTH TO GLYPH AND LIPI CHANGEDINTO DIPI IN PERSIAN ( SEE DARIUS INSCRIPTION OF SIXTH CENTURY BCE)

E.8. EVERY- OVVORU ; O/VVERY- OVVORU IN TAMIL ஒவ்வொரு

E.9. EMINENT – LATIN ‘MINERE’ MEANS நிமிர்

STAND OUT; TAMIL ‘NIMIR’ IS STAND ERECT

E.10.EIGHT- NUMBER ETTU IN TAMIL. எட்டு

ஒன்று , அஷ்ட – அக்டோபர்

NUMBER ONE AND EIGHT ARE THE BEST EXAMPLES TO SHOW HOW INDIAN ROOT SOUND BRANCHES INTO TWO LANGUAGES

EIGHT IS ASHTA/OCTO IN SANSKRIT AND ETTU IN     TAMIL

ONE IS EINE IN GERMAN; EKAM IN SANSKRIT, ONNU IN TAMIL.

OCTO-BER WAS ASHTOBER, I.E 8TH MONTH. THEN IT WAS MADE 10TH  MONTH.

E.11 – ELAINE – EZINI, EZILI; FEMININE NAME எழினி, எழிலி

E.12. ELEGY – EZAVU/ELAVU MEANS GRIEF ANF CRYING OVER DEATH. எழவு இழவு

E.13. ELONGATE, ELASTIC – IZU/ ILU – PULL, STRETCH இழு

E.14.EDUCATE – EETTU KALVI; LITERALLY PALM LEAF TEACHING ஏட்டுக் கல்வி,

E.15. S/ECONOMIC- SIKKANA MEANS THRIFTY சிக்கனம்

E.16. ENGUS/ GREEK- NEAR AT HAND; HERE; INGU IN TAMIL இங்கு

E.17. EGG ON – EGGINAAN IN TAMIL. எஃகினான்

E.18. ECHO- EKKALAM – ECHOING SOUND. எக்காளம்/ எதிரொலி

E.19. ERROR – ARISHTA IN SANSKRIT AND ARIL   IN TOLKPPIAM அரில்/ அரிஷ்ட

E.20.- EVE- IN BIBLICAL ADAM AND EVE STORY, ADAM/ADMA/ATMA – PARAMATMA; EVE IS JEEVA / EVE/ JEEVATMA ; FROM PARAMATMA’S LEFT CAME EVE. IT IS IN ARDHANARI STATUE AS WELL.           ஆத்மா /ஆடம் , ஈவ் – ஜீவ/ ஆத்மா அர்த்தநாரீஸ்வர

KANCHI SRI PARAMACHARYA (1894-1994) HAS ATTRIBUTED ADAM AND EVE STORY  TO UPANISHAD STORY OF TWO BIRDS EATING FRUITS.

E.21. ETE/FRENCH- KOTAI IS SUMMER  K/ETE- SUMMER- KOTEI IN TAMIL கோடை

E.22.ETAT /FRENCH- STATE ; CAME FROM STAN/STANAM IN SANSKRIT

PAKISTAN, AFGHANISTAN, UZBESKISTAN, KAZAKASTAN ETC – STATE= STAN ஸ்தான் , பாக்கி-ஸ்தானம் , ஆப்கானிஸ்தானம் முதலிய நாடுகள்

E FINISHED             

TO BE CONTINUED……………………………………………         

TAGS- TAMIL WORDS -7

சோறு கண்ட இடம் சுவர்க்கம் (Post 8836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8836

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோறு கண்ட இடம் சுவர்க்கம் — என்ற பழமொழி எல்லோரும் அறிந்த மொழி. மேலும் 7 சோற்றுப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் . ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது. விடைகள் கீழே உளது.

ANSWERS

1.சோறு சிந்தினால் பொறுக்கலாம் , மானம் சிந்தினால் பொறுக்கலாமா

2.சோ ற் றி லே இருக்கும் கல் எடுக்க மாட்டாதவன் சேற்றில் கிடக்கும் எருமையைத் தூக்குவானா

3.சோறும் துணியும் தவிர மற்றத்துக்கெல்லாம் குறைவில்லை.

4.சோற்றால் அடித்த பிண்டம்

5.சோற்றுக்குக் கேடு பூமிக்கு பாரம்

6.சோற்றுக்கும் கறுப்புண்டு , சொல்லுக்கும் பழுது உண்டு

7.சோற்றுக்குத் தாளம் போடுகிறான்

TAGS– சோறு ,சுவர்க்கம் , பழமொழி

–subham–

பேராசைதான் தாடகை – ராம நாமம் தாடகையை வீழ்த்தும் (Post No.8835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8835

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HARRY POTTER AND JURASSIC PARK AND KAMBAN

கம்பன் சொல்ல வந்த விஷயம் தாடகை வதம் ; சின்னக் குழந்தைகளும் அதை விரும்பிக் கேட்கும். பேய், பூதம், பிசாசு கதைகள் என்றால் லட்சக் கணக்கில் விற்கும். இங்கிலாந்தில் பெண்மணி ஜே கே ரோலிங்  (HARRY POTTER BY J K ROWLING ) நம் ஊரில் உள்ள எல்லா  பேய், பூத , பிசாசு, அரக்கிக் கதைகளை எல்லாம் அழகாக ஆங்கிலத்தில் HARRY POTTER ஹாரிபாட்டர் கதை என்று எழுதி உலகின் மிகப்பெரிய, மிகப் பணக்கார எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டாள்; ஹனுமானின் வீர தீரச் செயல்களை எல்லாம் SUPERMAN, BATMAN  சூப்பர்மேன், பேட்மேன் என்று எழுதி பணமும் ஸம்பாதித்து விட்டனர் பலர்; நிற்க .

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் போது குரலை ஏற்றி இறக்கி, முகத்தை பல கோரமான வடிவங்களில் காட்டினால் அதன் மனதில் கதை அப்படியே பதிந்துவிடும்; கம்பனும் அவன் யாத்த ராமாயண பால

 காண்டத்தில் தாடகை என்னும் அரக்கியை அப்படித்தான் நமக்கு இண்ட்ரட்யூஸ் INTRODUCE செய்கிறான். ஆனால் சிறு குழந்தை கதைக்கு மேலாகப் போய் இரண்டு விஷயங்களைச் சொல்கிறான்

1.பாவங்கள் அதிகம் செய்தலால் ஒருவர் அரக்கி போல ஆவர்

2.பேராசை வந்தால் அவர்கள் தாடகை போல எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அழிவினை அடைவர்

யார்   கையால் அழிவினை அடைவர் ? ராம நாமம் சொல்வோர் கையால் அல்லது அவர்களுடைய சீடர்களால் .

பாடலின் மெஸ்ஸேஜ் MESSAGE   இதோ பாடலிலேயே இருக்கிறது –

உளப் பரும் பிணிப்பு  அறா உலோபம் ஒன்றுமே

அளப்பருங்  குணங்களை அழிக்குமாறு போல்

கிளப்ப அருங் கொடுமையை  அரக்கி கேடு இலா

வளப்பரு மருதவைப்பு  அழித்து மாற்றினாள்

பொருள்

உள்ளத்திலே லோபம் எனப்படும் பேராசை எனும் தீய குணம் ஒன்று இருந்தால் போதும் . அது அளவிட முடியாத நற்குணங்கள் அத்தனையையும் அழித்துவிடும் . அது போல மாறாத வளம் ஊட்டும் இம் மருத நிலத்தை அழித்து பாலை நிலம் ஆக்கிவிட்டாள் தாடகை என்கிறார் விசுவாமித்திரர் .

இது எப்போது நடந்தது ?

அழகான கானகம் வழியே சென்றனர். பின்னர் பசுமையான கங்கைச் சமவெளி நிலங்களைக் கண்டனர்  ஒரு பெரிய பரப்பு மட்டும் மரமும் இன்றி பசுமைப் பயிரும் இன்றி வறண்ட பாலையாகக் காட்சி தந்தது; ராமன் ஏன்? என்று  விசுவாமித்ரரிடம் வினவ அவர் இவ்வாறு விடையிறுத்தார் .

பின்னர் தாடகையை வதம் செய்ததை நாம் அறிவோம் ஆக தாடகை என்பது நம் மனதிலுள்ள பேராசை. அதை அழிப்பது ராமன். அதை அழிக்க உதவுவது ராம நாமம் என்பதே கம்பன் சொல்லாமல் சொல்லும் விஷயம் . இதற்குப் பின்னர் கதை இன்னும் சுவாரஸ்யமாகப் போகிறது

தாடகையை ‘எரியும் கருப்புமலை’ — எரிமலை – என்று கம்பன் வருணிக்கவே அவள் எங்கே? என்று ராமன் கேட்கிறான். உடனே கம்பன் JURASSIC PARK ‘ஜுராஸிக் பார்க்’ சினிமா எடுத்த டைரக்டர் ஆகிவிடுகிறான் . உலகம் முழுதும் டைனோசர் என்னும் அழிந்துபோன ராட்சதப் பிராணிகள் பற்றிய படம்  (JURASSIC PARK BY STEVEN SPIELBERG) எடுத்தவர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் . அவர் டைனோசர் பற்றி நமக்கு எப்படி திகில் ஊட்டுகிறார் ? காட்டில் சின்னப் பையன்களுடன் போன குழு,  ‘தும்’ ‘தும்’ என்ற பிரம்மாண்டமான சப்தத்தைக் கேட்கிறது . உடனே ஒருவரை ஒருவர் வினாக்குறி முகத்தில் தோன்ற பார்க்கின்றனர். அப்போது ராட்சத டைனோஸரஸ் புகுந்து எல்லாவற்றையும் அழிக்கிறது . அந்த டைனோஸரஸ் வருவதற்கு முன்னர் தண்ணீரில் அலைகள் எழும்புவதை பார்த்து நாமும் ஏதோ நிகழப்போவதை அறிகிறோம். . இதை ஸ்டிவன் ஸ்பீல்பர்க் , கம்பனிடமிருந்து  ‘காப்பி’ COPY அடித்தாரோ என்று தோன்றுகிறது. தாடகையை மனிதர்களை உண்ணும் கனிபல் CANNIBAL என்று  விஷ்வாமித்ரன் வருணிக்க அவள் எங்கே என்று கேட்கிறான். அதற்கு விசுவாமித்திரர் பதில் சொல்லி முடிப்பதற்குள், ஜுராசிக் பார்க் டைனோசர் வந்தது போல, ‘மைவரை நெருப்பு எரிய வந்தாள் அரக்கி’. அவள் வந்த பொது ஏற்பட்ட குழிகளை கடல் வந்து நிரம்பியதாம். மலைகள் இடம்பெயரும் வண்ணம் பூமி அதிர்ச்சி உண்டாகியதாம். எம தர்மனோ பாதாளத்துக்குள் போய் ஒளிந்து கொண்டானாம். இதை நீங்களே கம்ப ராமாயண பால காண்டத்தில் தாடகை வதைப் படலத்தில் படித்து அறிக.

tags- தாடகை, வதை, ராம நாமம், பேராசை

–SUBHAM–

ரகஸியம் பரம ரகஸியம்!- Part 2 (Post No.8834)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8834

Date uploaded in London – – 21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சித்த மருத்துவ ரகசியங்கள், பரிபாஷை குறித்து விளக்குவீர்களா ?- 2

Broadcast and telecast at Facebook.com/ gnanamayam on 19-10-20

First part was posted yesterday 20-10-20

சர்வ சக்தி வாய்ந்த சத்திய சித்தர்கள்

மேற்கண்ட வெறி பிடித்த மனிதர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற

தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளைப் பாடல்களாகப் புனைந்து

பரிபாஷைகளில் மறைத்து எழுதினார்கள் சித்தர்கள்!!!

அவர்கள் நினைத்திருந்தால் சொல்லாமலேயே சென்றிருக்கலாம். தங்கள் சக்தியை வைத்து உலகத்தைத் தன் காலடியில் வைத்து ஆட்டியிருக்கலாம், தங்க மழையில் குளித்திருக்கலாம், ஆனால் எந்த வியாதியையும் தீர்க்கும் நவபாஷாண சிலையை செய்து பழனியில் நிறுவினார் போகர்!!! உலகப்புகழ் பெற்ற தஞ்சைக் கோவிலைக் கட்டினார் கருவூரார்.வெளி நாட்டிற்கு சென்று

வியாதியை அவர்களுக்கு தீர்க்க யாக்கோபு என்று மதம் மாறி

மீண்டும் வந்து மதுரையில் அருகில் உள்ள அழகர்மலையில்

மறைந்தார் ராம தேவர்.நவக்கிரகங்களையே மாற்றி 12 வருடமாக மழையே இல்லாத திருவண்ணாமலையில் மழையைப் பெய்ய வைத்தார் இடைக்காடர் என்னும் சித்தர்……

தனக்குத் தெரிந்த வித்தைகளை ஜோதிடம் , வைத்தியம் என்று எழுதாத சித்தர்களே கிடையாது. பரி பாஷையில் வைத்து, உண்மையிலேயே தேடுபவர்களுக்கு கிடைக்கும், என ஆசீர்வதித்து மறைந்தனர்

பரி பாஷை என்றால் என்ன???

சின்ன வயசுலே எங்க அம்மாவை பெத்த அம்மா பாட்டி கை முறுக்கு செயது கொண்டு வருவாள் , ரொம்ப ரொம்ம சுவையாய் இருக்கும்.

நாங்க தெரியாமல் எடுத்து தின்னாமல் இருக்க ஒரு நாளைக்கு ஒரு இடமாக ஒளித்து வைப்பாள் அம்மா. நாங்கள் பாட்டியிடம் கெஞ்ச

பாட்டு அம்மாவிடம்கேட்பாள். கமு கறு க்க் க்கு க எ கங் ககே கயி

கரு க்க் க்கு?.. அம்மா சொல்லுவாள் கதூ க க் க்கி கல் கஇ கரு க க்

க்கு…..முறுக்கு எங்க இருக்கு …….தூக்கில் இருக்கு எல்லாம் கனா

பாஷை தான் அது. இது தெரியாமல் நாங்கள முழித்த காலம் அது.

அது போல, சித்த வைத்தியத்தில் சில தொழில் நுணுக்க சொற்களை அந்த பொருளின் பெயரை வேரொரு பெயரினால் குறிப்பிட்டு மற்றவர்களுக்கு தெரியாமல் சொல்லப்படும் முறைக்கே “பரிபாஷை “ எனப் படும்.

எல்லா மருந்துகளையும் வசன நடையில் எழுதாமல் சுருக்கமாக பாடல்களாக எழுதி எதுகை மோனைகளுக்காக சில இடங்களை திருத்தியும், மாற்றியும், மறைத்தும் பாடியுள்ளனர்.

உதாரணமாக “முசு” என்றால் குரங்கைக் குறிக்கும். ஒரு பாடலில்

“இரு குரங்கின் கையையும்சேர்த்து” என்றால், முசு முசுக்கை பச்சிலையும் சேர்த்து எனப் பொருள் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக,

ஒருசில மருந்து சரக்குகளின் கூட்டு எண்ணிக்கையின் பெயர்களும்

(அதாவது தொகுப்பு எண்ணிக்கையின் பெயர்களும் இதில்

அடங்கும்.) பரிபாஷையாக வரும்.

மூன்றாவதாக

வழங்கு சொல்வேறு பாடு

 உதாரணமாக மணிலாக் கொட்டை, சில இடங்களில் மணிலாக் கொட்டை எனவே வழங்கப்படும். இது நிலத்தில் விளைவதினால் நிலக் கடலை எனவும், வேரிலிருந்து வருவதினால், வேர்க்கடலை என்றும் பல இடங்களில் ஒரே பொருள்

அழைக்கப் படுகிறது.

கொல்லுதல் அல்லது மடித்தல்

உலோக, ரச, கார,சாரங்களுக்கு இயற்கையாய் அமைந்த கெட்ட பண்புகளைப் போக்குவதற்கு எதிர் தன்மையுள்ள மருந்துகளால் “கொல்லுதல்” அல்லது “மடித்தல்”

உதாரணம்- தாளகத்தின் விஷத்தன்மையை கொல்ல கண்டங்கத்திரி

வெடியுப்பின் விஷத்தை கொடி வேலி வேரும்,

காரீயத்தை மனோசிலை வேரும் “மடிக்கும்” அல்லது “கொல்லும்”

சுருக்கு கொடுத்தல்

பாஷாணங்களை அகலில் வைத்து எரித்து பழுக்க வைத்து உருக்கிய பின் அததற்குரிய பால் நெய் சாறுகளில் ஊற்ற, அப்போது “சுருக்”

“சுருக்”. சப்தத்துடன் கெட்டியாகும். இதை சுருக்குக் கொடுத்தல் என்பார்கள்

சாரணையேற்றல்

நெருப்பில் உருக்கி, புகைந்து ஓடுகின்ற ரசத்தை முறைப்படி கட்டியாக்கி ஓடாமல் இருக்கச் செய்வது “சாரணையேற்றல்” எனப்படும்.

வைப்புச்சரக்கு

இயற்கையாக உள்ள உலோகத்தையும் வேறொன்றையும் சேர்த்து

புதிய உலோகமாக்குவது வைப்புச் சரக்காகும்

செம்பு 66 பங்கும், துத்தம் 34 பங்கும் சேர்ந்த புதிய வைப்புச்சரக்கு புதிய உலோகமான “பித்தளை”ஆகும்.

தொகைப் பெயர்

ஒரே தன்மையான, அல்லது ஒரே காரியத்திற்கு பயன்படக்கூடிய கூட்டுச் சரக்குகள் தொகையளவில் பெயர் சூட்டப் பட்டுள்ளன.

திரி கடுகு- சுக்கு, மிளகு, திப்பிலி

திரி பலை – கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக் காய்,

திரி மஞ்சள் – மஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரி, மஞ்சள்

பஞ்ச கவ்யம் – பசுவின் பால், தயிர், வெண்ணெய், நீர்,சாணம்

பஞ்ச சூதம் – ரசம், லிங்கம், ரச செந்தூரம், வீரம், பூரம்

பஞ்ச மித்ரன்- தேன், நெய், வெல்லம், குன்றிமணி, வெண்காரம்

வெருகடி- ஐவிரல் அளவு

திரிகடி – மூன்று விரல் அளவு

மேலும் இதை விளக்கிக் கொண்டே போகலாம்

சித்த வைத்தியத்தினால் உண்டாகும் நன்மைகள்

1)நீண்ட ஆயுள்

2)வியாதியே வராமல் தடுப்பது

3)நினைவாற்றல் பெருகுவது

4)நுண்ணறிவு

5)இளமை

6)உடல் பொலிவு,அழகு

7)நிறம்

8)எடுப்பான குரல்

9)திறமை

நேரம்கருதி முடிக்கிறேன்!!! நன்றி, வணக்கம்!!!

KATUKKUTY DR S SRINIVASAN

TAGS-   ரகஸியம், பரம ரகஸியம், Part 2 

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 2 (Post No.8833)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8833

Date uploaded in London – – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

Broadcast and telecast at Faceboo.com/ gnanamayam on 19-10-20

First part was posted yesterday 20-10-20

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா? – 2

ச.நாகராஜன்

ஆரிய என்ற சொல் பாரதியாரின் தேசீய கீதங்களில் 24 இடங்களில் வருகிறது.

  ஜய வந்தே மாதரம் பாடல்:

ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

எங்கள் நாடு பாடல்:

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

பாரத மாதா பாடல்:

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்.

சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்.

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? – எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.

இங்கெல்லாம் ஆரிய தேவி என பாரத தேவியைக் குறிப்பிடுகிறார் பாரதியார்.

அடுத்து எது ஆரிய நாடு என்பதைத் தெள்ளத் தெளிவாக பாரத தேவியின் திருத் தசாங்கத்தில் குறிப்பிடுகிறார். பாரத நாட்டின் எல்லையையும் வகுத்துக் கூறும் அருமையான பாடல் இது.

தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! – வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.

தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடிய கவிஞர் அனைவரும் அணிவகுத்து நிற்கும் காட்சியை ஆரியக் காட்சி என்கிறார்.

அணியணி யாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?

ஆரியம் என்பதை வடமொழி என்று குறிப்பிட்டு பாரதியார் சொல்லும் இடமும் உண்டு.

தமிழ்த்தாய் பாடலில்,

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்

 என்று இங்கு ஆரியத்தை வடமொழி என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.

தமிழச் சாதி பாடலில் பாரதத்தை ஆரிய நாடு என்று அறிவிக்கிறார்.

மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,
அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும் – … …

வாழிய செந்தமிழ்! பாடலில் ஆரியன் என இறைவனைக் குறிப்பிடுகிறார்.

ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!

ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?

வீர சிகாமணி! ஆரியர் கோனே!

பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!

சத்ரபதி சிவாஜி பாட்டில் ஆரியன் என்பதற்கு ஒரு DEFENITION தருகிறார் இப்படி:

தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்

ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!

அடுத்து ஆரிய நீதி என்பது அறநூல்கள் காட்டும் வழி செல்வதேயாம் என்பதை இப்படிக் கூறுகிறார்:

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!

குரு கோவிந்தர் பாட்டில் ஆரியர் ஒரே ஜாதி அதாவது இந்த பாரத நாட்டில் வாழும் அனைவரும் ஆரிய ஜாதி என்றும் இதைப் பிளவு படுத்தி ஜாதிகள் பல பேசும் அனைவரும் மாய்க என்றும் கூறுகிறார்.

ஹிந்து இனம் ஒரே இனம் என்பது அவரது அடிப்படைக் கொள்கையாக அமைவதை இங்கு காண்கிறோம். பாடல் இது தான்:

சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும்

லாஜபதியின் பிரலாபம் என்ற பாடலில் வரும் வரிகள் இவை:

ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.

ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு.

இங்கெல்லாம் ஆரிய நாடு என்றால் பாரதம் ஆரிய தேவி என்றால் அன்னை பாரத தேவி என்ற பொருளையே காண்கிறோம்.

தெய்வப் பாடல்களில் 3 இடங்களில் வரும் ஆரிய என்ற சொல்லும் சுயசரிதையிலும் ஞானப்பாடல்களிலும் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வரும் ஆரியர் என்ற சொல்லும் பண்பாடுள்ளவர் என்ற பொருளில் வருகிறது. அதே போல பாஞ்சாலி சபதத்தில் வரும் 7 இடங்களிலும் இதே பொருளே அமைகிறது.

ஆக பாரதியார் அப்படியே அடி வழுவாது இந்த பாரத நாட்டை ஆரியர் நாடு என்றும் பண்பாளரை ஆரியர் என்றும் அறநூல்கள் வழி நடப்பவரை ஆரியர் என்றும் கூறி இருக்கிறார்.

ஆரியம் என்ற சொல்லை வடமொழி என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.

ஆரியன் என்பதை ஹிந்துக்கள் வழிபடும் இறைவன் என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.

தேவாரம், பண்டைய இலக்கியம் கூறியதற்கு ஒரு படி மேலே போய், காலத்தால் பின்னால் தோன்றியதால் தெளிவாக ஹிந்து தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத நாட்டை ஆரிய நாடு என்று அறிவிப்பதோடு தேசபக்தி இல்லாதோர் ஆரியர் அல்லர் என்றும் ஆரிய இனம் ஒரே இனம் என்றும் இதில் இன, ஜாதி போன்ற வேறுபாடுகளை வகுப்பவர் மாய்ந்து ஒழிக என்றும் கூறுகிறார்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ஆரியன் திராவிடன் என்ற பொய்யான வாதங்கள் எல்லாம் அவர் பாடல்களால் பொடிப் பொடியாகிப் போகிறது. சங்க இலக்கியமும் தேவாரமும் சுட்டிக் காட்டும் நல்ல பொருளே அவர் பாடல்களிலும் அழுத்தமாக நிலைபெறுகிறது. வாழ்க பாரதி நாமம்!

***

tags- ஆரியன், திராவிடன், பாரதியார்

TAMIL WORDS IN ENGLISH – PART 6 (Post No.8832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8832

Date uploaded in London – –20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 6

Now let us look at D words.

D.1. DIVINE- DEVAN- ALSO DEVI – DEO IN LATIN; தேவன், தேவி, தேவ , தெய்வ, காண்க- குறள் , புறநாநூறு DIVINE IN EGLISH; DEVAN AND DEVI ARE USED IN 2000 YEAR OLD SANGAM LITERATURE

D.2. DRAGON- ARAKKAN; த/அரக்கன்

D. 3.DOLERE / LATIN– THALARVU; THALARCHI/ தளர்வு, தளர்ச்சி

D.5. DOYEN- CHIEF; THALAIVAN தலைவன் 

D.6.DUST, DROSS – DUSI, DUSU; தூசு, தூசி, துருசு, துரும்பு

D.7.D/RUIDS-  DRUVA/ URUTHI; ட்ருய்ட்ஸ் / துருவ நட்சத்திரம்/ த்/ உறுதி, நிலைத்த

D.8.D/UMB- UUMAI த்/ஊமை

D.9. DICE. DAAYAK KATTAI தாயக் கட்டை

D.9. DELIGHTED – THILAITHTHAAN திளைத்தான்

D.10. DINE – THIN/ UNN தின் / உண்

D.11. DOZE- THUYIL துயில் /துஞ்சு /தூங்கு

D.12. D/ANGER- ANJU த்/அஞ்சு

D.12. – DOWN/DECLINE- THAAZ தாழ்

D.13. DEVOTE- THVAM; தவ/ தபோ, SANSKRIT THAPA IS USED IN SANGAM LITERATURE

D.14.DERIVE – THERIVU, THERVU, THIIRVU தீர்வு தெரிவு தேர்வு

D.15. DRAPE- THIRAI திரைச் சீலை

D.16. DANCE- THAANDU/JUMP; TAANDAVA தாண்டு /தாண்டவம்; நட /நடி – நடன, நடை , நாடக

ANOTHER DERIVATION- NA/DANCE- NADANA; TAMIL NATI/ACT

D.16. DUVET- THUPPATTI துப்பட்டி

D.17. DARK – ADAR ; INTERCHANGE OF LETTERS -ADARK அடர்

D.18.DORIS, DOIIANS, DOREANS – THIRAIYAN, THIRAIYAR; KADALODI திரையன் துறை/வன்

D.19..DAD -THANTHAI; DATHAI, THAKAPPAN கடலோடி தாதை, தந்தை, தகப்பன் ; உறவினர் பெயர் எல்லாம்  தா- வர்க்கத்தில் இருப்பது தமிழின் தனிச் சிறப்பு – தாய், தந்தை, தம்பி, தங்கை, தமையன், தமக்கை, தாத்தா, தாத்தி/மலையாளம் 

BEAUTY OF TAMIL LANGUAGE IS YOU HAVE ALL RELATIONS IN T/D BEGINNING WORDS- THAAY, THANTHAI/THAGAPPAN, THANGAI, THAMBI, THAATHAA, THAATHTHII

D.20. DODGE – THHAKKATTU தாக்காட்டு ,

D.21. DRIZZLE- THUURAL; THUUTRAL தூறல், தூற்றல்,

D.22. DOIT – DHUTTU துட்டு/ தட்டு வடிவ நாணயம்

D.23- DAZED- THIKAITHTHAAN திகை / திகைத்தான்

D.24. DANGLE- THONGAL தொங்கல்

D.25. DUBAI/ABU DHABI/ DOAB–  துபாய், அபு தாபி ;  த்வீப , தீப கற்ப , தீவு DWIPA, DWIPAKALPAMEANS ISLAND OR PENINSULA- IN  TAMIL, TIIVU, TIIPAKARPAM

D.26. DEROGATORY- THARAM KETTA தரக் குறைவான ; தரம் கெட்ட

—TO BE CONTINUED……………………………….

தமிழில், ஆயிரம் ஆங்கிலச் சொற்கள்-6 , ENGLISH WORDS- Part 6

ரகஸியம் பரம ரகஸியம்!- Part 1 (Post No.8831)

சித்த மருத்துவ ரகசியங்கள், பரிபாஷை குறித்து விளக்குவீர்களா ?

ரகஸியம் பரம ரகஸியம்!- Part 1 (Post No.8831)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8831

Date uploaded in London – – 20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM  நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.

FACEBOOK.COM/GNANAMAYAM

19-10-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட facebook.com/gnanamayam நிகழ்ச்சியின் உரை இதோ:

ரகஸியம் பரம ரகஸியம்!

Kattukutty

சித்த மருத்துவம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் மங்காமல் வாழ்ந்திருப்பது மருந்துகளினாலும் அதனுடைய ரகஸிய மருந்துக் கலவைகளினாலுமே ஆகும்

புதிய கண்டுபிடிப்புகள், புதிய ஆய்வுகள், வளர்ச்சிகள் இருந்தாலும்

நவீன முறையில் செய்யப்படும் மருந்துகள் தாற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. சித்த மருந்துகளோ நோயின் அடித்தளத்தையே தாக்கி மக்களை நலமடையச் செய்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் மருந்துகளை தேர்ந்தெடுத்த விதமும் தயாரிக்கும் முறைகளும் தான். இவைகள் ஒருகாலத்தில ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன……. ஏன்???

புதையல் ரகசியம்

இக்காலத்திலும் சரி, முன் காலத்திலும் சரி மனிதர்களுக்குத் தேவை

காசு, பணம், துட்டு மணி, மணி, காசு,,பணம், துட்டு, மணி மணி…….

இக்காலம் போல அக்காலத்தில், பேங்க், சேப்டி லாக்கர் கிடையாது.

பணம், நகைகளைப் பாதுகாக்க ஒரு குடத்தில், பானையில் வைத்து

பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் ஒரு அரசன் தோற்று ஓடும் போதும் ஜமீந்தார்கள், குறு நில மன்னர்கள், பாளையக்காரர்கள்,

பண்ணையார்கள், தனக்கு மிகுதியான பணத்தைப் புதைத்து வைத்திருப்பார்கள்.

இது இருக்குமிடம் ரகசியமாக சங்கேத குறியுடன் அதாவது ஒரு பரிபாஷையுடன் இருக்கும்.

சிலர் மந்திரவாதிகளைக் கொண்டு பூதங்களைப் பாதுகாவலாக வைப்பார்கள்.அதற்கும் ஒரு சீக்ரட் கோடு வேர்டு உண்டு

இப்பொழுது புதையலை கண் கூடாகப் பார்க்கும் ஒரு சித்தர் பாடலை உங்களுக்கு தரப் போகிறேன். புதையல் கிடைத்தால் எனக்கும், திரு.சாமிநாதன், மற்றும் திரு கல்யாண்ஜி குழுவினருக்கும் பங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

இந்தப்பாடல் time and vedas ல் இடம் பெறும். கண்டிப்பாக உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கும் கூறவும்.

ஆம ப்பா வெண்ணையிலே தேனை தேய்த்து

ஆதளையின் பாலைக் கூட்டிஅடைவாய்தேய்த்து

ஓம ப்பாதிலர்தமிட தன்னைக் காணார்

ஓங்கி நின்ற உரு மாற்றம் ஒருவர் காணார்

போம ப்பா வெண்டிசையும் கால் வேகங்கொண்டு

பூமிதனை மறைந்தனைத்தையும் பொலிவாய்காண்பர்

வேம ப்பா அண்டரண்டம் வழலைப்பட்டால்

வேதாந்த பஞ்சார்தனெனச் சொன்னாரே!!!

தெய்வீக ரகசியம்

முன் காலத்தில் தென்னாட்டு அரசர்களில் சேர மன்னர்களும்

முக்கியமானவர்களில் ஒருவர். தங்கள் ஆட்சியையே கடவுளிடம்

ஒப்படைத்து தங்கள் தேசத்தையே “கடவுளின் தேசம்” என்று

அழைத்தனர்.தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீ பத்மநாப

ஸ்வாமியிடம் ஒப்படைத்தனர். இவை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு

வந்தது. இந்த ரகசியத்தை ஒருவர் பொறுக்காமல் அரச குடும்பத்திற்கு எதிராக கேஸ் போட்டு ரகசியத்தை உடைக்கச் செய்தார்.

அரசாங்க அதிகாரிகள் புடை சூழ கதவுகள் உடைக்கப்பட்டன.

உலகமே வியக்கும் வண்ணம் கோடி கோடி ரூபாய்கள் பெறுமான தங்க, வெள்ளி நகைகள், தங்க காசுகள் கண்டு பிடிக்கப்பட்டு 30 நாட்கள் ஆயிற்று கணக்கெடுக்க.

கணக்கின் முடிவில் உலகத்திலேயே மிக பணக்கார சாமியாக

விட்டார் பத்ம நாப சாமி ( வேடிகன் சிடி தவிர !!!)

முதலிடத்திலிருந்த திருப்பதி சாமி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இது சம்பந்தமாக ஒரு ஜோக் ஒன்றும் நிலவியது.

திருப்பதி சாமி சொன்னாராம் பத்மநாபசாமியிடம்,  “நான் நின்று கொண்டே பல வருஷம் சம்பாதித்தை நீங்க படுத்தகிட்டே ஒரே நாளிலே சம்பாதிசிட்டீங்களே”!!!!

அரசாங்க ரகசியம்

மேலும் சிலவிஷயங்களை இரகசியமாக வைக்க வேண்டியதன் காரணங்கள், குடும்ப, அரசாங்க ரகசியமாகவோ இருக்கும். அரச பரம்பரை துண்டிக்கப் படக்கூடாது என்பதற்காகவும் பரம்பரை சொத்து மற்றவர் கையில் சிக்கி சீரழிந்து விடக் கூடாது என்பதற்காகவும் பரி பாஷைகள் உள்ளன.

நீங்கள் எந்த சினிமா எடுத்துக் கொண்டாலும், அரசன் அரச வாரிசை

கொல்லச் சொல்லுவான். பெரும்பாலும் அது எம் என் நம்பியாராகவோ, பி எஸ் வீரப்பாகவோ, ஆர் எஸ்.மனோகராகவோ எஸ் ஏ அசோகனாகவோ இருக்கும்

அரசனின் அந்தரங்க ஆள், பரிதாப்பட்டு தன் மனைவியிடம் கொடுத்து குழந்தையை வளர்க்கச் சொல்லுவான்.

குழந்தையின் முதுகில் உள்ள மச்சம், கழுத்தில் உள்ள தாயத்து, பிரசவம் பார்த்த தாதி இவைகள் மூலமாக கண்ணாம்பாள் கண்டு பிடித்து குடும்பத்தை ஒன்று சேர்த்து அரசை நிலை நிறுத்துவார்.

ரச மணி ரகசியம்

மந்திர, தந்திர அஷ்டமா சித்தி அடைவதற்காகவும் சித்தர்களின்

ஒரு அரிய கண்டுபிடிப்பு “ரச மணி”. பாத ரசத்தை மூலிகைகள் மூலமாகக் கட்டி, மறைந்து போக, பறக்க, எடை குறைவாக, எடை அதிகமாக ….. இன்னம் பல சித்திகள் அடைந்தனர். இது எல்லா வியாதியும் போக்கும் மிக மருத்துவ குணம் வாய்ந்தது, இதை வைத்திருந்தவர்கள் மிக சக்தி வாயந்தவர்களாக கருதப் பட்டார்கள்.

உதாரணம் காலஞ்சென்ற மதுரை திரு T M சவுந்திர ராஜனை ஒரு சித்தர் சந்தித்து அவரிடம், ஒரு ரச மணி கொடுத்து “நீ பாட்டுலகில் மிகப் புகழ் பெறுவாய் “ என்றார். T M S தன் வாய்ப்பட கூறினார் ஒரு பேட்டியில் இப்படி !!!.45 வருடமாகப் MGR குரலிலும், சிவாஜி குரலிலும் பல வகையாக பாடியதோடு மட்டுமல்லாமல் முருகன் பாடல்களைப் பாடி மெய்யுருக வைத்து புகழ்பெற்றார் ரச மணி மூலமாய்!!!

இதை கட்டும் வித்தை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது  இன்று வரையிலும்!!!

சாகா வரம் பெறும் ரகசியம்

இதற்கெல்லாம் மேலாக அரசர்களும், அரசிகளும், மேலும் பணம் படைத்தவர்களும்,நூறாண்டும் அதற்கு மேல் சாகாமலும் வாழ ஆசைப்பட்டனர்!!!

உடலை திடகாத்திரமாக வைக்க உபயோகப்பட்டது சித்த வைத்திய

மூலிகைகள். இதன் இரகசியத்தை அறிய பல நூறு மைல்கள் சென்று

மலை மீது ஏறி பச்சிலைகளை பறித்து சித்தி பெற்றனர் சித்தர்கள்.

அனைத்து சித்தர்களும் முன்னூறு, நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர். இன்னும கண்ணுக்கு புவப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சர்வ சக்தி ரகசியம்

இதற்கெல்லாம் மேலாக மந்திர சித்தி பெற்று உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த மனிதனாக அதாவது உலகத்தையே தன் கால் கீழ்கொண்டுவர முயற்சித்தவர்கள் தான் அதிகம்!!!

எல்லா மொழி சினிமாக்களிலும் ஒருதிடகாத்திரமான மந்திரவாதி வருவார்

SV ரங்கா ராவ் மாதிரி…..

கண்ணாடி கண்ணாடி காட்டு என் முன்னாடி

என்னை விட சக்தி வாய்ந்தவன் உண்டா இவ்வுலகில்???

கண்ணாடியில் N T ராமா ராவோ, T R மகாலிங்கமோஜெமினி கணேசனோ தெரிவார்கள்…….பிறகு என்ன மந்திரவாதி அவனைக் கொல்ல முயலுவான். கதாநாயகன் ஒரு முனிவர் அல்லது சித்தர் வழி காட்ட மந்திரவாதியை வென்று அரசாட்சியைப் பிடிப்பார் – NTR அல்லது TRM அல்லது JEMINIயோ.

இப்பவும் இந்தப் போட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது

அரசியலில் நடக்கிறது. சமுதாயத்திலும் நடக்கிறது.

அரசியலைப பற்றி பேச விரும்ப வில்லை. ஆனால் ஒரு புள்ளி விவரம்,

இந்தியாவிலேயே மிகப் பெரிய பத்து பணக்காரர்களில் 6 பேர்கள் சாமியார்கள்!!!!

-to be continued…………………………………………………………………….

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 1 (Post No.8830)

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 1 (Post No.8830)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8830

Date uploaded in London – – 20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM  நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.

FACEBOOK.COM/GNANAMAYAM

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா? – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நமக்கு  முன் வந்துள்ள கேள்வி – பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா?

இதற்கான பதில், ஆம், பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல் அற்புதமாக நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழும் போதே ஆரிய என்ற சொல்லைத் தவறான பொருளில் பயன்படுத்துவோரும் உள்ளனர் என்பது மறைமுகமாகத் தெரிகிறது.

ஆம், உண்மை தான். இதற்கான மூலத்தை மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1823ஆம் ஆண்டு பிறந்த மாக்ஸ்முல்லருக்கு மிகுந்த வறிய நிலை இருந்தது. அவரது 22ஆம் வயதில் அவரது தாயாருக்கு 1845ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் அவர் எழுதினார் – ஒரு கப் சாக்லட்டிற்கு இரண்டு ஃப்ராங்க் கொடுக்க வேண்டியிருக்கிறது, இனி ஒரு போதும் இதைச் சாப்பிடக்கூடாது என்று நினைத்தேன். இரண்டு ஃபிராங்கிற்கு வக்கில்லாத நிலை.

அந்தக் கால கட்டத்தில் இந்தியாவை மொத்தமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காலேயை இரண்டாம் முறையாக 1855இல் அவர் சந்தித்தார்.  இந்தியரை மதமாற்றும் மெக்காலேயின்எண்ணத்தை அவர் புரிந்து கொண்டார். பிழைக்கும் வழியும் அவருக்குப் புரிந்து விட்டது. அந்த எண்ணத்திற்கு இணங்க சரியானபடி தாளம் போட்டார். வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்று தன் தாயாருக்கு எழுதினார். மற்றவருக்கு கிடைக்காத பெரிய தொகையான ஒரு தாளுக்கு 4 பவுண்ட் என்று அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. அங்கு தான் வந்தது வினை.

ஆரியர் என்பது ஒரு தனி இனம், அது இந்தியாவில் புகுந்தது என்ற விஷ வித்தை அவர் ஊன்றினார். பின்னால் 1859இல் மெக்காலே இறந்தவுடன் அவர் பயம் போனது. வேதத்தைப் புகழ ஆரம்பித்தார். இந்தியாவின் அட்மைரர் ஆக மாற ஆரம்பித்தார். ஆனால் அவர் செய்ய வேண்டிய டாமேஜ் அனைத்தையும் செய்து விட்டார். அவர் வைத்த வித்து நச்சு மரமாக மாறி ஆரியன் என்பதற்கு ஏராளமான அர்த்தங்கள் தரப்பட்டன; அதையொட்டி இந்தியாவைப் பிளப்பதற்கான சதி ஆரிய வாதத்தால் அரங்கேற்றப்பட்டது. 1896இல் விவேகானந்தர் அவரை அவர் இல்லத்தில் சந்தித்த போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார். அப்போது அவர் இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்தார்.

ஆரியம், திராவிடம் என்ற தவறான கொள்கைகள் பிறந்தது இதன் அடிப்படையில் தான்.

 மெக்காலேயின் இந்தியப் பண்பாட்டை ஒழித்துக் கட்டும் இந்தத் திட்டம் முழுதுமாக அவன் எண்ணப்படி நிறைவேறவில்லை என்றாலும் அந்த விஷமரத்தின் கனிகளைச் சாப்பிட்டவர்கள் அந்த ஆரிய வாதத்தால் ஆதாயம் தேட முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

இந்தப் பின்னணியில் ஆரிய என்பதற்கான அர்த்தத்தை நம் இலக்கியங்களில் பார்ப்போம்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு எட்டுத் தொகை மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்களிலும் தொல்காப்பியத்திலும் ஆரிய என்ற சொல் இல்லை.

சிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற சொல்லை 15 இடங்களில் காண முடிகிறது. ஆரியமன்னர்ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்குவஞ்சி 25/162

அடும்தேர்தானைஆரியஅரசர்வஞ்சி 26/211

ஆரியஅரசர்அமர்க்களத்துஅறியவஞ்சி 26/217

ஆரியமன்னர்அழகுறஅமைத்தவஞ்சி 27/22

இப்படி வருகின்ற இடங்களில் ஆரிய மன்னர் என்று குறிப்பிடப்படுவது வட நாட்டில் ஆண்டுவந்த மன்னரைக் குறிக்கும் சொல்லாக வருகிறது.

மணிமேகலையில் ஒரே ஒரு இடத்திலும் சீவக சிந்தாமணியில் ஒரே ஒரு இடத்திலும் வரும் ஆரிய என்ற சொல்லும் நல்ல பொருளிலேயே வருகிறது.

அடுத்து கம்பராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் 240566 சொற்கள் உள்ளன. இவற்றில் 8 இடங்களில் ஆரிய என்ற சொல் வருகிறது.  

ஆடுஇயல்பாணிக்குஒக்கும்ஆரியஅமிழ்தபாடல்கிட்:10 32/3 தேர்முன்நடந்தேஆரியநூலும்தெரிவுற்றீர்கிட்:17 14/4

ஆரியற்கு என்ற சொல் 3 இடங்களில் வருகிறது.

அளவு_இல்சேனைஅவிதரஆரியற்குஇளையவீரன்சுடுசரம்ஏவினான்.

ஆரியற்கு இளைய வீரன் இலக்குவன்.

அடுத்து ஆரியன் என்ற சொல் 35 இடங்களில் வருகிறது. ஆரியன் என்பது இராமனையே குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு நான்கு இடங்களைப் பார்ப்போம்:

ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – அயோ:5 45/1

ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1

ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் – ஆரண்:13 56/3

அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்  –

அடுத்து சம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளில் உள்ள .பதிகங்கள் 385 பாடல்களின் எண்ணிக்கை 4169 மொத்த அடிகள் 16501.

சொற்கள் மொத்தம்  108252

இவற்றில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆரியத்தொடு என்ற வார்த்தை வருகிறது!

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர் 


கந்துசேனனும் கனகசேனனும் முதலாகிய பெயர்கொளா 


மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா 


அந்தகர்க்கு எளியேன் அலேன் திருவாலவாய் அரன் நிற்கவே.

இங்கு ஆரியம் என்பது வடமொழியைக் குறிக்கிறது. 

அப்பர் தேவாரத்தில் (4,5,6 திருமுறையில்) 312 பதிகங்கள் உள்ளன. 3066 பாடல்கள் உள்ளன. 12256 அடிகள் உள்ளன. 83730 சொற்கள் உள்ளன.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆரியம் என்ற சொல்லும் ஒரு இடத்தில் ஆரியன் என்ற சொல்லும் ஒரு இடத்தில் ஆரியனை என்ற சொல்லும் வருகிறது.

ஆரியம் தமிழோடு இசை ஆனவன் – தேவா-அப்:1246/1

இங்கு ஆரியம் வடமொழியைக் குறிக்கிறது.

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3

செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3

இங்கு ஆரியன் சிவனைக் குறிக்கிறது.

சுந்தரர் தேவாரத்தில் ஒரு சொல் கூட ஆரிய என்று இல்லை.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 3438 அடிகள் உள்ளன. 21798 சொற்கள் உள்ளன.

அவற்றில் இரண்டே இரண்டு சொற்கள் சிவபிரானைக் குறிக்கும் படியாக ஆரியன், ஆரியனே என்று வருவதைக் காண்கிறோம்.

அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே.

ஓரளவு இப்படி சங்க இலக்கியத்தையும் பக்தி இலக்கியத்தையும் பார்த்து விட்டோம்.

இந்தப் பின்னணியில் பாரதியாருக்கு வருவோம்.

                          ***         அடுத்த கட்டுரையுடன் முடியும்

tags- பாரதியார் பாடல், ஆரிய , சொல்