
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9207
Date uploaded in London – –31 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 4 வெளியான தேதி : 25-1-2021; கட்டுரை எண் : 9184
நடந்தவை தான் நம்புங்கள் – 5
ச.நாகராஜன்

1
சமீபத்தில் உலகெங்கும் ஒரு பிரம்மாண்டமான சர்வே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்தபடியே மாபெரும் தோல்வியை அடைந்தது. அப்படி என்ன சர்வே என்கிறீர்களா? சர்வேயில் இருந்த கேள்வி ஒன்றே ஒன்று தான். அது இது தான்:- தயவுசெய்து நீங்கள் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள உணவு பற்றாக்குறைக்கான தீர்வு பற்றிய உங்கள் நேர்மையான கருத்தைத் தருகிறீர்களா?
ஏன் இந்த சர்வே உலகெங்கும் தோல்வி அடைந்தது? காரணம் இது தான்:
ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு “உணவு” என்றால் என்ன என்று தெரியவில்லை.
கிழக்கு ஐரோப்பாவில் அவர்களுக்கு “நேர்மையான” என்றால் என்ன என்று தெரியவில்லை.
மேற்கு ஐரோப்பாவில் அவர்களுக்கு “பற்றாக்குறை” என்றால் என்ன என்று தெரியவில்லை.
சீனாவில் அவர்களுக்கு “கருத்து” என்றால் என்ன என்று தெரியவில்லை.
மத்திய கிழக்கில் அவர்களுக்கு “தீர்வு” என்றால் என்ன என்று தெரியவில்லை.
தென்னமெரிக்காவில் அவர்களுக்கு “தயவுசெய்து” என்றால் என்ன என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் அவர்களுக்கு “உலகின் மற்ற பகுதிகள்” என்றால் என்ன என்று தெரியவில்லை.
ஆக மொத்தம், சர்வே மாபெரும் தோல்வியை அடைந்தது.
2

சோவியத் யூனியனின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் (1953 முதல் 1964 முடிய) நிகிதா குருஷேவ் (பிறப்பு 15-4-1894 மறைவு 11-9-1971) இருந்த போது அவரிடம் அரசியல்வாதிகள் பற்றிய கருத்து கேட்கப்பட்டது. தயங்காமல் உடனே தன் பதிலை அவர் கூறினார். பதில் இது தான்:-
அரசியல்வாதிகள் உலகெங்கும் ஒரே மாதிரி தான். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் கூட பாலம் கட்டித் தருவதாக சத்தியம் செய்து கூறுவார்கள்.
3
ஆங்கிலேயர்களை எப்படித் தான் தண்டிப்பது என்பது யாருக்கும் புரியவில்லை. இதற்கு முடிவு கட்ட நினைத்த டேவிட் ஃப்ராஸ்டும் அந்தோணி ஜேயும் இப்படிக் கூறினார்கள் : “நரகம் பற்றிய ஏராளமான வரையறுப்புகள் உள்ளன. ஆனால் நரகம் பற்றிய ஆங்கிலேயர்களுக்கான அருமையான விளக்கம் இது தான் : அங்கே ஜெர்மானியர்கள் தான் போலீஸ். ஸ்வீடன் நாட்டுக்காரர்கள் தான் காமெடியன்கள். இத்தாலியர்கள் தான் பாதுகாப்பு ராணுவம். பிரெஞ்சுக்காரகள் தான் அங்கே சாலையைத் தோண்டுவர். பெல்ஜியக்காரர்கள் தான் அங்கே பாப் பாடல்களைப் பாடுவார்கள். ஸ்பானியர்கள் தான் ரயிலை இயக்குவார்கள். துருக்கியர்கள் தான் உணவைச் சமைப்பார்கள். அயர்லாந்துக்காரர்கள் தான் உணவைப் பரிமாறுவார்கள். கிரேக்கர்கள் அரசை நிர்வகிப்பார்கள். பொதுமொழியோ அங்கு டச்சு மொழி!”

***
tags- நடந்தவை , நம்புங்கள் – 5