

Post No. 9942
Date uploaded in London – 6 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தென் ஆப்ரிக்காவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, ஆங்கிலக் கதைகளை எழுதி, சிறுவர்களையும் பெரியோரையும் மகிழ்வித்த நாவல் ஆசிரியர் ஜே ஆர் ஆர் டோல்கீன் J R R TOLKIEN ஆவார்.
ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் JOHN RONALD REUEL TOLKIEN என்பது இவருடைய முழுப்பெயர். தென் ஆப்ரிக்காவில் குடியேறிய ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தவர். தென் ஆப்ரிக்காவில் ‘ப்ளூ பவுன்டைன்’ என்னும் இடத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே தாயாருடன் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து பர்மிங்ஹாம் பகுதியில் வளர்ந்தார். முதல் உலகப் போர் வெடித்தபோது படையில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் ஆங்கில மொழியின் மூல மொழிகள் பற்றிப் பயின்றார். 33 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலோ-சாக்ஸன் ANGLO-SAXON பேராசிரியர் ஆனார். வேலையில் இருந்து ஓய்வு பெறும்வரை ஆக்ஸ்போர்டில் இருந்தார்.
ஆக்ஸ்போர்டில் அக்கால எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. நார்னியா க்ரானிக்ல்ஸ் நூல் எழுதிய சி.எஸ். லூயிஸ் (NARNIA CHRONICLES BY C S LEWIS அவர்களில் முக்கியமானவர். இங்க்லிங்ஸ் INKLINGS என்ற எழுத்தாளர் வட்டத்தை ஏற்படுத்தினார்.. அவர்கள் எல்லோருக்கும் கதை செல்லும் கலையில் ஆர்வம் இருந்தது. அடிக்கடி நடக்கும் கூட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாளரும் அவருடைய கதையின் சாராம்சத்தை உரத்த குரலில் வாசித்துக் காட்டுவார்கள்.
45 வயதில் டோல்கீன் தனது முதல் நாவலான ஹாப்பிட் – THE HOBBIT ஐ வெளியிட்டார். இது சிறுவர்க்கான கதை. மனிதன் போலத் தோற்றமுடைய ஒரு பிராணியின் சாகசங்கள் நிறைந்தது. மத்திய உலகம் MIDDLE WORLD என்ற கற்பனைப் பிரதேசத்தில் அது தனது பயணத்தை மேற்கொள்ளும். இதற்கு நல்ல ரசிகர் குழு கிடைத்தது. பின்னர் அவர் மத்திய உலகத்தை விரிவுபடுத்தி மூன்று தொகுதி நாவல்களைப் பதிப்பித்தார். அவைகளுக்கு LORD OF THE RINGS லார்ட் அப் தி ரிங்ஸ் என்று பெயர்.
‘லார்ட் அப் தி ரிங்ஸ்’ LORD OF THE RINGS மிக நீண்ட இதிகாசம் போன்றதொரு படைப்பு; இறுதி கட்டத்தில் நல்லோருக்கும் பொல்லாதவர்க்கும் இடையே போர் நடைபெறும். தேவாசுர யுத்தம் போன்றது. அதில் பங்குபெறுவோர் குள்ளர்கள், தேவதைகள், மந்திரவாதிகள், தீமை செய்யும் மிருகங்கள் ஆகும். வேறு எந்த ஒரு எழுத்தாளரும் இதுபோன்று விரிவான கற்பனைப் படைப்பை செய்தது இல்லை. இவர் சுவை குன்றாதபடி இப்படி எழுதியது இவரை இந்தத் துறையில் முன்னனியில் வைத்தது . அவருடைய கற்பனை உலகத்துக்கான புதிய மொழியையும் அவர் உருவாக்கினார் அவரே ஒரு மொழி இயல் அறிஞர். ஆகையால் பூகோளம், வரலாறு, மொழிகள், கற்பனை, வினோதம், விசித்திரம், அதிசயம், சாகசம் ஆகியவற்றின் சுவைமிகு அவியலை விருந்தாகப் படைத்தார்.
இப்போது உலகம் முழுதும் டோல்கீன் ரசிகர் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் ஹாபிட், லார்ட் ஆப் த ரிங்ஸ் முதலியன பற்றி விவாத்திதுக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இவரது படைப்புகள் திரைப்படம், டெலிவிஷன் தொடர்களிலும் பெரும் வெற்றிபெற்றன ,
பிறந்த தேதி — ஜனவரி 3, 1892
இறந்த தேதி -செப்டம்பர் 2, 1973
வாழ்ந்த ஆண்டுகள் – 81
எழுதி வெளியிட்ட புஸ்தகங்கள்-
1937- THE HOBBIT
1949- FARMER GILES OF HAM
1954 – THE LORD OF THE RINGS (THE FELLOWSHIP OF THE RING,
THE TWO TOWERS, THE RETURN OF THE KING)
1964 – TREE AND LEAF
1967- SMITH OF WODDEN MANOR
PUBLISHED AFTER HE DIED
1977 – THE SILMARILLION
–SUBHAM–



tags- ஜே.ஆர்.ஆர் டோல்கீன், J R R Tolkien, Hobbit, Lord of the Rings

