கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள் ! (Post No.9947)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9947

Date uploaded in London – 7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம். தற்காலத்தில் இதன் பழைய பகுதிகள் 3700 ஆண்டுகள் பழமையானது என்று எல்லோரும் எழுதத் துவங்கிவிட்டனர். ஆயினும் இந்துக்களின் பஞ்சாங்கக் கணக்குப்படி இது 5250 ஆண்டுகளுக்கு முன்னரே வியாசரால் சரிபார்க்கப்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது’

ரிக்வேதம் முதலான நான்கு வேதங்களையும் அழகுபடப் பிரித்து தன்னுடைய 4 சீடர்களை அழைத்து பரப்பும் பொறுப்பை ஒப்படைத்ததார் வியாசர். ஆயினும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானசாஸ்திர அடிப்படையில் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முறபட்டது என்று எழுதியுள்ளனர்.

இதில் சவிதா, ஆதித்ய என்ற பெயரில் சூரியனைப் போற்றும் மந்திரங்களும், முழுப்பாடல்களும் உள்ளன. ரிக்வேதம் முழுதும் 100, 1000 என்ற எண்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேறு எந்த பழைய நூல்களிலும் இப்படி 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச(DECIMAL SYSTEM)  முறையைக் காணமுடியாது. நாம் சாதாரணமாக விஷ்ணு ஸஹஸ்ரநாம துதியிலும் கூட விஷ்ணுவை “சஹஸ்ரகோடி யுகதாரிணே” என்று அழைக்கிறோம். ஆயிரம் கோடியுகங்களை  நாம் எண் வடிவில் எழுதிக் காட்டக்கூட முடியாது .

ஆக ஆயிரம் என்பது ரிக் வேதத்தில் குறைந்தது இரண்டு பாடல்களிலாவது சூரியனுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ‘’ஆயிரம் கொம்புகள் உடைய காளை கடலில் எழுத்து எழுவதாக’ ரிஷிகள் பாடுகின்றனர். இதற்கு பாஷ்யம்/ உரை எழுதிய சாயனர் ஆயிரம் கிரணங்களுடைய சூரியன் கடலில் அல்லது நீர்நிலையில் இருந்து எழுவதாக எழுதியள்ளார். ஆக முதல் வரியே ரிக்வேத வரி.

இன்னொரு ஒப்புமை தாய் என்ற சொல்லில் உள்ளது. சூரியன் ஆணா , பெண்ணா ? உலகிலேயே சூரியனை ஆணாகவும் பெண்ணாகவும் காண்பது இந்தியாவில் மட்டுமே. காயத்ரீ என்ற தேவதை வேத மாதா என்று புகழ ப்படுவாள். அவரை பிராமணர்கள் தினமும் மூன்று முறை சூரியனை நோக்கி தண்ணீரை தானமாகக் கொடுத்துவிட்டு வழிபடுவர். ஒரு காலத்தில் நாலாவது வருணத்தவரைத் தவிர மற்ற எல்லோரும் காயத்ரியை வழிபட்டனர் . ஆக வேத மாதாவை கண்ணதாசன் பாடல் (கர்ணன் திரைப்படம்) தாய் என்று சூரியனைக் குறிப்பிடுவதில் தெளிவாகிறது .

உலகிலேயே இந்துக்கள் மட்டுமே சூரியனை இப்படி ஸவித்ரு தேவனாகவும் காயத்ரீ மாதாவாகவும் வருணிக்கின்றனர். இதுதவிர சூரியனின் புதல்வியை சூர்யா (தமிழில் ஜம்புநாதன் சூரியை என்று மொழிபெயர்ப்பார்) என்றும் சூரியனுக்கு முன்னர் தோன்றும் விடியற் பொழுதை உஷா ( உஷை என்பது தமிழ் வடிவம்) என்றும் வருணிப்பர். அதாவது அனைத்தும் பெண்கள்.

XXX

பாரதியும் கூட காயத்ரீ மந்திரத்தை

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் — அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல

 மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே …….

என்று அழகாகத் தமிழ் சொற்களில் வடித்துள்ளார்.

சூரியன் உதித்தவுடன் உயிர்கள் எல்லாம் புத்துணர்வு பெற்று உற்சாகத்துடன் புறப்படும் காட்சியையும் வேத விற்பன்னர்கள் குறிப்பிடத் தவறவில்லை .

இதோ சில மந்திர வரிகள்; இவற்றைக் கண்ணதாசனின் “ஆயிரம் கரங்கள் நீட்டி” என்று துவங்கும் திரைப்படப் பாடலுடன் ஒப்பிட்டு மகிழுங்கள்

ரிக் வேதம் 7-55

நாங்கள் ஆயிரம் கொம்புகளோடு சமுத்திரத்திலிருந்து எழும் காளை மாட்டைக் கொண்டு மனிதர்களை உறங்க வைக்கிறோம் (சூரியன் மறையும் பொழுது)

5-1-8

அக்கினியைத் துதிக்கையில் சூரியனை 1000 கொம்புகள் உடையவன் என்று வருணிக்கிறார்கள் . (அது சூரியன் பற்றியது என்று உரைகாரர்கள் குறிப்பிடுவர்.)

5-44-2

ஒளி வீசும் நீ, மானிடர்கள் நலனுக்காக மேகங்களை எல்லாத் திசைகளிலும் பரத்துவாயாக ; நல்ல செயல்களை நடத்தும் நீ, மக்களைக் காப்பவனாகவும் இன்னல் விளைவிக்காதவனும் ஆக இருக்கிறாய். நீ எல்லா மாயைகளுக்கும் அப்பாற்பட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிறாய்.

5-54-5

நாங்கள் சூரியனைப் போல தேயாதவனாக இருக்க வேண்டும் (சந்திரன் அப்படியல்ல).

5-54-15

நாங்கள் சூரியனைப் போல ஒளிவிட உன் அருளை வேண்டுகிறோம்.

5-81-5

நீ ஒருவனே உயிருள்ள எல்லா பிராணிகளையும் நடத்துகிறாய்;இவ்வுலகத்துக்கு எல்லாம் நீயே அரசனாக இருக்கிறாய்.

5-81-2

நீ எல்லா உருவங்களையும் ஏற்கிறாய்.மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நலத்தைத் தோற்றுவிக்கிறாய்.

5-82-9

உயிரினங்களுக்கு உயிரளிப்பவன் சவிதா /சூரியன்.

5-82-8

எப்போதும் விழித்திருப்பவன்; இரவையும் பகலையும் முந்துபவன்

7-71-1

கருப்பாயி சிவத்த ஆளுக்கு வழி விடுகிறாள் ( சூரியன் வந்தவுடன் இரவு போய்விடுகிறது

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் சாலப் பரிந்து சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

துாயவர் இதயம்போல துலங்கிடும் ஒளியே போற்றி!
துாரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறு  நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

கர்ணன் திரைப்படத்தில் T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலகச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடியது.

ஆதித்ய, சவிதா, உஷத் காலம் (விடியற்காலம்/உஷா) என்ற மூன்று தலைப்புகளில் நிறைய பாடல்கள் உள்ளன.  விடியற்காலம் பற்றிய (உஷைபற்றிய ) பாடல்கள் உலகிலேயே மிகவும் அழகான கவிதைகளின் வரிசையில் வைக்கப்படுகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் போற்றி மகிழும் கவிதைகள் அவை . உதய காலத்தை ஒரு பெண்ணாக வருணித்து ரிஷிகள் பாடி மகிழ்கிறார்கள். உலகிலேயே பொழுது விடியும் முன் குளித்துவிட்டு கடவுளைக் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களே.

–SUBHAM–

tags- கண்ணதாசன் பாடல், ரிக்வேத வரிகள், ஆயிரம் கரங்கள் நீட்டி, சவிதா, ஆதித்ய, உஷா 

NOBEL LAUREATE TAGORE’S QUOTES (Post No.9946)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9946

Date uploaded in London – 7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BORN – MAY 7, 1861

DIED – AUGUST 7, 1941

India had many poets and playwrights during the Independence era but Rabindranath Tagore stood out as the ‘multifaceted genius’ who is known for his short stories, poetry, plays, dramas and novels.

Born on 7 May, 1861, Tagore began writing poetry at the young age of eight. He published his first collection when he was only 16 years old under the pseudonym Bhanusimha. From then on, his work as a great scholar, poet, novelist, musician, playwright, and artist took centre stage in his entire life.

Among the many awards to his name, Tagore became the first non-European to win the Nobel Prize in Literature in 1913. He was conferred with the prize for his poetry collection titled Gitanjali.

Tagore’s works were known across the world; they were also widely translated into languages including English, Dutch, German, Spanish, and other European dialects.

Other than his collections, Tagore will always be remembered for composing the National Anthems of two nations. For India, the Jana Gana Mana was composed by him while for Bangladesh Amar Shonar Bangla’s lyrics were written. Meanwhile, the Sri Lankan national anthem was also inspired by one of his works.

Tagore just did not enrich literature in the country, but also contributed to the freedom struggle in the pre-Independence stage. The nation was in mourning when he passed away on 7 August 1941.

On his 80th death anniversary, here are some inspirational quotes written by him:

  • Reach high, for stars lie hidden in you. Dream deep, for every dream, precedes a goal.
  • Don’t limit a child to your own learning, for he was born in another time.
  • You can’t cross the sea merely by standing and staring at the water.
  • The one who plants trees, knowing that he will never sit in their shade, has at least started to understand the meaning of life.
  • Love does not claim possession but gives freedom.
  • If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars.
  • Music fills the infinite between two souls

–From first post newspaper

tags- Tagore quotes

ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி ஆர் பி ஜாப்வாலா (Post.9945)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9945

Date uploaded in London – 7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டில்லி நகரில் கால் நூற்றாண்டுக்  காலம்  வாழ்ந்து, இந்தியா பற்றி ஆங்கிலத்தில் எழுதி, புக்கர் (Booker prize) பரிசு வென்ற திருமதி ஜாப்வாலா பிறந்ததோ ஜெர்மனியில்; குடி மகள் ஆனதோ அமெரிக்காவில்! மதமோ யூத மதம்!; மணந்ததோ இந்தியரை! இப்படி பன்னாட்டு வாசனை இருப்பதால் அவரே தன்னை ‘நான் ஒரு வெளியாள்’ I AM AN OUTSIDER என்று அழைத்துக் கொண்டார். இவரது புகழ் பெற்ற நாவல்கள் திரைப்படமாயின . இவர் நாவல், திரைக்கதை வசனம், சிறு கதைகள் எழுதுவதில் வல்லவர். பிறர் எழுதிய நாவல்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்றார்; பரிசுளைத் தட்டிச்சென்றார்.

ஜாப்வாலாவின் முழுப்பெயர் ரூத் பிராவர் ஜாப் வாலா RUTH PRAWER JHABWALA. அவர் ஜெர்மனியில் கொலோன் (COLOGNE)  நகரில் போலந்து நாட்டு, யூத மத தம்பதிகளுக்குப் பிறந்தார். ஹிட்லரின் நாஜி கொடுமை தாங்காமல் வெளி நாட்டுக்கு ஓடினார் . அங்கிருந்து வெளியேறக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு வந்தார். லண்டன் குயீன் மேரி கல்லூரியில் பிறந்தார். மும்பையில் பிறந்து டில்லியில் பிரபல கட்டிடக் கலைஞராகத் திகழ்ந்த சைரஸ் ஜாப்வாலா  (CYRUS JHABWALA, PARSI) என்ற பார்சிக்காரரைக் கல்யாணம் செய்துகொண்டார்; மூன்று மகள்களுக்குத் தாய் ஆனார்.

இவருக்கு இந்தியாவைவிட அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்தான் பெயரும் புகழும் அதிகம். சிறந்த ஆங்கில நாவல்களை எழுதினார்.

21 வயதில் பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற்றபோது லண்டனுக்கு வந்த சைரஸ் ஜாப் வாலாவைச் சந்தித்து மணந்தார். பின்னர் அவருடன் தில்லிக்குச் சென்று 24 ஆண்டுகள் வாழ்ந்தார்.

இந்தியாவில் இருந்தபோது 29 வயதில் முதல் நாவல் அம்ரிதா AMRITA  வெளியானது. அதற்குப் பின்னர் அவர் எழுதிய நாவல்களும் இந்திய பூமியை அடித்தளமாகக் கொண்டவைதான். ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவை எடைபோடும் விதத்தில் இவருடைய நாவல்கள் இருந்தன. இதனால் வெளிநாட்டினர் மதித்தனர். இந்தியாவை  வெளிநாட்டினர் எடைபோடுவதை ஏற்காத இந்தியர்கள் இவரைக் கண்டு கொள்ள வில்லை.

அவருடைய 48-ஆவது வயதில் HEAT AND DUST ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ நாவல் அச்சானது. ஒரு பிரிட்டிஷ் பெண்மணி  இந்தியாவில் மேற்கொண்ட பயணம் பற்றியது இந்த நாவல். பிரிட்டனின் மிகப்பெரிய இலக்கியப்  பரிசான புக்கர் (BOOKER)பரிசு இதற்குக் கிடைத்தது.

அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பின்னர் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஐவரி, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் இஸ்மாயில் மெர்ச்சன்ட் (JAMES IVORY AND ISMAIL MERCHANT)  ஆகியோருடன் சேர்ந்து திரைப்படத் துறையில் நுழைந்தார். அவர் எழுதிய திரைக்கதை வசனம் இரண்டு முறை ஆஸ்கார் பரிசை ( A ROOM WITH A VIEW AND HOWARDS END ) வென்றது.

23 திரைக்கதை வசனங்கள், 12 நாவல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள் இவருடைய கிரீடத்தில் சூடிய மலர்களாக மணம் வீசுகின்றன  1998ல் பிரிட்டனின் CBE சி.பி.இ. இவருக்கு கொடுக்கப்பட்டது.

பிறந்த தேதி – மே 7, 1927

இறந்த தேதி – ஏப்ரல் 3, 2013

வாழ்ந்த ஆண்டுகள் – 85

எழுதிய நாவல்கள் , கதைகள்:-

1956 – AMRITA

1958 – ESMOND IN INDIA

1960 – THE HOUSEHOLDER

1965 – A BACKWARD PLACE

1968- A STRONGER CLIMATE

1975- HEAT AND DUST

1986 – OUT OF INDIA- SELECTED STORIES

1987- THREE CONTINENTS

1993 – POET AND DANCER

1995- SHARDS OF MEMORY

–SUBHAM-

tags- ஆஸ்கர் பரிசு, நாவல் ஆசிரியை, டில்லிக்காரி ,ஆர் பி ஜாப்வாலா, R P Jhabvala

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -2 (Post.9944)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9944

Date uploaded in London –  7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! – 2

மதுரையில் அரசரடி அதிஷ்டானம்

ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.

இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.

அவர் சமாதியின் உள்ளே இருக்கிறார, அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!

முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்

ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.

தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன்  முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.

குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.

பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின் விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.

ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

ஸ்வாமிகள் வாழ்வில் ஏராளமான அருள் திருவிளையாடல்கள் அவரால் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒரே ஒரு சுவையான சம்பவத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஸ்வாமிகள் ஒரு சமயம் வட நாட்டில் சிறிது காலம் இருந்தார். அவர் காசியில் இருந்த சமயம் காசி சப் கலெக்டராக பிராம்லி துரை என்பவர் இருந்தார்.

ஒரு நாள் தன் மனைவியுடன் பிராம்லி துரை உல்லாசமாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது குழந்தையானந்தர் அவதூத கோலத்தில் ஆடை எதுவுமின்றி அங்கே நடந்து சென்று கொண்டிருந்தர். இதைக் கண்ட துரைக்குக் கடும் கோபம் வந்து விட்டது. தன் சவுக்கால் அவர் ஸ்வாமிகளை அடித்தார். ஆனால் அவர் அடித்த அடி ஸ்வாமிகள் மீது விழவில்லை. மாறாக அவரது மனைவி மீது விழுந்தது. அவள் அலறினாள். துரைக்கு கோபம் இன்னும் அதிகமானது. ‘ஏதோ ஒரு மாயவேலைக்காரன் இவன்’ என்று எண்ணிய பிராம்லி துரை தன் சேவகர்களை அழைத்து ஸ்வாமிகளை தன் வீட்டுக்கு இழுத்துச் செல்லுமாரு ஆணையிட்டார்.

வீட்டிற்குச் சென்ற துரை அங்கிருந்த அனைவர் உடலில் இருந்தும் சவுக்கடி பட்டதால் ரத்தம் கசிவதைக் கண்டார். அவரது கோபம் உச்சமாகி, “இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்” என்று உத்தரவிட்டார்.

இருட்டறையில் ஸ்வாமிகள் அடைக்கப்பட்டார். பத்திரமாக அவரைப் பூட்டி விட்டு சாவியைத் தானே எடுத்துக் கொண்டு டாக்-கார்ட்டில் பயணமானார் பிராம்லி.

என்ன ஆச்சரியம்! துரையாலேயே பூட்டப்பட்ட ஸ்வாமிகள் அவருக்கு முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். துரைக்கு இப்போது கோபம் போய் பயம் வந்து விட்டது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தார்.

அவர்கள் ஸ்வாமிகளின் மஹிமையைக் கூறி, “அவர் மஹா பெரியவர். நீங்கள் செய்தது பெரிய அபசாரம். அவரிடமே மன்னிப்புக் கேட்பது தான் இதற்கான ஒரே பிராயசித்தம் “ என்றனர்.                                பிராம்லி துரை ஸ்வாமிகளை வணங்கி, தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினார். ஸ்வாமிகள் கருணையுடன் அவருக்கு அனுக்ரஹித்தார்.

தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக நிஜமாக தனது அஞ்ஞானம் நீங்கிய அந்த தினத்தை நினைவு கூரும் விதமாக, ஆண்டு தோறும் ஸ்வாமிகளுக்கு ஆராதனை நடத்த அவர் ஒரு கட்டளையைக் காசியில் ஏற்படுத்தினார். இன்றும் அந்தக் குறிப்பிட்ட தினத்தில் அவரது கட்டளை தொடர்கிறது.

ஏராளமான அதிசய சம்பவங்களில் இன்னுமொரு சம்பவம் இது: 1920ஆம் வருட வாக்கில் மதுரை ஸ்டேஷனில் கல்யாணராமய்யர் என்பவர் ஸ்டேஷன்மாஸ்டராக இருந்தார். ஒரு நாள் ஸ்வாமிகள் சென்னைக்குப் புறப்படவிருந்த மெயிலில் முதல் வகுப்பில் ஏறி உட்கார்ந்தார். அது ஒரு வெள்ளைக்கார துரைக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. துரை வந்து தனது இடத்தை விட்டே ஆகவேண்டும் என்று கோபமாகப் பேச, ஸ்டேஷன் மாஸ்டர் வந்து ஸ்வாமிகளைக் கீழே இறக்கி விட்டார். ரயில் கிளம்பும் நேரம் வந்தது. டிரைவர் எஞ்ஜினை இயக்கினார். அது நகரவில்லை. எவ்வளவோ முயன்றும் அது நகரவில்லை என்பதால்  காரணம் என்ன என்று ஆலோசிக்கத் துவங்கவே உடனடியாக அனைவரும் ஸ்வாமிகள் கிழே அமர்ந்திருப்பதால் தான் ரயில் நகரவில்லை என்று கூறினர். ஸ்டேஷன்மாஸ்டர் ஓடோடிவந்து ஸ்வாமிகளிடம் மன்னிப்புக் கேட்டு அவரை துரை இருந்த இடத்தில் அமர்த்தி அவருக்கு வேறு சீட் கொடுத்தார். ரயில் நகர்ந்தது. அதிலிருந்து ஸ்டேஷன் மாஸ்டர் அவரது பரமபக்தராகி விட்டார் என்பதைச் சொல்லவும் தேவையில்லை.

ஸ்வாமிகள் நூற்றுக் கணக்கில் ஆன்மீக ரகசியங்களை அவ்வப்பொழுது குழும் இருக்கும் பக்தர்களிடம் சொல்வதுண்டு. அவற்றில் மாதிரிக்காக ஒன்றே ஒன்றை இங்கே காண்போம்.  லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லும் போது ஆற்றிற்கு கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமாவிற்கும் முன்பும் பின்பும் ஓம் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று பாகீரதி அம்மாள் என்ற ஒரு சிஷ்யைக்கு ஸ்வாமிகள் உபதேசித்தருளினார்.இதுவே சஹஸ்ரநாமம் சொல்லும் சரியான வழி என்பது அனைவருக்கும் புரிந்தது!

ஸ்வாமிகளின் சிஷ்யர் ஸ்ரீ ராமலிங்க ஐயரை நானும் எனது குடும்பத்தினரும் பார்த்துள்ளோம். ஏதேனும் ஒரு பிரச்சினையை பக்தர் கூறினால், அவர் கையில் பிரச்சினைக்குத் தீர்வாக பெரிய எழுத்தில் பதில் வரும். இது ஸ்வாமிகளின் அனுக்ரஹமே என்று அவர் கூறுவார்.

இப்போதும் மதுரை அரசரடி அதிஷ்டானத்தில் அவரை வணங்கி அருள் பெறலாம்! அதிஷ்டானத்தில் அவரது சமாதியில் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம். ஆனந்தமானந்தகரம், ப்ரஸன்னம், ஞானஸ்வரூபம், நிஜபோத யுக்தம், யோகீந்த்ரமீட்யம், பவரோகவேத்யம், ஸ்ரீமத் குரும் நித்யமஹம் பஜாமி! ஸ்ரீமத்குழந்தையானந்தர் பாதகமலம் போற்றி!

                                                           ******

(இந்தக் கட்டுரை எங்கள் குடும்ப நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான திரு கே.எஸ்.வி. ரமணி அவர்களால் ஆராய்ந்து எழுதி ஜூன் 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள் திவ்ய சரிதம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது – கட்டுரையாளர்) நன்றி, வணக்கம்!

***

tags குழந்தையானந்த ஸ்வாமிகள்-2

Tamil and English Words 2700 Years Ago- Part 59 (Post No.9943)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9943

Date uploaded in London – 6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -59 Tamil and English Words 2700 Years Ago- Part 59

6-1-109

Sayanam

It is given as an example.

Sayanam = sleeping position or slanted position

In Tamil also saay is slanted; also used for sleeping.

I was very tired. So oru arai mani neram thalaiyaich saaiththen.

This proves Tami l and Sanskrit have common roots.

சயனம் = தமிழ் சாய்; அவனும் களைப்பில் ஒரு பத்து நிமிஷம் தலையாகி சாய்த்தான்

Xxx

6-1-124

Indra means leader. Foreigners mislead the world by translating Indra with capital I to show that it is the name of one person. That is wrong. Even at Paninis time Indra was used as suffix

Earlier one commentator showed கவீந்திர, கவேந்திர

Kaveendra. Under this sutra Gavendra is given. That means leader of the cows

In Tamil Nadu Rajendran, Mahendran, upendran are common names

இந்திரன்= தலைவன்; ராஜேந்திரன், மகேந்திரன், கஜேந்திரன்; ககேந்திரன்

Xxxx

6-1-134

We saw that

Sutra, is used for books and thread in both the languages.

In the same way Patha, paatha mean foot, feet in both these languages. In verses every line or syllable is called patha in Sanskrit and In tamil is Adi;

Patha = foot = Adi; used பத =அடி

செய்யுளிலும் நடப்பதிலு ம் பயன்படுகிறது

Both in walking and writing.

Xxxx

6-1-143

Kustumburu

Coriander, in Tami l it is koththamalli.

Panini used Kustum buru for coriander. It is in Latin. It is closer to Tamil

கொத்தமல்லி  என்ற சொல்  குஸ்தாம்புரு என்ற  சொல்லுடன் தொடர்புடையது.

குஸ்தாம்புரு — க்கு சம்ஸ்க்ருத மூலம் எதுவும் இல்லை

Xxx

6-1-146

Aaspatham ஆஸ்பதம் , அஸ்பத்திரி

Meaning is Place to stay, place to reside, higher place.

After reading the meaning, I wonder whether Hospital and Tamil word Aaspaththiri for Hospital came from this. But I am not sure at the moment. Hospice is another word.

Xxx

6-1-147

Here Panini Sutra is dealing with two words

Ascharya = wonder

Anithya = that which is not permanent, impermanence

ஆஸ்சர்யம் , அநித்யம்

வாழ்க்கை அநித்யமானது. இது மிகவும் ஆச்சர்யமானது

Both these words are in current use. Even Tamils use Aascharyam in daily newspapers and conversations.

Xxx

6-1-152

Kasam is used here for whip.

Even in Tami l Kasai Adi is used for whipping.

கசை அடி

Xxx

6-1-155

Panini used Thuntha

Ajathuntha is the protruding stomach or belly of a goat.

In Tamil Thonthi is also fat belly. தொந்தி /PAUNCH

அஜதுந்த = ஆட்டின் பெருவயிறு

Xxx

6-1-160

Panini used Unja for swing.

Uunjal is swing in Tamil

In Sangam literature it was Uusal

Today both uusal and Unjal are used for swinging.

ஊஞ்சல் , ஊசல் , உஞ்ச விருத்தி

–சுபம்–

Tags- Tamil words in Panini-59

சாகசம், விசித்திரம், கற்பனை கலந்த ஆங்கில நாவல்கள் – ஜே.ஆர்.ஆர் டோல்கீன் (Post.9942)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9942

Date uploaded in London – 6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தென் ஆப்ரிக்காவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, ஆங்கிலக் கதைகளை எழுதி, சிறுவர்களையும் பெரியோரையும் மகிழ்வித்த நாவல் ஆசிரியர் ஜே  ஆர் ஆர் டோல்கீன் J R R TOLKIEN  ஆவார்.

ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் JOHN RONALD REUEL TOLKIEN என்பது இவருடைய முழுப்பெயர். தென் ஆப்ரிக்காவில் குடியேறிய ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தவர். தென் ஆப்ரிக்காவில் ‘ப்ளூ பவுன்டைன்’ என்னும் இடத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே தாயாருடன் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து பர்மிங்ஹாம் பகுதியில் வளர்ந்தார். முதல் உலகப் போர் வெடித்தபோது படையில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் ஆங்கில மொழியின் மூல மொழிகள் பற்றிப் பயின்றார். 33 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலோ-சாக்ஸன்  ANGLO-SAXON பேராசிரியர் ஆனார். வேலையில் இருந்து ஓய்வு பெறும்வரை  ஆக்ஸ்போர்டில் இருந்தார்.

ஆக்ஸ்போர்டில் அக்கால எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. நார்னியா க்ரானிக்ல்ஸ் நூல் எழுதிய சி.எஸ். லூயிஸ் (NARNIA CHRONICLES BY C S LEWIS அவர்களில் முக்கியமானவர். இங்க்லிங்ஸ் INKLINGS என்ற எழுத்தாளர் வட்டத்தை ஏற்படுத்தினார்.. அவர்கள் எல்லோருக்கும் கதை செல்லும் கலையில் ஆர்வம் இருந்தது. அடிக்கடி நடக்கும் கூட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாளரும் அவருடைய கதையின் சாராம்சத்தை உரத்த குரலில் வாசித்துக் காட்டுவார்கள்.

45 வயதில் டோல்கீன் தனது முதல் நாவலான ஹாப்பிட் – THE HOBBIT ஐ வெளியிட்டார். இது சிறுவர்க்கா கதை. மனிதன் போலத் தோற்றமுடைய ஒரு பிராணியின் சாகசங்கள் நிறைந்தது. மத்திய உலகம் MIDDLE WORLD என்ற கற்பனைப் பிரதேசத்தில் அது தனது பயணத்தை மேற்கொள்ளும். இதற்கு நல்ல ரசிகர் குழு கிடைத்தது. பின்னர் அவர் மத்திய உலகத்தை விரிவுபடுத்தி மூன்று தொகுதி நாவல்களைப் பதிப்பித்தார். அவைகளுக்கு LORD OF THE RINGS லார்ட் அப் தி ரிங்ஸ் என்று பெயர்.

‘லார்ட் அப் தி ரிங்ஸ்’ LORD OF THE RINGS  மிக நீண்ட இதிகாசம் போன்றதொரு படைப்பு; இறுதி கட்டத்தில் நல்லோருக்கும் பொல்லாதவர்க்கும் இடையே போர் நடைபெறும். தேவாசுர யுத்தம் போன்றது. அதில் பங்குபெறுவோர் குள்ளர்கள், தேவதைகள், மந்திரவாதிகள், தீமை செய்யும் மிருகங்கள் ஆகும். வேறு எந்த ஒரு எழுத்தாளரும் இதுபோன்று விரிவான கற்பனைப் படைப்பை செய்தது இல்லை. இவர் சுவை குன்றாதபடி இப்படி எழுதியது இவரை இந்தத் துறையில் முன்னனியில் வைத்தது  . அவருடைய கற்பனை உலகத்துக்கான புதிய மொழியையும் அவர் உருவாக்கினார் அவரே ஒரு மொழி இயல் அறிஞர். ஆகையால் பூகோளம், வரலாறு, மொழிகள், கற்பனை, வினோதம், விசித்திரம், அதிசயம், சாகசம் ஆகியவற்றின் சுவைமிகு அவியலை விருந்தாகப் படைத்தார்.

இப்போது உலகம் முழுதும் டோல்கீன்  ரசிகர் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் ஹாபிட், லார்ட் ஆப் த ரிங்ஸ் முதலியன பற்றி விவாத்திதுக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இவரது படைப்புகள் திரைப்படம், டெலிவிஷன்  தொடர்களிலும் பெரும் வெற்றிபெற்றன  ,

பிறந்த தேதி — ஜனவரி 3, 1892

இறந்த தேதி -செப்டம்பர் 2, 1973

வாழ்ந்த ஆண்டுகள் – 81

எழுதி வெளியிட்ட புஸ்தகங்கள்-

1937- THE HOBBIT

1949- FARMER GILES OF HAM

1954 – THE LORD OF THE RINGS (THE FELLOWSHIP OF THE RING,

THE TWO TOWERS, THE RETURN OF THE KING)

1964 – TREE AND LEAF

1967- SMITH OF WODDEN MANOR

PUBLISHED AFTER HE DIED

1977 – THE SILMARILLION

–SUBHAM–

tags- ஜே.ஆர்.ஆர் டோல்கீன், J R R Tolkien, Hobbit, Lord of the Rings

MARCH 2020 London Swaminathan Articles, Index-88 (Post No.9941)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9941

Date uploaded in London – 6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

xxxx

March 2020 Index 88

Death is better than Drinking Milk,7639;1 March 2020

Brahmins weapon is Atharvana Veda, He can slaying his

enemies with it- Manu ,7641:2/3

Gambling while Dying,3/3

I Am Alpha and Omega, Krishna and Christ!7649;4/3

If Houdini escaped from Coffin,7654;5/3

Swami s crossword 532020;7655

Most Famous Buddhist Woman MAHAPAJAPATI

Gotami,7658;6/3

Woman who could compose verses in eight

languages,7663; 7/3

Women Zindabad crossword 7664

Buddha s Meeting with Mango Garden Lady;

King’s Secret Visit to her ,7669;8/3

Swami s crossword 932020;7672

Dead Cat thrown at Lord Macaulay,7674;10/3

Miracle by Buddha, Created a Beauty to teach

another Beauty ,7676;10/3

Political Party Anecdotes,7681;11/3

Quotes on Panini,7684;12/3

Amazing List of 32 Good activities in Hindu

Scripture s ,7687;13/3

Lincoln hand was shaking! Freedom Anecdotes,7692;14/3

Sunlight enters Madurai Temple, 7693;14/37694

Swiss Fish and Nazi Fish 7697;15/3

Swami s crossword,1432020 7694

Tamil Folktale- Divide and Rule,7702,16/3

Swami s crossword 1632020;7703

Rare pictures from an old German book-1,7706;17/3

Diamond Axe Hindu s Reply to Christian Attack, 7705;17/3

Part 2;7709;18/3

Sunlight shines on Nandi/ Bull in Hindu temple,7712;18/3

Story of Panini as told by Kanchi Shankara charya, 7710;18/3

Manu and Veda Vyasa statues in Oxford 7713;18/3

Swami s crossword 1932020;7714

How the jackal fooled a Ghost; Two more Tamil folktales 7715;19/3

Yuan Chwang on Panini,7719;20/3

Third part of Rare Pictures from……7721:20/3

Manu’s Strange Punishment for Brahmins, 7724;21/3

Swami’s crossword 2132020;7725

Why is the sea salty? Why’s the Moon waxing and

waning? Manu ,7729;22/3

Images of Mogul Emperors and Rare Coins from India,7733;23/3

Farmer and the Imps,7732;23/3

Swami’s crossword 2332020;7734

Dialogue poems in the Rigveda,7737;24/3

Sexy Monkey Puzzle in the Rigveda Solved,7741;25/3

Swami s crossword 2532020;7742;25/3

Equality and Socialism Anecdotes,7745;26/3

Quotes on Pride and Self Respect,7748;27/3

Swami s crossword 2732020;7749

Stupid King and Wise Queen,7753;28/3

Swami s crossword 2932020;7757;

Hindu Gods in Tamil Veda Tirukkural 7758;29/3

How to claim Insurance if one’s Father is Hanged?7762;30/3

Gods of Great Tamil Community 7766; 31/3

Swami s crossword 3132020; 7767;31 March 2020

XXX

TAMIL ARTICLES FROM MARCH 2020

பாட்டி சுட்ட வடையும் ஏப்பமும்,7638, 1 மார்ச் 2020

பால் வேண்டாம் சாவே மேல் ,7642, 2/3

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி= த .கு.போ 232020;7643

எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு ,7645;3/3

சாகும்போது பாடியவர் யார்? 7650;4/3

த.கு.போ .432020;7651

அகர முதல எழுத்தெல்லாம் , எனது முக்கிய ஆராய்ச்சி,

7653, 5/3

சாகும்போது ஹூடினி மாஜிக், 7657, 6/3

த.கு.போ .632020;7659

சீனாக்காரன் கொடுத்த சூடான பதில், 7661, 7/3

காக்கா குளியல்- மாணவர்கள் பற்றி பதஞ்சலி நக்கல் ,7662,7/3

நலுங்குப் பாடல்கள் ஆராய்ச்சி, 7666,8/3

அதிசயப் பெண்கள் – எட்டு மொழிகளில் 100 கவிகள், 7667, 8/3

மகளிர் சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி, 7668, 8/3

நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு

 அழகியுடன் புத்தர் சந்திப்பு;7671; 9/3

தமிழில் எத்தனை சதகங்கள்?7675, 10/3

த.கு.போ.1032020;7678

மேடையில் கிழவி, அழகி ஆக மாறிய விந்தை, 7680;11/3

த.கு.போ.1332020;7689

32 வகை தர்மங்களின்  பட்டியல்; 7683;12/3

மேலும் ஒரு நலுங்குப் பாடல் புஸ்தகம்; 7688; 13/3

ஒரே பாடலில் 18 புராணம்;7691;14/3

ஆப்ரஹாம் லிங்கனின் கைகள் நடுங்கியது ஏன்?

 சுவிஸ் மீனும் ஹிட்லர் மீனும்;7696;15/3

தமிழா! புலவர் பற்றிக் கண்டுபிடி;7698;15/3

த.கு.போ.1532020;7699

சடங்கு – விக்கிபீடியா தவற்றைத் திருத்துக;7701/16/3

கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888ம் ஆண்டு நூலில் -1;

7705; 17/3

த.கு.போ.1732020;7707

கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888ம் ஆண்டு நூலில் -2;

7709; 17/3

உலக மொழிகள் தமிழில் இருந்து  உதித்தனவா?7715/19/9

தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியரை

 ஏன் சிவபெருமான் அனுப்பினார்?7718;20/3

த.கு.போ.2032020;7720

தமிழ் மக்கள் சம்ஸ்க்ருதம் இன்றி வாழ முடியுமா?7723;21/3

பேரியம் கஞ்சியும் பச்சை மத்தாப்பும்; 7727/ 22/3

த.கு.போ.2232020;7728

நாட்டுப்புற கதை-நிஜ வாழ்வில் நீலாம்பரி;7731,23/3

த.கு.போ.2432020;7738

இரண்டு பேய்க் கதைகள் ;7736;24/3

பிராமணர்களுக்கு மரண தண்டனை பற்றி மநு 7740;25/3

2 கைதிகள் ஆத்திரக்காரனுக்கு புத்தி மாட்டு; 7744;26/3

த.கு.போ.24-632020;7746

த.கு.போ.2832020;7755

த.கு.போ.3032020;7763

கோபமே பாபங்களின்  தாய் தந்தை ;7750,27/3

30 திருப்புகழ் மணிகள்; மேற்கோள்கள்;7752

அப்பு! தமிழ் தெரியுமா? முட்டாள் ராஜாவும்

புத்திசாலி ராணியும் ;7754;28/3

பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி குட்பை 7759;29/3

இரண்டு ராஜா ராணி கதைகள்; 7761;30/3

ஒரு சந்தேகம் -அந்தணர் என்பவர் யார்- 1; 7765;31/3

–சுபம்–

Tags- Index, March 2020, Index 88,

கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா இந்து மதம்! (9940)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9940

Date uploaded in London –  6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா இந்து மதம்!

ச.நாகராஜன்

ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம் – கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இது தான் இணையிலா இந்து மதத்தின் தலையாய சிறப்புகளில் ஒன்றாகும்.

எந்த ஒரு சாஸ்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் அதற்கு ஆதி கர்த்தாவாக ஒருவர் இருப்பதையும் அவர் தான் கற்று உணர்ந்ததை வழுவாது அதை உண்மையுடனும் பக்தியுடனும் சிரத்தையுடனும் கேட்பருக்கு உபதேசிப்பதையும் காணலாம்.

நைமிசாரண்யத்தில் அல்லது அது போன்ற ஒரு தூய்மையான இடத்தில் பல முனிவர்கள் ஒன்று கூடி இருக்கும் தருணத்தில் சுகரை நோக்கி அவர்கள், எங்கள் முன்னோர்களின் சரிதத்தைச் சொல்லுங்கள் என்று வினயத்துடன் கேட்பதையும் மடை திறந்த வெள்ளம் போல வரலாறுகள் வந்து குவிவதையும் பார்த்து வியக்கிறோம் – பல புராணங்களில்!

ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களில் தான் எத்தனை கேள்விகள்!

நாரத மஹரிஷியைப் பார்த்து வால்மீகி முனிவர் கேட்கிறார் பல கேள்விகளை!

அதிலிருந்து தான் ராமாயணம் பிறக்கிறது.

இப்பூவுலகில் நற்குணம் உள்ளவனும், வீரியமுடையவனும், தர்மம் அறிந்தவனும், சத்தியம் பேசுபவனும், விடாமுயற்சியும் உடையவன் எவன்?

எல்லாப் பிராணிகளுக்கும் நன்மை நாடுபவன் எவன்?

எல்லாம் அறிந்தவன் எவன்?

முடியாத காரியங்களையும் முடிக்க வல்லவன் எவன்?

காண்பதற்கு இனியவனும், ஒப்பில்லாதவனுமாக இருப்பவன் எவன்?

தைரியமுடையவன் எவன்?

கோபத்தை அடக்கி தேஜஸ் உடையவனும் பொறாமை அற்றவனுமாக இருப்பவன் எவன்?

எவனுடைய யுத்தத்தினால் தேவர்களும் பயன் அடைவர்?

சரமாரியான இந்தக் கேள்விகளுக்கு நாரதர், “

இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனைஸ்சுருத: |

-இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராமனே அவ்வித குணங்களை உடையவன்” என்கிறார்.

பிறகு வரிசையாக ராமனின் நற்குணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

வியக்கிறோம், பிரமிக்கிறோம்.

வால்மீகியும் தனது பங்கிற்கு வியப்பதுடன் அல்லாமல் உலக நன்மைக்காக ராமாயணத்தை – ஆதி காவியத்தை – இயற்றுகிறார்.

மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும் போது ஸ்ரீ

கிருஷ்ணர் தர்மரிடம் கேட்க வேண்டியவற்றை எல்லாம் இந்த ஞானச் செல்வத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்.

அதன் விளைவாக தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும், அதில் நுட்பமான பல விஷயங்களையும் நாம் பெறுகிறோம்.

பார்வதி பரமேஸ்வரை நோக்கி, “ ஆயிரம் நாமங்களைப் படிக்க முடியாதவர்களுக்கு லகுவான உபாயம் (கேன லகு உபாயம்?) எதாவது இருக்கிறதா” என்று கருணை ததும்பிய உள்ளத்துடன் கேட்கிறார்:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் |

பட்யதே பண்டிதை நித்யம் ஸ்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ ||

சிவபிரான்,

‘ஸ்ரீராம ராமராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” –

‘ராம நாமம் ஒன்றே ஆயிரம் நாமங்களுக்குச் சமம்’ என்று கூறி அருளுகிறார்.

மஹாபாரதத்தில் பார்வதி, பரமசிவனை நோக்கி, ஜென்மப் பிறப்புகள் பற்றியும் நல்வினை, தீவினை பற்றியும் கேட்க சிவபிரான் கர்மபலன் ரகசியங்களை அற்புதமாக எடுத்துரைப்பதைக் காண்கிறோம்.

ஷீர்டி சாயிபாபா அவரது அணுக்கத் தொண்டரான நானாவுக்கு (என்.ஜி.சந்தொர்கர் என்பது இயற்பெயர்) கீதையின் நான்காம் அத்தியாயம் 34வது ஸ்லோகத்திற்கு அற்புதமான விளக்கவுரை கொடுத்து அவரை பிரமிக்க வைத்தார்.

தத்வித்தி ப்ரதிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா மி |

உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிநஸ் தத்வதர்சிந: மிமி ||

ப்ரஸ்ன என்பதற்கும் மேலாக பரி ப்ரஸ்னம் என்ற வார்த்தையை ஏன் வியாஸர் உபயோகப்படுத்துகிறார்?  முன்னேற்றம் மற்றும் முக்தியை அடைவதற்காகக் கேள்வியின் நோக்கம் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் கேள்விகள் மீண்டும் மீண்டும் முழுப்பொருளையும் உணரும் வரை  கேட்கப்பட வேண்டும் அதாவது குடைந்து குடைந்து கேட்கப்பட வேண்டும். இதுவே பரிப்ரஸ்னம்! இப்படிப்பட்ட பரிப்ரஸ்னம் தூய்மையான நோக்கத்திற்காகக் கேட்கப்படும் போது அதற்கு அளிக்கப்படும் விடை பல கோடி  மக்களுக்கு உபயோகமாகிறது!!

சம்வாதங்கள் – உரையாடல்கள் – என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் நமது புராண இதிஹாஸங்களில் அவற்றைக் காண முடிகிறது.

அவை தரும் ரகசியங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன.

முனிவர்களையும் தேவர்களையும் அவதாரங்களையும் உயரிய தெய்வங்களையும் தவத்தினாலும் பக்தியினாலும் சிரத்தையினாலும் கண்டு பலரும் அவர்களிடமிருந்து உபதேசம் பெற்றதைக் காண்கிறோம்.

இவை யுகம் கடந்து வந்து கோடிக்கணக்கானோருக்கு நல்வழி காட்டி அருள் பாலிப்பதைக் காண்கிறோம்.

இன்னும் இந்த சந்திப்புகளில் துதிகள் – ஸ்தோத்திரங்கள் – இடம் பெறுகின்றன.

அவற்றின் மஹிமையோ வர்ணனைக்கு அப்பாற்பட்டது.

உபநிடத ரகசியங்களோ ஏராளம். வேத ரகசியங்கள் இன்னொரு அற்புத களஞ்சியம்.

இவற்றையெல்லாம் தொகுப்பது என்பது மிகப் பெரிய காரியம்.

அன்றாடம் சிறிது நேரத்தைச் செலவழித்து இவற்றைப் படித்து அறிய ,  நலம் பிறக்கும்; வளம் சிறக்கும்!

***

INDEX

ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், நாரதர், வால்மீகி, ஷீர்டி சாயிபாபா, நானா சந்தோர்கர், கீதை, அத் 4 ஸ்லோகம் 34, பரிப்ரஸ்னம்,பீஷ்மர்,          ஸ்ரீ கிருஷ்ணர், தர்மர், வேத, உபநிடத ரகசியங்கள். ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம், ஸ்தோத்ரங்கள்,

TAGS- கேள்விகள், உரையாடல், அருளுரை,

பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ் (Post No.9939)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9939

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேய்க் கதைகள் (GHOST STORIES) , பயமுறுத்தும் ஆவிகள், துரத்தியடிக்கும் பிசாசுகள் பற்றி எழுதிப் புகழ்பெற்றவர்  பிரிட்டனின் அதி பயங்கர எழுத்தாளர் எம். ஆர். ஜேம்ஸ் M R JAMES . கல்யாணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இறந்தார். பெண்களையும் பேய் என்று நினைத்தாரோ!?!?

அவர் எழுதிய கதைகளைப் படித்தால், யாரும்  அந்தப் பேய்களை  மறக்க முடியாது.

மாண்டேகு ரோட்ஸ் ஜேம்ஸ் MONTAGUE RHODES JAMES , ஒரு கிறிஸ்தவ மதப் பிரசராகரின் மகன். அவர் அரச வம்சத்தினரும் பணக்கார்களும் கல்வி பயிலும் ஈடனில் ETON COLLEGE பயின்றார்.அங்கே ஐரிஷ் பேய்க்கதை எழுத்தாளர் ஷெரிடன் லே பானு SHERIDAN LE FANU எழுதிய பேய்கள் பற்றிய கதைகளை விரும்பிப் படித்தார். வாழ்நாள் முழுதும் அவரை மறக்காமல் பாராட்டியும் வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் படம் கற்றார். பழங்கால சுவடிகள் (ANCIENT MANUSCRIPTS), தஸ்தாவேஜுகளைப் படிப்பதில் தேர்ச்சியும் பெற்றார்.

கேம்பிரிட்ஜ்  நகரில் ஒரு கல்லூரிக்கும், ஈடன் கல்வி நிறுவனத்துக்கும் தலைமைப் பொறுப்பேற்று பணியாற்றினார்.ஆண்கள் சகவாசத்திலேயே வாழ்ந்த அவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

பழகுதற்கு இனியர் ஆயினும் ஒரு பயங்கொள்ளி. இரவு நேரத்தில் பயங்கரக் கனவுகள் வருவது அவருக்கு சர்வ சாதாரண நிகழ்வு. சின்னப்பையனாக இருக்கும்போது பஞ்ச் அன்ட் ஜூடி PUNH AND JUDY  பொம்மலாட்ட வடிவங்களை அட்டையில் வெட்டித் தயாரித்து விளையாடுவார். இதில் ஒன்றை பேய் GHOST என்று சொல்லி விளையாடுவார் . இது அவர் வாழ்நாள் முழுதும் சொப்பனங்களிலும் கதைகளிலும் கதாநாயகன் ஆகிவிட்டது.

குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விடுமுறைக்  காலத்திலும் ஒரு பேய், பிசாசுக் கதையை சொல்லுவது வழக்கம். இதை அவரே எழுதி உரத்த குரலில் படித்து நண்பர்ளை மகிழ்விப்பார் ; பயமுறுத்துவார் .ஒரு நடுத்தர வயது வரலாற்று அறிஞர் ஒரு வரலாற்றுப் புதியலைக் கண்டுபிடித்து தோண்டி எடுப்பதாகவும் அதில் ஒரு வரலாற்று கலைப்பொருளுடன் தொடர்புடைய பேயும் தோன்றுவதாகவும் அவர் கதைகளில் வரும். அந்தப் பேயை அதி பயங்கர உருவமாகக் காட்டி வருணிப்பார் . அதுமட்டுமல்ல. அது தோன்றும் நள்ளிரவு வேளை வருணனை, கேட்போரை புல்லரிக்கச் செய்யும்.

42 வயதில் அவர் முதல் பிசாசுக் கதைத் தொகுப்பை புஸ்தகமாக வெளியிட்டார். அது முதல் இவர் நன்றாக ‘கதை அடிப்பவர்’ என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இவர் அடித்த கதைகளில் ஒன்று:- ஒரு அறிஞர் பேய்களைப் பற்றிய சில காகிதங்கள், சுவடிகளைக் கண்டுபிடிக்கிறார். அதில் விசில்/ ஊதல்  பேய் சொல்கிறது. எப்போதாவது நீ விசில் அடித்தால் நான் வந்துவிடுவேன் என்று. கண்டுபிடித்த வரலாற்று அறிஞர் விசில் அடிக்கிறார். அவ்வளவுதான்! ஒரு பயங்கர ஆவி தோன்றி அவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறது . முடிவு என்ன ஆயிற்று – வெள்ளித் திரையில் காண்க!!! அல்லது புஸ்தகத்தில் கடைசி பக்கங்களில் காண்க!!!.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 1, 1862

இறந்த தேதி – ஜூன் 12, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 73

ஜேம்ஸ் எழுதிய கதைப் புஸ்தகங்கள் –

1904- GHOST STORIES OF AN ANTIQUARY

1911- MORE GHOST STORIES OF AN ANTIQUARY

1919- A THIN GHOST AND OTHERS

1922-  THE FIVE JARS

1922- MEDEVAL GHOST STORIES

1926 – A WARNING TO THE CURIOUS

1931- COLLECTED GHOST STORIES

அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும்  இருந்தார்; பல வரலாற்று நூல்களை எழுதினார். சுவடிகளின் அட்டவணை / கேட்டலாக் நூல்களை தொகுத்தார் . அவர் காலத்தில் அருங்காட்சியக ங்களுக்கு அரிய ஓவியங்களையும் கலைப் பொருட்களையும், சுவடிகளையும் சேகரித்துக் கொடுத்தார்.

ஜேம்ஸின் கதைகள் டெலிவிஷன் தொடராகவும், பிபிசி வானொலி ஒலி பரப்புகளாகவும் வந்தன.

–SUBHAM–

TAGS- பேய்க் கதைகள், எம்.ஆர்.ஜேம்ஸ், ஆவிகள், பிசாசுகள் , கதை, M R JAMES

நாட்டிய நாடகம் பார்ப்பது வேதம் ஓதுதலுக்கு இணையானது – பரத முனி (Post No.9938)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9938

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் முடிவான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன . நாட்டிய சாஸ்திரத்தை ஏன் எழுதினேன்

எப்படி எழுதினேன் என்று பரத முனிவரே சொல்லுவது முதல் அத்தியாயத்தில் உள்ளது . சொர்க்கத்தில் மட்டுமே பயன்பட்ட நாட்டிய சாஸ்திரம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை கடைசி அத்தியாயம் சொல்கிறது (முந்தைய கட்டுரைகளில் இரண்டு விஷயங்களையும் காண்க)

அந்தக் காலத்தில் நாட்டியமும் நாடகமும் ஒன்று. அதாவது புராண, இதிஹாசக் கதைகளை நாட்டியம் மூலம் கதைகளாக அபிநயித்துக் காட்டுவர். பின்னர் இடையிடையே வசனங்கள் நுழைக்கப்பட்டன. பழைய கருப்பு வெள்ளைத் திரைப்பட (BLACK AND WHITE FILMS) விளம்பரங்களில் கூட இந்தச் செய்திகளைக் காணலாம்- இந்தத் திரைப்படத்தில் 26 பாடல்கள் உள்ளன! என்று. அதாவது பாடலுக்கு அவ்வளவு மதிப்பு.ஆடலுக்கு அவ்வளவு மதிப்பு.

கடைசி அத்தியாயத்தில் உள்ள ஒரு முக்கிய விஷயம் நாட்டிய- நாடகம் பார்ப்பதால் என்ன பலன் என்பதாகும் . முதல் அத்தியத்திலேயே நாட்டிய சாஸ்திரம் மஹாபாரதம் போல ஐந்தாவது வேதம் என்று சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல வேதம் போல் அல்லாது எல்லா ஜாதியினரும் பங்கு பெறக்கூடியது என்றும் பகர்ந்தார் பரத முனி. “இதில் இல்லாதது உலகில் இல்லை; உலகிலுள்ள எல்லாம் இதனில் உளது” என்ற மஹாபாரத அடைமொழியை நாட்டிய சாஸ்திரத்துக்கு சேர்த்துச் சொன்னார்கள்.

நாட்டிய நாடகம் பார்ப்பதால் ஏற்படும் பலன்களை பரத முனிவரே சொல்கிறார்:-

மங்களம் – ஸ்லோகங்கள் 71-82

இந்த சாஸ்திரம் மகிழ்ச்சி அளிப்பது ; புனிதமானது; கேட்போரை தூய்மையாக்குவது. ஒருவர் செய்த பாவத்தை அழித்துவிடும் இதைப் படிப்போரும், கேட்போரும் , இதன்படி நாடகங்களை தயாரிப்போரும், அவற்றைக் காண்போரும்  வேதங்களை ஓதுவோர் அடையும் அதே பலன்களைப் பெறுவார்கள். யாகங்களை செய்வதாலும் தான தருமங்களை செய்வதாலும் கிடைக்கும் பலன்களும் இதனால் கிடைக்கும்  தானங்களில் மிகப்பெரிய தானம் , ஒரு நாட்டிய நாடகத்தைக் காணச் செய்வதாகும்.

ஒரு நாட்டிய நாடகத்தை மேடை ஏற்றுவது கடவுளுக்கு திருப்திதரும். சந்தனத்தாலும் மலராலும் பூஜிப்பதைவிட இது மேலானது.

இகலோக வாழ்க்கையில் சங்கீதத்தையும் நாட்டியத்தையும் ரசிப்பவர்கள் ஈஸ்வரன், கணேசன் ஆகியோரின் அருளுக்குப் பாத்திரமாகி இறைநிலை எய்துவர் .

நான் பல்வேறு விதிகளைச் சொல்லி பல விஷயங்களை விளக்கி நாட்டிய/நாடகம் நடிப்பத்தைச் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லாத விஷயங்களை மக்களின் நடை உடை பாவனைகளிலிருந்து அறிந்து  அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .

இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?

உலகிலிருந்து மக்களின் வறுமையும் நோய்களும் அகலட்டும் ;

உணவும் இனிய செல்வங்களும் செழிக்கட்டும்;

பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கட்டும்; எங்கும் அமைதி நிலவட்டும்.

நாடாளும் அரசர்கள் எல்லோருக்கும் பா துகாப்பு வழங்கட்டும் “

இவ்வாறு சொல்லி பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திர நூலை நிறைவு செய்கிறார்.

Xxx

என்னுடைய கருத்துக்கள் :

சம்ஸ்க்ருத இலக்கிய வரலாற்றை எழுதுவதாகச் சொல்லி 5, 6 அரை வேக்காட்டு, இந்து விரோத வெளிநாட்டினர் நூல்களை இயற்றியுள்ளனர். நாடகம் என்று வருகையில் நாம் அதை கிரேக்க நாட்டிலிருந்து கடன் வாங்கியதாக ‘மாக்ஸ்முல்லர் கும்பல்’ எழுதியுள்ளது. இது முற்றிலும் தவறு.

ரிக் வேதத்திலேயே 16 சம்பாஷணைக் கவிதைகள்- உரையாடல்கள் உள்ளன. அவை யாவும் அக்காலத்தில் நடிக்கப்பட்ட நாட்டிய நாடகங்கள். ஒரு வேளை அதனிடையே சிறிய உரை நடைப் பகுதிகள் இருந்திருக்கலாம் என்பதும் தற்கால ஆராய்ச்சியில் தெரியவருகிறது.

ஆனால் கிருத யுகத்தில் நாட்டிய நாடகம் இல்லை; திரேதா யுகத்தில்தான் அது பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது என்று பரத முனிவரே செப்புவதால், ரிக் வேத பாடல்களை நாம் நாடகத்தின் வித்துக்கள் என்றே சொல்ல  வேண்டும்.

கிரேக்க நாடோ வேறு நாடுகளோ நம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை மேலும் சில சான்றுகளுடன் மீண்டும் சொல்கிறேன் :-

மேலே, பரத முனி நாடகத்தின் புனிதம் பற்றிச் சொல்கிறார். பாஷா, காளிதாசன் வரையுள்ள நாடகங்களில் நாம் இந்த புனிதத்தைக் காண்கிறோம். கிரேக்க நாடகங்கள் இப்படி புனிதமானவை அல்ல. அவை பகடியும், அரசியல் நக்கல்களும் சிலேடைகளும் செக்ஸும் கொண்டவை.

மேலும் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி ஆடிய 11 வகை ஆடல்களும் கூட கண்ணன், சிவன், துர்க்கை, லட்சுமி முதலிய தெய்வீக நாட்டியங்களே. ஆக, இரண்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் கூட  புனிதமே நிறைந்து இருந்தது.

மேலும் ஒரு முக்கிய விஷயம்- பரதரும் “கோ ப்ராஹ்மணேப்யோ  சுபமஸ்து நித்யம்” என்று முடிக்கிறார். 1400 வருடங்களுக்கு முன்னர் தேவாரத்திலும் வாழக அந்தணர் வானவர் ஆனினம் என்ற பாடல் உளது. இதற்குப் பொருள் அந்தணர் முதலான எல்லோரும், பசு முதலிய எல்லா பிராணிகளும் என்று பொருள். இப்படிப் பிராணிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்பதை உலகில் வேறு எங்கும் காண முடியாது. ரிக் வேதம் முதலிய இந்து நுல்களில்தான் காணலாம்.எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் என்பதே இதன் பொருள் .

இன்று நம் கையில் தவழும் நாடிய சாஸ்திரத்தில் முன்னுக்குப் பின்  முரணான விஷயங்களும் உள்ளன . இதையும் பரதரே இறுதியில் நியாயப்படுத்திவிட்டார். மக்களின் பேச்சு , நடை உடை பாவனை ஆகியவற்றைக் கண்டு அவ்வப்போது அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மங்களம் பாடுகிறார். ஆகையால் இப்போதைய நாட்டிய சாத்திரத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்குப் புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டதை அறிகிறோம். பகவத் கீதையில் கூட கண்ணன் , நான் சொல்ல வேண்டியத்தைச் சொல்லி விட்டேன்; ஏற்பதும் மறுப்பதும் உன் இஷ்டம் என்னும் தொனியில்தான் கிருஷ்ணன் பேசுகிறான். அதே போல மக்களின் சுய சிந்தனைக்கும், சுதந்திரத்துக்கும், மனோ தர்மத்துக்கும்  பரத  முனிவரும் இடம் தருவது 2500 ஆண்டுக்கு முன்னுள்ள முற்போக்கு சிந்தனையைக் காட்டுகிறது. உலகம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை அறிந்த இந்துக்கள் தங்களுடைய எல்லா நூல்களையும் ‘அப் டேட்’ UPDATE  செய்திருப்பதை நாம் காண்கிறோம்.

இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .

மேலும் நாடகத்தின் முதல் அங்கத்தில் டைரக்டர்/ சூத்ரதாரர் தோன்றி இது என்ன நாடகம், ஏன் வந்தது என்பதை அறிவிக்கும் வழக்கமும் நூற்றுக் கணக்கான சம்ஸ்க்ருத நாடகங்களில் உண்டு. கிரேக்கத்தில் இல்லை.

கிரேக்க நாடகங்களில் தேசீய கீதம் கிடையாது. சம்ஸ்க்ருத நாடகங்கள் அனைத்தும் ‘பரத வாக்கியம்’ என்னும் தேசீய கீதத்துடன் முடிவடையும். நாடு செழிக்க, மன்னன் வாழ்க, மக்கள் வாழ்க எனும் பொருள்படுபடும் படி 6 முதல் 8 வாக்கியங்கள் இருக்கும். தேசீய கீதம் பாடும் வழக்கத்தை உலகிற்குக் கற்பித்ததும் இந்துக்களே. இதுவும் கிரேக்க நாடகத்தில் இல்லை. ஆக புனிதமான நாடக , நடனக் கலைக்கு முதல் முதலில் நூல் யாத்த பரத முனிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இன்று அவர் எழுதிய விதிகள், விஷயங்கள் நமக்குத் தேவைப்படுவதில்லை. ஆயினும் அவர் கூறிய அடிப்படை கருத்துக்கள் மாறவில்லை. மேடை அமைப்பது முதல், மேடையில் செய்யப்படவேண்டிய பூஜைகள் முதல், நடிகர்களுக்குப் போட வேண்டிய வே ஷம்வரை அவர் நிறைய விதிகளை இயற்றியுள்ளார்.

வாழ்க பரத முனி!  வளர்க நாட்டிய/நாடக சாஸ்திரம்!!

–subham–

tags –நாட்டியம், நாடகம், பலன், நன்மைகள் , பரத முனி , வேதம் ஓதுதல்