நிம்மதியைக் கெடுக்க ஒரு கல்! ஒரு சொல்! (Post No.10,957)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,957

Date uploaded in London – –   9 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 63

Kattukutty

குருவே பகுத்தறிவுன்னா என்ன குருவே???

எங்கே ஒத்தக் காலை தூக்கு பார்க்கலாம்……..

சிஷ்யன் தூக்கினான்.

அப்படியே இன்னொரு காலையும் தூக்கு பார்க்கலாம்

தூக்கி கீழே விழுந்தான் சிஷ்யன்?

குரு சொன்னார்: – ஒரு காலை தூக்கினால் நிற்கலாம்

என்பது பகுத்தறிவு…….. இரண்டுகாலையும் தூக்கினால்

கீழே விழனும்கறது விதி!

                           தென்கச்சி

*

எண்ணங்களின் தொகுப்பே மனம்

கருத்துக்களின் தொகுப்பே பேச்சு.

அதிக பேச்சும் பொய்யும் நண்பர்கள்.

*

வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக் கொள்!

உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்…. !!!

xxxx

பறவைகளின் நிம்மதியை கெடுக்க

ஒரு *கல்* போதும்…..

மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு *”சொல்”* போதும்……!

xxx

எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்…

தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்…

அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்… !

xxx

வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை….

பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.. !!

xxxx

வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..

கெட்டது நடந்தால் அது மற்றவர்களால் என்றும் பிதற்றாதீர்கள்..

அனைத்திற்கும் நாம் தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் .xxxx..

எதையாவது கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தால் … அதை கொடுக்கும் வரை தான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்….

xxxx

ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு…

மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு…

xxx

*நல்லதே நினை.*

*நல்லதே நடக்கும்.*

—subham–

Leave a comment

Leave a comment