கோபம் வந்தா என் மனைவி பத்ர காளியாயிடுவா………..(Post No10,972)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,972

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 72

Kattukutty

சிரிக்காவிட்டால் விட மாட்டேன் -1

டாக்டர்- பல்லு எப்டி விழுந்துச்சு?

வந்தவர் – அத சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்ன்னு

என் பொண்டாட்டி சொல்லிருக்கா…….

xxxx

மன்னா! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து

நம் ராணியை கடத்திச் சென்று விட்டான்….

ராணி சத்தம் போடவில்லையா???

“சீக்கிரம், சீக்கிரம் என்று அஙறினார்கள் மன்னா!

xxx

கட்ன பொண்டாட்டிய கை நீட்டி அடிச்சயே நீயெல்லாம்

ஒரு மனுஷனா?

கயிறால கட்டாம விட்டிருந்தா அவ என்ன அடிச்சிருப்பா……

xxxx

கோபம் வந்தா என் மனைவி பத்ர காளியாயிடுவா………..

என் மனைவி பாத்திர காளியாயிடுவா……….

xxx

அனுமதி கேட்கவும் இல்லை,

அனுமதி கொடுக்கவும் இல்லை,

ஆனால் பிடிவாதமாக ஒரு

முத்தம் கன்னத்தில்!!!

கொசுக்கடி………

xxxx

வெற்றி என்பது இட்லியைப்போல

வெந்தபின்தான் தெரியும்!!!

xxx

உங்கள் கணவரிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன?

அந்த ஆளையே பிடிக்காது……….

Xxx

காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணி தெளிச்ச போதும்,

என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார்……..

எப்படி?

குடிச்சுட்டு அங்கதான விழுந்து கிடப்பாரு…….

xxxx

என்னங்க சார், தலையில காயம்?

விறகு இடிச்சட்டுட்டது

பார்த்து போகக்கூடாது? … ஆமா விறகு எங்க இருந்தது???

என் பொண்டாட்டி கையில……

xxx

எங்க படத்தில டயலாக்கும் கிடையாது டைட்டிலும் கிடையாது….

ஆனா செம ஓட்டம் ஓடுது!

ஆர்ட் பிலிமா?

இல்ல ப்ளூ பிலிம்!!!

xxx

என்னங்க கல்யாண பொண்ணு காதுலே, கழுத்துல கையில்லலாம்

பூவை சுத்தி அனுப்பியிருக்காங்க?

பொன்ன வைக்கிற இடத்திலே பூவ வச்சாப் போறும்ன்னு சம்பந்தி

சொல்லி இருந்தாங்களாம்…….

xxx

இளைஞர்களை கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு?

ஏன் என்ன சொன்னரு?

நாங்க ஆட்சிக்கு வந்தால் மாணவ மாணவியரின் “அரியர்ஸ் “

அத்தனையும் தள்ளுபடி செய்வோம்ன்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு!

xxx

மன்னர் போதேல இருக்கும்போது பாடப்போனது தப்பாப் போச்சே….

ஏன் புலவரே?

குவாட்டருக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையான்னு

கேட்கறார்……..

xxx

என்னய்யா இது இவ்வளவு மட்டமா இருக்கு போதையே ஏறல…

தண்ணி நிறைய கலந்துட்டீங்களா???

தலைவரே நீங்க குடிச்சது தண்ணி மட்டும்தான் நீங்க பார்ல இல்ல

மீட்டிங்ல இருக்கீங்க…….

Xxx

நகை கடைக்காரர் பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டீங்களே,

எப்படி போகுது……

பொண்ணு தங்கச்சிலை மாதிரி இருக்கான்னு வாய் தவறி சொல்லிட டேன்

இப்போ என மாமியாரும் மாமனாரும் “செய் கூலி”வேணும்ன்னு

அடம் பிடிக்கிறாங்க………..

xxx

அவர போலி டாக்டர்ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க???

மாவுகட்டு போட “கிரைண்டர்” வாங்கணும்ன்னு சொன்னாரே!

xxx

சார்! செத்தவனின் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலை

மறைவாகி விட்டான் இப்போ என்ன சார் பண்ணறது?

கொலையானவனும், கொலையாளியும் சமாதானமாகி விட்டனர்ன்னு

“பைலை”க்ளோஸ் பண்ணி விடு.

டாக்டர் நூறு வயசு வரை வாழ என்ன செய்யணும்?

இதை நீங்க எங்கிட்ட வர்ரதுக்கு முன் யோசிச்சிருக்கணும்!

ஏசி போட்டதுக்கெல்லாம் ஒரு ஆளை தூக்குல போடுவாங்களா?

யோவ், அவன் ‘போட்டது” அஸிஸ்டென்ட் கமிஷனரை!

என் மனைவி சாரதா ரொம்ப நல்லவ…..

பின்ன ஏன் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே???

அவ நல்லவன்னு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட

பிறகுதான் தெரியுது!

என் பொண்ணு கல்யாணத்த வெறும் 5,500 ரூபாயில முடிச்சுட்டேன்!

எப்படி?

ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தேன்! ஓடியே போய்ட்டா!

xxx

வர்ணனையாளர்- நீங்க எங்கேர்ந்து பேசுறீங்க

அழைத்தவர்- T நகர்

வர்ணனையாளர் – அட நானும் T நகர்தான் . நீங்க எந்த ஏரியா?

அழைத்தவர் – சாய் அப்பார்ட்மென்ட்

வர்ணனையாளர் – நானு அதே அப்பார்ட்மென்ட்தான், ஆமா

உங்க பிளாட் நம்பர் என்ன?

அழைத்தவர் – 13

வரணனையாளர் -கிண்டல் பண்ணாதீங்க அது என் வீடு……

அழைத்தவர் – நான் உன் புருஷன்டி. மூதேவி, வீட்டு சாவியை

எங்கேடி வச்சிருக்கே???

வர்ணனையாளர் – .???

Xxx

எனக்கு 98 ல குழந்த பொறந்தது, உனக்கு???

108 ல……

xxx

***

Leave a comment

Leave a comment