சிரிக்காவிட்டால் விடமாட்டேன்! (Post No.10,996)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,996

Date uploaded in London – –   17 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 80

Kattukutty

சிரிக்காவிட்டால் விடமாட்டேன்!

ஒரு காட்டுக்கு 5 பேர்வேட்டையாட போனார்கள்.

மூன்று பேரை சிங்கம்அடித்து கொன்று தின்றுவிட்டது.

பாக்கி 2 பேரை விட்டு விட்டது…….

ஏன்?…

அவுங்க இரண்டு பேரும் LION CLUB மெம்பர்களாம்!!!

டாக்டர் – சே இவ்வளவு கஷ்டப்பட்டும் பேஷன்டை பிழைக்க

வைக்க முடியல்லியே?

Assistant – ஏ லூசு டக்டர்! நீ பண்ணினது ஆபரேஷன் இல்லே,

போஸ்ட் மார்ட்டம்!!!

தலைவர் ஏன் மேடல வைச்சு இந்த அடி அடிக்கிறாங்க???

ஓட்டப் பந்தயத்துல முதலாவதாக வந்த பெண்ணுக்கு

“ஓடு காலி “ ன்னு பட்டம் கொடுத்தாராம்!!!

ஆபரேஷன் தியேட்டர்ல என்ன கலாட்டா???

பேஷன்டுக்கு பதிலா ரெஸ்ட் எடுத்துக்கிட்ருக்கற டாக்டரை தவறுதலாந்தூக்கிட்டு வந்துட்டாங்களாம்!!!

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு…….

ஏன்? இப்ப கட்சி   ஊர்வலத்திலிருக்கற எல்லோருக்கும்

குவாரட்டருக்கு பதிலா “டானிக் பாட்டில்” தராராம்!!!

டாக்டர், இந்த மருந்துக்கு சைட் எபக்ட் இருக்காதுன்னு

சொன்னீங்க…..ஆனா இப்ப வயிறு வீங்கிப் போச்சே???

வயிறு நடுவுலதானே இருக்கு சைட்ல இல்லேல்ல……..

போகாதே, போகாதேன்னு நவகிரக சன்னதிலிருந்து தொண்டர்கள்

எதுக்கு கோஷம் போடறாங்க???

தலைவரோட ராசிக்கு சனி எட்டுல போறாராம், அதை நிறுத்தத்தான்

போராட்டம் நடத்துறாங்க!!!

காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம்,

நனைந்த பின் ஜலதோஷம்!!!

அவர் பிருமாண்டமான பல்டாக்டர்! பல் செட்டுக்கூட தோட்டா

தரணியைத்தான் கூப்பிடுவார்என்றால பார்த்துக்கோயேன்!!!

கவிதை என்பது வார்த்தை தொகுப்பு!

காதல் என்பது வயசுக் கொழுப்பு!

திருடன்-1 டேய் ! நாம் திருடின பணத்தை எண்ணாம கூட ஒளிச்சு

வச்சிருக்கோமே???

திருடன்-2 அதுனால என்ன…. நாளைக்கு பேப்பர்ல வருமில்ல

அப்ப பாத்துகலாம்?…..

மனைவி – நம்ம பையன் வளர்ந்து என்னவாக வேண்டுமன்னு

ஆசை ப் படுறீங்க???

கணவன் – என்னவேணாலும் ஆகட்டும், ஆனா யாருக்கும்

புருஷனாக மட்டும் ஆக க்கூடாது. நான் பட்ட கஷ்டம்

என்னோடு போகட்டும்…….

மனைவி – உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லா இருக்குன்னு

ஏன் பொய் சொன்னீங்க???

கணவன்-எனக்கு பொண்ணு பார்க்கும்போது உண்மையைச்

சொன்னானா அவன்???

பியூன்- மணி ஆறாகுது இன்னும் வீட்டுக்குப்போகலியா?

அதிகாரி – இன்னைக்கு வருமானம் ஒண்ணு கூட இல்லே

வீட்டுக்கு போனா மானம் போகும்……

ஏட்டையாவை ஏன் அரெஸ்ட் பண்றாங்க???

ஆர்வக்கோளாறுல “மாமூலுக்கு வருமான வரி விலக்கு உண்டு”

அப்டீன்னு எழுதி ஸ்டேஷன் வாசல்ல போர்டு எழுதி வச்சாராம்!

திருடன் – எப்போது இந்த புடவை எடுத்தே??? தீபாவளிக்கா ?

பொங்கலுக்கா?

மனைவி – கடைக்காரர் குனிஞ்சு பில. போடும்போது!’

ரிடையர் ஆகும்போது அவருக்கு பணமுடிப்பும் அருகம்புல் கட்டும்

கொடுக்கிறார்களே. ? ஏன்?

இந்த கம்பேனிக்கு அவர் மாடா உழைத்தாராம் அதுக்கு!

சார் சாப்பிட்டாச்சா பில் போடலாமா?

வேண்டாம், க்ரைண்டர்ல அரிசியப் போடுங்க…….

நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற?

பாபூஸ் பேஸ்ட்

என்ன சோப் யூஸ் பண்ற?

பாபூஸ் சோப்

அது என்ன புது பிராண்டா?

இல்ல என் ரூம் மேட் பெயர்!

24 மணி நேரமும் திறந்தே இருக்கும் கடை எது?

சாக்கடை!

நோயாளி – என கண்ணுக்கு சித்திர் குப்தன் தெரிகிறான் டாக்டர்…..

டாக்டர், ஆபரேஷன் நடக்கட்டும் எம்தர்மனே தெரிவார் பார்!

முதலாளி -ஏற்கனவே மகளுக்கு காது குத்தல், மகனுக்கு மொட்டை,

மாமியாருக்கு கருமாதின்னு ஏகப்பட்ட லீவு எடுத்துட்டே, இப்ப என்ன

காரணத்திற்காக லீவு கேக்கப்போற?

வேலைக்காரன் – நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன், அதற்காக

லீவு வேண்டும் முதலாளி!

அந்தப் படம் பயங்கர சண்டைப் படம்!

அதுனால என்ன?

டிக்கட் வாங்கும்போதே மூஞ்சில ஒரு குத்து விட்டு தான் டிக்கட்

கொடுக்கறாங்க…….!

கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு விழாவில தலைவர் மானத்த

வாங்கிட்டார்………

எப்படி?

ஆன் லைன் மாதிரி பெண் லைன் வசதி செய்யறதுக்கும் ஏற்பாடு

செய்யறேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்!

***

Tags- ஞான மொழிகள் – 80

Leave a comment

Leave a comment