செப்பு மொழி இருபது! (Post No11,046)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,046

Date uploaded in London – –    24 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழி இருபது!

ச.நாகராஜன்

  1. எனது மனைவி தான் உலகில் அற்புதமான பெண்மணி – இது எனது அபிப்ராயமில்லை – எனது மனைவியினுடையது.
  2. தன் கணவ்ன் எங்கே இருக்கிறான் என்று எப்போதுமே அறிந்திருக்கும் ஒரு பெண்மணியை என்னவென்று நீங்கள் சொல்வீர்கள்?

ஒரு விதவை என்று!

  • எனது மனைவி என்னை எல்லா விஷயங்களிலும் அனாவசியமாகத் தலையிடுபவன்  என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள். குறைந்தபட்சம் அதை அவள் அந்தரங்க டயரியிலாவது எழுதி வைத்திருக்கிறாள்.  – ட்ரேக் சதர்
  • ஒரு சின்ன அறிவுரை – ஒருபோதும் அதை எவருக்கும் வழங்காதீர்கள்! – ஏ.ஜே. வோலிகாஸ்
  • கல்லூரிக்குச் சென்று ஒருபோதும் திரும்பி வராதவர்களை

புரபஸர் என்று சொல்கிறோம்.

  • வாழ்க்கை வாழ்வதற்குரிய ஒன்று தானா? அது ‘லிவரை’ப் பொறுத்து இருக்கிறது!
  • ரஷியாவிற்கு எங்கள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. நாங்கள் திரும்பி வந்து விட்டோம். – பாப் ஹோப்
  • எதிர்காலத்தைப் பற்றி எப்போதுமே நான் நினைப்பதில்லை. அது சீக்கிரமே வந்து விடுகிறது. – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  • ஒரு நல்ல சொற்பொழிவு என்பது ஒரு பெண்ணின் ஸ்கர்ட் போல! விஷயத்தை கவர் செய்யும்படி போதுமான அளவு நீண்டிருக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்டிவிடும் வகையில் சின்னதாக இருக்க வேண்டும்.
  • ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஏன்  இணைந்து செல்லக் கூடாது என்று எனக்குப் புரியவில்லை. கம்ப்யூட்டரை வைத்து உங்கள் ஆசீர்வாதங்களை நீங்கள் ஏன் எண்ணக்கூடாது?    ராபர்ட் ஆர்பென்
  •  அவன் நிஜமாகவே ஒரு வெற்றிகரமான மனிதன் தான் – அதை அவன் மாமியாரே கூட ஒத்துக் கொள்கிறார்.  -எல்மர் பாஸ்தா
  •  திருமணம் என்ற ஒரே ஒரு போரில் மட்டும் தான் ஒருவன் எதிரியுடன் படுத்துக் கொள்கிறான். – மெக்ஸிகோவின் பழமொழி – நெட் ஷெரின் – கட்டிங் எட்ஜ் (1984)
  •  விசுவாசமாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்து நீ எஜமானனாக (BOSS ஆக) ஆகி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கலாம்.  ராபர்ட் ஃப்ராஸ்ட் (1874-1963) அமெரிக்க கவிஞர்
  •  கடுமையான உழைப்பு யாரையும் கொன்று விடாது என்பது உண்மை தான், என்றாலும் எதற்காக ஒரு சான்ஸ் எடுக்க வேண்டும்?  ரொனால்ட் ரீகன் – 31-3-1987 அன்று கார்டியன் பேட்டியில் கூறியது
  •  போர் என்பது அமெரிக்கர்களுக்கு பூகோளத்தைக் கற்பிக்க கடவுளின் வழியாகும். (கூறியது யார் என்று சரியாகத் தெரியவில்லை. அம்ப்ரோஸ் பியர்ஸாக இருக்கலாம்)
  •  ஜோதிடக் கணிப்பு என்பது கஷ்டமான ஒன்று – அதுவும் எதிர்காலம் பற்றியதாக இருந்தால். – நீல்ஸ் போர் 1885-1962 இயற்பியல் விஞ்ஞானி
  •  தூரத்திலிருந்து செயல்பட முடியும் என்று நம்புபவர்கள் என் கையைத் தூக்குங்கள் – யாரோ குர்ட் வான்னகட் சொன்னதாக நம்பப்படுகிறது
  •  பரவாயில்லை. செத்த பறவை கூட்டை விட்டுக் கிளம்பாது – வின்ஸ்டன் சர்ச்சிலிடம் அவரது பட்டன் சரியாக இல்லை என்று சொன்ன போது அவர் கூறியது -5-1-1957இல்  ஜார்ஜ் லிட்டல்டனுக்கு ரூபர்ட் ஹார்ட் டேவிஸ் எழுதிய கடிதம்
  •  எனக்கு நீண்ட ஆயுள் எதனால் என்று எதைக் குறிப்பிட்டுச் சொல்வது. துரதிர்ஷ்டம்! – க்வென்டின் க்ரிஸ்ப் – ஆங்கில எழுத்தாளர் – 1909-1999 – ஸ்பெக்டேடர் 20-11-1999
  • வங்கி என்பது உனக்கு நிச்சயம் கடன் தேவை இல்லை என்று நீ நிரூபிக்கும் பட்சத்தில் உனக்குப் பணத்தைக் கடனாகக் கொடுக்கும் ஒன்று – பாப் ஹோப் 1903-2003 அமெரிக்க நகைச்சுவையாளர் ஆலன் ஹாரிங்டன் – லைஃப் இன் தி கிரிஸ்டல் போலஸ் 1959

இதோ ஆங்கில மூலம் :-

My wife is the most wonderful woman in the world, and that’s not my opinion – it’s hers.

What do you call a woman who knows where her husband is at all times?  A Widow.

My wife thinks I’, too nosy. At least  that’s what she wrtes in her diary. – Drake Sather

A word of advice, don’t give it. – A.J. Volicos

Those who go to college and never get out are called professors.

Is life worth living? That depends on the liver.

We had a very successful trip to Russia… We got back.    Bop Hope

I never think of the future. It comes soon enough. – Albert Einstein

A good speech, like a womna’s skirt should be long enough to cover the subject and short enough to create interest.

I don’t see why religion and science can’t  get along.  What’s wrong with counting our blessings with a computer? Robert Orben.

He must be a big success – even his mother-in-law adimits it.  – Elmer Pasta

Marriage is the only war where one sleeps with the enemy.  – Anonymous Mexican saying Ned Sherrin Cutting Edge (1984)

By working faithfully eight hours a day, you may eventually get to be a boss and work twelve hours a day. Robert Frost 1874-1963 American Poet

It’s true hard work never killed anybody, but I figure why take the chance? Ronald Reagan 1911-2004  9Interfview in Guardian 31-3-1987

War is God’s way of teaching, Americans Geography. (Anonymous widely attributed to Ambrose Bierce, but not found before the early 1990s)

Predictions can be very difficult …. Especially about the future.  Niels Bohr – 1885-1962

Danish physicist

Those who believe  in telekinesis, raise my hand. Anonymous modern saying, sometimes  associated with the writer Kurt Vonnergut

No matter. The dead bird does not leave the nest. (It was pointed out to the aged Winston Churchill tha this fly-buttn was undone:   (Winston Churchill 1874-1965 – British Conswervative Statesman  Rubert Hart Davis letter to George Lyttelton, January 5, 1957)

To what do I attribute my  longevity? Bad luck – Quendtin Crisp 1908- 1999 English Writer: In Spectator 20 Novemer 1999

A bank is a place that will lend you money if you can prove that you don’t need it. Bop Hope, American Comedian, Alan Haarington Life in the Crystal Polace – 1959

***

tags- செப்பு மொழி, இருபது,

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 3 (Post No.11,045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,045

Date uploaded in London – –    23 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 3

கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில்  எழுதிய ராஜதரங்கிணி நூலில் காணப்படும் மேலும் பல அதிசய விஷயங்கள்:-

ராஜதரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலில் சுமார் 8000 ஸ்லோகங்கள் உள்ளன .

இதோ மேலும் சில அதிசயச் செய்திகள்:

இரண்டாவது கோனந்தன் , யசோவதி என்னும் ராணிக்கு மகனாகப் பிறந்தான். அப் போது கிருஷ்ணர் சொன்ன , மேற் கோள்காட்டிய புராண ஸ்லோகம்: ‘காஷ்மீர் என்னும் தேசம் பார்வதி தேவி; அதனுடைய அரசன் சிவபெருமானின் ஒரு பாகம்’.அந்த அ ரசன் கெட்டவனாக இருந்தாலும் , ஆசீர்வாதம் பெற விரும்பும் எந்த அறிஞனும், மன்னரை அலட்சியப்படுத்தக்கூடாது – 1-72

xxx

முதலாவது அபிமன்யு மன்னர் ஆனபோது, சந்திராசார்யா என்பவர் பதஞ்சலி முனிவரின் மஹாபாஷ்ய இலக்கணத்தைப் பரப்பினார் (பாணினி மஹரிஷியின் அஷ்டாத்யாயீ இலக்கணத்தின் மீது எழுந்த பேருரை மஹாபாஷ்யம் ஆகும்) – 1-176

ஜெயபீட என்னும் மன்னரும் மஹாபாஷ்ய உரையைப் பரப்பியதாக 4-488 ஸ்லோகம் கூறுகிறது

இந்த இடத்தில் ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆர்.எஸ். பண்டிட் வேறு ஒரு விஷயத்தையும் அடிக்குறிப்பில் சேர்த்துள்ளார்.

ஜைன் அல் அப்தின் என்ற காஷ்மீர் மன்னரும் சம்ஸ்க்ருதம் கற்பதில் ஆர்வம் செலுத்தினார். அப்போது ராமானந்தா என்பவர் மஹாபாஷ்ய  நூலுக்கு விளக்க உரை எழுதினார். அந்தக்காலத்தில் யுத்தபட்ட என்பவர் அதர்வண வேதம் படிப்பதற்காக மஹாராஷ்டிரத்துக்குச் சென்றார். அதர்வ வேதத்தை காஷ்மீரில் பரப்ப வேண்டும் என்பதற்காக அவரை காஷ்மீருக்குத் திரும்பிவரும்படி தலைமை நீதிபதி சீர்யபட்ட மூலம் தூண்டினார். இதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் தட்சிண தேசம் எங்கும் அதர்வண வேத ஓலைச் சுவடிகள் இல்லாததால்  எஸ் . பி. பண்டிட் என்பவர் காஷ்மீர் சுவடிகளைக் கொண்டு அதர்வண வேதத்தை எழுத்தில் வடித்தார். ஒரு முஸ்லீம் மன்னரின் சம்ஸ்க்ருத ஆர்வத்தால் அதர்வண வேதம் நமக்கு நூலாகக் கிடைத்தது.(அதர்வண வேதத்தை வாய்மொழியாகக் கற்று பரப்பியவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவே.

Xxx

ஹர்ஷ என்ற காஷ்மீரி மன்னன், கர்நாடக மன்னன் பர்மாந்தியின் மனைவியின் படத்தைப் பார்த்து அவள் மீது காதல் கொண்டான்.அந்த முட்டாள் மன்னரின் ஆசைக்கு அடிவருடிகள் தூபம் போட்டனர். அவளை அடைந்தே தீருவேன் என்றும் பர்மாந்தியை தோற்கடிப்பேன் என்றும் அரசவையில் வெட்கமில்லாமல் அறிவித்தான் 7-1119

xxx

மன்னர் தோல்வி அடைந்தவுடன், வசந்தலேகா தலைமையில் 70 ராணிகள் அவர்களுடைய மருமகள்களுடன் தீப்புகுந்து உயிர்த் தியாகம் செய்தனர்  ஆகாய கங்கை தீப்பிடித்து கொதித்தால் எவ்வளவு சப்தம் எழுமோ அந்த அளவுக்கு  அவர்கள் எரியும் சப்தமும் எழுந்தது. அதைப் பார்த்த மன்னர் முனிவர்கள் சொன்ன ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் முனுமுனுத்தான் –“மக்களை துன் புறுத்தி , கொடுமைகள் இழைத்த போது எழுந்த தீயானது அந்த அரசனின் உயிர், உடைமை, வம்சத்தை அடியோடு அழித்துச் சாம்பலாக்கும் வரை அணையாது “

7-1578 – 1582

இந்த ஸ்லோகம் பஞ்ச தந்திரம் , யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி ஆகியவற்றிலும் உளது.

xxx

ஒப்பிடுக -குறள் :

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல் கோடிச்

சூழாது செய்யும் அரசு -554

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை -555

Xxx

நாடகம் பார்ப்பவர்கள், மழை வந்தவுடன் சிதறி ஓடுவது போல, ஹர்சனின் படைகள் சிதறி ஓடின 7-1606 (அந்தக் காலத்தில் திறந்த வெளி அரங்கில் நாடக மேடை அமைத்து நாடகம் நடத்தியது தெரிகிறது

xxx

மன்னன் ப்ரவரசேனரின் பக்தியை மெச்சி , மேற்கு நோக்கியிருந்த ‘விநாயக பூமி சுவாமி’, தானாகவே கிழக்கு நோக்கித் திரும்பினார் 3-352

xxx

பஞ்ச ஜனங்களை ஆண்ட மன்னன், ஸ்ரீ என்ற பெயருள்ள 5 தேவி கோவில்களை உருவாக்கினான் . பஞ்ச ஜனாஹா – 5 வகை குழுக்கள் – என்ற சொற்றொடர்  ரிக் வேதம் முழுதும் வருகிறது இதற்குப் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதும் அவைகளுக்கு உறுதியான ஆதாரம் ஏதுமில்லை 3-353

xxx

சோழர்களின் மன்னரான ரதிசேனன் , கடல் வழிபாடு செய்தபோது, தேவி தோன்றினாள்.அவளுடைய புனிதத் தன்மையை அறிந்த சோழன், அவளை  மணம் முடிக்கவந்த எல்லோருக்கும் முடியாது என்றே சொல்லி அனுப்பினான். ரணாதித்யா என்ற மன்னரின் அமைச்சர்களும் பெண் கேட்டு வந்தனர். மன்னர் மறுத்தபோதும் தேவியே தனக்கு உகந்தவர் அந்த மன்னரே என்று சொல்லி கயல்யாணம் செய்துகொண்டாள்.

(இப்படி ஒரு சோழ  மன்னரின் கதை வேறு எங்கும் இல்லை ; ஆயினும் மணிமேகலை முதலியவற்றில் வரும்  செய்திகளை ஒப்பிட்டு ஆராய வேண்டும் .3-432

Xxx

லலிதாதித்யா என்ற மன்னன்,  கர்நாடகத்தின் மீது படையெடுத்தான். அக்காலத்தில் ரத்தா என்ற லாகிய ராணியின் புகழ் எங்கும் பரவி இருந்தது. அவளுடைய சக்தி துர்கா தேவி போல எங்கும் பரவியது. அவளும் லலிதா தித்யாவுக்கு அடிபணிந்தாள் . அவனுடைய படைகள் காவிரி நதி தீரத்தில் பனம் கள்ளை சுவைத்து மகிழ்ந்தன. அவன் 7 கொங்கண  தேசங்களையும் வென்றான்.4-152 முதல் ஸ்லோகங்கள்

அடிக்குறிப்பில் ரத்தா என்பது ராஷ்டிரகூட வம்ச ராணி என்றும் ‘நாரி கேர சுரா’ என்பது தென்னை மரக் கள் என்றும் உள்ளது. 7 கொங்கண தேசங்கள் என்பன – கேரளா , துலுங்க (தெலுங்கு தேசம்??), கொங்கணம், கோவராஷ்ட்ர (கோவா), கேராதஹ , வரலத்த, பெர்பெரா என்று அடிக்குறிப்பு கூறுகிறது

xxx

4-169

காளிதாசன் கவிதைகளில் உள்ளது போலவே குகைகளில் உள்ள ‘ஒளிவிடும் தாவரங்கள்’ பற்றிக் கல்ஹணரும் பேசுகிறார் .4-169; 8-1216; 8-2388. இதை சந்திர ஒளி அளிப்பதாகவும் கூறுகிறார்.(நியூசிலாந்து குகைகளில் உள்ள மின்மினிப் பூச்சிகள் இவ்வாறு ஒளிவீசுவது பி.பி.சி.டாக்குமென்டரியில் காட்டப்பட்டது. ஒருவேளை அந்தக் காலத்தில் சிலவகை மரங்களில் மின்மினிப் பூச்சிகள் வசித்திருக்கலாம்)

Xxx

பெண்களே ஆட்சி செய்யும் ஸ்த்ரீ ராஜ்யம் பற்றி கல்ஹணர் குறிப்பிடுகிறார் 4-173. கிரேக்கர்கள் இவர்களை அமேஸான் என்பர்; அதாவது வில் உபயோகத்துக்காக ஒரு முலையை வெட்டி எரிந்தவர்கள். இவர்களை பற்றி பாணினி, மஹாபாரதம், வராஹ மிஹிரரின் பிருஹத் ஸம்ஹிதாவும் குறிப்பிடுகின்றனர். பாண்டிய நாட்டை ஆண்ட மீனாட்சி பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்னரே மெகஸ்தனீசும் எழுதிவைத்துள்ளார் .

Xxx

தோல்வியுற்ற நாடுகளின் மக்களை அவமானப்படுத்த மன்னர், ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தான். துருக்கியர்களை தலை மயிரை பாதி சிறைத்துக்கொள்ள  வேண்டும் என்றும்  தெற்கத்திய மக்களை வேட்டியின் பின்னால் ஒரு வாலை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவி ட்டான் .4-180

xxx

ஸ்த்ரீ ராஜ்யத்தில் மன்னன் ஒரு நரஹரி உருவத்தை காந்தம் மூலமாக அந்தரத்தில் தொங்கவிட்டான் . மேலே ஒரு காந்தத்தையும்  கீழே ஒரு காந்தத்தையும்  தொங்கவிட்டு இப்படிச் செய்தான் 4-185

Xxx subham xxxx

Tags-  ஸ்த்ரீ ராஜ்யம், காந்தம், ஒளிவிடும் தாவரங்கள், கல்ஹணர்

ஞானமொழிகள்-87 (Post No.11,044)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,044

Date uploaded in London – –    23 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-87

எல்லா வண்ணங்களை விட, நீலம்தான் உயர்ந்தது.ஏனென்றால்

எல்லாவண்ணங்களுக்கும் வேறொரு பெயரும் ஒட்டி வரும்.ஆனால்

நீலத்திற்கு அப்படி வராது்.

வெள்ளை – வெள்ளை வெளேரென்று……

மஞ்சள் -மஞ்ச மஞ்ஜேளென்று…….

கருமை- கன்னங்கரேலென்று…….

பச்சை – பச்சைப் பசேலென்று………

நீலம் – ………???

xxx

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!

“ஆரியக்கூத்தாடினாலும் “ இல்லை “யார் கூத்தாடினாலும்” என்பதுதான்

சரி! நீடாமங்கலம் கிருஷ்ண மூர்த்தி பாகவதர்.

xxx

வம்பு பேசுகிறவனின் வாய் சைத்தானின் தபால் பை!

நம்கௌரவம் நம் நாக்கின் நுனியில் இருக்கிறது!

வேறொருவனிடம் சொல்ல விரும்புவதை முதலில் உனக்குச் சொல்லிப்பார்!

காரியங்களில் கடினமானது நமக்கு மிக நன்றாக தெரிந்தவருக்கு

சிபாரிசு கடிதம் கொடுப்பது!

சாவு நடந்த இடத்தில் இரண்டு கழுதைகளை பார்க்க

முடியும்?

ASS ASS ination நடந்த இடத்தில்!

அகராதி –

கஞ்சன்- நேரத்தை மிச்சப் படுத்த கடிகாரத்தை நிறுத்தி வைப்பவன்!

முட்டாள் – இரண்டு அர்த்தம் தொனிக்கும் ஜோக்குகளில் முதல் அர்த்தமே புரியாதவன்!

xxx

திருச்சியில் பகல் பள்ளிக்கூடம் இடையாதாம்…….

ஏன்?

திருச்சி “ராப்பள்ளி ஆயிற்றே”!

xxx

1)அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

2)அணில் ஏறாத் கொம்பு எந்த கொம்பு?

3)அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாத்து எது?

4)அன்றாடம் மலரும் பூ, அனைவரையும் கவரும் பூ,

விரல்களில் பிறக்கும் பூ, விதம் விதமான் பூ எது?

5)ஆண்டாண்டு பிறக்கும் வரி,அடுத்தடுத்து வரும்வரி எ வை?

  1. இரவல் கிடைக்காதது……இரவில் கிடைப்பது எது?
  2. உச்சியில் பூக்கும் பூ எது?
  3. உள்ளங்கை மூக்கனார்,கழுத்தில்லா குயவர், பல்லிலா நாக்கனார்
  4. யார், யார் ?

விடைகள் – 1) வாழைப்பூ 2)மாட்டு கொம்பு3)காற்று4)கோலம்

  1. ஐனவரி, பிப்ரவரி6)தூக்கம்7)தாழம்பூ8)யானை,நண்டு,மணி

xxxx

நிலவை அளந்த மனிதன் பெண்ணின் மனதை அளப்பது எப்படி?

பவுன் சங்கிலியால்!

அளவில்லா செல்வம் பெற்று விளங்கும் சாதாரண மனிதன் ஏராளமான பொருட் செலவில் தான் உறைய அரண்மனை கட்டுவான்!

ஆனால் மா மன்னன் ராஜ ராஜனோ அரண் மனை கட்டாமல்

“அரன்”மனை கட்டினான் சிவனுக்கு!

xxx

குமர குருபரர் பாடிய மீனாட்சியம்மன் பிள்ளை தமிழின்” பா”வாடை

கேட்டு “பாவாடையுடன்” வந்து மன்னர் திருமலை மடியில் அமர்ந்து

கேட்டாள் மீனாட்சியம்மை!

xxx

என்ன? பி. காம் படிச்சிட்டு பிச்சைக்காரன் கிட்ட வேலைக்கு

சேர்ந்திருக்கையா? அப்படி என்ன வேலையடா அவன் கிட்ட?

வர்ர சில்லறையை ரகம் வாரியா பிரிச்சு பாங்குக்கு எடுத்துட்டு

போறதுதான் வேலை!

xxxx

மூலிகைச் செடிகளில் ஒன்று “ஆடா தோடை” உண்மையல் அதன்

பெயர் “ஆடு தொடா”……அதாவது ஆடுகள் தின்னாத இலை!

xxx

மலர்களில் ஒன்றான செண்பக மலருக்கு “வண்டுணா” என்று ஒரு

பயர் உண்டு! ஏனென்றால் செண்பக மலரை எந்த வண்டு  இ னமும்

நாடாது!

xxx

கேட்க இனிமையானது தெலுங்கு

வணிகத்திற்கு ஆங்கிலம்,

நட்பிற்கு ரஷிய மொழி,

காதலுக்கு பிரஞ்சு மொழி,

அன்புக்கு தமிழ் மொழி!

Xxx

சில ஆங்கில வார்த்தைகள் விபரீதமாக மொழி பெயர்க்கப் படுகின்றன.

உதாரணமாக “பார்பர்ஸ் பிரிட்ஜ்” அம்பட்டன் வாராவதி என்பது போல….

“CINEMA FANS”….. என்ற பெயர் “FANATICS”என்ன சொல்லிலிருந்து

வந்ததுதான் “FANS”…….இதை அப்படியே தமிழாக்கம் செய்து “விசிறிகள்” என்று மாற்றி விட்டார்கள்!

xxx

விசாரணை அதிகாரி – உன புருசன் பேரு என்னம்மா?

பெண்மணி – இக்கரைக்கு அக்கரை

வி. அஅதிகாரி – ஓ…. பச்சையா… சரி …உன்பேரு என்னம்மா?

பெண்மணி – மூத்தோர் சொல் வார்த்தை

வி்.அதிகாரி -ஓ… அமிர்தமா….! உன் அப்பா பேர் என்ன?

பெண்மணி – மொட்டை போடும் முருகன் சாமி!

வி.அதிகாரி – அதையாவது “பழனி”ன்னு சொல்லாமில்லையா?

பெண்மணி – ஒரு மருவாதி தான்!

xxx

தூங்கிக்கொண்டிருக்கிறவர்களிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்தால்

அவர்தான் “பேராசிரியர்”

குழந்தைகளும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரே பாஷை “புன்சிரிப்பு”.

மாத்திரையை கண்டுபிடித்தவன் புத்திசாலி!

அதன் மேல் சர்க்கரையை தடவியவன் மேதை!

xxxx

அந்த வீட்ல ஒரு போர்டு தொங்கது பாத்தியா?

P.R. அர்ஜுன லிங்கம் V.M ன்னு

V M ன்னு ஒரு டிகிரி இருக்கா?

அட கடவுளே ! V.M ன்னா “வீட்டோட மாப்பிள்ளை”ன்னு அர்த்தம்!

xxxx

ஏம்ப்பா, ரேஷன் கடையிலே ஒரே “கவர்ச்சி” படமா மாட்டிருக்கே?

கடைக்கு வரவங்க ரேஷன் வாங்கும்போது தராசையே பாக்குறாங்க

அதான்!

Xxx

அந்த டாக்டர் கண்டிப்பா போலிதான்…..

எப்படி சொல்லறே?

பிறந்ததுலிருந்து எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொன்னேன்.

அதற்கு அந்த டாக்டர் அதனாலென்ன ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணி அதை எடுத்டுவோம் ன்னு சொல்றார்! 70

THE END

Tags-  ஞானமொழிகள்-87

போதிதர்மரின் கேள்வியும் சீடர்களின் பதில்களும்! (Post No.11043)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,043

Date uploaded in London – –    23 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

போதிதர்மரின் கேள்வியும் சீடர்களின் பதில்களும்!

ச.நாகராஜன்

போதிதர்மர் மவுண்ட் சாங்கில் (Mt Song) ஒன்பது வருடம் காலம் தங்கி இருந்த பின்னர் ஷாலின் ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக அங்கிருந்து கிளம்பலானார். ஒரு புதிய அரசாங்கம் இந்த ஆலயத்தை நிறுவ ஆதரவை அளித்தது.

கிளம்புவதற்கு முன் போதிதர்மர் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்தார்.

“சீடர்களே! கிளம்புவதற்கான தருணம் இதோ வந்து விட்டது. இதுகாறும் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதை விளக்கும் விதமாக ஏதேனும் கூறுங்கள்” என்று அவர் கூறினார்.

சிஷ்யர்களில் மூத்தவரான டாவோ செங் ஃபு [Dao Fu (Seng Fu)] என்பவர் எழுந்தார்.

“எனது  பார்வையில், அது வார்த்தைகளுக்கோ சொற்றொடர்களுக்கோ அடங்காதது. அல்லது அது வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களிலிருந்து தனித்து இல்லாதது. இது தான் அந்த வழியின் செயல்பாடு.” என்று கூறினார் அவர்.

உடனே போதிதர்மர், “நீ எனது தோலை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

அடுத்து எழுந்த ஜோங் சி (Zong Chi) என்ற சந்யாசினி கூறினார்: “நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அது அக்‌ஷோப்ய புத்தாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதில் ஒரு புகழ் வாய்ந்த சிறு கண்ணோட்டமே. ஒரு தடவை பார்த்து விட்டால் அதை மறுமுறை பார்க்கத் தேவையில்லை.”

(அக்க்ஷோப்ய என்றால்அசையாதது, என்றும் நேராக இருப்பது, நிலையானது என்று பொருள்)

உடனே போதிதர்மர், “நீ எனது சதையை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

அடுத்து டாவோ யு (Dao Yu) என்ற சீடர் எழுந்து கூறினார்:

“நான்கு பூதங்களும், சூன்யம் தான். விழிப்புணர்வின் ஐந்து அங்கங்கள் உண்மையில் இருக்கையில்லாமல் உள்ளவையே. நான் பார்க்கையில் ஒரு நிகழ்வும் கூட புரிந்து கொள்வதற்காக இல்லை.”

உடனே போதிதர்மர், “நீ எனது எலும்புகளை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

கடைசியில் ஹூய்க் (Huike) எழுந்து அவரை வணங்கி நிமிர்ந்து நின்றார்.

உடனே போதிதர்மர், “நீ எனது எலும்பு மஜ்ஜையை அடைந்து விட்டாய்” என்று கூறினார்.

பின்னால் அனைவரும் இவையெல்லாம் மேலோட்டமான மற்றும் ஆழமான நிலைகள் தாம்!  ஆனால் இவையெல்லாம் முன்னோர் கூறியதன் அர்த்தம் இல்லை, என்பதைப் புரிந்து கொண்டனர்.

“நீ எனது தோலை அடைந்து விட்டாய்” என்பது கூண்டு விளக்குகளையும் தூண்களையும் பற்றிப் பேசுவது போல ஆகும்.

“நீ எனது சதையை அடைந்து விட்டாய்” என்பது “இந்த மனமே தான் புத்தர்” என்று கூறுவதற்கு ஒப்பாகும்.

“நீ எனது எலும்புகளை அடைந்து விட்டாய்” என்பது மலைகள், ஆறுகள் மற்றும் இந்த பெரிய பூமியைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பாகும்.

“நீ எனது எலும்பு மஜ்ஜையை அடைந்து விட்டாய்” என்பது ஒரு மலரைச் சுழற்றுவதற்கும் கண்களை இமைப்பதற்கும் ஒப்பாகும்.

எதுவுமே மேலோட்டமானதும் இல்லை, ஆழமானதும் இல்லை. எதுவும் மேலானதில்லை அல்லது கீழானதில்லை.

இப்படிப் பார்த்தால், அப்போது தான் முன்னோர் கூறியதை உன்னால் பார்க்க முடியும்.

இரண்டாம் நிலை முன்னோரைப் பார்த்தால் நீ காவி உடை மற்றும் பிக்ஷா பாத்திரத்தின் மாறுதல் நிலையை உன்னால் பெற முடியும்.

விழிப்புணர்வு பெற்ற முன்னோரின் தர்ம சக்கரத்தின் சக்தியானது மிகவும் பெரியதாகும், அது பிரபஞ்சம் முழுவதையும் சுழல வைக்கும், ஒவ்வொரு அணுவையும் சுழற்ற வல்லது.

ஹூய்க்கின் கரங்களில் காவி உடையும் பிக்ஷா பாத்திரமும் மாற்றப்பட்டாலும் கூட, சத்தியமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கேட்கும்.

கூட்டம் முடிந்தது.

அனைவரும் புரிந்து கொண்டனர்.

போதிதர்மர் அங்கிருந்து ஷாலின் ஆலயத்தை நிறுவக் கிளம்பினார்.

***

tags-  போதிதர்மர் , ஷாலின் ஆலயம்

PATANJALI AND HIS COMMENTATORS (Post No.11,042)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,042

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are nine commentaries on Mahabhasya of Patanjali which can be arranged chronologically:

1.Bhartrhari’s Diipikaa

2.Kaiyata’s Pradiipa

3.Iisvaraanada’s Brhadvivarana

4.Pravatakopaadhyaaya’s Prakaasa

5.Annambhatta’s Uddyotana

6.Sivaramendra Sarasvati’s Ratnaprakaasa

7.Saastri Naaraayana’s Naaraayaniiya

8.Naagesa’s Uddyota

9.Vaidyanaatha Paayagunda’s Chaayaa

xxx

A Vrtti is only a short explanation (of sutras in a book)  or analysis with examples and counter examples. The Bhasya is a full fledged commentary. It may contain elaborate discussions on the meaning of  a Sutra, conflicting views and arguments, excursus and new propositions. From the ancient Maha Bhasya of Patanjli on Panini’s great grammar book Ashtadhyayi,  we come to know what was a lecture or debate of scholars in ancient times.

The massive introduction of debates in the bhasya has led to a denomination sometimes given to Mahabhasya, viz. Cuurni, a word which is analysed as signifying ‘that which smashes the argumentation of scholars’ (cuurnayati khandayati agesa panditaanaam tarkam iti). Thus the main features of the bhasya genre are that it deals with sutras and it displays all applications of intelligence to the concerned subject.

In the great genre of Bhasya, Patanjali’s bhasya on Panini’s sutra is qualified as ‘great’ (Mahaa). This qualification appears in a group of stanzas ascribed to Bhartuhari and inserted at the end of second Kaanda of ‘Vaakpadiiya’ , where the greatness is commented upon by qualifying ‘Maha’bhasya as

“the bottom of which has never been attained because of its profundity, but which looks shallow because  of its serene beauty.

The greatness is also mentioned in Kaiyata’s  Pradipa in association with the metaphor of an ocean Mahabhasya ‘Arnava’.

Isvarananda and Annambhatta comment that the greatness of this bhasya is due to its size and to its meaning (granthorthascha mahatvam)

Saastri naarayana speaks of the profundity of Mahabhasya  ‘Ghaambiiryayogena bhassyasya vyaakyeyatvam’.

For Naagesa the superiority of this bhasya over the other lies in the fact that ‘ even though it makes comments like them, it gives new teachings by formulating desiderta etc.

There is another saying  ‘ this bhasya is great , because it contains reflections on Vartikas’

Source – Commentaries on Mahabhasya.

–subham–

Tags – Patanjali, Mahabhasya, Commentators

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ் 58 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,041)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,041

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 58 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

யுக்த  சேதசஹ 7-30  நிலைத்த மனத்தினராய்

யுக்த சேஷ்டஸ்ய 6-17  மிதமான உழைப்புடையவனுக்கும்

யுக்த தமாஹா 12-2 யோகத்தை நன்குணர்ந்தவர்கள்

யுக்த ஸ்வப்ன அபோதஸ்ய 6-17   மிதமான உறக்கமும், விழிப்பும்   உடையவனுக்கும்

யுக்தஹ 2-39 கூடியவனாய்

யுக்தாத்மா 7-18  யோகத்தில் நிலைத்த

யுக்தா ஹார விஹாரஸ்ய 6-17  மிதமான ஊணூம், உலாவுதலும்  உடையவனுக்கும்

யுக்தே 1-14  பூட்டின

யுக்தைஹி 17-17 திட சித்தம் உடையவர்களும்

யுக்த்வா 9-34 நிலை நிறுத்தி

யுகபத் 11-12  ஒருங்கு கூடி

யுகஸ ஹஸ்ராந்தாம் 8-17

யுகே 4-8  யுகம்தோறும்

யுஜ்யதே 10-7  கூடியவன் ஆகின்றான்

யுஜ்யஸ்வ 2-38 முயல்வாய்

யுஞ்ஜ தஹ 6-19 அப்யசிக்கும்

யுஞ்சன் 6-15  ஒருமுகப்படுத்தி

யுஞ்ஜீத 6-10  நிலை நிறுத்த வேண்டும்

யுஞ்ஜ்யாத் 6-12   அப்யசிக்க வேண்டும்

யுத்த விசாரதாஹா 1-9 போரில் வல்லவர்கள்  20 WORDS

யுத்தம்  2-32 யுத்தத்தை

யுத்தாத் 2-31 யுத்தத்திலிருந்து

யுத்தாய 2-37 போருக்கு

யுத்தே 1-23   போரில்

யுதாமன்யு 1-6  பாஞ்சால வீரர் யுதாமன்யு

யுதி 1-4 போரில்

யுதிஷ்டிரஹ 1-16 யுதிஷ்டிர

யுத்ய 8-7  யுத்தம் செய்

யுத்யஸ்வ  11-34  போர் புரி

யுயுதானஹ 1-4  ஸாத்யகி

யுயுத்சவஹ 1-1 போருக்கு முனைந்துள்ள

யுயுத்ஸும் 1-28 போர் புரிய விரும்பி

யேன 2-17 எதனால்

யேஷாம் 1-33 எவர்கள் பொருட்டு

யோக்தவ்யஹ 6-23 அப்யாஸத்திற்குரியது

யோக க்ஷேமம் 9-22 ஒருவன் விரும்பி அடையாததை அடைதல் யோகம்; அடைந்ததைக் காப்பாற்றுதல் க்ஷேமம் ; கடவுள் இவ்விரண்டையும் தரு வார்

யோக தாரணாம் 8-12  யோக தாரணை யில்

யோக பலேன 8-10  யோகத்தின் வலிமையாலும்

யோக ப்ரஷ்டஹ 6-41 யோகத்திலிருந்து நழுவியவன்

யோக மாயா ஸமாவ்ருதஹ 7-25  யோக மாயையினால் மூடப்பட்டு        40 WORDS

யோக யக்ஞாஹா  4-28 யோகமாகிய யக்ஞத்தைச் செய்வோர்

யோக யுக்தஹ 5-6  யோகத்தைக் கூடிய

யோக யுக்தாத்மா 6-29  யோகத்தில் ஊன்றிய

யோக வித்தமாஹா 12-1 யோகத்தை நன்குணர்ந்தவர்கள்

யோக சம்ஜ்ஞிதம் 6-23  யோகம் என்று குறிப்பிட்டதாக

யோக சன்யஸ்த கர்மாணம் 4-41

யோக சம்சித்தஹ 4-38 யோகத்தில் சித்தி எய்தி  பக்குவம் அடைந்தவன்

யோக சம்சித்திம் 6-37 யோகத்தில் சித்தியை

யோக சேவயா 6-20  யோகாப்யாஸத்தால்

யோகஸ்தஹ 2-48 யோகத்தில் நிலைபெற்ற 50 WORDS

யோகஸ்ய  6-44  யோகத்தின்

யோகம் 2-53  யோகத்தை

யோகாய 2-50  யோகத்திற்காக

யோகாத் 6-37  யோகத்திலிருந்து

யோகாரூடஸ்ய 6-3  யோகத்தில் உயர்நிலை எய்திய

யோகாரூடஹ 6-4 யோகாரூடன்

யோகினம்  6-27  யோகியை

யோகீ 5-24  யோகி

யோகே  2-39 யோக விஷயத்தில்

யோகேன 10-7 யோகத்துடன்       60 WORDS

யோகேஸ்வர 11-4 யோகத்திற்கு இறைவா

யோகேஸ்வரஹ 18-78 யோகேஸ்வரனாகிய (கிருஷ்ணன் )

62 WORDS ARE ADDED FROM PARAAT 58 OF GITA WORDS INDEX IN TAMIL

ஞான (கடி) மொழிகள்-86 (Post No.11,040)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,040

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான (கடி) மொழிகள்-86

டை கட்டிய மீன் எது?

கெண் “டை”!

அரசுக்கு பிடித்த மரம் எது?

அரச மரம்!

எப்போதும் காயத்துடனேயே இருக்கும்நபர் யார்?

“சகாயம்”!

உட்கார்ந்திருந்தால் பணம்! எப்படி?

சப் “பணம்” கட்டி உட்காரும் போது!

மனதுக்குள் ஒரு உடம்பு……..எது?

சந் “தேகம்”!

மனித உடம்பிலுள்ள பாலம் எது?

கபாலம்!

மந்திரி-மன்னா! எதிரி நாட்டு மன்னன் மகாராணியை நமது

குதிரையில் கடத்திக் கொண்டு போய்விட்டான!

மன்னர்-ஆ! என் செல்வம் போய் விட்டதே!

மந்திரி- மகாராணியைத்தானே செல்வம்என்கிறீர்கள்?

மன்னர்-ஊஹூம், எனது குதிரையை!

கடிகாரம் வைக்கும் பெட்டியை எப்படி அழைக்கலாம்?

“மணி பர்ஸ்”!

மான் எந்த இடங்களில் இருக்கும்?

“அந்த மான்”, வலங்கை “மான்”

கஷ்டத்தில் இருக்கும் பறவை எது?

“பஞ்ச” வர்ணக் கிளி!

கரை கண்ட வியாதி எது?

சர்க் “கரை” வியாதி்!

ஆவிக்கு பயப்படாதவர் யார்?

இட்லி சுடுபவர்!

xxx

சிப்பாய்-1 இனிமேல் நம் மன்னர் அந்தப்புரத்திற்கு போகவே முடியாது!

நமது ராணி தடை செய்து விட்டார்!

சிப்பாய்-2 அப்புறம் மன்னர் என்ன செய்தார்?

சிப்பாய்-1 அந்தப்புரத்திற்கு “நொந்தப் புரம்”என பெயர் மாற்றி விட்டார்!

xxx

பூனை 1 – அந்த மாடல் அழகி மேல் விழுந்து பிறாண்டி விட்டு

வருகிறாயே ஏன்?

பூனை 2- கேட் வாக் cat walk ங்கற பெயர்ல நம்மளோட நடையை கிண்டல்

பண்ணினாள்.அதான் கோபம் வந்து பிறாண்டிப்புட்டேன்!

xxx

நோயாளி- இந்த ஆபரேஷன் முடிஞ்சதும் என்ன பண்ணிவீங்க?

டாக்டர் -உங்களுக்கு அடுத்த ஆபரேஷனுக்கான தேதி குறிச்சிடுவோம்!

xxx

சிப்பாய்-1 போர் முரசு ஒலிக்கிறதே! நமது மன்னர் போருக்கு போக ஆயத்தமாகிறாரா?

சிப்பாய் 2 இல்லை இல்லை,மகாராணியும் அவரது மரு மகளும் சண்டை போடப் போகிறார்களாம்! அதான் இப்படி!

Xxx

நிறைய சொத்துள்ள நாடு எது?

“ஆஸ்தி”ரேலியா!

எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டிருப்பவர்கள் எந்த நாட்டில்?

“சிரியா”!

வாய் உள்ள தீவு எது?

ஹ”வாய்”!

ஒரு மனிதன் தனக்குத்தானே தூண்டில் போட்டுக் கொள்ளும் நாள் எது?

“கல்யாண நாள்”!

உபயோகிக்க உபயோகிக்க கூர்மை அதிகமாவது எது?

வாயிலுள்ள “நாக்கு”!

மோசமான கையெழுத்துக்கு மற்றொரு பெயர் என்ன தெரியுமா?

“டாக்டர்களின் வியாதி”!

தையல்கார்ருக்கு பிடித்த காய் எது?

“கத்தரி”க்காய்!

புண்ணியம் செய்யாத காய் எது?

“பாவ”க்காய்

கோயம்புத்தூர்கார ர்களுக்கு பிடித்த காய் எது?

“கோவை”க்காய்!

சமையலுக்கு உதவாத காய் எது?

“சொக்காய்”!

ரௌடிகளுக்கு பிடித்த பூ எது?

“காலி” பிளவர்!

இரக்கமுள்ள கிழங்கு எது? 45

“கருணை” கிழங்கு!

வழிகாட்டும் காய்?

பீட் “ரூட்”

குத்தும் கிழங்கு எது?

“முள்”ளங்கி!

புண்ணானது எது?

வெங் “காயம்”

நவ கிரகத்தில் ஒன்று எது?

பூ “சனி”க்காய்!

மயக்கும் பழம்?

மாதுளம் பழம்!

கொய்தபின் பொய்யான பெயருடைய் பழம்?

கொய்யாப் பழம்!

கதை-சரித்திரம்-சமூகம் அடங்கிய பழம்?

“நாவல்” பழம்!

எந்த ஊருக்கு சொந்தம்?

கோவைப் பழம்!

சாப்பிட்டால் குமட்டும் பழம்?

குமுட்டிப் பழம்!

ராமருக்கு பிடிச்ச பழம்?

சீதாப் பழம்!

போதைப்பழம்?

சாத்துக் “குடி”

கணக்கு பழம்?

ஆரஞ்சு!

xxx

பேச்சோ பேச்சு

மளிகை கடைக்காரர் – கலப்படமான பேச்சு

வெண்ணெய் கடைக்காரர் – உருக்கமான பேச்சு

துணிக் கடைக்காரர்- அளவான பேச்சு

எண்ணெய்கடைக்காரர்-வழ வழா கொழ கொழா பேச்சு

கம்ப்யூட்டரிஸ்ட் -பட படப்பான பேச்சு

விறகு கடைக்காரர் – வெட்டு ஒண்ணு , துண்டு இரண்டாக பேச்சு

பொற்கொல்லர் – உருக்கமாக இருக்கும

கல்லறை காவலர் – அடக்கமாக இருக்கும்

எப்போதும் நாத ஒலி கேட்கும் நகர் எது?

“ஷெனாய்” நகர்!

சென்னையில் இருமலை போக்கும் ரோடு எது?

“ஹால்ஸ்” ரோடு!

சென்னையில் எப்போதும் நிழலாக இருக்கும் ரோடு எது?

“உட்ஸ்” ரோடு!

Xxx

டாக்டரிடம் நோயாளிகள்

சமையல் காரர் – வயிற்று வலி!

காதல் கதை எழுதுபவர் – இதய நோய்!

வக்கீல் – வாதம்!

சங்கீத விமர்சகர் – காது வலி!

xxx

“R” ங்கறதர ரேஷன் கடைன்னு சொல்லலாம்……

எப்படி?

அதுக்கு முன்னாடி “Q” இருக்கே!

Xxx

ஏய் , வாயை ஊது…..?………

ஊ…….

என்ன லேசா வருது?……

எட்டணாவுக்கு அவ்ளோதான் வரும்!

THE END

Tags-  ஞான மொழிகள்86

நடந்தவை தான் நம்புங்கள் – 20 (Post No.11,039)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,039

Date uploaded in London – –    22 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 20

ச.நாகராஜன்

1

மார்க் ட்வெயினின் குடை

மார்க் ட்வெய்ன் (Mark Twain – 1835-1910) தனது ஓட்டையாகிப் போன குடையை எப்படியாவது விட்டெறிய வேண்டும் என்று முயன்றார்.

தன்னால் எப்படி அந்தக் குடையை ஒரு வழியாக கை கழுவி விட முடிந்தது என்ற கதையை அவர் இப்படிச் சொன்னார்!

அந்தப் பழைய குடையை அவர் முதலில் குப்பைத் தொட்டியில் போட்டார். ஆனால் அவர் மேல் மிகுந்த அக்கறையுள்ள ஒரு மனிதன் அதை அவரிடம் பத்திரமாகக் கொண்டு வந்து கொடுத்தான் : “சார், இதோ உங்கள் குடை” என்று.

அடுத்து அவர் அதை ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டார். ஆனால் கிணறை ரிப்பேர் செய்ய வந்த ஒருவன் அதைப் பார்த்து எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டான்.

பார்த்தார் ட்வெய்ன். இன்னும் பல வழிகளில் முயன்றார் அதை அகற்ற!

ஊஹூம், ஒன்றும் பலிக்கவில்லை. குடை பத்திரமாக ஒவ்வொரு முறையும் அவரிடமே வந்து சேர்ந்தது.

இறுதியில் அவர் தன் குடையை ஒரு நண்பருக்குக் கடனாகத் தந்தார் – நிச்சயம் திருப்பித் தந்து விட வேண்டுமென்ற நிபந்தனையுடன்!

குடை திரும்பி வரவே இல்லை!

2

தனித்து விடப்பட்ட தீவில் செஸ்டர்னுக்குப் பிடித்த புத்தகம்!

 பிரபல எழுத்தாளரான ஜி.கே.செஸ்டர்டன் (G.K. Chesterton – 1874-1936) ஒரு முறை தனது இலக்கிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர், ‘திடிரென்று தனித்த தீவில் அகப்பட்டுக் கொண்டால் நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படிப்பீர்கள்?’ என்று ஒரு கேள்வியை நண்பர்களிடையே கேட்டார்.

ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த எழுத்தாளரையும் கவிஞரையும் குறிப்பிட ஆரம்பித்தனர் – ஷேக்ஸ்பியர், பைபிள் என்று இப்படி!

ஆனால் செஸ்டர்டன் கூறினார் “ தாமஸ் கைடின் ப்ராக்டிகல் ஷிப் பில்டிங்கைத் தான் படிப்பேன் என்று. (Thomas’s Guide to Practival Shipbuilding)

3

ஹெச். ஜி.வெல்ஸின் கடைசி வார்த்தைகள்!

பிரபல எழுத்தாளரான ஹெச். ஜி.வெல்ஸ் (H.G.Wells 1866-1946) மரணப்படுக்கையில் இருந்தார்.

அவரது நண்பர்களும் உறவினர்களும் அவரிடம் கடைசியாக ஏதாவது கூறுமாறு வேண்டினர்.

“நான் சாவதில் பிஸியாக இருக்கிறேனே” என்றார் அவர்.

(I am busy dying!)

4.

அம்மாவும் அப்பாவும்!

ஒரு மிக மிக வயதான பணக்காரக் கிழவரை மணக்க விரும்பினாள் ஒரு இளம் பெண்.

“குழந்தைகளைக் கூடப் பெற்றுக் கொள்ளலாம்” என்றாள் அவள்.

ஆனால் பணக்காரரோ, “எனது பெற்றோர் அதற்கு விட மாட்டார்களே” என்றார்.

திடுக்கிட்டுப் போன அந்த இளம் பெண், “உங்கள் பெற்றோர் யார்?” என்று கேட்டாள்.

அதற்கு அவர் கூறினார் : “என் அம்மா இயற்கைத் தாய். அப்பா காலம்! (Mother Nature and Father Time)

5

சர்ச்சிலின் வார்த்தைகள்

சர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill – 1874-1965) 1955இல் அரசுப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார்.

என்றாலும் கூட அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ சலுகையின் காரணமாக அவர் தனக்கு நினைத்த போதெல்லாம் ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு வருவார், அங்கு நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார்.

எண்பது வயது தாண்டிய நிலையில் ஒரு நாள் அவர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு வருகை புரிந்தார்.

அவரை அவரது இருக்கைக்கு அழைத்துச் செல்ல இரு உதவியாளர்கள் வந்தனர்.

அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் மெதுவாக மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தனர்.

ஒருவர் கூறினார் : “இந்த வயசான பெரிசு ரொம்பவும் தளர்ந்து போயிடிச்சி!”

அடுத்தவர் கூறினார் : தளர்ந்தது மட்டுமல்ல; கிறுக்கும் பிடிச்சிடிச்சி!”

முதலாமவர் கூறினார் : “மூளையும் போயிடிச்சின்னு சொல்றாங்க!”

சர்ச்சில் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.

பின்னர் மெதுவாக அவர்களை நோக்கிக் கூறினார்: “அது மட்டுமா சொல்றாங்க! கிழட்டுக்கு சுத்தமா காது கேட்காதுன்னு கூட உங்க கிட்ட சொல்லி இருப்பாங்களே!”

***

tags- சர்ச்சில், ஹெச். ஜி.வெல்ஸ், மார்க் ட்வெய்ன்

MY VISIT TO TIRUKKURUNKUDI & NANGUNERI (Post No.11038)

for pictures go swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,038

Date uploaded in London – –    21 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

MY VISIT TO TIRUKKURUNKUDI & NANGUNERI

After seeing beautiful sculptures of Tirukkurunkudi Temple on Facebook, I had been longing to go to Titukkurungudi. At last my dream was fulfilled on 5th of June,2022. We finished three temples on that day, the most famous temple of Tirunelveli- Nellaipaapar- Kanthimathi temple and Vishnu temples in Tirukkurunkudi and Nanguneri.

The god in T.K temple is called Azakiya Nambirayar .

Where is it?

About 40 kilometres from Tirunelveli is this little town. In addition to beautiful sculptures (see my pictures in the evening light), it has a long heritage. I will give them in bullet points:

1.One of the 108 Vaishnavite Holy shrines

2.Sanctified by the songs of Nammazvar, Periyalvar and Tirumangai Azvar. That takes the age of temple to seventh century or before.

3.The Vishnu deities dug out of this place are installed in nearby Nanguneri temple.

4.When the great Vaishnavite saint Ramanuja visited this shrine, the god himself came and received Pancha samskaram ( Initiation)

5. Nampaduvan, a disciple, met a Brahmin Ghost on his way to this temple. The Brahma Rakshasa (Brahmin sinners become ghosts) wanted to eat Nampaduvan. He told the ghost that he would become its prey only after worshipping the Vishnu in the temple. On his return he told the ghost to devour him, but it refused saying that it had enough for the day. Nampaduvan gave the ghost half of the Temple prasad/ fruit he ate, and the ghost returned to its original form as a Brahmin. That is, he was released from the curse.

6.Tirumangai Azvar reached the feet of God here.

7.A shrine for Shiva is inside the temple. Beautiful idols of Nataraja, Subrahmanya, Vinayaka, Sivakami and Somaskandar are in the temple

8.Though it is a small temple, it  maintains an elephant. I think the TVS company is helping the temple.

9.Varahapurana sings the glory of the temple

10.The word Kurunkudi in the name of the village signified the Vamana Avatara (a dwarf) of Lord Vishnu. The deity is also known by the names Nindra Nambi, Vaishnava nambi and Vaduga nambi (short)

11.Goddees is called Kurungudi Valli

12.Theertha/ Holy water is called Tiruppar Kadal.

13.Follows the Tenkalai tradition

14.In front of the temple is a Mandapa (stone Hall) with huge and beautiful sculptures of Rathi, Manmatha and others.

15. The temple’s granite walls have a lot of small sculptures. I am reminded of Thousand Pillar Hall of Madurai Meenakshi Temple. Probably the Mandapa in front of the temple was erected during Nayak Period.

16.The Dwajasthamba (Flag Post) of the temple doesn’t align with the main shrine. There is a story about it. When Nampaduvan came, the post was blocking the view of the main deity. When he prayed for a better view, the post moved away. It reminds one of Nandanar story where the stone Nandhi blocked his view and then moved at his request.

xxx

VISIT TO NANGUNERI

On our way back to Tirunelveli (Nellai), we went to Nanguneri Perumal/Vishnu temple.

At that time, temple was celebrating its annual festival. Though we could not see the Moolavar (main shrine), we had good dharsan of the of the Festival deity (Urchavar) in procession. The Jeeyar was leading the procession. There was a huge crowd waiting.

Some of the salient features of the temple

1.Vishnu in the temple is called Vaanamaamalai. Goddesses are Sri Devi, Bhu Devi and Sri Vara Mangai

2. Sung and sanctified by Nammalvar.

3.Out of the 108 holy shrines of Vishnu, eight are considered Svayambhu (not man made; sculptures came from nature)

4.Special feature of the temple is Oil Well. The oil used to anoint the deity is poured into a well and it is given as Prasad. It is believed that it ha medicinal properties.

5.The legend is that a king of Sindhu desa, who was cursed to become a dog was relieved of his curse after bathing in the lotus tank here.

6. It is about 25 Kilometres from Tirunelveli

7. It is famous for its sculptures on its pillars. Each pillar has got multiple sculptures.  Lord Rama hugging Hanuman, Purusha Mrga catching Bheema are few of them ( I did not have time to see them because the festival procession was happening outside the temple.)

My earlier Visit

I might have enjoyed it about 50 or 60 years ago. When I was a school boy , my parents took us to Nanguneri and other shrines. What I remember now is catching and holding big fruits hanging from the trees in TVS farm. Even when I went there in June 2022, I could see the big board displaying TVS Farm. They have best varieties of fruit trees. The place is called Ervadi (not the one in Ramnad district). We have even photos of those fruit trees taken 50 or 60 years ago.

The places I mentioned above are close to the forests of Western Ghats. Still, one could see the peace and serenity of nature.

Last but not the least, if one wants to enjoy the sculptures and nature, one should stay in the place for at least one or two days. My trip has always been a whirlwind tour. I covered 35 temples in 22 towns in addition to attending weddings and Shasti Apta Poorthi.

Who will miss wedding dinners?

In my Madurai there is a saying- Soththukkup pinnar thaan Sokkanathar (meaning God comes only after Food).

–subham–

ஞானமொழிகள்-85 (Post No.11,037)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,037

Date uploaded in London – –    21 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கடி ஜோக்ஸ்

மெக்கானிக்கு பிடித்த சோப் எது?

தெரியல்லையே?

“வீல்” சோப்!

அரிச்சந்திரனுக்கு பிடிச்ச பிஸ்கட் எது?

“ட்ரூ”பிஸ்கட்!

உட்கார முடியாத தரை எது?

புளியோதரை!

காக்கா ஏன் கருப்பாக இருக்கு?

அது வெய்யிலில் சுற்றுவதால்!

இனிக்கும் ஈ எது?

“தேனீ”!

கல்யாணமாகாத ஊர் எது?

“!கன்னியா குமரி”!

ஓசையுள்ள விமான நிலையம் எது?

“டம் டம்”!

நிறத்தின் பெயருடைய பழம் எது?

“ஆரஞ்சு”!

சாப்பிட முடியாத பன் எது?

“ரிப்பன்”

xxx

தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்குறார்?

அவருக்கு இன்ஸ்பெக்டர் பட்டம்தான் வேணுமாம்.அப்பதான்

நிறைய மாமூல் வாங்கலாமாம்!

xxx

என் மருமக கிட்ட வீட்ட கோவில் மாதரி வச்சுக்கணும்ன்னு

சொன்னது தப்பா போச்சு…..

ஏன் ஏன்ன ஆச்சு?

வீட்டு வாசல்ல ஒரு உண்டியல வைச்சுட்டா!

xxx

நம்ம தலைவருக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுத்தோம்ன்னு

வருத்தப்படறாங்க….

ஏன்?

ஆஸ்பத்திரி, கட்டில்லாம் எப்ப தருவாங்கன்னு கேக்குறாராம்?

xxxx

பொண்ண பாத்து பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அடிச்சிட்டாங்களா?

சொன்னது அவ அக்காவப்பாத்து….. அவபுருஷன்கிட்டேயே……

xxx

அந்த ஆள் ரொம்ப அப்பாவியா இருக்காரு

எப்படி சொல்றே?

பேப்பர்மசாலாவுக்கு வருடச்சந்தா கட்டலாமான்னு கேக்குறார்!

xxx

தலைவருக்கு இங்கிலீஷ் பேசணும்ன்னு ஆசை…….

அதுக்காக மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீன்னு நூறு வரைக்கும்

சொல்லணுமா??

xxx

கிரிக்கட்டில் ஓரு

ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்

டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்

கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌

இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா

நான் மூடு அவுட்

இப்படிக்கு

பாசக்கார பய புள்ளைங்க சங்கம்.

Xxx

அந்த மான் ஏன கோவிலையே சுற்றி சுற்றி வருகிறது?

அது பக்தி மான் அதுதான்!

உலகத்திலேயே எந்த நாட்டுக்காரங்க சரிக்க மாட்டாங்க?

சிரியா!

ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை போட்டுமா தலைவர் சோகமா

இருக்காரு?

எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டோட ஜெராக்ஸ் காப்பியாம்!

xxx

கடன் தொல்லையிலிருந்து விடுபட ராசிக்கல் மோதிரம்

போட்டிருந்தீங்களே ……..எங்கே அது?

கடன்தொல்ல தாங்காம அடகு வச்சிட்டேன்!

xxx

ஒரு ரூபா நாணயம் ஆணா பெண்ணா?

தெரியல்லையே?

பெண்தான் ! அதனோட தலைக்கு பின்னால்தான் பூ இருக்கே!

xxx

எதுக்குய்யா தலைவருக்கு பிஸ்கட் மாலை போடற?

அவர்தன் கட்சிக்கு நாயா உழைக்கறதா சொல்லிகிட்டுருக்காரே!

சாதாகாதலுக்கும், கள்ள காதலுக்கும் என்ன வித்தியாசம்?

சாதா காதல்ன்னா அப்பா அடிப்பார்! கள்ளக்காதல்ன்னா

புருஷன் அடிப்பான்!

Xxx

வேலைக்காரி போட்டோவ ஏன் பர்ஸுல வச்சிருக்கே?

அதப் பார்த்தாத்தான் வீட்டுக்கு போகணும்ன்னு

நினைப்பே வருது!

xxx

அவர்போலி டாக்டர்ன்னு எப்படி கண்டு பிடிச்சே?

மூச்சு விட சிரம்மா இருக்குன்னு சொன்னேன்

அவர் அதுக்கு வேற ஆள அரேஞ்சு பண்ணவான்னு

கேட்டார்!

xxx

மரியாத இல்லாத பூ எது?

வாடா மல்லி!

xxx

அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டு பிடிச்சே?

கால்ல வெடிப்பு இருக்குன்னு சொன்னேன் அதுக்கென்ன

“கம்” போட்டு ஒட்டிடலாமேன்னு சொன்னாரே!

xxx

தலைவரோட அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல்……

அப்படி என்ன சிக்கல்?

எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்?

xxx

ஏண்டா காலேஜுக்கு போகல்லே?

இன்னைக்கு லீவு…….

உனக்கா, காலேஜுக்கா?

எதிர் வீட்டு பத்மாவுக்கு!

xxx

மாப்பிள்ளை அழைப்பு எங்கேயிருந்து?

வேறெங்கேயிருந்து, செனட்ரல் ஜெயில்லேருந்து!

xxx

நீதிபதி – கோயில்ல சாமி தலையிலிருந்த கிரீடத்த திருடினயா?

குற்றவாளி – ஆமா எஜமான், சாமிக்கு மொட்டை போடறதா

வேண்டிகிட்டேன்!

xxx

ஒரு குத்துச் சண்டை வீர ர் இன்னொரு குத்துச் சண்டை

வீர ருக்கு கடிதம் எழுதினா எப்படி எழுதுவார்?

பலம், பலம் அறிய ஆவல்!

திருடனுக்கும் போலீஸுக்கும் என்ன வித்தியாசம்?

“தொப்பை” தான்!

படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமா

மடக்கிட்டார்!

எப்படி?

அந்தப்புரத்தை அப்படியே எழுதி வச்சுடறதாக சொல்லிட்டார்!

xxx

தலைவர் அன்னைக்கு பேசின பேச்ச மக்கள் தப்பா புரிஞ்சுகிட்டங்க

போலிருக்கு……

என்ன அச்சு?

என பின்னால் ஒரு படையே இருக்குன்னு சொல்லப்போக தொண்டர்கள் அனைவரும் களிம்பு வாங்கி அனுப்புச்சுட்டங்களாம்!

THE END

Tags- ஞானமொழிகள்85