சுவரின் மறுபக்கம்! (Post No.11,036)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,036

Date uploaded in London – –    21 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சுவரின் மறுபக்கம்!

ச.நாகராஜன்

ஒரு அழகிய இளம் பெண் தோட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமான வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு பூத்துக் குலுங்கும் மலர்களின் மீது அளவிலா ஆசை. ஆகவே விதவிதமான மலர்ச் செடிகளை வாங்கி தன் தோட்டத்தில் நட்டு, நீர் பாய்ச்சி வளர்த்து வந்தாள்.

அவளது பாட்டி அவளை மிகவும் ஊக்குவித்து வளர்த்து வந்தாள். நல்ல காரியங்களுக்கு எப்போதுமே பயன் உண்டு என்றும் பலனை எதிர்பார்க்காமல் எதையும் செய்யக் கற்றுக் கொள் என்றும் அவள் அடிக்கடி கூறுவது உண்டு.

பகவத் கீதையின் முக்கியமான தத்துவங்கள் இவை என்பதை அவள் அறிவாள்.

ஒரு நாள் பாட்டி அவளிடம் ஒரு மலர்ச் செடியின் படத்தைக் காண்பித்தாள். அதை வாங்கிப் பார்த்த இளம் பெண் அது பூத்துக் குலுங்கியவுடன் ஏந்தி நிற்கும் அழகிய மலர்களின் படத்தைப் பார்த்து மயங்கி ந்ன்றாள்.

அப்படி ஒரு வர்ண ஜாலம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.

மனமெல்லாம் உற்சாகத்தால் நிறைய நாள் முழுவதும் அவளால் ஏராளமான பணிகளை  வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது.

ஒரு தீர்மானத்திற்கு வந்தாள் அவள்.

நிச்சயமாக அந்த மலர்ச் செடியை வாங்கித் தன் தோட்டத்தில் பயிரிட்டு வளர்ப்பது என்பது தான் அவளது  முடிவான தீர்மானம்.

உடனே கடைக்குச் சென்றாள். தேடிப்பிடித்து அந்தச் செடியை வாங்கி தன் தோட்டத்தில் காம்பவுண்டு சுவருக்கு அருகே பயிரிட்டாள்.

தினமும் கவனமாக அதற்கு நீர் ஊற்றி வளர்த்து வந்தாள். செடி மெல்ல மெல்ல வளர்நதது. உயரமானது.

முன் பக்கம் பச்சைப் பசேலென இலைகள்; கிளைகள். ஆனால மலர்களைக் காணோம்.

இளம்பெண் கவனமாக உற்றுக் கவனிப்பாள். ஏதேனும் ஒரு ம்லராவது அரும்பி இருக்கிறதா என்று பார்ப்பாள்.

ஊஹூம். ஒன்றைக் கூடக் காணோம்.

சற்று ஏமாற்றம் தான் அவளுக்கு.

இருந்தாலும் விடவில்லை. நீரை கவனமாக வேரில் ஊற்றி வந்தாள்.

ஒரு நாள் காலை விரக்தியோடு அந்தச் செடியின் அருகில் வந்து நின்றாள், பார்த்தாள், ஒரு அரும்பு கூடக் காணோம்.

அப்போது ஒரு குரல் கேட்டது.

“மேடம், தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச்!”

அடுத்த வீட்டுக்காரரின் குரல் காம்பவுண்டின் அந்தப் பக்கத்திலிருந்து வந்தது.

அவர் புன்சிரிப்புடன் மலர்ச்சியுடன் உற்சாகமாகத் தொடர்ந்தார்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இன்று உங்களை நேரில் சந்தித்து எனது  மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்க ஆசை. எப்போது வரலாம்?”

இளம் பெண்ணுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அடுத்தவீட்டில் இருப்பவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரைப் பார்க்கத்தான் கூட்டம் கூடும்; அவரது அப்பாயிண்ட்மென்ட் யாருக்குமே கிடைக்காது. இளம் பெண்ணுக்கே இத்தனை காலமாக அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

அப்ப்டி இருக்க, அவர் எதற்கு தனக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே!

குழம்பி நின்றாள் இளம் பெண்.

“என்ன.. என்ன.. எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்னை சந்திக்க நீங்கள் நேரம் கேட்பதாவது. நான் என்ன செய்தேன்?” திக்கித் திணறி ஒருவாறு பேசி முடித்தாள் அவள்.

“என்ன செய்தீர்களாவது? இதோ இந்தப் பக்கம் வந்து பாருங்கள்” என்று அழைத்தார் அவர்.

தனது வீட்டு வாயில் கதவு வழியே வெளியேறி இத்தனை நாள் வரை போகாத அந்த பிரபலத்தின் வீட்டின் கதவைத் தாண்டி உள்ளே சென்றாள் அவள்.

அங்கிருந்த வாட்ச்மேன் மரியாதையுடன் அவளை வணங்கி அவளை அழைத்துச் சென்றான்.

காம்பவுண்டிற்கு இந்தப் பக்கம் தன் செடியின் பல கிளைகள் சாய்ந்திருந்ததைக் கண்டாள் அவள்.

அடடா! என்ன ஒரு அற்புதம். மலர்கள், வண்ண மலர்கள், பூத்துக் குலுங்கும் புது மலர்கள்!

உற்சாகத்தின் ஊற்று!

“இது நீங்கள் இல்லாமல் இப்படி வளர்ந்து அழகிய காட்சியைத் தருமா? இதைக் காலையில் பார்த்து நான் எதைச் செய்தாலும் அது வெற்றி தான். சமீப காலமாக எனது புகழ்  மேலோங்கி வருவதற்கு காரணமே இந்த மலர்களின் காட்சி தான். அதற்கு மூல காரணமே நீங்கள் தான். நன்றி. வீட்டிற்குள்ளே வர முடியுமா?”

பிரபலத்தின் பேச்சைக் கேட்டு விக்கித்து நின்றாள் இளம் பெண்.

வண்ணமயமான மலர்களைக் கண்டாள், புன்சிரிப்புடன் தன்னை குதூகலமாக வரவேற்ற பிரபலத்தையும் பார்த்தாள்.

காலையில் பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த அவளது பாட்டி காம்பவுண்டின் தனது பக்கத்தில் இருந்து இளம் பெண்ணைப் பார்த்து மெதுவாகத் தலை அசைத்து புன்சிரிப்பு ஒன்றை நழுவ விட்டார்.

அந்தத் தலையசைப்பு, ‘அது அப்படித்தான்’ என்று கூறியது.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் ஒரு மறு பக்கம் உண்டு என்ற மாபெரும் ரகசியத்தை அந்தப் பெண் அப்போது தான் உணர்ந்தாள்.

சுவரின் மறுபக்கத்தில் அது இருக்கக்கூடும்; நம்மால் உடனே பார்க்கமுடியாதபடி கூட அது இருக்கக்கூடும்.

செய்தல் உன் கடனே – அறம்

செய்தல் உன் கடனே அதில்

எய்துறும் பயனில் எண்ணம் வையாதே! – (மஹாகவி பாரதியார்)

***

தீக்குளித்த 2 பெண்களின் பெயரில் புதிய ராகம் (Post No.11,035)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,035

Date uploaded in London – –    20 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

குஜராத்தில் வட்நாகர் என்னும் இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளாக நகர் / நாகர பிராமணர்கள் வசித்து வந்தனர். அவர்களைப் பற்றிய சில கதைகள்  இதோ :-

ஒரு சமயம் மொகலாய சக்கரவர்த்தி அக்பர் குஜராத்துக்கு வந்தார். அப்பொழுது தானா, ரீரி என்ற இரண்டு பெண்கள் மலஹரி ராகத்தை அழகாகப் பாடினார்கள். அதில் மயங்கிப் போன அக்பர் அவர்களை டில்லிக்கு வந்து ஆஸ்தானப் பாடகிகளாக பதவி ஏற்க வரவேற்றார். ஆனால் நாகர பிராமணர்கள அதற்கு இசைவு தெரிவிக்க மறுத்தனர் . முகலாயர்களின் தீய எண்ணங்கள் அவர்களுக்கு தெரியும். பெரிய போர் மூண்டது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இரண்டு பெண்களும் தங்களால் சமூகத்திற்கு ஏற்பட்ட அழிவை எண்ணி வருந்தி தீக்குளித்து இறந்தனர். இன்றும் வட்நாகர் சுடுகாட்டில் அவர்களுக்கு நினைவுச் சின்னம் இருக்கிறது

அக்பரின் அவைக்கள புலவர் தான்சேன் உலகப் புகழ்பெற்றவர். தீக்குளித்து உயிர்நீத்து  தியாகம் செய்த இரண்டு பெண்களின் நினைவாக அவர் ஒரு ராகத்தை இயற்றி அதற்கு ‘தான ரீரி’  என்றே பெயரிட்டார். இதனால் காலத்தால் அழியாத இடம் பெற்றுவிட்டனர் அவ்விரு பெண்களும்.

xxx

மற்றொரு சம்பவம்

நாகர பிராமணர்கள் பல்கலை வித்தகர்கள்; ரசாட்சி நிர்வாகம், அமைச்சர் வேலை, ராஜ தந்திரம், போர்க்கலை ஆகிய அனைத்தும் அறிந்தவர்கள். மாதவ் என்பவர் கடைசி ராஜபுத்திர மன்னர் கரண் கேலாவிடம் வெளி பார்த்து வந்தார். ஒரு சமயம் அரசாங்க வேலை நிமித்தமாக வெளியூர் சென்றார். அந்த சமயத்தில் மன்னரின் கொடிய பார்வை மாதவின் மனைவி பக்கம் திரும்பியது. அவளுடைய சகோதரர் கேசவ் என்பவர் மன்னரைத் தடுத்தார். அப்போது நடந்த சண்டையில் கேசவ் கொல்லப்பட்டார். மாதவ், ஊருக்குத் திரும்பியவுடன் நடந்ததை அறிந்தார். ரத்தம் கொதிக்க வெகுண்டு எழுந்தார். அப்போது டில்லியை அரசாண்ட மஹா பாவி, கொடுங்கோலன், கொள்ளைக்காரன், மத வெறியன் அலாவுதீன் கில்ஜி ஆவான். தென்னாட்டுக் கோவில்களை சூறையாடி, தரைமட்டமாக்கி , தங்கம் முழுவதையும் அள்ளிச் சென்றவன். அவனிடம் போய் உதவிகேட்டார் மாதவ். பாலுக்கு பூனையை காவலுக்கு அழைத்தது போல அவனை அழைத்தார். அவனும் படைகளுடன் வந்து கரண் கேலா என்ற மன்னரைத் தோற்கடித்தான். அத்தோடு நில்லாமல் மாதவின் மனைவி, மகளை கடத்திச் சென்று முஸ்லீம் மதத்துக்கு மாற்றினான் . பின்னர் நடந்ததை எழுத்தில் வடிக்கத் தேவையே இல்லை.

Xxx

மூன்றாவது சம்பவம்

அனார்த்த என்ற இடத்தை ஆண்டு வந்த சமத்கார் என்னும் மன்னர் ஒரு முறை வேட்டை ஆட வந்தார். குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய் மானைக் கொன்றார். அந்த மான் அவரைச் சபிக்கவே, மன்னருக்கு வெண்குஷ்ட நோய் வந்தது . அத ஊர் பிராமணர்கள் மூலிகை மருத்துவம் மூலம் மன்னரைக் குணப்படுத்தினார்கள் . மனம் மகிழ்ந்த மன்னன், பிராமணர்களுக்கு நிலம், பொருள் ஆகியவற்றைத் தானமாக அளித்தான். ஆனால் தானத்தை வாங்க பிராமணர்கள் மறுத்தனர். பின்னர் மஹாராணி கெஞ்சிக் கேட்டதன் பேரில் 72 பிராமண குடும்பங்களில் 68 பேரின் மனைவியர் தானத்தை ஏற்றனர். இறுதிவரை மானம் , மரியாதையுடன் வாழ்ந்த 4 பிராமணர்கள், குடும்பத்துடன் இமயமலைக்குச் சென்றுவிட்டனர். தானம் வாங்கி வாழ்ந்த 68 குடும்பங்களின் பேரில் 68 கோத்திரங்கள் உருவானதாக ஒரு கதை.

மற்றொரு கதையும் உண்டு. நோயைத் தீர்த்த பிராமணர்களுக்காக அரசன், அவர்கள் வணங்கும் ஹத்கேஸ்வருக்கு  ஒரு கோவில் கட்டி, சமத்கார்பூர் என்ற நகரையும் உருவாக்கியதாகவும் அதுவே பல பெயர்களாக மாறி, இறுதியில் வட்நாகர் என்று அழைக்கப்பட்டதாகவும், அங்கு வசித்த பிராமணர்களுக்கு ‘நாகர பிராமணர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவார்கள்.

இவர்கள் ஆதிகாலத்தில் தற்போது, லடாக் என்று அழைக்கப்படும் ஹட்டாக் என்ற இடத்திலிருந்து குஜராத்தில் குடியேறினராம். வெளிநாட்டினரின் படை எடுப்புகளால் இவர்கள் இடம்பெயர்ந்து பல மாநிலங்களுக்கும் குடியேறினர். இவர்களின் குல ஒழுக்கத்தை நிலை நாட்ட கி.பி.347-ல் சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டதாக கந்த புராணத்தின்  ‘நாகர் காண்டம்’ கூறும்.

குஜராத்தில் முதல் முதலில் பெண் பட்டதாரிகளான (1901) பெண்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே. பெண்களுக்கு அதிக உரிமைகளைக் கொடுத்தவர்கள் நாகர பிராமணர்கள். இப்போது குஜராத்துக்கு வெளியேயும் இவர்கள் வாழ்கின்றனர்.

-சுபம்-

Tags- குஜராத், வட்நாகர், நகர் / நாகர,  பிராமணர்கள், அக்பர், தானா, ரீரி, தான்சேன், ராகம்

A MUSICAL RAGA IN THE NAME OF TWO FAMOUS GIRLS (Post No.11,044)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,034

Date uploaded in London – –    20 JUNE 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Nagars are Gujarati Brahmins. They have great adaptability. During the Mughal era they dominated nearly every filed of activity- diplomacy, statesmanship and war.  They helped the rulers to administer the state and won their confidence. In recognition of their services, they received big jagirs/ estates. They learnt Persian and Arabic and excelled as writers.

They once came into contact with Akbar.  On a visit to Vadnagar in Gujarat, Akbar was so charmed with the singing of the raga Malhar by the Nagar sisters, Tana and Riri, and he invited them to Delhi to become his court musicians. But the Nagars took offence at this invitation which led to serious rift between the rulers and the proud Nagars. Many thousands were killed in the encounter that followed and the sisters immolated themselves.

 A monument (deri) still stands to their memory in the Mahakaleshwar cremation ground of Vadnagar. It is in memory of these sisters that Tansen named his own Raag ‘Tanariri’.

After the struggle with the Mughals , the Nagars gradually left Vadnagar and settled down in various towns in Gujarat and other states.

Xxx

There is a legend that the last Rajput ruler Karan Ghela had a Nagar minister Madhav, who was a brave soldier, an able stateman and astute diplomat. Once, when he was away from home on state business the king cast his eyes on Madhav’s wife and his brother Keshav, who tried to defend her honour, was killed in the skirmish that followed. On his return Madhav was so enraged at what he learnt that he went to Delhi to seek the help of Alauddin Khilji, the then ruler, to avenge himself. But though Alauddin overcame Karan Ghela in battle , he also abducted Madhav’s wife Kamaladevi and her daughter and converted them to Islam.

Xxx

To preserve their identity, Nagars formulated a certain code of conduct in 347 CE which is recorded in the Nagar Khand of Skanda Purana. It forbids inter caste marriages and eating with those outside one’s estate and prescribes 48 rituals or samskaras. When Vadnagar was invaded by foreigners Nagars sought shelter in Saurashtra and Rajasthan. Some of them became Jains and Buddhists and a number of Jain texts were the works of the Nagars. The Chinese pilgrim Hien Tsang refereed to them in his account of Indian pilgrimage.

Xxx

Nagar women have enjoyed a privileged status since ancient times. The first women graduates of Gujarat (in 1901), Vidhyagauri Nilkanth and Sharadaben Mehta were Nagars.

Recent research points out they were from Hatak (modern Ladakh) and their presiding deity is the Lord of Hatak, Hatkesh or Hatkeshwar.

Xxx

According to a legend, while on a hunt King Chamatkar of Anarta killed a deer suckling her young. The deer cursed him and as a result he developed leukoderma. The Brahmanas who lived in those parts cured him with herbs and he rewarded hem with gifts money and lands which they refused, being men of high principles. But the queen persuaded 68 of 72 wives to accept the gift. The four families who refused the gifts went away to the Himalayas and but the other 68 Brahmanas stayed on and believed to be the founders of 68 Gotras of Nagars

According to another version the king showed his gratitude by renovating an old city for them and consecrating a temple to Hatkeshwar, there the new city being named Chamatkarpur. Another name of the city is Vadnagar and the Brahmanas who lived there came to be known as Nagars.

Source : Religions and communities of India, Edited by P N Chopra.

 tags- Tanariri, Raga, Tansen, Akbar, Nagars, Vadnagar, Brahmins, Gujarati

ஞான மொழிகள்- 84 (Post No.11,033)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,033

Date uploaded in London – –    20 JUNE 2022       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அந்த இன்ஜினீயர் தன் தொழில் புத்தியை குடும்ப விஷயத்திலும்

காட்டிட்டாருன்னு எப்படி சொல்லற?

தன் பையனுக்கு பெண்தேர்வு செய்ய டெண்டர் விட்டுட்டாரு!

xxx

என் தம்பியை எப்படியாவது வெளியே கொண்டு வர ஏற்பாடு

செய்யுங்க……

போலீஸ் (புருஷன்)சரி, சரி, எவ்வளவு மாமூல் குடுப்பே?

xxx

அப்பா , அப்பா, நாளேலேர்ந்து நம்ப பெரிய பணக்காரனாயிரலாம்!

எப்படி?

எங்க கணக்கு வாத்தியார் நாளைக்கு பைசாவ ரூபாயா மாத்தறது

எப்படின்னு சொல்லித்தரப்போறேன்னு சொல்லியிருக்கார்!

xxx

சலூன் கடைக்கார ர் – சாதா கட்டிங்கா, ஸ்பெஷல் கட்டிங்கா சார்?

வந்தவர் – இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.

சலூன் – ஸ்பெஷல் கட்டிங்ன்னா ரத்தம் வராது!

xxx

இன்னைக்கு நம்ம டாக்டர் நாலு உயிர காப்பாதிட்டரு!

பரவாயில்லையே!

இன்னிக்கு நடக்க வேண்டிய நாலு ஆபரேஷனையும்

தள்ளி வச்சுட்டாரு!

xxx

சில வார்த்தைகள்………சில அர்த்தங்கள்!!!!

குழந்தை – தாயின்கர்ப்பபை என்னும்கோட்டைக்குள்ளே அரசனாக

இருந்தவன் வேற்று நாட்டில் பிச்சைக்காரனாக திரிந்து

கொண்டிருக்கிறான்!

நோய் – காலன் கதவைத்தட்டுகிறான்.இந்த முறை பிழைத்து விடுவேன்

இன்னொரு முறை வரச்சொன்னேன்.

கட்டில் – நீ செய்யும் அக்கிரமங்களை பூமா தேவி நேரடியாக பார்த்து

விடக்கூடாதென்று போட்டுக்கொண்ட திரை!

மேளம் – பொருள் ஒன்றுதான் வழி அனளுப்பிவைப்பது….. இடங்கள்தான்

வேறு வேறு!(திருமணம், சவ ஊர்வலம்)……

அடுக்கு டிபன் பாக்ஸ் – மேலே இருக்கும் தாழ்ப்பாளை எடுத்து விடுங்கள்.

நாங்கள் வேறே இடத்திற்குள் நுழைய வேண்டும்.

தயிர் – நேற்று வரை இளகிய மனத்துடன் இருந்த என்னை மோருடன்

என்னைக் கூட்டுச் சேர்த்தார்களோ அன்னற என் மனம் கல்லாகிவிட்டது!

அரிசி – எங்களை துவம்சம் செய்ய வந்த விரோதிகள்குழம்பும் ரசமும்,மோரும்!

வீடு -ஆயுட்கால தண்டனை!

குடும்பம் – எமர்ஜென்ஸி சித்திரவதை!

உற்றார் – நம் உணவை மொய்க்கும் ஈக்கள்!

பிள்ளைகள் – நாம் விட்டுச் செல் லும் ஞாபக சின்னங்கள்!

மனைவி – ஓர் இரவுப் பத்திரிக்கை!

xxxx

ஒரு இடத்திற்கு கிளம்புவதற்கு அதாவது “டிலே” ஆவதற்கு யார் காரணம்.?

“டிலே”யை திருப்பிப் போடுங்கள்………”லேடி”தான்காரணம்!

xxx

ஜப்பானில் 42 என்ற எண்ணுடைய ரூமுக்கு யாரும் போக மாட்டார்கள்.

42 என்ற எண் ராசியில்லாத எண்அவர்களுக்கு!

இங்கிலாந்துகார ர்களுக்கு ராசியான் எண் 3 !அதே நேரத்தில் இந்தியாவில்

எந்த காரியங்களுக்கும் மூவராகச் செல்வதில்லை!

xxx

செருப்பு – மழைகாலத்தில் சேற்றை அள்ளி வீசவும் வெயில்காலத்தில் “வார்”

அறுந்து மூலை யில் கடக்கும் அதிசயப் பொருள்!

கனவு – பிச்சைக்கார ர்களையும் மகாராஜாவாக்கும் மாயக்கண்ணாடி!

கண்ணாடி – பொறுமையின் சிகரம்!நம்முகத்தைப் பார்த்த பின்னும்

உடையாமல் இருப்பதே உதாரணம்!

ஓட்டல் – மனைவியிடம் கோபித்துக்கொள்ளும் கணவர்களின் தாய் வீடு!

சினிமா தியேட்டர் – மூட்டைப் பூச்சகளை இலவசமாக வழங்கும் தர்ம

ஸ்தாபனம்!

பஸ் – பாலங்களையும் விளக்கு கம்பங்களையும் இடிப்பதற்கு உருவான

புல் டோஸர்!

குழாய் – காற்று, பாம்பு, மீன்கள் வருவதற்கான சுரங்கப்பாதை!

மரக் கட்டில் – கொடுமை மிக்க குடும்ப சிறைச்சாலைக்கு அமைக்கப்பட்ட

்அலங்கார நுழை வாயில்!

அஹிம்சை – காந்தியுடன் சேர்த்து எரித்து விட்ட ஒன்று!

இன்ஷூயரன்ஸ் – நவீன சீதக்காதி!

உண்ணா விரதம் – நாட்டில் பலர் நடித்துக் கொண்டிருக்கும் சினிமா!

வீடு – ஒரு கௌரவ சிறைச் சாலை!

பொய் – அதிகமானவர்களின் தாய் மொழி!

கடவுள் – கஷ்டப்படும் போது மட்டுமே நினைக்கப் படுபவர்!

அனுபவம் – பல் விழுந்த பிறகு கரும்பு கிடைப்பது!

காதல் என்ற நடசத்திரத்தைப் பார்தது வியந்தபடி இடறி விழும்.

நிகழ்ச்சிக்குப் பெயர்தான் கல்யாணம்!

அந்தாதி!

தாசில்தார் – “தார்”ரோட்டில் நடந்து சென்றார்!

பூக்காரி -“காறி” த் துப்பினாள்!

டாக்டர் – “டர்” என்று மருந்து எழுதிய சீட்டைக் கிழித்தார்!

மாணவன் – “வன்”முறையில் ஈடுபடக்கூடாதென்று தலைவர் கூறினார்!

THE END

Tags- ஞான மொழிகள்– 84

உலகையே அதிர வைத்த ஒரு விவசாயி! (Post No.11,032)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,032

Date uploaded in London – –    20 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகையே அதிர வைத்த ஒரு விவசாயி!

ச.நாகராஜன்

ஆஸ்திரேலியாவில் உருளைக்கிழங்கைப் பயிரிட்டு வாழ்ந்து வந்த 61 வயதான ஒரு சாதாரண விவசாயி சிட்னியிலிருந்து மெல்போர்ன் வரை ஓடும் அல்ட்ரா – மாடர்ன் போட்டியில் கலந்து கொண்டு உலகையே அதிசயிக்க வைத்தார்.

அவரது பெயர் க்ளிஃப் யங்! (Cliff Young)

விக்டோரியாவில் பீச் காடுகளில் அவரது குடும்பம் ஒரு பண்ணையைக் கொண்டிருந்தது. 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தப் பண்ணையில் 2000 ஆடுகளை அவர் வளர்த்து வந்தார்.

தினசரி இந்த 2000 ஆடுகளையும் இவ்வளவு பெரிய பரப்பளவில் கண்டுபிடித்து அதைக் கணக்கிடும் வேலை அவருடையது. ஓடி ஓடி ஒவ்வொன்றாகப் பிடிக்கும் இந்த வேலையில் சில ஆடுகளை இரண்டு மூன்று நாட்கள் ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கும்.

அவர் சிட்னி- மெல்போர்ன் போட்டியில் கலந்து கொள்ள வந்தார்.

சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையே உள்ள தூரம் 544 மைல்கள்.

கிட்டத்தட்ட சுமார் 150 உலக மகா வீரர்கள் அதில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சிறந்த பயிற்சி பெற்ற ஓட்டப்பந்தய வீரர்கள்.

இவர்களுக்கு இணையாகக் கலந்து கொண்ட வந்த இவருக்கு பயிற்சியாளர் இவரது 81 வயதான அம்மா தான்!

முதல் நாள் மெதுவாக ஓட ஆரம்பித்த க்ளிஃப் மற்ற எல்லோருக்கும் பின்னால் தான் வந்தார்.

ஆனால் அன்று இரவு அனைத்து வீரர்களும் இரவில் நான்கு முதல் ஆறு மணி நேரம் தூங்கும் போது அவர் ஒரு இரண்டு மணி நேரத் தூக்கத்தைத் தவிர்த்து மற்றவர்களுக்கு முன்னால் எழுந்தார். ஓட ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்த தேசமே வியந்தது. குடிக்க நீர் அருந்துவதற்காக நின்ற அவரை, தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கண்டனர். “நீங்கள் எப்படிப்பட்ட ஓட்டப்பந்தய வீரர்” என்று அவர்கள் அவரைக் கேட்ட போது, “எனக்கு ஒரு முன் அனுபவமும் இல்லை. நான் வயலிலே பிறந்து புதரிலே வளர்ந்தவன்” என்றார் அவர்.

இரண்டாம் நாள் ஓட்டத்தில் இடைவிடாது ஓடிய க்ளிஃப் ஒரு மணி நேரம் தூங்கினார், எழுந்தார், ஓடலானார்.

மூன்றாம் நாள் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தைப் பிடித்தார் க்ளிஃப்.

மக்கள் அவரை உற்சாகப்படுத்தினர். நான்காம் நாள் உலக மீடியாக்கள் அனைத்தும் தம் கவனத்தை அவர் மீது திருப்பின. அடுத்த நாள் அவர் கடைசி எல்லைக் கோட்டைத் தாண்டினார். வென்றார்! அவருக்கு அடுத்தாற் போல வந்த வீரரை விட அவர் பத்து மணி நேரம் முன்னால் வந்திருந்து வெற்றியைப் பெற்றிருந்தார்.

544 மைல் தூரத்தை அவர் கடக்க எடுத்துக் கொண்ட காலம் 5 நாட்கள், 14 மணி 35 நிமிடங்கள். இது முந்தைய ரிகார்டை விட இரண்டு நாட்களுக்கும் முன்னதாக இருந்தது!

ஓட்டத்தின் போது அவர் தூங்கலாம் என்பதை அறியாத அவர் தனது பண்ணையில் புயல்காலத்தில் ஆடுகளைத் துரத்துவதாக மனதில் கற்பனை செய்து கொண்டு ஓடிக் கொண்டே இருந்தார்.

போட்டியில் வென்றதற்காக பத்தாயிரம் டாலர் பரிசு அவருக்குத் தரப்பட்டது. ஆனால் அந்தப் பணம் முழுவதையும் அவர் கொடுத்து விட்டார். ஒரு டாலரைக் கூட தான் எடுத்துக் கொள்ளவில்லை.

தன்னை விட அதிகம் கஷ்டப்பட்ட ஐந்து பேருக்கு ஆளுக்கு 2000 டாலர் வீதம் அவர் அதைப் பிரித்துக் கொடுத்து விட்டார்.

அவரது இந்த செய்கை ஆஸ்திரேலியாவையே உருக வைத்து விட்டது. மக்கள் மனதில் அவர் நிரந்தர இடத்தைப் பெற்றார்.

1997இல் தனது 76ஆம் வயதில் ‘அரவுண்ட் ஆஸ்திரேலியா’ என்ற போட்டியில் அவர் கலந்து கொண்டார். ஆனால் 4000 மைல்களைக் கடந்து விட்ட நிலையில் தனது குழு மெம்பர் ஒருவரின் உடல்நலக் குறைவு காரணமாக அவர் விலக நேர்ந்தது.

2000ஆம் ஆண்டில் விக்டோரியாவில் ஆறு நாள் ஓட்டப் பந்தயத்தில் மறுபடியும் ஒரு உலக சாதனையை அவர் படைத்தார்.

ஐந்து வருட காலம் கான்ஸருடன்போராடிய அவர் 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தனது 81ஆம் வயதில் காலமானார்.

அவர் உருவாக்கிய ஸ்டைல் ‘யங் ஷபில்’ (Young Shuffle) என்ற பெயரைப் பெற்றது. மாரதான் ஓட்டப்பந்தய வீரர்கள் சாதாரணமாக ஓடுவது போல இல்லாமல் வேறு விதமாக அவர் கால்களை உந்தி எடுத்த உத்தி வெகு விரைவில் பிரசித்தமானது. அவரது இந்த உத்தி இன்னும் அதிக ஏரோடைனமிக்ஸ் உள்ளதாக இருப்பதாகவும் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதாகவும் நிபுணர்கள் பின்னால் அறிவித்தனர்.

ஒரு சாமானிய விவசாயி உலகையே புதிய உத்தியால் அயர வைத்த சம்பவம் தான் க்ளிஃப் யங்கின் அல்ட்ரா – மாடர்ன் ஓட்டம்!

***

இந்து சமய சந்யாசிகள் பற்றி  ரோமானிய அறிஞர் விமர்சனம் (Post.11,031)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,031

Date uploaded in London – –    19 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இந்து சமய சந்யாசிகள் பற்றி  ரோமானிய அறிஞர் விமர்சனம்

ரோம் நகர ஆட்சிக்குட்பட்டு  இருந்த  ஆப்ரிக்க நாடு அல்ஜீரியா. அந்தக் காலத்தில் அதற்கு நுமீடியா என்று பெயர்.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு லத்தீன் மொழி எழுத்தாளர் அபூலியஸ் (Apuleius CE.125-180) வசித்துவந்தார். அவர் எழுதிய தங்கக் கழுதை (The Golden Ass)  என்ற ஒரே ஒரு நாவல் மட்டும் லத்தீன் மொழியை அலங்கரிக்கிறது . அவர் எழுதிய பிற விஷயங்களில் இந்து மத சந்யாசிகள் பற்றிய கருத்து உள்ளது. அது அக்கால இந்தியாவைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதோ அவரது கருத்து:-

“இந்தியர்களில் உயர்ந்த வகுப்பு ஒன்று உள்ளது . அவர்கள் ஜிம்னோசோபிஸ்ட்  (Gymnosophist குறைந்த ஆடைகள் அணிந்த இந்து சந்யாசிகளை கிரேக்கர்களும், ரோமானியர்களும் இப்படி அழைத்தனர்) ஆவர். மற்ற எல்லோரையும் வீட அவர்களைத்தான் நான் புகழ்ந்து உரைப்பேன். அவர்களுக்கு திராட்சைக் கொடிகளை வைத்து தோட்டம் போடத் தெரியாது . மரங்களை ஓட்டுப்போட்டு வளர்ப்பதையும் அவர்கள் அறியார். நிலத்தை உழுது பயிரிடவும் தெரியாது. தங்கத்தை சுத்தப்படுத்துவதோ , குதிரை ஏறி சவாரி செய்வதையோ, காளை மாடுகளை அடக்குவதோ, ஆட்டின் ரோமத்தை கத்தரிப்பதோ, ஆடு மாடுகளை மேய்ப்பதோ அவர்களுக்கு கொஞ்சமும் தெரியாது . அவர்களைப் பற்றிச் சொல்ல என்னதான் இருக்கிறது?

“இப்படித் தெரியாத விஷயங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்று மட்டும் தெரியும். அறிவையும் ஞானத்தையும் மட்டும் நாடிச் செல்வது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய குருமார்களும் இளம் சீடர்களும் அறிவு வேட்கை உடையோர் ஆவர் . அவர்களுடைய குணங்களில் நான் மிகவும் புகழ்வது என்ன தெரியுமா? மனதுக்கு ஓய்வே தரமாட்டார்கள். சோம்பேறித்தனமான எண்ணமே அவர்களிடம் கிடையாது .சாப்பாடு சமைத்து எல்லோருக்கும் பரிமாற இருக்கையில், யார் என்ன வேலை செய்து கொண்டு  இருந்தாலும்  ஒரு இடத்தில் குழுமி விடுவார்கள். உடனே அவர்களுடைய ஆச்சாரியார் (ஆசிரியர்) ஒரு கேள்வி கேட்பார். காலை முதல் இந்த நேரம் வரை நீ செய்த நல்ல காரியம் என்ன? என்று கேட்பார்.

ஒரு மாணவன் சொல்லுவான்- நான் சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரிடையே சமாதானம் செய்துவைத்தேன் ; அவர்களிடையே நிலவிய சந்தேகங்களை அகற்றினேன். இப்போது அவர்கள் இருவரும் பகைமை நீங்கி நல்ல நண் பர்கள் ஆகிவிட்டனர்.

மற்றோரு மாணவன் சொல்லுவான் – என் அப்பா அம்மா இட்ட கட்டளையை நான் இன்று செய்துவிட்டேன்.

இன்னும் ஒருவன் சொல்லுவான் – எனக்கு இருந்த ஐயங்களை நான் சிந்தித்து அகற்றிவிட்டேன் அல்லது பிறர் சொன்ன விளக்கங்களால் சந்தேகங்கள் அறவே நீங்கின.

யாராவது ஒருவன் ஒன்றுமே சொல்லாவிட்டால், அவனுக்கு சாப்பாடு கிடையாது. ஏதேனும் நல்லது செய்துவிட்டு வா என்று குரு அனுப்பிவிடுவார்”.

Xxx

பாணினியின் இலக்கணத்துக்கு பதஞ்சலி எழுதிய மஹாபாஷ்ய பேருரையில் இதே போல ஒரு விஷயமும் வருகிறது. அவர் ‘சிஷ்டா’ என்பதற்கு விளக்கம் தருகிறார்.

சிஷ்டா என்பவன் உயர் கல்வி கற்றவன் ; கற்றபின் அதற்குத் தக நிற்பவன். அதாவது அறிஞன்; ஒழுக்க சீலன்.

இதை பதஞ்சலியும் விளக்குகிறார்.

யார் சிஷ்டா ?

எ வன் ஒருவன் கற்றபடி நடக்கிறானோ அவனே சிஷ்டன் . இதை ஆரியா வர் த த்தில் மட்டுமே காண முடிகிறது. ஆர்யா வர்த்ததில் வாழும் பிராமணர்கள் வேண்டிய அ ளவு மட்டுமே தானியத்தைச் சேமித்து வைக்கின்றனர்.பேராசை என்பதே இல்லை. பற்று அற்றவர்களாக வாழ்கின்றனர்.எந்த ஒரு துறையைக் கற்றாலும் எளிதாக எல்லை வரை சென்றுவிடுவார்கள்; அவர்களே எல்லோரும் மதிக்கத்தக்க சிஷ்டா ஆவர் .

Xxx

கும்பிதான்யமும் குஸூல தானியமும்

அவர்கள் பணக்காரர் அல்ல. கும்பி தான்யம் உடையோர்.

கும்பிதான்யம் என்றால் என்ன?

நாம் படி, மரக்கால் என்று சொல்லுவது போல ஒரு அளவு ‘கும்பி’ ஆகும். ஆழாக்கு, உழக்கு என்பது போல இது ஒரு அளவு. அதில் தானியம் இருந்தால் இரண்டு நாட்களுக்குத் தான் சாப்பிட அரிசி இருக்கும் ; அதற்கு  மேல் வீட்டில் வேறு எங்கும் தானியம் இருக்காது. இதை பதஞ்சசலியின் மஹாபாஷ்யத்தின் மீதான நாராயணீய உரை விளக்குகிறது

பதஞ்சசாலியும் கூட கும்பி தான்யம் பற்றி விளக்குகிற்றார் :-

வேதம் கற்கும் ஒருவனை கும்பி தான்யம் உடையவன் என்பர் ; அதன் அர்த்தம் என்ன? கும்பி என்னும் அளவுக்கே தானியம் உடையவன்; அதாவது வீட்டில் வேறு எங்கும் தானிய சேமிப்பு இல்லை.

இதற்கு நேர் மாறானது ‘குஸுல தான்ய’. அதாவது வீட்டில் பெரிய குதிர்கள் நிறைய நெல்லோ அரிசியோ இருக்கும். அவர்கள் பணக்காரர்கள்.

ஆதிகாலத்தில் பிராமணர்கள் சேமித்து வைக்காததால் தினமும் வேலைக்குச் சென்று சம்பாதித்து ஆக வேண்டும்.சோம்பேறித்த த்னத்துக்கே இடம் இல்லை.

இவ்வாறு ஆசை என்பதே இல்லாமல், பற்றற்று வாழ்ந்ததால்; அறிவு வேட்கை மட்டுமே, பிழைப்பு ஊதியமாக இருந்ததால் மன்னர்களும் பிரபுக்களும் அவர்களுக்கு வாரி வழங்கினார்கள். மாபெரும் மெளரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கின சாணக்கியன் இறுதிவரை குடிசையிலேயே வாழ்ந்ததாக சம்ஸ்க்ருத நூல்கள் செப்புகின்றன.

–subham—

Tags- பதஞ்சலி , கும்பிதான்யம் , சிஷ்டா, அபூலியஸ் , இந்து சந்யாசிகள்,

ROMAN WRITER APULEIUS ON HINDU SAINTS (Post No.11,030)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,030

Date uploaded in London – –    19 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ROMAN WRITER APULEIUS ON HINDU SAINTS

Lucius Apuleius (125-180 CE) was a Roman scholar who lived in Algeria in Africa; in the first and second centuries it was part of Roman empire; known as Numidia. Apuleius wrote the Latin novel The Golden Ass.  He commented on Hindu saints. For Latin and Greek writers, Hindu saints were called Gymnosophists. Here is his comment on Hindu saints:

“Among Indians, there is a superior class, the Gymnosophists. I admire them more than any other. They are not expert in growing vineyards, neither in grating trees, neither in ploughing fields. They do not know to till the soil, nor to purify gold, nor to break in horse, nor to tame a bull, not to shear a sheep, nor to graze goats.

What to say? In place of all that, they know only one thing.  They, old masters and younger disciples pursue knowledge and wisdom. And among their qualities I do not praise anyone more than their reluctance for laziness of mind and for idleness. When the food is ready, before the meals are served, all the young people assemble, each returning from his own occupations. The teachers ask them what good action they have done from sunrise up to the present moment.

One says, he was an arbitrator between quarrelling parties, and he stopped the quarrel, brought back good will, suppressed suspicions and changed enemies into good friends. Another one says he complied with an order of his parents. Another one says he learned something from his own reflections or through the explanations of somebody else. If one has nothing to bring to his credit to be admitted to the meal, he is turned away to work without eating (Florides 6.6-11; quoted in L’Inde vue de Rome- India seen from Rome; Les Belles Lettres, 1986)

For the ancient classical authors, a Gymnosophist is the generic word for all kinds of sages and wise people.

This rather ingenuous and naïve description of a class of professional sages, who knows nothing else than wisdom, calls to mind the more imposing description of  SISTAS given by Patanjali in his Maha bhasya.

“Who are the Sistas?

They are known as Sistas from their residence and from their conduct. And this conduct is seen only in Aryavarta. The Brahmins who live in this residence of Aryavarta, who have a measure of grains for two or three days only in their reserve, who have no greed, who are disinterested, who have gone up to the end of any science without any difficulty, are the honourable Sistas.

Patanjali used the word who have Kumbhidhanya.

What is Kumbhidhanya?

Kumbhi is a measure of capacity, i.e. of the quantity sufficient for two or three days (Narayaniya).

Patanjali himself explains,

A Srotria is told to be Kumbhidhanya.

Kumbhidhanya means ‘one who has grain only in a Kumbhi’. If one has more grain elsewhere he is not Kumbhidhanya.

It is opposite to Kusuuladhanya which refers to one who has a reserve in a large granary and is a denomination of rich individual.

–Subham—

Tags-

ROMAN WRITER ,APULEIUS,  ON HINDU SAINTS, Kumbhidhanya, Sista, Patanjali

ஞானமொழிகள்-83 (Post No.11,029)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,029

Date uploaded in London – –    19 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மேலும் சில கடி ஜோக்குகள்

”………..”

சிறப்பு இதழ்

நீங்க எழுதற ஜோக் ஒவ்வொண்ணும் யோசிக்கிற மாதிரி்

இருக்கும்………

என்ன யோசனை?

இதுக்கு முன்னாடி இந்த ஜோக்கை எங்கேயோ படிச்ச மாதிரி

இருக்கேன்னு!

XXX

எதுக்கு சாமி பக்கத்துல பெரிய கல்ல வைச்சுட்டு போறீங்க?

வெளி்யே போகும்போது சாமி மேல பாரத்தை வச்சுட்டு போகச்

சொல்லிருக்கார் ஜோசியர்!

xxx

கம்ப்யூட்டர் பக்கம் ஏன் அடிக்கடி பூனை போகுது?

அங்கேதான் “மௌஸ்”இருக்கு!

xxx

எதுக்காக உனக்கு 200 ரூபாய் கொடுத்தாங்க?

நான் பாட்டு பாடினதுக்கு….

அப்புறம் எதுக்க 500 ரூபாய் கொடுத்தாங்க?

நா பாட்ட நிறுத்தினதுக்கு!

xxxx

டேய் ராமு, இங்கிலீஷ் தெரியல்லன்னா உங்க அப்பா கிட்ட

கேட்க வேண்டியது தானே?

அவருக்கும் தெரியல்ல சார்?

நீ என்னடா சொல்றே?

அவரும் உங்க ஸ்டூடன்ட்டாம்

!xxx

அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

தங்கப் பல் கட்டினா செய் கூலி,சேதாரம் இலவசம்ன்னு

சொல்றாரே!

xxx

அவரவர் செய்த வினைப்படி தான் வாழ்க்கை அமையும்ன்னு

சொல்றீங்களே அதுல ஒரு சந்தேகம் சார்?

என்ன சந்தேகம்?

செய்வினைப்படியா, அல்லது செயப்பாட்டு வினைப்படியா சார்?

xxx

மரத்தில் காற்றடித்து இலைகள் உதிர்ந்தால் அது இலையுதிர் காலம்

பெரும் காற்றடித்து மரமே கீழே விழுந்து விட்டால்?

மரத்திற்கு கெட்ட காலம்!

xxxx

உங்க தாய் மொழி என்ன?

“திட்டு” சார்!

xxx

என் பையன் டிஸ்டன்ஸ் எஜூகேஷன்ல படிக்கிறான்….

அப்படீன்னா அவனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்ன்னு

சொல்லுங்க……..

xxx

‘சூரியன் மேற்கே மறையும்’ இது இறந்த காலமா? அல்லது

எதிர் காலமா?

அது சாயங்காலம் சார்!

xxx

மன்னா நம் ஜோஸ்யர் ஒரு ஏமாற்று பேர்வழி ……

எப்படி சொல்கிறாய் மந்திரி?

அடச்ரேகை, தீர்க்க ரேகை பார்த்து போர் வருமா அல்லது

வராதான்னு கரெக்டா சொல்லிடுவேன் என்கிறார்மன்னா!

xxx

அந்த ராசிக்கல் ஜோதிடர் போலின்னு எப்படி கண்டு பிடிச்சே?

என்ராசிக்கு “தோசைக்கல்” மோதிரம் போடணும்ன்னு சொல்றாரே!

ராமருக்கு பிடித்த கிரிக்கெட் வீர ர் யார்?

தெரியல்லே?

“அணில்” கும்ளே!

xxx

ஏதாவது ஒரு திரவம் பெயர் சொல்லு, குமார்?

நீங்க தர ர்துதான் சார் , உபத் “திரவம்”!

xxx

50 தேங்காய்1000ரூபாய்க்கு விற்றால் ஒரு தேங்காய்

என்ன விலைக்கு விற்கும்?

அனியாய விலைக்கு விற்கும்……

xxx

அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?

கம்ப்யூட்டருக்கு வைரஸ் பீவர் வந்தாலும்

குணப்படுத்திடுவேன்னு சொல்றார்!

xxx

நான் பாடம் நடத்துகிறேன்?

இது என்ன காலம்?

இது எங்க போதாத காலம்!

xxx

விண்வெளியில் பூனைக்கு பிடித்த இடம் எது?

Milky way – பால் வீதி!

xxxx

மொம்மை பண்ணுற கலைஞர் மண்ணுக்கு எப்படி

வணக்கம் சொல்வார்?

TOY மண்ணே வணக்கம்!

xxx

அந்த டாக்டர் போலி…….

எப்படி கண்டுபுடிச்சே?

மனசே சரியில்லேன்னேன்…..

அதுக்கு எக்ஸ் ரே எடுக்கணும்ன்னு சொல்லி எழுதி கொடுத்திருக்கார்!

xxx

பசியும் பஞ்சும் ஒண்ணுதான்…..

எப்படி?

ரண்டுமே காதை அடைக்கும்!

xxxx

அந்த பள்ளிகூடத்தை ஒரு பூனை சுற்றி வருது….

ஏன்?

அது”எலி”மெண்ட்ரி ஸ்கூலாச்சே!

xxxx

அவர் P T மாஸ்டர்ன்னு நினைக்கிறேன்…..

எப்படி சொல்லற?

தானத்தில் சிறந்தது “மைதானம்”ன்னு சொன்னாரே!

xxxx

என் பையன்செய்த காரியத்தினாலே என்னாலே

வெளிலே தல காட்ட முடியல்லே…..

ஏன்?

என் “விக்” கை அவன் எடுத்து மாட்டி கிட்டு போய்ட்டான்!

xxxx

உங்க சோப்பு கம்பேனிக்கு “தென்னைமரம் சோப்பு கம்பேனி”

அப்படின்னு ஏன பேர் வைச்சீங்க?

எங்க சோப்பு கம்பேனிக்கு கிளைகள் கிடையாது!

THE END

Tags- ஞானமொழிகள்-83

முடா! முரா! முரி! (Post No.11,028)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,028

Date uploaded in London – –    19 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

முடா! முரா! முரி!

ச.நாகராஜன்

டொயொடோ  உற்பத்தி செய்முறையின் தந்தை என்று புகழப்படுபவர் தாய்ச்சி ஒஹ்னோ.  அவர் அந்த உற்பத்தி முறைக்கான விதிமுறைகளை வகுத்து ஒரு வாடிக்கையாளரின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு தரமான தயாரிப்பை உரிய காலத்தில் அளிக்க ஆரம்பித்தார். இந்த முறையில் முக்கியமான ஒன்று கழிவுகளை அறவே தவிர்ப்பதாகும்.

இந்த முறையில் கழிவைத் தவிர்க்க நாம் அறிய வேண்டியவை முக்கியமான மூன்று சொற்கள்.

முடா, முரா, முரி, (அதாவது கழிவு, சமமற்ற தன்மை அல்லது உரிய ஸ்டாண்டர்ட் இல்லாதிருப்பது, அதிகச் சுமை)

இந்த மூன்றையும் நாம் தவிர்க்க வேண்டும்!

முடா (WASTE –கழிவு)

ஒரு தயாரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டாத எந்த ஒரு செயலும் முடா எனப்படும். செய்முறையில் ஏற்படும் எந்த ஒரு வீணான வேலையும் கழிவும் அங்கு பணிபுரிபவர்களுக்கோ அல்லது வணிகத்திற்கோ நிச்சயம் உதவப் போவதில்லை. அவை தயாரிப்புச் செலவை கூட்டுவதோடு பொருளைத் தயாரிக்க ஆகும் காலத்தையும் அதிகரிக்கிறது.

பொருளுக்கான டிமாண்ட் சந்தையில் இல்லை என்ற சமயத்தில் உற்பத்தியை அதிகமாகச் செய்து குவிப்பது.

பொருளைத் தயாரிக்கத் தேவையான உரிய நேரத்தை விட அதிகமாகப் பணி புரிந்து அதை உருவாக்குவது.

பொருளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை அதிகமாக வாங்கி ஸ்டாக் செய்வது அல்லது பற்றாக்குறை ஏற்படும் வண்ணம் குறைவாக வைத்திருப்பது. இது தயாரிப்புச் செலவை மிக அதிகமாகக் கூட்டி விடும். அது மட்டுமல்ல, அதை சேகரித்து ஓரிடத்தில் வைத்திருப்பதால் அதிகப்படியான இடமும் தேவைப்படும்.

பொருளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து.

பொருளைத் தயாரிக்க உதவும் மெஷின்களைக் கொண்டு செல்வது,

பணியாளர்களை தயாரிக்கும் இடத்திற்குக் கொண்டு செல்வது,

ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு காத்திருப்பது,

தயாரிப்பில் ஏற்படும் தவறுகளால் மீண்டும் மீண்டும் அதைச் சரிபார்க்க வேலை செய்வது

இவையெல்லாம் ஊன்றி கவனிக்கப்பட வேண்டிய அமசங்கள்.

இப்படி தேவையற்ற அனைத்தையும் களைந்து விட்டோமானால்,

தயாரிப்புச் செலவு குறையும்.

தரம் கூடும். வேலைத் திறன் கூடும். லாபம் அதிகமாகும்.

முரா (சமமற்ற தன்மை – UNEVENNESS)

அடுத்து முடாவுடன் கூடவே பார்க்க வேண்டியது முரா!

ஒரு பொருள் எந்தவிதமாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்ற தர நிர்ணயங்கள் இருத்தல் வேண்டும். ‘ஸ்டாண்டர்ட்ஸ்’ (STANDARDS) என்று சொல்லப்படும்  இந்த தர நிர்ணயங்கள் இல்லை எனில்  வேஸ்ட் எனப்படும் கழிவு அதிகமாக ஏற்படும். தரமில்லாததைக் குப்பையில் தானே கொட்ட வேண்டும்? வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு இல்லை என்ற போதிலும் கூட அந்த மாதத்திற்கான இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாக பொருளைத் த்யாரித்து கோடவுனில் கொண்டு சேர்ப்பது ஒரு நிறுவனத்திற்கு எந்த விதத்தில் உதவும்?

விற்பனைப் பிரிவு அதிகாரிகள் மீது அதிக பளு சுமத்தப்பட்டு எப்படியாவது விற்க முற்பட்டு அவசரம் அவசரமாகத் தரமற்று தயாரிக்கப்பட்ட பொருள்களை அவர்கள் சந்தையில் கொண்டு சென்றால் அவை வாடிக்கையாளர்களால் நிராகரிக்கப்படும்.

ஆகவே முரா என்பதைக் கவனித்து தரமற்று இருப்பதால் வரும் கழிவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

அடுத்து வருவது  முரி!

முரி (அதிகச் சுமை OVERBURDEN)

முரி என்பது செய்முறைகளில் அதிக சிக்கலாக உள்ளவற்றைத் தொழிலாளர்கள் மீது ஏற்றி  அவர்களை அதிகமாக சிரமப்படுத்துவதாகும். இதன் விளைவு தரமற்ற பொருள்களைத் தயாரிப்பதிலும் அதிக கழிவையும் ஏற்படுத்தும்!

இதைக் களைய பணியாளர்களுக்கு தங்கள் தங்கள் பணியில் நல்ல பயிற்சி தரப்பட வேண்டும்.

தர நிர்ணயம் செய்யப்பட்டு எந்தத் தரம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை பணியாளர்கள் புரிந்து கொள்ளும்ப்டி செய்ய வேண்டும்.

அவர்களுக்குச் சரியான கருவிகள் தரப்படுகின்றனவா, அவை சரியாக வேலை செய்யும்படி உள்ளனவா என்பது சரிபார்க்கப்பட வேண்டும்.

ஒரு சிறிய சுத்தியல் ஆனாலும் சரி, ஸ்குரூ டிரைவர் ஆனாலும் சரி அது சரியாக வேலை செய்யும் விதத்தில் இருத்தல் வேண்டும்.

இப்படி முடா, முரா, முரியை அறிந்து கொண்டு தரமான பொருளைத் தயாரித்தால் அது சந்தையில் எப்படி ஒரு பிரமாதமான வரவேற்பை பெறும்?

இதைத் தான் டொயொடா உற்பத்தி முறை தந்தது; வரவேற்பைப் பெற்றது.

சரி இந்த முடா, முரா, முரி தொழிலகங்களுக்கு  மட்டும் தான் பொருந்துமா என்ன?

இப்போது சாஃப்ட்வேர் டெவ்லப்மெண்டிற்கும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

சற்று யோசித்துப் பார்த்தால்,

அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களுக்கும் உரிய முறையில் இதை நமக்கு ஏற்றபடி மாற்றி இந்த முறையை நாம் கடைப்பிடிக்க முடியும்.

தேவையறற இ-மெய்ல்களைக் குவித்து வைத்துத் திண்டாடுவது, சமையலுக்குத் தேவையானவற்றை உரிய காலத்தில் உரிய அளவில் உரிய விலையில் வாங்காமல் இருப்பது, நமது அன்றாட வாழ்வில் தரமற்ற பொருள்களை உபயோகித்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வது இப்படி ஒரு பட்டியலைப் போட்டால் நாமே அயர்ந்து போவோம்.

அட நாமே முடா, முரா,முரியை பல்வேறு அம்சங்களில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதே என்ற முடிவுக்கு வந்து விடுவோம்.

முடா, முரா, முரி என்பது நல்ல வாழ்க்கை முறைக்கான அருமையான ஒரு உத்தி என்பதை அறிவோம். நமக்குத் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொண்டு கடைப்பிடிப்போம்!

**

 tags- முடா, முரா, முரி 

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 2 (Post No.11,027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,027

Date uploaded in London – –    18 JUNE 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில்  எழுதிய ராஜதரங்கிணி நூலில் காணப்படும் மேலும் பல அதிசய விஷயங்கள்:-

13.காகம் குயிலின் முட்டைகளை/ குஞ்சுகளை தனது என்று கருதும்; அன்னம் பாலையும் தண்ணீரையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து அருந்தும் . நீரில்லாத மேகத்தை க் கண்டால் அஞ்சி நடுங்கும்.

(இந்த உவமைகள் தமிழ் இலக்கியத்திலும் உள்ளன)- 6-275

14.”சீரிஷ மலர்களை சூர்ய ஒளி உதிர்ப்பது போல”- இந்த மலரை அனிச்சம் என்று வள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். முகர்ந்தால்கூட வாடிவிடும்; அவ்வளவு மென்மையானது என்பார் வள்ளுவர்.6-291

15.தித்தா மஹாராணி தான்  செய்த பாபங்களைக் கழுவ 64 கோவில்களை உருவாக்கினாள் 6-306

(அவளது காலம் கி.பி.972)

15.ஆறுகள் தாழ்வான இடத்தை நோக்கிப் பாயும். உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்களும் கூட, தாழ்வான எண்ணத்தை நோக்கிச் செல்வர்; இது பெண்களின் இயற்கைக் குணம். 6-316

(கம்பனும் கூட கைகேயி, தாடகை, சூர்ப்பனகை பற்றிய இடங்களில் பெண்களைத் தாழ்வாக விமர்சிப்பதைக் காணலாம்)

.16. பிராமணனுக்கு லஞ்சம் – 6-336-340

தித்தா என்னும்  ராணிக்கு எதிராக பிரமணர்களைத் தூண்டிவிட்டு உண்ணாவிரதம் இருக்கச் செய்தார் விக்ரஹ ராஜா (தித்தாவின் சகோதரர் மகன் ); அக்ரஹார பிராமணர்கள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மக்களும் சேர்ந்து கொண்டனர். ஆனால் பாபமே  உருவான தித்தா , பிராமணர்களுக்கு தங்கக் காசுகளைக் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி செய்தாள்

(பேராசைக் காரனடா பார்ப்பான்; அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான் — என்ற பாரதியாரின் வரிகளை இங்கே நினைவு கூறுதல் பொருத்தம் )

17.புண்ய தீர்த்தங்களில் உள்ள திமி மீன்கள் மெளனமாக இருந்து தனது இனத்து மீன்களையே உண்ணும்; மயில்கள் சுத்தமான மழை  நீரை அப்படியே ஏந்தி அருந்தினாலும் விஷப் பாம்புகளையே விரும்பி உண்ணும்; கொக்குகள் தவம் செய்வது போல நின் றாலும் அருகில் வரும் மீன்களைத் தின்றுவிடும்; பாபாத்மாக்கள் புண்ணியம் செய்வது போல செயல்பட்டும் பாவங்களையே செய்வர் .6-309

18.நாகரத்தினம் – பாம்புகளிடத்தில் நாக ரத்தினம் உண்டு அதை வைத்து அது இரை தேடும் என்று சங்கத் தமிழ் நூல்கள் பகரும். கல்ஹணரும் 7-136, 7-502ல் நாகரத்தினம் பற்றிப் பாடுகிறார். பெண் பாம்புகள் பூமியில் புதைந்துள்ள ரத்தினங்களைப் பாதுகாத்து நிற்கும் என்கிறார் 3-108

பாம்பு மற்றவர்களுக்காக ரத்தினங்களைப் பாதுகாக்கிறது . இதைவிடக் கருமிகள் உலகினில் உண்டோ! 7-502

பாம்புகள் சென்றவுடன் அவை பாதுகாத்த ரத்தினங்கள் எப்படி மறையுமோ அப்படி ராஜா போனவுடன் கலசன் காலியான கஜானாவைக் கண்டான் (7-362)

மற்றவர் செல்வத்துக்கு ஆசைப்பட்டு ஏமாறும் பேராசைக்காரன் போல, பாம்புகளைக் கொன்று ரத்தினம் பெற நினைப்பவனைப்  போல , ராணியின் அம்மாவும் அரசுக்கட்டிலை எதிர்பார்த்து மகனைப் பலிகொடுத்து ஏமாந்தாள் 7-136/137

19. தக்கா என்பவன் ராஜாவுக்கு பல நாட்டுப் பெண்களை விலைக்கு வாங்கி வந்தான்;  துலுக்கர்களிடம் அவர்களை விலைக்கு வாங்கினான்.ராஜா, பலருடைய அழகிய மனைவியரையும் தூக்கி வந்து அந்தப்புரத்தில் வைத்து அனுபவித்தான். 72 பெண்களுடன் இன்பம் அனுபவித்தும் வீர்யம் குறையவில்லை. மீன்களையும் குளிகைகளையும் சாப்பிட்டு சமாளித்தான். அவன் குருமார்களை சந்தித்தபோதும் மாமிச உணவைத் தவிர்க்கவில்லை இவ்வாறு பாபம் செய்தபோதும் பல கோவில்களைப் புதுப்பித்தான் 7-520-525 (இவை கி.பி 1063-1089 காலத்தில் நடந்தவை)

20.ஆராய்ச்சி மணி- ராஜா தனது கோட்டையின் நான்கு வாசல்களிலும் பெரிய மணிகளைத் தொங்க விட்டிருந்தான். மனுக்களைக் கொண்டு வந்து முறையிட விரும்புவோருக்காக இப்படி ஆராய்சசி மணிகள் வைக்கப்பட்டன.7-879

(மநு நீதிச் சோழன் கதையை நினைவுபடுத்தும் ஸ்லோகம் இது)

21.மன்னனுக்கு தென்னாட்டு நடை உடை பாவனை மிகவும் பிடித்தது. நாணயங்களைக்கூட கர்நாடக பாணியில் வெளியிட்டான். மன்னரைப் போல மந்திரிகளும் அதிகாரிகளும் உடை அணிந்தனர். அவர்களுக்கும் தீப ஆரத்தி வழங்கப்பட்டது-925, 926

22.மன்னன் ‘பம்பா’ என்னும் பெரிய ஏரியை உருவாக்கி பறவைகளையும் மிருகங்களையும் உலவ விட்டான்.

(பம்பா என்னும் சொல் உலகம் முழுதும் உள்ளது. இப்போதும் இந்தியாவில் பல மாநில நதிகள், ஓடைகள் பம்பா என்றே அழைக்கப்படுகின்றன )7-940. அவனது தோட்டத்தில் கற்பக வ்ருக்ஷமே இல்லை. ஏனெனில் அவனே கற்பகமரமாகத் திகழ்ந்து  தங்க நாணயங்களை வாரி வழங்கினான் (7-939)

23.மன்னன் கலசன், ஆண்ட காலத்தில் புகழ்பெற்ற காஷ்மீர் புலவன் பில்ஹணன், கர்நாடகத்துக்குச் சென்றார். கர்நாடக மன்னன் பரமாந்தி , அந்தப் புலவரை வித்யாபதி ஆக்கினார் (அரசாங்கப் புலவர் மன்னனுக்கு அடுத்தபடியாக அவர் வெண் கொற்றக் கு டையுடன் பவனி வந்தார் (7-35-938)

24.மன்னர், தனது அந்தப்புரத்தில் 360 பெண்களைச் சேர்த்துக்கொண்டார். அவர்கள் அனைவரும் நல்ல குலத்தவர். சண்டாள பெண்களையும் தொம்பா பெண்களையும் மன்னர் அனுமதிக்கவில்லை. 7-963, 964

25.அறம் , பொருள் , இன்பம் — தொல்காப்பியமும் திருக்குறளும் இந்துமத  தத்துவமான தர்ம, அர்த்த, காம -த்தைக் குறிப்பிடுகின்றன ; ராஜ தரங்கிணியிலும் 7-510ல் வருகிறது.

தொடரும்……………………………