இலக்கணம் ஒரு கடல் – 2 (Post No. 11,125)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,125

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இதன் முதல் பகுதி நேற்று வெளியானது

இலக்கணம் ஒரு கடல் – பகுதி 2

பாமஹர் மீண்டும் ஒரு கடல் உருவகத்தை நம் முன் வைக்கிறார்.

சாலாதுரீயரின் (பாணினியின்) இலக்கண விதிகளை யார் முழுவதும் சரியாக விளக்க முடியும் ?

ஆகையால் இதுபற்றி நான் மேலும் எதுவும் சொல்லப்போவதில்லை .

ஓருவர் இலக்கணக் கடலைக் கடந்து அடுத்த கரையை அடைவது அதிசயமே. அது கொந்தளிப்பு நிறைந்த கடல்.

இதோ அந்த ஸ்லோகம்

சாலாதுரீயமதமேதத் அநுக்ரமேன

கோ வக்ஷ்யதீதி விரதோஹம்  அதோ விசாராத்

சப்தார்ணவஸ்ய யதி கஸ் சித் உபைதி பாரம்

பீமாம்பச ஸ்ச ஜலதெரிதி விஸ்மயோ செள ஹு

சப்த  என்பதை பாமஹ இலக்கணத்துக்குப் பயன்படுத்துகிறார். சப்த சுத்தி என்னும் தலைப்பில் கடைசியாக வரும் ஸ்லோகம் இது . இலக்கணத்தைப் புகழ்வதோடு மஹா மேதாவியான பாணினியையும் புகழும் ஸ்லோகம் இது  உலகிலேயே மெச்சத்தக்க கருத்து பாணினியுடையது ஒன்றுதான் என்று வேறு ஒரு இடத்தில் செப்புகிறார்.

ச்ரத்தேயம் மதம் ஹீ பாணினீயம்

Xxx

க்ஷேமேந்திரர் , ஹேமசந்திரர் ஆகியோரும் இவ்வாறே இலக்கணத்துக்கு முதலிடம் தருகின்றனர்.

ஹேமசந்திரர் எழுதிய ‘விவேக’ என்னும் உரையில் சொல்கிறார் —

“என்னிடம் இரண்டு எருதுகள்/ மாடுகள்  இருக்கின்றன ; நாங்கள் தம்பதிகள்தான் எங்கள் வீட்டில் எப்போதும் செலவுக்குப் பஞ்சம் . ஆகையால் ஓ மனிதா ! வேலை செய்யத்  துவங்கு ; அபோதுதான் நிறைய நெல்லுக்குச் சொந்தக்காரர் ஆகலாம்

இந்தக் கவிதை உண்மையில் ஆறுவகை சமாசங்களை நினைவிற் கொள்ள உதவும் வேடிக்கைக் கவிதை ஆகும்  ; நாம் வானவில்லின் 7 நிறங்களை நினைவிற்கொள்ள விப்ஜியார் VIBGYOR என்ற ஆங்கிலச் சொல்லைப்ப பயன்படுத்துவது போல இது த்விகு , த்வந்த்வ , அவ்யயீ பாவ, தத் புருஷ, கர்மதாரய , பஹுவ் ரீஹீ  என்னும் ஆறு சமாசங்களை நினைவில் வைத்துக்கொள்ள பயன்படும் .

இதோ அந்தக் கவிதை :

சப்தானுசாசனம்  வ்யாகரணம் ததோ ஹி  சப்த சுத்திஹி

தன்னைபுண்யம்  யதா த்விகுரபி  சத்வந்த்வோ

ஹம் க்ருஹே ச மே  சததமவ்யயீபாவஹ

தத்புருஷ கர்மத்தாராய யே னாஹம் ஸ்யாம் பஹுவ் ரீஹி 

ஒரு மொழியைக் கற்பதை எப்படி சுவையாக மாற்றி எல்லோரையும் தன பால் இழுக்கவைக்க முடியும் என்பதை சம்ஸ்க்ருத ஆசாரியர்களிடமிருந்து அறியவேண்டும்.

சமாசம் என்றால் என்ன ?

பகவத் கீதையில் கூட கிருஷ்ண பரமாத்மா இலக்கணம் பற்றிப் பேசுகிறார். விபூதி யோகத்தில் எழுத்துக்களில் நான் அகாரம் ; ஸமாஸங்களில் நான் த்வந்த்வ ஸமாஸம் — (பகவத் கீதை 10-33)

இதற்கு விளக்க உரை எழுதிய ராமகிருஷ்ண மடத்தின் ‘அண்ணா’ அவர்கள் எழுதுகிறார் —

சொற்களின் புணர்ச்சி ஸம்ஸ்கிருதத்தில் நான்கு வகை

அவ்யயீ – உதாரணம் – அதிஹரி

தத் புருஷ – உதாரணம் – ஸீதாபதி

பஹு வ்ரீஹி  – உதாரணம் – பீதாம்பரஹ

த்வந்த்வ — உதாரணம் — ராம லக்ஷ்மணவ்

த்வந்த்வ ஸமாஸத்தில் புணரும் பதங்கள் இரண்டும் ஸமப்ரதானம் .

xxxxx

கவிஞராக விரும்பும் ஒருவர் என்ன என்ன பாடங்களை பயில வேண்டும் என்று வாமனரும் பகர்கிறார் :-

சப்த ஸ்ம்ருதி /இலக்கணம் , அபிதான/அகராதி, கோச /தொகை நூல், சந்தோவிசிதி / யாப்பு, கலா/ கலைகள், காமசாஸ்த்ர /இன்பநுகர்ச்சி நூல், தண்ட நீதி/அரசியல் . இந்தப் பட்டியல் வாமனரின் காவ்யாலங்கார சூத்ர விருத்தியில் வருகிறது. அவர் முதல் முதலில் இலக்கணத்தைக் குறிப்பிடுவது கருத்திற்கொள்ள வேண்டிய விஷயம்.

Xxx

ஆனந்த வர்த்தகர் எழுதிய த்வன்யாலோக உரை நூலிலும் இலக்கணம்  புகழப்படுகிறது. அவர் சொல்கிறார் –

ப்ரதமே ஹி வித்வாம்ஸோ வையாகரணஹ வ்யாகரண மூலத்வாத் ஸர்வ வித்யானாம்

இதன் பொருள்

கற்றறிந்த அறிஞர்களில் முதலிடம் வகிப்பவர்கள், இலக்கணத்தைப் படைத்தவர்கள்தான்; ஏனென்றால் எல்லா விஷயங்களும் இலக்கணத்துக்குக் கடமைப்பட்டுள்ளன .

இன்னும் ஒரு இடத்தில் ஆனந்த வர்த்தனரின் வியாக்கியானம் சொல்கிறது–

சப்த ப்ரஹ்மனை எவரும் மாசுபடுத்த முடியாது அறிஞர்கள் இதை நன்கு உணர்ந்துள்ளனர்

Xxx

செய்யுட்களை இயற்றுவதற்கு ஒருவருக்கு என்ன என்ன தெரிய வேண்டும் என்று காவ்யா மீமாம்ஸா என்னும் நூலில் ராஜசேகரரும் சொல்கிறார் –

நாம தாது பாராயணே

“பெயர் சொற்களையும் வினைச் சொற்களையும் மனப்பாடம் செய்க”

மதுசூதன் மிஸ்ரா போன்ற வியாக்கியானக்காரர்கள் சித்தாந்த கெளமுதி என்னும் எளிய இலக்கண நூல்களைக் கற்பிப்பதைக் குறிப்பிடுகின்றனர்

Xxx

 எனது அனுபவம் My Experience

இதை எழுதும்போது நாங்கள் (I and my younger brother)  சிறு வயதில் சம்ஸ்க்ருதம் படித்தது நினைவுக்கு வருகிறது. மாலை வேளையில் , விருப்பப்படும் குழந்தைகளுக்கு மட்டும் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்க மதுரையில் மேலச் சித்திரை வீதியில், ஒரு ஆடிட்டர் வீட்டின் வறாண்டாவில், ஏற்பாடாகியிருந்தது. நாங்கள் அங்கே போய் அமர்வோம். ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்னும் சம்ஸ்க்ருத ஆசிரியர் வந்தவுடன் எழுந்து நிற்போம். அவர் உட்காருங்கள் என்று சைகை செய்தவுடன் அமர்வோம். ‘ராம சப்த’த்தில் துவங்கி வரிசையாக சப்தங்களை சொல்லுவோம். பிறகு ராமோதந்தம் என்னும் எளிய ராமாயண செய்யுட்களை அவர் சொல்லச்  சொல்லத்  திரும்பிச் சொல்லுவோம். இறுதியில் அமர கோசம் என்னும் உலகப்புகழ் பெற்ற நிகண்டுவை உருப்போட வைப்பார் . பின்னர் காளிதாசரின் ரகு வம்சத்தில் பத்து ஸ்லோகம் வரை பதம் பிரித்து அர்த்தம் சொல்லுவார். இவைகளை எல்லாம் நோட்டுப் புஸ்தகத்தில் எழுதுவோம். ஒரு பாட புஸ்தகத்தில் (Text Book) சின்னச் சின்ன கதைகள் இருக்கும் அதைப் படித்து அர்த்தம் சொல்லுவார்.

இதில் கற்ற அமரகோசம் நிகண்டுவையும் சப்தங்கள் என்னும் இலக்கணத்தையும் நீண்ட காலம் மறக்கவில்லை. கிட்டத்தட்ட தாது பாடாவலியைக்  கற்பிக்கும் போது அவ உடல் நிலை குன்றி வகுப்புகள்  தடைப்பட்டன. நான் சம்ஸ்க்ருதம், பிரெஞ்சு , ஜெர்மன் எல்லா வகுப்புகளிலும் பிற்காலத்தில் சேர்ந்தேன் . தமிழையும் ஆங்கிலத்தையும் பள்ளி , கல்லூரிகளில் பயின்றேன். எந்த மொழி பாடத்திலும் ஸம்ஸ்க்ருதம்போல இலக்கணத்தையும் அகராதியையும் உருப்போட வைக்கவில்லை. உலகில் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கும் முறைதான் சிறந்தது என்பது இப்போது புரிகிறது. ஆங்கிலம் கற்பிக்கச் செல்லும் சிறுவனுக்கு முதல் நாள் வகுப்பில் ஷேக்ஸ்பியரை மனப்பாடம் செய்யச் சொல்லுவதில்லை. ஆனால் முதல் நாள் சம்ஸ்க்ருத வகுப்பிலேயே உலகப் புகழ் பெற்ற ரகு வம்ச காவியத்தை ஒரு குறிப்பிட்ட ராகத்தில் சிறுவர்களை மனப்பாடம் செய்ய வைக்கின்றனர். தமிழ் கற்பிக்கப்போகும் மாணவனுக்கு தொல்காப்பியம், நன்னூல் என்பதெல்லாம் அரிதே தெரியும். ஆனால் ஸம்ஸ்ருத வகுப்பிலோ சப்த மஞ்சரி என்பதுதான் முதல் புஸ்தகம் . இதனால்தான் அத்தனை ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களும் இலக்கணத்தை முதல் பாடமாகப் புகழ்கின்றனர் போலும். வேத பாட சாலைகளில் வியாகரணம் / இலக்கணம் ஆறு துணைப்பாடங்களில் ஒன்று என்பதை முன்னரே குறிப்பிட்டேன்.. இது எல்லாம் 60 அல்லது 65 ஆண்டுகளுக்கு முன்னர் என் பள்ளிப்பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் .

ஒவ்வொரு விஷயமும் சுமார் 10 நிமிடங்கள்தான். முழு நூலும் அல்ல . நாளடைவில் 200, 300 வரிகள் மனப்பாடம் ஆகிவிடும் . முதலில் அவர் சொல்ல, நாங்கள் திரும்பிச் சொல்லுவோம். பின்னர் மனப்பாடம் ஆன பகுதிவரை எல்லா மாணவர்களும் ராகத்தோடு சொல்லுவோம். புதிய 10, 20 வரிகளை அவர் மாதம் தோறும் துவங்குவார். எனக்கு நினைவு தெரிந்தவரை எல்லா முக்கிய சப்தங்களையும் , 200 அமர கோச வரிகளையும் சொல்லி வந்தேன். பின்னர் 20 ஆண்டுகளுக்கு முன்னர்,   லண்டனில் நேஷனல் லாட்டரியிலிருந்து (National Lottery Funding) 5000 பவுண்டு உதவி நிதி பெற்று சம்ஸ்க்ருத வகுப்புகளை நடத்தினேன். பத்துப் பேர்தான் வந்தனர்!!! அதற்குப்பின்னர் லணடன் ஹென்டனில் உள்ள சின்மயா மிஷனில் சம்ஸ்க்ருதம் கற்றேன் . எல்லாம் ஒரு கட்டத்தில் தடைப்பட்டது. கடலில் நீந்தப் போனேன்; ஆனால் கடற்கரையை மட்டும் பார்த்துவிட்டு வியந்து போய் நிற்கிறேன். அது மஹா சமுத்திரம் என்பது உண்மையே. அதைச் சொன்ன பாமஹர் வாழ்க !!

XXXX

–சுபம்—

Tags-  இலக்கணம், சமாசம் , ராஜ சேகரர், வாமனர், பாமஹர் , க்ஷேமேந்திரர் , பாணினி , ஹேம சந்திரர் , கவிதை , வியாகரணம்

HOW CAN YOU WIN GOD BY WORDS? (Post No.11,124)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,124

Date uploaded in London – 21 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்– 100

A signboard outside a restaurant read

“Eat as much as you can,

your grand children will pay the Bill”.

A man entered the restaurant and ate as he could, got a toothpick and was relaxing.

The waiter gave him the bill.

He laughed and pointed to the signboard, “don’t you see, only my grandchildren will pay” !

The waiter politely replied, ” Sir, This is not your bill, it’s your grandfather’s bill”……..

The man fainted….

Xxx

AND GOD SAID ……………………..

I asked God “to please keep all my Friends and Family happy all the time.”

☺ God said: OK, but only for 4 days! Now you select that 4 days!

😊 I said “OK”

🌞” summer day “

❄ “winter day “

☔ ” rainy day ” and

🌺 ” spring day “

😯 God got confused and said, no you can select only 3 days.

😊 I said “OK”

❌ ” yesterday “

✅ ” today “

❓ ” tomorrow “

__________________

😯 God got confused and said, NO, you can select only 2 days,

😊 I said “OK”

💖 ” current day AND

❓ ” the next day “

__________________

😯God again got confused and said, NO, NO you can select only☝ *one* day!!

😊 ” I said “OK”

🌞” EVERYDAY “

__________________

God started laughing and said 🆒🙏“OK, all your friends and family will be happy at all times”. 😊😆😛

XXX SUBHAM XXX

ஞானமொழிகள்- 100

மேதை ஆக ஏழு படிகள்! (Post No.11,123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,123

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மேதை ஆக ஏழு படிகள்!

ச.நாகராஜன்

உலகின் மிகப் புகழ் பெற்ற கலைஞர் லியனார்டோ டா வின்சி இத்தாலி நாட்டில் வின்சி என்ற நகரில் பிறந்தவர். அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர் இருக்க முடியாது. (தோற்றம் 1452, ஏப்ரல் 15, மறைவு : 1519, மே, 2).

அவர் ஒரு பல்துறை நிபுணர். ஓவியர், சிற்பி. கட்டிடக் கலைஞர், உடல்கூறு இயல் நிபுணர், கணித மேதை, பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர், ஒரு விஞ்ஞானி, வானவியல் நிபுணர், தாவர இயல் நிபுணர். வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், இசைக் கலைஞர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அவரது மோனா லிஸா, கடைசி விருந்து ஆகிய ஓவியங்கள் காலத்தை வென்றவை.

அவரது பெருமை காலம் செல்லச் செல்ல கூடிக் கொண்டே போகிறது.

அனைவரும் மேதையாக ஆக அவர் ஏழு படிகளைக் காட்டியுள்ளார்.

அந்தப் படிகளில் ஏறினால் மேதைத் தன்மை என்ற உச்சியை அடையலாம்.

அவற்றைச் சுருக்கமாகக் கீழே காணலாம்.

  • CURIOSITÀ (CURIOSITY) –  எதையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம்
  • DIMONSTRATZIONE (INDEPENDENT THINKING) – சுதந்திரமாக எண்ணுதல்
  • SENSAZIONE (REFINE YOUR SENSES) – புலன்களைக் கூர்மையாக்கல்
  • SFUMATO (EMBRACE UNCERTAINTY) – நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளல்
  • ARTE/SCIENZA (ART & SCIENCE, WHOLE-BRAIN THINKING) – கலை, அறிவியல் மற்றும் முழு மூளை ஆற்றலைப் பயன்படுத்தல்
  • CORPORALITA (MIND-BODY CARE) –  உடல் மனம் ஆகியவற்றைப் பேணல்
  • CONNESSIONE (INTERCONNECTEDNESS) – ஒருங்கிணைந்த தன்மை

எதையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம்

மனிதனாகப் பிறந்தவன் இறக்கும் வரை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு எதைப் பற்றியும் அறிய வேண்டும் என்ற தணியாத ஆர்வம் இன்றியமையாதது. இந்த ஒரு குணத்தாலேயே உலகின் ஆகப் பெரும் மேதைகள் உலகோரால் புகழப் படும் அரிய சாதனைகளைச் செய்துள்ளனர். சில கேள்விகளைக் கேட்டு இந்த அரிய குணத்தை வளர்த்துக் கொள்ளலாம். ஏன் இப்படி இருக்கிறது? இது இல்லாமல் இன்னொரு விதம் இருக்க முடியுமா? அது எப்படி? என்பன போன்ற ஆர்வம் உந்தும் கேள்விகள் அவற்றிற்கான விடைகளைக் காண வழி வகுக்கும்.

சுதந்திரமாக எண்ணுதல்

கருத்துக்கள் பல மனதில் உதிக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக சோதனை செய்து பார்த்து அனுபவித்து உண்மையைக் காண வேண்டும்.

இது இப்படி இருக்குமானால்…. பின்னர்…. என்று இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்துப் பழகலாம்.

 புலன்களைக் கூர்மையாக்கல்

ஐம்புலன்களையும் கூர்மையாக எப்போதும் வைத்திருந்தால் அது தானாகவே மேதைத் தன்மையை உருவாக்கும்.

கண்களால் பார்க்கும் காட்சியை வர்ணித்தல், காதுகளால் கேட்கும் கீதத்தில் லயித்தல், பூவின் நறுமணத்தில் மெய்மறத்தல், தோலின் தொடும் உணர்ச்சி மூலம் இன்பம் அடைதல், உணவை ரசித்து ருசித்து உண்ணல் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிகழ் காலத்தில் வாழ்ந்து புலன்கள் தரும் உணர்வை உணர்வு பூர்வமாக அறிய ஆரம்பித்தால் மேதைத் தன்மை தானே மிளிரும்.

நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளல்

உலகில் நாம் பார்க்கும் பல விஷயங்களிலும் இருக்கும் நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கை பற்றி இரு விதமான ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள், முரண்பாடுகள் இவற்றை சற்று உற்றுக் கவனித்தால் வாழ்க்கையின் நிலையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

கலை, அறிவியல் மற்றும் முழு மூளை ஆற்றலைப் பயன்படுத்தல்

மனித மூளை அதிசயமான ஒன்று. அதை முழுதுமாகப் பயன்படுத்த முயல வேண்டும். கலை, அறிவியல், தர்க்கம், மனக் கண்ணில் பார்த்தல், கற்பனை என இப்படி நூற்றுக் கணக்கான வழிகளில் நமது மூளை இயங்க முடியும். உள்ளுணர்வு ஒரு புறம் இருக்க, ஒவ்வொன்றைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை அறிய ஆர்வம் கொண்டிருந்தால், மூளை ஆற்றலை  முழுமையாகப் பயன்படுத்தினால், மேதைத் தன்மை தானே ஒளிரும்.

உடல் மனம் ஆகியவற்றைப் பேணல்

மனம், உடல் ஆகிய இரண்டையும் பேணுதல் ஆரோக்கியமான வாழ்வையும் ஆரோக்கியமான சிந்தனை ஆற்றலையும் நல்கும். யோகா போன்ற மனப்பயிற்சி மற்றும் உடல்பயிற்சி தரும் கலையை நன்கு கற்று நம்மை நாமே பேணிக் காத்துக் கொண்டால் வாழ்நாளில் பல சாதனைகளைச் சாதிக்க முடியும் அல்லவா?

ஒருங்கிணைந்த தன்மை

ஏராளமான விஷயங்களைப் படிக்கிறோம். பலருடன் பழகுகிறோம். பல இடங்களில் பல காட்சிகளைக் காண்கிறோம். இவற்றை எல்லாம் இணைக்கும் ஏதோ ஒன்று இருக்கிறதே. அந்த ஒருங்கிணைந்த தன்மையை அவ்வப்பொழுது சிந்தித்து அதிலிருந்து உண்மைகளைப் பெற வேண்டும்.  இந்த இணையும் தன்மையால் தானே பிரபஞ்சமே இயங்குகிறது!

இப்படி இந்த ஏழு படிகளை முன்னேறுவதற்காக வகுத்தார் லியனார்டோ டாவின்சி.

அதன் மூலம் அவர் முன்னேறினார்.

பெரும் மேதையாக ஆனார்.

அவர் சுட்டிக் காட்டும் படிகளில் ஒவ்வொன்றாக ஏறினால் அனைவரும் மேதையாக ஆகலாம்.

ஐயமில்லை!

***

tailed with post on 20th july 2022

புத்தக அறிமுகம் – 4

உலக வலத்தில் ஒன்பது நாடுகள்!

ச.நாகராஜன்

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து!

2. சூரியன் முதலில் உதிக்கும் நாடு!

3. அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்!

4. லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் – அமெரிக்க டூர்!

5. அந்தமானைப் பாருங்கள் அழகு!

6. வெல்ல முடியாத நகரம் லண்டன்!

7. உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

8. குழந்தைகள் விரும்பும் நாடு, பெல்ஜியம்!

9. பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா

10. உலகின் உயரமான நாடு – நேபாளம்!

11. அலோஹா, ஹவாய், அலோஹா!

முடிவுரை

நூலில் எனது உரையாகத் தந்திருப்பது இது:

என்னுரை

நீங்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் போயிருக்கிறீர்கள், ஒரு பத்துப் பதினோரு வாரங்கள் எழுதுங்களேன், கொரானா பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் நல்ல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள ஆவலாய் இருக்கிறார்கள் என்று மாலைமலர் சி.இ.ஓ திரு ரவீந்திரன் அவர்கள் போனில் கூற, சிரமேற்கொண்டு அந்தப் பணியில் ஈடுபட்டேன்.

ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்களையும், காட்சிகளையும், வரலாறையும் சற்று விளக்க முடிந்தது.

இந்தக் கட்டுரைகள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 22-3-2022இல் ஆரம்பித்து 31-5-2022 முடிய மாலமலர் இதழில் வெளிவந்தன.

இந்த நல் வாய்ப்பை அளித்த திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை 

எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கட்டுரைகளைப் படித்து உடனுக்குடன் இன்னும் தொடர ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

எங்கு பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய எமது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

சான்பிரான்ஸிஸ்கோ.                                                                      ச.நாகராஜன்
1-6-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

Tags– மேதை, ஏழு படிகள்!

இலக்கணம் ஒரு கடல்; அதில் முதலைகள் உண்டு (Post No.11,122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,122

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கணம் பற்றி புலவர்கள் கருத்து

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 “ இலக்கியம் இல்லாமல் இலக்கணம் வராது ; எள் இல்லாமல் எண்ணெய் இல்லை என்பது போல.

எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்திலிருந்து இலக்கண ம் உண்டாகிறது” – பேரகத்தியம்

இலக்கியம்தான் முதலில் வந்தது. இலக்கணம் அதன் பின்னரே எழுந்தது. அப்படியானால் முதலில் எழுதியோர் இலக்கணமில்லாமல் எழுதினரா? ஆமாம் அப்படித்தான். பின்னர் இதைப் பார்த்து இதிலுள்ள பொதுவான அம்சங்களை வைத்து இலக்கணம் எழுதினர். அதற்குப் பின் வந்தவர்கள் அதைப் பார்த்து, அதில் எல்லோரும் பின்பற்றிய விதிகளை வைத்து இலக்கணம் கற்பித்தனர். அதை ஒட்டி எல்லோரும் பிற்காலத்தில் எழுதினர்.

இந்தக் கருத்து சம்ஸ்கிருதத்திலும் உளது. மேலும் இலக்கணம், இலக்கியம் என்பன லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களில் இருந்து பிறந்தவை!

உலகிலேயே இலக்கணத்துக்கு அதிக பெருமை சேர்த்தவர் இந்துக்களே. இப்போதுள்ள இலக்கண நூல்களில் உலகிலேயே  பழைய புஸ்தகம்  பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் நூலாகும். இது 2700 ஆண்டுக்கு முந்தியது. அவர்க்கு முன்னர் வாழ்ந்த 64 இலக்கண கர்த்தாக்கள் பெயர்களும் நமக்கு கிடைக்கின்றன

வேதபாட சாலைகளில் வேதம் பயில்வோருக்கு ஆறு துணைப்பாடங்களைக் கற்பிக்கின்றனர். அவற்றில் ஒன்று வியாகரணம் ; தமிழில் இலக்கணம் என்போம்.

வேத மாதாவின் வாய் (முகம்) இலக்கணம் (வியாகரணம்) .

இது பற்றிய விளக்கமான உரை, காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின்  தெய்வத்தின் குரலில் உள்ளது

2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் பரத முனிவர் ஸம்ஸ்க்ருதத்தில் பரத நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார். அவர் சொல்கிறார் :_

“எல்லா சாஸ்திரங்களிலும் சொற்கள் உள்ளன. அவற்றின் குறிக்கோள் ஒரு விஷயத்தைத் தெரிவிப்பதுதான் .ஆகையால் மனிதனின் பேச்சை  விட உயர்ந்தது எதுவுமில்லை. பேச்சுதான் எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகிறது” .

அவர் எழுதிய ஸ்லோகம்

வான்மயானீஹ  சாஸ்த்ராணி

வாணீஸ்தானி  ததைவ  ச

தஸ்மாத் வாசஹ  பரம் நாஸ்தி

வாக்கி ஸர்வஸ்ய காரணம்

நாட்யசாஸ்த்ர  15-3

அவருக்குப் பின்னர் வந்த தண்டி என்ற புலவர் பாடுகிறார் –

“எல்லா மக்களும் பேச்சு என்பதன் அருளால் தான் உலக நடப்புகளைச்  செய்கின்றனர் . அது உயர்ந்தோர் பலர் இயற்றிய இலக்கணத்தை ஒட்டி அமைகிறது “.

இதோ அவருடைய ஸ்லோகம் :–

இஹ சிஷ்டானுசி ஷ்டாநாம்

சிஷ்டாநாம் அபி ஸ ர்வதா

வாச்சாமேவ பிரசாதேன

லோகயாத்ரா ப்ரவர்த்ததே 

காவ்யாதர்ச , பாடல் 13

அவரே மேலும் அழுத்தம் திருத்தமாக , மிகவும் அழகாகச் சொல்கிறார் :

“சப்தம்/ஒலி Sound என்னும் ஒளி Light இந்த மக்கள் படைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியிராவிடில் மூன்று உலகங்களும் இருள் என்னும் அந்தகாரத்தில் மூழ்கிப் போயிருக்கும்”.

இதம் அந்தம் தமஹ கிருஷ்ணம்

ஜாயேத புவனத்ரயம்

யதி ச ப்தாஹ்வண்யம்  ஜ்யோதிர்

ஆஸம்ஸாரா ன்ன தீப்யதே

காவ்யாதர்ச , பாடல் 14

உலகில் இந்துக்கள் போட்ட பாட திட்டம் (Syllabus) போல எங்குமே காணமுடியாது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திரத்தில் பெண்கள் கற்கவேண்டிய 64 சப்ஜெக்ட்டு Subjects களை ஆய கலைகள் 64 என்று ஸம்ஸ்க்ருதத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அவற்றைத் தமிழ்ப் புலவர்களும் அப்படியே ஏற்றனர். அந்த 64 கலைகளில் இலக்கணமும் ஒன்று. உலகில் வேறு எந்த நாகரீகமும் இப்படி பாடதிட்டம் வகுத்தது இல்லை.

பாமஹ என்னும் கவிஞர் எழுதிய காவ்யாலங்கார நூலில் செப்புகிறார் :

சப்தஸ் சந்தோ பிதானா ர்த்தா

இதிஹாசஸ் ரயஹ கதாஹ

லோகாயுக்தி கலாஸ்சேதி

மந்தவ்யாஹ  காவ்யாகைர்வாசி

காவ்யாலங்கார 1-9

“சப்த என்னும் சொல்லால் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறார் பாமஹர் .கவிதை என்னும் துறை வளர காரணமாய் விளங்குவது ஸப்த /இலக்கணம் ஆகும். கவிதை வளரத் தேவைப்படும் பல பாடங்களில் இலக்கணமே முதலிடம் வகிக்கிறது”  என்கிறார் .

கவிதை எழுத விரும்புவோர் உடனே இலக்கணம் கற்பது இன்றியமையாதது என்று காவ்யாலங்கார நூலின் ஆறாவது அத்தியாயத்தில் முதல் நான்கு பாடல்களில் பாமஹர் நுவல்கிறார்.

4 பாடல்களின் பொருள் இதோ :-

இலக்கணம் என்பது பெரிய கடல் ; அதை நீந்திக்கடக்காத வரை சொற்களை வைத்து நகைகள்/ அணிகள் செய்ய இயலாது. அந்தக் கடலில் உள்ள தண்ணீர் சூத்திரங்கள் ஆகும்; சொற்கள் என்பன நீர்ச் சுழல் போன்றவை  .மனப்பாடம் செய்து, தக்க வைக்கும், நினைவாற்றல் கடற்படுகை ஆகும். உணாதி கணங்களும் தாது பாடமும் முதலைகள்; கவனமும் புரிதலும் பெரிய கப்பல்கள். இப்பேற்பட்ட கடலின் கரை படிப்பாளிகளுக்கு மட்டுமே தெரியும். அடி மக்குகளோ இதைப் புறக்கணிப்பர் ; மற்ற  சாஸ்திரங்களை யானை போல அனுபவிப்பர். பாடல்களை இயற்ற விரும்புவோர் நேரடியாக இலக்கணத்தைக் கற்க வேண்டும் மற்றவர்களின் பலத்தைச் சார்ந்து நிற்கக் கூடாது.”

சூத்ராம் பஸாம் பதாவர்தம்

பாராயண ரசாதலாம்

தாதூணாதி கண க்ராஹம்

த்யான க்ரஹ ப்ருஹத் ப்லவாம்

தீரைர் ஆலோகித ப்ராந்தம்

அமெதோபிர் அஸூயிதாம்

சதோபபுக்தம்  ஸர்வாபிர்

அந்யவித்யாகரேனுபிஹ க

நா பாரயித்வா  துர்கதாம்

அ மும் வ்யாகரணார்ணவாம்

சப்த ரத்னம் ஸ்வயம் கம்யம்

அலங்கர்து மாயம் ஜன ஹ

தஸ்ய சா திகமே யத்னஹ

கார் யஹ காவ்யம்  விதித்ஸதா 

பர ப்ரத்ய யதோ யத்து

க்ரியதே தேன  கா ரதிஹி

–காவ்யாலங்கார 6-1/4

SOURCE BOOK- Paniniyan Influence on Sanskrit Poetics, Shrutidhara Chakravarty, Pratibha Prakashan, Delhi, 2008 (with my inputs)

தொடரும் …………………………………………………………


இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய …

https://tamilandvedas.com › இலக்…

26 Jul 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). agastya-in-london. Agastya in London V and A Museum.

—Subham —-

TAGS– இலக்கணம் ,புலவர்கள் கருத்து, கடல்,  முதலைகள்

ஞான சீன மொழிகள்-99 (Post No.11,121)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,121

Date uploaded in London – 20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சீனாவின் பெரும் தொழிலதிபரான செல்வந்தர் “ஜாக் மா” கூறுகிறார்:-

நீங்கள் குரங்கின் முன்னால் வாழைப்பழங்கள் மற்றும் நிறைய பணம் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தை தான் எடுக்கும், பணத்தை அல்ல.ஏனென்றால் அந்த பணத்தால் நிறைய வாழைப்பழங்கள் வாங்க முடியும் என்பது அந்த குரங்குக்கு தெரியாது.

அதேபோல், உண்மையில் இன்று இந்திய மக்கள் தங்கள் தனிப்பட்ட சுயநலன்களை நிறைவேற்றவும், தேசிய பாதுகாப்புக்கும் இடையே தேர்வு செய்யவும் கேட்டால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட சுயநலன்களை தான் தேர்வு செய்வார்கள். தேசம் பாதுகாப்பாக இல்லை என்றால் அவர்களின் தனிப்பட்ட நலன்களின் மூட்டையை எங்கே கொண்டு செல்வார்கள் என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது.

இந்த நாட்களில் இந்தியாவில் இதுபோல பல முரண்பாடான போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன :-ஜாக்மா

————————————-

சீனா தொழிலதிபர் ஜாக்மா இந்தியாவை பற்றி சொன்னது நூறு சதவீதம் உண்மை.

#முதல்:-

இந்தியா ஒரு ஏழை நாடு எனவே புல்லட் ரயில் தேவையில்லை.

ஆனால்,

மில்லியன் கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பல ஆண்டுகளாக உபசரித்துவரும் அளவுக்கு இந்தியா பணக்கார நாடு!

#இரண்டாவது:-

வக்ஃபு வாரியம் மற்றும் கிருஸ்தவ சபைகள் சார்பாக வாதிட நாட்டின் மிக விலையுயர்ந்த ஐம்பத்தாறு வழக்கறிஞர்கள். ஆனால், கோயில்கள் சார்பில் வாதிட வக்கீல் பராசரன் மற்றும் சுப்பிரமணிய சுவாமி என இருவர் மட்டுமே !!

#மூன்றாவது:-

நாட்டில் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு உள்ளது.

ஆனால், பெருகிவரும் மக்கள் தொகைக்கு எதிரான போராட்டத்தை எப்போதாவது பார்த்தீர்களா ???

#நான்காவது :-*

நகைச்சுவை.

என்னவென்றால்,

2 குழந்தைகளை மட்டுமே கொண்டவர்கள் வரி செலுத்துகிறார்கள்.

ஆனால், மானாவாரியாக 7-8 குழந்தைகளைக் கொண்டவர்கள் மதத்தின் பெயரால் சிறுபான்மை என காட்டி மானியங்களை எடுத்துக்கொள்கிறார்கள் !!!!

மேற்கூறிய விஷயங்களை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், ஆனால், இது நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது !!!

“இன்னும் ஒரு உண்மை”

இந்தியா பெரியது … ஹீரோக்களின் சுரங்கம். இன்னும் நம் மீது படையெடுத்து வந்த முகலாயர்களின்,பிரிட்டிஷாரின் அடிமை புத்திகள் ….. ஏன் ??

“ஏனெனில்..,

“ஒரு இந்து மன்னர் தன் தனிப்பட்ட எதிர்ப்பின் காரணமாக மற்றொரு இந்து அரசனிடமிருந்து விலகி முகலாயர்களை , பிரிட்டிஷாரை ஆதரிப்பதில் உறுதியாக இருந்தார்கள்”.

உதாரணமாக,14-ஆம் நூற்றாண்டில் சகோதரர்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே இருந்த பங்காளி சண்டையில் வீர பாண்டியனை வீழ்த்த அவரது சகோதரர் சுந்தர பாண்டியன் முகலாய சுல்தான் மாலிக்காபூரை ஆதரித்தார்.அதன் விளைவு பாண்டிய சாம்ராஜ்யமே அதோடு முடிவுக்கு வந்து முகலாயர்களால் மதுரை கைப்பற்றப்பட்டு பல ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டு இந்துக்களின் இரத்த வெள்ளத்தில் தமிழர் பூமியே நரக பூமியானது.

இன்றும் அதே நிலைதான்.மோடி இந்துத்துவாவை ஆதரிக்கிறார்.

ஆனால் அந்நிய சித்தாந்தங்களால் குழப்பமடைந்த இந்துக்கள் சிலர் இந்துத்துவாவை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்கள் .. !!!!

Xxx subham xxx

Tags-  ஜாக்மா, சீனா, சீன மொழிகள்

ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! (Post No.11,120)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,120

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

ச.நாகராஜன்

தனக்கு ஆர்வமுள்ள துறையில் பிரகாசிக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கு; ஜீனியஸாக ஆக முடியவில்லையே என்ற கவலை சிலருக்கு!

ஏதேனும் வழி இருக்கிறதா, எண்ணியதை அடைய?

இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி ரைகாவ்!

இவரது ஆய்வு ‘ரைகாவ் எஃபெக்ட்’ என்று அழைக்கப்படுகிறது.

டாக்டர் விளாடிமிர் ரைகாவ் என்பவர் ஒரு ரஷிய விஞ்ஞானி. மூளையியல் நிபுணர். (Dr Vladimir Raikov – Neuropshychologist)

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் மூளை பற்றிய ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார்.

தனது ஆய்விற்காக அவர் சில கல்லூரி மாணவர்களை அழைத்தார்.

அவர்களை ஆழ்ந்த ஹிப்நாடிஸ நிலையில் கொண்டு சென்று அவர்கள் உண்மையிலேயே மிகப் பெரிய ஜீனியஸ் என்று நம்புமாறு செய்தார்.

விளைவு அவர்கள் அப்படியே ஆனார்கள்.

இவர்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் வண்ண ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவர் என்பதை அவர் நம்பும்படி செய்யவே அவர் அற்புதமான ஓவியங்களைப் படைக்க ஆரம்பித்தார்.

ரைகாவ் கூறும் அடிப்படை வழிமுறைகள் இவை:

ஹிப்நாடிஸம் மூலமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒருவரைக் கொண்டு சென்று தான் எதுவாக ஆக விரும்புகிறாரோ அதை நம்பச் செய்வது முதல் வழி. (Hypnosis and Deep trance)

இரண்டாவது பூரண ஓய்வான நிலை அடைதல். (Relaxation)

தான் நினைத்ததை அடைய பூரண ஓய்வான நிலையை ஒருவர் அடைய வேண்டும். அதற்கு சில சுவாசப் பயிற்சி  முறைகள் உண்டு. மிக அமைதியான சூழ்நிலையில் வெளி உலக தொந்தரவு இல்லாமல் ஒருவர் இருக்க வேண்டும்.

அடுத்து அகக்கண்ணில் காணல் (Visualization)

ஆழ்ந்த ஓய்வான நிலையில் தனது ஆதர்சமான ஒருவரை ஒருவர் அகக்கண்ணில் பார்க்க வேண்டும். அது மொஜார்ட்டாக இருக்கலாம் அல்லது அவரது துறையில் மிக வல்லவராக இருக்கலாம். அவரை ஆழ்மனதில் நினைக்க ஆரம்பிக்கவே அவரது நடை உடை பாவனைகள் திறமைகள் அனைத்தும் வர ஆரம்பிக்கும்.

அடுத்து யோசனை கூறல் (Suggestion)

தனக்குத் தானே யோசனை கூறல் அடுத்த வழி. யோசனைகள் மூலம் வலுவான எண்ணங்களை உருவாக்க முடியும். அது நிபுணராக ஆக வழி வகுக்கும்.

ஆக்கபூர்வமாக எண்ணல் (Positive Thinking)

அடுத்து பாஸிடிவ் திங்கிங்  எனப்படும் ஆக்கபூர்வமான அணுகுமுறையும் எண்ணும் மனப்பான்மையும் ஜீனியஸாக ஆவதற்கான முக்கியமான வழிமுறையாகும். திட்டமிட்டபடி தனது நிலையை உயர்த்த அது சம்பந்தமான ஆக்க பூர்வமான அணுகுமுறை பற்றி எண்ணி தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை. (Belief)

தான் நினைத்த நிலையை அடைந்து விட்டதாகவே உறுதியாக நம்புதல் முக்கியமான ஒன்று. இதையும் பயிற்சி செய்து விட்டால் நிஜமாகவே ஒரு ஜீனியஸ் ஆகி விடலாம்.

இறுதியாக மாடலிங்  (Modeling).

தான் எப்படி ஆக வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்படியே ஆனதாக நினைத்து நடை உடை பாவனைகளை மேற்கொள்ளல்.

இந்த வழிமுறைகளை இதைப் பற்றிச் சிறிதும் நம்பாதவர்களுக்கும் ரைகாவ் சொல்லிக் கொடுத்தார்; பயிற்றுவித்தார்.

விளைவு அபாரமாக இருந்தது!

அனைவரும் ரைகாவின் நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு அதை ரைகாவ் எஃபெக்ட் என அழைக்க ஆரம்பித்தனர்.

இப்போது உளவியலாளர்கள் இதில் சில மாற்றங்களைச் செய்து அனவைருக்கும் பயிற்றுவிக்கின்றனர்.

சுய முன்னேற்றத்தை ஊக்குவித்துக் கற்றுத் தரும் பயிற்சியாளர்கள் இந்த அடிப்படையில் தமது பயிற்சி வகுப்புகளை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாமும் ஜீனியஸ் ஆக ஒரு வழி : – ரைகாவ் எஃபெக்ட்!

ரைகாவ் எஃபெக்ட் மூலமாக எதை எதை அடையலாம் என்பதற்கு ஒரு பட்டியலே இருக்கிறது.

தன்னம்பிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம்.

நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம்.

படைப்பாற்றலை அதிகரிக்கலாம்.

புது திறமை ஒன்றை தெரிந்து கொண்டு, வளர்த்துக் கொள்ளலாம்.

ஆக்க பூர்வமான அணுகு முறையை எதிலும் மேற்கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்களை அறவே அகற்றலாம்.

அன்றாட வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சி, திருப்தி நிலையை அடையலாம்.

ஆளுமைத் திறனைக் கூட்டலாம்.

கவலையை ஒழிக்கலாம்.

கவனத் திறனைக் கூட்டிக் கொள்ளலாம்.

சுய மரியாதையை அதிகரித்துக் கொள்ளலாம்.

ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட உயர் வாழ்வை அமைக்கலாம்.

நிதி நிலையில் மேம்படலாம்.

மொத்தத்தில் செயல் திறனை அதிகரித்து வெற்றியாளராகத் திகழலாம்.

***

tags-  ரைகாவ் எஃபெக்ட் ,

புத்தக அறிமுகம் – 3

நடந்தவை தான் நம்புங்கள்

(சிரிக்கவும், சிந்திக்கவும்)

ச.நாகராஜன்

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

  1. நடந்தவை தான் நம்புங்கள்! – 1                                1. கண்பார்வையற்றவரின் த்ரில்!                              2. ஒரு டி.வி.வேண்டுமே!                                       3. ஒரு ஆட்டிற்கு இவ்வளவு தீனியா?
  2. நடந்தவை தான் நம்புங்கள்!  – 2                              1. இரண்டு எதிர்மறை பதங்கள்                               2. வேலைக்கான அனுபவம்
  3. நடந்தவை தான் நம்புங்கள்! – 3                               1) 24 எழுத்தில் பதில்!                                          2) பார்வை இருந்தும் பார்க்காதவர்கள்                       3) பிகாஸோவின் ஓவியங்கள்
  4. நடந்தவை தான் நம்புங்கள்!  – 4                              1) கடவுளைக் காட்டு!                                           2) ஷூர்                                                          3) வக்கீலின் தவறும் டாக்டரின் தவறும்
  5. நடந்தவை தான் நம்புங்கள்!  – 5                               1) தோல்வி அடைந்த சர்வே!                                  2) அரசியல்வாதி யார்?                                         3) நரகம் பற்றிய விளக்கம்
  6. நடந்தவை தான் நம்புங்கள்! – 6                               1) அவ்விடத்து ஞானம்!                                        2) பயிற்சியின் மகிமை!                                        3) ஒரு கம்பி வயலினில் வாசிப்பு!
  7. நடந்தவை தான் நம்புங்கள்! – 7                               1) இரண்டு அருமையான மகன்கள்!                           2) அரைகுறை ஆங்கிலம் தெரிந்த போலிஷ்காரர்!
  8. நடந்தவை தான் நம்புங்கள்! – 8                               1) சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்                              2) உண்மையான காதலன்                                     3) அட, எருமையே!
  9. நடந்தவை தான் நம்புங்கள்! – 9                               1) அம்மாவை விட அதிகம் வயதான பெண்                 2) மிஷனரியை “வச்சு வாங்கிய” ஐயர்
  10. நடந்தவை தான் நம்புங்கள்! – 10                               1) தாடியின் நீளத்திற்குத் தக அறிவு!                              2) காலைப் பார்; பேரைச் சொல்லு!                              3) முகம் கழுவ ஒரு டாலர்: முடி வெட்டவும் அதே டாலர்!                                                     4) குதிரையும் கழுதையும்                                      5) கடவுள் கூட எட்டாத நிலை!
  11. நடந்தவை தான் நம்புங்கள்! – 11                               1) மாமியாரைக் கொன்று விட்டேன்!                           2) கிளியின் வயது என்ன?                                     3) கரைசலில் காசு கரையுமா?
  12. நடந்தவை தான் நம்புங்கள்! – 12                                1) கடவுளும் காமன்வெல்த்தும்                                2) பயிற்சி மாஹாத்மியம்!                                       3) வருத்தப்பட்டது உண்மை, ஆனால்…!                       4) யார் போக்கிரி?!
  13. நடந்தவை தான் நம்புங்கள்! -13                          மூன்று அம்மாக்கள்                                            1) ஜாக் வெல்ச்                                                  2) தாமஸ் ஆல்வா எடிஸன்                                   3) மணலில் விழுந்த பையன்
  14. நடந்தவை தான் நம்புங்கள்! – 14                        மூன்று விளையாட்டு வீரர்கள்                                 1) நீ பாதி; நான் பாதி, நண்பா!                                 2) 19 ஒலிம்பிக் மெடல் வென்ற ‘கவனக்குறைவு வியாதி’ கொண்ட வீரர்!                                                  3) ஸ்கோர் என்ன?
  15. நடந்தவை தான் நம்புங்கள்! – 15                                   1) தூக்க ஊக்கிகள்!                                             2) நகரக் காவலன்                                              3) நக்ஷத்திரங்களுக்கு நன்றி!                                  4) மூன்று நிபுணர்களின் ஆலோசனை
  16. நடந்தவை தான் நம்புங்கள்! – 16                              1) மனச்சாட்சியுடன் பயணம் செய்பவர்கள்                   2) அரை டிக்கட்டா, முழு டிக்கட்டா?                          3) டிக்கட் கலெக்டரின் பேச்சை சமாளித்த நண்பர்
  17. நடந்தவை தான் நம்புங்கள்! – 17                              1) உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!!            2) பெண்களிடம் பிடிப்பது என்ன?                              3) இரண்டு மனைவிக்காரனுக்கு என்ன தண்டனை?         4) எப்படி வண்ணக் கலவையை உருவாக்குகிறீர்கள்?       5) மாமியாருக்கு மறு பெயர் என்ன?
  18. நடந்தவை தான் நம்புங்கள்!  – 18                 விதவிதமான புத்திசாலிகள்                                                1) வக்கீலின் தர்ம சங்கடம்                                    2) ஸ்வீடன் மன்னருக்கும் தெரியாத விஷயம்                3) மூன்று கடித உறைகள்!
  19. நடந்தவை தான் நம்புங்கள்! – 19                 விதவிதமான பதில்கள்                                        1) ரோஜா மலரே, சண்டைக்காரி                              2) வஞ்சப் புகழ்ச்சி                                               3) அது தான் இல்லையே!                                      4) அழகான பேச்சு                                              5) ஜீரண சக்தி உள்ள டியூக்!
  20. நடந்தவை தான் நம்புங்கள்! – 20                              1) மார்க் ட்வெயினின் குடை                                   2) தனித்து விடப்பட்ட தீவில் செஸ்டர்னுக்குப் பிடித்த புத்தகம்!                                                         3) ஹெச்.ஜி.வெல்ஸின் கடைசி வார்த்தைகள்!                4) அம்மாவும் அப்பாவும்                                       5) சர்ச்சிலின் வார்த்தைகள்
  21. நடந்தவை தான் நம்புங்கள்! – 21                              1) திருமண கவுன்ஸலிங்!                                       2) ட்வெயினின் மனைவியின் கோபம்!                        3) பயனுள்ள வாக்கியம்!                                       4) கடவுளுக்கான மார்க்!                                        5) க்வீன் எலிஸபத்திற்குத் தேவையில்லாத புத்தகம்
  22. நடந்தவை தான் நம்புங்கள்! – 22                              1) ஜான் ட்ரைடனின் மனைவி                                 2) பெர்ஃபெக்ட் ஜெண்டில்மென்!                                3) மனைவியுடன் வாதாடுவது!
  23. நடந்தவை தான் நம்புங்கள்! – 23                               1) கல்லறை ‘கால்’கள்!                                         2) வீதியில் கூட்ட்ஃம்! வெலவெலத்துப் போன அதிகாரிகள்!                                                      3) ஜோதிடருக்கே ஜோஸ்யம்!                                   4) ஒரு உண்மையான ஜோஸ்யக் குறிப்பு
  24. நடந்தவை தான் நம்புங்கள்! – 24                              1) விவேகானந்தரை மிரட்டிய இளம் பெண்கள்!               2) முட்டாள்களைப் பார்ப்பது முதல் முறையல்ல!           3) ‘நெட்’டைப் பயன்படுத்தத் தடை                             4)  கணிதப் பேராசிரியரின் வாக்கியம்!
  25. நடந்தவை தான் நம்புங்கள்! – 25                              1) கணவனும் மனைவியும் ஒருவரே!                         2) உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?       3) உனக்கு நஷ்டம்                                               4) கல்லறையும் நாடும்                                          5) ஒரு டெமாக்ரட்டும் ஒரு ரிபப்ளிகனும்!
  26. நடந்தவை தான் நம்புங்கள்! – 26                              1) கூடுதலாக வந்த நாணயங்கள்!                             2) ஒரு அணாவுக்கு இருவர் எடை பார்ப்பது எப்படி?         3) மொழிக் குழப்பம்
  27. நடந்தவை தான் நம்புங்கள்! – 27                              1) கொசுக்கள் பற்றிய புள்ளி விவரம் தேவையா?           2) மெஜாரிட்டியும் லாஜிக்கும்!                                   3) டீயே மதுரம்!                                                 4) டைம் அண்ட் ஸ்பேஸ்                                      5) பெர்னார்ட் ஷா ஒரு இசைப் பிரியரா?                      6) டிக்‌ஷனரியை ஜான்ஸன் தொகுத்தது எப்படி?

முடிவுரை

நூலில் நான் தந்திருக்கும் முன்னுரை இது:

முன்னுரை

மாபெரும் மேதைகளின் வாழ்விலிருந்து பல முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சிலரது புத்திசாலித்தனம் அவர்களது பேச்சில் மின்னும்; சிலரது கிண்டலும், கேலியும், நையாண்டியும், நகைச்சுவையும் அவர்களது சொற்களில் ஒளிரும்.

மக்களிடையே பிரபலமானவர்களது செயல்களும் சுவையான சம்பவங்களும் பலராலும் தொகுக்கப்பட்டு வழி வழியாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சில சமயங்களில் மேதைகளையும் அறிஞர்களையுமே சாமான்யர்கள் மடக்கி விடுவதுமுண்டு.

அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் சில சுவையான சம்பவங்களிலும் நகைச்சுவை நன்கு பரிமளிக்கும்!

இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களைத் தொகுத்து வைத்துள்ளேன். நெட்டிலும், பல தமிழ், ஆங்கில இதழ்களிலும், புத்தகங்களிலுமிருந்து தொகுக்கப்பட்டவை இவை.

இவற்றைத் தமிழில் தர வேண்டுமென்ற நோக்கத்தில் ‘நடந்தவை தான் நம்புங்கள்’ தொடரை லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களின் www.tamilandveads.comஇல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்தேன்.

நூறுக்கும் குறைவான சம்பவங்களே இந்தத் தொடரில்  தரப்பட்டுள்ளது. இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

தொடரை உற்சாகமாக அனைவரும் வரவேற்றனர்.

இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும், படித்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தத் தொடரை நூல் வடிவில் வெளியிட முன்வந்த  Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                   ச.நாகராஜன்

11-7-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

சுவையான சமண மத உவமைகள்- கர்ம வினை என்ன செய்யும்? (Post No.11,119)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,119

Date uploaded in London – –    19 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஒருவன் செய்த செயல்கள் என்ன செய்யும் என்பதற்கான இந்துமத உவமையை  திருவள்ளுவர் அளித்தார்.

புத்தமத உவமையை கவுதம புத்தர் அளித்தார்.

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.- தம்மபதம் 1,2

XXX

மஹாவீரர் முதலிய சமண சமய தீர்த்தங்கரர்கள் அளித்த செய்திகளை சமண மதத்தினர் அர்த்தமாகதி மொழியில் செய்யுட்களாகத் தொகுத்து வைத்துள்ளனர்.அவற்றைக் காண்போம்.

(ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள் பிராகிருத மொழியின் எந்த வகையையும்  எளிதில் புரிந்து கொள்ளுவார்கள். அது கொச்சைமொழி; அதாவது பேச்சு வழக்கு. தமிழிலும் பிராகிருதம் உண்டு. பழந்தமிழ்  இலக்கியங்கள் செம்மொழி.;  இப்பொழுது வரும் தமிழ் நாவல்கள், கதைகள் பிராகிருதம் போன்ற கொச்சைத் தமிழ் மொழி .)

தேணே ஜஹா ஸந்திமுகே  கஹீயே

ஸகம்முணா கிஞ்சஇ  பாவகாரீ 

ஏவம் பயா பேச்ச இஹம் ச லோயே

கடா ண கம் மாண ந மோக்கு அத்தி

பொருள்

வீட்டில் கன்னம் வைத்து திருடும் திருடன் எப்படி அவன் அந்த கன்னத்தா லேயே அழிவானோ அதே போல ஒருவன் செய்த தீ வினையாலேயே அவன் அழிவான் . அவ்வாறே ஒருவர் செய்த கர்மம்/ வினைகள் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் அவரைத் தொடர்ந்து வரும் ; தப்பிக்கவே முடியாது.

இந்த ஸ்லோகத்துக்கு உரை/ வியாக்கியானம் எழுதிய தேவேந்திரா , நம் மனக் கண் முன்னர், இரண்டு காட்சிகளை வைக்கிறார்.

( வீட்டின் சுவரில் ஓட்டை போட்டுத் திருடுவதைக் கன்னம் வைத்தல் என்பர். இதுபற்றிய விவரங்களை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்ரகர் என்பவர் மிருச்சகடிகம் என்னும் நாடகத்தில் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார். அதை பண்டித கதிரேச செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்று தமிழாக்கம் செய்துள்ளார். அதில் திருட்டு நூல் பற்றிய பல சுவையான விஷயங்கள் வருகின்றன. திருடர் கடவுளான முருகனை அவன் வழிபட்டுவருவதும் , திருடப் போகும் வீட்டின் சுவரைப் பார்த்துவிட்டு அதற்குத் தக்க வடிவத்தை ஆராய்ந்து எடுத்து, ஓட்டை போடுவதும் வருகிறது. எந்தெந்த சுவருக்கு என்ன என்ன வடிவம் சிறந்தது என்பதை அந்த நூல் விளம்புகிறது. திருடன் கூட ஒரு கலைஞன் ; வீட்டிற்குத் தக்க தாமரை, அல்லது பறவை அல்லது மிருகம் வடிவில் ஓட்டை போட்டுத் திருடுவான்.)

xxx

தேவேந்திரா எழுதிய உரை சொல்வதாவது —

திருடர்கள் முதலில் கால்களைக் கன்னம் (ஓட்டை) வழியாக நுழைப்பர்.. சப்தம் கேட்டு வீட்டுக்காரர் வந்துவிட்டால் அவர் அவன் கால்களைப் பிடித்து இழுத்து யார் அவன் என்பதைக் காண முயல்வார். அதே நேரத்தில் அவன் போடும் கூச்சலைக் கேட்டு அவனுடைய கூட்டாளி அவன் தலையைப் பிடித்து இழுப்பான். அந்த நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து மண்ணுக்குள் புதைந்து திருடன் உயிர் இழப்பான்.

இரண்டாவது  காட்சி

ஒரு திருடன்,  வீட்டின் சுவரில் ஒரு சிறிய அழகான சித்திரம் வரைந்து கன்னம் வைத்து வீட்டிற்குள் நுழைந்து திருடிவிட்டுப் போகிறான். மறுநாள் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் செய்தி பரவிவிடுகிறது. அவர்கள் எல்லாரும்  திருடன் போட்ட சித்திரக் கன்னத்தைப் பார்த்து வியக்கின்றனர். எவ்வளவு அழகான வடிவத்தில் கன்னம் வைத்தான் என்பர் சிலர்; அட, இத்தனை சிறிய ஓட்டைக்குள் அவன் உடல் எப்படி நுழைந்தது என்று வியப்பர் மற்றும் சிலர். நகர காவற்காரரும் திருடனைப் பிடிக்க, தடயம் இருக்கிறதா என்பதைக் காண அங்கு வருவார்கள். அதே நேரத்தில் திருடனுக்கும் தன் திறமை பற்றி ஊர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும் ஆசை பிறந்து அங்கே வருகிறான்.

ஒவ்வொருவர் விமர்சனம் செய்யும்போதும் அவன் முக பாவம் மாறுபடுகிறது. இதை எல்லாம், ஊர்க் காவலர்கள் (போலீஸ்) பார்த்து விடுகின்றனர். ஒருவர் இத்தனை சிறிய ஓட்டைக்குள் அவன் உடல் எப்படித்தான் புகுந்ததோ என்று விமர்சிக்கும்போது, திருடனும் தன் உடலைத் தானே அளந்து, வியந்து மகிழ்கிறான். போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து உதைத்தபோது அவன் திருடியதை ஒப்புக்கொள்கிறான்  .

இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள் என்கிறார் உரைகாரர்.

இதனால்தான் திருட்டு முழி முழிக்கிறான் பார் என்ற வசனத்தையும், தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற வசனத்தையும் தமிழர்கள் அடிக்கடி பயன்படுத்துவர்.

XXX

இன்னும் ஓரிரு உவமைகளைக் காண்போம் :

ஜஹா மஹாதலாகஸ்ய ஸன்னி ருத்தே  ஜலாகமே

உஸ் சி ஸணா யே தவணா யே கமேண ம்  ஸோ சணா பவே

ஏவம் து ஸஞ்ஜயஸ்ஸா வி  பாவ கம்ம நிராசயே

பாவ கோடீ ஸஞ்சியம் கம்மம் தவஸா நிஜ்ஜ ரிஜ்ஜயி

பொருள்

ஒரு பெரிய ஏரிக்குள் வரும் தண்ணீர் நின்று போனவுடன் (கோடை காலத்தில்) ஏரியிலுள்ள நீரைப் பயன்படுத்துவதாலும், வெய்யிலில் ஆவியாவதாலும் நீர் வற்றிப் போகும். இதே போல கோடிக்கணக்கான பிறவிகளில் ஒரு சந்நியாசி சேர்த்துவைத்த கர்ம வினைகள் யாவும் புதிய கர்மம் செய்யாததால் அழிந்து போகும்.

(இங்கு கர்ம வினைகள் தண்ணீருக்கும், வற்றிப்போவது ஒருவர் செய்யும் தவத்துக்கும் உவமையாக வருகின்றன)

xxx

அடுத்த பாடலில் சுரைக்காய் உவமை, வேர் அற்றுப்போன மர உவமைகள் வருகின்றன..

வேர் அழிந்துவிட்டால், என்னதான் தண்ணீர் ஊற்றினாலும் மரம் வளராது. ஆசை என்னும் மோகம் அழிந்த பின்னர் கர்மங்கள் / வினைகள் துளிர் விடா.

ஒரு காய்ந்த சுரைக் காய் நீரில் மிதக்கும். அதன் மீது மண் படிந்து கனம் ஆகிவிட்டாலோ அது தண்ணீரின் அடிமட்டத்துக்குப் போய்விடும்.. ஒருவர் கர்ம வினைகள் என்னும் மண் படியப்  படிய  கீழ் பிறப்புகளை அடைவர். மண் அடுக்குகள் நீங்கினால் எப்படி சுரைக்குடுக்கை எப்போதும் நீர் மீது மிதக்குமோ அவ்வாறே கர்மவினைகள் விடுபட்டால், சித்தர்கள் வசிக்கும் சித்த சீலாவுக்கு ஆன்மா போகும். மீண்டும் பிறவி ஏற்படாது .

இவற்றைப் படிக்கும்போது, விவேக சூடாமணியில் ஆதி சங்கர் சொல்வதையும் , பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வதையும் நம் மனம் ஒப்பிட்டுப் பார்க்கும்.

புத்த, சமண, சீக்கிய மதங்கள் , இந்துக்கள் சொல்லும் கர்ம வினைக் கொள்கையை அப்படியே ஏற்கின்றன. யூத , கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் இவற்றை ஏற்பதில்லை. அவர்களுக்கு கர்மா பற்றியோ மறு பிறப்பு பற்றியோ தெரியாது .

–சுபம் –

Tags-  சுவையான, சமண மத, உவமைகள், கர்ம வினை,  கன்னம் வைத்தல், கர்ம வினை,

TEACHER- STUDENT JOKES; Not Easy to be a Teacher! ( Post No.11,118)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,118

Date uploaded in London – 19 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-98

Ambani : ” If I start driving my car at sunrise, I will not be able to cover half of my estate properties even by sunset “

Sardarji : ” Even I had such a useless car but I sold it.. “

XXX

*Teacher:* ”Construct a sentence using the word “sugar”

*Pupil:* ”I drank tea this morning.”

*Teacher:* ”Where is the word sugar.”

*Pupil:* ”It is already in the tea..!!”

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER*: Our topic for today is Photosynthesis.

*TEACHER* : Class, what is photosynthesis?

*Student*: Photosynthesis is our topic today.

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : John is climbing a tree to pick some mangoes. ( Begin the sentence with Mangoes)

*Student* : Mangoes, John is coming to pick you…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : What do you call mosquitoes in your language?

*Student*: We don’t call them, they come on their own…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : Name the nation, people hate most

*Student*: Exami-nation…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : How can we keep our school clean?

*Student*: By staying at home…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : One day our country will be corruption free. What tense is that??

*Student*: Future impossible tense…

*AND THE STRUGGLE CONTINUES!!!!!

XXX

God Bless Our, Teachers 😂😂

Tags- ஞானமொழிகள்-98

விநாயக் தாமோதர் சவர்கார்! (Post No.11,117)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,117

Date uploaded in London – –    19 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

(சாவர்க்கரின், அரிய படங்கள், லண்டன் பல்கலைக்கழக நூலக புஸ்தகங்களிலி ருந்து எடுக்கப்பட்டன.)

விநாயக் தாமோதர் சவர்கார்!

ச.நாகராஜன்

இந்தியாவில் ஹிந்துத்வத்தை வலியுறுத்திய மாபெரும் மனிதர் விநாயக் தாமோதர் சவர்கார்.

காங்கிரஸை மிக கடுமையாக எதிர்த்ததால் அவரை சுதந்திரத்திற்குப் பின்னால் வந்த காங்கிரஸ் அரசு சரியாகக் கண்டு கொள்ளவில்லை.

மஹாத்மா காந்திஜியின் அஹிம்ஸை கொள்கையை அவர் ஆதரிக்கவில்லை. வலிமையாக எதிர்த்தார்.

காந்திஜி கோட்ஸேயால் கொலை செய்யப்பட்டவுடன், சவர்கார் மும்பையில் அவர் இருந்த வீட்டில் கைது செய்யப்பட்டார்.

ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் அவருக்கும் காந்திஜி கொலைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. விடுதலையானார்.

1883ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நாசிக் அருகில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் மராத்திய சித்பவன் பிராமண குடும்பத்தில் சவர்கார் பிறந்தார்.

1903ஆம் ஆண்டு மித்ர மேளா என்ற ஒரு புரட்சி இயக்க சங்கத்தைத் தன் சகோதரருடன் சேர்ந்து அவர் ஆரம்பித்தார். பிரிட்டிஷ் ஆட்சியை அப்புறப்படுத்தி ஹிந்து கௌரவத்தைக் காக்க வேண்டும் என்ற கொள்கையில் பிறந்தது இந்த இயக்கம்.

மக்களின் ஆதரவை அவர் வெகுவாகப் பெற்றார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.

தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டவுடன் அவரது 28ஆம் வயதில் 1911 ஜூலை 4ஆம் தேதி அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டார் அவர்.

அங்கு மாடு போல செக்கு இழுக்க வைக்கப்பட்டார்.

இன்னும் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தார்.

1924ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி ரத்னகிரியை விட்டு அகலக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மக்களிடம் எழுச்சி ஊட்ட அவர் ஏராளமான கட்டுரைகளை எழுதினார்; கூட்டங்களை நடத்தினார்.

ஹிந்து மஹா சபா என்ற மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்தார். பல்லாயிரக் கணக்கில் அவரது பேச்சைக் கேட்க மக்கள் அவரது கூட்டத்திற்குத் திரண்டு வந்தனர்.

1948ஆம் ஆண்டு ஜனவரியில் நாதுராம் கோட்ஸேயால் காந்திஜி சுடப்பட்டவுடன் அந்தக் கொலையில் இவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அவர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்வதற்கு முன்பு ஜனவரி 17, 1948 இல் நாதுராம் கோட்ஸே சவர்காரின் ஆசிர்வாதம் பெற அவர் இல்லம் சென்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் தீவிர விசாரணையிலும், அவரது நெருங்கிய நண்பர்களுடனான அவரது  உரையாடல்களிலும் ஒரு போதும் அவர் காந்திஜி கொலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டதில்லை என்பது உறுதியானது.

மக்களே பூரண அஹிம்சை என்ற கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது முடிந்த முடிவான கருத்தாக இருந்தது.

1963ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் அவரது மனைவி யமுனாபாய் மறைந்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் தனது மரணத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்.

ஆத்ம ஹத்யா ஆனி ஆத்ம சமர்பண் என்ற தலைப்பில் சஹ்யாத்ரி என்ற மராத்தி மாத இதழில் ஜூலை 1964இல் ஒரு கட்டுரையை அவர் எழுதினார்.(Aatma hatya aatma samarpan – Suicide and self-sacrifice)

அந்தக் கட்டுரை அற்புதமான ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தன்யோஹம் தன்யோஹம் கர்தவ்யம் மே ந வித்யதே கிஞ்சித்

தன்யோஹம் தன்யோஹம் ப்ராப்தவ்யம் சர்வமத்யா சமர்பணம்

“Blessed am I, Blessed am I, I know of no duty now,

Blessed am I, Blessed am I, I have fulfilled what I wished to achieve”

தன்யனானேன், தன்யனானேன், எனக்கு ஒரு கடமையும் இப்போதில்லை

தன்யனானேன் தன்யனானேன் நான் எதை அடைய வேண்டும் என்று விரும்பினேனோ அதை அடைந்து விட்டேன்.

இந்தக் கட்டுரையில் குமாரில பட்டர், சைதன்ய மஹா பிரபு, த்யானேஸ்வர், சமர்த்த ராமதாஸர், ஏகநாத், துகாராம் ஆகியோரின் இறுதியை அவர் விவரித்து எப்படி அவர்கள் தங்கள் ஆத்ம சமர்ப்பண மனோபாவத்துடன் தங்கள் உடலை உகுத்தார்கள் என்பதை விவரமாகத் தெரிவித்திருந்தார் அவர்.

ஆத்ம சமர்ப்பணம் என்ற கருத்து வந்தவுடன் அவர், உணவு உண்பதை நிறுத்தி விட்டார். அவருக்கு ஜீரணக் கோளாறுக்கான மருந்துகள் தரப்பட்டிருந்தன. அதையும் எடுக்க மறுத்து விட்டார்.

நாளுக்கு நாள் உடல் பலஹீனமாயிற்று. 1966இல் பிப்ரவரி மாதத்திலிருந்து அவர் வழக்கமாக அருந்தும் தேநீரையும் அருந்தவில்லை.

1966, பிப்ரவரி 24ஆம் நாள் அவர் உடல் நிலை மிக மோசமாக ஆனது.

26ஆம் தேதி காலை சுமார் 8.30க்கு எழுந்த அவர் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். கீமாடியிலிருந்து ழே இறங்கி வந்தார். அங்கு அவரது மகண் விஸ்வாஸ், மருமகள் சுந்தர், மகள் ப்ரபாத், மாப்பிள்ளை மாதவராவ் சிப்லுங்கர் பேரக் குழந்தைகள் விதுலா, மாதுரி ஆகியோர் கவலையுடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

11.10 மணிக்கு அவரது ஆவி பிரிந்தது.

சவர்கார் ஒரு நாத்திகர்.

தனது உயிலில் அவர் பல கருத்துக்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

தன் மறைவை ஒட்டி ஒரு ஹர்த்தாலோ அல்லது கடைகள் மூடப்படுதலோ கூடாது என்றும் மின்சார மயானத்தில் தன் உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், (10ஆம் நாள், 13ஆம் நாள் உள்ளிட்ட) எந்த ஒரு இறுதிச் சடங்கும் நடத்தப்படக் கூடாது என்றும் வேத மந்திரங்கள் மட்டும் முழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

.

சவர்கார் சதனில் அவரது உடல் மால 4.30 மணியிலிருந்து மறு நாள் மதியம் 3.30 மணி வரை வைக்கப்பட பல்லாயிரக்கணக்கானோர் வரிசையாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவர் உடலை ஊர்வலமாகக் கொண்டு செல்ல ராணுவ பீரங்கி வண்டி ஒன்றை அரசிடம் அனைத்து மக்களும் கோரினர். அரசு மறுத்து விட்டது.

பிரபல டைரக்டர் சாந்தாராம் உடனே தனது ஸ்டுடியோவிலிருந்து அதே போன்ற வண்டி ஒன்றைக் கொண்டு வந்தார்.

பிப்ரவரி 27ஆம் நாள் இறுதி யாத்திரை ஊர்வலம் கிளம்பியது. மும்பை வீதிகளின் வழியே சென்ற ஊர்வலம் மின் மயானத்தை அடைய  6 மணி நேரம் ஆனது.

50000 முதல் ஒரு லட்சம் பேர் வரை அதில் கலந்து கொண்டனர்.

ஸ்வாதந்த்ர்ய வீர் சவர்கார் அமர் ரஹே, ஹிந்து ராஷ்ட்ர கி ஜெய் என்றும் கோஷங்கள் தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்தன.

அவரது இறுதி விருப்பப்படி அவரது அஸ்தி சௌபாத்தி, தாதர் கடலில் கரைக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு ஆர்கனைஸர் தீபாவளி இதழுக்காக அவரை ஶ்ரீதர் தேல்கர் என்பவர் ஒரு பேட்டி எடுத்தார்.

அதில் அவர் மிக விவரமாகத் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

“சுதந்திரம் அடைந்தவுடன் நமது புரட்சி ஒரு முடிவுக்கு வந்து விட்டது.  நமது நாடு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டதைப் பார்க்க உயிரோடிருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன்.  உலகு உள்ள வரை இந்த புராதனமான தேசம் – நமது உயரிய பாரதவர்ஷம் – – தனது அனைத்துப் புகழுடன் விளங்கும்.”

என்ற இந்தக் கருத்துடன் அவர் பேட்டியை முடித்திருந்தார்.

வாஜ்பாயி பிரதமரானவுடனும் மோடி பிரதமரானவுடனும் இவருக்கு உரிய மரியாதைகள் தரப்பட ஆரம்பித்தன.

இந்திய அரசு 1970இல் அவர் நினவாக ஒரு விசேஷ தபால்தலையை வெளியிட்டது.

2002 இல் அந்தமான் நிகோபார் விமானநிலையத்திற்கு வீர் சவர்கார் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது.

2003இல் அவரது உருவப்படம் இந்திய பாராளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அந்தமானில் செல்லுலர் ஜெயிலில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹிந்து ராஷ்டிரத்திற்காகப் பாடுபட்ட வீர சவர்காரைப் பற்றிய சரித்திரத்தை ஒவ்வொரு ஹிந்து மகனும் அறிய வேண்டியது தலையாய கடமை அல்லவா?!

****

TAGS- சாவர்க்கர் , சவார்க்கர் , ஹிந்து ராஷ்ட்ரம், ஹிந்து மஹா சபை

புத்தக அறிமுகம் – 2

ஆலயம் அறிவோம்!

( இரண்டாம் பாகம்)

30 திருத்தலங்கள் யாத்திரை

ச.நாகராஜன்

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1)  புதுவை மணக்குளத்து விநாயகர் ஆலயம்

2) சூரியனார் கோவில்

3) திங்களூர்

4) திருவெண்காடு  

5) திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி 

6) திருக்கஞ்சனூர் 

7) திருநள்ளாறு

8) திருநாகேச்சரம்

9) ஸ்ரீ காளஹஸ்தி

  10) ஸ்ரீ சைலம்

  11) தஞ்சை பிரதீஸ்வரர்

  12) சீர்காழி

  13) திருவிடைமருதூர்

  14) மயிலை கபாலீஸ்வரர்

  15) திருவையாறு

  16) சிருங்கேரி ஸ்ரீ சாரதா தேவி

  17) கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி

  18) திருநின்றவூர்

  19) திருக்கருகாவூர்

  20) ஆஜ்மீர் புஷ்கரில் மணிபந்த் சக்திபீடம்

  21) கல்கத்தா காளி

  22) திருப்பரங்குன்றம்

  23) திருச்செந்தூர்

  24) பழநி

  25) திருத்தணி

  26) குக்கி சுப்ரமண்யர்

  27) திருமாலிருஞ்சோலை

  28) ஸ்ரீரங்கபட்டிணம்

  29) திருவள்ளூர்

  30) அஞ்சனா பர்வதம்,

வாரந்தோறும் இனிமையாக இதை ஞானமயம் ஒளிபரப்பில் வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றவர் திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன் அவர்கள்.

திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

நூலில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:

என்னுரை

ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

கொன்றைவேந்தனில் உள்ள 91 பாக்களில் இரண்டாவது பாடலில் ஔவையார் தரும் அன்புரை இது!

உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதியில் அவர் தரும் அறிவுரை இது – ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’.

இன்னும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பாடல்கள் தமிழில் ஏராளம்.

ஆலயம் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு ஆகியவற்றின் மையம். அதை வைத்தே நமது வாழ்க்கை சுழன்றது. சுழல்கிறது. சுழலப் போகிறது.

இந்திய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை எண்ணுக்கு அடங்காதது.

இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவு சால் நம் பாரத மக்கள்.

கன்யாகுமரியிலிருந்து கைலாயம் வரை உள்ள கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அன்பர்கள் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் தலம் தலமாக யாத்திரை மேற்கொண்டு அங்கு இருக்கும் சிறப்புகளை அறிந்து அவற்றை எங்கும் பரப்பி வந்தனர்; அருளாளர்கள் பல நூல்களின் வாயிலாக அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர்.

இப்படிப்பட்ட ஆலயங்கள் பற்றிய சிறப்புகளைச் சொல்வதற்கான அரிய வாய்ப்பு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்தது.

நிகழ்ச்சியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உள்ள அன்பர்கள் கேட்டனர்; பாராட்டினர்.

அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

ஞானமயம் நிகழ்ச்சியை நடத்தும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் திரு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

ஆலயம் அறிவோம் உரைகளை 2019 செப்டம்பர் இறுதியில் தொடங்கி தொய்வின்றி வாரந்தோறும் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இனிய குரலில் வழங்கியவர் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன். அவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

Facebook.com/gnanamayam மற்றும் YOUTUBEஇல் ஆலயம் அறிவோம் தொடரை வாரந்தோறும் கேட் பல அன்பர்களும் இந்த உரைகளை அப்படியே நூல் வடிவாக வெளியிட வேண்டும் என்று கூறவே இந்த நூல் இப்போது வெளி வருகிறது.

முதல் பாகத்தில் 30 திருத்தலங்கள் பற்றிப் பார்த்தோம். இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் அடுத்த 30 தலங்களைப் பற்றிய வியத்தகும் செய்திகளைப் பார்க்கப் போகிறோம்.

இதை வெளியிட முன்வந்த  Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

வாருங்கள், திருத்தலங்களுக்குச் செல்வோம்..

சான்பிரான்ஸிஸ்கோ                   ச.நாகராஜன்

23-6-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.

***

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-67 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11116)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,116

Date uploaded in London – –    18 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-67 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸ க்தம்  18-22  பற்றி இருத்தல்

ஸ க்தாஹா  3-25  பற்றுள்ள

ஸ கா 4-3 நண்பன் , தோழன்

ஸ கீன் 1-26 நண்பர்கள்

ஸ கே  11-41 ஓ  நண்பா

ஸ க் யுஹு  11-44 நண்பனுடைய

ஸகத்  கதம் 11-35  தழுதழுத்த குரலில்

ஸக ரஹிதம் 18-23 பற்றுதலின்றி

ஸங்கவர்ஜிதஹ 11-55 பற்றற்ற

ஸங்க விவர்ஜிதஹ  12-18 பற்றற்றவன்

ஸங்கம் 2-48 பற்று

ஸங்கஹ 2-47  பற்று

ஸங்காத் 2-62  பற்றிலிருந்து

ஸங்க்ராமம் 2-33 சண்டையை, போர்

ஸ சராசரம் 9-10 அசையும் பொருள், அசையாப் பொருள்

ஸ சேதஹ 11-51 மனத் தெளிவு

ஸ ச்சப்தஹ 17-26  ஸத் என்னும் சொல்

ஸஜ் ஐதே 3-28  பற்று  அடைதல்

ஸஜ் ஐந்தே  3-29 பற்று அடைகிறார்கள்

ஸததா யுக்தானாம் 10-10 நிலைபெற்ற உள்ளமுடையோர்        20 words

ஸததா யுக்தாஹா  12-1 நிலைபெற்ற மனத்தினராய்

ஸததம் 3-19  எப்போதும்

ஸதஹ 2-16 உண்மைப் பொருளுக்கு

ஸதி 18-16   ஏவம் ஸதி  இங்கனம் இருக்க

ஸத்  9-19 இருப்பு, இருத்தல்

ஸத்காரமான பூஜார்த்தம் 17-18  உபசாரம், வெகுமானம்,பூஜை இவற்றைக் கருதி

ஸத்யம் 10-4 உண்மை, வாய்மை

ஸத்வவதாம் 10-36  சாத்வீகரிடத்தில்

ஸத்வ ஸமாவிஷ்டஹ 18-10  சத்வ குணம் நிரம்பியவன்

ஸத்வ ஸம் சுத்திஹி  16-1 மனத்  தூய்மை

ஸத்வஸ்தாஹா 14-18 ஸத்துவ குணம் உடையோர்

ஸத்வம் 10-36  சத்வ குணம்

ஸத்வாத் 14-17  சத்துவத்திலிருந்து

ஸத்வானுரூபா 17-3 அவரவர் உள்ளத்துக்கு ஏற்றபடி

ஸத்வே 14-14  சத்வ குணம்

ஸத் அஸத் யோனி ஜன்மஸு 13-21 நல்லதும் கேட்டதுமான யோனிகளில் பிறப்பதற்கு

ஸதா 5-28   எப்போதும்

ஸத்ருசம் 3-33  ஒத்துப்போகும்

ஸத்ருசஹ  16-15 சமமான

ஸத்ருசி  11-12 ஒப்பாக சமமாக  40 words

ஸதோஷம் 18-48  குற்றம் உடையது

ஸத்  பாவே 17-26  உள்ளது என்ற பாவனை

ஸநா தனம்  4-31 எப்போதுமுள்ள, சாஸ்வதமான

ஸநா தனஹ 2-24  என்றுமுளது

ஸந்தஹ   3-13  சாதுக்கள்

ஸபத்னான் 11-34  எதிரிகளை

ஸப் த  10-6  ஏழு

ஸமக்ஷம்   11-42  பொதுமக்கள் உள்ள இடத்திலும்

ஸமக்ர ம்  4-23 முழுதும்

ஸம சித்தத்வம்  13-9  ஸம சித்தம்  , ஒரே பார்வை

ஸமதா 10-5  சம நிலை

ஸம தீதானீ  7-26  சென்றுவிட்டன, நடந்தன   52 words

கீதை சொற்கள் இன்டெக்ஸ் 67,

52 words are added from part 67 of Gita Tamil Words Index

Tags- Gita, Word Index 67