அறிவியல் அறிஞர் வாழ்வில்… 5 (Post No.11,261)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,261

Date uploaded in London – –    13 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அறிவியல் அறிஞர் வாழ்வில் …   5

ச.நாகராஜன்

7

பிரபல விஞ்ஞானியான ஜான் வான் நியூமேன் பற்றிய பிரபலமான துணுக்கு இது.

நியூமேனிடம் வந்த ஒருவர் ஒரு கணிதப் புதிரைக் கூறி அதற்கு உரிய விடையைத் தருமாறு வேண்டினார். தான் கூறுவது மிகவும் கடினமான புதிர் என்று நினைத்த அவர் நியூமேன் சற்றுத் திணறிப் போவார் என்று நினைத்தார்.

சிக்கலான கணிதப் புதிர் இது தான்.

தெற்கு திசையிலிருந்தும் வடக்கு திசையிலிருந்தும் இரு சைக்கிள் ஓட்டும் வீரர்கள் தங்கள் சைக்கிளை எதிரெதிராக ஓட்ட ஆரம்பித்தனர். அவர்களுக்கு இடைப்பட்டிருந்த தூரம் இருபது மைல்கள். அவர்களது வேகம் மணிக்கு10 மைலாக இருந்தது. அதே சமயம் ஒரு ஈ மணிக்கு 15 மைல் வேகத்தில் தெற்கு நோக்கிக் கிளம்பிய சைக்கிளின் முன் சக்கரத்திலிருந்து வடக்கு நோக்கி பறக்க ஆரம்பித்தது. பின்னர் அது வடக்கு நோக்கி வந்த சைக்கிளுக்குத் திரும்பியது. இப்படி மாற்றி மாற்றி அது பறந்து கொண்டே இருந்தது – இரண்டு சைக்கிள் வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வரை.

ஈ பறந்த மொத்த தூரம் எவ்வளவு?

இது தான் கேள்வி.

சாதாரணமாக இதை எப்படி கணக்கிட முடியும். முதலில் ஈ வடக்கு நோக்கி பறந்த தூரம், பின்னர் தெற்கு நோக்கி பறந்த தூரம் பின்னர் மூன்றாவதாக அது பறந்த தூரம் என்று இப்படி மாறி மாறி, இந்த இன்ஃபைனைட் சீரீஸைப் போட்டு கணக்கைச் செய்து முடிவைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இன்னும் ஒரு சுலபமான வழியிலும் இந்தக் கணக்கைப் போட்டு முடித்து விடலாம். இரண்டு சைக்கிள் வீரர்களும் சரியாகக் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து விடுவார்கள். ஆகவே ஈக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பறக்க முடியும். ஆகவே விடை 15  மைல்.

நியூமேனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது சற்றும் தயங்காமல் ஒரு வினாடியில் 15 மைல் என்று பதில் கூறி விட்டார்.

கேள்வி கேட்டவருக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய் விட்டது. பேந்தப் பேந்த முழித்த அவர், அசடு வழிந்தவாறே, “இது உங்களுக்கு முன்னமேயே தெரிந்த கணக்குப் புதிர் தானே! அது தான் உடனே விடை கூறி விட்டீர்கள்” என்றார்.

ஆனால் உடனேயே நியூமேன், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இதை இப்போது தான் கேட்கிறேன். இன்ஃபைனட் சீரீஸின் கூட்டுத்தொகையைப் போட்டுத் தான் சொன்னேன்” என்றார். (Von Neumann tolda :  “all I did was sum the infinite series”).*

8

பிரபல விஞ்ஞானியும் அறிவியல் புனைகதை எழுத்தாளருமான ஐஸக் அஸிமாவ் (Isaac Asimov)   1947ஆம் ஆண்டு பிஹெச் டி பெற பயோகெமிஸ்ட்ரியில் ஆய்வை மேற்கொண்டிருந்தார். அப்போது அவரை அஸ்டவுண்டிங் ஸயின்ஸ் ஃபிக்‌ஷன் பத்திரிகைக்கு ஒரு கதையைத் தருமாறு ஜான் கேம்ப்பெல் கேட்டார். (John Campbell at Astounding Scicence Fiction Magazine).

அதற்கு ஒத்துக் கொண்ட அஸிமாவ் ஒரு சிறுகதையை எழுதினார். அந்தக் கதைக்குப் பெயர் ‘தி எண்டாக்ரானிக் ப்ராபர்டீஸ் ஆஃப் ரீசப்லிமேடட் தியோடிமோலின்”. (“The Endochronic Properties of Resublimated Thiotimoline”).

 கற்பனையாக ஒரு கூட்டுப்பொருளை (fictitious compound)  கதைக்காக உருவாக்கிய அஸிமாவ், அதில் நீரைச் சேர்க்கும் முன்னரே அது கரைந்து விடுவதாக கதைக்காக “அள்ளி” விட்டிருந்தார். கதையில் அந்தக் கூட்டுப்பொருளுக்கான வரைபடங்கள், கிராப், பொய்யான புள்ளி விவரங்கள், அந்தப் புள்ளி விவரங்களை அதிகாரபூர்வமாக தருவதாக பொய்யான பல விஞ்ஞான பத்திரிகைகளின் பெயர்கள் ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

அவர் கேம்ப்பெல்லிடம்,” கதையைக் கொடுத்து விட்டேன். ஆனால் இதில் என் பெயரைப் போட வேண்டாம்” என்று கண்டிப்பாகக் கூறி இருந்தார்.

ஏனெனில் அவரது தொழிலை அவரே கிண்டல் செய்வது போல உள்ள ஒரு கதையை அவர் எழுதியதாகத் தெரிந்தால் அது அவரது ஆய்வுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதோடு பிஹெச்டி கிடைப்பதும் கஷ்டமாகி விடும் என்பது அவரது எண்ணம்.

கேம்ப்பெல் அதற்கு ஒத்துக் கொண்டார். சில  மாதங்கள் கழித்து பத்திரிகையில் அவரது கதை வெளியானது. ஆனால் அதில் அவர் பெயரும் வெளியாகிவிட்டது.

கேம்ப்பெல் அவரது பெயரைப் போடக்கூடாது என்பதை மறந்தே விட்டார்.

அஸிமாவ் தன் ஆய்வைச் சமர்ப்பிக்க வேண்டிய நாளும் வந்தது. அதை பரிசோதிக்கும் ஆய்வாளர்கள் முன் அவர் வந்து உட்கார்ந்தார்.

பல கேள்விகள் அவர் ஆய்வு சம்பந்தமாகக் கேட்கப்பட்டன. அப்படி கேள்வி கேட்ட பரிசோதகர்களில் ஒருவர் புன்சிரிப்புடன் தியோடிமோலின் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

நல்ல வேளையாக அவருக்கு பிஹெச்டி பட்டம் கிடைத்து விட்டது. அவரது கதையை நகைச்சுவையாக மட்டுமே பரிசோதகர்கள் எடுத்துக் கொண்டதால் அவர் பிழைத்தார்.

*

 tags- ஐஸக் அஸிமாவ், ஜான் வான் நியூமேன்

புத்தக அறிமுகம் – 55

அறிவியல் துளிகள் – பாகம் – 15

பொருளடக்கம்

என்னுரை

366. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 1

367. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 2

368. அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3

369. அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 1

370. அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 2

371. அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 3

372. விண்வெளி டிராமா – சீனாவின் ஸ்கை லேப் பூமியில் விழப் போகிறது!

373.மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!– 1

374.மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி – 2

375. இந்தியாவில் அமைக்கப்படும் உலகின் உயரமான சிலை!

376. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 1

377. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2

378. கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3

379. காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 1

380. காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 2

381.காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 3

382. இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1

383. இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 2

384. செயற்கை அறிவுடன் கூடிய நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 1

385. செயற்கை அறிவுடன் கூடிய நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2

386. வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1

387. வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 2

388. விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1

389.விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 2

390. எழுதினால் மனோவியாதி போகும்!

391. ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக் “கேட்கலாம்”!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பதினைந்தாம் பாகம் – எட்டாம் ஆண்டில் முதல் 26 வாரங்கள் வெளியான 366 முதல் 391 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்..

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி
பங்களூர்                                   ச.நாகராஜன்

14-5-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

Interesting Story of Prakrit Poet Haribhadra Suri (Post No.11,260)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,260

Date uploaded in London – 12 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 We have no biological records of Prakrit poet Haribhadra. We know from his writings that he obeyed the command of Jinabhata, an Acharya of the Sitambaras/ Svetambaras and he was the pupil of Acharya Jinadatta. He was the spiritual son of the nun Yaakini Mahattaraa.

The external sources give us some interesting information. Dr Jacobi has written about it.

Haribhadra was born at Chitrakuta, the modern Chitor, where he probably lived until his initiation. He was a Brahmin by caste and had mastered all the Brahminical learning. He is said to have been the family priest of King Jitaari or Jitasatru.

 Proud of his erudition he proclaimed that he would become the pupil of anyone whose proposition he could not understand and this vow was written on a golden plate he wore on his belly. Once a mast elephant having got loose and caused great havoc in the street , Haribhadra fled before him and climbed a Jain temple to save himself. At the sight of the sight of a Tirtankara, a Jain saint, he composed a verse to deride him. Next day he heard an old nun reciting a Gatha which baffled his understanding.

 The gaathaa was

Chakkidugam haripanagam panagam chakkeena kesavo chakkee

Kesava chakkee kesava duchakkee Kesey a chakkee ya

He asked her to explain its meaning, but she referred him to her guru. On his way to the guru, he passed by the temple and pronounced the same stanza, changing one word so that now it was in Jina’s praise. There he met Jinabhata suri, who promised to teach him after initiation. Haribhadra agreed and acknowledged Yaakini Mahattaraa as his spiritual mother.

 Later on he was so well versed in Jain Agamas, and his conduct was such that the guru appointed him as his successor. The scene of his later life as a monk seems to have been the neighbouring parts of Rajasthan and Gujarat.

 Haribhadra is a versatile and voluminous writer. Though tradition credits him with the authorship of 1400 prakaranas, only 27 works are available now. He tried various branches of literature. He wrote both in verse and prose in Sanskrit and Prakrit. They explained Jain tenets, refutations of the opponents doctrines. He wrote commentaries as well

 Source

Studies in Jain Literature, prof v m Kulkarni, Ahmedabad,2001

IMPORTANCE OF 12 TAMIL MONTHS-6 (Post No.1,259)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,259

Date uploaded in London – 12 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

11.MASI

Masi (maasi) is the 11th Tamil month. When the sun enters zodiacal sign Kumbha Rasi (raasi) Aquarius, the month begins.

Shivaratri (siva raatri) is the most important festival of this month. One day before the new moon day (amaavaasai) is the Mahashivaratri day, when Hindus go to Shiva temples all over India.

Another festival happens on the Full moon day of this month known as Maasi Magham. This is the day when the moon appears with Magha Nakshatra.

Every 12th year is celebrated as Mahaa Magham in Kumbakonam temple in Tamil Nadu. Kumbeswarar (Shiva) temple is visited by thousands of people on that day. Other temples join the festival by arranging procession of Gods. Lakhs of people take bath in the small tank known as Mahaamaga Kulam. King Krishnadevaraya’s visit to this event 500 years ago is in inscription.

In many places ,idols are taken to the river or sea and bathed. It is called Theerthavaari. Float festival (teppam in Tamil) happens in many temples.

Maasi Nilaa Paasi Padarum மாசி நிலா பாசி படரும் is a Tamil proverb which says the Purnima/ full moon day of the month is the brightest of all Pournamis. One can enjoy the moon light which even penetrates the green algae (paasi in Tamil) on the ground or ponds.

Hindu festival Holi, festival of colours, marking the beginning of Spring season, is celebrated, normally on Panguni Purnima day. But in 2023 it falls in Masi. (It is because in some calendars, the month begins on new moon day)

Kaama Dahanam (burning down of desire/sexual feeling by Shiva is observed during Maasi Magham or coinciding with Holi.

xxx

12.PANGUNI

The last zodiacal sign is Meenam (Pisces). When the sun enters Meena Raasi, Tamil month Panguni begins.

Sri Rama Navami (raama Navami), Telugu New Year day Ugadhi (yugaathi), Karadaiyan Nonbu (kaaradaiyaan) are some of the significant festivals celebrated in Panguni.

Panguni Uttiram (uththiram) day is full moon day of the month. In Chennai Kapaleeswarar temple, 63 Saivite saints/Naayanmaars are taken in procession. In fact, all Shiva temples celebrate it with special Pujas. Kanchi Kamakshi (kaanchi Kaamaakshi) amman Temple festival also attracts a big crowd.

Other important days of the month are Karaikal Ammaiyar (kaaraikaal ammaiyaar) Thiru Nakshatram and  Varaaha Jayanthi.

In general the spring and summer seasons are used by all the temples for Chariot Festival (Ratha Yaatraa) and Float (Teppam in Tamil) festival. The two sesaons coincide with at least four Tamil months: Masi, Panguni, Chithirai and Vaikasi. Village deity (Grama Devata) festivals follow the major festivals.

All Tamil names derive their names from Sanskrit months. In fact ,there is no Tamil word. They are all Tamilised Sanskrit words. Kanchi Paramacharya (kaanchi paramaachaaryaa1894-1994) has lectured on this topic.

Aaaradhanaa/Guru Pujai means memorial day. Thiru Nakshatram/Jayanthi means birth day.

Both the followers of Shiva and Vishnu celebrate such days.

All Purnima (Pournami or Full moon days) days are festival days for Hindus.

—subham—

Tags- Tamil months, Part 6, Masi, Panguni

பாரதம் பற்றிய பாரதியாரின் 6 மற்றும் 7வது பாடல் (Post No.11,258)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,258

Date uploaded in London – –    12 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் மற்றும் 7வது பாடல் : ஒரு பார்வை!

ச.நாகராஜன்

முந்தைய கட்டுரைகளின் தொடர்ச்சியாக தொடர் எண் 104லிருந்து தரப்படுகிறது.

எங்கள் நாடு என்ற பாடல்

104) உலகில் பெரிய சிகரத்தைக் கொண்ட என்றும் நிலைத்திருக்கும் மலையான இமயமலை எங்கள் மலை தான்! இது போன்ற ஒரு மலை புவியெங்கும் பார்த்தால் வேறு ஒரு மலையும் இல்லை.

105) இனிமையான அருமையான கங்கை நீரைக் கொண்ட கங்கா நதி எங்கள் நாட்டிலே தான் உள்ளது. இதன் மாண்புக்கு இணையாக உள்ள இன்னொரு நதி ஏது இந்தப் புவி மேல்?!

106) பல அரிய உபநிடத நூல்கள் எங்களது நூல்கள் தான்! இதில் ஒரே ஒரு நூலை எடுத்துக் கொண்டாலும் அதற்கு இணையான இன்னொரு நூல் கிடையவே கிடையாது.

107) பொன் போல் ஒளிர்கின்ற தேசம் எங்கள் பாரத தேசம். இந்த தேசத்தைக் கொண்ட எமக்கு இணையானவர் யாருமே இல்லை. இந்த தேசத்தைப் போற்றுவோம்.

108) ரதம் ஓட்டுவதில் அதிரதர் சிறந்தவர். அப்படிப்பட்ட அதிரதர்கள் அதிகம் உள்ளவர்கள் இந்த நாட்டில் மட்டுமே தான். (அதிரதர் என்பதை வாகனம் ஓட்டிகள், ஏன் விமான பைலட்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம், காலத்திற்குத் தகுந்தபடி!)

109) பெரிய மஹரிஷிகள் – மா முனிவர்கள் வாழ்ந்தபொன் நாடு இதுவே தான்.

110) கானங்களிலே சிறந்த கானம் நாரத மஹரிஷி பாடும் நாரத கானம் தான். அந்த நாரத கானம் நலம் தரும் கானம். அதைக் கொண்ட நாடு இது தான்!

111) இங்கு தீயவற்றை யாரும் நாடமாட்டார்கள். ஆனால் நல்லவை எங்கிருந்தாலும் யார் சொன்னாலும் அதை இங்குள்ளோர் நாடுவர். அப்படிப்பட்ட நல்லனவற்றை நாடும் நாடு இதுவே தான்!

112) ஞானங்களிலே பூரண ஞானமான ஆன்மீகத்தின் உச்சகட்ட ஞானத்தைப் பெற்றுள்ள நாடு இதுவே தான். இந்த ஞானம் பொலிந்திருக்கும் நாடு எங்கள் நாடு தான்!

113) புத்தர் பிரான் இங்கு தான் தோன்றினார். அவர் அருள் இந்த நாட்டிலே தான் பொங்கி வழிந்தது. அப்படிப்பட்ட நாடு இதுவே தான்!

114) பாரத நாடு இன்று நேற்று தோன்றிய நாடு அல்ல. பழம் பெரும் நாடு இது. இதற்கு ஈடு இணை என்று சொல்லக் கூடிய நாடு வேறு ஒன்றுமில்லை. இதைப் பெற்ற எமக்கு ஈடு யாரும் இல்லை என்று பாடுவோம்.

115) இன்னல் வருவது இயற்கை. அது வந்த போது அதைக் கண்டு பயப்பட மாட்டோம்.

116) வளங்கள் சுரண்டப்பட, அதனால் ஏழைகளாகி இனி  உறங்க மாட்டோம்; உயிரை விட மாட்டோம்.

117) சுயநலத்தால் உந்தப்பட்டு இழி தொழில்களைப் புரிய மாட்டோம்.

118) தாய்த் திருநாட்டிற்கு ஒரு ஆபத்து என்றால் ‘என்னால் முடியாது’வெ என்று கையை இனி விரிக்க மாட்டோம்.

119) கரும்பு, தேன், கனி, இனிய பாலும், கதலியும்,  எந்தக் காலத்திலும் இல்லை என்று சொல்லாமல் நல்கும் ஆரிய நாடு இதுவே தான். இதற்கு இணை உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்று ஓதுவோம்.

ஜயபாரத பாடல்

120) சேனை பலம் இல்லாமல், சிறப்பான சிந்தனையை மட்டுமே கொண்டு நூற்றுக் கணக்கான தேசத்தை வென்றவள் எங்கள் தாய். மறம் தவிர்த்த நாடு இது. அறவழி நாடுகள் அதிசயித்த நாடு. பாழ்பட்டு, ஏழ்மை நிலையை அடைந்த போதிலும் அதன் இயல்பான அறத்தை விடாத நாடு. அப்படிப்பட்ட அன்னை நாடு இது. அது வெற்றியைக் கொள்க!

121) நூறு கோடிகளுக்கும் மேலாக நூல்களை நூற்றுக்கணக்கான தேசங்களில் இயற்றிய அறிஞர்கள் தாங்கள் உண்மையைத் தேர்ந்தபாடில்லையே என ஏக்கம்  எது உண்மை என்று தேற இந்த நாட்டிற்குத் தான் தேடி வந்தனர். தங்களின் நுண்ணறிவெல்லாம் தீர்ந்து அது தேய்ந்து போக அனைத்தும் தீர்ந்து விட்ட போதிலும் கூட கடைசி கடைசியாக மீதியாக நிற்கும் உண்மையானது ஒரே ஒரு உண்மை தான். அதை மட்டும் இறைஞ்சி நிற்கும் தாய் எங்கள் தாய், அவள் வாழ்க.

122) வில்வித்தையில் தேர்ந்தவர்கள் தங்கள் வாழ்வு குன்றி ஓய்ந்து போக, வீர வாளைக் கொண்டவர்களின் வீரமும் மாய, அற்புதமான வெல்லக் கூடிய ஞான நூல்களின் மெய்மைத் தன்மை தேய, இப்படிச் சொல்லுகின்ற இந்த அனைத்துமே விடப்பட்டு, மற்றவை சூழ்ந்த காலத்திலும் நன்மை தர வல்ல நூலைக் கெடாமல் காப்பவள் எங்கள் அன்னை. அவள் வாழ்க!

123)  தேவர்கள் உண்ணும் நன்மருந்தான அமிர்தம் போல, கடலின் கண்ணே உள்ள வெள்ள நீரைப் போல, பாவம் கொண்ட நெஞ்சினை உடையோர் அதைப் பறிக்க முற்பட்டு அந்தப் பறித்தலைச் செய்தாலும் கூட இன்னும் அழியாத செல்வத்தை மிகுதியாகக் கொண்டிருப்பவள் எங்கள் அன்னை. அவள் வாழ்க.

123) நன்மை தரக் கூடிய தொழில்களைச் செய் இந்த இரும் புவிக்கு நல்கினள் எங்கள் தாய். நமக்குப் பதத்தைத் தருவதற்குரிய பல மதங்களைக் கொண்ட நாட்டினள் எங்கள் தாய். விதம் விதமாய் உண்மைகள் கொண்ட வேறுள்ள பல நாட்டவர்களுக்கு இன்னும் ஒரு உண்மையைத் தெரிவிக்கும் படி இன்று சுதந்திரத்தில் ஆசை ஊட்டினாள். அப்படி சுதந்திர ஆசையை ஊட்டிய அன்னை வாழ்க!

 ***

 அறிவியல் துளிகள் – பாகம் – 14

பொருளடக்கம்

என்னுரை

339. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 1

340. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 2

341. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 3

342. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 4

343. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 5

344. இரஸவாதக்கலை நிபுணர்கள்? – 1

345. இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2

346. இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3

347. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1

348. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 2

349. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

350. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 4

351. ஸூனிஷ்! உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!

352. கின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை!

353. டார்வினை எதிர்த்த பெண்மணி!

354. உலகின் முதல் விண்வெளி தேசம்!

355. மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!

356. ஜிமிக்கி கம்மலின் பிரபலம்! ….. ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?

357. நலம். நலம் அறிய ஆவல்! உங்கள் நண்பன் ரொபாட்டின் கடிதம்!

358. கடலிடம் கற்போம்!

359. கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத கபெகண்கமகணிகககள்!

360 பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!

361. மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!

362. ‘மெடிகல் மிராக்கிள்’ புகழ் ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வயது 76!

363. நிலவில் நடந்த முதல் மனிதன்: சுவாரசியமான தகவல்கள்!

364. மனிதன் கடவுளாகும் காலம்! – ஷோங் ஷோங்!, ஹுவா ஹுவா!!

365. 2018 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும்

அறிவோம்; உணர்வோம்.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும். இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன். 4-3-2011 இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பதினான்காம் பாகம் – 339 முதல் உள்ள 27 அத்தியாயங்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின்உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு

எனது நன்றி உரித்தாகுக. தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                   ச.நாகராஜன்
7-5-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

IMPORTANCE OF 12 TAMIL MONTHS- 5 (Post No.11,257)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,257

Date uploaded in London – 11 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 9.MARKAZI

Markazli (maarkali or maarkazi) is considered a very holy month by the Hindus. The month begins when the sun enters the Hindu zodiacal sign Dhanus (Sagittarius).

This is the ninth month in the Tamil calendar. All the South Indian temples open very early in the morning around 4 AM (Brahma Muhurtham) and start the Abhisheka and Aradhana.

Tamil saint poetess Andal’s Thiruppaavai and Tamil Saivite saint Mankikkavaasagar’s Thiruvempaavaai are sung by Tamil Hindus. Temples do broadcast them in the early morning. People get Ven Pongal (spicy rice)  and Sarkkarai Pongal (sweet rice) as Prasad.

Bhajan groups go round the towns in the early morning.

My Experience

As a little boy I used to accompany my father in the Bhajan that goes round Madurai city. There were two women Mrs Raajammaal Sundararaajan and Mrs Seetaalakshmi Baalakrishnan who attracted many young girls and trained them in singing Thiruppaavai.

In front of all the Tamil houses one can see beautiful Kolams( rangolis). Kolaattam and Kummi, two Hindu folk dances are performed in public places by young Hindu girls. The belief is that young girls will get good and handsome husbands if they do practise vow/Vrata during this month.

People go to rivers and tanks to take early morning bath. In villages women make cow dung balls and place flowers of Pumpkin in it. It will be in the middle of the kolam/rangoli in front of the houses.

Since it is a cold month, there is a Tamil proverb saying it is not good for the cattle: Maarkali maathak kulir Maadu Makkalukku Peedai (the cold wind of the month Maarkazi gives distress and illness to cattle and people).

.மார்கழி மாதக் குளிர் மாட்டு மக்களுக்குப் பீடை

Maanikkavasagar festival is held in many Shiva temples. Arudra Darisanam of Nataraja /shiva and Vaikunda Ekaadasi are the most important festivals of this month .

All Shiva and Vishnu temples attract lakhs of people during these days.

End of the month comes Bhogi, festival when Hindus clear all unwanted old stuff and make bonfires. It is Pongal eve.

Tamil Hindus don’t celebrate any auspicious event in Purattasi or Markazi. NO marriages take place in this month.

In addition to festivals, Thyaagaraaja Aaaraadhanaa and Kanchi Paramaachaarya Aaaraadhanaa and Ramana Jayanthi are held during this month.

Dhanur Maatha puja in the temples finish on the last day. Some people celebrate Hanumath Jayanthi.

Vishnu temples celebrate 20 days of  festival called Pakal Paththu and Raap Paththu ,meaning 10 Days of Day time Pujas and 10 Days of Night Time Puja.

During Arudra Shiva festival and 20 days of Vishnu festival,  idols are taken round the town in processions.

Arudra festival, also known as Thiruvaathirai, is celebrated by Malayalees on a grand scale.

 A special dish called sweet Kali accompanied with spicy Koottu is made on Arudra day. Hundreds of Pots of buttery Sweet Pongal/ Sarkkarai Pongal is made in Vishnu Temples on the Koodaarai valli day.

A Hindu Panchaangam (almanac) gives al these days in bold letters.

xxx

10.THAI

‘Thai’ is the tenth month in Hindu calendar. When the sun enters zodiacal sign Makara Raasi (Capricorn), Thai begins. It is the period of harvest in South India. Pongal or Makara Sankraanti (sankaraanthi) is celebrated on a grand scale by the Hindus.

The Northward travel of Sun begins and this six month period is called Uttaraayana Punyakaala.

Nowadays Non Hindus also join this Hindu festival like Malayalees do during Onam. Both are pure Hindu festivals worshipping Hindu Gods. Politicians distorted both these Hindu festivals.

Makara Sankraanti is celebrated in India and South East Asian countries. Very few Hindu festivals are based on the movement of Sun (solar) and Sankraanti is one of them. Thai first day, roughly corresponding to 14th of January is the Pongal day. Pongal means Rice Pudding (we have one or two articles in this blog about the Pongal festival in this blog).

Just before Pongal, people clean the houses and whitewash them. Next day of Pongal is Kaanum Pongal (Kanu) and Maattup Pongal. On the day of Maattu/Cattle Pongal ,all the cows and bulls are decorated and taken round he town with Lord Krishna’s idol. Bull Fighting events are organised by Yadava Community in many villages. Turmeric and Ginger plants are used in decoration of Pongal pots. Tamils boil newly harvested rice in newly made burnt clay pots. Sugarcane is consumed during this season.

Like Diwali, new clothes are worn by men and women.

There is a proverb in Tamil saying Thai Piranthaal Vazi Pirakkum; if Thai is born, a way will be seen. The meaning is ‘Thai brings hope of marriage and accumulation of money’. Since Tamils don’t celebrate marriages during the two months , every man and woman wait for Thai. தை பிறந்தால் வழி பிறக்கும்.

Dravidian politicians announced Thiruvalluvar Day should be celebrated on the third day (16th January).

Ratha Saptami, Bheeshma Ashtami are important days for Hindus. They give oblation to the greatest celibate Bheeshma (Bhishma).

Thai Amavasai (new moon day in Thai) is celebrated all over India with holy dip in the holy rivers or sea. Like Aadi Amaavaasai, millions of Hindus give oblations to the departed souls. All Hindus, irrespective of castes, remember their ancestors on these two new moon days.

Thai Poosam (Pusam star with Purnima) is a big day of celebration in Hindu Temples. Many temples including Madurai Temple organise Float Festival (Teppam) for gods and goddesses.

In Vadalur in Tamil Nadu, big festival is organised by the devotees of Hindu saint Ramalinga Swaamigal known as Vallallaar.

To be continued………………………

tags- Tamil months, Markazi, Thai, Pongal, Arudra, Thiruvathirai, Vaikunda Ekadasi

Glory of Womanhood: Bharati in English (Post No.11256)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,256

Date uploaded in London – 11 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.Let us rejoice in praise of womanhood,

Let us dance to the cry of ‘Victory to Woman’

For woman is the sanctified union

Of the mother’s fame and the spouse’s name.

1.பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்

2.We shall rejoice in praise of wedded love

We shall dance in honour of lovers’ bliss;

And as woman is the solvent of sorrow,

Her heroic sons shall hail her ‘Holy Mother’!

2.அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

3.It is mother’s milk that gives us strength,

While the wife’s kind words reap our harvest of fame

As woman’s blessedness blasts all evil

Let us rejoice with linked hands

3.வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்

4.Could man’s valour defend woman’s grace

We would then face neither want nor defeat

As the eyelids enclose and sustain the eye

Woman and man must cherish holy wedded love

4.பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா

5.Woman is the heady wine we shall taste

And make the earth tremble with our might

We shall dance to the chime of flute and drum

And lose our hearts in ecstasy.

5.சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்

6.Blow the conch ! Dance in joy!

For woman is sweeter than life itself

She is the protectress of life, and creatrix too

She is the life of our life, and the soul of sweetness.

6.உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே

7.Hail holy mother! We make obeisance;

And we sing our darling’s praises to her ear

We shall canter across a hundred hills

In the service of a slender -waisted girl.

‘7.போற்றி தாய்’ என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே

8.Hail holy Mother To the beat of the drum

Hail holy Mother to the flute’s golden tune.

We shall sweep the blue firmament itself

In honour of a bright – eyed girl

‘8.போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய்’என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே

9.We shall willingly swallow coals of fire

To serve the divine hand that fed us

And although her hands resist us as we kiss

We shall sing in praise of the chosen hands/spouse.

9.அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்

Translated into English by Subrahmanya Bharati

(there are two sets  of manuscripts for  the tamil original in the hand writing of Bharati)

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

Tags- பெண்கள், பாரதி, வாழ்க, Glory, Womanhood, Bharati

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 5வது பாடல் (Post No.11,255)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,255

Date uploaded in London – –    11 SEPTEMBER 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 5வது பாடல் : ஒரு பார்வை!

ச.நாகராஜன்

பாரத தேசம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 19 பாடல்களில் முதல் நான்கு பாடல்களில் அவர் தரும் செய்திகளைப் பார்த்தோம்.

இனி அடுத்து அவர் ஐந்தாவது பாடலில் கூறும் அற்புதமான செய்திகளைப் பார்ப்போம்.

பாரத தேசம் என்ற பாடல்

56) பாரத தேசம் என்று பெயரைச் சொன்னாலேயே போதும், வறுமை மற்றும் பயத்தைக் கொன்று விடுவர். செல்வமும் தைரியமும் தானே வரும்.

57) பாரத தேசப் பெயரைச் சொன்னவுடனேயே துயரமான

பகையை வெல்வர்.

58) நாம் வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்

59) மேற்குக் கடல் முழுவதும் நமது  கப்பல்களைப் பயணிக்க வைப்போம்.

60) நமது தேசத்தில் உள்ள பள்ளித் தலம் அனைத்தையும் கோவில்களாகச் செய்வோம்.

61) பாரத தேசம் என்று சொல்லி நமது வலிமை மிகுந்த தோள்களைக் கொட்டி ஆர்ப்பரிப்போம்.

62) நாம் சிங்களத் தீவினுக்கு ஒரு பாலம் அமைப்போம்.

63) சேதுவை மேடாக ஆக்கி ஒரு சாலையை அமைப்போம்.

64) வங்கத்தில் மிகையாகச் சேர்கின்ற நீரைக் கொண்டு நாட்டின் மையப் பகுதிகளில் விவசாயம் செய்து பயிர் வளர்ப்போம்.

65) சுரங்கங்கள் வெட்டி தங்கம் முதலிய கனிப்பொருள்களையும் வேறு பூமியில் புதைந்திருக்கும அரிய பொருள்களையும் வெளியில் எடுப்போம்.

66) எட்டுத் திசைகளிலும் சென்று இவற்றை விற்று எண்ணுகின்ற தேவையான அனைத்துப் பொருள்களையும் கொண்டு வருவோம்.

67) தென் கடலில் அரிய வகை முத்துக்கள் உள்ளன. அங்கு முத்துக் குளிப்போம்.

68) நமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் பல நாட்டு வணிகர்களும் கொண்டு வந்து தமக்குத் தேவையானற்றை வேண்டிக் கொடுக்குமாறு நமது அருளை வேண்டி மேற்குக் கடற்கரையில் வரிசையாக நிற்பர். அவர்களுக்கு உதவுவோம்.

69) சிந்து நதியில் நல்ல முழு நிலா நாளிலே சேர நன்னாட்டு இளம் பெண்களுடன் சுந்தரமான தெலுங்கு மொழியில் பாட்டுப் பாடி தோணிகளை ஓட்டி விளையாடுவோம்.

70) கங்கைப் பகுதியில் விளைவது நல்ல கோதுமை. அதை காவிரியில் கிடைக்கும் வெற்றிலைக்கு மாறாகக் கொடுப்போம்.

71) சிங்க மராட்டியர் கவிதையைப் பெறுவோம். அவர்களுக்கு சேர நாட்டில் கிடைக்கும் தந்தங்களைப் பரிசாக அளிப்போம்.

72) காசி நகர்  புலவர் அங்கிருந்து பேசுவதை காஞ்சிபுரம் உள்ளிட்ட நம்மிடங்களில் இருந்து கேட்க ஒரு கருவியைச் செய்வோம்.

73) ராஜபுதனத்து வீரர்களுக்கு கன்னடத்தில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை அளிப்போம்.

74) பட்டாடைகளையும் பஞ்சில் ஆடைகளையும் செய்து மலைகள் என வீதிகளில் குவிப்போம்.

75) திரவியங்களைக் கட்டிக் கொண்டு வரும் காசினி வணிகருக்கு அவற்றைக் கொடுப்போம்.

76) ஆயுதம் செய்வோம்.

77) நல்ல காகிதம் செய்வோம்.

78) ஆலைகள் வைப்போம்.

79) கல்விச் சாலைகளை அமைப்போம்.

80) ஓய்வே இல்லாமல் உழைப்போம்.

81) தலை சாயுதல் செய்ய மாட்டோம்.

82) உண்மைகள் சொல்வோம்.

82) அனைவரும் வியக்கும் பல அதிசயங்களைச் செய்து காட்டுவோம்.

83) குடைகள் போன்ற அனைத்துப் பொருள்களையும் செய்வோம்.

84) உழுவதற்குத் தேவையான கருவிகளைச் செய்வோம்.

85) கோணிகளைச் செய்வோம்.

86) இரும்பாணிகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்வோம்.

87) நடையும் பறப்பும் உணர் வண்டிகளைத் தயாரிப்போம்.

88) உலகமே நடுங்கும்படியான அதிரடி கப்பல்களைச் செய்வோம்.

89) மந்திர ஒலிகளைக் கற்போம்.

90) வினை ஆற்றும் தந்திரங்களையும் கற்போம்.

91) விண்ணியலில் முதலிடம் பெற்று வானை முழுவதுமாக அளப்போம்.

92) கடலில் உள்ள உயிர் வாழ் இனங்களைக் கணக்கிட்டு மீன் உள்ளிட்ட அனைத்தையும் பற்றித் தேறுவோம்.

93) சந்திரனைப் பற்றி முழுவதுமாக அறிந்து தெளிவோம்.

94) சுகாதாரத் துறையில் முன்னேறி சந்தியைப் பெருக்குத் துலக்கும் சாத்திரத்தைக் கற்றுத் தேறுவோம்.

95) காவியங்கள் பல இயற்றுவோம்.

96) நல்ல மழைக் காடுகளை வளர்ப்போம். சுற்றுப்புறச் சூழலை அதன் மூலம் பேணிக் காப்போம்.

97) கலைகள் எத்தனை உண்டோ அத்தனையையும் வளர்ப்போம்.

98) கொல்லர் உலையை வளர்த்து நல்ல நல்ல பொருள்களைச் செய்வோம்.

99) ஓவியங்களை வரைவோம்.

100) நல்ல ஊசிகளைச் செய்து நல்ல ஆடைகளைத் தயாரிப்போம்.

101) எந்தத் தொழிலானும் சர், உலகத்தில் இருக்கும் அத்தனை தொழில்களையும் பட்டியல் இட்டு அவை அனைத்தையும் இது உயர்வு இது தாழ்வு என்ற எண்ணமின்றி அனைத்தையும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்வோம்.

102) சாதி இரண்டே தான். இட்டார் பெரியோர். இடாதார் இழி குலத்தோர்.

தமிழ் மகள் ஔவையார் சொல்லிய இந்த சொற்களை அமிர்தம் என்று போற்றி அதைக் கடைப் பிடிப்போம்.

103)  நீதி நெறி வழிப்படி நடப்போம். பிறருக்கு உதவுபவரே பெரியோர்;

நேர்மையானவர். அல்லாத மற்றோர் அனைவரும் கீழ் மக்களே.

எப்படி ஒரு அற்புதமான பாடல் பாருங்கள்.ஒரே பாடல் தான். அதில் 48 கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்.

பாரதியார் கூறுவதைப் பின்பற்றினால் பாரத தேசம் வெல்லும்; உலகத் தலைமையை ஏற்கும் என்பதில் இனி ஐயமும் உண்டோ!

வெல்க பாரதம்.

வாழ்க பாரதியின் திரு நாமம்!

**

Tags- பாரதம், மஹாகவி பாரதி,

புத்தக அறிமுகம் – 53

அறிவியல் துளிகள் – பாகம் – 13

பொருளடக்கம்

313. தகவல் கொள்கையின் தந்தை க்ளாட் ஷனான்!

314. இந்திய கடலோர நகரங்கள் மூழ்கப் போகின்றன!

315. பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!

316. மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்!

317. அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல!

318. அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே! தனக்குத் தானே அசெம்பிள் ஆகி பறந்த விமானம்!

319. மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸ்டன்!

320. பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி சிக்மண்ட் ஃப்ராய்ட்!

321. இயற்பியல் விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர் – ஃபெய்ன்மேன்!

322. விளம்பர குருவின் நல்ல அறிவுரை!

323. உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள்!!

324. பூமியைக் காப்பாற்ற நாஸாவின் புதுத் திட்டம்!

325. வெப்பத்தைக் கையில் உருவாக்கும் ‘சீன ரத்தினம்’

326. “ஆற்றல் புரட்சி” செய்யும் 13 வயதுச் சிறுவன்!

327. நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

328. செரிங்கட்டி விதிகள்! – 1

329. செரிங்கட்டி விதிகள்! – 2

330. அதிசய கண்டுபிடிப்பாளர் ; ‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு!

331.செயற்கை அறிவின் தலை நகரம் சியோல்!

332. ஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு!

333. உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ!

334. சந்திரனை எட்ட எத்தனை காளைகளின் வால்கள் வேண்டும்?

335. மூன்று கறுப்பு நிற பீன்ஸ்களை வெள்ளை நிறமாக்க எத்தனை பீன்ஸ்கள் வேண்டும்?

336. புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம்!

337. ஒரு அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்!

338. வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன். எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பதிமூன்றாம் பாகம் – 313 முதல் உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 17/2/2017 இதழிலிருந்து வாரா வாரம் வெளியானவை. அத்தியாயங்கள் தொடர்ச்சி கருதி சில அத்தியாயங்கள் இந்த பாகத்திலும் அடுத்த பாகத்திலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                             ச.நாகராஜன்
3-5-2022

மேலும் சில விந்தைக் கவிதைகள் (Post No.11254)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,254

Date uploaded in London – 10 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

புலவர் மாக எழுதிய புகழ்மிகு சிசுபால வாதம் நூலிலிருந்து மேலும் ஒரு கவிதையைக் காண்போம் .

மெய்யெழுத்துக்களில் ப -வர்க்கமும்,  ர -வர்க்கமும் மட்டும் பயன்படுத்தப்படுகிற  ஒரு செய்யுளைக் காண்போம் –

பூரிபி பாரிர்பி பீரார் பூபாரை ரபிரே பிரே

பேரீரே பிபிரப்

ராபைர பீரு பிரி பைரிபாஹா

–மாக கவியின் சிசுபால வதம் 19-66

பொருள்

இந்தப் பூமிக்கு பாரம் போல  எடை உடைய , பயமே இல்லாத  , முரசு ஒலிப்பது போல சப்தம்  உடைய, , கரிய மேகம் போன்ற யானை, எதிரியின் யானையைத் தாக்கியது.

Xxx

ஜ ஜெள ஜோ ஜாஜி ஜிஜ்ஜாஜீ 

இதில் முதல் வரியில் ஜ – வர்க்கமும், இரண்டாவது வரியில் த – வர்க்கமும், மூன்றாவது வரியில் ப -வர்க்கமும், நாலாவது வரியில் ர -வர்க்கமும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது

ஜ ஜெள ஜோ ஜாஜி ஜிஜ்ஜாஜீ 

தம் ததோ அதிததாததுத்

பாபோஅபீபா பிபூ பாபூ

ராராரிரரிரீ  ரரஹ

–மாக கவியின் சிசுபால வதம் 19-3

பொருள்

பெரிய வீரனும், பெரிய யுத்தங்களில் வெற்றி பெற்றவனுமான பலராமன் , சுக்கிரன், பிருகஸ்பதி கிரகங்களைப் போல பிரகாசிக்கிறான். சுற்றித் திரியும் எதிரிகளை அழிக்கும் அவன் , சிங்கம் போல போர்க்களம் ஏகி , நாற்படை உடைய எதிரிகளைத் தடுத்து நிறுத்தினான்.

Xxx

க்ஷிதி ஸ்திதி மிதி க்ஷிப்தி விதிவின்நிதி

உயிர் எழுத்துக்கள் இல்லாத சொற்களை மட்டுமே வைத்து கவிதை எழுதுவது இயலாது. ஆனால் ஒரு சில உயிர் எழுத்துக்களை மட்டும் வைத்து எழுதலாம்.  அ  – மற்றும் இ – ஆகிய இரண்டு உயிர் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தும் கவிதை இதோ …..

போஜ மஹாராஜனின் ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-278 நூலிலிருந்து எடுக்கப்பட்டது .

க்ஷிதி ஸ்திதி மிதி க்ஷிப்தி விதிவின்நிதி ஸித்தி லிட்

மம த்ரயக்ஷ  நமத்ரக்ஷ  ஹர ஸ்மர ஹர  ஸ்மர

–ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-278

பொருள்

ஓ மூன்று கண்களை உடைய சிவ பெருமானே , உலக நிலையை  அறிந்தவனே , உலகத்தை அளப்பவனே , அழிப்பவனே , அஷ்டமா சித்திகளையும் , குபேரனின் நவநிதிகளையும்  அனுபவிப்போனே ,தக்ஷனையும் காம தேவனையும் கொன்றவனே , ஓ கடவுளே , என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன் 

Xxx

உருகும் த்யுகுரும் யுத்ஸு சுகுசு

உ – என்னும் உயிர் எழுத்தை  மட்டும் பயன்படுத்தும் கவிதை இதோ-

உருகும் த்யுகுரும் யுத்ஸு சுகுசு ஸ்துஷ்டுவுஹு  புரு

லுலுபுஹு புபுஷு முர்த்ஸு  முமு ஹுர்னு  முஹுர் முஹுஹு

–ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-276

பொருள்

போர்க்களத்துப் போனபோது ,வாக்கிற்கு அதி தேவதையான, தேவ குருவான   பிருஹஸ்பதியிடம் தேவர்கள் அடைக்கலம் புகுந்தனர். அவர் உற்சாகத்துடனும் பலத்துடனும் இருக்கவும் மீண்டும் மீண்டும் நினைவு தப்பிவிடாமல் இருக்கவும் தேவர்கள் பிரார்த்தித்தனர்.

இவ்வாறு செயற்கையாகச் சுற்றிவளைத்துக் கவிதை இயற்றினாலும் படிக்கும்போது வரும் ஆனந்தம் அளப்பரியது

–சுபம்–

Tags- விந்தைக் கவிதைகள், ஸரஸ்வதீ கண்டாபரணம், மாக கவி,  சிசுபால வதம்

IMPORTANCE OF 12 TAMIL MONTHS- PART 4 (Post No.11,253)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,253

Date uploaded in London – 10 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

7.AIPPASI

AIPPASI is the seventh month in Tamil calendar. When sun enters zodiac sign Tulaa Raasi (Libra), Aippai begins.

Deepavali (also  written as Diwali) is the most important festival of Hindus. Millions of businessmen and vendors wait for this month to introduce their new products. Temples become more attractive and crowd pulling. Diwali in Kasi is the most important festival where the Golden Annapurani (annapoorani) is taken in procession. This most valuable idol is kept in the vault of Reserve Bank of India at other times.

In Tamil, there is a proverb about the heavy rains that pour down during this month and next Karthikai month:

Aippasi Kaarthikai Adai Mazaik Kaalam is the proverb. ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம்

Newly married couple celebrate it as Thalai/Head Deepavali which means the first or Most important Diwali. In laws give them big gifts.

Next day of Deepavali is new moon day Amavasai. Tamils celebrate it only for two days: Diwali day and the previous night. But in North India it is celebrated for five days. (two are three articles are in this blog about the significance of Diwali, Sweets and Fire crackers).

Tamils fire sparklers and fire crackers for at least two days. Every child remembers it through out his or her life. Nowadays anti Hindus deliberately spoil the enthusiasm by talking against fire crackers.  Diwali is not the culprit for environmental pollution. More environmental damage is caused by other factors including smoking habit.

Diwali is celebrated in the British Parliament by Hindus and a function held in European parliament as well. In the United states, some states have declared this month as the cultural month.

Several countries issue new postage stamps. Sale of Gold jewellery increase during this period. In big cities there will be long queues in front of shops selling Sweets and Firecrackers. Shops selling clothes do roaring business for a month during Diwali season.

New year starts for some people; Kethaara Gowri Vratham is observed by some people.

In short, the month Aippasi has economic, cultural and religious significance.

North Indians arrange row of lights during Diwali, but Tamils do the same thing during the next month Karthikai (kaartigai)

Skantha Shashti

Shasti means sixth day. Skanda shasti that comes after Diwali is considered the most important festival by devotees of Lord Muruga/Skanda. They observe strict fasting until the day of Sura Samhara (Soora Samhaaram) . That is the day lord destroys the demon Soora.

Most of  Sri Lankan Tamils observe fasting during this period.

Xxx

8.KARTHIKAI (pronounced kaarthigai)

This is the eighth Tamil month. This month begins when the sun enters the zodiacal sign Vrichchika (Scorpio).

Purnima happens on the day the moon appears with Krittika Nakshatra/star. So the month is called Kaarthigai. It is mentioned even in 2000 year old Sangam festival

All the Tamil houses light lamps, particularly made up of burnt clay and arrange them in different parts of the house. Temples also do this. The biggest festival of Kartikai is Annaamalai Deepam in Tiruvannaamalai of Tamil Nadu. It attracts over million people. The big Deepa/lamp is lighted over the hill in the town. People go round the hill and worship Lord Shiva in the Arunaachaleswar Temple (there are three articles in the blog about the festival and the temple).

Tiruvannamalai is considered holy because of the Ashrams and Samadhis (pronounced Aaashramam and Samaadhi) of Ramana Maharishi, Seshadri Swamigal, Yogi Ramsurathkumar and Arunagirinathar. The last of the four saints is associated with the temple.

Tamils light lamps for at least three days; the previous day is Bharani Deepa. Rohini star comes after Kartikai or Krittikaa.

For children it is a memorable period. Every temple make bonfire in front of the temple. Children gather there and throw salt and fireworks in the fire. So it is the Bonfire Night (Sokkappanai in Tamil) for Tamil Hindus. Special dishes are made with fried rice, jaggery and sweet pan cakes (Pori Urundai and Appam in Tamil)

The science behind the bonfire is to kill all the insects that damage the crops. Grasshoppers and other insects fall in the fire on its own. You don’t go and kill them.

All the left over fire works are used during this festival.

As I mentioned earlier the North East Monsoon becomes very active in this month.

Since Kaarthigai stars (Pleiades constellation) are associated with the birth of Lord Murugan/Skanda/Kaartikeya, devotees celebrate all Krtittikais.

To be continued……………………….Tags- Tamil months, Aippasi, Karthigai, Krittika, Diwali, Skanda shasti, Muruga

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 4 பாடல்கள் : ஒரு பார்வை! (Post No.11,252)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,252

Date uploaded in London – –    10 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!

பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 4 பாடல்கள் : ஒரு பார்வை!

ச.நாகராஜன்

புண்ணிய தேசமான பாரதத்தைப் பற்றி இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு அனைத்தையும் 19 பாடல்களில் கூறி முடித்து விட்ட மஹாகவி பாரதியாரின் பெருமையை என்னென்று சொல்வது?

எளிய, கூரிய, ஆழ்ந்த, வீரிய, அர்த்தமுடைய, இனிய சொற்கள்.

அவை தருகின்ற சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களோ பல்லாயிரம்!

ஆம் இந்த சொற்களின் விளக்கத்தைப் பார்க்க புராண, இதிஹாஸம் தரும் விளக்கக் கருத்துக்கள் பல்லாயிரம்.

பாரதம் பற்றிய அவரது திரண்ட ஞானத்தை சுருக்கமாக இங்கு அவரது நான்கு பாடல்களில் பார்ப்போம்.

**

வந்தே மாதரம் பாடல்!

1) வந்தே மாதரம் என்று சொல்லி வணங்குவோம். வந்தே மாதரம் என்றால் எங்கள் மாநிலத் தாயை வணங்குவோம் என்பது பொருள்.

2) இந்த தேசத்தில் ஜென்மம் எய்துவது உயர்வு.

3) இங்கு ஜென்மம் எய்திய எவருடைய ஜாதியையும், மதத்தையும் பார்க்க மாட்டோம். வேதியரோ, ஈனப் பறையரோ, வேறு ஒருவரோ யாரானாலும் சரி, அனைவரும் சமமே.

4) இங்கு பிறந்தவர் அனைவரும் இந்தியரே. சீனத்தவரோ அல்லது தீங்கிழைக்கும் பிற தேசத்தவராகவோ மாட்டார்கள்.

5) ஒன்று பட்டு வாழ்வோம். இதை நன்கு தேர்வோம். இதுவே ஞானம். இது வந்து விட்டால் வேறெதுவும் வேண்டாம்.

6)  வாழ்வோ, தாழ்வோ தேசத்தில் உள்ள அனைவருக்கும் அது பொது. வீழ்ந்தால் அனைவரும் வீழ்வோம்; வாழ்ந்தால் அனைவரும் வாழ்வோம்.

7) அடிமைத் தொழில் செய்த, அந்த வெட்கப்படும் நாள்கள் கழிந்தன. அந்த அடிமைத் தோழிலை ‘தூ’ என்று தள்ளுவோம்.

ஜய வந்தே மாதரம் பாடல்

8) பாரதத்திற்கு வெற்றி! வெற்றி!. பத்து முறை வெற்றியைக் கூறுவோம் இப்படி:

ஜயஜய பாரத!

9) இது ஆரிய பூமி. நாரியர், நர சூரியர் இங்கு வாழ்கின்றனர். அவர் சொல்லும் வீரிய வாசகம் வந்தே மாதரம்.

10) நொந்தாலும் சரி, வெந்தாலும் சரி உவந்து நம் தேசத்தவர் சொல்வது வந்தே மாதரம்.

11) உயிரே போகட்டும் அல்லது வெற்றி உண்டாகட்டும். ஒன்றாகவே நிற்போம். வலி குன்றாமல் ஓதுவது வந்தே மாதரம் தான்!

நாட்டு வணக்கம் பாடல்

12) இந்த நாட்டிலே தான் எம் தந்தையரும் தாயரும் மகிழ்ந்து குலாவினர்.

13) அவர்களுக்கும் முந்தையராக இருந்த எம் முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழம் பெரும் நாடும் இதுவே தான்.

14) அவர்களது சிந்தையில் சிறப்பான பல்லாயிரம் எண்ணங்கள் தோன்றி வளர்ந்து சிறந்ததும் இந்த நாட்டிலே தான். இதை வணக்கம் செய்து கூறுவேன் வந்தே மாதரம் என்று!

15) அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து எங்களை வளர்த்து அருள் புரிந்தது இந்த நாடே.

16) எங்களைப் பெற்ற அன்னையர் தமது மழலைச் சொற்களால் மகிழ்வித்ததும் இந்த நாட்டிலே தான்!

17) அவர்கள் கன்னிப் பருவம் எய்தி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்த நாட்டிலே தான்!

18) பொன் போன்று மின்னும் அவர் உடல்கள். அந்த உடல் இன்புற விளையாடி நீரில் ஆடி, பின்னர் மகிழ்ச்சியுடன் இல்லம் ஏகுவது அவர் தம் வழக்கம். அது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது இந்த நாட்டிலே தான்!

19) மங்கையராய் அவர் மணம் முடித்து இல்லறத்தை நல்லறமாக வளர்த்ததும் இந்த நாட்டிலே தான்!

20) அவர் பெற்ற தங்கக் குழந்தைகளுக்கு இன்னமுதை ஊட்டி அவர்களைத் தழுவி அவர்கள் கொஞ்சியதும் இந்த நாட்டிலே தான்!

21) மக்கள் புகழ் ஓங்கி வளர, அது வளர்வதற்குக் காரணமாக இருந்த கோவில்கள் தேசமெங்கும் சூழ்ந்து இருந்தது இந்த நாட்டிலே தான்.

22) பின்னர் காலம் செல்லச் செல்ல அவர்கள் தம் உயிர் துறக்க அவரது உடல்களின் பூந்துகள் ஆர்ந்ததும் இந்த நாட்டிலே தான். இப்படிப்பட்ட அரும் நாட்டை வந்தே மாதரம் என்று சொல்லி வணங்க மாட்டேனா, என்ன?!

பாரத நாடு பாடல்

23) உலகில் ஏராளமான தேசங்கள் உண்டு. ஆனால் பாருக்குள்ளே நல்ல நாடு எது என்று கேட்டால் அது எங்கள் பாரத நாடு தான்!

24) ஞானத்திலே உயர் நாடு.

25) பர மோனத்திலே உயர் நாடு.

26) உயர் மானத்திலே உயர் நாடு.

27) அன்னதானத்திலே உயர் நாடு.

28) கானத்திலே உயர் நாடு,

29) அமுதாக நிறைந்த கவிதையிலே உயர் நாடு.

30) தீரத்திலே உயர் நாடு.

31) படை வீரத்திலே உயர் நாடு.

32) நெஞ்சில் ஈரத்திலும் உபகாரத்திலும் உயர் நாடு.

33) சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு தருவதிலே உயர் நாடு.

34) நன்மை செய்வதில் உயர் நாடு

35) உடல் வன்மையிலே உயர் நாடு

36) செல்வப் பன்மையிலே உயர் நாடு.

37) மறத் தன்மையிலே உயர் நாடு.

38) பொன் மயிலாகத் திகழ்பவர்கள் இந்த தேசத்தின் அழகிய மகளிர். அவர்களது கற்பு உயர்ந்தது. அந்தப் புகழினில் உயர் நாடு இது.

39) ஆக்கம் அதாவது செல்வத்திலே உயர் நாடு.

40) தொழில் ஊக்கம் அதிகம் கொண்டதில் உயர் நாடு.

41) புய வீக்கம் – தோள் வலிமையில் உயர் நாடு.

42) எந்த நோக்கத்தை எடுத்துக் கொண்டாலும் உயர்ந்த நோக்கம் மட்டுமே உண்டு இங்கு. அந்த உயர் நோக்கத்தில் உயர் நாடு.

43) இங்குள்ள மல்லர்கள் அனைவரும் தேசத்தைக் காக்க திறமும் ஆர்வமும் கொண்டவர்கள்.

அவர்கள் கடல் போல இங்கு உள்ளனர். அந்த சேனைக் கடலில் உயர் நாடு.

44) வண்மையிலே உயர் நாடு.

45) உளத் திண்மையிலே உயர் நாடு.

46) மனத் தண்மையிலே குளிர்ந்த உள்ளத்திலே உயர் நாடு.

47) நுட்பமான மதி கொண்டவர்கள் இங்குள்ளோர். அந்த மதி நுண்மையிலே உயர் நாடு.

48) ஸத்தியமே இந்த நாட்டோருக்கு உயிர். அந்த உண்மையிலே தவறாத புலவர் உணர்வினிலே உயர் நாடு.

49) யாகத்திலே உயர் நாடு

50) தவத்தோர் உள்ள நாடு. ஆக தவ வேகத்திலே உயர் நாடு.

51) தனி யோகத்திலே உயர் நாடு.

52) போகங்களைக் கொண்டு சிறக்க வாழ்பவர்கள் பாரத மக்கள். பல போகத்திலே உயர் நாடு.

53) ஆகத்திலே உயர் நாடு

54) தெய்வ பக்தியே இங்குள்ளோரின் உயிர் மூச்சு. தெய்வ பக்தி கொண்டார் தம் அருளினிலே உயர் நாடு.

55) இயற்கை வளம் அற்புதமாகக் கொண்ட நாடு இது. ஆற்றினிலே,

சுனை ஊற்றினிலே, தென்றல் காற்றினிலே, மலைப் பேற்றினிலே, ஏற்றினிலே, பயன் தந்திடும் காலி இனத்தினிலே உயர் நாடு.

56) இங்குள்ள இயற்கை வளத்தின் சிறப்பே சிறப்பு.

தோட்டத்திலே, மரக் கூட்டத்திலே, கனி ஈட்டத்திலே, பயிர் ஊட்டத்திலே, தேட்டத்திலே அடங்காத நதியின் சிறப்பினிலே உயர் நாடு.

***

19 பாடல்களில் நான்கு பாடல்களின் கருத்துக்கள் இவை.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு பேறுகளையும் தரும் உயர் நாடு என்பதை எப்படிப்பட்ட சொற்களால் விவரித்து விட்டார் மஹாகவி!

அற்புதம், அற்புதமே! இன்னும் இருக்கின்றன 15 பாடல்கள்! அவற்றையும் படித்தால் மெய் சிலிர்ப்போம். உத்வேகம் பெறுவோம்.

அன்னையை எந்த நாளும் போற்றுவோம்.

வாழிய பாரதம்! வாழ்க மஹாகவி பாரதியாரின் திரு நாமம்!

**

புத்தக அறிமுகம் – 52

அறிவியல் துளிகள் – பாகம் – 12

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

287. எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!

288. விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!

289. விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்!

290. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 1

291. அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 2

292. ப்ளாக் ஹோல் மர்மம்!

293.உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்!

294. விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்!

295. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 1

296. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 2

297. 2016இல் இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 3

298. அறிவியலின் ‘ஹார்ட் ப்ராப்ளம்’!

299. சிறந்த படைப்பாளியாக ஒரு அருமையான கண்டுபிடிப்பு!

300. அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!

301. ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி!

302. கடைசியில் என்ன சொன்னார்கள்?!

303.விண்வெளியில் ‘மூழ்க’ இருந்த வீரர்!

304. 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

305. மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை!

306. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1

307.புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2

308. புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3

309. மர்மக் கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய விஞ்ஞானி!

310 சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

311. ஜப்பானில் கற்கலாம்! வா!

312. கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் – பனிரெண்டாம் பாகம் – 287 முதல் 312 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 

19/8/2016 முதல் 10/2/2017 முடிய வாரா வாரம் வெளியானவை.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்தபோது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!

நன்றி

பங்களூர்                                           ச.நாகராஜன்

31-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.