நம்பி ஆசைப் பட்டு க்ளிக் செய்தால் வெளிப்படுவது அலாவுதீனின் பூதம் தான்!
எத்தனை ரூபாய் இழப்போ! அது அந்த வேளையில் க்ளிக் செய்த நபரின் மோசமான காலத்தைப் பொறுத்து இருக்கும்!
வீடியோவில் நீ ஒரு பெண்ணுடன் இருக்கும் காட்சியை அனைவருக்கும் ஷேர் செய்யவா அல்லது ரூபாய்…. அனுப்புகிறாயா?
தூக்கிவாரிப்போட்டு அந்த வீடியோ பூதத்தைச் சமாளிக்க அந்த பூதத்திடம் அகப்படுபவர் படும் பாடு…..!!!!?
நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்றாலும் ‘மார்பிங்’ செய்யப்பட்ட ஒரு அரசல் புரசலான மங்கிய காட்சியை அனுப்பி மிரட்டும் போது யார் தான் பயப்படாமல் இருக்க முடியும்?
OTP, Passcode, Bank account Number, Aadhaar no, Pan No, Transaction details உள்ளிட்ட எதையும் வெளியிடக் கூடாது!
*
ஒரு பெரிய நாடு தழுவிய நிறுவனத்தின் மேலாளராக அறிமுகப் படுத்திக் கொண்டு என்னிடம் மியூச்சுவல் ஃபண்ட் போடுமாறு அழைத்தார் ஒருவர். நல்ல ஆங்கிலம். குழையும் குரல். மரியாதையான பேச்சு.
நம்பினால் அதோகதி தான்!
நான் அவரது நிறுவனத்தின் முகவரியைக் கேட்டேன். ஆன்லைனில் தான் என்றார். நான் உஷாராகி விட்டேன்.
இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு ஒரு ஆபீஸ் இல்லையா என்றேன்.
தொழில்நுட்ப வேகம் என்றார். தொடர்ந்து நாள் தோறும் பேசுவார். ஆபீஸ் முகவரி, மேனேஜர் பெயர், அவர் போன் நம்பர் கேட்பேன். வைத்து விடுவார்.
*
ஒரு பெண்மணி. எனது முக்கிய பேங்க் பெயரைச் சொல்லி அதில் அக்கவுண்ட் இருக்கிறதா என்றார். ஆம் என்றேன். அவர் அந்த பேங்கில் தான் வேலை செய்வதாகச் சொன்னார். ஒரே ஒரு மெஸேஜ் மட்டும் அனுப்பினால் போதும், டெபாஸிட் செய்யலாம், எக்ஸ்ட்ரா பெனிஃபிட் உடனே பெறலாம்” என்றார்.
நான் சொன்னேன் – “இந்த பேங்க் என் வீட்டிலிருந்து பத்து கட்டிடம் தான் தள்ளி இருக்கிறது. இதோ நேரில் வருகிறேன். எக்ஸ்ட்ரா பெனிபிட்டை தயார் செய்து வையுங்கள். பத்து நிமிடத்தில் பார்க்கிறேன் என்றேன்.”
அவ்வளவு தான்! போன் கட்!
நண்பர்களே, யாரிடமும் போனில் எந்தத் தகவலையும் தராதீர்கள்!
நேரடியாக இதோ வருகிறேன் என்று சொல்லுங்கள், அவ்வளவு தான், போன் கட் ஆகி விடும்!
*
இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி 2022 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சம்பவம் இது!
யூனியன் மினிஸ்டர் அஜய் மிஸ்ரா தேனி (Union Minister Ajay Mishra Teni) அவர்களுக்கு ஒரு போன் கால் வந்தது. இரண்டு கோடி ரூபாய் கேட்டார்கள்! எதற்காக?
2021, அக்டோபர் 3ஆம் தேதி தேனியும் அவரது மகனும் காரில் செல்லும் போது ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் புரட்சி.
அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அதைப் பற்றிய ரகசிய வீடியோ ஒன்று இருக்கிறது என்றும் அது தேனியின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்றும் இரண்டு கோடி தந்தால் வீடியோவைத் தருவதாகவும் ப்ளாக்மெயில் கால் வந்தது.
யூனியன் மினிஸ்டருக்கே ஒரு மிரட்டலா?
அவர் பயப்படவில்லை. நேரடியாக டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் ஆஸ்தானாவிடம் ஒரு புகார் கொடுத்தார். எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.
இதில் ஐந்து டெக்கிகள் இணைந்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ப்ராக்ஸி செர்வர்கள்- proxy servers for dynamic, jumping IPs and Virtual Private network – VPN ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீஸாரையே திணற அடித்தது இந்த டெக்னிகல் கும்பல்.
போன் செய்த இடம் நாய்டாவில் உள்ள ஒரு பார்க். அதன் அருகில் இரு டெலிபோன் டவர்கள் இருப்பதால் எங்கிருந்து கால் வந்தது என்று குழப்பம் ஏற்படும். இன்னும் பல உத்திகள்.
அனைத்தையும் ஆராய்ந்து ஐவரையும் பிடித்தது போலீஸ். பணம் தருவதாகச் சொல்லி குறிப்பிட்ட இடம் செல்ல, அங்கு வந்து சிக்கினான் ஒருவன். அதே சமயம் பல இடங்களில் ரெய்டு நடத்தி மற்ற நால்வரையும் பிடித்தனர் போலீஸார்.
மத்திய மந்திரிக்கே இப்படி ஒரு மிரட்டல் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்!
ஆகவே போனில் நமக்கு அறிமுகம் இல்லாத யாரிடமும் நமது நிதி மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கூறவே கூடாது. தெரிந்த உறவினர்களுக்கும் இப்படிப்பட்ட விவரங்களைத் தரக்கூடாது. ஏனெனில் அவர்களின் கவனக்குறைவாலும் நாம் பாதிக்கப்படலாம்!
ஆன்லைனில் பணம் அனுப்புவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதி நவீன தொழில் நுட்பங்களை மிகுந்த ஜாக்கிரதையாக கையாண்டு அதன் நல்ல அம்சங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – எச்சரிக்கையுடன்!
பழைய கால பூதங்களை கட்டுக் கதை என்று சொல்பவர்கள் கூட இந்த நவீன கால பூதங்களை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும், பயப்பட்டு ஜாக்கிரதையாக இருக்கத் தான் வேண்டும்.
மூலகங்கள் எனப்படும் தனிமங்கள் (Elements) பற்றி 40 க்கும் மேலான கட்டுரைகள் எழுதி இரண்டு நூல்களாக வெளியிட்டேன். ஒவ்வொரு உலோகம் , காரம், உப்பு பற்றிய சுவையான விஷயங்கள், கதைகள் மூலம் வேதியல் சுவையான பாடம் என்பதைக் காட்டியுள்ளேன். 2 புஸ்தகங்களைப் படித்துப் பார்த்துவிட்டு நான் சொல்லுவது சரியா இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள்.
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
CONTENTS-METALS
1.நெப்போலியனை பிரிட்டிஷார் கொன்றது எப்படி?
2.ஆன்டிமணி மாத்திரையின் வினோத உபயோகம்
3 டாக்டர்களுக்குத் தூக்குத் தண்டனை
4..யாரும் காணாத ஒரு அதிசய மூலகம் ASTATINE
5. பல் கட்ட உதவும் ப(ல்)லேடியம்
6.ப்ரோமீன் (Bromine) மூலகம் பற்றிய சுவையான செய்திகள்
7.அணுகுண்டுக்கு சக்தி தரும்; மரகதத்துக்கு ஒளியூட்டும் பெரில்லியம்
8. பற்களுக்கு ப்ளூரைட்; கரப்பான்பூச்சிக்கும் டெப்லான் பாத்திரங்ளுக்கும் கூட ‘F’
9.இடாய்-இடாய் நோய் தெரியுமா? காட்மியம் ஆபத்து!!
10.குரோமியம் தரும் நோய்களும், செய்யும் நன்மையும்
11.இரத்த அழுத்தமும் துத்தநாகமும்
12.உடலுக்குக் கட்டாயம் தேவைப்படும் பொட்டாசியம்!
13.உடலுக்கு கால்சியம் ஏன் தேவை?
14.துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸும் நியான் வாயு கண்டுபிடிப்பும்
15. புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட மதிப்பு மிக்கது!
16.புற்றுநோய்ச் சிகிச்சையில் பிளாட்டினம்; தங்கத்தை விட……. PART 2
17.புற்று நோயைக் கண்டுபிடிக்க உதவும் உலோகம் ரூபீடியம்
18.குழந்தை பிறக்க செலீனீயம் வேண்டும்!
19.உடலில் பாதரச விஷம் ஏறினால் ஆபத்து
20.பைத்தியக்கார பாதரஸ சோதனை!
21.நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்!
22.பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்!
23.பாதரசம் என்னும் அற்புத உலோகம்
24.போருக்குத் தேவையான 16 மூலகங்கள்
25.ஜப்பானியர் பாதுகாத்த மாலிப்டின ரகசியம்
26.மனித உடலில் 7 மில்லிகிராம் தங்கம்
27.வேதத்தில் தங்கப் பல் வைத்தியம்!
28.மோசஸ் உடைத்த தங்க விக்ரகம்
XXX
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
பொருளடக்கம்
1.வெள்ளி (Silver) பற்றிய சுவையான விஷயங்கள்-1
2.வெள்ளி (Silver) பற்றிய சுவையான விஷயங்கள் – பகுதி 2
3.இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1
4.இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை – 2
In the last lesson we saw 31 verbs with SEY (make or do)suffix; in lesson 21 we saw reflexive verbs ending with KOL meaning someone is doing something for himself or her self or myself or yourself.
Sey – Payirchi Sey / Do Exercise பயிற்சி செய் (exercise as in lessons or physical exercise as in a Gym)
xxx
We will look at more KOL (reflexive verbs)
Unlike Sey, KOL is added to converbial form of the verb; I have underlined them in the following examples
Kol is conjugated in the same way in all the compound reflexive verbs
‘எமது ……. தேவனே!’ மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே வாய்
இலாதவன் ஒரு பதர் – திரிபு இல்லாத நூல்களையறிந்தும் நிலைபெற்ற அவையிலே (கற்றதைக்) கூறுந்திறமையற்றவன் ஒரு மக்கட்பதர்,
வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும் மனக்கோழைதான் ஒரு பதர் –
எதிரி வாளேந்திப் போருக்கு வந்தால் அஞ்சியோடி மறைந்திடும்
மனவுறுதியற்றவன் ஒரு பதர்,
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசி!
என்று இகழ நிற்பான் ஒரு பதர் –
செல்லாத வழக்கைச் செப்பி, யாவரும்
சீசி! எனப்பழிக்கும்படி நிற்பவன் ஒரு பதர்,
இல்லாள் புறம்செலச்
சம்மதித்து அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் –
தன் மனையாள் அயலானிடத்திற்போக மனம் ஒப்பி, அவளுடன் கூடிவாழ்வான் ஒரு பதர், தன்னை வேறொருவர் மெச்சாது தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர் – தன்னை மற்றவர் புகழாமல், தானே புகழ்ந்துகொண்டு வெற்றுரையாடுவான் ஒரு பதர்,
வேசையர்கள் ஆசை கொண்டு உள்ளளவும் மனையாளை விட்டுவிடுவான் ஒரு பதர் –
பரத்தையரிடங் காமுற்றுக்காலமெல்லாம் இல்லாளைப் பிரிந்திருப்பவன் ஒரு பதர்.
(க-து.)இங்குக் கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத் தக்கவர்கள்.
நெற்பயிரில் பதர் என்பதன் உள்ளே ஒன்றுமிராது. காலியாக இருக்கும். ஆயினும் வெளியே அது தெரியாது. இது போல மனிதர்கள் போல தோற்றம் தரும் ‘காலி’ கள் , வெற்று வேட்டுக்கள் உண்டு. அவை வெடிக்காத புஸ் வாணங்கள் ; அவர் யாவர்?
நன்கு படித்து என்ன பயன்? அதைப் பிறருக்கு சொல்லத் தெரியவேண்டும். அதை வள்ளுவர் அழகாக ஒரே குறளில் சொல்கிறார்; பேசத் தெரியாதவர்களை மலர்ந்தும் மணம் வீசாத மலர்கள் என்கிறார்
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் —குறள் 650
நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் .
சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)
XXX
கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றிவேற்கை
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்
பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றிவேற்கை
பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.
XXX
பேச்சுக் கலை பற்றி சாணக்கிய நீதி
அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய
நல்ல விஷயங்களைச் சொல்பவரும் கேட்பவரும் அரிது.
XXX
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது
XXXX
2.போரில் புறமுதுகு காட்டுவோன்
புற முதுகு காட்டாமல் போரிட வேண்டும் என்பது இந்து மரபு; அப்படி நெஞ்சில் புண்படாமல் முதுகில் புண்பட்டுவிட்டால் அவர்கள் வடக்கிருந்து உயிர் துறப்பர் ; புனிதமான இமயமலை, மேரு மலை, கயிலாயம் உள்ள வடதிசை நோக்கி உண்ணாவிரதமிருந்து கோப்பெ ருஞ்சோழன் சொர்க்கம் சென்றதை புறநானூறு காட்டும்.
வீரத்தாய் பற்றி ரிக் வேதம் முதல் பாரதி வரை பலரும் பாடியுள்ளனர். அவர்கள் புறமுதுகு காட்டாமல் போரிட்டவர்கள்.
புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:
புறம் 86 (காவற்பெண்டு)
சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்
யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!
பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.
ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.
காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.
ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).
உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:
“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி
விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”
பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:
“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”
Xxx
3.பொய் வழக்கு /பொய் சாட்சியப் பேர்வழிகள்
பொய் சாட்சியம்
பொய் சொல்வோரைக் கண்டுபிடிக்கும் முறை பற்றி உபநிஷதம் மற்றும் கலித்தொகை நூல்கள் பல அதிசயச் செய்திகளை உரைக்கின்றன .பாலைபாடிய பெருங் கடுங்கோ கலித்தொகையில் ஒரு உவமை சொல்கிறார்.
கரிபொய்த்தான் கீழ் இருந்த மரம்போல கவின்வாடி — என்பது அது. அதாவது பொய் சொன்னவன் கீழே நின்றால் அந்த மரமும் வாடிவிடுமாம் இதை ஆதி சங்கரர்- மண்டனமிஸ்ரர் சம்வாதத்தில் முதல் மாலை வாடுபவரே தோற்றார் என்று சரசவாணி சொன்ன சம்பவத்திலும் எடுத்துக் காட்டியுள்ளேன்
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்.
—–விவேக சிந்தாமணி
ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை, வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய் ஒரு பெண்ணாயைக் கண்டதும் காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான் காமன்(ம்) துன்புறுத்த மாட்டான்.(ஆகவே எச்சரிக்கையாயிரு.)
சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை —குறள் 57
”நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்த லாகா”— (பழமொழி 30)
“உண்டியுட் காப்புண் டுறுபொருள் காப்புண்டு
கண்ட விழப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே” —-(வளையாபதி)
xxxxx
6.பிற பெண்களை நாடுவோன்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு—குறள் 148
மார்க்சீயவாதிகளும் பயங்கரவாதிகளும் யார் யாரை எல்லாமோ மாவீரர் என்று புகழ்வர். ஆனால் இந்தியாவில் இரண்டு மாவீரர்தான் உண்டு. புலன்களை வென்று நிமிர்ந்த பார்வையுடன் நிற்கும் சமண மத தீர்த்தங்கரர் மஹாவீரர், ஜிதேந்த்ரியன் என்று புகழப்படும் அனுமன் ஆகிய இருவர்தான் மாவீரர். புலன்களை வெல்லா தோர் செய்யும் இழி செயல் பிறர் மனை நாடுதல் . ராவணன் பட்ட கஷ்டத்தை ராமாயணம் புகலும் . கோவலன் பட்ட கஷ்டத்தைச் சிலப்பதிகாரம் புகலும்; அவன் மாதவியிடம் போகாமல் இருந்தால் சிலம்பு விற்கப் போய் கொலையுண்டு இருக்கமாட்டான் .
திருவள்ளுவரும் ஆடவர்களைச் சுண்டி இழுக்கும் பெண்களைத் தாக்கி பாடுகிறார்.
தினசரி நாளேடுகளில் வரும் கிரைம் CRIME //குற்றச் செய்திகளில் இதுவே முதலிடம் வகிப்பதால் நான் விளக்கத் தேவையே இல்லை
கீழ்மக்கள் யார் ? என்று விவேக சிந்தாமணியும் விளக்கும்
தன்னைத்தான் புகழ்வோரும் தன்குலமே பெரிதெனவே தான் சொல் வோரும், பொன்னைத்தான் தேடியறம் புரியாமல் அவை காத்துப் பொன்றி னோரும், மின்னைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்பு வோரும், அன்னை பிதா பாவலரைப் பகைப் போரும் அறமில்லாக் கசட ராமே,
தன் பெருமைகளை தானே புகழ்ந்து பேசுபவரும், தன் குலமே மிக உயர்ந்தது என்று சொல்லி திரிபவரும், பொருளைத் தேடி அறத்திற்குப் பயன்படுத்தாமல் சேர்த்துவைப்பவரும், அழகிய குணமுள்ள மனைவி இருக்க விலை மகளிரை உடலின்பத்திற்காகச் சேருவோரும், தாய், தந்தை, அறிஞர் ஆகியோரை பகையாகப் பார்ப்போரும், அறம் அறியா கீழ்மக்கள் ஆவர்.
வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.
வள்ளுவனும் சொன்னான்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை(குறள் 439)
பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு
மனு நீதி நவில்வது
மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-
“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)
யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-163
Xxxx subham xxxxxxxx
tags-பேசத் தெரியாதவன், புறமுதுகு காட்டுவோன், பொய் வழக்கு ,பொய் சாட்சிய, மனைவி வாடகை,தன்னைத்தானே புகழ்பவன், பிற பெண்களை நாடுவோன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 6
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
46) திருத்தணிகை
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி யருள்வாயே
பாடல் எண் 263 – ‘குருவி என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப் பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். ஆகவே அந்தத் திருவடியைச் சேருதற்குரிய திருப்புகழ்ப் பாக்களை நான் பாட எனக்குத் தந்தருள்வாயாக!
47) திருத்தணிகை
பொருள் தீரில்
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட
ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே
பாடல் எண் 266 – ‘கூந்தல் அவிழ்த்து’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கையில் கொடுப்பதற்குப் பொருள் தீர்ந்து போனால் மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி வைப்பவர்களான பொது மகளிருடைய நட்பு ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ அருளவில்லையே! எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்வாயாக!
48) திருத்தணிகை
கனத்த தத்துவமுற் றழியாமற்
கதித்த நித்தியசித் தருள்வாயே
பாடல் எண் 278 – ‘நினைத்தது எத்தனை’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்த நிலையை நீ அருள்வாயாக.
49) திருத்தணிகை
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே
பாடல் எண் 280 – ‘பருத்தபற் சிரத்தினை’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கட்டுப்பட்ட இந்த நோய்ப் பையை, வாழும் போது தாங்குவதும், சாவில் ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்தருள்வாயாக!
50) திருத்தணிகை
ஆரணத் துக்க ணத்து னான்மலர்ப் பொற்ப தத்தை
யான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே
பாடல் எண் 283 – ‘பூசலிட்டு’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள்வாயாக!
51) திருத்தணிகை
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் தருள்வாயே
பாடல் எண் 284 – ‘பெருக்க உபாயம்’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (ஆசை, பிறவி, நூல் ஆகிய) கடல்களைக் கடக்க, கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள்வாயாக!
52) திருத்தணிகை
அற்பர மட்டைகள் பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத் தருள்வாயே
பாடல் எண் 287 – ‘பொற்குடம் ஒத்த’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அற்பர்கள், அந்தப் பயனற்றவர்களாகிய பொதுமகளிரிடம் போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செது அருள்வாயாக!
53) திருத்தணிகை
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரினை யருள்வாயே
பாடல் எண் 293 – ‘முடித்த’குழலினர்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே
வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்தருள்வாயாக!
54) திருத்தணிகை
அவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே
பாடல் எண் 299 – ‘வரிக்கலையின்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒருவருடன் பகை, வேறு ஒருவரிடம் விருப்பம் என அவர்களோடு சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
பிரிட்டிஷ் பத்திரிகைகள் மஹாராஜா (Coronation) பட்டமேற்பு விழா பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எலிசபெத் மஹாராணி செப்டம்பர் 8- ஆம் தேதி (2022) இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் சார்ல்ஸ் மூன்றாவது சார்ல்ஸ் (Charles III) என்ற பெயரில் அடுத்த ஆண்டு 2023 மே 6-ஆம் தேதி (2023) பதவி ஏற்கப்போகிறார். பின்னர் பிரிட்டனின் தபால்தலை, கரன்ஸி , காசுகளில் அவரது உருவப்படம் இருக்கும். பிரிட்டிஷ் அரசன் அல்லது அரசி படங்களுடன் தபால்தலை வெளியிடும் நாடுகளும் அவரது படத்தை வெளியிடலாம்.
செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்
நேற்றைய செய்தி என்னவென்றால் ராணி அணிந்த பட்டமேற்பு செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown லண்டனிலுள்ள டவர் ஆப் லண்டன் மியூசியத்திலிருந்தது (Tower of London Museum) அகற்றப்பட்டுவிட்டது என்பதாகும். அவருடைய (Charles) தலை அளவுக்குப் பொருந்துமாறு செய்ய இப்படி அகற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இதில் இந்தியர்களுக்கு சுவையான செய்தியையும் பத்திரிகைகள் கிளப்பிவிட்டுள்ளன . இளவரசி டயானா இறந்தபின்னர் கமில்லா (Camilla) என்ற பெண்மணியுடன் சார்ல்ஸ் வசித்து வருகிறார். அவர் துணைவி என்ற முறையில் அவருடன் அமரும்போது கோஹினூர் வைரம் பிரகாசிக்கும் கிரீடத்தை அணிவாரா? என்பதே கேள்வி. இது பற்றி அரண்மனை வட்டாரம் எதையும் சொல்ல மறுத்துவிட்டதாகப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதியுள்ளன . கோஹினூர் வைரம் கடைசியாக பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கிடமிருந்து கைமாறியது. அதை பிரிட்டிஷார் கவர்ந்து சென்றனர் என்ற செய்தியும், ‘இல்லை இல்லை அதை ரஞ்சித் சிங்கே பரிசாககக் கொடுத்தார் என்ற செய்தியும் அனைவரும் அறிந்ததே. பிரிட்டிஷாரே மற்ற சில நாடுகளைத் தூண்டிவிட்டு எங்களுடையது என்று நீங்களும் சொல்லுங்கள் என்று ஏவி விட்டதையும் நாம் அறிவோம்.
105 காரட் எடை யுள்ள கோஹினூர் வைரம் தாங்கிய கிரீடத்தை மகாராணியின் அன்னை (Queen Mother) அணிந்து வந்தார் .
இப்போது மஹாராஜா CHARLES பதவி ஏற்கும் நாளன்று அணியப்போகும் செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown வெள்ளிக்கிழமை இரவில் , அதி பயங்கர செக்யூரிட்டியுடன் ஒரு ரகசிய இடத்துக்கு அகற்றப்பட்டது. இது நடந்த பின்னரே இதை பக்கிங்ஹாம் அரண்மனை, அறிவித்தது . அது வரைக்கும் பரம ரஹசியம்
2017 ஆம் ஆண்டு முதல் Mark Appleby, of Mappin and Webb மார்க் ஆப்பிள் பி நிறுவனம்தான் ராஜ கிரீடங்களைப் பராமரித்து வருகிறது. அவர்கள்தான் ரஹசிய இடத்தில் கிரீடத்தை பெரிதாக்கப் போகிறார்கள். மன்னரின் தலை , ராணி எலிசபெத்தின் தலையைவிடப் பெரியது.
செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown
1661ம் ஆண்டில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னருக்காக செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் செய்யப்பட்டது 1649-ம் ஆண்டில் உருக்கப்பட்டுவிட்ட முந்தைய கிரீடத்தைப் போல அது வடிவமைக்கப்பட்டது. ஒரிஜினல் கிரீடம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த , ஜனக மஹாராராஜா போன்ற ஞானி/ அரசர் எட்வர்ட் (royal saint, Edward the Confessor, the last Anglo-Saxon King of England). உடையது
பின்னர் செய்த புதிய கிரீடத்தில் சிலுவையும் பூக்களும் இருக்கின்றன. இந்த கிரீடம் தங்கக் கட்டிக்களால் ஆனது (தங்கத்தகடு அல்ல ; கட்டித்தங்கம்)அதில் மாணிக்கம், நீலம் , புஷ்பராகம் மற்றும் (Semi Precious Stones) அமெதிஸ்ட் கார்னெட் , டோர்மலின் போன்ற நவரத்னங்களுக்கு நிகரான கற்களும் இருக்கின்றன . அதை வெல்வெட் துணியால் up of a solid gold frame set with rubies, amethysts, sapphires, garnet, topazes and tourmalines) போர்த்தியிருப்பார்கள் .
St Edwards Crown (Not Kohinoor Crown)
அண்மையில் மஹாராணி இறுதி ஊர்வலத்தைக் கண்ட கோடிக் கணக்கானோர் இதை டெலிவிஷனில் பார்த்திருப்பார்கள் (made
— subham —
tags–கோஹினூர், கிரீடம், செயின்ட் எட்வர்ட்ஸ், மஹாராஜா , சார்ல்ஸ்
tags- கோஹினூர், கிரீடம், மகாராஜா , செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்
சூடான ஐஸ்க்ரீம் (Hot Ice Cream) இருக்க முடியாது, கோகுலாஷ்டமியும் குலாம்காதரும், அப்துல்காதரும் அமாவாசையும் என்று தலைப்பிட்டாலும் பொருத்தம் இராது .முஸ்லீம் வெஜிட்டேரியன் என்று சொன்னாலும் ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்துவார்கள் ; சுருங்கச் சொல்லின் பொருத்த மற்ற இரண்டு விஷயங்கள். இதை அறப்பளீச்சுர சதகம் பல எடுத்துக்கட்டுகளால் விளக்குகிறது
LONDON SWAMINATHAN’S NEW COMMENTARY ON VERSE 11 OF ARAPPALEECHURA SATAKAM
போன்ற கற்புடைய காரிகையரைச் சேர்த்தாய், நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை – அமைதியான நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத கொடிய புரட்டியைக் (GHOST WOMAN NEELI) கூட்டிவிட்டாய், சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று தாழ்ந்து பரவச் செய்தனை – உயர்குடியிலே தோன்றியவர்கள் இழிந்தவரின் பின்போய் வணங்கிப் போற்றப் புரிந்தாய், தமிழ் அருமை அறியாத
புல்லர்மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை – தமிழின் இனிமையைக் காணாத கயவரைக் கவிஞர்கள் பாடுமாறு புரிந்தாய், இப்படி ஆதரவு இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! – இவ்வாறு ஒருவர்க்கொருவர்
பற்றில்லாமற் பண்ணினது ஏன்? கூறுவாயாக.
XXX
. அருந்ததி -வசிட்டரின் மனைவி. கற்புக்கரசி. சங்க இலக்கியத்தில் பலமுறை குறிப்பிடப்படும் கற்புக்கரசி. வானத்தில் மீனாக/ நட்சத்திரமாகக் காட்சி (Northern Star) தருபவள்; அம்மி மிதித்தல் ,அருந்ததி காட்டல் என்ற இந்து மதத் திருமணச் சடங்கின் கதாநாயகி.
xxx
நீலி – வஞ்சகி. நீலியென்பவள் பழையனூரில் ஒரு
வணிகன் மனைவி. இவள் இறந்தபின் பேயானாள். கணவன் காஞ்சிபுரம்
செல்கையில் ஒரு கள்ளிக்கட்டையைக் குழவியாக்கிக்கொண்டு அவன்
மறுமண மனைவியைப்போல் வடிவமெடுத்துப் பின்தொடர்ந்தாள். அவன்
பேயென அஞ்சினான். காஞ்சியிற் சபையோர்முன் தான் அவன்
மனைவியென நம்பச்செய்தாள். அவர்கள் வணிகனுடன் அவளையும்
ஒருவீட்டில் இருத்தினர் கதவைத் தாழிட்டு அவனைக் கொன்று மறைந்தாள். இவளைப்பற்றிய முழுகே கதையையும் என்னுடைய கட்டுரையையிலும் தமிழ்நாட்டை உலுக்கிய பேய் என்ற என் புஸ்தகத்திலும் காணலாம் .
நல்ல குடியில் பிறந்தவர்கள் அரசியல் லாபத்துக்காகவோ பணத்துக்காகவோ ஆட்சியாளர்களுக்குத் துணை போவதை அறிவோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்படி உயர் ஜாதியினர் அவர்களுடைய ஆட்சிக்கு உதவினார்கள் .
கவிஞர்களும் அறிஞர்களும் திடீரென்று சில அரசியல் தலைவர்களை புகழ்ந்து சர்ச்சைக்குள்ளாகின்றனர்.; அண்மைக்கலாத்தில் வாலி (TAMILPOET போன்றோர் மக்களின் நம்பிக்க்கையை இழந்ததைக் கண்டோம்
சில கவிஞர்கள் பொன்னாடைக்கும் அரசாங்க விருதுக்காகவும் ஆட்சியாளருக்கு ஜால்ரா போடுவதையும் இன்னும் பலர் VTICAN MONEY வாடிகன் தரும் கிறிஸ்தவ பணத்துக்காக கர்நாடக இசையை சீர்குலைத்ததையும் , சில பேச்சாளர்கள் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் பேசியதையும் பத்திரிக்கையில் படித்தோம். இதுகள் மேற்கூறிய பொருத்தமில்லாத சூடான ஐஸ்க்ரீம்கள் தகாத சேர்க்கை
பாரதி போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை வறுமையில் வாடவிட்டு , எச்சிற் கையாலும் காகத்தை ஓட்டாத மக்களிடம் பணத்தைக் கோடிகோடியாக (கடவுள்??பூர்வ ஜென்ம புண்யம் ???) சேர்த்து வைத்ததையும் கண்டோம் .
இவ்வாறு பொருத்தமில்லாத விஷயங்களை இணைத்துப் பாடும் பாடல் ஒன்று விவேக சிந்தாமணியில் உண்டு
68. அறியமுடியாதது
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,
பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்
அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தி மரத்தில் மலரையும், வெள்ளை உடலை உடைய காக்கையும், பித்தர்களுடைய மனதையும், நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும், பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும், காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை..
இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.
XXX
அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று கொதிதிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல், குவலயத்தே மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்; நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்; நிலை இலார்க்கு ஈயமாட்டார்.
மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.
இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.
நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின் நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ? பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ? தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்; ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்; எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.
நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.
ஒய்வு பெற்ற முது நிலையில் வானப்ரஸ்தம் விதிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 75 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒருவர் இந்த ஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம். வானப்ரஸ்தம் என்றால் வனத்தில் அல்லது காட்டில் வசிப்பது என்று பொருள் படும்.
இதைப் பற்றி விரிவாக ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம். (3.12.43)
இதை மேற்கொண்டவர்கள் பின்னர், நான்காவது ஆஸ்ரமமான சந்யாஸ ஆஸ்ரமத்தை மேற்கொள்வர்.
முதலில் இந்த வானப்ரஸ்தம் மனைவியுடன் தொடங்குகிறது. இருவரும் சேர்ந்தே வனத்தில் பயணிப்பர். ஒரு சிறிய குடிசையில் வசிப்பர். புனித தலங்களுக்கு யாத்திரை செய்வர். செக்ஸ் என்பது இருக்காது. பின்னால் மனைவி தனது இல்லம் திரும்புவார். தனது புத்திரர்களின் பராமரிப்பில் வசிப்பார்.
இதைப் பற்றிய நீண்ட விவரணத்தை ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.
இதில் தானாக சம்பாதிக்கும் செல்வம் ஸ்வார்ஜிதம். இது உத்தமம் எனப்படுகிறது. அடுத்து தந்தை வழியே வருவது மத்யமம் எனப்படுகிறது. அடுத்து சகோதரனின் செல்வத்தை அடைவது அதமம். ஸ்தீரி மூலமாகப் பெறப்படும் செல்வம் எல்லாவற்றையும் விட அதமம் ஆகும்.
5) வித்தை நான்கு வகைப்படும்
வித்தையானது நான்கு வகைப்படும்.
1) ஆன்விக்ஷ்கி 2) த்ரயீ 3) வார்த்தா 4) தண்டநீதி என்று இவ்வாறு அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.
ஆன்விக்ஷ்கி என்றால் தத்துவம் என்று பொருள்
த்ரயீ என்றால் மூன்று வேதங்கள் என்று பொருள். ரிக், யஜுர், சாம வேதம் ஆகிய மூன்றையும் கற்று உணர்தல்.
வார்த்தா என்றால் பொருளாதாரம் – Economicis
தண்ட நீதி என்றால் அரசியல் – Politics – என்று பொருள்.
ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்த்தா தண்டநீதிஸ்சேதி வித்யா:
அர்த்த சாஸ்திரம் 1.2.1
6) வீணாகப் போகின்றவை நான்கு
சமுத்ரேஷு வ்ருஷ்டி:
கடலில் மழை : கடலில் மழை பெய்து யாருக்கு லாபம்? அது வீண் தான். நிலத்தில் பெய்தால் விளைச்சல் உண்டாகும்.
த்ருப்தஸ்ய போஜனம்
ஏற்கனவே நன்கு சாப்பிட்ட ஒருவருக்கு உணவு அளிப்பது.
சமர்தஸ்ய தானம்
நல்ல திறமை உள்ள ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம்.