வாழ்இடம் என்பர் – இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமங்கை வாழும் இடம் என்பர் அறிஞர்.
நீண்ட பட்டியல் ; எளிய தமிழ்; விளக்கமே தேவை இல்லை . பல வீடுகளில் வலம்புரிச் சங்கை பூஜை அறையில் வைத்திருப்பதற்கும், தோட்டத்தில் வில்வ மரம், துளசி மாடம் வைத்திருப்பதற்கும் இப்போது காரணம் தெரியும் .
தாமரை மலர் கொண்டு தேவியரை பூஜிக்கவேண்டும். கற்புடைய மங்கையரைப் போற்ற வேண்டும். சினிமாக்காரிகளை அல்ல..
மூ தேவி வசிக்கும் இடங்களை அறிந்து தவிர்க்க வேண்டும் இதே கருத்தை வேறு புலவர்கள் எப்படி விளம்புகிறார்கள் என்று ஒப்புநோக்குவோம்.
XXXXX
21. மூதேவி இருப்பிடம்- அறப்பளீசுர சதகம்
மிதம் இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,
மிகுபாடையோர் இடத்தும்,
மெய் ஒன்றிலாமலே பொய் பேசியே திரியும்
மிக்க பாதகரிடத்தும்,
கதி ஒன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய
கந்தை அணிவோர் இடத்தும்
கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத
கன்னி வாழ் மனைஅகத்தும்,
ததிசேர் கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,
சார்ந்த ஆட்டின் திரளிலும்
சாம்பிணம் முகத்திலும் இவை எலாம் கவலை புரி
தவ்வை வாழ் இடம் என்பர் காண்!
அதிரூப மலை மங்கை நேசனே! மோழைதரும்
அழகன் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
(இ-ள்.) அதிரூப மலைமங்கை நேசனே – பேரழகுடைய
மலைமகளின் கணவனே! மோழை தரும்அழகன் – மோழையென்பான்
பெற்ற அழகனான, எமது…………தேவனே!, அன்னம் மிதம் இன்றிப்
திடையிலும் – கழுதைகளின் குழுவிலும், சார்ந்த ஆட்டின் திரளிலும்
– கூடிய ஆட்டுமந்தையிலும், சாம்பிணம் முகத்திலும் – இறந்த பிணத்தின்
முகத்திலும், இவையெலாம் கவலை புரி தவ்வை வாழ் இடம் என்பர் –
இவை யாவும் கவலையை யுண்டாக்கும் மூத்தவள் வாழும் இடம் என்று
அறிஞர் கூறுவர்.
கற்புள்ள பெண்களுக்கு நேர் எதிரி= வீட்டிற்குள் எவரையும் வரவிடாமல் எரிந்து விழும் பெண்கள். கணவனைத் திட்டும் பெண்கள் = கழுதை =ஆட்டுமந்தை= கந்தலாடை தரித்திரன்= பிணம்= பொய்யன்= வாயாடி= வயிறா வண்ணான் தாழியா என்று வியக்கும் வண்ணம் சாப்பிடும் சாப்பாட்டு ராமன்கள்= மூதேவி
XXX
இதோ இன்னொரு லெட்சுமி பாடல்:–
பதுமம் கொடி நகர் மின் பைந்துளவு வில்வம்
கதிர் விளைவு சங்கு கடறீபம் –வதுவை மனை
நற்பரிபாற் பாண்டமிவை நாண் மலரா ணீங்காது
நிற்பிட நல்லோர் நெஞ்சுமே
–உவமான சங்கிரகம், ரத்தினச் சுருக்கம்
பொருள்
லெட்சுமி வசிக்கும் இடங்கள்:- பதுமம்= தாமரை; கொடி – த்வஜம்; நகர் = நகரம்; மின் = மின்னல் ஒளி; பைந்துளவு = பச்சைத் துளசி; வில்வம் = வில்வம்; கதிர் விளைவு = நெற்கதிர்/ தானியம்; சங்கு = சங்கு (வலம்புரிச் சங்கு);; கடல் = சமுத்திரம்; தீபம் = விளக்கு; வதுவை மனை = கல்யாண வீடு; நற் பரி = நல்ல குதிரை; பால் பாண்டம் = பால் பொங்கும் பானை. இவை = இவை எல்லாம், நாண்மலராள் = மஹலெட்சுமி, நிற்பிடம் = நிலைத்து நிற்கும் இடங்களாம். நல்லோர் நெஞ்சுமே = நல்லவர்கள் உள்ளத்திலும் கூட (வசிக்கிறாள்)
xxxx
பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது.
ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா
கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா
கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்
பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா
பொருள்
மஞ்சள் பூசிக் குளிப்பது
குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது
கண்ணுக்கு மை தீட்டுதல்
ரவிக்கை, தாம்பூலம் (வெற்றிலை பாக்கு)
காது, மூக்குகளில் நகை அணிதல்
வாரின தலை
முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்.
நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.
Xxxx
: புறநானூறு தகவல் (Post No.3560)
பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தியற்றே!
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடா அள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டாரே
–வான்மீகியார், புறம் 358
பொருள்:
இந்தப் பாட்டில் பல சுவையான செய்தி-
கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.
லெட்சுமி இல்லறத்தாரிடம் இருப்பதைவிட துறவறத்தாரிடமே அதிகம் இருப்பாள்.
சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ண உணவு இல்லாமல் பல வகைத் துன்பம் அடைந்து வருந்துவர்.
செய்யவளும் தவ்வையும்!
லக்ஷ்மி தேவியியும் மூதேவியையும் சேர்த்து இன்னொரு குறளிலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். குறள் எண் 167இல் திருமகளை செய்யவன் என்றும் மூதேவியை திருமகளின் அக்கா எனப் பொருள்படும் தவ்வை என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளுவரின் நகைச்சுவையையும் நாம் காண்கிறோம். தான் வராமல் தன் அக்காளுக்கு வழி விடுகிறாளாம் இலக்குமி!
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.
இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
—- subham—-
Tags லெட்சுமி , பற்றி, வள்ளுவன், அம்பலவாணர் , அறப்பளீசுர சதகம், புறநானூறு, செய்யாள், தவ்வை, மூதேவி , உவமான சங்கிரகம், வசிக்கும் இடங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 2
ச.நாகராஜன்
உவமைகளை அடுக்குவதில் தான் ஒரு கவிஞனின் சாமர்த்தியம் ஒளிரும். ஆண் :மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
நீதிக்குப் பின் பாசம் படத்தில் இடம் பெறும் இந்தப் பாடலில் உவமைகளின் அடுக்கைப் பார்க்க முடிகிறது. வில்லிப்புத்தூரார் தனது ஒரு செய்யுளில் பல உவமைகளை அடுக்குவது வழக்கம். அதே போல கண்ணதாசனும் திறம்பட உவமையின் சிகரத்தில் ஏறி அமர்கிறார்.
கம்பனை விமரிசிப்பதற்காக கம்பனைப் படிக்க ஆரம்பித்த கவிஞர் அவனது ‘எல்லையொன்றின்மை’ என்று பாரதி வியந்த அதே INFINITY தன்மையை அவனது கவிதைகளில் கண்டு வியந்தார். அவனைத் தனது மனதிலே இருத்தினார். சொற்களிலே தோய்த்தார்; கருத்துக்களிலே வார்த்தார்.
எடுத்துக்காட்டிற்காகசொல் விளையாட்டுப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
கம்பன் பாடினான் இப்படி:-
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ? மைவண்னத் தரக்கி போரில் மழை வண்ணத் தண்ணலே உன்
கை வண்ணம் அங்கே கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்”
தாடகையை வதைத்த போது உன் வில் வண்ணம் கண்டேன். கல்லிலிருந்து அகலிகை எழுந்த இந்தச் சமயத்தில் உன் கால் வண்ணம் கண்டேன் என்கிறார் விஸ்வாமித்திரர்.
இப்படி ஒரு வண்ணத்தைக் கம்பன் காட்டியவுடன் தன் கை வண்ணத்தை கவியரசு பாசம் படத்திலே காட்டுகிறார் இப்படி:
‘பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்!
கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்’
கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும் அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ணப் பாடம் சொல்ல எண்ணமில்லையா
மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா
நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா என்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா!
சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் மட்டுமா வண்ணம் கண்டு மகிழ்கிறார்கள். காலத்தை வென்று இன்றும் தமிழ் மக்கள் கண்ணதாசனின் பாடல் வண்ணத்தைக் கண்டு மகிழ்கிறார்கள்
To Sophia என்ற கவிதையில் ஷெல்லி கூறும் வார்த்தைகள் இவை :
Thy Deep Eyes A Double Planet. ஷெல்லிதாசனாக மிளிர்ந்த மஹாகவி பாரதி “சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணமா, சூரிய சந்திரரோ” என்றான்.
ஆகப் பெரும் உயரிய மனங்கள் இடத்தாலும் காலத்தாலும் மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் கருத்தால் ஒன்றோடு ஒன்று இணையும்; ஒன்றை விட இன்னொன்று விஞ்சும்.
இதையே கண்ணதாசன் கவிதைகளிலும் காண்கிறோம். ஆங்கிலக் கவிஞர்கள், பாரசீகக் கவிஞர்கள், வடமொழிக் கவிஞர்கள் என்று பலரைச் சுட்டிக் காட்டலாம். தீயினில் அகப்பட்ட தீ என்பான் ஆதிகவி வால்மீகி. தீயே உன்னைத் தீயில் போட்டு வாட்டோமோ என்பான் கண்ணதாசன்.
தமிழின் ஏராளமான சிறப்புக்களில் ஒன்று, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். நுட்பமான கருத்துக்களை, ஆழ்ந்த தத்துவங்களை சிறு சொற்களால் கூறி விளங்க வைக்கும் மொழி உலக மொழிகளிலேயே இது ஒன்று தான்.
இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்!
ஒவ்வொரு சொல்லும் இனிமையானது; ஒவ்வொரு சொல்லும் அழகானது! இதுவே தமிழுக்கு உள்ள தனிச் சிறப்பு.
தமிழின் சிறப்பை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அருட்பிரகாச வள்ளலார் தமிழ் பற்றி அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க வேண்டும்.
தமிழ் மொழியில் இரு சொற்களில் ஏராளமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் காட்டியவர் கண்ணதாசன்! இது அவர் அப்பன், பாட்டன், முப்பாட்டனிடமிருந்து அவர் பெற்ற பரம்பரைச் சொத்து! தமிழ்ச் சொத்து!
எடுத்துக் காட்டாக வள்ளுவரின் குறளை எடுத்துக் கொள்வோம். அவர் கடலை (கடல் போன்ற அளவு கருத்துக்களை) குறுக இரு சொற்களில் அடக்கிக் காட்டியவர்.
கற்கக் கசடற – குறள் 391
செய்க பொருளை – குறள் 759
உண்ணற்க கள்ளை – குறள் 922
நினைத்தொன்று சொல்லாயோ – குறள் 1241
பெரும் சிறப்புகளை அடக்கிய இந்த இரு சொல் காவியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.
அடுத்து சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் காப்பிய முடிவில் மனித குலத்திற்கே மாபெரும் செய்தியைச் சுருக்கமாகச் சொல்கிறார் – இரு இரு சொற்களால்! இதை மிஞ்சிய அறவுரையை, அறிவுரையை யாரும் தர முடியாது.
வஞ்சிக் காண்டத்தில், வரந்தரு காதையில் 186 முதல் 202 முடிய உள்ள வரிகளைப் படித்தால் இளங்கோவடிகளின் அற்புத தவமும் தமிழின் சிறப்பும் புரியும், இதில் சில இரு சொற் ஓவியங்கள் இதோ:-
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்: தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்;
அருமையான தமிழ் மொழியின் விந்தைகளை இரு சொற்களில் எப்படி பார்க்க முடிகிறது, பார்த்தீர்களா!
இப்படி தேவார திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், சங்க இலக்கியம், சமீப கால நூல்கள் போன்ற அனைத்திலுமே இந்த இரு சொல் விந்தை ஏராளம் உண்டு.
கடைசியாக மஹாகவி பாரதியார் இதில் ஆற்றிய விந்தைகள் ஏராளம் உண்டு; நேரம் கருதி சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வாழிய செந்தமிழ்!
சுடரே போற்றி!
விதியே வாழி!
செய்க தவம்!
சாகாவரம் அருள்வாய்!
வந்தேமாதரம் என்போம்!
நெஞ்சு பொறுக்குதிலையே!
ஆயிரக் கணக்கில் இப்படி இரு சொல் ஓவியங்களைத் தமிழில் எடுக்க முடியும்; வேறு மொழிகளில் இனிமையும் நீர்மையும் கொண்டுள்ள இப்படிப்பட்ட உவமைகளைக் காண்பது அரிது!
இந்த பாரம்பரியத்தில் வந்த கண்ணதாசனுக்குக் காலம் கை கொடுத்தது; திரைப்படத் துறை மின்னி மின்னி முன்னேறும் பருவத்தில் அவர் பாடலாசிரியராக பல்வேறு வாழ்க்கை நிலைக் களன்களுக்காக பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி இருந்தான்.
கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல். கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்!
Sangam Tamil poets give us a full picture of Lord Siva and his abode Kailash. They show him and his consort Uma residing in Kailash. When Ravana tried to lift Kailash and got crushed Siva was with his wife Uma (Kalittokai 38- 1/5)
The implied meaning in this anecdote is Lord Siva is so compassionate, that he even spared Ravana though he tried to shake Kailash. This is the interpretation that Sekkizar gave us in his Periyapuranam.
He is blessing his devotes , sitting with Uma, according to Murugu.153 and Kali.38).
Siva is portrayed as a God sitting under the banyan tree in another poem- ஆல் அமர் செல்வன் Kali.81-9; 83-14, Murugu.256.
Malaipadukadaam called him காரி உண்டிக் கடவுள் Kaari Undik Kadavul (eater of Black Poison).
Siva as Trayambaka (Three Eyed) was sung by many poets முக்கண்ணன், முக்கணான் Murugu. Line 153, Kali.2-4, Akam 181-16.
His weapon was Kanichi கணிச்சி (axe) and his Flag/ Vahana Bull
ஏறு Puram.56-1, Murugu line 151, Kali 26-5, Kali 150, Pari.8
Sangam poets said that Vedas came from him- -Akam.181, Puram.166, Pari-5-26/27
Xxx
Siva’s burning down of Three Forts of Asura is sung by many poets:
Pari.5-22/27. It is a detailed description. The imagery is as follows
Earth – Siva’s Chariot
Horses – Vedas
Bow- Himalayas
Bow String- The big Snake ‘Aadi Seshan
Driver of the Chariot- Brahma
Weapon – Fire Arrow (may be Laser Gun)
When he fired his arrow, the Three Forts ( Tri Puras) became ash.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு (Uma) புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, 30
பரி பாடல் 5-22/27 PARIPATAL
XXXX
புறநானூறு 55 Purananuru 55
Following verse also mentioned the Snaky Bow Strig , Mountainous Bow, Destruction of Three Forts with One Arrow Shot
ஓங்கு Mountain/மலைப் பெரு வில் பாம்பு/Snake ஞாண் கொளீஇ,
பிறை நுதல் (Crescent Moon Forehead) விளங்கும் ஒரு கண் போல,
Xxx
Final destruction
Among the trinity Siva is attributed with the task of Final Destruction. Yama kills all the people. Even that Yama is destroyed by Siva during the Final destruction – says
Kali 101-24/26 and 103-43/45
Xxx
Worshippers at Navira Malai and Aala Mutram
Malaipadukadaam poem says that Siva in Naviramalai was worshipped by the bards and poets accompanied by music
Lines 81-83 and 25-233
நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல்,
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,
காரி உண்டிக் கடவுளது (Siva) இயற்கையும்,
——-மலைபடுகடாம் 81-83
xxx
காரி உண்டிக் கடவுளைத் (Siva) தொழுதல்
உயர் நிலை மாக் கல், புகர் முகம் புதைய, 225
மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணை,
தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்
சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி,
ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப்
பராவு அரு மரபின் கடவுள் காணின், 230
தொழா நிர் கழியின் அல்லது, வறிது.
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி
மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே
——–மலைபடுகடாம் MALAIPADUKADAAM
XXX
Another place where Siva was worshipped was called Aalamutram – Aka Nanuru 181 – 14/22 gives the details.
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, 15
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசைச் 20
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
அகநானூறு 181 AKA NANURU 181
Xxx
References to Uma
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன்
–கலித்தொகை 38-2
xxx
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூ எயில் முறுக்கிய முரண்மிகு செ ல்வன்
முருகு- 153/154
In short, Sangam poets said whatever said in the Sanskrit Puranas. They never missed a single point.
வாழ்க்கை — மலையைச் சுற்றிச் சுழன்று ஓ டும் வெள்ளப்
பெருக்கெடுத்த ஆறு
உறவினர்- கானல் நீர்
இளமை அழகு – மஞ்சள் வெயில்
உயிர் – வெட்டவெளியில் காற்று வீசும் இடத்தில்
ஏற்றப்பட்ட விளக்கு
நல்ல அருமையான ஓவியம்/ PAINTING பெயிண்டிங் .
இந்த விளக்கு எந்நேரமும் எளிதில் அணையக்கூடியதால் உடனே இரண்டு நேரமும் — காலையிலும் மாலையிலும் உன்னை நினைந்து வழிபட அருள்புரி என்று சிவபெருமானை வேண்டுகிறார்.
XXX
நிலையாமை , விருந்தோம்பல், பிறன் மனை நோக்காத பேராண்மை போன்ற விஷயங்களை உலகில் இந்து மத இலக்கியங்களில் மட்டுமே காண முடியும் . இதை அவர்கள் தனித் தலைப்பாக எடுத்துக்கொண்டு ஸம்ஸ்க்ருதத்திலும் , தமிழிலும் பாடியுள்ளனர் .
கும குருபரர் அருளிய நீதிநெறி விளக்க வெண்பாவிலும் இதே கருத்தைக் காணலாம்
*நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.
xxxx
குறள் 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
[அறத்துப்பால், துறவறவியல், நிலையாமை]
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
வளையாபதிப் பாடலொன்றும் இதையே செப்பும்
“இளமையும் நிலையாவாம் இன்பமும் நின்றவல்ல
வளமையும் அஃதே போல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக் கென்றும் என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின்”
என்கிறது. படிக்கவும் பொருள் விளங்கிக்கொள்ளவும் எளிதானது.
XXXX
விவேக சிந்தாமணி ஆசிரியர் வேறு ஒரு சித்திர ஓவியம் வரைந்துள்ளார்
ANOTHER PAINTING BY THE AUTHOROF VIVEKA CHINTAMANI
பாடல் 32: அநித்ய சுகம் ( பூரணயோகம் வெப்சைட் )
கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,
மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி,
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.
ஒரு கருடன் தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும், தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.
(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)
XXX
கழுதை யார் ?
பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பதரிது எனப்
புகல்வர்; பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின் முறை அருள் கீர்த்தி ஆம்
தலங்கள் அன்பாய்ச் சென்று
நீதி வழுவாத வகை வழக்குரைத்து
நல்லோரை நேசம் கொண்டு
காதவழி பேர் இல்லார், கழுதை எனப்
பாரில் உள்ளோர் கருதுவரே.–விவேக சிந்தாமணி
பொருள்: மானிடராய்ப் பிறப்பதரிது. பிறந்தாலும் சாத்திரப்படி தயவு, புகழுடன் வாழ்ந்து, தல யாத்திரை செய்யவேண்டும் நியாயம் தவறாமல் வழக்கு தீர்த்து, நல்லோருடன் பழகி ஒரு பத்து மைல் தூரத்துக்காவது புகழ் பரவ வேண்டும் அல்லது அவனைக் கழுதையின் மறு பிறப்பே என்று உலகம் கருதும்!
XXX
அப்பர் தேவாரம் GOD’S NOTE BOOK ; daily account for six billion people
“தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர்ஈசனே” (அப்பர், 5ஆம் திருமுறை)
சிவ பெருமானே! உன் மீது எல்லையிலா அனபு கொண்டு அழுது, தொழுது, பாடிப் பரவுகின்றவர்களையும், பொழுதை எல்லாம் வீண் அடிக்கும், உன்னைக் கண்டு கொள்ளாத சோம்பேறிகளையும் எழுதி கணக்கு வைத்துக் கொள்பவன் நீ! என்று பாடுகிறார். இந்த ஊரின் பெயர் திருஇன்னம்பர். அங்குள்ள இறைவனின் பெயர் எழுத்தறி நாதர்!!
காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்று.
XXXX
Do it Now
கடவுளை வணங்குவதை , வயதான பின்னர் செய்து கொள்ளலாம் என்று ஒத்திப்போடக்கூடாது. அதற்குப்பின்னர், குடும்பக் கவலையும், உடல் நலக் கவலையும் அதிகரிக்கும்; வேறு எதற்கும் நேரம் இராது என்பது ஆன்றோர் கண்ட உண்மை. ஆகையால் அவனை இரு போதும் மறவாமல் வழிபட வேண்டும்
நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
Xxxx
காலையிலும் மாலையிலும் தொழுதல் பற்றி அப்பர் சுவாமிகளும் தேவாரத்தில் பாடி அருளியுள்ளார்
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி
காலையும் மாலையும் கைதொழுவார் மனம்
ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே 4-17-8
—subham—
Tags—நீரில் குமிழி, யாக்கை, அறப்பளீசுர சதகம் , நாளை நாளை, . நிலையாமை, அம்பலவாணரின், சொல் ஓவியம்
இயற்கையை வருணிப்பதில் பாரதியார் வெகு சமர்த்தர். மலை, புயல் காற்று , வந்தே மாதரம் பாடலில் , நாட்டின் இயற்கை வள வருணனை ஆகியவற்றைப் படித்தோரும் கூட , பாரதியார் ஒரு அழகான காட்டை வருணித்திருப்பதைக் கவனித்து இருக்க மாட்டார்கள். ஏனெனில் அது கண்ணன் என் காதலன் வருணனைக்குள் புதைந்து போய்விட்டது. அழகான மலர்கள், பழங்கள் நிறைந்த மரங்களுடன் சிங்கம், புலி, மான் என்று பல மிருகங்களையும் ,நிலத்தில் இலைகளுக்கிடையே மறைந்துள்ள மலைப்பாம்பிம்பியும் நமக்கு காட்டுகிறார். அதை ஆங்கில மொழிபெயர்ப்புடன் படிக்கும் போது அதன் பொருள் மேலும் அழகுடன் மிளிர்கிறது
கண்ணன் என் காதலன் – 3
(காட்டிலே தேடுதல்)
ஹிந்துஸ்தானி தோடி – ஆதி தாளம் ரஸங்கள்: பயாநகம், அற்புதம்
திக்குத் தெரியாத காட்டில் – உனைத் தேடித் தேடி இளைத்தேனே.
Kannan My Beloved
The Search in a Forest
Looking for you in a forest
O how tired and lost was I
1. மிக்க நலமுடைய மரங்கள்; – பல விந்தைச் சுவையுடைய கனிகள்; – எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள்; – அங்கு பாடி நகர்ந்து வரு நதிகள்; – ஒரு (திக்குத்)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
10-12-2022 அன்று நிகழ்த்திய உரை
ச.நாகராஜன் எழுதியுள்ள காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன், திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம், திரைப்படங்களில் ராமர் பாடல்கள் ஆகிய மூன்று புத்தகங்களில் உள்ள கருத்துக்களை பெரும்பாலும் கொண்டுள்ள உரை
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று ஒரு நன்னாள். ஏனெனில் தமிழுக்குப் பெருமை சேர்த்த தலையாய, காலத்தை வென்ற கவிஞனை மனதில் இறுத்திக் கொண்டாட இருக்கிறோம்.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.
அற்புதமான இந்தப் பழம் பெரும் பாடல் உலகிற்கு இருள் அகற்றி ஒளி தருவது இரண்டு. ஒன்று சூரியன் இரண்டாவது தமிழ் என்று கூறுகிறது. எத்துணை பொருள் பொதிந்த பாடல்.
பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக கோடானு கோடி ஜீவராசிகளுக்கு ஒளி கொடுத்து உயிர் கொடுத்து வருபவன் சூரியன்.
அதே போல அக இருள் போக்கும் அற்புதத் தமிழ் மொழி கோடானு கோடி பேர்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அக இருள் போக்கி, அவர்களை வாழ்விக்க வைக்கிறது.
இந்தத் தமிழை வாழ வைக்கும் அறிஞர்களைக் கொண்டாடுவது நமது சமுதாயக் கடமை.
எந்த ஒரு நாடு ஆகப் பெரும் அறிஞர்களையும் கவிஞர்களையும் கொண்டாடுகிறதோ அதுவே சிறந்த நாடு.
அவர்களிடமிருந்து நாம் உத்வேகம் பெறுகிறோம்; உன்னதமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்.
அந்த வகையில் வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியைத் தன் பெயரிலே கொண்ட திரு காவிரிமைந்தன் வேறு யார் பொய்ப்பினும் தான் பொய்யாமல் கவியரசன் கண்ணதாசனை நாம் எண்ணும் எண்ணதாசர்களாக ஆக்குவிக்கும் பான்மை போற்றத் தக்கது.
கண்ணதாசன் கலைக்கூடத்தில் அவருடன் இணைந்து நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி முனைவர் திரு தமிழ் இயலன் இந்த இணையவழிக் கூட்டத்தை நடத்துவது பாராட்டுக்குரியது.
ஐ. ஏ. எஸ் என்பதை Inspiration, Admiration, Salutation என்று கொள்கிறேன் நான். உத்வேகத்துடன் வியந்து பாராட்டப்பட வேண்டிய தலையாய தமிழ் மகன் கண்ணதாசன். அவரை முனைவர் மகா சுந்தர் போற்றும் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நினைப்பது சாலச் சிறந்தது.
தமிழைத் தன்னுடன் இணைத்து தமிழுடன் இணைந்த கவியரசு கண்ணதாசனை உயிராக நேசிக்கும் ஆயிரக்கணக்கானோர் இணைய வழியில் கூடி இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
சங்கப் புலவர்கள், தெய்வப்புலவர் திருவள்ளுவர், கவிச்சக்கரவர்த்தி கம்பன், தமிழாகரன் திருஞானசம்பந்தர், அப்பர், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், மகாகவி பாரதியார் என்ற பெரும் பரம்பரை அவ்வப்பொழுது தமிழுக்கு புதிய அணிகளையும் சந்தங்களையும் தந்து அதன் சிறப்பை உலகெங்கும் பரப்பி வியக்கச் செய்வதை வரலாறு கூறுகிறது.
அந்த வகையில் பாரம்பரியம் வழுவாமல் ஆனால் அதே சமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை உள் கிரகித்து புதியதொரு பாடல் வழியைக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.
இவருக்கும் ஏனைய மற்றவருக்கும் உள்ள ஒரு மாபெரும் வித்தியாசம் :REACH. அதாவது, கூறிய கருத்துக்கள் ஆயிரக்கணக்கானோரை உடனடியாகச் சென்றடைதல்.
கவிஞர் பாடினார் என்றால் அது உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அந்தக் கடைக்கோடி தமிழனையும் உடனடியாகச் சென்றடைந்தது.
கோயம்பேடில் வசிக்கும் சாமானியனாலும் சரி, கோடீஸ்வரன் மாளிகையாக இருந்தாலும் சரி, அவரது பாடலை அனைவரும் கேட்டு ரசித்தனர். இன்றும் ரசிக்கின்றனர்.
இதை காஞ்சி பரமாசார்யரே அவரிடமே சொல்லி இருக்கிறார்.
‘நான் பேசுவதை விட நீ கூறினால் அது அனைவரையும் எளிதில் சென்றடையும், அனுபவம் குழைந்தது அது’ என்றார் அவர்.
24-6-1927ஆம் ஆண்டு பிறந்த முத்தையா என்னும் கண்ணதாசன் 17-10-1981இல் மறைந்தார். 54 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் அவரை நினைத்துப் போற்றுகிறோமே அந்த ஒன்றே போதும் அவர் காலத்தை வென்ற கவிஞன் என்பதை உணர்த்த.
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதும், அந்த சூத்திர சுருக்கத்தில் படிப்போரின் அல்லது திரைப்படத்தில் பார்ப்போரின் மனக் கற்பனைக்குத் தக்கபடி பொருளை விரிவுபடுத்திக் கொள்ள வழியை அகலமாக வைத்திருப்பதும் அவருக்கே உரித்தான தனிப் பாணி.
கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த ஆண்டுகள் 54 ஆண்டுகள் தான். என்றாலும் கூட அவர் பல பரிமாணங்கள் கொண்டு Multi Dimensional Personality யாக ஒளிர்ந்தார். அவர் ஒரு கவிஞர். கட்டுரையாளர். நாவல் ஆசிரியர். பத்திரிக்கை ஆசிரியர். திரைப்படப் பாடலாசிரியர். திரைக்கதை வசனகர்த்தா. மொழிபெயர்ப்பாளர். நல்ல பேச்சாளர். நடிகர். மேற்கோள்களை உருவாக்கியவர். கேள்விக்கு தக்க பதிலைத் தந்தவர். ஸ்வரம் கண்ட இசை மேதை.எல்லாவற்றிற்கும் மேலாக கள்ளங்கபடில்லா வெள்ளை உள்ளம் கொண்ட மா மனிதர். நல்ல மனிதர்.இப்படிப் பல பரிமாணங்கள். Multi faceted Personality!
4000க்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் 5000 திரைப்படப் பாடல்கள், சுவையான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக் கணக்கில் கட்டுரைகள்என அவரின் படைப்புப் பட்டியல் நீளும்.
வாழ்ந்த ஆண்டுகளையும் படைத்த படைப்பின் எண்ணிக்கைகளையும் வைத்து பொதுவாக ஒருவன் வாழ்த்தப்படுவதில்லை; மதிக்கப்படுவதில்லை.
இருந்த காலத்தில் இருளை அகற்றி ஒளியையும், சோகத்தை அகற்றிச் சுகத்தையும், காலம் விதிக்கும் தடைகளுக்கு விடைகளையும் தந்தானா என்பதை வைத்தே காலம் ஒருவனை எடை போடுகிறது.
அந்த வகை கணிப்பில் காலத்தை வென்ற கவிஞனாக மிளிர்கிறார் அவர்.
கர்ப்பத்தில் இருந்து ஆரம்பித்து காடு சென்று முடிபவர் வரை அனைவருக்கும் அனைத்து சமயங்களுக்கும் ஏற்ற பாடல்களை வெகுஜன ஊடகம் மூலமாகத் தந்தவர்;
தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில் 3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!
“இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”
அத்தோடு சமகால அரசியலை – குறிப்பாக அதிலிருக்கும் சாக்கடை நாற்றத்தை அம்பலப்படுத்தியவர்; கவிதைகளில் தமிழை விளையாட விட்டு அனைவரையும் ரசிக்க வைத்தவர். ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு இந்து மதத்திற்கு ஒரு சுகமான அர்த்தத்தைத் தந்தவர். அனைவரும் திடுக்கிடும்படியான சுய விமரிசனத்தை உண்மை வழுவாது தந்து அனைவரையும் அதிசயக்க வைத்தவர்., தமிழ் இலக்கிய பலத்தால் தன் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் கண்டு அதைத் தமிழ் மக்களுக்குத்தந்தவர்.
சுருக்கமாக இது தான் கண்ணதாசன்.
நாதா, ப்ரிய சகி என்று கட்டுப்பட்டிருந்த திரைப்படத் துறைப் பாடல்களிலே தமிழ்ப் புரட்சியைச் செய்தார் கவிஞர்.
நாதா போனது. என் தலைவன், மன்னவன் வந்தானடி, அத்தான் என் அத்தான் என்று ஆனது. ப்ரிய சகி, தோழி ஆனது. கொஞ்சி விளையாடும் தமிழ்ச் சொற்கள் நளின நடை போட்டு பாடல்களில் நர்த்தனம் ஆடத் துவங்கின.
தமிழில் சகலத்தையும் தந்த ‘சகல கால சங்கமம்’ கவியரசால் உதித்தது. சகலகலாவல்லவன் ஆனார் அவர்.
யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? என்பது நல்ல குறுந்தொகையில் 40வது பாடல்.
ஒப்பான கழுத்தினையுடைய முதல்வனே!, அன்பு உடைய – அன்புள்ள,
அருமை……………..தேவனே!, காமிக்கு முறை இல்லை – காம மயக்கம்
உடையவர்க்கு முறை தோன்றாது. வேசைக்கு நாண் இல்லை – பரத்தைக்கு வெட்கம் இராது, கயவர்க்கு மேன்மை இல்லை – தாழ்ந்தவர்க்கு உயர்வு வராது, கன்னம் இடு கள்வருக்கு இருள் இல்லை – கன்னம் வைக்கும் திருடருக்கு இருளில் அச்சம் தோன்றாது,
தாம் எனும் மயக்கு அறுத்து ஓங்கு பெரியோருக்கு வரு சாதி குலம் என்பது இல்லை –
தாட்சணியம் உடையபேர்க்கு இகல் இல்லை – கண்ணோட்டமுள்ளவர்க்குப் பகைவர் உண்டாகமாட்டார்,
எங்கும் ஒரு சார்பு இலார்க்கு இடமது இல்லை – ஓரிடத்தும் ஆதரவு அற்றவர்க்கு இடம் கிடையாது,
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான புகழென்பது என்றும் இல்லை –
உலகத்தில் வறியோர்க்குக் கொடாதவர்களுக்கு நிறைந்த புகழ் எப்போதும்ஏற்படாது,
புலையர்க்கு நிசம் இல்லை – இழிந்தவர்க்கு உண்மையிராது,
கைப்பொருள் இலாத ஓர் புருடருக்கு ஒன்றும் இல்லை – கைப்பொருள்
இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.
Xxxx
காம மயக்கம் உடையவர்க்கு முறை தோன்றாது. என்பதை ஆசை வெட்கம் அறியாது என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம். ஆங்கிலத்திலும் காதலுக்கு கண்ணில்லை LOVE IS BLIND என்பார்கள்
XX
– கைப்பொருள் இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.
என்பதை வள்ளுவரே சொல்லிவிட்டார்:-
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு –247
XX
நாம் எனும் மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும் தேவையில்லை என்பதை கிருஷ்ண பரமாத்தவே பகவத் கீதையில் சொல்லிவிட்டார் சொல்லிவிட்டார்:-
இதே கருத்தையே, அறநெறிச்சாரப்பாடல் இவ்வாறு கூறுகிறது
இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார்–நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து.
அதாவது, தம்பால் உள்ள பொருள்களை, நட்பினர்களுக்கும் கொடாமலும், பிச்சையேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் கஞ்சராம் கீழோர் உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும். தடியெடுப்பவனுக்கும் தண்டல்காரனுக்கும் அஞ்சுகிற கீழோர், மற்றபடி, எச்சல் கையால் காக்கைகூட ஓட்டமாட்டார்கள்.
XX
THOSE WHO ARE WITHOUT DHAANA, DHARMA , DAYAA, AND TAPAS ARE NOTHING BUT ANIMALS LIKE ELEPHANTS AND CATS.
வெற்றிவேற்கையும் தானம் தர்மம் அற்றவர்களை
யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
என்று சொல்லி அவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுகிறது
–சுபம்—
TAGS– ஞானி, யானை, பூனை, கருமி, இல்லை, அறப்பளீசுர சதகம், சாதி குலம், காமம்