திருச் சேறை கோவில்களைத் தரிசிப்போம் (Post No.11,820)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,820

Date uploaded in London – –  19 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கும்பகோணத்திலிருந்து சுமார் 25  கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை இருக்கிறது. இங்கு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்கின்றன.

சம்பந்தரும் அப்பரும் பாடிய இத்திருத்தலத்தில் குடிகொண்டுள்ள ஈசனின் பெயர் செந்நெறி அப்பர்.

தேவியின் பெயர்- ஞானாம்பிகை

தீர்த்தம் – மார்க்கண்டேய தீர்த்தம்,

ஸ்தல விருட்சம் – மாவிலங்கை மரம்

தெளம்ய ரிஷி பூஜித்த கோவில் .

கும்பகோணத்திலிருந்து சென்றால் அரிசிற்கரை புத்தூர், திருநறையூயூர் தலங்களையும் தரிசிக்கலாம். போகும் வழியில் பெரிய விஷ்ணு / பெருமாள் கோவில்களும் இருக்கின்றன.

திருவாரூரில் தங்கியும் தரிசித்து வரலாம்.

XXX

திருச் சேறை பெருமாள் கோவில் , மற்றுமொரு விஷ்ணு தலமான நாச்சியார் கோவிலிருந்து (கல் கருடன்) 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது . வைணவ பக்தர்கள் இவ்விரு  தலங்களுடன் உப்பிலியப்பன் பெருமாளையும் அடுத்தடுத்து தரிசிக்கலாம்.

திருச் சேறை, பஞ்ச ஸார க்ஷேத்ரங்களில் ஒன்று .இது முடிகொண்டான் ஆற்றுக்கும், குடமுருட்டியாற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. .

குடவாசல் அருகிலுள்ள பெரிய ஊர்.

மூலவர் – ஸாரநாதன் , நின்ற திருக்கோலம், கிழக்கே பார்த்து நிற்கும் பெருமாள்.

தாயார் -ஸாரநாயகி , பஞ்ச லக்ஷ்மி

தீர்த்தம் – ஸார புஷ்கரிணி

காவேரி அம்மனுக்கு பெருமாள் காட்சி தந்ததால், குளக்கரையில் காவேரி அம்மனுக்கும் ஒரு சந்நிதி உள்ளது.

பிரம்மாவும் விஷ்ணுவும் இங்கு அம்மனைத் தரிசிப்பதாக இருப்பது ஒரு அபூர்வம் ஆகும் .

xxxx

உலகில் எல்லா நதிகளையும் கடவுளாக வணங்குவதும் , தாயாக வணங்குவதும் இந்துக்கள் மட்டுமே. இந்துக்கள் இந்த நாட்டிலேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்ததால் அவர்களுக்கு ‘நீர்’ WATER IS GOD ஒரு கடவுள். வேறு எந்த மதத்திலும்  பிறப்பு முதல் இறப்பு வரை  தண்ணீர் பயன்படுவதில்லை . நீர் Water Mantras மந்திரங்கள் உலகின் மிகப் பழைய புஸ்தகமான ரிக்வேதத்திலேயே உள்ளன ஆரிய – திராவிட வாதம் பேசும் வெளிநாட்டுக் கும்பல்களுக்கு செமை அடி கொடுப்பது கோவில் தீர்த்தங்களும், காவேரி, கங்கை நதி தேவதை வழிபாடுகளும் ஆகும்.

xxxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில் , தைப்பூச காலத்தில் பிரம்மோற்சவம் நடக்கும். அப்போது தேரில் ஸ்ரீ தேவி பூ தேவி , நீலா தேவி, மகா லட்சுமி, சார நாயகி ஆகிய ஐந்து தேவியாருடன் பெருமாள் பவனி வருவார்.

பிரளய காலத்தில், இவ்வூரின் கெட்டியான மண்ணைக்கொண்டு செய்யப்பட கடத்தில் (Mud Pot) வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாக தல புராணம் சொல்லும் .

பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் 13 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள தலம் இது.

புஷ்கரணியின் மேற்குக்கரையில் ஆஞ்சனேயர் கோவிலும் இருக்கிறது. ஈசான்ய திசையில் ஸாரபரமேஸ்வரர் (செந்நெறியப்பர்- சிவன்) கோவில் இருக்கிறது.

xxx

பஞ்ச ஸார க்ஷேத்ரம் என்றால் என்ன?

இங்கு சாரநாதன், சாரநாயகி, சார புஷ்கரிணி, சார விமானம் , சார க்ஷேத்ரம் இருப்பதால் இப்படிப் பெயர் பெற்றது .

சார = சேறு

இது திருச் சேறை என்ற பெயருடன் தொடர்பு உடையது

பிரம்மா இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கான உபகரணங்களை வைப்பதற்காக ஒரு பானை செய்த போது அது உடைந்து கொண்டே இருந்ததாகவும் இறுதியில் விஷ்ணுவின் கட்டளையின் பேரில் இந்த ஊர்ச் சேற்றைக் கொண்டு கட்டம்/ பானை செய்தபோது அதுநிலைத்து நின்றதாகவும் அதனால் இந்த இடம் திருச் சேறு என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது .

Xxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில், ராஜ கோபால சுவாமிக்கும் சந்நிதி இருக்கிறது. இது பற்றியும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரின் உத்தரவின்பேரில் அவருடைய மந்திரி நரச பூபாலன் மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமிக்கு  கோவில் எழுப்புகையில் , அந்தக் கோவிலுக்காக  வாங்கிய கற்களில் ஒவ்வொரு பெரிய கருங் கல்லை சாரநாதன் கோவில் கட்டவும் இறக்கியதாகவும் இதை ஒற்றர் மூலம் அறிந்து நாயக்க மன்னர் வந்த போது , அவரது கோபத்தைத் தணிக்க இங்கும் ராஜ கோபாலருக்கு சந்நிதி எழுப்பியதாகவும் செவி வழிச் செய்தி கூறும்.

xxx

நாச்சியார் கோவில், திருச்சேறை முதலிய தலங்களுக்குச் செல்லும் இந்துக்கள் அடுத்தடுத்து ‘பாடல்பெற்ற’ , ‘மங்களாசாஸனம்’ செய்யப்பட தலங்களை தரிசித்துக் கொண்டே செல்லலாம்.

அடியேனும் இவ்வாறு பிப்ரவரி 2023ல் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்

–சுபம்–

Tags- திருச் சேறை , பெருமாள் கோவில் , சிவன் கோவில்,சாரநாதன் , செந்நெறி அப்பர் , நீலாதேவி, பஞ்ச ஸார க்ஷேத்ரம்    .

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4 (Post.11,819)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,819

Date uploaded in London –   19 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் மார்ச் மாத இதழில் (March 2023) வெளியாகியுள்ள கட்டுரை!

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

நாம் உண்ட பின்னர் நடக்கும் ஆச்சரியங்கள்!

ஆச்சரியகரமான இந்தப் பிரித்தெடுத்தலானது நாம் உணவை விழுங்குவதற்கு முன்னரேயே நடக்கிறது, ஏனெனில் வாயில் உள்ள உமிழ்நீர் அதை ஸ்டார்ச்சாக தூளாக்குகிறது. உணவு ஜீரணம் ஆவதற்கு முன்பேயே நாம் திருப்தி அடைகிறோம், ஏனெனில் நமது வாய் நமது மூளைக்கு ஆற்றல் வருகிறது என்று சொல்கிறது. சில குறைந்த கால சேமிப்புகளை வெளி விடுவது பாதுகாப்பானது என்றும் சொல்கிறது.

இந்தச் சமயத்தில் வயிற்றில் உள்ள அமிலங்களும் சிறுகுடலில் உள்ள என்ஜைம்களும் எது வந்ததோ அதை செயலாக்கம் செய்ய ஆரம்பிக்கின்றன. அவை தங்கள் வேலையை முடித்து விடும் போது உணவில் உள்ள ஆற்றல் மிகு பேரணுக்கள் (molecules) தங்களது அமைதியற்ற எலக்ட்ரான்களை திருப்பி மாற்றி அமைத்து குளுகோஸாக திரட்டிக் கட்டுகிறது. அதாவது சாதாரண ஜீனியாக!

குளுகோஸ் என்பது ஒரு இரசாயனம் கொண்ட ஷிப்பிங் கண்டெய்னர் என்று கூறப்படும் கப்பல் சரக்குக் கொள்கலம் (Shipping container) போல! அது எலக்ட்ரானை எடுத்துச் செல்ல ஒரு அருமையான ‘ஏற்றி செல்லும் வாகனம்’ போல. இதற்கு ஒரு காரணம் அதன் உச்ச பட்ச திறன் மற்றும் அது வசதியாக வடிவம் கொண்டது, சுலபமாக கிடைப்பது. அதுமட்டுமல்ல அது வழக்கத்தை விட அதிகம் கரையும் ஒன்றாகும். அதாவது இரத்தஓட்டத்தில் மிகச் சிறப்பாக பயணப்படுவதாகும். மேலும் அது கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ளதாகும். ஆக்ஸிஜன் மற்றும்   ஹைட்ரஜன் அணுக்கள் உயரிய எதிர்வினை கொண்டவை – அதனால் தான் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் தொட்டிகள் (tanks) எளிதில் தீப்பற்றக் கூடியது என்ற அடையாளக் குறிகளைக் கொண்டிருக்கும் – மேலும் பல நிலையற்ற எலக்ட ரான்கள் ஒவ்வொரு கார்பன் அணுவையும் மற்ற பேரணுக்களுக்கும் நகர்வதற்கான ஆவலுடன் சுற்றுகிறது.  கணிக்க முடியாத படி ஆற்றல் தேவைகளைக் கொண்டுள்ள நமது மூளைகள்,  நியூரான் செயல்பட ஆரம்பித்தவுடன் பெரிய  மிக அதிக தேவையை உருவாக்குகிறது – பிரத்யேகமாக ஆற்றலுக்காக குளுகோஸை நம்பி!

மிக அதிக வளர்சிதை மாற்றத்தை மற்ற எந்த விலங்கினத்தையும் விட அதிகம் கொண்டிருக்கும் ஹம்மிங்பேர்ட் பறவைகள் தன்னுடைய இறக்கைகளுக்கு உடனடியாக தீனியைத் தருகின்றன, அவை சுத்தமான குளுகோஸையும் சுக்ரோஸையும் (கரும்பில் உள்ள முக்கியப் பொருள்) கலந்து உடனடியாக அனுப்புகின்றன. குளுகோஸ் நமது உயிரணுக்களைச் சென்று அடையும் போது – கப்பல் கண்டெய்னர் போல அல்லாமல் அவை முறையாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒரு தொடர் போன்ற  எதிர்வினைகள் உயரிய ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களை உரித்தெடுத்து அவற்றை சிறிய “ஏந்திச் செல்லும் பேரணு”வை உருவாக்கப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு ஒரு பெயர் தனியே உண்டு. அது தான் என் ஏ டி ஹெச் – NADH!

குளுகோஸ் ஒரு கப்பல் கண்டெய்னர் போல என்று கொண்டோமானால், NADH  (கண்டெய்னரிலிருந்து பொருள்களை எடுத்து) டெலிவரி செய்யும் லாரிகள் என்று கொள்ளலாம்.  இப்படி லாரிகளில் எலக்ட்ரான்களை ஏற்றி விடுவது க்ளைகோலிஸிஸ் என்று கூறப்படுகிறது. இது மிகப் பழமையானது. உண்மையில் ஈஸ்ட் திசுக்கள் (Yeast) ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் க்ளைகோலிஸிஸ் ஏற்படும் போது அது ஃபெர்மெண்டேஷன் (புளிப்பேறுதல்) என்று சொல்லப்படுகிறது. உங்கள் தசைகள் அவற்றின் எல்லைக்குத் தள்ளப்பட்ட்டால், உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்றால், உங்கள் உயிரணுக்கள் (செல்) குளுகோஸை ஆற்றல் உற்பத்திக்காக தற்காலிக அளவாக ஃபெர்மெண்ட் (புளிப்பேற்றம்,) செய்கிறது.

இதில் ஆக்ஸிஜன் உட்படுத்தப்பட்டால் உடைந்து தூளாகும் குளுகோஸ் இன்னும் அதிகமாக சுத்தப்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனானது எலக்ட்ரான் மீது தீராப் பசி கொண்டதாகும். அதன் வெளி உறைகள் முழு அமைப்பாக ஆவதற்கு இன்னும் இரண்டே இரண்டு தான் தேவை! அதன் விளைவாக க்ரெப் சுழற்சி மூலமாக அவற்றை இழுக்கிறது. அது தான் உண்மையான வளர்சிதை மாற்றத்தில் ஆற்றல் சேமிப்பகம்.

இந்த சுழற்சியே சற்று சிக்கலானது.. அது மாணவர்களை பேரதிர்ச்சி தருவதை நோக்கமாகக் கொண்டது போன்ற பல இரசாயன சூத்திரங்களின் தொடரைக் கொண்டது. ஆனால், முக்கிய விஷயம் என்னவெனில் குளுகோஸ் இரண்டாக உடைக்கப்படுகிறது. அதன் இரு பகுதிகளும் ஒரு தொடர் எதிர்வினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த எதிர்வினைகள் அவற்றை பாகங்களிலிருந்து உரிக்கின்றன. பின்னர் அவற்றின் முதுகெலும்புகள் மறுபடியும் இன்னொரு சுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய விஷயம் என்னவெனில், போகின்ற வழியில் ஆற்றல் மிகு எலக்ட்ரான்கள் உரிக்கப்படுகின்றன; பின்னர் இன்னும் அதிக NADHகளில் ஏற்றப்படுகின்றன – க்ளைகோஸிஸில் மட்டும் இருப்பதை விட இன்னும் அதிகமாக!

அநேகமாக ஆற்றல் எதுவும் வெப்பத்தில் இழக்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அது பாதுகாக்கப்பட்டு உருமாற்றப்படுகிறது. அதுபோலவே, குளுகோஸில் அதிக சுற்றுப்பாதையைக் கொண்ட எந்த ஒரு எலக்ட்ரானும் NADHகளில் தனது முழு ஆற்றலுடன் சமநிலையில் இருக்கும்.  

தொடரும்………………………………………..

இந்தியா முழுதும் சூரியன் கோவில்கள்: தமிழ் நாட்டில் சூரியனார் கோவில் (11,818)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,818

Date uploaded in London – –  18 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தியா முழுதும் சூரியன் கோவில்கள் இருக்கின்றன. குமரி முதல் இமயம் வரை சூரியனை இந்துக்கள் வழிபட்டதற்கு இவை சான்றாகத் திகழ்கின்றன. தமிழில் சிப்பதிகாரத்தில் உச்சிக்கிழான் கோவில் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் தமிழ் நாட்டிலுள்ள சூரியனார் கோவில் தலத்தைவிட காஷ்மீரில் உள்ள மார்தாண்ட் , குஜராத்திலுள்ள மதேரா , ஒடிஸாவிலுள்ள கொனார்க் ஆகிய கோவில்கள் பமைவாய்ந்தது ஆகும்.

டில்லியிலுள்ள விமானநிலையத்தில் பிரம்மாண்டமான சூரியன் சிலை உள்ளது. முதலில் இந்தியாவில் உள்ள சிறப்பு மிகு சூரியன் கோவில்களைப்  பட்டியல் இடுகிறேன்

ஆந்திரப்பிரதேசம் – அரசவல்லி சூரியன் கோவில்

பீஹார்  – தக்ஷிணார்க்க  சூரியன் கோவில் (கயா அருகில்)

கர்நாடகம் – தோல்மூர்/பெங்களூர்  சூரியன் கோவில்

அஸ்ஸாம்- சூர்ய பஹர்  கோவில்

ஜார்கண்ட் – ராஞ்சி சூரியன் கோவில்

மத்திய பிரதேசம்- உணாவோ பாலாஜி-சூரியன் கோவில்

மத்திய பிரதேசம்- குவாலியர் சூரியன் கோவில்

ஜம்மு காஷ்மீர் — மார்த்தாண்ட சூரியன் கோவில்

குஜராத் – மதேரா சூரியன் கோவில்

உத்தர கண்ட் — கதர்மால் சூரியன் கோவில்

ஒரிஸ்ஸா (ஒடிசா)- கொனாரக் சூரியன் கோவில்

தமிழ் நாடு -சூரியனார் கோவில்

பழைய கோவில்களில் பூஜைகள் கிடையாது. அவைகள் வரலாற்றுச் சின்னங்களே ; பெங்களூர் (தோல்பூர்) முதலியன இடங்களில் உள்ள புதிய கோவில்களில் வழிபாடு உண்டு .

கும்பகோணத்தைச் சுற்றி ஒன்பது கிரகங்களுக்கும் கோவில்கள் உள்ளன. சிலர் இவைகளை மட்டும் தரிசித்து வருவதற்காக செல்லுவார்கள். உடம்பை வருத்திக்கொண்டு ஒரே நாளில் செல்லுவர் அல்லது இரண்டு நாட்களில் செல்லுவார்கள். நான் பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது ஆர , அமர வைத்தீஸ்வரன் கோவில், (செவ்வாய்) சூரியனார் கோவில், சுக்கிரன் கோவிலான கஞ்சனூர் கோவில், திருப்பாம்புரம் (ராகு கேது) திருநாகேச்வரம் (ராகு) முதலிய கோவில்களுக்குச் சென்றுவந்தேன். இன்னும் போகாத கோவில்கள் திருநள்ளாறு (சனைச்சரன்); ஆலங்குடி (குரு ). புதன் தலமான திருவெண்காட்டுக்கு முன்னரே (2022) சென்று வந்தேன் . இன்று சூரியனார் கோவிலை தரிசிப்போம்.

xxxxx

சூரியனார் கோவில் தலத்தின் சிறப்பு

கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவில் சூரியபகவானுக்கு சிறப்பு மிகு தலங்கள் நிறைய உள்ளன. ஆயினும் தென்னிந்திய சம்பிரதாயப்படி பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுவது இதன் சிறப்பு. அதுமட்டுமல்ல சூரியன் தவிர ஏனைய கிரக தேவதைகளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளது

இங்குள்ள சூரிய பகவானுக்கு எதிரில் அவருடைய வாகனமான குதிரையைக்  காணலாம்.

சூரிய பகவான் தனது இரண்டு மனைவிகளான (இடது புறத்தில்) உஷா , (வலது புறத்தில்) பிரத்யுஷா தேவிகளுடன் காட்சி தருகிறார்.

உஷா என்பது காலைச்  சூரிய ஒளி; அதாவது சூரியன் உதிக்கும் முன் தோன்றும் ஒளி.

பிரத்யுஷா என்பதை பிரதிபலிப்பு, நிழல் (சாயா ) என்று சொல்லலாம்

மேற்கு திசை பார்த்து இருப்பதால் அவரை காலையில் கிழக்கில் உதித்த சூரியன் என்றும் கருதலாம். அவருடைய உக்கிரத்தைத் தனிக்க எதிரே குரு என்னும் வியாழ பகவான் சந்நிதி இருக்கிறது

ரத சப்தமி  போன்ற காலங்களில் பெரிய விழா நடைபெறும். ஜாதகத்தில் சூரிய தோஷம் உடையோருக்கு பரிகாரத் தலமாக இருப்பதால் எப்போதும் கூட்டம் இருக்கிறது. மேலும் நகைக்கிரகங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டுகிறது.

பிற்கால சோழர் காலம் முதல் , இந்தக் கோவில் இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன . இந்தக் கோவிலின் மஹிமை பற்றி ஒரு கதையும் உண்டு. காலவ முனிவர் என்பவருக்கு குஷ்ட நோய் ஏற்பட்டதாகவும் அது தீரவேண்டுமென்று பிரார்த்தனை செய்தவுடன் இங்கு நோய் அகன்ற தாகவும் சொல்லப்படுகிறது..

எல்லாக் கோவில்களிலும் நவக்கிரஹ சந்நிதிகள் உள்ளன. இங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி சந்னகிதி இருப்பது சிறப்பாகும்

அருகிலுள்ள திருமங்கலக்குடி பாடல் பெற்ற சிவன் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

—subham—-

TAGS–இந்தியா முழுதும்,  சூரியன் கோவில்கள், பட்டியல்,  சூரியனார் கோவில் , சந்நிதிகள், நவக்கிரகங்கள்,

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 3 (Post No.11,817)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,817

Date uploaded in London –   18 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி

 எடுத்த ஆரத்தி! – 3 

.நாகராஜன் 

ஒரு நாள் சத்யேந்திரநாத் போஸின் மிக நெருங்கிய உறவினரிடமிருந்து அவர் இல்லத்தில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது.

விவேகானந்தா சாலையில் அவர் வாழ்ந்து வந்தார். மிக அருகில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள அங்கு சென்றார்.

ஹிந்துக்களுக்கே உரித்தான வைதீக முறைப்படியான அந்த திருமணத்தை ஶ்ரீ குருமோகன் பட்டாசார்யா என்பவர் நடத்தி வைத்தார்.

அவர் ஒரு வேத விற்பன்னர், நல்ல பக்தர்.

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் சாந்திபூரில் அவர் வசித்து வந்தார். திருமணத்தை வேத முறைப்படி அவர் நடத்தி வைக்க அதைப் பார்த்த சத்யேந்திரநாத் அந்த வைபவத்தால் மிகவும் கவரப்பட்டார்.

அவரது சம்ஸ்கிருத ஞானம், வேத உச்சரிப்பு எல்லாவற்றையும் உற்றுக் கவனித்த சத்யேந்திரநாத் அவரிடம் சென்றார்.

“எல்லா வைபவங்களும் இரவுக்குள் முடிந்து விடுமே. இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா?” என்று அவர் குருமோகன் பட்டாசார்யாவைக் கேட்டார்.

குருமோகன், “சாந்திபூருக்கு நள்ளிரவில் செல்ல முடியவே முடியாது. ஆகவே நாளை காலை தான் போகப் போகிறேன். உங்களுடன் தங்க எனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லை” என்றார்.

சத்யேந்திரநாத் அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

இரவை குருமோகன் அவரது இல்லத்தில் கழித்தார்.

காலையில் அவர் எழுந்த போது ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

சத்யேந்திரநாத் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துளசி மாடம் அருகே நின்று கொண்டிருந்ததையும் அவர் துளஸிக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்தார்.

அவரது பிரமிப்பைக் கண்ட சத்யேந்திரநாத், புன்சிரிப்புடன், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

குருமோகன் வியப்புடன் கூவினார்: “நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி! நீங்கள் ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதை என் கண்ணால் காண்கிறேன்!” என்றார்.

சத்யேந்திரநாத் நிதானமாகக் கூறினார் :’ ஆம், ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது பெரும் சக்தியின் ஆதாரம்!” என்றார்.

துளஸிக்கு ஆரத்தி எடுக்கும் போது, ஆரத்தி எடுப்பது சக்தியின் ஆதாரத்திற்கானது என்ற அவரது கூற்று கோடிக்கணக்கான ஹிந்துக்கள் காலம் காலமாக ஆரத்தி எடுக்கும் பழக்கத்திற்கான பெரும் பயனை எடுத்துரைத்தது.

ஒரு விஞ்ஞானியின் கூற்று என்பதால் அதை அவர் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து அதன் பயனைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை உணர்வது சுலபமே.

குருமோகன் அவரை வணங்கிப் போற்றினார்.

தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் அனைவருடனும் பின்னால் பகிர்ந்து கொண்டார்.

ஆரத்தியின் மஹிமையே மஹிமை!

குறிப்பு:

சத்யேந்திரநாத், கடவுள் துகள், போஸான் பார்டிகிள், செர்ன் விஞ்ஞான கூடம், உள்ளிட்டவை பற்றிய பல சுவையான விவரங்களை எனது அறிவியல் துளிகள் மூன்றாம் பாகத்தில் 76,77,78 அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்.

ஆகவே அவை இங்கு தரப்படவில்லை.

இதே போல கண் திருஷ்டியைப் பற்றி பிரபல விஞ்ஞானி கூறியவை பற்றியும் அறிவியல் துளிகள் தொடரில் அதைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் தரப்பட்டுள்ளதையும் இங்கு அன்பர்கள் நினைவு கூரலாம்.

***

இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

Kathakali Facts- Part 2 (Role of Colours; Play of Colours)-Post No.11,816

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,816

Date uploaded in London – –  17 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

Colours play a major role in the Kathakali dance. From the colours and facial make ups ,one can find out good and bad characters in the dance drama. There are five types of actors:

Pacha = green

Kathi = knife

Thadi = beard

Minikku = polished

Kari = black.

The costume and make up of Kathakali actors are impressive. Legend avers that the Raja Kottarkkara who first conceived the characters had a vision of SEA NYMPHS and MONSTERS from whom he copied the form. A Raja of Vettathunadu family made far reaching changes in the facial make up and head gears of characters. There are four different colourations of the face, each connoting a different mood.

Make up takes about three to four hours; an actor has to tie at least 80 knots in the process of dressing.

Xxx

Five distinct types

1.Pacha

Here the actors colour their faces deep green; the characters who impersonate gods and mythological heroes are called Pacha . they paint their lips dep red. The movements are dignified. They observe absolute silence.

2.Kathi

Kathi characters paint their faces red and green; they represent ferocious and evil beings such as Ravana , the demon king. A knife shaped reddish marking on either side of the nose extending to the cheeks distinguish the Kathi type of actors. They wear artificial teeth and claws.

3.Thadi

Actors who wear red, white and black beards are called Thadi. Bali, Sugriva and Kalakeya wear have red beards, while Kali, Kattalan/ hunter have black beards. Hanuman is depicted wearing white beard. All these characters roar loudly.

4.Minikku

Those who impersonate Narada , ambassadors, ladies etc. come under the group  Minikku. They paint their faces in a mixture of yellow and light red and put white dots on their cheeks. They put on their fore-heads caste marks. They put black dye on eye brows. They redden their eyes.

5.Kari

Demons and evil characters symbolising savagery and primitiveness cone under the category of Kari.

Three to four years training is required for make up artistes.

Kathakali actors redden their eyes by applying the flower of Chunda (Solanum pubescence ).

xxx

Music

The musicians need at least five years training. They follow classical Ragamala. A standard Kathakali performance will take 8 to 10 hours. Nowadays they perform it within a few hours.

Dance

Kathakali actors are masters of both Lasya and Tandava styles. They change it in quick succession. There are three distinct varieties of  Kathakali Dance.

1.Ilakiyattam

The mild and gentle type usually adopted while depicting love and such other sweet and subtle emotions.

2.Idamattu

The intermediate type which is half way between the too slow and too quick varieties.

3.Murukiyattam

The extremely vigorous variety used in duels and battle scenes.

Xxx

Mahakavi Vallathol

Kathakali has flourished long under royal patronage. Raja of Travancore supported various troupes.

Thanks to the great leadership of the foremost poet of Malabar,  Mahakavi Vallathol , the kathakali which was until yesterday a dying art has been revived. Poet Vallathol and his troupe of fine Kathakali dancers succeeded in rendering the historic art more attractive and popular. Now over 100 plays are available in print. Kerala Kala Mandalam and the academies are spreading the art.

Source book – Kathakali by K B Padmanabhan Tampy, 1963

—subham—

Tags- Kathakali, Vallathol, Five types, Colours, Make ups

பிறந்ததிலிருந்து 3 SHIP/கப்பல் பயணம் ! திருச்சி கல்யாணராமன் பொன் மொழிகள் (Post No.11,815)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,815

Date uploaded in London – –  17 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நகைச்சுவை ததும்பப்பேசி ஆன்மீக உண்மைகளை ஆழப்பதிக்கும் உபந்யாசகர் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் ; அவர் பட்டினத்தார் பற்றிய சொற்பொழிவின் இடையே சொன்ன விஷயம்

பிறவிப்  பெருங்கடல் நீந்துவர்  நீந்தார்

இறைவன் அடி சேராதார் – என்கிறார் வள்ளுவர்.

இன்பம்- துன்பம் நிறைந்தது சம்சார சாகரம். சம்சாரம் என்றால் மனைவி என்று சொல்லுகிறோம். சம்சாரம் என்றால் இல்லறம். அதை நீந்திக் கடக்கவேண்டும். நாம் உண்மையில் பிறந்தநாள் முதல் மூன்று கப்பலில் பயணம் செய்து அதைக் கடக்கவேண்டியிருக்கிறது. இறுதியில் அதைக் கடக்க உதவுவதும் ஒரு கப்பல்தான்.

ஆங்கிலத்தில் கப்பல் என்றால் SHIP ஷிப்.

முதலில் நமக்கு அறிமுகம் ஆவது தாய், தந்தை மற்றும் சித்தப்பா, அத்தை, மாமா , மாமி. அதாவது பிறந்தவுடனேயே ரிலேஷன்ஷிப் RELATIONSHIP என்னும் கப்பலில் குதிக்கிறோம். இவர்களில் யாரையாவது எனக்குப் பிடிக்கவில்லை என்று மாற்ற முடியுமா? மாமா, மாமா தான் ; அத்தை அத்தைதான். அந்த ரிலேஷன்ஷிப் என்ற சொந்த பந்தத்தை தமிழில் சொந்தக்காரர்கள்- உறவினர்கள் என்போம். இது முதல் SHIP கப்பல்=ஷிப்.

கொஞ்சம் வளர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போனால் அங்கே நாம் மாட்டிக்கொள்வது FRIENDSHIP ப்ரண்ட்ஷிப்ப்பில். அது ஒரு கப்பல்= ஷிப். அதிலிருந்தும் மீள்வதில்லை ; அது அலுவலகம்வரை தொடர்கிறது.

பின்னர் இல்லறத்தில் நுழைகிறோம். . அங்கு நமக்குக் கிடைப்பதோ வாழ்க்கைத் துணை ; அதாவது PARTNERSHIP பார்ட்னர்ஷிப் ; மனைவி .

இவர்கள் யாரும் நாம் இறக்கும்போது கூட வரப்போவதில்லை. அதற்குப்பின் நமக்கு உதவ இறைவன் இருக்கிறான். அவனை அடையவும் ஒரு ஷிப் – கப்பல்தான் — உதவும். அதுதான் WORSHIP வொர்ஷிப் – இறை வழிபாடு.

பட்டினத்தார் போன்றோர் இப்போதே அவனை நினை என்கிறார்.

Xxxx

திருவெண்காடர்

பட்டினத்தாரின் பெயர் திருவெண்காடர் ; அவர் கோடீஸ்வரனாக இருந்த காலையில் , தன்னுடைய வெளிநாட்டு கப்பல் பிஸினஸ் (Maritime Trade) நிமித்தமாக அதிகாரிகளை சென்றுபார்த்தார். அந்த நாட்டு அரசனைச் சென்று பார்த்தார். அவர்கள் எல்லோரும் அதிகார தோரணையில் அமர்ந்து இருக்கபட்டினத்தார் நின்ற நிலையில் தன்  கோரிக்கைககளை முன்வைத்தார்.

பட்டினத்தார் முறும் துறந்த முனிவராகி, கோவணத்துடன் ஊருக்கு வெளியே அமர்ந்திருந்தகாலையில் , அதே அதிகாரிகள் வந்து ,

திருவெண்காடரே ; இப்படி பாதியில் பிசினஸ்ஸை விட்டுப் போகலாமா ? இதில் என்ன லாபம் என்றனர்.

நான் இதற்கு முன்னர் பிசினஸ்மேன் (Businessman) என்று வந்த போது நீங்கள் உட்கார்ந்து இருந்தீர்கள்; நான் கைகட்டி வாய்பொத்தி நின்றுகொண்டு பேசினேன். இன்று பாருங்கள்; நான் அமர்ந்து ஆனந்தமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் நின்றுகொண்டு இருக்கிறீர்கள் – என்றார்.

Xxxx

LOAN லோன் – கடன் — தொல்லையிலிருந்து வழிபட மந்திரம்

நம்மில் யாராவது கடன் இல்லாமல் இருக்கிறோமா?

வீட்டுக் கடன், போன் கடன், கார் கடன், ஸ்கூட்டர் கடன், எஜூகேஷனல் லோன் (கல்விக்கடன்), திருமணக் கடன் என்று இறுதிவரை லோன்- கடனில் சிக்கித் தவிக்கிறோம். ஆனால் வெளியே பேசும் போது என் வீடு, என் கார் என்கிறோம். போன் கட்டணம் செலுத்தாவிடில் அது கூடப்பேசாது.

வாழ்நாள் முழுதும் நமம்மைத் தொடர்ந்து வரும் கடனை LOAN ஒழிக்க இரண்டு லோன்கள் LOANS உள்ளன. அதை நாடுங்கள்; கடன் விடுபடும்

ஒன்று மாலோன் = திருமால் MAA+ LOAN

இன்னொன்று மயிலோன் = முருகன்  MAYIL + LOAN

மாலோனையும் மயிலோனையும் வழிபட்டால் பிறவி LOAN லோன் = பிறவிக் கடனிலிருந்து விடுபடலாம்.

Xxxx

L I C

எல் ஐ சி என்ற அமைப்பு இருக்கிறது; யோகக்ஷேமம் வஹாம்யஹம் என்று பெரிதாக எழுதிப்போட்டு இருக்கிறார்கள்; எனக்கே புரியவில்லை. பணம் கட்டு; நீ போனால் …….. (செத்துப் போனால்) இவ்வளவு கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள்; இருக்கும்போது பயன்படுத்த பணம் இல்லாமல், (செத்துப்) போனால் கிடைக்கும் பணம் எதற்கு?

கையெழுத்துப் போடப் போகும்போது உன் நாமினி NOMINEE  யார் என்று கேட்கிறார்கள் ; கூடவே வந்த மாமி (நீ) இதோ நான்தான் நாமினி இருக்கிறேனே என்கிறாள்; கணவன் போனபின்னரும் நீண்ட நாள் வாழ்வோம் என்று நம்புகிறார்கள்!

( அவர் சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்; சில சொற்கள் என்னுடையதாக இருக்கலாம்; ஒரிஜினல் உபன்யாசத்தை யூ டியூப் முதலிய சேனல்களில் காணவும்; இன்னும் சுவையாக இருக்கும்.)

Xxxx subham xxxxx

TAGS– மா லோன், மயிலோன், பட்டினத்தார், மூன்று ஷிப் , கப்பல், திருச்சி, கல்யாணராமன், உபந்யாசம், லோன், Loan, Ship, Relationship, Partnership, Friendship

நாச்சியார் கோவில் கல் கருடன் (Post No.11,814)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,814

Date uploaded in London – –  17 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நாச்சியார் கோவில்(திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால்  மேலும் மேலும்  தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம். இதே ஊரில் பாடல் பற்ற சிவன் கோவிலும் இருப்பது எல்லா இந்துக்களுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனையும் கொடுக்கிறது. 

முதலில் நான் பிப்ரவரி 2023-ல் எப்படிப் போனேன் என்று சொல்லி துவங்குகிறேன் . கும்பகோணத்திலிருந்து இந்த ஊர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நாங்கள் காரில் சென்றோம். அருகிலேயே சிவன் கோவிலும் இருக்கிறது. கூட்டம் இல்லாத சிவன் கோவில்கள் என்ற தலைப்பில் எழுதிய மூன்று சிவன் கோவிலில் இந்த சிவன் கோவிலும் அடக்கம் .

இப்போது பெருமாளைத் தரிசிப்போம்.

மூலவர் பெயர் – ஸ்ரீநிவாசன் , திருநறையூர் நம்பி, வாசுதேவன் .

நின்ற திருக்கோலம் .

தாயார் வஞ்சுள வள்ளி ( நம்பிக்கை நாச்சியார்) , திருமால் பக்கத்தில் திருமண கோலத்தில் நிற்கிறார்.

ஐந்து தீர்ததங்கள் உள்ளன.

மேதாவி முனிவரின் வளர்ப்பு மகளான வஞ்சுள வல்லியை திருமால் ஐந்து உருவங்களில் மணந்து கொள்கிறார் என்பது நம்பிக்கை .

சிறிதும் பெரிதுமாக 16 கோபுரங்கள் காட்சி தருகின்றன.

பெருமாளுடைய  கல் கருட வாகனம் பிரசித்தமானது. ஏழு வியாழக்கிழமைகளில் கருட பகவானை அர்ச்சித்தாலோ தரிசித்தாலோ நினைத்தது நிறைவேறும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகிறார்கள் .சந்நிதியில் 4 பேர் தூக்கும் கருட வாகனத்தை இறுதியில் 64 பேர் தூக்கிச் செல்லுவார்கள்; கல் கருடனுக்கு தனி சந்நிதி உள்ளது.

கருட சேவையின்போது, பெருமாள் கல் கருடன் வாகனத்திலும் தாயார் அன்ன னாவாகனத்த்திலும் பவனி வருவார்கள்.

திருமங்கை ஆவார் பாடிய திருத்தலம் . 108 திவ்ய தேசங்களில் ஒன்று

கருட பட்சிகள் மரணம்

திருக்கோயில் நந்தவனத்தில் நீண்டகாலமாய் வசித்து வந்த கருட பட்சிகள் 1999ம் ஆண்டில் முக்தி அடைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டன.. இவை  நமக்கு திருக்கழுகுக் குன்ற கழுகுகளை நினைவுபடுத்தும்

108 திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் விக்ரஹங்கள் எல்லாவற்றையும் இந்தக்கோவிலில் ஒரு சீராகக் காணலாம் என்று லிப்கோ பாதிப்பு கூறுகிறது.

அருகில் திரு நாகேஸ்வரம், அழகாபுத்தூர் கோவில்கள் உள்ளன. இதே ஊரில் பாடல் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது.

—subham—

Tags-நாச்சியார் கோவில், கல் கருடன், பெருமாள், கருட பட்சிகள் , மேதாவி முனிவர் , திவ்ய தேசம்

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 2 (Post No.11,813)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,813

Date uploaded in London –   17 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த

ஆரத்தி! – 2

.நாகராஜன்

மேக்நாத் சாஹா ஜெர்மானிய  மொழியைக் கற்றுத் தேர்ந்தார். ஜெர்மானிய மொழியில் இருந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.  சத்யேந்திர நாத் பிரெஞ்சு மொழியைக் கற்றுத் தேர்ந்தார்.  அந்த  மொழியில் இருந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

1921இல் டாக்கா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதில் சத்யேந்திரநாத். இயற்பியல் பிரிவில் ரீடராகச் சேர்ந்தார். அங்கு அவர் ‘எலிமெண்டல் பிஸிக்ஸ் (Elemental Physics) மற்றும் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபியில்  தனது ஆய்வைத் தொடங்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது போட்டோ எலக்ட்ரிக் எபக்ட் பற்றியும் அல்ட்ரா வயலட் காடராஸ்கோப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் கொள்கையில் இருந்த பலஹீனத்தைப் பற்றி (Weakness of the theory) அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, தன்னால் எடுக்கப்பட்ட குறிப்புகளில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி அவர் கூறினார்.

அதில் அவர் ஒரு தவறை கணக்குப் போடுவதில் செய்யவே கொள்கையும் சோதனை முடிவுகளும் ஒன்றாக அமைந்திருந்ததைக் கண்டு திகைத்தார். நன்கு சிந்தித்துப் பார்த்ததில் தான் கணிதத்தில் தவறு இழைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.

அவரது ஆர்வம் மிகுந்தது. தீவிரமாக ஆராய ஆரம்பித்தார். முதலில் அவர் கொள்கை முடிவுகளை ஒருவர் கூட ஆதரிக்கவில்லை.

ஆனால் அவர் ‘”Plank’s Law and the Hypothesis of Light Quanta’ என்ற ஆய்வுப் பேப்பரை எழுதி வெளியிட்டார்.

பின்னர் தனது ஆய்வுப் பேப்பரை நேரடியாக ஐன்ஸ்டீனுக்கு அவர் அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டீன் அதைப் பார்த்தார். அதில் இருந்த உண்மையைக் கண்ட அவர் அதை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

எந்தக் கணிதம் தவறாகப் போடப்பட்டது என்று சத்யேந்திரநாத் நினைத்தாரோ அது இப்போது, ‘ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ்’ (Einstein’s Statistics) என்று அறியப்படுகிறது.

ஐன்ஸ்டீன் இந்தக் கொள்கை முடிவை அணுக்களின் மீது பிரயோகம் செய்து பார்த்தார். அது ஒரு புதிய ‘Condensate’ஐக் கண்டு பிடிக்க வழி வகுத்தது. இதுவே இப்போது போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட்’ என்று அழைக்கப்படுகிறது.

கண்டன்சேட் என்பது உண்மையில் போஸ்டன் துகளின் செறிந்த நிலையாகும்.

1995ஆம் ஆண்டு அது இருப்பது நிரூபிக்கப்பட்டது.

பிரபஞ்சத்தில் உள்ள இந்தத் துகள்கள் க்வாண்டம் நம்பருடன் முழுமை எண்(integer) கொண்ட மதிப்பாக பிரபல விஞ்ஞானி பால் டிராக்கினால் ‘போஸான் பார்டிகிள்’ என்று பெயரிடப்பட்டது. (Paul Dirac named it as Boson Particle)

1924ஆம் ஆண்டு சத்யேந்திரநாத் ஐரோப்பாவிற்குப் பயணமானார்.

ஜெர்மனியில் அவர் ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். அவருடன் பல பொருள் பற்றி விவாதித்தார்.

பிரான்ஸ் சென்று மேடம் கியூரியைச் சந்தித்தார். அவரது சோதனைக்கூடத்திலேயே சில காலம் சோதனைகளைச் செய்தார்.

1924 முதல் 1926 முடிய பிரபல விஞ்ஞானிகள் பலரையும் அவர் சந்தித்தார்.

1927இல் டாக்கா திரும்பிய அவர், இயற்பியலில் மூத்த பேராசிரியராக அமர்ந்தார்.

ரவீந்திரநாத் தாகூர் சத்யேந்திரநாத்தைப் பார்த்து மிகுந்த உத்வேகம் கொண்டார். 1937ஆம் ஆண்டு அவர் வங்க மொழியில் ஒரு அறிவியல் புத்தகத்தை எழுதி அதை சத்யேந்திரநாத்திற்கு சமர்ப்பணம் செய்தார்.

இதனால் மனம்  மகிழ்ந்த சத்யேந்திரநாத் நோபல் பரிசு கிடைத்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியைத் தான் பெற்றிருக்க மாட்டேன். அவ்வளவு பெரிய மதிப்பை ரவீந்திரநாத் தாகூர் கொடுத்து விட்டார் என்று கூறினார்.

வங்க மொழியிலேயே அறிவியல் கற்பிக்கப் பட வேண்டும் என்ற பேரார்வத்தை அவர் கொண்டிருந்தார். யாராவது அறிவியலை வங்க மொழியில் கற்பிக்க முடியாது என்று கூறினால் ஒன்று அவருக்கு வங்க மொழியைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்றோ அல்லது அறிவியலைப் பற்றி அவர் அறியவே இல்லை என்றோ கூறலாம் என்றார்.

வங்க மொழியில் அறிவியலைக் கற்பிக்க வேண்டும் என்பதற்காக ‘விக்ஞான் பரிசய’ என்ற ஒரு இதழையும் அவர் ஆரம்பித்தார்.

சத்யேந்திரநாத் ஒரு நல்ல இசைப் பேரறிஞர். பல நாட்கள் இரவில் தூங்காமல் நல்ல இசையைக் கேட்டுக் கொண்டே இருப்பார். எஸ்ராஜ் வாத்தியத்தை இசைப்பார். தோட்டக்கலையில் அவருக்கு ஈடுபாடு உண்டு.

அவர் நோபல் பரிசு பெறாதது ஒரு பெரும் துரதிர்ஷ்டமே.

ஒரு நாள் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது….

–    தொடரும்

Kathakali Facts!- Part 1 (Post No.11,812)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,812

Date uploaded in London – –  16 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I was reading an old book on the Kathakali dance form which is staged until this day in Kerala. It is a very short book but with full of facts. Here is a summary.

1.      Kathakali is a dance drama form peculiar to Kerala. Katha+ kali means Story Play.

2.      Kathakali is an improvement on Krishnattam,  kind of dance drama based on Jayadeva’s Ashtapathi. It came into being around 1650 CE.

3.      Raja Veera Kerala Varma of Kottarkkara requested the Zomorin of Calicut (Zamorin= Hindu king) to send the troupe of Krishnattam players for a Roal Wedding. But he refused to send a troupe saying that there were no scholrs in the south who are capable of appreciating such a scholarly artistic  performance. Disappointed king, adopted simpler costumes and started Ramanattam based on Ramayana. it became Kathakali in course of time.

4.      Ramanattm was first performed in front of the Ganapathi temple of Kottarakkara. This is followed by all kathakali artistes. Their irst performance is performed in front of the temple

5.      This is the modern history. But there is information to show that this form of dance is at least 1000 year old. Ammu raja of Bali Islands (now Indonesia) took some people from Travancore and they taught the islanders a dance where gestures are predominant. Later it spread to Java island.

6.      The Raja of the principality of Kottarkkara (1575- 1650) was the first composer and originator of Kathakali. He made 8 plays to show 8 important episodes of Ramayana. Raja of Kottayam (1665-1743) developed this dance based on Bharatham. He participated in one of the performances without anyone’s knowledge. When his troupe presented a show in front of Zamorin/Hindu King of Calicut, the king invited all actors and presented them gifts, he was surprised that 50 year old Kottayam Raja was one of the actors.

7.      Hasta Mudras (hand poses) are very important in this type of dance. The system of Finger Poses is based on Bharata Natya Sastra. Hasta Lakshana Deepika and Abhinaya Darpana are two more important works on Mudras

8.      Kathakali language is Manipravala- a mixture of Sanskrit and Malayalam. The dialogues are in Malayalam and intermediate verses  in Sanskrit.

9.      The verse or sloka introduce the actors on the stage. The verses , as a rule, close with the words, And so they spoke. The actors are behind the 5X4 feet long silk curtain.  The curtain holders will raise  or lower the curtain (Thirassila) according to the tempo of the dance.

10. Nowadays old plays are not used much. New plays are written. It is a difficult art. One has to undergo a rigorous training for 12 years to get a minor role on stage. They do it in old Guru kula way.

11. Ten to fifteen years of stage experience makes an actor competent to play major roles.

12. There are nine different movements or actions of the head, six movements each of the eye brows, nose, cheeks and lips , seven movements of the chin and nine movements of the neck, eleven glances of the eyes, each varying in meaning.

13. The actors are tabooed from speaking while on the stage. The strides, the hand poses, dances and facial gestures are the  effective substitutes for vocal expression

14. The Kathakali dancers are masters in the movements of eyes. The eyes of the Kathakali dancers actually dance. There are nine different movements of eye balls, nine movements of eye lids, and seven movements of eye brows. The reddening of the eyes of the actors lends an ethereal charm and superhuman effect to the pantomime.

15. Rishi Bharatha, author of dance treatise, while describing Nritya , ordains that “the dancer with the throat  should sing; with feet express the tala; with the eyes express the bhava and with the hands express meaning”. This terse definition does justice to Kathakali and demands a four fold talent of the dancer

In the next part let us look at the five distinct types of actors, three distinct varieties, 80 knots in dressing, 30 members in a typical troupe, 9 hour long performance etc.

To be continued………………………….

TAGS- Kathakali, Kerala, Dance , Facts

நான் அரசனுக்குப் பிறந்தவனா? ஆண்டிக்குப் பிறந்தவனா? கதை (Post No.11,811)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,811

Date uploaded in London – –  16 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருச்சி கலைமாமணி கல்யாண ராமன் சொற்பொழிவுகள் மிகவும் சுவையானவை; அவர் நிறைய உண்மைகளை , பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துவார். இதோ அவர் சொன்ன ஒரு குட்டிக்கதையும் , அவர் உதிர்த்த சில பொன்மொழிகளும் :

ஒரு மாமி, நம் உபன்யாசகரிடம் பெருமையாகச் சொன்னாளாம் :

என் மகன் லண்டனுக்குப் போயும் தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வருகிறான் —என்று பெருமையுடன் சொன்னாளாம்.

உபந்யாசகர் சொன்னார்:

மாமி; அதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கோ. என் மகன் தினசரி விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்னதால் அவனுக்கு லண்டன் செல்லும் வேலை கிடைத்தது என்று.

XXX

பிராமணர்களுக்கு ஜோதிடமே தேவை இல்லை!

என்னிடம் நிறைய பேர் ஜோதிடம் பார்க்க வருகிறார்கள்; உண்மையைச் சொல்லுகிறேன்; சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்களுக்கு ஜோதிடமே தேவை இல்லை. அவர்கள் மூன்று வேலையும் நவக்கிரகங்களையும் வணங்குகிறார்கள். நவக்  கிரகங்களின் பெயரைச் சொல்லி தர்ப்பணம் செய்கிறார்கள் (ஆதித்யம் தர்ப்பயாமி…….கேசவன் தர்ப்பயாமி………. மந்திரங்கள் )

மேலும் காயத்ரீயை உபாசனை செய்கிறார்கள்; அவர்களுக்கு நவக்கிரகங்கள் தீமை செய்யாது .

xxxx

(இதோ என் சரக்கு : அப்படியானால் சந்தியாவந்தனம் செய்யாத பிராமணர் அல்லாதோருக்கு ஏதேனும் மந்திரம் உண்டா ? இருக்கிறது; உண்டு .

1962-ம் ஆண்டில் அஷ்ட கிரஹ சேர்க்கை ஏற்பட்டது; அப்போது உலகம் அழியுமா என்ற பெரும் பீதியைப் பத்திரிகைகள் தினமும் வெளியிட்டு வந்தன . காஞ்சி மஹா சுவாமிகள் (சங்கராச்சார்யார் 1894-1994) மக்களின் மனதை அமைதிப்படுத்தினார். திருஞான சம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகத்தை எல்லோரும் சொல்லுங்கள் என்றார். பத்திரிக்கைகளும் அதை வெளியிட்டன. பல்லாயிரக்கணக்கில் அந்த தேவாரப்  பாடல் இலவச விநியோகம் செய்யப்பட்டன . எட்டு கிரகங்களும் ஒரே ராசியில் கூடிய காலத்தில் பெரிய கேடு  எதுவும் நிகழவில்லை . பிறகு வந்த சீனப் போரிலும் அமெரிக்க உதவியால் நாம் பிழைத்தோம் . வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு திருப்பதிகத்தில் நவக்கிரக தர்ப்பணம் வந்துவிடுகின்றது.

பாடல் 1

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

    மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்

    உளமேபு குந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

    சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

    அடியார வர்க்கு மிகவே.))

Xxxx

ஆண்டி மகனாஅரசன் மகனாகதை

மீண்டும் திரு.கல்யாண ராமன் உரைக்குத் திரும்புவோம். மாயவரம் ராதா கல்யாண உற்சவத்தில் கர்ணனும் கண்ணனும் என்னும் தலைப்பில் ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நடத்தினார்; கடல்மடை திறந்தார் போல வில்லிப்புத்தூரார் இயற்றிய மஹாபாரத பாடல்களைபி பொழிந்தார்; நயம்பட பொருள் உரைத்தார் . கர்ணனுக்கு மிஞ்சிய கொடையாளி பூமியில் இல்லை என்றார். அப்போது கருணையும் கொடையும் பிறவிக்குணங்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒரு கதை சொன்னார் (என் சொற்களில் அதை வடிக்கிறேன்; பிழை இருப்பின் அது என் பிழையே)

xxxx

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார்; ஒரு நாள் கண்ணிரண்டும் தெரியாத ஒரு புலவர் அந்த அரசவைக்கு வந்தார். அவரை அரசனுக்கு மந்திரி அறிமுகம் செய்துவைத்தார்

ராஜனே இவருக்கு கண்பார்வை இல்லாவிடினும் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதைச் சரியாகக் கண்டுபிடித்துவிடுவார் என்கிறார் மந்திரி.

உடனே அரசனும் அவனது சோதனைகளைத் தொடங்கினான்.

ஒரு வைரக் கல்லையும் ஒரு கூழாங் கல்லையும் , கண் தெரியாத புலவர் கையில் கொடுத்து இவை என்ன? என்று சொல்லுங்கள் என்றான். புலவரும் அவற்றை சற்று நேரம் சூரிய ஒளியில் காட்டிவிட்டு சூடேறிய கல்லை சாதாரணக் கல் என்றும் மற்றதை வைரக் கல் என்றும் பகர்ந்தான் .சரியான பதில் சொன்னவுடன்,

“மந்திரி, நமது காளி கோவில் பிரசாதமான தயிர் சாதத்தை இவருக்குப் பரிசாக  அளியுங்கள்” என்றான் .

அடுத்த சோதனையாக ஒரு குதிரையையும் கழுதையையும் அழைத்துவரச் செய்து உன் முன்னால் நிற்கும் மிருகங்கள் என்ன என்ன? என்று கேட்டான் மன்னன்.

புலவரும் அவற்றின் அருகே சென்று அவற்றைக் கிள்ளிவிட்டார்; குதிரை கனைத்தது ; கழுதையோ காள் காள் என்று கத்தியது. அதை வைத்து, புலவர் கழுதை, குதிரை என்று மொழிந்தார்.

இதற்கும் ஒரு விலை மதிப்பில்லாத பரிசினை கொடுக்க உத்தரவிட்டான்

அரசன் மேலும் சில சோதனைகளைச் செய்யவே 100 சதவிகிதம் சரியான பதில்கள் கிடைத்தன.

உடனே அரசன், அந்தப் புலவனை மரியாதையோடு  தனது அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்றான். புலவரே உண்மையினைச் சொல்லும் :

நான் அரசனுக்குப் பிறந்தவனா? , ஆண்டிக்குப் பிறந்தவனா ? என்று கேட்டான்.

இத்தகைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாமுத்ரிகா லட்சணம் என்னும் சாஸ்திரம்தான் உதவும். அதைப் பயன்படுத்த முழுக் கண்பா ர்வை இருக்கவேண்டும். அனால் புலவருக்கோ கண்கள் இல்லை. அப்படியிருந்தும் ஒரு நொடியில் பதிலிறுத்தார்.

மன்னர் மன்னா, ராஜாதி ராஜனே ! நீ ஆண்டிக்குப் பிறந்தவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

திடுக்கிட்ட அரசன் கேட்டான் . இந்த உண்மையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் ? என்று வினவினான்.

மன்னா , முதல் பரீட்சையில் ஒரு கூழாங்கல்லையும் வைரக்கல்லையும் கொடுத்து என்னைச் சோதித்தாய் .நானும் சரியான பதிலைக் கொடுத்தேன். நீ மன்னவனுக்குப் பிறந்து இருந்தால் உடனே அந்த வைரக்கல்லை எனக்குப் பரிசளித்திருப்பாய். நீயோ கோவில் சாதத்தைக் கொடுக்கவைத்து உன் ஆண்டி புத்தியைக் காட்டிவிட்டாய் .

கருணையும்,கொடையும் பிறவிக்குணங்கள்

ஆகையால் சொல்லுகிறேன்- நீ ஆண்டிக்குப் பிறந்தவன் என்பதில் சந்தேகமில்லை.

அசரனும் வெட்கித்து தலை குனிந்தான் ..

Xxxx

நன்கொடை கேட்டால்

கல்யாணராமன் தொடர்ந்து சொன்னார்

யாராவது நல்ல காரியத்துக்கு நன்கொடை கேட்டால் , உடனே பையில் இருந்ததைக் கொடுத்துவிடுங்கள். மனித மனம் மாறிக்கொண்டே இருக்கும். நாளைக்கு வாருங்கள் என்று ஒருவர் சொன்னால் , அவன் கொடுக்கவே மாட்டான். அது இல்லை என்று சொல்லுவதற்குச் சமம். கர்ணனோ கடைசிவரை கொடுத்தான். இறக்கும் தருவாயிலும்  அவனது புண்ணியத்தை தானம் கேட்டான் கண்ணன். அதையும் கர்ணன் கொடுத்தவுடன் கண்ணன் நெகிழ்ந்துபோய் தனது ஆனந்தக் கண்ணீராலும் , அழுத கண்ணீ ராலும் கர்ண மாமன்னனை அபிஷேகம் செய்தான் என்கிறார் வில்லிப்புத்தூரார். அப்போது கர்ணா! நீ என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்றபோது, எத்தனை பிறவி எடுத்தாலும் இல்லை என்று சொல்லி வருவோருக்கு நான் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்க வேண்டும். அந்த வரத்தை அருளுக என்று  கர்ணன் கேட்டான் .

கருணையும் கொடையும் பிறவிக்குணங்கள் !

–சுபம்—

TAGS- அரசன் , ஆண்டி , கல்யாணராமன், திருச்சி, சொற்பொழிவு , ஜோதிடம், பிராமணன்