செங்கோல் விழாவும்  நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் – 2 (Post No.12,057)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,057

Date uploaded in London – –  29 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி- 2

அந்தப்புரம்


சொர்க்க விலாசத்தின் மேற்கில் அந்தப்புரம் ; இங்கு இரண்டு அறைகள் இருந்தன.இப்பொழுது ஒரு அறையின் பகுதி மட்டுமே இருக்கிறது. இங்கு ராஜா வீட்டுப் பெண்கள் இசை, இலக்கிய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர் .

நாடக சாலை

நாடக சாலையின் தூண்களில் அழகிய சிற்பங்கள் இருக்கின்றன; மேலே செல்வதற்கு இரு புறமும் படிகள் இருக்கின்றன.மன்னர், தன் மனைவி மக்களுடன் தீவர்த்தி வெளிச்சத்தில் நாட்டிய , நாடகங்களைக் கண்டு மகிழ்ந்த இடம். 

ஆயுத சாலை

அந்தப்புரத்திற்கு மேற்கில் ஆயுத சாலை  இருந்தது. நாடக சாலையின் மேற்கில் வசந்த வாவி என்னும் தடாகம் இருந்தது. அதைத் தாண்டி மல்யுத்தம் செய்யும் இடம், ஆட்டுக்கிடாய் சண்டை நடக்கும் இடம், சொந்தக்காரர்கள் வசிக்கும் வீடுகள் இருந்தன..மிகவும் திட்டமிடப்பட்டு கட்டிய அரண் மனை இது.

தேவி பூஜைக் கோவில்

நாடக சாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோவில் இருந்தது இங்கு திருமலை நாயக்கர் தினமும் வருவார். ராஜ ராஜேஸ்வரியை வணங்குவார் . கோவிலுக்கு முன்னர் ஒரு குளமும், நந்த வனமும் இருந்தன .

ரங்க விலாசம்

மதுரையில் மஹாலுக்கு அருகிலுள்ள பத்துத் தூண் பகுதியில் 10 தூண்களைக் காணலாம். இதற்கும் மேற்கில் ரங்க விலாசம் இருந்தது நாயக்கரின் தம்பி முத்தியாலு இங்கு வசித்ததால் இதுவும் சொர்க்க விலாசம் போலவே இருந்திருக்க வேண்டும் .

அரண்மனை வாசல்

பத்துத் தூண்களின் கிழக்கில் அரண்மனை வாயில் இருந்தது. அங்கு 18 இசைக் கருவிகள் வாசிக்கும் இடமும், அலங்கார வேலைப்பாடு நிறைந்த வாசலும் இருந்தது. இப்பொழுது இதை நவபத்கானா தெரு என்று அழைக்கிறார்கள் ; 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட பெரும்பாலான பகுதிகளை அடையாளம் காண முடிந்தது ; அவைகளைச் செப்பனிட்டபோதும் பராமரிப்பின்றி அழிந்துபோயின ;1837ல் மதில் சுவர் இடிக்கப்பட்டது. அதற்கு முன்னர் நாயக்கரின் பேரன் அரண்மனையின் முக்கியப் பகுதிகளை இடித்து அவைகளைத் திருச்சி நகருக்குக் கொண்டு சென்று புதிய அரண்மனை கட்டுவதற்கு முயற்சி செய்தான் ; அதுவும் நிலைக்கவில்லை .மீதியிருந்த பகுதிகளை சென்னை கவர்னர் நேப்பியரும் பின்னர் டாக்டர் இரா நாகசாமி தலைமையில் வந்த தொல் பொருட் துறையினரும்  (அரண்மனையின் பகுதிகளை) பாதுகாத்தனர்.

வாஸ்த்து சாஸ்திரம் கற்போர், இந்த அரண்மனையின் எந்தப் பகுதியில் என்னென்ன இருந்தது என்பதைக் கற்று அறிவது பயன்தரும் .

மதுரை மீனாட்சி கோவிலை திருமலை நாயக்கர் எப்படி அழியாத சின்னமாக மாற்றினார் என்பதை மதுரைக் கோவில் திருப்பணி மாலை பாடல் சொல்கின்றது :–

உரக்க வெகு ரொக்கம் கொடுத்துப் படங்கு தூண்

உத்திரம் முதல் பழங்கல்

ஒடிந்தன பிடுங்கி நலமாய் அமைத்துக் காரை

யோடு சீரணம் அகற்றி

அரைத்த சுண்ணாம்பை வெல்லச் சாறு விட்டுநன்

றாய்க் குழைத்துச் செங்கலும்

அடுக்கா ப்பரப்பி க் கடுக்கா யொடு ஆமலகம்

அரிய தான்றிக்காய் உழுந்து

ஒருக்கால் இருக்கால் இடித்து நன்னீரினில்

ஊறிய கடுஞ்சாறும் வி ட்டு

ஊழிக்காலங்களிலும் அசையாத வச் சிரக்

காரை விட்டோங்கும் அம்மை

சிரக்காலம் வாழவே மீனாட்சி கோயிலும்

செப்பமிட்டுவித்து நன் றாய்ச்

செய்வித்த புண்ணியம் சதகோடி புண்ணியம்

திருமலை மகீபனுக்கே.

தற்கால பொறியியல் மாணவர்கள் இதில் சொன்ன பொருட்களைக் கலந்து கட்டிடம் கட்டிப் பார்க்க வேண்டும். சோதனை முறையில் என்ஜினீயரிங் கல்லூரிகள் இதை ஆராய வேண்டும்.

XXXXX

திருமலை நாயக்கர் வரலாறு

தந்தையின் பெயர்- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்

திருமலை நாயக்கர் பிறந்த நாள் – தைப் பூசம் (பொ .ஆ  1584)

ஆட்சிக்காலம் – 1627 – 1659

ஆண்ட பகுதிகள் – திருச்சி முதல் திருவனந்த புரம் வரை

தமிழ் நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் பெரும்பகுதி

திருச்சியில் இருந்த தலைநகர் 1624ல் மதுரைக்கு மாற்றப்பட்டது

செய் த போர்கள் – மைசூர் போர், திருவாங்கூர் போர் , இராமநாதபுரம் போர், செஞ்சிப் போர்

தானைத் தலைவன் – தளவாய் இராமப்பையன்

துணைப் படைத் தளபதி – அரங்கண்ண நாயக்கர்

திருப்பணிகள் – மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோவிலின் வானளாவிய, உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள்; அதிசய சிற்பங்கள் நிறைந்த புது மண்டபம், 2 பெரிய தேர்கள், சிவா பெருமானுக்கும், அன்னை மீனாட்சி அம்மனுக்கும் விலை மதிக்கவொண்ணாத நகைகள்

ஏற்படுத்திய விழாக்கள் -சித்திரைத் திருவிஆ, வைகாசி வசந்த விழா, ஆவணித் திருவிழா, புரட்டாசி நவராத்ரி விழா. அவர் பிறந்த நாளான தைப்பூசத்தில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் தெப்பத் திருவிழா

திருப்பணி செய்த வேறு கோவில்கள் – அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருவரங்கம், திருவானைக்காவல், திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி கோவில்கள்

அவர்காலத்தில் வாழ்ந்த மற்றும் அவரது சபையை அலங்கரித்த புலவர்கள் :-

குமர குருபரர் ( அவர் யாத்த நூல்கள் — மீனாட்சியம்மை பிள்ளை த்  தமிழ், கந்தர் கலிவெண்பா);

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (அஷ்டப் பிரபந்தங்கள்);

சுப்பிரதீபக் கவிராயர் (விறலி விடு தூது, கூளப்ப நாயக்கன் காதல் );

நீல கண்ட தீக்ஷிதர் ( நிறைய சம்ஸ்க்ருத நூ ல்கள் )

சபைக்கு வந்த வெளிநாட்டினர் – கிறிஸ்தவ பிரசாரகர் ராபர்ட் டி நோபிளி

நாயக்கர் இறந்த வருடம் – 1659

( திருமலை நாயக்கர் பற்றிய விவரங்கள், தொல்பொருட் துறைப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி தொகுத்தது . அவர்தான் மஹால் பற்றிய தமிழ், ஆங்கிலப் பிரசுரத்தை வெளியிட்டு  நாயக்கரின் புகழ் பரப்பினார். 1976-ம் ஆண்டில் அவர் நடத்திய கல்வெட்டு முகாமில் நாயக்கரின் உருவங்கள் ஒவ்வொரு கோவிலிலும் வெவ்வேறு வடிவத்தில், கோணத்தில் காணப்படுகின்றன என்று சொன்னார்)

(கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டபோது மதுரை ஆர். எஸ்.எஸ். இயக்கத்தினர் கோவிலுக்கு எதிரேயுள்ள புது மண்டபத்தில் பெரிய கண்காட்சியை ஏற்பாடு செய்தனர். பல வாரங்ககளுக்கு நடந்த அந்தப் படக்காட்சிக்கு ஏராளமான மக்கள் வந்தனர் ;அப்போது காலை முதல் மாலை வரை நானும் அங்கு சேவை செய்தேன் . ஆர். எஸ்.எஸ். பிரசாரகர்  சிவராம்ஜி (சிவராம் ஜோகலேகர்) பல சுவையான விஷயங்களை சொல்லுவார். நாள் தோறும் ஒலிபெருக்கி மூலம், பகவத் கீதை, மராட்டிய ஞானேச்வரி கீதங்கள், தமிழில் உள்ள பக்திப்பாடல்களை ஒலிபரப்பினோம் .) 

–SUBHAM–

 TAGS- திருமலை நாயக்கர், மதுரை , மீனாட்சி கோவில், பத்துத் தூண், நவபத்கானா , இரா.நாகசாமி, அரண்மனை, மஹால்

காட்டிற்குள் ரமண மஹரிஷியுடன் இரு கவிஞர்கள்! (Post No.12,056)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,056

Date uploaded in London –   29 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

காட்டிற்குள் ரமண மஹரிஷியுடன் இரு கவிஞர்கள்!

 ச.நாகராஜன்

காவ்யகண்ட கணபதி முனிவர்

பகவான் ரமண மஹரிஷிக்கு ரமணர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர் மாபெரும் கவிஞரும் உள்ளொளி பெற்றவருமான காவ்ய கண்ட கணபதி முனிவர் ஆவார். இவரை நாயனா என்றே அனைவரும் மரியாதையுடன் அழைப்பர்.

பகவானுடனான இவரது அனுபவம் மகத்தானது.

இவரும் இவருடனான மற்ற பல அன்பர்களும் அவ்வப்பொழுது பகவான் ரமணரிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களைப் பெறுவது வழக்கம்.

அவற்றை ஸம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாக எழுதினார் இவர். அந்த நூலே “ஶ்ரீ ரமண கீதை” ஆகும்.

பகவான் எழுதிய ‘உள்ளது நாற்பது’ மற்றும் ஸத் தர்சனம் ஆகியவற்றையும் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்களாக இவர் வழங்கினார்.

இந்த இரண்டிற்கும் ஶ்ரீ கபாலி சாஸ்திரிகள் சம்ஸ்கிருதத்தில் விரிவுரை எழுதியுள்ளார்.

இந்த விரிவுரைகள் ரமண பாத சேகரன் ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமிகள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

முகவை கண்ண முருகனார்

இவர் பகவானின் அணுக்க பக்தர். பெரும் தமிழ்க் கவிஞர். பகவானின் பேரில் 1851 தோத்திரப் பாடல்கள் கொண்ட ‘ஶ்ரீ ரமண சந்நிதி முறை” என்ற நூலை இவர் இயற்றியுள்ளார்.

பகவானின் உபதேசங்களை ஒருங்கு திரட்டி 1254 பாடல்களாக, ‘குருவாசகக் கோவை’ என்ற நூலையும் ஶ்ரீ ரமண தேவமாலை, ஶ்ரீ ரமணாநுபூதி (இரு பாகங்கள்) என்ற நூலையும் இவர் படைத்துள்ளார்.

இவர் எழுதிய இன்னொரு நூல் ‘ஶ்ரீரமண ஞான போதம்’

இந்த இரு கவிஞர்களுக்கும் திருவண்ணாமலை காட்டிற்குள் போக ஆசை.

ஆனால் திருவண்ணாமலை காட்டை ஒவ்வொரு அங்குலமாக அளந்து அதை நன்கு அறிந்தவர் பகவான் ரமணர் ஒருவரே.

கணபதி முனிவருக்கு ரமணரின் உறுதி மொழி

ஒரு நாள் கணபதி முனி பகவானிடம் தான் பல காடுகளைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் திருவண்ணாமலை போன்ற ஒன்றைக் கண்டதே இல்லை என்றும் கூறினார்.

பகவான் அவரைத் தன்னுடன் காட்டின் உட்பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

கணபதி முனிவருக்கு யோகாப்யாசம் செய்ததால், குறிப்பாக கபால பேதம் (கபாலத்தை உடைப்பது) என்ற ஒரு யோகாப்யாசத்தைச் செய்ததால், ஒரு சிறிது உஷ்ணத்தையும் தாங்க முடியாத உடல் வாகு அமைந்திருந்தது. ஆகவே நல்ல மேகமூட்டம் சூழ்ந்த ஒரு நாளை பகவான் தேர்ந்தெடுத்தார்.

அன்று அணுக்க பக்தரான ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமியிடம் இன்று காட்டிற்குள் போகலாமா என்று பகவான் கேட்க அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இதற்காகத் தானே அவர்கள் காத்திருந்தனர்!

உடனே ஓடோடிச் சென்று கணபதி முனிவரிடம் சொல்ல அவரும் மகிழ்ந்தார்.

ஒரு சில நிமிடங்களில் பலாக்கொத்தில் இருந்த கணபதி முனிவர் அறைக்கு பகவான் வர, மூவரும் காட்டின் உட்பகுதி நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

திருவண்ணாமலை காட்டிற்குள் செல்ல பல பாதைகள் உண்டு. பகவான் தேர்ந்தெடுத்தது மூன்றாவது பாதையை.

முகவை கண்ண முருகனாரின் வருகை

ஒரு மைல் உள்ளே சென்ற பிறகு பகவான் பெரிய பாறைக்கு அருகே

ஒரு குளிர்ந்த, நிழல்பகுதியை ஓய்வெடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார்.

அப்போது சலசல என்ற ஒரு சப்தம் கேட்டது. யாரோ ஒருவர் வருகிறார் என்று எண்ணியபோது முகவைக் கண்ண முருகனார் அங்கு வந்து நின்றார்.

மூக்கின் மேல் விரலை வைத்த பகவான், “நாங்கள் இங்கே இருப்பது எப்படித் தெரிந்தது. வனக்காவலர் கூட நாங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே” என்று கூறினார்.

முருகனார் கூறினார், “பகவான் நாயனாவிடம் காட்டிற்குள் ஒரு நாள் அழைத்துச் செல்வதாக கூறி இருப்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட வர ஆசை. ஆகவே ஆஸ்ரமத்திற்கு சீக்கிரமாகவே வருவது வழக்கம். ஆனால் இன்று பகவானை அங்கு காணோம். உடனே பலாக்கொத்து சென்றேன். அங்கு நாயனாவின் அறை பூட்டி இருந்தது. அங்கு இருந்த வாட்ச்மேன் சபாபதி என்னிடம் ‘நாயனா, விஸ்வநாத ஸ்வாமியுடன் பகவான் காடு நோக்கிச் சென்றார்’ என்று கூறவே நான் ஓடோடி காட்டுப் பக்கம் வந்தேன்.

இரண்டாவது காட்டுப் பாதை வழியே வந்த நான், இன்னொரு பாதை காட்டிற்குள் செல்வதைப் பார்த்தேன். அதன் வழியாக வந்து இந்த இடத்தை அடைந்தேன்”.

“அட, இப்படி கூட ஒரு குறுக்கு வழி இருக்கிறதா?” என்ற பகவான், திரும்பிப் போகும் போது அந்த வழியாகச் செல்லலாம்” என்றார்.

 முருகனாரின் முதுகைத் தட்டிக் கொடுத்த கணபதி முனிவர், “பகவானின் அருள் இருக்கிறது என்பதற்கு இதுவே அறிகுறி” என்று கூறி மகிழ்ந்தார்.

மாலை நான்கு மணிக்குள்ளாக அவர்கள் அனைவரும் ஆசிரமம் திரும்பினர்.

இந்த அனுபவத்தை ஶ்ரீ விஸ்வநாத ஸ்வாமி பதிவு செய்துள்ளார்.

திருவண்ணாமலை, சிவன் உறையும் மலை அல்ல, சிவனே இந்த மலை தான் என்பதை மஹரிஷி ரமணர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்த மலையில் ஏராளமான அதிசயங்கள் உண்டு.

அவற்றை ரமண மஹரிஷியின் விரிவான வாழ்க்கை சரிதத்தைப் படிப்பதன் மூலம் அறியலாம்.

***

RIVERS OF INDIA CROSSWORD (Post No.12,055)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,055

Date uploaded in London – –  28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1  2   3 456
   7  8 S    
          
          E 
10         R 
       11  I 
            
 12           
           13 
           14
15  16         
   1         

ACROSS

2.Pandharpur is on the banks of this river;

 9. It is a tributary of the Alaknanda River in the Indian state of Uttarakhand. ,

10. “Life Line of Madhya Pradesh and Gujarat”

 12. India’s second longest river , running through Maharashtrra, Telangana and Andhra Pradesh, 13Tambhrabarani is another name for this river,

14.Turbulent Himalayan River in Uttarkhand; along with Bhagirathi it pours water into India’s holy river,

16.This river basin is the location of India’s oldest civilization

17.It is also called Dakshina Pinakini. Bengaluru, Hosur, Cuddalore and Tiruvannamalai are on the banks of this river.

XXXX

DOWN

1 This river was Lord Krishna’s play ground

3.One of the two rivers that gave the name to Hindus’ holiest city,

4.Madurai is on the bank of this river; Tamil language originated here.

 5.Tamil Nadu’s life line, irrigates most of the paddy lands.

6.Sung by Marathi poets in the Abhangas,

7.Literal translation of this Tamil  river is  Milk River,

8.Ayodhya’s River

11.Another river that gave the name for holy city (See number 3)

15.The holiest river in the world; sung in Rig Veda and India’s National Anthem.

Y 1  B 2HIMA3 V 4K5C6
 A P 7  S 8 S AAH
9MANDAKINIVA
 UL  R   GEN
10NARMADA ARD
 AR  Y V 11 IIR
 AU  U A   A
G 12 ODAVARI  B
 N  IANUROP 13H
 ADNANKALA 14
15GI 16NDUSA   G
  T 17ENPNNAIA

ACROSS

2.BHIMA, 9.MANDAKINI, 10.NARMADA, 12.GODAVARI, 13.PORUNAI, 14.ALAKNANDA, 16.INDUS

17.TENPENNAI

XXXX

DOWN

1 YAMUNA, 3.ASI, 4.VAIGAI, 5.KAVERI, 6.CHNADRABHAGA, 7.PALARU, 8.SARAYU, 11.VARUNA

15.GANGA.

—SUBHAM—T

Tags- River Crossword, Ganga, Mandakini

மரம்,செடி,கொடி,புல் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,054

Date uploaded in London – –  28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

   8      2 
    8 1  2 செ
    812  டி
   77333 
  ம்   6 54  கொ
    6  5 4 டி
   613 9 104பு
   6  139 10  4
    1212 111111 

எல்லா சொற்களும் அ’ என்னும் எழுத்தில் துவங்கும் தாவரத்தின் பெயர்கள் ; மரம்-செடி-கொடி- பூ என்று முடிவடையும் ; அதற்கு முந்திய எழுத்துக்களைக் கண்டுபிடியுங்கள் ; கூடியமட்டும் கலர் வழியே செல்லுங்கள்

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

   ம்8      ம்2 
    க8 தி1 ன 2 செ
    ரு8த்1ச2  டி
   ல்7கி7க3த்3தி3 
  ம்  னி 6ர 5ழி4  கொ
    ச்6  ச5 ஞ்4 டி
   ச6ரி12 ளி9 லி10சி4பு
   ம்6  ல13ர,9ல் 10  ல்4
    ரை12வ 12தி 11ர11ல்11 

 Common words : மரம்  செடி கொடி ,  புல்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

3.மாட்டுக்குப் போடும் கீரை; தமிழ் முனிவரின் பெயர்

7.பெண்கள் தலை முடியை உலர்த்த இந்த மரத்தின் கட்டையை புகைப்பராம் .

11.காட்டு மல்லிகை என்பது இதன் பெயர்

12.. கொடியில் காய்க்கும்; கறியும் கூட்டும் சமைக்கலாம்

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.எப்போதாவது ஒருமுறை நிகழக்கூடியதை XXX  பூத்தாற்போல் என்று சொல்வது உண்டு

2. வேங்கை மரத்தின் வேறு ஒரு பெயர்

4. இதன் விதைகள் மரத்தின் மீது ஏறும் என்று ஆதிசங்கரர் பாடுகிறார். அங்கோல என்பது ஸம்ஸ்க்ருதப் பெயர்

5.XXX மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம் என்பது பழமொழி

6.திருவள்ளுவர் சில குறள்களில் பாடிய பூ. முகர்ந்தால் வாடிவிடுமாம்

8. பிள்ளையாருக்குப் பிடித்த புல்

9.செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்குப் போடும் பூ

10.குளத்தில் வளரும்; இரவில் பூக்கும்

13. திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக உள்ளது. கரவீரம் என்பது மற்றொரு பெயராம்.

ANSWERS

1.அ த் தி, 2.அ ச ன ம், 3,.அ க த் தி  4.அ ழி ஞ் சி ல்  5.அ ர ச,  6.அ னி ச் ச ம், 7.அ கி ல், 8.அ ரு க ம், 9.அ ர ளி, 10.அ ல் லி, , 11.அ திர ல், 12.அ வ ரை,   13.. அ ல ரி 

–subham—

Tags- மரம்,செடி,கொடி,புல் , குறுக்கெழுத்துப் போட்டி

செங்கோல் விழாவும்,  நான் கண்ட நாயக்கர் அரண்மனையும் — 1 (Post No.12,053)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,053

Date uploaded in London – –  28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Pictures are from Wikipedia

வெளியூரிலிருந்து சொந்தக் காரர்களும், நண்பர்களும் மதுரைக்கு வந்தால் மூன்று இடங்களைச் சுற்றிக் காண்பிப்பேன். 1987-ல் லண்டனில் குடியேறுவதற்கு முன், சுமார் கால் நூற்றாண்டுக்குக்கு நான் செய்த “சேவை” இது.  மதுரை மீனாட்சி கோவில் மற்றும் அதன் எதிரேயுள்ள புது மண்டபம், சற்று தொலைவிலுள்ள திருமலை நாயக்கர் மஹால், ஊருக்கு வெளியேயுள்ள மாரியம்மன் தெப்பக்குளம் ஆகிய மூன்றும் என் ‘லிஸ்டி’ல் எப்போதும் உண்டு. பெண்களாக இருந்தால், என் தாயார் சின்னாளப்பட்டி சேலைக் கடைகளுக்கும், நகைக் கடைகள்  மட்டுமே உள்ள தெற்காவணி மூல வீதிக்கும் அழைத்துச் செல்லுவார்.

மதுரையில் வானளாவிய கோபுரங்களைப் பார்க்கும் எவரும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை மறக்கமுடியாது. அந்த நாயக்கர் கதையை நான் எத்தனை பேருக்குச் சொன்னேனோ எனக்கே நினைவில்லை. அது மட்டுமா? கோவிலுக்கும் அரண்மனைக்கும் இடையுள்ள சுரங்கப்பாதை, மற்றும் மதுரை செளராஷ்டிர சமூகத்தினர் வீடு கட்டுகையில் அந்தச் சுரங்கத்திலிருந்து எடுத்த தங்கக் கட்டிகள்  போன்ற வழக்கமான ‘கப்ஸா’ கதைகளையும் அவிழ்த்து விடுவேன். நான் சின்ன வயசில் நம்பியதை அவர்களும் நம்பட்டுமே !

xxxx

திருமலை நாயக்கர் மஹால் எனப்படும் அரண்மனை பற்றிய உண்மைக் கதைகளை இப்போது சொல்கிறேன் .

திருமலை நாயக்கர் (1627-1659) மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். தென் இந்தியாவில் துலுக்கப் படைகள் அழித்த அரண்மனைகள் போக எஞ்சியது இது ஒன்றுதான் . இதில் அவர் 75 வயது வரை மனைவிகளுடன் வசித்தார் . இப்போது நாம் காணும் அரண்மனையைப் போல நான்கு மடங்கு பெரிதாக 164-0ல் திகழ்ந்தது; பல வெளிநாட்டினர் குறிப்புகளிலிருந்து நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.

அரண்மனையின் முக்கியப் பகுதிகள்

ரங்க விலாசம் , சொர்க்க விலாசம், , 18 இசைக்கருவிகள் வாசிக்கும் மண்டபம், பல்லக்கு வைக்கும் மண்டபம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், மனைவிகள் வசிக்கும் அந்தப்புரம், நாடக சாலை, வசந்த வாவி, நந்தவனம், படைக்கலன் வைக்கும் இடம், யானைகள் கட்டும் தூண்கள் எனப்பல பகுதிகள்.

நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும்  வசித்தனர் . இப்போது நாம் காண்பது சொர்க்க விலாசம் மட்டுமே; உள்ளே நுழைந்ததும் முற்றமும் பிரம்மாண்டமான தூண்களும் இருக்கும். அவை இளம் பெண்களின் கன்னங்களை விட வழுவழுப்பாக இருக்கும்.; தாஜ் மஹாலின் சலவைக்கற்கள் தோற்றுப்போகும் .இந்தப் பள பள வழு வழு ராட்சத தூண்கள்!!  அவை எப்படிக் கட்டப்பட்டன என்பதை திருப்பணி மாலை பாடல் வருணிக்கிறது.

சுண்ணாம்பு, வெல்லச் சாறு, கடுக்காய், ஆமலகம், தான்றிக்காய், உளுந்து , காட்டுஞ் சாறு ஆகியவற்றை அரைத்து மேலே பூசினாராம். ஆமலகம் என்பது நெல்லிக்காய்.; முட்டைகளை அரைத்துக்  கலந்து கட்டியதாகவும் செவி வழிச் செய்தி.

அரண்மனையைச் சுற்றி பெரிய நீண்ட மதில் சுவர் இருந்தது . 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட 900 அடி நீளமும் 600 அடி அகலமும்  40 அடி உயரமும் இருந்ததாம்.. பின்னர் எல்லோரும் வீடு கட்ட, கிடைத்த பகுதிகளை எல்லாம் எடுத்துச் சென்று விட்டனர்.

ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை என்பது தமிப்பழமொழி. அப்படி இந்த அரண்மனை  ம் மதில் சுவரும்  மொட்டை அடிக்கப்பட்டன. 1868ல் சென்னை கவர்னராயிருந்த நேப்பியர் இந்த அரண்மனையின் அழகைக்கண்டு அந்தக்கால இரண்டு லட்சம் ரூபாய்களை செலவிட்டு பழுது பார்த்தார். வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி  , தமிழ் நாடு தொல்பொருட் துறை இயக்குனராக இருந்த காலத்தில் மேலும் பாதுகாப்பு மற்றும் திருப்பணிகளைச்  செய்தார் .

அரண் மனையின் தற்போதைய கட்டிட உயரம் 58 அடி. தூண் களின் எண்ணிக்கை 248. தூண்களின் உயரம் 82 அடி; அகலம் 6 அடி; மூன்று நான்கு  பேர் இருந்தால்தான் அதைக் கட்டிப்பிடிக்க முடியும்.

கூரைகளில் சிவன், விஷ்ணு புராணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன

1981ம் ஆண்டு முதல் ஒலி -ஒளிக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது . நாள்தோறும் நடக்கும் இக்காட்சியில் மஹாலின் சிறப்பும் மன்னரின் சிறப்பும் விதந்து ஓதப்படுகிறது.

இப்போதும் அரண்மனைக்கு சற்று தொலைவில் பத்துத் தூண் என்ற பகுதி இருக்கிறது. அங்கேதான்  யானைகள் நிறுத்தப்பட்டன.

திருமலை நாயக்கரின் பேரன் இந்தக் கட்டிடத்தின் சில  பகுதிகளை இடித்து திருச்சிக்கு கொண்டு சென்று புதிய அரண் மனை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கிருந்த பொக்கிஷங்களையும் அவர் எடுத்துச் சென்றார்.

சொர்க்க விலாசம்

இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகள் வழியே மேலே செல்லலாம்;.உயர்ந்த தூண்களும், வேலைப்பாடுமிக்க சுதைகளும் (சிற்பங்கள்) இருக்கும் உயரமான பகுதி;  ஒரு காலத்தில் இதன் தூபிகள் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன .நடுவில் யானைத் தந்ததினால் ஆன மண்டபம் இருந்தது. அதில் வைக்கப்பட்ட இரத்தின சிம்மாசனத்தில் நாயக்கர் அமர்ந்து அரசவை நடத்தினார். இதைக் கற்பனை செய்து மனக்கண்களில் பார்த்தால் இதற்கு ஏன் சொர்க்க விலாசம் என்று பெயரிட்டனர் என்பது புரியும் .

XXX

செங்கோல் விழா

மதுரையை ஆள்வது மீனாட்சி அம்மன் ; அவரது பிரதிநிதிதான் பாண்டிய மன்னர்களும் நாயக்க மன்னர்களும். இது புற நானூற்றிலும் உள்ளது. பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர் முதுகுடுமிப் பெருவழுதி. அவர் இரண்டு பேருக்குத்தான் சல்யூட் Salute அடிப்பாராம் ; ஆசீர்வாதம் செய்யும் பிராமணர்களுக்கு ஒரு முறை தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். அடுத்த சல்யூட்  மீனாட்சி கோவிலுக்கு; அங்கே செ ன்றாலும் தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். வேறு எங்கும் தலை நிமிர்ந்து நிற்க , அவருக்கு எல்லோரும் சல்யூட் அடிப்பார்கள்.

செங்கோல் விழாவில் இதையே திருமலை நாயக்கரும் செய்தார். .ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள் திருமலை நாயக்கர், கோவிலுக்குச் சென்று அங்கயற்கண்ணி அம்மனுக்கு முடி சூட்டு விழா நடத்தி, அங்கு மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று, வீதி உலாவாக அதைக்கொண்டு வந்து , அரண்மனையின் சொர்க்கவிலாசத்தில் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்கு சிறப்பாக வழிபாடுகள் நடக்கும். அனறைய தினம் வந்திருக்கும் அனைவருக்கும் மன்னர் பரிசுகளை வழங்குவார் . அன்று முழுதும் அரியணையில் செங்கோல் இருக்கும் ; மறுநாள் செங்கோலுக்கு மன்னர் புனர்பூஜை செய்வார். அதை மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் சென்று ,மீனாட்சி அம்மனின் பாதங்களில் வைத்து வணங்குவார் . மன்னர் என்பவன் இறைவனின் சார்பில் ஆட்சி நடத்தும் ஒரு ஊழியர்தான் என்பது இதன் தாத்பர்யம் .

நவராத்திரி விழா

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் திருமலை மன்னர் தன்னை அலங்கரித்துக்கொண்டு , அரியணையில் கொலு வீற்றிருப்பார். சிற்றரசர்கள் வந்து அவருக்கு கப்பம் செலுத்துவார்கள்

 தொடரும்  ……………………………….

XXX

Tag- செங்கோல் விழா, நான் கண்ட,  நாயக்கர் அரண்மனை    , திருமலை நாயக்கர், பிரம்மாண்டமான தூண்கள்,

கனவு நிஜமானால் கஷ்டம் தான்! (Post No.12,052)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,052

Date uploaded in London –   28 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –

அத்தியாயம் 1

ச.நாகராஜன்

கனவு நிஜமானால் கஷ்டம் தான்! 

29 வயதான ஜென்னா ஹோவல் (Jenn Howell) என்ற இளம் பெண்மணி கனவு ஒன்றைக் கண்டாள். அதில் அவள் சில மோசமான பேர்வழிகளிலிருந்து தப்பிக்க ஒரு ஓடும் ரயிலில் ஓடிக் கொண்டிருந்தாள். அவரது துணைவன் அவரிடம் உன் கையிலிருக்கும் மோதிரத்தை ஒளித்து வைத்துக் கொள் என்று கூற அவள் லபக்கென்று வாயில் போட்டு விழுங்கிக் கொண்டாள்.

திடீரென்று ஹோவல் விழித்தெழுந்தாள்.  அப்பாடா, கண்டது ஒரு கனவு தான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால் அப்போது யதேச்சையாக தன் இடது கையைப் பார்த்த போது அங்கு மோதிரத்தைக் காணோம். நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கு எக்ஸ்ரே எடுத்த போது அதை அவள் விழுங்கி விட்டிருப்பது தெரிய வந்தது. என்டாஸ்கோபி மூலமாக மோதிரம் ஒரு வழியாக உடலிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டது.

ஹோவல் மோதிரத்தை வடிவமைப்பைச் செய்தவரிடம் தான் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தார். அவர் சொல்லியிருந்தார் :

“அடடா! எப்படி இருக்கிறது இது! அப்படியே வாயில் போட்டு விழுங்கி விடலாம் போல இருக்கிறது!”

திறக்க முடியாத லாக்கர்!

ஸ்டீபன் மில்ஸ் என்பவர் ஒரு வெல்டர், மெஷினிஸ்டும் கூட. அவர் அல்பெர்டாவில் ஃபோர்ட் மக்மர்ரே என்ற இடத்தில் வசிப்பவர். அவர் வெர்மில்லியன் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு கண்காட்சியைப் பார்க்க வந்தார். அங்கு ஒரு 2000 பவுண்ட் மதிப்புள்ள பூட்டப்பட்ட லாக்கர் இருந்தது. அது 1990களில் நன்கொடையாக அங்கு தரப்பட்டிருந்தது. ஆனால் அதைத் திறக்கவே முடியவில்லை. பல நிபுணர்களும் வந்து அதைத் திறக்க முயன்றனர். முடியவே இல்லை. அதற்குள் நிறைய தங்கம் இருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர்.

ஸ்டீபன் அந்த லாக்கரிடம் வந்த போது இந்த விஷயத்தை அங்கிருந்தவர் சொல்லக் கேட்டார். உடனே நான் இதைத் திறக்கப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு விளையாட்டாக 20-40-20 என்று அமுக்கி விட்டு மூன்று முறை வலது புறமும் இரு முறை இடது புறமும் திருகினார். என்ன ஆச்சரியம்! லாக்கர் திறந்து கொண்டது. உடனே அனைவரும் ஓடி வந்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க அனைவருக்கும் ஆவல்!

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல அதில் தங்கமோ பணமோ இல்லை.

1977இல் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு ஹோட்டல் சர்வரின் ஆர்டர் புக் இருந்தது. 1978இல் 9.95 டாலர் செலுத்தப்பட்டதற்கான பேப்பர் இருந்தது. ஆனால் 40 வருடம் திறக்காக ஒரு லாக்கரைத் திறந்தாரே அதற்கு விலை மதிப்பு உண்டா என்ன?

வீட்டிலேயே நடைப்பயிற்சி

பிரான்ஸில் பல்மாவில் (Balma) ஒரு உணவுவிடுதியில் சர்வராக வேலை பார்த்து வந்தார் எலிஷா நோகோமோவிட்ஸ் (Elisha Nochomovitz). பார்சிலோனா மாரத்தானில் 2020 மார்ச் 15ஆம் தேதி கலந்து கொள்ள அவர் எண்ணியிருந்தார்.ஆனால் கோவிட் 19 தொற்று வரவே அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் விடவில்லை.

தனது வீட்டு 23 அடி நீள பால்கனியில் இந்தப்புறத்திலிருந்து அந்தப்புறமும் அந்தப்புறத்திலிருந்து இந்தப் புறமும் ஓட ஆரம்பித்தார். இப்படி 42 கிலோமீட்டர் ஓடினார். ஆறு மணி நேரம் 48 நிமிடத்தில் இது முடிந்தது. ஆனால் மூன்றரை மணி நேரம் தான் ஆகி இருக்க வேண்டும் அந்தப் போட்டியில் ஓடி வெற்றி பெற! என்றாலும் தனது இந்த வீட்டு சாதனையை அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். இவரைப் போல கோவிடினால், வீட்டில் ஓடிக் கொண்டே இருக்கும் அனைவருக்கும் ஒரே உற்சாகம். இதை வரவேற்று எலிஷாவைப் பாராட்டினர்.

பிரபல மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் தனது வாசகர்களிடமிருந்து பெற்ற நிஜமான சம்பவங்கள் தாம் இவை!

**

Famous Cities of India Crossword (Post No.12,051)


Dilwara Temples, Rajasthan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,051

Date uploaded in London – –  27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find the famous cities with the help of the clues and colour coding. Colours may help you to some extent because of overlapping colours.

1   2 3   4    5
        6     
    7    8 9 10
             
   11          
      12       
 13           

Across

1.Old Name of Delhi

6.Named after Puranic Ajamila or Ajayameru

7.Cotton city of India

8.Hill statin in Rajasthan with near by Dilwara temples

11.Chattisgarh city with Bhima-Kichak Temple; also a classical Raga name

12.Famous Jail in Pune where freedom fighters spent their time

13. Place with bird sanctuary in Rajasthan

xxxxxxxxxxxxxxx

Down

1.Queen Ahalyabhai Holkar ruled from here

2.Krishna’s place in Gujarat coast

3.Rama Janma Bhumi

4.Famouss cave with beautiful paintings

5.Island where Veer Savarkar was imprisoned

9.Orissa’s Puranic name

10.Capital city of Union territory of Dadra and Nagar Haveli; once under the Portuguese rule.

I 1 ND 2RA 3PRA 4STHA 5
 N W Y A 6JMERN
 D A 7KOLAA 8BU9 D 10
 O R D  N T A
 RM 11ALHART K M
 E K Y 12ERAWADA
B13HARATPURL N

Answers

Across

1.Indraprastha, 6.Ajmer , 7.Akola , 8.Abu , 11.Malhar , 12.Yerawada , 13.Bharatpur

xxxxxxxxxxxxxxx

Down

1.Indore , 2.Dwaraka, 3.Ayodhya ,4.Ajanta , 5.Andaman , 9.Utkal, 10.Daman

—-Subham—

Tags- Famous cities, quiz

Can you identify these 20 Swamijis, Babas and Anandas?(Post No.12,050)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,050

Date uploaded in London – –  27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.Where is Saint Tukaram’s Samadhi?

2.Whose Samadhi is in Shirdi?

3.Who is the Swamiji who took Ramakrishna Paramahmasa’s message to the Western world?

4.Who was called The Flying Swami?

5.Who started Divine Life Society?

6.Who was Brahmananda?

7. who spread TM known as Transcendental Meditation?

8. Who is the author of ‘An Autobiography of a Yogi’?

9.Where is Sathya Sai Baba’s Samadhi?

10. Who is the current head of Chinmaya Mission?

11.Who was the previous head of Chinmaya Mission?

12.What was the name of Chinmayananda before he took Sanyas?

13.Who wrote the popular book ‘Oh, Mind! Relax Please’?

14. who established Skandashram in Tamil Nadu?

15. Who established Swami Chidbhavananda Ashramam in Theni, Tamil Nadu?

16.Who was born in Manjakkudi village and became a famous Swamiji?

17.Who lived for 300 years among Hindu Ascetics?

18.Where is Gnanananda Thapovanam?

19.What is in ‘Who am I?’ book by Ramana Maharishi?

20.What is the original name of Sage of Kanchi, Jagadguru Sri Chandrashekarendra Saraswati (1894-1994)?

 Answers:

1.Sant Tukaram Vaikunthstan Temple, Dehu – from where Tukaramji ascended to Vaikuntha (Abode of God) in his mortal form; there is a beautiful ghat behind this temple along the Indrayani river.

2.Sri Sai Baba

3.Swami Vivekananda

4.Swami Vishnu Devananda, who flew to trouble spots in the world to spread peace.

5.Swami Sivananda of Rishikesh

6.Ramakrishna Paramahamsa’s disciple. His pre monastic name was Rakhal Chandra Ghosh.

7. Maharishi Mahesh Yogi

8.Paramahamsa Yogananda

9. Puttaparthi village in Andhra Pradesh

10.Swami Swaroopananda

11.Swami Tejomayananda

12.Balakrishna Menon

13. Swami Sukhabodananda

14.Swami Santhananda of Pudukkottai

15.Swami Omkarananda

16.Swami Dayananda

17.Swami Trailinga Swami of Kasi

18.Thirukkovilur in Tamil Nadu

19. Who am I? is the title given to a set of questions and answers bearing on Self-enquiry. The questions were put to Bhagavan Sri Ramana Maharshi by Sri M. Sivaprakasam Pillai, about the year 1902.

20.Swaminathan

xxxx

My old book containing English and Tamil Quiz posts

–subham—Tags- Quiz, Saints, Anandas, Babas

இடையர்கள் கொண்டாடும் வினோத மஞ்சள் திருவிழா (Post No.12,049)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,049

Date uploaded in London – –  27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாராஷ்டிர மாநிலத்தில் இடைக்குல மக்கள் ஒரு விநோதத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறார்கள் ; அப்போது ஊரே மஞ்சள் வர்ணமாகி விடுகிறது ; இடைக்குல பாபா /சுவாமிகள் ஒருவர், இனி என்ன நடக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவார். இதோ சுவையான  விவரம் :-

கோலாப்பூர் மாவட்டத்தில் பட்டண கோடொலி என்ற கிராமம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் விட்டல் வீரதேவ மஹாராஜின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவர் விஷ்ணுவின் அவதாரம் என்பது இடைக்குல மக்களின் நம்பிக்கை.

மஹாராஷ்டிரா , கோவா, கர்நாடகா , ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு இடையர்கள் ஜாதிக்கு வீரதேவ் குல தெய்வம் ஆகும் .விழா நடைபெறுகையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்த பட்டண கோடொலி கிராமத்துக்கு நடந்து வருகிறார்கள் அவர்கள் ஒரு விஷேச அலங்காரக்கு டையையும் எடுத்து வருவார்கள். கிராமீய பாடகர்கள் இசைக்கருவிகள், கொட்டு மேளங்களுடன் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவார்கள். கழைக் கூத்தாடிகள் சர்க்கஸ் வித்தைகளைக் காட்டுவார்கள். பண்டார என்னும் விசேஷ மஞ்சள் தூளை நினைத்த இடமெல்லாம் அள்ளி வீசுவார்கள். வியாபாரிகள் தெருவெங்கும் கடை விரிப்பர்..

சோலாப்பூர் அஞ்சன் கோவ்  கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீ கேலோபா ராஜபாவ் வாக்மோடே ( Sri Keloba Rajabau Waghmode) என்பவர் அபூர்வ சக்தி கொண்ட சாமியார் என்று கருதப்படுகிறார். அவர் 17 நாட்களுக்கு நடையாக நடந்து, இந்த பட்டன் கோடொலி கிராமத்துக்கு வருகிறார். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அவர் அமர்கிறார் .விழாக்காலம் முழுதும் அவர் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து ஆசி வழங்குவார். மக்கள் அவர் மீதும் மஞ்ச ள் பொடியைத் தூவுவர். முக்கிய நாளன்று அவர் திடீரென சாமி வந்தவர் போல ஆடுவார். துள்ளிக் குதிப்பார். பத்து நிமிட நேரத்துக்கு அவர் பல ஆரூடங்களைச் சொல்லுவார். பெரும்பாலும் கன்னட  சொற்கள் கலந்த இந்த மொழி யாருக்கும் புரியாது. அருகிலுள்ள பூஜாரி,  புரியும் மொழியில் வியாக்கியானம் செய்வார். அதில் வருமாண்டில் பெய்யக்கூடிய மழை விவரம், விளைச்சல் விவரம், வியாபார நடப்புகள்  போன்றவை இருக்கும். அவர் சொல்லும் விஷயங்கள் 90 சதவிகிதம் சரியாக இருக்கிறது என்று இடையர்கள் கூறுகின்றனர்.

பாபாவிடம் ஒரு புனித வாளைக் கோவில் பூஜாரி  கொடுப்பார். அப்போது அவருக்கு சாமி வரும். உடனேயே அவர் சொல்லுவது எல்லாம் பலிக்கும் என்று பக்தர்கள் நம்புவர். இது போல தமிழ் நாட்டுக்கு கிராமீய கோவில்களிலும் சாமி வந்து ஆடுவோர், கிராமத்துக்கு வரும் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதை காணலாம் 

கிட்டத்தட்ட தமிழ் பஞ்சாங்கங்கள் சொல்லுவது போல இவரும் பல விஷயங்களை பேசுகிறார். இந்த ஆரூட, சாமி ஆடும் வேலை முடிந்தவுடன் அவர் சொந்த கிராமத்துக்கு நடந்து செல்லுவார்.

அருகிலுள்ள மண்டபத்தில், பக்தர்கள் சாமி கும்பிடுவார்கள் ;ஆங்காங்கே சமைத்துச் சாப்பிடுவர். விழாவின் போது பயன்படுத்தும் பொடி  வெறும் மஞ்சள் கிழங்குப் பொடி மட்டுமன்று . அதில் தேங்காய்த் தூளும் இருக்கும். இதை பிரசாதமாகப் பயன்படுத்துவோர் ஆட்டு ரோமத்துடனும் சாமிக்குப் படைப்பர். இந்த வட்டாரம் ஆட்டுரோம கம்பளத்துக்கும் பெயர் பெற்ற இடம். மஞ்சள் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

விழா நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலிருந்தே மக்கள் யாத்திரையைத் துவக்கி விடுவார்கள் .

மண்டபத்தில்  உள்ள கடவுள் சிலை மீது பொடியைத்தூவி, இறைவன் பாதத்திலிருந்து பிரசாதம் எடுத்துச் செல்லுவார்கள் .

–subham—

Tags – மஞ்சள் பொடி , திருவிழா , இடையர் , பாபா, ஆரூடம், ஆட்டு ரோமம்

ரஸனைக்குரியவை ஆறு! (Post No.120,48)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,048

Date uploaded in London –   27 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx  

ரஸனைக்குரியவை ஆறு!

ச.நாகராஜன்

ரஸனைக்குரிய விஷயங்கள் ஆறு

1) புஷ்பம் 2) வாசனை 3) பெண் 4) படுக்கை 5) ஆடை 6) அலங்காரம்

*

பாஷைகள் ஆறு!

பண்டைய காலத்தில் ஆறு பாஷைகள் வழங்கி வந்தன.

அவையாவன:

1) சம்ஸ்கிருதம் 2) ப்ராக்ருதம் 3) அபப்ரம்ஷம் 4) சௌரசேனீ 5) மாகதீ 6) பைசாசீ

சம்ஸ்க்ருத ப்ராக்ருத அபப்ரம்ஷ பைஷாசிக மகத சூரசேனாபி:

*

உபரத்னங்கள் ஏழு

ஏழு உபரத்னங்கள் உள்ளன.

அவையாவன : 1) வைக்ராந்தம் 2) சூர்யகாந்தம் 3) சந்த்ரகாந்தம் 4) ராஜாவர்தம் 5) லால் 6) பேரோஜ் 7) ஸ்படிகம்

*

கர்மபலனின் ரூபங்கள் ஏழு

ஒருவனின் கர்மபலனின் ரூபங்களை ஏழு விஷயங்களின் மூலமாகக் காணலாம்.

1) புத்தி 2) ஆயுள் 3) ஆரோக்யம் 4) பலம் 5) பாக்யம் 6) ஆகமம் (பாரம்பரிய கொள்கைகள்) 7) ரூபம்

இது மஹாபாரதத்தில் அனுசாஸன பர்வத்தில் வரும் ஸ்லோகம்.

புத்திமாயுஷ்யமாரோக்யம் பலம் பாக்யம் ததாகமம் |

ரூபேண சப்ததா பூத்வா மானுஷம் பலதி த்ருவம் ||

*

முக்கிய கீதைகள் ஏழு

அநேக கீதைகள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஏழு.

அவையாவன :

1) பகவத் கீதை 2) ராம கீதா 3) கணேச கீதா 4) சிவ கீதா 5) தேவி கீதா 6) கபிலா கீதா 7) அஷ்டாவக்ர கீதா

*

சக்ரவர்த்திகள் எழுவர்

பாரத தேசத்தில் சக்ரவர்த்திகள் எழுவர்.

1) பரதன் 2) அர்ஜுனன் 3) மாந்தாதா 4) பகீரதன் 5) யுதிஷ்டிரர் 6) சகரன் 7) நகுஷன்

*

மோக்ஷபுரிகள் ஏழு

ஸ்கந்த புராணத்தின் படி (காசி காண்டம் 6/68) மோக்ஷ புரிகளாக இருப்பவை ஏழு.

1) காசி 2) காஞ்சீபுரம் 3) மாயா 4) அயோத்யா 5) த்வாரகா 6) மதுரா 7) அவந்திகா

காசீ காஞ்சீ ச மாயாக்யா த்வயோத்யா த்வாரவத்யபி |

மதுராவந்திகா சைதா: சப்த பூர்யோத்ர மோக்ஷதா: ||

ப்ரஹ்மபுராணத்தின் படி (4,40,91)  ஏழு மோக்ஷபுரிகளின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

1) அயோத்யா 2) மதுரா 3) மாயா 4) காசீ 5) காஞ்சீ 6) அவந்திகா 6) புரீ 7) த்வாராவதீ

அயோத்யா மதுரா மாயா கானீ காஞ்சீ அவந்திகா |

புரீ த்வாராவதீ சைவ சப்தைதா மோக்ஷதாயிகா: ||

*

ஏழு ’ காரங்கள் அடைவதற்கு கஷ்டம்!

’ –வில் ஆரம்பிக்கும் இந்த ஏழும் அடைவதற்கு மிகவும் கஷ்டமே!

1) சம்பத்தி (செல்வம்) 2) சரஸ்வதி (கல்விவாக்கு வன்மை) 3) சத்யம் (சத்யம் பேசுதல்) 4) சந்ததி (மக்கட்பேறு) 5) சதனுக்ரஹ 6) சத்தா (பல அர்த்தங்கள் உண்டு – வாள் சுழற்றல்வேத ஞானம் உள்ளிட்டவை) 7) சுக்ருதம்

*

பார்வதி தேவியின் ஏழு பேர்கள்

தர்மசாஸ்திரத்தின் படி பார்வதி தேவிக்கு ஏழு பெயர்கள் உள்ளன. அவையாவன:

1) குஸுதா 2) மாதவீ 3) கௌரீ 4) பவானீ 5) பார்வதீ 6) உமா 7) அம்பிகா.

**