
Post No. 12,114
Date uploaded in London – – 10 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

1.அருணகிரி நாதர் பாடிய நூல்கள் யாவை ?
2. அருணகிரி நாதர் உயிர்விட எண்ணிய கோபுரம் எந்த ஊரில் உளது ?
3.அவர் பாடிய முதல் பாடல் எது?
4.தன்னை ஆதரித்த வள்ளலை அருணகிரி நாதர் என்ன பெயரில் பாடல்களில் குறிப்பிடுகிறார் ?
5.அருணகிரி நாதரைப் போட்டிக்கு அழைத்து தோற்றுப்போன புலவர் யார்?
6.அருணகிரி நாதரிடம் பாரிஜாத மலர் கேட்கும்படி செய்த பொறாமைக்காரன் யார்?
7.அருணகிரி நாதர் உடல் எரிக்கப்பட்டவுடன் அவர் எந்த உருவில் மீண்டும் வந்தார் ?
8.திருப்புகழ் நூலில் முதல் பாடல் என்ன?
9.அருணகிரி நாதர் பாடிய பாடல்கள் எத்தனை ?
அ )300க்கு மேல் , ஆ) 700க்கு மேல் , இ) 1800க்கு மேல் , ஈ) 3100 க்கு மேல்
10.அருணகிரி நாதர் காலம் பற்றி அறிஞர்கள் செப்புவது என்ன ?
Xxxx
.jpg)
விடைகள்
1.திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் வேல் விருத்தம், மயில் விருத்தம்
2.திருவண்ணாமலை
3.முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்…..
4.உதய தாம மார்பான பிரபுட தேவ மாராஜன் // உளமுமாட வாழ் தேவர் பெருமாளே” ( அதல சேடனாராட ) என்கிறார்.
5. வில்லிப்புத்தூரார்
7. கிளி உருவில்
8.கைத்தல நிறைகனி — என்று துவங்கும் பிள்ளையார் பாடல்
9. 1,311 திருப்புகழ் என்று சொல்லுவார்கள். ஆகவே ஈ )1300 க்கு மேல் என்பதே சரி.
10.அவருடைய காலம் 15-ஆம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது..
–subham—
Tags- வில்லிப்புத்தூரார், சம்பந்தாண்டான், திருப்புகழ், பிரபுடதேவ மாராஜன்