
Post No. 12,120
Date uploaded in London – – 11 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தேவாரம் பற்றிய கீழ்க் கண்ட பத்து கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கொடுத்தால் உங்களுக்கு சைவ மணி என்ற பட்டத்தை வழங்குகிறோம் .
1.தேவாரம் பாடிய மூவர் யார் ?
2.அப்பர் பாடிய திருமுறைகளின் எண்கள் என்ன ?
3. சம்பந்தர் பாடியது முதல் மூன்று திருமுறைகள். அவர் பாடிய முதல் பாடல் என்ன?
4.தேவாரத்தின் பொருள் என்ன ?
5.சம்பந்தர் பாடிய பாடலில் ஒவ்வொன்றிலும் ராவணன் பற்றி எங்கு குறிப்பிடுகிறார் ?
6.அப்பர் பாடிய முதல் பாட்டு என்ன?
7.பித்தா என்று இறைவனை அழைத்தவர் யார்?
8.கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் :-
சம்பந்தர் —- பாடினார் ; அப்பர் —- பாடினார்; சுந்தரர் ………. பாடினார்.
9.திருவிழாக்களை மாதம் தோறும் வைத்து வரிசைப் படுத்திப் பாடியவர் யார்?
10.பழமொழிகளை வைத்து வரிசைப் படுத்திப் பாடியவர் யார்?
xxxx

answers
1.சம்பந்தர் , அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர் .
2.நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள்
3.தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)
4. தேவ +வாரம் = கடவுளுக்கு அன்பு செலுத்தும் பாடல்
தேவ + ஆரம் = கடவுளுக்கு மாலை ( பா மாலை )
5.ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் ராவணன், ஒன்பதாம் பாடலில் அடிமுதல் தேடிய கதை, பத்தாம் பாடலில் சமணர், பவுத்தர் கொடுமைகள் 11-ம் பாடலில் கடைக்காப்பு , பலன் இருக்கும்
6. கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல
செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது
வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு
துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
7. சுந்தரர்.
பித்தாபிறை சூடீபெருமானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனிஅல்லேனென லாமே.
8.சம்பந்தர் தன்னைப் பாடினார் ; அப்பர் என்னைப் பாடினார்; சுந்தரர் பெண்ணைப் பாடினார்.
9.திருஞான சம்பந்தர்
10. அப்பர் ( திருநாவுக்கரசர்).
—subham—
tags- தேவாரம், அப்பர், சுந்தரர், சம்பந்தர்