
Post No. 12,147
Date uploaded in London – – 17 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1. கர்நாடக மாநிலத்தில் புகழ் பெற்ற அரண்மனை எது?
2.கர்நாடகத்தில் சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடங்கள் எவை?
3.இந்த மாநிலத்தில் காவிரிநதி உற்பத்தியாகும் இடம் எது ?
4. கர்நாடகத்தில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் எது?
5.தங்கச்சுரங்கம் உள்ள இடத்தின் பெயர் என்ன?
6.இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல் சிலை எங்குள்ளது?
7.கொல்லூரின் புகழ் பரவக் காரணம் யாது?
8.ஆதி சங்கரர் நிறுவிய மடம் எங்கே இருக்கிறது ?
9.துவைத மத ஸ்தாபகர் யார் ? அவர் கர்நாடகாவில் எங்கே பிறந்தார் ?
10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; வேறு என்ன மொழிகள் முக்கியமானவை ?
xxxxx

விடைகள்
1.மைசூரிலுள்ள மஹாராஜா அரண்மனை
2.பேலூர், ஹளபேடு , ஹம்பி
3.குடகு, தலைக்காவேரி
4.உடுப்பியிலுள்ள கிருஷ்ணன் கோவில்
5.கோலார்
6.சிரவண பெலகோலாவில் மலை மீதுள்ள கோமடேஸ்வரரின் சிலை ஒரே கல்லினால் ஆனது.. அதன் உயரம் 58 அடி .
7.மூகாம்பிகை அம்மனின் அழகிய விக்ரகம் அங்கே இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு தமிழ் நாட்டின் முதலைச்சர் M G R . வைரவாள் கொடுத்தவுடன் தமிழ்நாட்டில் அந்த அம்மனின் புகழ் பரவியது . பின்னர் முதலமைச்சராக வந்த ஜெயலலிதா தங்கம் கொடுத்தார்
8.சிருங்கேரி
9.மத்வர் ; அவர் உடுப்பி தாலுகாவில் உள்ள பாஜக கிராமத்தில் பிறந்தார்.
10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; துளு , கொங்கணி ஆகிய மொழிகளுடன் தமிழும் பேசப்படுகின்றன ; எல்லைப்பகுதியில் மராத்தி பேசப்படுகிறது.
–subham—
Tags – கன்னடம், மைசூரு, கர்நாடகம், கொல்லூர்