
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,205
Date uploaded in London – – 30 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
தண்டலையார் சதகம் பழமொழிகள்
ஜூலை 2023 நற்சிந்தனை காலண்டர்
பண்டிகை நாட்கள் – ஜூலை 17 ஆடி அமாவாசை/தட்சிணாயன புண்யகாலம் ; 22- ஆடிப்பூரம்
அமாவாசை – ஜூலை 17 ; பெளர்ணமி – ஜூலை 3
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – ஜூலை 13, 28
சுப முஹூர்த்த நாட்கள் – ஜூலை 5, 7, 9
Xxx
படிக்காசுப் புலவர் இயற்றிய பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் நூலிலிருந்து 31 பழமொழிகளைக் காண்போம். அதில் மொத்தம் 100 பழமொழிகள் உள்ளன
xxxxxx

ஜூலை 1 சனிக் கிழமை
வான்செய்த நன்றிக்கு வையகம்என்
செய்யும்? அதை மறந்திடாதே.
xxxx
ஜூலை 2 ஞாயிற்றுக் கிழமை
நன்மை செய்தார் நலம் பெறுவர்! தீமை செய்தார்
தீமை பெற்று நலிவர் தாமே.
xxxx
ஜூலை 3 திங்கட் கிழமை
இல்லறமே பெரிதாகும்! துறவறமும்
பழிப்பு இன்றேல் எழில் அது ஆமே!
xxxx
ஜூலை 4 செவ்வாய்க் கிழமை
கொக்கு எனவே நினைத்தனையோ? கொங்கணவா!’
என்று ஒருத்தி கூறினாளே!
xxxx

ஜூலை 5 புதன் கிழமை
பன்றி பல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று
ஈன்றதனால் பயன் உண்டாமே;
xxx
ஜூலை 6 வியாழக் கிழமை
வரு விருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது
உணும் சோறு மருந்து தானே.
xxx
ஜூலை 7 வெள்ளிக் கிழமை
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
பொழிந்துவிடும் தன்மை தானே!
xxxxx
ஜூலை 8 சனிக் கிழமை
எறும்பு எண்ணாயிரம் அப்பா! கழுதையும் கை
கடந்தது எனும்’ எண்ணம் தானே!
xxxx
ஜூலை 9 ஞாயிற்றுக் கிழமை
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
நினைக்கும் இந்த உலகம் தானே!
xxxx
ஜூலை 10 திங்கட் கிழமை
காட்டுக்கே எறித்தநிலா, கானலுக்கே
பெய்த மழை கடுக்கும் தானே!
xxxx
ஜூலை 11 செவ்வாய்க் கிழமை
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய்
நல்ல சுரைக்காய் ஆகாதே!
xxxx
ஜூலை 12 புதன் கிழமை
மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லையாய்
இருந்த வண்மை தானே.
xxxx
ஜூலை 13 வியாழக் கிழமை
பொறுத்தவரே அரசு ஆள்வார்! பொங்கினவர்
காடாளப் போவார் தாமே.
xxx
ஜூலை 14 வெள்ளிக் கிழமை

விடியல்மட்டும் மழைபெயினும் அதில் ஓட்டாங்
குச்சில் முளை வீசிடாதே!
xxx
ஜூலை 15 சனிக் கிழமை
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
தன்னுடனே ஆகும் தானே.
xxxx
ஜூலை 16 ஞாயிற்றுக் கிழமை
நாய் அறியாது ஒரு சந்திச் சட்டிப் பானையின்
அந்த நியாயம் தானே!
xxxx
ஜூலை 17 திங்கட் கிழமை
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
வாழ்ந்தாலும் என் உண்டாமே?
xxx
ஜூலை 18 செவ்வாய்க் கிழமை
ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த
பூதம் என இருந்தால் என்ன?
காதவழி பேர் இல்லான் கழுதையோடு
ஒக்கும் எனக் காணலாமே!
xxxx
ஜூலை 19 புதன் கிழமை
தெரியாத செவிடன் காதினில் சங்கு
குறித்தது எனச் செப்பலாமே.
xxx
ஜூலை 20 வியாழக் கிழமை
தன் உயிர்போல் எந்நாளும் மன் உயிருக்கு
இரங்குவது தக்க தாமே.
xxxx
ஜூலை 21 வெள்ளிக் கிழமை
சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய
நேரம் இல்லாத் தன்மை தானே!
xxxxx
ஜூலை 22 சனிக் கிழமை
தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று
நினைப்பதுவும் சகசம் தானே.
Xxxxx

ஜூலை 23 ஞாயிற்றுக் கிழமை
சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த
போதில்என்ன? தாழ்ச்சி தானே?
Xxxxx
ஜூலை 24 திங்கட் கிழமை
கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக்
கோடான கொள்கை தானே!
Xxxxxx
ஜூலை 25 செவ்வாய்க் கிழமை
துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
வேந்தன் ஒரு துரும்பு தானே.
Xxxxx
ஜூலை 26 புதன் கிழமை
ஆரியக் கூத்து ஆடுகினும் காரியமேல்
கண்ணாவது அறிவு தானே.
Xxx
ஜூலை 27 வியாழக் கிழமை
தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார்:
கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கம் உள்ள அரசனும்தன் மந்திரியும்
ஆழ்நரகில் மூழ்குவாரே!
Xxxxx
ஜூலை 28 வெள்ளிக் கிழமை
காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே
அழகு ஆகிக் காணும் தானே.

Xxxxx
ஜூலை 29 சனிக் கிழமை
காற்று உள்ள போது எவரும் தூற்றிக் கொள்வது
நல்ல கருமம் தானே?
Xxxx
ஜூலை 30 ஞாயிற்றுக் கிழமை
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
ராட்டினத்தைச் சுமந்த வாறே.
Xxxxx
ஜூலை 31 திங்கட் கிழமை
தண்டலையார்
பூடணமாய் வளர்த்த நாகம்
ஏன் பிள்ளாய்! கருடா! நீ சுகமோ? என்று
உரைத்த விதம் என்னலாமே!
Xxxxx
Bonus proverbs
மரம்தனை வைத்தவர் நாளும் வாடாமல்
தண்ணீரும் வார்ப்பர் தாமே.
xxxxxxxx
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
காட்டிவரும்கொள்கை தானே.
Xxxx
—-subham—
Tags– தண்டலையார் சதகம் ,பழமொழிகள்,
ஜூலை 2023 காலண்டர் , நற்சிந்தனை,