தண்டலையார் சதகம் பழமொழிகள் (Post No.12,205)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,205

Date uploaded in London – –  30 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தண்டலையார் சதகம் பழமொழிகள்

ஜூலை 2023 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் – ஜூலை 17 ஆடி அமாவாசை/தட்சிணாயன புண்யகாலம் ; 22- ஆடிப்பூரம்

அமாவாசை – ஜூலை 17 ; பெளர்ணமி – ஜூலை 3

 ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – ஜூலை  13, 28

சுப முஹூர்த்த நாட்கள் – ஜூலை 5, 7, 9

Xxx

படிக்காசுப் புலவர் இயற்றிய பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம்  நூலிலிருந்து 31 பழமொழிகளைக் காண்போம். அதில் மொத்தம் 100 பழமொழிகள் உள்ளன

xxxxxx

ஜூலை  1 சனிக் கிழமை

வான்செய்த நன்றிக்கு வையகம்என்

     செய்யும்? அதை மறந்திடாதே.

xxxx

ஜூலை  2 ஞாயிற்றுக் கிழமை

நன்மை செய்தார் நலம் பெறுவர்! தீமை செய்தார்

     தீமை பெற்று நலிவர் தாமே.

xxxx

ஜூலை  3 திங்கட் கிழமை

இல்லறமே பெரிதாகும்! துறவறமும்

     பழிப்பு இன்றேல் எழில் அது ஆமே!

xxxx

ஜூலை  4 செவ்வாய்க் கிழமை

கொக்கு எனவே நினைத்தனையோ? கொங்கணவா!’

     என்று ஒருத்தி கூறினாளே!

xxxx

ஜூலை  5 புதன் கிழமை

பன்றி பல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று

     ஈன்றதனால் பயன் உண்டாமே;

xxx

ஜூலை  6 வியாழக் கிழமை

வரு விருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது

     உணும் சோறு மருந்து தானே.

xxx

ஜூலை  7 வெள்ளிக் கிழமை

சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி

     பொழிந்துவிடும் தன்மை தானே!

xxxxx

ஜூலை  8 சனிக் கிழமை

எறும்பு எண்ணாயிரம் அப்பா! கழுதையும் கை

     கடந்தது எனும்’ எண்ணம் தானே!

xxxx

ஜூலை  9  ஞாயிற்றுக் கிழமை

உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்

     நினைக்கும் இந்த உலகம் தானே!

xxxx

ஜூலை  10 திங்கட் கிழமை

காட்டுக்கே எறித்தநிலா, கானலுக்கே

     பெய்த மழை கடுக்கும் தானே!

xxxx

ஜூலை  11 செவ்வாய்க் கிழமை

கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய்

     நல்ல சுரைக்காய் ஆகாதே!

xxxx

ஜூலை  12 புதன் கிழமை

மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லையாய்

     இருந்த வண்மை தானே.

xxxx

ஜூலை  13 வியாழக் கிழமை

பொறுத்தவரே அரசு ஆள்வார்! பொங்கினவர்

     காடாளப் போவார் தாமே.

xxx

ஜூலை  14 வெள்ளிக் கிழமை

விடியல்மட்டும் மழைபெயினும் அதில் ஓட்டாங்

     குச்சில் முளை வீசிடாதே!

xxx

ஜூலை  15 சனிக் கிழமை

ஐங்காதம் போனாலும் தன்பாவம்

     தன்னுடனே ஆகும் தானே.

xxxx

ஜூலை  16  ஞாயிற்றுக் கிழமை

நாய் அறியாது ஒரு சந்திச் சட்டிப் பானையின்

     அந்த நியாயம் தானே!

xxxx

ஜூலை  17 திங்கட் கிழமை

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்

     வாழ்ந்தாலும் என் உண்டாமே?

xxx

ஜூலை  18 செவ்வாய்க் கிழமை

ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த

     பூதம் என இருந்தால் என்ன?

காதவழி பேர் இல்லான் கழுதையோடு

     ஒக்கும் எனக் காணலாமே!

xxxx

ஜூலை  19 புதன் கிழமை

தெரியாத செவிடன் காதினில் சங்கு

     குறித்தது எனச் செப்பலாமே.

xxx

ஜூலை  20 வியாழக் கிழமை

தன் உயிர்போல் எந்நாளும் மன் உயிருக்கு

     இரங்குவது தக்க தாமே.

xxxx

ஜூலை  21 வெள்ளிக் கிழமை

சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய

     நேரம் இல்லாத் தன்மை தானே!

xxxxx

ஜூலை  22 சனிக் கிழமை

தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று
     நினைப்பதுவும் சகசம் தானே.

Xxxxx

ஜூலை  23  ஞாயிற்றுக் கிழமை

சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த
     போதில்என்ன? தாழ்ச்சி தானே?

Xxxxx

ஜூலை  24 திங்கட் கிழமை

கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக்
     கோடான கொள்கை தானே!

Xxxxxx

ஜூலை  25 செவ்வாய்க் கிழமை

துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
     வேந்தன் ஒரு துரும்பு தானே.

Xxxxx

ஜூலை  26 புதன் கிழமை

ஆரியக் கூத்து ஆடுகினும் காரியமேல்
     கண்ணாவது அறிவு தானே.

Xxx

ஜூலை  27 வியாழக் கிழமை

தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார்:
     கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கம் உள்ள அரசனும்தன் மந்திரியும்
     ஆழ்நரகில் மூழ்குவாரே!

Xxxxx

ஜூலை  28  வெள்ளிக் கிழமை

காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே
     அழகு ஆகிக் காணும் தானே.

Xxxxx

ஜூலை  29 சனிக் கிழமை

காற்று உள்ள போது எவரும் தூற்றிக் கொள்வது
     நல்ல கருமம் தானே?

Xxxx

ஜூலை  30  ஞாயிற்றுக் கிழமை

சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
     ராட்டினத்தைச் சுமந்த வாறே.

Xxxxx

ஜூலை  31  திங்கட் கிழமை

தண்டலையார்
     பூடணமாய் வளர்த்த நாகம்
ஏன் பிள்ளாய்! கருடா! நீ சுகமோ? என்று
     உரைத்த விதம் என்னலாமே!

Xxxxx

Bonus proverbs

மரம்தனை வைத்தவர் நாளும் வாடாமல்
     தண்ணீரும் வார்ப்பர் தாமே.

xxxxxxxx

குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
     காட்டிவரும்கொள்கை தானே.

Xxxx

—-subham—

Tags– தண்டலையார் சதகம் ,பழமொழிகள்,

ஜூலை 2023 காலண்டர் , நற்சிந்தனை,

Leave a comment

Leave a comment