QUIZ தமிழ் சிற்றிலக்கியப் பத்து QUIZ (Post No.12,179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,179

Date uploaded in London – –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கீழ்கண்டவாறு பாடினார்

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

     சயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

     அந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

     வசைபாடக் காள மேகம்

பண்பாகப் பகர்சந்தம் படிக்காச

     லாலொருவர் பகரொ ணாதே.”

1.வெண்பா பாடுவதில் புகழேந்தி வல்லவர் என்று பாடல் சொல்கிறதே ; அவர் பாடிய வெண்பா என்ன?

2.பரணிக்கு சயம் கொண்டான் என்ற புலவரைப் போற்றுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். அது என்ன பரணி நூல் ?

3.இலக்கியத்தில் பரணி என்றால் என்ன?

4.தமிழில் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் நிலவியது. புகழேந்தியுடன் மோதிய புலவர் யார்?

5. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லி கதவை படார் என்று மூடியவர் யார்?

6.விருத்தமென்னும் ஒண்பாவில் உயர்கம்பன் என்பதற்கு நமக்கு பொருள் தெரியும்; கம்பன் பாடிய ராமாயணம் புகழ்பெற் றது அடுத்ததாக கோவையுலா  அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன் என்பதன் பொருள் என்ன?

7.கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் (கண்பாய = பெருமையுடைய)— என்ற வரியிலுள்ள இரட்டையர்கள் யார்? அவர்கள் செய்த கலம்பகம் என்ன?

XXXXX

8.வசைபாடக் காள மேகம் என்பதைப் பலரும் அறிவோம். அவர் பாடிய சிலேடைப்பாடல்கள் பலரைத் தாக்கியும் பகடி செய்தும் எழுதப்பட்டவை  அதைத் தொடர்ந்து பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொ ணாதே.” என்கிறார். அதன் பொருள் என்ன?

XXXXXXX

9.இவ்வளவு புலவர்களை ஒரே பாடலில் பெருமைப்பட நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் யார்?

XXXXX

10.அதிவீரராமர் பாடிய இருநூல்களின் பெயர்களைத் தருக

xxxx

விடைகள்

1.நளவெண்பா

2.கலிங்கத்துப் பரணி

3.பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.

4.ஒட்டக்கூத்தர்

xxxxx

5.குலோத்துங்க மன்னனோடு ஊடல் கொண்ட

அரசி கோபத்தோடு போய் கதவை மூடிக் கொண்டாள்.

மன்னனுக்காக கதவைத் திறந்துவிடு என்று சொல்ல  ஒட்டக்கூத்தர் தூது போனார்.ஒரு பாடலையும் பாடினார் .அரசிக்கு மேலும் மேலும் கோபம் அதிகரித்தது   ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லி 2 முறை தாழ்ப்பாள் போட்டாள் அரசி.  பாடல் இதோ:

நானே இனியுன்னை வேண்டுவதில்லைநளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் வீரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே !

Meaning

அழகான  மலரில் இருக்கும் தேன் போன்ற இனிமையான பெண்ணே!

மன்னனுக்காகக் கதவைத் திறந்துவிடு என்று உன்னை வேண்டிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம்  எனக்கில்லை. வானளாவிய புகழ் கொண்ட

ஆண் சிங்கத்துக்கு நிகரானவன் என் மன்னன் குலோத்துங்கன். வாள் வீரனாகிய குலோத்துங்கன் உன் அறையின் பக்கம் வந்தாலே போதும்.

தாமரை போன்ற உன் கைகள் தானாக வந்து கதவைத் திறந்து வைத்துவிடும் .

Xxxx

6.மூவர் உலா, தில்லை உலா.

தக்கயாகப் பரணி, கண்டன்  கோவை

கண்டன் அலங்காரம் முதலிய நூல்களை பாடினார்

கண்டன் என்பவன் இரண்டாம் இராசராசன். இவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்பன.

Xxxx

7. இரட்டையர்களின் இயற்பெயர்கள் முது சூரியர்இளஞ்சூரியர் .இரட்டையர்களால் பாடப்பெற்ற கலம்பகம் ‘தில்லைக் கலம்பகம்’. இவ்விருவருள் ஒருவர் முடவர் என்றும் மற்றவர் குருடர் என்றும் கூறப்படுகிறது முடவரைக் குருடர் சுமந்து செல்வார். முடவர் வழி காட்டுவார்.இவர்கள் சோழநாட்டில் இலந்துறை என்ற ஊரினர். ஒரு பாட்டின் முதல் இரு அடியை ஒருவரும், பின் இரு அடியை மற்றவரும் பாடுவர். திருவாமாத்தூர்க் கலம்பகம் . காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் மீது ‘ஏகாம்பரநாதர் உலா’, இவர்களால் இயற்றப்பட்டன.

Xxxx

8.படிக்காசுப்புலவர் என்பவர் தண்டலையார் சதகம் என்னும் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர். இந்தத் தண்டலையார் சதகத்தைப் ‘பழமொழி விளக்கம்’ என்றும் சுட்டுவர். நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு பாடியுள்ளதனால் இந்நூல் ‘பழமொழி விளக்கம் என்னும் பெயர்பெற்றது.

XXXXX

9.பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனப் போற்றப்படும் புலவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவை உலா, அழகர் கிள்ளை விடு தூது முதலான நூல்களைப் பாடியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது தனிப்பாடல்கள் 66 இடம்பெற்றுள்ளன.

XXXXX

10. காசிக் காண்டம்; 2. இலிங்கபுராணம்

—–SUBHAM—–

Tags- சிற்றிலக்கியம், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, இரட்டைப் புலவர்கள், பரணி, சந்தக்கவி

வால்மீகி – கம்பர் – துளசிதாசர் இராமாயணம் – பாலகாண்டம்–ஒரு பார்வை (Post.12,178)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,178

Date uploaded in London –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதிய 

இராமாயணம் – பாலகாண்டம்

ஒரு பார்வை 

வால்மீகி – கம்பர் – துளசிதாசர்

பொருளடக்கம்

முன்னுரை

அணிந்துரை

அத்தியாயங்கள்

1. விஸ்வாமித்திரர் வருகை

2. தாடகை வதம்

3. அகலிகை சாப விமோசனம்

4. சீதா கல்யாணம்

பிற்சேர்க்கை

1. பால காண்டம் வால்மீகி ராமாயணம் ஸர்க்கங்கள்

2. பால காண்டம் கம்ப ராமாயணம் படலங்கள்

3. பால காண்டம் துளஸி ராமாயணம் முதல் சோபானம் ஸ்லோக எண்ணிக்கை

4. உதவிய ராமாயண நூல்களின் பட்டியல்

*

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA வெளியிட்டுள்ள புத்தகமிது.

 திரு R.சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதியுள்ள இராமாயண ஆய்வு நூல் இது.

இதற்கு அவர் வழங்கியுள்ள முன்னுரையில் கூறுவது இது:

வால்மீகி, கம்பர், துளஸிதாஸர் போன்ற மகான்களின் இராமாயணத்திலிருந்து முக்கியக் கருத்துக்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூல் இது.

இது தவிர பல சான்றோர்கள், உரையாசிரியர்களின் உரைகள், நூல்கள் மற்றும் காணொளிக் காட்சிகளின் முக்கியப் பகுதிகள் ஆகிய அனைத்தையும் தொகுத்து இந்த நூலில் தந்துள்ளேன்.

இராமாயணத்தில் பாலகாண்டத்தில் முக்கிய நிகழ்வுகளையும் அதில் உள்ள இரகசியங்களையும் தொகுத்து எனது முதல் படைப்பாக ‘இராமாயணம் – பால காண்டம் ஒரு பார்வை’ என்ற இந்த நூலை அளிக்கிறேன்.

*

நூலுக்கு திரு ச.நாகராஜன் பொருத்தமான ஒரு அணிந்துரையை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிடுவதில் ஒரு பகுதி:

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்

என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாக்கு.

ராம என்ற இரண்டு எழுத்தை உச்சரித்தால் எப்போதும் நன்மைகளையும் செல்வத்தையும் கொடுத்தருள்வான்; தீய செயலும் அதன் பயனான தீவினையும் அழிந்து கெடும். பிறப்பு இறப்புக்கள் இனி நேராமல் தீர்ந்து விடும் என்ற வார்த்தைகள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் உயர் நோக்கத்தையும் தந்து விடுகிறது.

மனித வாழ்க்கையில் ஒருவருக்கு இதை விட வேறென்ன வேண்டும்?

 ‘கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ’ என்று நம்மாழ்வார் கூறி அருளிய ஒரு கருத்தே போதும் நாம் எதைக் கற்க வேண்டும் என்பதை அறிய!

ஆனால் இந்த வேக யுகத்தில் எளிமையாக ராமாயணத்தைத் தருபவரை நமது மனம் நாடுகிறது.

இந்தச் சமயத்தில் தான் திரு ஆர். சேஷாத்ரிநாதன் அவர்களின் கட்டுரைகள் நமக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்து நம்மை மகிழ வைக்கிறது.

வால்மீகி ராமாயணத்தோடு கம்ப ராமாயணம் துளஸி ராமாயணம் ஆகியவற்றை நன்கு படித்து அதில் முக்கியமான பாடல்களை அழகு தமிழில் அனைவருக்கும் புரியும் படி அவர் தந்திருக்கும் பாங்கே பாங்கு.

அவர் இராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள் மற்றும் புராணங்கள் பால் மிகுந்த பக்தி கொண்டவர். பாரம்பரியம் மிக்க சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் இசைக் குடும்பம் என்பது இன்னொரு பெரிய சுவையான செய்தி.

தனது இந்தப் பின்புலத்தைக் கொண்டு அவர் இராமாயணத்தைக் கரும்புப் பாகாகத் தந்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

மூவரின் ராமாயணத்தை ஒப்பிட்டு உயர் கருத்துக்களை நல்குவதோடு மட்டுமின்றி அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை, இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களையும் நன்கு பயின்றுள்ள அவர் இராமாயணம் பற்றி ஆழ்ந்து படித்துள்ள சிறந்த வேத விற்பன்னர்களின் கருத்துக்களையும் ஆங்காங்கே தமது கட்டுரைகளில் தந்துள்ளார்.

அவரது இராமாயணம் பற்றிய படைப்புகளில் முதல் நூலாக இராமாயணம் – பால காண்டம் – ஒரு பார்வை என்ற இந்த நூல் மலர்கிறது.

அவரது பார்வை என்ன பார்வை என்று பார்க்க நூலின் உள்ளே நுழைந்தோமானால் அந்தப் பார்வையின் பல்முக பரிமாணங்களைக் கண்டு பிரமிக்கிறோம்! பால காண்டத்தின் முக்கிய நிகழ்வுகளான விஸ்வாமித்திரரின் வருகை, தாடகை வதம், அகலிகை சாப விமோசனம், சீதா கல்யாணம் ஆகியவற்றில் உள்ள இரகசியங்களையும் மர்மங்களையும் சுவைபட விளக்குகிறார்.

ஒவ்வொன்றும் ஒரு ஆய்வுக் கட்டுரையாக அமைந்திருப்பதோடு, தனது பார்வைக்கான சான்றுகளாக பேரறிஞர்களை மேற்கோள் காட்டுகிறார்.

அறிஞர்கள் சுப்ரமணிய முதலியார், கி.வா.ஜ. ரா.பி.சேதுப்பிள்ளை, ஜவஹர்லால், வாலி, கணபதி உள்ளிட்டோரின் விளக்கவுரைகளைத் தக்க இடங்களில் படிக்கிறோம்; மணிவாசகர், அருணகிரிநாதரின் கருத்துக்களையும் ராமாயணத் தொடர்புடன் படித்து மகிழ்கிறோம்.

மொத்தத்தில் வால்மீகி, கம்பர், துளஸி ஆகியோரின் காவியங்களை ஒன்றாகக் கரைத்து ஏற்பட்ட அதிசயமான ராமாயண அமிர்தத்தைப் பருகுகிறோம். இந்த நல் வாய்ப்பைத் தந்துள்ள அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

***

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம்.

 FIND 20 SIMPLE WORDS IN THE CROSSWORD(Post No.12,177)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,177

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Look at the clues; begin a word where the number is; follow the  colour.

 1   2  
      
3    A 4
      
J 5 67 8  
      9
10   11 
       12
      13
14 A 15 

 ACROSS

1.Vedic Wind God

3.Medical book ; also a dynasty that followed Gupta dynasty

5.In Sanskrit it means old age; English word Gerontology is derived from this Sanskrit word; also name of a demon in Mahabharata

9.cloth, screen , painting, picture(LEFT TO RIGHT)

10.River where Valmiki lived; Name of Thames river is derived from it. Meaning slow moving

12.Name of Lotus flower; name of girls (LEFT TO RIGHT)

13.Spotless, speckless; name of girls (LEFT TO RIGHT)

14.Deathless,; also the name of a dictionary /thesaurus

15.Garden ; pleasing; delightful(LEFT TO RIGHT)

 DOWN

2.wife of Maheswaran

4. music jargon: the first section of the performance of a raga. Vocal or instrumental,

5.long hair; prefix of Pandya ings

6.Posterior, later, superior (go up), rites done following death

7.girls name; lover, husband, bestowed of love

8.the first of the 7 underground divisions  In Hindu Puranas

11.Equal; English word Same is derived from this Sanskrit word; with long sound it meant the third Veda

ANSWERS

UMA, VAKATA, ALAPANA,JARA, RAMILA, ATALA, JATILA, A/SAMA, APARA, LALA, AMALA, NALINI, TA/MASA, PATA, MANA, AMARA/ ARAMA 18+2=20 words

V 1AYU 2  
 R M  
V 3AKATA 4
 P   L
J 5A 6R7A 8 A
A ATAP 9
T10AMAS 11A
INILA 12
LALAM 13
A14MARA15 

—SUBHAM–

Tags- Simple words, Simple words, Atala, Shiop wreck

QUIZ நெரூர் சதாசிவர் பத்து QUIZ (Post No.12,176)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,176

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.சதாசிவ ப்ரம்மேந்திர சுவாமிகளுக்கும் கரூர் அருகிலுள்ள நெரூருக்கும் என்ன சம்பந்தம் ?

2. திரு விசை நல்லூரில் சதாசிவருடைய சகமாணவர் யார் ?

3.திரு விசை நல்லூரில், ஒரு கிணற்றிலிருந்து கங்கை நதி பிரவாகம் எடுத்து தெருவெல்லாம் ஓடியபோது ப்ரம்மேந்திராள் பாடிய பாட்டு என்ன?

4.சதாசிவரின் பிரபல முஸ்லீம் சீடர்கள் யார்?.

5.சதாசிவரின் இயற்பெயர், அம்மா, அப்பா பெயர்கள் என்ன?

6.அவருடைய குருவின் பெயர் என்ன?

7.சுவாமிகள் வித்வானாக யாரிடம் வேலை பார்த்தார் ?

8.யாருக்கு மண்ணில் மந்திரம் எழுதிக்கொடுத்தார்?

9.சதாசிவ ப்ரம்மேந்திராள் செய்த நூல்கள் யாவை ?

10.பஜனைகளில் பாடப்படும் அவரது பாடல்களின் முதல் வரிகள் என்ன?

Xxxxx

Answers

1.நெரூரில் சதாசிவ பிரமம்மேந்திராளின்  சமாதி உள்ளது. மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சியிலும் நர்மதா நதியின் கரையிலுள்ள ஒம்மகாரிலும், காசியிலும் இவர் சமாதி அடைந்ததாகச் சொல்லுவார்கள் .மானாமதுரையிலும் நெரூர் போல சமாதி இருக்கிறது .

2.திருவிசை நல்லூரில் ‘அமாவாசை கிணறு புகழ்’ ஸ்ரீதர ஐயாவாள் இவருடைய கிளாஸ்மேட்Classmate .

3. கிணற்றில் தோன்றிய கங்கையைப் பார்த்து ஆனந்தம் எய்திய சதாசிவர் ,

துங்கதரங்கே கங்கே ஜெய துங்கதரங்கே கங்கே  என்ற பாடலைப் பாடினார்

4.தஞ்சாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் சதாசிவரை வணங்கி , தாங்களும் மகான்கள் ஆனார்கள். அவர்களை இரட்டை மஸ்தான்கள் என்று அழைப்பர் அவர்களுடைய சமாதி தஞ்சாவூரில் இருக்கிறது .

5.மதுரையில் பிறந்த அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன் . செல்லப்  பெயர் பிச்சுக்குப்பன் ;

தாயார் பெயர் — பார்வதி,  தந்தை பெயர் – சோமநாத யோகி.

6.காஞ்சி காமகோடி பீடம் 57-ஆவது பீடாதிபதி ஸ்ரீ பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள்

7.மைசூர் மஹாராஜாவிடம் வித்வானாக வேலை பார்த்தார் .

8.புதுக்கோ ட்டை மகாராஜாவுக்கு மண்ணில் மந்திரம் எழுதிக் கொடுக்கவே அதை அவரும், பின்னர் அவரது வாரிசுகளும் பேழையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

9.தக்ஷிணாமூர்த்தி தியான ஸ்தோத்திரம், நவமணி மாலா, ஸ்வப்னோ திதம், அத்வைத ரஸ மஞ்சரி, அத்வைத தாராவளி, சிவாநுபூதி, ப்ராகாஷிகா, ஆத்மானு சந்தானம், பிரணவ சஹஸ்ர நாமாவளி ,ஆத்ம வித்யா விலாசம்,மநோ நியமனம் மற்றும் சில நூல்கள் .

10.புகழ்பெற்ற பாடல் முதல்  வரிகள் :

பஜரே கோபாலம்மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

பஜரே  யது நாதம்,  பஜரே ரகு வீரம்

a Muslim cutting off the hand of Naked Swamiji Sadasiva Brahmendral; ltaer he realised that he was a great saint after seeing him  walking like a normal man.

—-subham——

 Tags- சதாசிவ ப்ரம்மேந்திராள், நெரூர், Nerur, Sadasiva Brahmendral

Homer’s Iliad did a Miracle! Power of Words !!(Post No.12,175)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,175

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Hindus are very familiar with miracles. Though miracles did happen in different parts of the world, Hindus have a unique type of miracles which is not seen in any other part of the world. Our ‘curses and boons’ are very famous. They all followed a common code of conduct. Once pronounced, even Gods can not withdraw them. So much trust in Promises, in other words Truth. They can only modify them without doing much damage. All these miracles showed the power of the word.

In Sanskrit and later Tamil literature, we see miracles of words. World famous poet Kalidasa can make one dead or make one rise him from death with his poem. Tamil saints Sambandhar and Sundarar brought the dead back from the Parallel Universe. Sambandar even changed the sex of the palmyra tree. Appar and Sambandar even opened the temple gates with their songs. Over fifty such word miracles are listed in Tamil.

Gods even wrote poems for Tamil devotees which again did miracles. Lord Shiva wrote a recommendation letter in poetic form and the Chera King (King of Kerala) immediately gave immense wealth to the bearer of the letter.

A poor Brahmin by name Dharumi got a poem from Lord Shiva and presented it to the Pandya king for money. The king had already announced that anyone who clarifies the natural fragrance of a woman’s hair will be given 1000 gold coins. When the Royal poet Nakkiran challenged the contents of the poem, Lord Shiva himself appeared as a counsel to the poor Brahmin and clarified. Even Saint Appar sang this episode in his Thevaram 1400 years ago. There are hundreds of anecdotes that show the power of word. A particular type of poem will bring death sentence to enemies. But when one apologises, they even brought them back to life.

xxxxx

Homer Power

Though we don’t hear such stories in other parts of the world, there is an interesting episode about Homer’s Iliad. Homer ,the blind poet of Greece , wrote Greeks first books Iliad and Odyssey around 800 BCE. His two epics are the store-house of religion, precept and history. Westerners found solutions in them to solve their problems or to surmount their difficulties. A well known instance of this occurred when Ptolemy Philadelphos, King of Egypt sent Sostratos as his ambassador to the camp of Antigonos Gonatas , King of Macedonia.

In Short: Two kings of Greek origin in Egypt and Europe made peace when the envoy quoted a Greek poem.

Here is the full story:

Antigonos had just won a decisive naval battle against the Egyptians and it seemed Antigonos and his allies would soon overwhelm the house of Ptolemy. The Egyptian king Ptolemy ,therefore, sent Sostratos with instructions to detach, if possible, Antigonos from other allies by offering him any reasonable terms of peace. The Macedonian king Antigonos at first refused Sostratos’ offers. In despair the ambassador thought of Iliad and quoted the passage (Iliad 15-1-201) wherein Iris Zeus’ messenger reminded Poseidon that a noble heart did not fear to relent. The quotation at the same time conveyed to the king Antigonos a hint that although he had won a sea battle he was merely Lord of the Ocaen,  and therefore inferior to Ptolemy  whose armies like Zeus were still masters of the land. Antigonos charmed with the envoy’s ready wit abandoned his allies and made peace with Egypt.

This shows the respect and trust they had for Homer’s divine epis.

(Ptolemy and Antigonos were both Greeks, though they ruled different parts of Europe and Africa)

— Subham— 

Tags- Antigonos, Polemy, Iliad, Homer, Peace, Ambassador

சொற்களின் மஹத்தான சக்தி: கிரேக்க நாட்டில் ஒரு சம்பவம் (Post No.12,174)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,174

Date uploaded in London – –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Image of Blind Poet Homer of Greece

வார்த்தைகளுக்கு / சொற்களுக்கு மஹத்தான சக்தி உண்டு என்பதை இந்துக்கள் நிரூபித்தது போல வேறு எந்த கலாசாரமும் செய்யவில்லை. இந்து மத நூல்களில் உள்ள கதைகள் அனைத்தும் சாபங்கள் அல்லது வரங்களின் அடிப்படையில் அமைந்தவையே. சாபமோ வரமோ கொடுத்துவிட்டால் அதை இறைவனும் கூட விலக்கிக் கொள்ளமுடியாது. பாதிக்கப்பட்டவர் கெஞ்சினால் அல்லது மன்னிப்புக் கேட்டால் கொஞ்சம் மாற்றி அமைத்து ஓரளவு உதவி செய்வார்கள் ; கைகேயிக்கு, தசரதன்  கொடுத்த வரத்தால் ராமாயணம் உருவானது. பஸ்மாசுரனுக்கு சிவ பெருமான் கொடுத்த வரத்தால் சிவனே ஓடிப்போக நேரிட்டது. இவையெல்லாம் சத்தியத்தின் மாபெரும் சக்தியை உணர்த்த வந்த கதைகள். ஒரு சொல்லைச் சொன்னால் அது சத்தியம். அது நடந்தே தீரும்.

அதே போல மதுரையைச் சேர்ந்த ஏழை பிராமணன் தருமிக்கு சிவபெருமான் எழுதிக்கொடுத்த பாட்டை நக்கீரன் எதிர்க்க, சிவ பெருமானே பாடலுக்கு விளக்கம் கொடுத்து ருமியைக் காப்பாற்றி, நக்கீரனைத் தண்டித்ததையும் நாம் அறிவோம்

தமிழ் சங்கத்துக்கு சிவபெருமான் வ ந் து சென்றதை அப்பரும் தேவாரத்தில் பாடியதால் மதுரைச் சம்பவம் 1400 ஆண்டுகளுக்கும் முன்னரே நடந்ததும் தெரிகிறது.

ஸம்ஸ்க்ருத , தமிழ்ப் புலவர்கள் அறம் பாடி எதிரிகளை  மாய்த்ததையும் , பின்னர் அவர்கள் மன்னிப்புக் கேட்கவே அவர்களை உயிர்ப்பித்ததையும் அறிவோம். அப்பரும் சுந்தரரும் உயிரிழந்த ஆண்களையும் பெண்களையும் உயிர்ப்பித்த சம்பவங்களையும் நாம் படித்துள்ளோம். பனை மரங்களின் பால்/sex – மாறியது, அடைக்கப்பட்ட கோவில் கதவுகளைத் திறந்து மூடுவது ஆகியன அனைத்தும் பாடல்களினால் நடந்ததையும் நாம் அறிவோம்.

பாணபட்டருக்கு சிவபெருமான் எழுதிக்கொடுத்த ரெக்கமண்டேஷன் லெ ட்டரைப் recommendation letter பார்த்த சேர மன்னன் அந்தக் கடிதம் கொண்டு வந்தவருக்கு எவ்வளவு பரிசு கொடுத்தார் என்பதை நாம் அறிவோம்..

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

இதோ கிரேக்க நாட்டில் நடந்த சம்பவம்

வடக்கு கிரேக்க நாட்டை மாசிடோனியா Macedonia  என்பர். இதை ஆண்ட ஆன்டிகோனஸ் Antigonos என்ற மன்னன் எகிப்தியருக்கு எதிரான ஒரு கடற் போரில் வெற்றி பெற்றார். இதே நேரத்தில் எகிப்தையும் கிரேக்க வம்சாவளி டாலமி பிலடெல்போஸ் (Ptolemy Philadelphos) ஆண்டுவந்தார்  டாலமிக்கு பயம் வந்துவிட்டது. கடற்போரில் வென்றவன், மற்ற மன்னர்களுடன் சேர்ந்து தன நாட்டையே கபளீகரம் செய்துவிடுவானோ என்று அஞ்சினான். இருவரும் கிரேக்கக வம்சாவளி என்பதால் ஹோமர் எழுதிய இலியட், ஆடிஸி (Homer’s Iliad and Odyssey ) ஆகிய இரண்டு கிரேக்க இதிஹாசங்களையும் நன்கு அறிந்தவர்கள் ஆவர்.

டாலமி தன்னுடைய தூதர் சாஸ்ரதோசை  மாசிடோனியாவுக்கு அனுப்பினார். ஆன்டிகோனசிடம் பேசி எப்படியாவது சமாதான உடன்படிக்கை செய்யவேண்டும். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பொருள் தருவதற்கு தயார் என்று சொல்லுங்கள் என்று சொல்லி தூதரை அனுப்பினார்..

தூதர் ஸோஸ்ரதோஸ் Sostratos பேசிய பேச்சு முதலில் எடுபடவில்லை ; ஆன்டிகோனஸ் மசிந்து கொடுக்கவில்லை.இந்துக்கள், பிரச்சினைளைகளைத் தீர்க்க இராமாயண, மஹா பாரதத்தைப் புரட்டுவது போலவே தூதரும் ஹோமர் எழுதிய இலியட் காவிய வரிகளை நினைவு கூர்ந்தார். அதில் சூஸ் Zeus எனும் தெய்வம் அனுப்பிய தூதர் பொஸை டான்  (Poseidon) என்ற கடல் தெய்வத்துக்குச் சொன்ன வரிகள் (Iliad 15-1-201)  நினைவுக்கு வரவே அதைச் சுட்டிக்காட்டி பேசினார். அதைக் கேட்டவுடன், முன்பு மசியாத மன்னர் சிரித்துக்கொண்டே சரி ,சரி சமாதானம்’ செய்து கொள்ள தயார் என்றார்.  உயர்ந்த மனதுள்ளவர்கள் விட்டுக்கொடுக்கத் தயங்க மார்ட்டார்கள் என்பது அந்த பொன்மொழி ஆகும். அது மட்டுமல்ல; அதில் இன்னொரு பொருளும் தொனித்தது. இன்று நீ கடற்போரில் வென்றதால் மார்தட்டிக்கொள்ளாதே. நீ கடற்படைக்கு பெரியவன் என்றால் நாங்கள் தரைப்படைக்கு பெயர் எடுத்தவர்கள் என்ற பொருளும் தொனித்தது .

தூதரின் திறமையான சொற் பிரயோகமும், சமயோசிதமாக கிரேக்க காவியத்தை மேற்கோள் காட்டியதும் ஆண்டிகோனாசைக் கவர்ந்தது

கிரேக்க இதிஹாசத்தின் மீதும் ,அதிலுள்ள கதைகளின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கையம் புலமையும் இருந்தது .

——-சுபம்  —–

 Tags- Zeus’ , Poseidon ,Antigonos ,Ptolemy , Sostratos

ஹோமர், கிரேக்க, இதிகாசம், இலியட், ஆடிஸி

ஹரியும் சிவனும் ஒண்ணு! (Post No.12,173)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,173

Date uploaded in London –  23 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்  

ஹரியும் சிவனும் ஒண்ணு!

ச.நாகராஜன்

ஹரியும் ஹரனும் ஒண்ணு!

சிலர் ஹரியை வணங்குகின்றனர். சிலர் ஹரனை வணங்குகின்றனர். இருவருமே சமமான தெய்வங்களே! வரம் அருளும் தெய்வங்களே!

இதை அறியாமல் என் தெய்வம் பெரிது; உன் தெய்வம் சிறியது என்று வீண் சண்டை போடக் கூடாது.

ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு என்று பெரியோர் கூறுவர்.

இதை விளக்கிக் கூறும் ஒரு சுபாஷிதம் இதோ:

கேஷாம்சிசிச்சதிகண்டே வைகுண்டே ப்ரீதிரன்யேஷாம் |

மம து த்வாவபி துல்யௌ  ஹஸ்தத்வயோதகன்யாயாத் ||

சிலர் சிவனை வழிபடுகின்றனர். வே/று சிலர் வைகுண்டநாதனை வழிபடுகின்றனர். ஆனால் எனக்கோ இரு கடவுளருமே சமம் தான். இரு கைகளிலும் ஏந்தி இருக்கும் நீர் ஒன்றே என்ற பொது உண்மை போல!

*

ப்ரம்மாவிஷ்ணுசிவன் ஆகியொர் அருள் புரியட்டும்!

கேஷ்டா மாநபஜாயுக்தா வார்சவீஷ்வரகோஜகா: |

ஷம் நோ ததது காஜேஷா வேதேலாஸ்வர்துநீதரா: ||

சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவி ஆகியோருடன்  முறையே கூடி இருக்கும்,

அன்னம், கருடன், நந்தி ஆகியோரை வாகனமாகக் கொண்டிருக்கும் வேதம், பூமி, கங்கா ஆகியவற்றைத் தாங்கி இருக்கும் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் உனக்கு சர்வ மங்களத்தையும் அருள்வாராக!

*

கவிதை அழகு!

ஒரு கவிதையை இயற்றும் போது அதில் வடிவமும் இருக்க வேண்டும், உள்ளடக்கமான பொருளும் அதில் இருக்க வேண்டும், அப்போது தான் அது அழகு.

சிலர் இந்த இரண்டையும் அழகுறக் கொண்டு கவிதை படைக்கும் போது வேறு சிலரோ இது இரண்டுமே இல்லாமல் கவிதையைத் தருகின்றனர்.

இதைச் சொல்லும் ஒரு சுபாஷிதம் இதோ:

கேசித் வஸ்துநி நோ வாசி கேசித் வாசி ந வஸ்துநி |

வாசி வஸ்துனி சாப்யன்யே நான்யே வாசி ந வஸ்துநி ||

சிலர் நல்ல பொருளைக் கொடுத்து வடிவம் தராமல் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். சிலரோ நல்ல வடிவம் தந்து பொருளைத் தராமல் இருக்கின்றனர். இன்னும் சிலரோ இரண்டையும் தருகின்றனர். இன்னும் சிலரோ இந்த இரண்டையுமே தராமல் இருக்கின்றனர்!

*

காசியில் முக்திபெண்களின் அழகில்  முக்தி!

கைரபி நிர்தாரி யதா முக்திர்வாரானசிமரனாத் |

நிரதாரி மயாபி ததா சஹஸ்ரபகதர்ஷனான் முக்தி: ||

சிலர் வாரணாசியில் இறந்து முக்தி அடைய வேண்டும் என்று உறுதி பட இருப்பதைப் போல நானும் ஆயிரம் பாகாக்களை தரிசனம் செய்தே முக்தி அடைவதாக உறுதி பூண்டுள்ளேன்.

இந்த கவிதையில் பாகா என்ற வார்த்தை இரு பொருளில் வந்துள்ளது.

சஹஸ்ர பாகா என்றால் அது இந்திரனைக் குறிக்கும். பாகா என்றால் பெண் என்றும் பொருள்; ஆகவே இந்திரனைக் கண்டு முக்தி அடைவேன் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது ஆயிரம் பெண்களின் தரிசனத்தைக் கண்டால் முக்தி அடைவேன் என்றும் பொருள் கொள்ளலாம்!

சிலேடை அமைந்த நையாண்டி செய்யுள் இது!

*

மேலே தண்ணீர் இல்லை!

ஒரு புதிர் கவிதையைப் பார்ப்போம்.

கேதாரே கீத்ருஷோ மார்க:  குத்ர ஷேதே ஜனார்தன: |

ஸ்தீரிசித்தம் குத்ர ரமதே ஸ்வாமி கிம் வக்தி சேடிகாம் ||

வயல் பாதை எங்கே உள்ளது?

விஷ்ணு எங்கே சயனிக்கிறார்?

ஒரு பெண்ணின் மனம் எங்கே லயிக்கிறது?

எஜமானன் பணிப்பெண்ணிடம் என்ன கூறுகிறார்?

ஒரே வார்த்தையில் நான்கு கேள்விகளுக்கும் பதில் தரப்படுகிறது.

ஊபரிபாதாசிநரே.

ஊபரி என்றால் மேலே என்று பொருள். வயல் பாதை மேலே உள்ளது.

பாதாசி என்றால் சமுத்ர ஜலத்தில் என்று பொருள். விஷ்ணு பாற்கடலில் சயனிக்கிறார்.

நரே என்றால் ஆண் என்று பொருள். பெண்ணின் மனம் ஆணை நினைத்து மகிழ்கிறது.

ஊபரிபாதாசிநரே என்றால்  மேலே தண்ணீர் இல்லை என்று எஜமானன் தனது பணிப்பெண்ணிடம் கூறுகிறார்.

***

QUIZ சிவப்பிரகாசர் பத்து QUIZ (Post No.12,172)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,172

Date uploaded in London – –  22 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.வீர சைவ நெறிகளைப் பரப்பிய துறைமங்கலம்

சிவப்பிரகாச சுவாமிகள்  எங்கே பிறந்தார்?

2. அவர் எழுதிய நீதி நூலின் பெயர் என்ன?

3. சிவப்பிரகாசர் மொழிபெயர்த்த கன்னட மொழி நூலின் பெயர் என்ன ?

4. சிவபிரகாசருடன் பிறந்த சகோதர சகோதரிகள் யார்?

5.சிவப் பிரகாச சுவாமிகள் சகோதரிகளுடன் சேர்ந்து செய்த புதுமை என்ன ?

6. சிவப்பிரகாசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் ?

7. அவரை ஆதரித்த வள்ளல் யார் ?

8. கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு எதிராக சிவப் பிரகாச சுவாமிகள் எழுதிய நூலின் பெயர் என்ன ?

9.அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்ன ?

10.சுவாமிகளின் குரு யார்?

Xxxxx

விடைகள்

1. காஞ்சீபுரம்

2.நன்னெறி

3.பிரபுலிங்க லீலை

4.தம்பிகள் : வேலையர் , கருணைப் பிரகாசர், தங்கை – ஞானாம்பிகை

5.மூவரும் சேர்ந்து ஒரு நூலை இயற்றினார்கள்.; மூவரும் சேர்ந்து இயற்றிய நூல் சீகாளத்திப் புராணம்

6.அவர் 51ஆண்டுகள் மட்டுமே  வாழ்ந்தார். 1603-1654

7.அண்ணாமலை ரெட்டியார்

.8.ஏசுமத நிராகரணம்

9. சிவப் பிரகாச சுவாமிகள் குறைந்தது 33 நூல்களை இயற்றியுள்ளார் .

அப்பர், சம்பந்தர் , சுந்தரர், மாணிக்கவாசகர் பற்றிய நான்மணி மாலை குறிப்பிடத் தக்கது.

10..சிவஞான பாலய சுவாமிகள்

—SUBHAM—-tags-  சிவஞான பாலய சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 

QUIZ மருந்துப் பத்து QUIZ (Post No.12,171)

picture of கரிசலாங்கண்ணி 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,171

Date uploaded in London – –  22 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1. திரி கடுகம் என்று தமிழ் நூலுக்கு மருந்தின் பெயர் இட்டது ஏன்

2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலின் பெயரில் உள்ள 5 வேர்கள் என்ன ?

3. ஏலாதி என்பன என்ன?

4.அஷ்ட சூர்ணத்தில் உள்ள எட்டு மருந்துச் சரக்குகளை சொல்ல முடியுமா?

5. திரிபலா சூர்ணம் என்பது என்ன ?

6.ரோஜா இதழ்களை வைத்து தயாரிக்கும் சாப்பிடக்கூடிய பண்டம் எது?

7.நெல்லிக்காயை வைத்து தயாரிக்கப்படும் லேகியத்தின்  பெயர் என்ன?

8.கரிசலாங்கண்ணி மூலிகை என்ன நோய்க்குச் சிறந்த மருந்து ?

9.பாம்பின் பெயருள்ள இருதய நோய் சிகிச்சை மூலிகையின் பெயர்  என்ன ?

10.மருத்துவத்தின் தந்தை ஹிப்பாக்ரடீஸ் என்ற கிரேக்கர் என்பர் மேலை நாட்டினர். ஆனால் இந்துக்கள் சொல்லும் மருத்துவத் தந்தை யார் ?

Xxxxxx

picture: .ஸர்ப்பகந்தி (Rauvolfia serpentina, the Indian snakeroot)

Answers

1.திரி கடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகும்;அவை வியாதிகளைப் போக்குவது போல தீமைகளை அகற்ற , ஒவ்வொரு பாடலிலும் 3 வழி களைக் குருகிறது இந்த நீதி நூல்.. திரிகடுகம் நூலாசிரியர் நல்லதனார்

2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலில்  உள்ள 5 வேர்கள் :கண்டங்கத்திரி, சிறுவழு துணை , சிறு மல்லி, பெரு மல்லி,நெருஞ்சில் செடிகளின் வேர்கள் ஆகும்.இவை எப்படி உடலுக்கு நன்மை செய்கின்றனவோ அது போல  மனிதனுக்கு நன்மை செய்யும் நீதிகள் இந்த நூலில் உள்ளன . ஆசிரியர் காரியாசான்.

3. நீதிகளைக் கூறும் தமிழ் நூலுக்கு ஏலாதி  என்று நூலாசிரியர் கணி மேதாவியார் பெயரிட்டார். ஈழம், சிறு நாவற் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவை காலத்தை மருந்துபி போட்டிகள் எப்படி உடலுக்கு நன் மை பயக்குமோ அப்படி ஒவ்வொரு பாடலிலும் 6 நீதிகளை வழங்குகிறார்.

4.அஷ்ட சூரணம்: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம்.

5.நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம்.

6. ரோஜா குல்கந்து

7. சியவன பிராஷ்

8.கல்லீரல் நோய்கள் , குறிப்பாக மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.

9.ஸர்ப்பகந்தி (Rauvolfia serpentina, the Indian snakeroot) ரத்த அழுத்தம், பாம்புக்கடி விஷம் நீங்க உதவும்

10. மருத்துவத்தின் தந்தை தன்வந்திரி

 —-  subham  ——

 Tags-  மருந்து, பத்து, Quiz

Chakram Crossword (Post No.12,170)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,170

Date uploaded in London – –  22 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find the 8 chakras with the clues given below; follow the colour.

     1    
         2
  8       
           
           
  7    Ashoka Chakra with original color code   3 
           
           
       4 
     5    

1விஷ்ணுவின் கையிலிருப்பது. பல பெருமாள் கோவில்களில் தனி சந்நிதியே இருக்கிறது

2.இந்தியா முழுவதையும் ஆளும் அரசருக்கு இந்தப் பட்டம்

3.பெருமாள் கையில் இருப்பது; சிறுவர்கள் தீபாவளியின்போது கையில் பிடித்துக்கொண்டு விடுவது

4.மேலைநாட்டினர் காலம் என்பது நேர்க்கோ ட்டில் செல்கிறது என்பர். ஆனால் இந்துக்கள் அது வட்டவடிவமாகச் செல்கிறதுஎன்பர்

5. இது  கீழுள்ள சக்கரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகியவற்றையும் மேலுள்ள சக்கரங்களான விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சகஸ்ராரம் ஆகியவற்றையும் இணைக்கிறது;

6.யோக சாத்திரப்படி ,இந்த  சக்கரம், குரு சக்கரத்தோடு இணைந்து உடலின் பல்வேறு முக்கிய இயக்கங்களை நிர்வகிக்கிறது. குழந்தைப் பிறப்பிற்கு உதவுதல், பால் சுரத்தல், குழந்தைப் பேறு ஆகியவற்றை நிர்வகிப்பது

7.இந்தியாவின் மிக உயரிய ராணுவ/ தரைப்படை விருது

8.இந்தியதேசீயக் கொடியின் நடுவில் இருப்பது

Xxxxxxxxxxxx

Answers

1.சுதர்சன சக்ரம் , 2.சக்ர வர்த்தி , 3.விஷ்ணு சக்ரம் , 4.காலச் சக்ரம் , 5.அனாகத சக்ரம், 7.பரம் வீர் சக்ரம், 6.ஆக்ஞா சக்ரம், 7.பரம் வீர் சக்ரம், 8.அசோக சக்ரம்

     சு1    
        தி2
  அ8  ர்  த் 
   சோ  ர்  
       
ப  7ம்வீர்Ashoka Chakra with original color code ணுஷ்வி3 
    ஞாச்   
   க்    
  ஆ6  னா  கா4 
     அ5    

–subham–

 tags- Chakram, Asoka, , CW