பா, பா,  என்று முடியும் சொற்கள் Crossword (Post No.12,159)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,159

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பா பா  என்று முடியும் சொற்கள்

1.கந்தனின் மற்றோர் பெயர்

2. தேவலோக ஆளாகி 

3.பூ தான இயக்கத் தலைவர் ,

4 .குருவை போல ஒரு நெற்பயிர்

5.மஹாராஷ்டிரத்தில் வணங்கப்படும் சிவனின் ஒரு ரூபம்

6.ஷீரடியிலும் புட்டபர்த்தியிலும் முழங்கும் நாம ம்

7.மஹாத்மா காந்தியின் மனைவி

 8.திருவனந்தபுரம்  ,அருகிலுள்ள ராக்கெட் ஏவுதளம்

     1  
  8   2
       
 7     3
       
      4
 6  5  

ANSWERS

1.கடம்பா,  2. ரம்பா, 3.வினோபா, 4 .சம்பா, 5.க ண் டோ பா, 6.சா ய் பா பா, 7.க ஸ் தூ ரி பா,  8. தும்பா ,

    க 1  
  து 8  ர 2
   ம்ம்ம் 
க 7ஸ்தூரி பானோவி3
   பாடோம் 
  ய் ண் ச4
 சா6  க5  

XXXXXXSUBHAMXXXXXXX

Tags- பா, பா,  முடியும், சொற்கள் ,

முஸ்லீம்களை படுகொலை செய்த வெள்ளைக்காரன்! (Post No.12,158)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,158

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பஞ்சாப் மாநில அமிர்தசரஸில் ஜாலியன் வாலா பாக் தோட்டத்தில் 400 பேரை, குருவி சுடுவது போல, வெள்ளைக்காரன் சுட்டுக்கொன்றதை நாம் அறிவோம். இது தவிர கட்டபொம்மன், பகத் சிங், சுகதேவ், ராஜ குரு போன்றோரைத் தூக்கில் போட்டுக் கொன்றதை நாம் அறிவோம். ஆனால் இது தவிர பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்ததை பலரும் அறியார். இதனால்தான் சுவாமி விவேகானந்தர் அவரது பிரசங்கத்தில் இந்து மஹா சமுத்திரத்தில் உள்ள அத்தனை சகதியையும் உங்கள் மீது வீசினாலும் போதுமான பதிலடி கொடுத்தது ஆகாது என்று வெள்ளைக்காரர்களை ஏசினார் .

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் Prince of Wales இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்தபோது அவருடன் வந்த சிட்னி லோ என்ற பத்திரிக்கை நிருபர் எ விஸன் ஆப் இந்தியா  (A Vision of India by Sidney Low; year 1906) என்ற நூலில் தரும் தகவல் இதோ:

“அதோ ஹுமாயுன் கல்லறை கண்களில் படுகிறது. காலை இளஞ் சூரியன் வெளிச்சத்தில் காணும் போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின் செந்நிற வானத்தில் காணும்போதும் கடந்தகாலத்தில் இந்தக் கல்லறையில் நடந்த புனிதமற்ற ஒரு காட்சி மனக் கண்களில் ஓடுகிறது. 1857-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இந்த இடத்திலிருந்துதான் ஹாட்சனும் (Hodson) அவனுடைய குதிரை வீரர்களும் கடைசி மொகலாய அரசனை வெளியே இழுத்து வந்தார்கள். அந்த அரசன் சிப்பாய்கள் நடத்திய கலகத்தின் பொம்மை அரசன் (Puppet King of Rebellion ) (1857ம் ஆண்டு சுதந்திர போரை வெள்ளைக்காரர்கள் சிப்பாய்க் கலகம் என்ற சொல்லால் ஏசுவர் ).

நடு நடுங்கிக்கொண்டிருந்த அந்தக் கிழட்டு  சதிகாரனை , இங்கிலாந்தின் பிடியிலி ருந்தும் சிறையிலிருந்தும் ஹுமாயுன் கல்லறை காப்பாற்ற முடியவில்லை. அவனுடைய மகன்களின் கொடூர முடிவுகளையும் காப்பாற்ற இயலவில்லை. துணிச்சல் மிக்க, எதற்கும் அஞ்சாத ஹாட்சன் (Hodson) அங்கே ஒளிந்து கொண்டிருந்த மொகலாய இளவரசர்களை மறுநாள் (புரட்சி வெடித்த மறுநாள்) வேட்டை ஆடினான்.

நல்ல உயரமானவன் (ஹாட்சன்); செம்ப ட் டைத் தலையன்; நீல நிற கண்களுடையவன்; ஆங்கிலேயர்களின் கோபம் முழுவதையும் இதயத்தில் கொண்டவன். அந்தக் கல்லறையை  சூழ்ந்திருந்த கும்பல் நின்ற இடத்தில் 100 குதிரை வீரர்களுடன் பாய்ந்தான் அந்த கொரில்லா வீரன்.

பழிவாங்கும் அந்த மனிதன் முன்னால் , முஸ்லீம்களின் வெறி பின்வாங்கி ஓடியது. கல்லறையின் தோட்டத்தில் நின்றவர்கள் கைகளில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் பத்தே வீரர்களின் உதவியால் பறிமுதல் செய்தான். ஆயிரம் வாட்களையும் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தான்  கல்லறைக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆட்களை வெளியே கொணர்ந்து கொலைகார டில்லி வாயிலுக்கு (Delhi Gate) விரட்டிச் சென்றான். தன்னுடைய கையில் இருந்த துப்பாக்கியால் அவர்களைச் சுட்டுக்கொன்றான். அதை பார்த்துக்கொண்டிருந்த முகமதியர்கள் வெலவெலத்து, நடுநடுங்கி பயத்தில் ஸ்தம்பித்து நின்றார்கள் . இரத்தக் களரி ; கொலைவெறிதான். ஆயினும் இதைச் செய்த ஹாட்ஸனின் செயல்பற்றி அவசரப்பட்டு விமர்சனம் செய்து விடாதீர்கள். அதே ஆண்டில்தான் கான்பூர் படுகொலை நடந்தது என்பதை நாம் (பிரிட்டிஷ்காரர்கள் ) நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் “

1906ம் ஆண்டில் சிட்னி லோ எழுதியது

(இணைத்துள்ள ஹாட்ஸன் படத்தையும் காணவும் )

–சுபம்— .

tags- ஹாட்சன் , சிட்னி லோ , வெள்ளைக்காரன், முஸ்லீம்கள், படுகொலை 

QUIZ தெய்வத் தமிழ் பத்து QUIZ (Post No.12,157)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,157

Date uploaded in London – –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1.தமிழில் ஓரெழுத்து, ஐந்தெழுத்து, எட்டெழுத்து , ஆறெழுத்து (ஏகாட்சரம், பஞ்சாட்சரம் , அஷ்டாக்ஷரம், சடாக்ஷரம் ) என்றெல்லாம் போற்றப்படும் மந்திரங்கள் என்ன?

2.சந்தக் கவிகளாலேயே முருகனைப் போற்றியவர் யார் ?

3.தமிழ் மொழியில் மஹாபாரதம் பாடிய முக்கியப் புலவர்கள் யார்?

4.தமிழ் மொழியில் திருவிளையாடல் புராணம் பாடிய முக்கியப் புலவர்கள் யார்?

5.ஆதிசங்கரர் வகுத்த அறு சமயம் யாவை ?

6.விநாயகர் அகவல் பாடியவர் யார்?

7.முருகன், கணபதி, நடராஜர் வதைத்த முக்கிய அசுரர்கள் பெயர்கள் என்ன?

8.சிவபெருமான் எரித்த முப்புரங்களுக்கு உரிய அசுரர்கள் யார்?

9.பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை எது?

10. துதிகளில் 5, 8, 10, 100, 108, 1008 எண்களில் பாடல்களோ ஸ்லோகங்களோ இருந்தால் அவற்றை எப்படி அழைப்பர் ?

xxxxx

விடைகள்

1.ஓம் (1) , நமசிவாய (5), ஓம் நமோ நாராயணாய (8), சரவணபவ (6)

2.அருணகிரிநாதர்; திருப்புகழில்

3.வில்லிபுத்தூரார்  (பாதி கிடைத்தது); பெருந்தேவனார் (முழுதும் கிடைக்கவில்லை)

4.பரஞ்சோதி முனிவர் , பெரும்பற்றப் புலியூரார்

5.காணாபத்யம் (பிள்ளையார் ); கெளமாரம் (குமரன்/முருகன்); செளரம் (சூரிய வழிபாடு), சாக்தம் (சக்தி); சைவம் (சிவன்), வைஷ்ணவம் (விஷ்ணு).

6. ஒளவையார் (சங்க கால ஒளவையார் வேறு)

7.சூரபத்மன் (முருகன்); கஜமுகாசுரன் (கணபதி); முயலகன் (நடராஜர்)

8.தாரகாக்ஷன் , கமலாக்ஷன், வித்யுன்மாலி

9. மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்

10. பஞ்சகம் /பஞ்ச ரத்ன ம் (5), அஷ்டகம் (8); பதிகம் (10; பல ஸ்ருதியுடன் 11); சதகம் (100), அஷ்டோத்தரம் (108); ஸஹஸ்ரநாமம் (1008).

—subham—

Tags- தெய்வத் தமிழ், பத்து, QUIZ 

நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 2 (Post No.12,156)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,156

Date uploaded in London –  20 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

15-6-23 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை

 இரண்டாம் பகுதி இங்கு வெளியிடப்படுகிறது.

நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 2

ச.நாகராஜன்

கந்தனை வளர்த்த கார்த்திகை!

தமிழர் தம் தனிப்பெரும் தெய்வம் முருகன். முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆறு முகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகனே தமிழ் தந்த முருகன்.

கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது.

அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகிய ஆறு நட்சத்திரங்களே அவைகள்!

கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி. கிருத்திகா என்றால் வெட்டும் கருவி என்று பொருள். தீ நாக்குப் போலத் தோற்றம் அளிப்பவை இந்த ஆறு நட்சத்திரங்களூம்.

பிளையாடிஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனம் ஆகும் நாட்களே வருடத்தில் மிகவும் உஷ்ணமான நாட்கள். இதை கார்த்தி நாட்கள் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறோம்.

சூரியனுக்கே இப்படி கூட்டு சேர்க்கையாலேயே அதிக வெப்பம் தரும் இதன் உண்மையான உஷ்ணம் எப்படி இருக்கும்? கற்பனை செய்ய வேண்டியது தான்.

இது 250 ஒளி வருட தூரத்தில் உள்ளது. பைபிளும் கார்த்திகை நட்சத்திரத்தை மூன்று இடங்களில் குறிப்பிடுகிறது. (Job 9.9,38.31. Ams 5.80)

அழுக்குகளையும் பொய்யையும் சுட்டுப் பொசுக்கும் இந்த நட்சத்திரம் ஒளி, தீபம் ஆகியவற்றுடன் இணைத்துப் பேசப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்வில் ஒளிமயமான ஏற்றத்தைக் குறிக்கும் நாள்!

சங்க இலக்கியத்தில் தனியொரு இடத்தை இந்த நட்சத்திரம் பெறுகிறது.

அகஸ்திய நட்சத்திரம்

கானோபஸ் என்று மேலை நாட்டினரால் குறிப்பிடப்படும் அகத்திய நட்சத்திரம் எப்போதெல்லாம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு பூ மலரும். அதுவே அகத்திப்பூ. அந்தக் கீரையே அகத்திக் கீரை.

“தூய கடல் நீரை முழுது உண்டு அது துரந்தான்” என்று கவிச்சக்கரவர்த்தி கம்பனால் வர்ணிக்கப்படும் அகத்தியர் தெற்கு வான மண்டலத்தில் தெரியும் நட்சத்திரம்.

சூரியன் சிம்ம ராசியில் மறையும் போது கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இதைக் கண்ட நமது முன்னோர் அவருக்கு கும்ப முனி என்ற பெயரை இட்டனர்.

அகத்தியர் தோன்றியவுடன் சரியாக மழைக்காலம் முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் நீங்கிய உடனேயே தோன்றும் அகத்தியர் நீரைக் குடித்து விட்டார் என்ற வழக்கு வந்தது.

இன்னொரு அறிவியல் கூற்றுப்படி எப்போதெல்லாம் அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் கடல் நீர் கூடுதலாக வற்றுகிறது.

***

COMMON (SANSKRIT) WORDS CROSSWORD(Post No.12155)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,155

Date uploaded in London – –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1 2   3  4
  5a      
    5 b   
6       4a
      7 8 
9       
       10   4b
  11     
12       
       13 

ACROSS

2. The term has its origin in Malayalam which refers to a committee or a board. Several Viadhyasalas are run by them

5b.One of the three daughters of King of Kasi

6.   in India it is the name of a plant defined with Calotropis gigantea ; also Sun

8. Not the right time, Untimely in Sanskrit

9.Soul used in Bhagavad Gita, Upanishads

11. Mythical animal sculpted in temple pillars (Lion+Elephnat look)

12.orderly, succession, step by step

13. it is the main character of a story in canto 6 of the Bhagavata Purana. In Hinduism, the story is used to illustrate that by uttering God’s divine name, there is hope for even the sinful to be redeemed from their propensity to commit sins.

XXXX

DOWN

1.One of the three daughters of King of Kasi (go diagonal)

1.Customary rules, laws for Hindus

3.Vedic Deity with highest number of hymns

5.a Hanuman’s another name connected with Wind

7. it is a Sanskrit term, derived from the Sanskrit root kri, meaning ‘to do’. It means ‘action, deed, effort’. One yoga is named with this word

4.Kalidasa’s famous poem on Six Seasons

4a Destroying, Finishing, Killing

4b Name of Shiva

10.Short sound means Fourth Yuga; long sound means Fiery form of Goddess Shakti

xxx

answers

A 1 V2ARI 3AR 4
CM 5a   NYT
HABMA5 bDIU
A6RKAIRRS 4a
RU ALAK7 A8 
A 9TMAAI M
 I    10 KH 4b
  Y11ALI A
K12RAMA  R
 ALIMAJA13 

ACROSS

2.VARIAR, 5b.AMBA, 6.ARKA,8.AKALA, 9.ATMA, KRAMA, 11.YALI, 12.KRAMA,

13.AJAMILA

XXXX

DOWN

1.AMBALIKA, 1.ACHARA, 3.INDRA, 5.a MARUTI, 7.KRIYA , 4.RTU SAMHARA,

4a SAMHARA, 4b HARA, 10.KALI.

—SUBHAM–

Tags- sanskrit ,crossword,

British massacred Muslims in India (Post No.12,154)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,154

Date uploaded in London – –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Sidney Low in his book ‘Vision of India’ writes

“But as we gaze upon the distant dome of Humayun’s tomb, floating in the luminous gaze of morning or the amber and emerald of the sunset sky, we remember that once, at least , the sanctuary was violated. It was from these vaults, after Delhi had fallen, in September 1857, that Hodson, of Hodson’s horse, that dashing, daring, reckless adventurer dragged out the last of the Moghuls, the puppet king who had been made the nominal head of the rebellion. The coffin of his ancestor could not shield the trembling old intriguer from the arm of England and an English prison. Nor could it save his sons from a darker room. It was Humayun’s monument that the princes were hiding in when this same Hodson sought them out the following day. Tall and thin, with red hair, and faming blue eyes all alright with the concentrated wrath that was burning in English hearts in that grim autumn, a hundred of his wild horsemen at his heels, the fierce guerilla chief burst into the crowd that beset the mausoleum. Before that Spirit of Vengeance, Mosleme fanaticism quailed. With ten men, Hodson disarmed the clamorous mob in the  garden of the tomb and took a thousand swords and fire arms from them. Then he brought the fugitives through the throng, and carried them on that famous and fatal drive to the Delhi Gate, where he shot them with is own hand, while a host of Mohammedans looked on, paralysed with fear and horror. Al bloody deed; but let us remember that it was the year of the Cawnpore massacres before we pass hasty judgement upon it and its author.” (written in 1906)

Please see the attached picture

—subham—

 Tags- Hodson, Muslims,Mogul princes, shooting, Delhi gate, British

QUIZ இன்பப் பத்து QUIZ (Post No.12,153)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,153

Date uploaded in London – –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1.எல்லார்க்கும் இன்பம் என்று சொன்னவர் யார் ?

2. ‘கொள்ள மாலா இன்ப வெள்ளம்’ என்று செப்பிய ஆழ்வார் யார் ?

3.’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ — என்று பாடியவர் யார் ?

4.’ஆராத இன்பம் அருளும் மலை’ — என்று சிவபெருமானைப் பாடியவர் யார் ?

5.’இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ – என்று அடித்துக்கூறியவர் யார் ?

6.’லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து’  என்ற கருத்தை தாயுமானவர் எப்படிச் சொல்கிறார்?

7.’உலகு இன்பக் கேணி’ — என்று பாடிய புலவர் யார்?

8.உலகம் முழுதும் இன்பம் உறுக/ லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து — என்று எந்தப் பாடலைப் பாடி பாரதியார் கதையை முடிக்கிறார் ?

9.வள்ளுவர் திருக்குறளில் இன்பம் என்ற சொல்லை எவ்வளவு முறை பயன் படுத்துகிறார் ?

10. இன்பம் என்றால் என்னவென்று  திரைப்பம் ஒன்றில் மருதகாசி கொடுத்த இலக்கணம் என்னவோ ?

XXXXX

விடைகள்

1.தொல்காப்பியர்

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)

XXXXX

2.நம்மாழ்வார்

3181     கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்

வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று

நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்

கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே       –திவ்வியப் பிரபந்தம்

XXXXX

3. திருமூலர்

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே—திருமந்திரம்

XXXX

4.மாணிக்க வாசகர்

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி– (சிவபுராணம்), திருவாசகம்

XXXXX

5.திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரத்தில் சொல்கிறார்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும், துன்பமில்லை.– அப்பர் தேவாரம்

XXXX

6.தாயுமானவர் பாடலில் வரும் வரிகள்

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

                         (பராபரக்கண்ணி – 221)– தாயுமானவர்.

XXXXX

7.ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக்கேணியென்றே – மிக

நன்று பல்வேதம் வரைந்த கை பாரத

தேவி தன் திருக்கை (பாரதியார்)

XXXX

8.பாஞ்சாலி சபதம் கவிதை நூலை பாரதியார் இப்படி முடிக்கிறார்

சாமி தருமன் புவிக்கே- என்று

சாட்சி யுரைத்தன  பூதங்களைந்தும் !

நாமும் கதையை முடித்தோம் — இந்த

நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க

XXXXX

9. குறைந்தது 29 இடங்களில் திருவள்ளுவர் திருக்குறளில் இன்பம், இன்புறுவது என்ற சொற்கள் வருகின்றன  . இதோ  சில குறள்  வரிகள் –

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

XXXX

10.இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது

எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே

இருப்பதென்ன உண்மை – இதை

எண்ணிடாமல் சேர்த்து வைத்து

காத்து என்ன நன்மை (2 முறை)

இருக்கும் வரை இன்பங்களை

அனுபவிக்கும் தன்மை

இல்லையென்றால் வாழ்வினிலே

உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)

இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்

இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது

எங்கிருந்த போதுமதை நாடி ஓடு

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்

வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்

மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது

எங்கிருந்த போதுமதை நாடி ஓடு

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்பம் எங்கே இன்பம் எங்கே – மருதகாசி

(திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

—SUBHAM—-

Tags- இன்பம், மருதகாசி , திருவள்ளுவர், இன்பமே எந்நாளும், பாரதியார், எல்லோரும் இன்புற்று, யான் பெற்ற இன்பம் பெறுக

நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 1 (Post No.12,152)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,152

Date uploaded in London –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

15-6-23 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை

முதல் பகுதி இங்கு வெளியிடப்படுகிறது. 

நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 1 

ச.நாகராஜன் 

நாம் அனைவருமே நட்சத்திர மனிதர்கள் தாம்!

நாம் எல்லோரும் நட்சத்திரங்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கிறோம் – ‘வீ ஆர் ஆல் மேட் ஆஃப் ஸ்டார்ஸ்’ (We are all made of Stars – Moby) என்ற ஆகப்பெரும் அமெரிக்க இசைக்கலைஞரான மோபியின் பாடல் உலகையே கலக்கி ஆட்டி வைத்தது அனைவரும் அறிந்ததே

 நம் உடலில் உள்ள கார்பன், நைட்ரஜன் அணுக்கள் மற்றும் இதர மூலகங்கள் அனைத்தும் 450  கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சென்ற தலைமுறை நட்சத்திரங்களினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நவீன அறிவியலும் ஒத்துக் கொண்டிருக்கிறது.

வானில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் தட்ப வெப்ப நிலையையும் , மனிதர்களின் மனோநிலையையும் பாதிக்கிறது என்பதையும் அறிவியல் ஒப்புக் கொண்டு விட்டது.

இதே கருத்தை இந்திய நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே கண்டுபிடித்துக் கூறியது தான் அதிசயம்.

புவியில் உள்ள மனிதர்களைப் பாதித்து நல்லதையும் கெட்டதையும் நல்கும் 28 நட்சத்திரங்களில் காலப்போக்கில் நமது சுழற்சியிலிருந்து வெளியில் சென்று விட்ட அபிஜத் நட்சத்திரத்தை விட்டு விட்டு மீதியுள்ள அஸ்வினி முதல் ரேவதி முடிய 27 நட்சத்திரங்களை நமக்குப் பலன் தரும் தாரகைகளாக நமது அறநூல்கள் பட்டியலிட்டுள்ளன.

சங்க காலத் தமிழகத்தில் வானவியல் உச்சகட்டத்தில் இருந்ததை அதில் நாம் காணும் சுமார் 150க்கும் மேற்பட்ட அதிசயிக்கத்தக்க அற்புதமான வெவ்வெறு பாடல்களில் வரும் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவைகள் தரும் உண்மைகளோ நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

இந்தப் பின்புலத்துடன் வானில் ஒளிரும் சில நட்சத்திர இரகசியங்களையும் அதிசயங்களையும் பார்க்கலாமா?

திருவாதிரை நட்சத்திரம்

27 நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு என்ற அடைமொழியைக் கொண்டிருக்கின்றன. அவை திருவாதிரையும் திருவோணமும் தான். திருவாதிரை சிவபிரானுக்கும் திருவோணம் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கும் உரியது.

பல இரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை! பிரம்மாண்டம் என்றால் எப்படிப்பட்ட பிரம்மாண்டம்? இரண்டுகோடியே ஐம்பது லட்சம் சூரியன்களைத் தன்னுள்ளே அடக்கி வைக்கக் கூடிய அளவு அது பெரியது.  சூரியனோ பூமியை விட பதிமூன்று லட்சம் மடங்கு பெரியது. அப்படியானால் திருவாதிரை பூமியை விட எத்தனை கோடி மடங்கு பெரியது! கணக்கிட்டுப் பாருங்கள்!!

பீடல்ஜியஸ் (Betelgeuse) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திருவாதிரையானது, செக்கச் செவேலென்று ஒளிரும் உக்கிரமான ஒரு நட்சத்திரம் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி வர்ணிக்க முடியும்? அமெரிக்காவில் மவுண்ட் வில்ஸன் ஆப்ஸர்வேடரியிலிருந்து நூறு அங்குல டெலஸ்கோப்பை வைத்து இதைப் பார்க்கும் விஞ்ஞானிகள், “அது ஒளிர்கிறது! பல கோடி சூரியன்கள் ஒன்றாக ஆகி எரிவது போல எரிகிறது” என்கின்றனர்.

முக்கண்ணன் தனது உக்கிரமான பார்வையினால் மன்மதனை எரித்தான் என்பதை பட்டி தொட்டிகளிலேல்லாம் காலம் காலமாக நாம் கேட்டு வரும் வில்லுப்பாட்டு கூறுகிறது. காம தகனம் கதையைக் கேட்காதோர் இல்லை!

கடுமையான கோடைகாலம் முடிந்தவுடன் வசந்த காலம் வர காம உணர்வும் எழுகிறது. இந்த உணர்வு எழுவது எப்போது? சூரியன் மறைந்தவுடன் தனுர் ராசிக்குரிய நட்சத்திரங்கள் எழுகின்ற வேளையில் தான்.

வில்லுடனும் அம்புடனும் குறிக்கப்படுவது இந்த தனுசு ராசி. இந்த ராசிக்குரிய நட்சத்திரங்களே மலர் கணையைத் தொடுக்கும் வில்லுடன்  கூடிய மன்மதனைக் குறிக்கிறது.

 கீழ்வானத்தில் அதாவது கிழக்கே திருவாதிரை நட்சத்திரம் எழ மேல் வானத்தில் தனுர் ராசி நட்சத்திரங்கள் மறைகின்றன, ருத்ரனின் பார்வை பட்டு மன்மதன் மறைகிறான்; எரிந்து போவதாகப் புராணங்கள் கூறுகின்றன! எப்போதும் தேவ- அசுர நட்சத்திரங்கள் நேர் எதிரெதிராக 180 டிகிரியில் இருப்பதை நாம் அறிந்தால் மன்மதனின் மறைவு நமக்கு நன்கு புரிய வரும்.

இதை ரெட் ஜெயண்ட் என்று அனைவரும் புகழ்கின்றனர். எகிப்திய பிரமிடிற்கும் திருவாதிரைக்கும் உள்ள தொடர்பை ஓரியன் மிஸ்ட்ரி உள்ளிட்ட பல ஆங்கில நூல்கள் விவரிக்கின்றன. படித்தால் பிரமிப்பு தான் ஏற்படும்!

இது 642 ஒளி ஆண்டுகள் தூரத்தில் புவியிலிருந்து இருக்கிறது.

ஒரு ஒளி ஆண்டு என்பது ஆறு லட்சம் கோடி மைல்கள் ஆகும்!

விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கைப் போட்டால் ஒரு ஆண்டிற்கான மைல்களாக ஒளி செல்லும் தூரமாக வருவது இது!

திருவோணம் நட்சத்திரம்

“மூவுலகும் ஈரடியா முறைநிரம்பா வகை முடியத்

தாவிய சேவடி” கொண்ட திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கேட்கிறார்!

மகாபலி என்ற அசுரன் இந்திரனுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது கச்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாக மகாவிஷ்ணு புரட்டாசி மாதம் சுக்ல பட்சத்தில் 12ஆம் நாள் அபிஜித் என்ற சுபயோக வேளையில் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் வாமனனாக குள்ள வடிவம் எடுத்து மகாபலி நடத்திய யாகத்திற்குச் சென்றார். அங்கு மகாபலி அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க மூன்று அடி நிலம் வேண்டும் என்கிறார் வாமனன். உடனே தந்தேன் என்கிறான் மகாபலி.

தனது முதல் இரு அடிகளால் பூமியையும் ஏனைய அனைத்து உலகங்களையும் அளந்த வாமனன் மூன்றாவது அடி வைக்க இடம் எங்கே என்று கேட்கிறார். அதற்குத் தன் தலையில் அந்த அடியை வைக்குமாறு மகாபலி சொல்ல மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து அவனைப் பாதாள லோகம் சேர்க்கிறார் வாமனனான மஹாவிஷ்ணு.

இது மலையாளத்தில் ஓணம் பண்டிகையாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதை மஹாவிஷ்ணு.

ஆங்கிலத்தில் அக்கிலா எனப்படும் நட்சத்திரத் தொகுதி திருவோணத்தைக் குறிக்கிறது.

இதன் மேல் பக்கத்தில் மூன்று நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அது கருடனின் தலைப்பகுதியை உருவாக்கும் மூன்று நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன.

இந்த நட்சத்திரத் தொகுதியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பால் வீதி என்பது காசியோபியா நட்சத்திர மண்டலத்தில் ஆரம்பித்து சிரியஸ் நட்சத்திரத்தைத் தாண்டி தென் மண்டலத்தில் போகிறது.

பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தூரம் இது பரவி இருக்கிறது.

இந்தப் பால்வீதி மண்டலத்தைப் பார்த்துப் பிரமித்துப் போன விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல், “இருண்ட வானத்தில் தங்கத் துகள்களை இரு கைகளாலும் ஒருவன் வாரி இறைத்தது போல பால் வீதி மண்டலம் உள்ளது” என்கிறார்.

அறிவியல் வியக்கும் இந்தப் பால்வீதியே அனந்தசயனம் அதாவது பாம்பணை! கற்பனைக்கெட்டா தூரம் இந்த லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் படுக்கை போலப் பரவி இருப்பதை வானில் பார்ப்பதே தனி ஒரு ஆனந்தம் தான்!

இங்குள்ள முக்கிய நட்சத்திரங்களே குடை விரித்த பாம்பு போலத் தோற்றமளிக்கின்றன! அங்குள்ள வானநடுவரையால் கடக்கப்படும் திருவோண நட்சத்திரமே திருமால் வாமனாக அவதரித்த நட்சத்திரம்.

கருடனின் உருவத்தில் மூன்று நட்சத்திரங்களாக தலைப்பகுதியில் உள்ளவையே வாமனனின் பாதங்கள்.

இப்படி புராணத்தையும் அறிவியலையும் இணைக்கும் அற்புத நட்சத்திரமே திருவோணம்.

இந்த நட்சத்திர விசித்திரத்தைப் பார்த்த குலசேகரத்தாழ்வார், “மாதவனை வணங்குகிறேன். எவருடைய நட்சத்திர வடிவமானது குளிர்ந்த அலைகளையுடைய பாற்கடல் போலப் பரந்திருக்க, அதன் நடுவே பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த மாதவனை வணங்குகிறேன்” என்கிறார். – முகுந்தமாலை செய்யுள் 39)

*** 

–          தொடரும்

QUIZ இந்துமதப் பத்து QUIZ (Post No.12,151)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,151

Date uploaded in London – –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Brahma Stamp issued by Laos

வெளிநாட்டில் இந்து மதம் பற்றிய கேள்விகள்

1.தன்வந்திரி படத்துடன் தபால்தலை வெளியிட்ட நாடு எது ?

2.பிள்ளையார் படத்துடன் கரன்சி நோட்டு வெளியிட்ட நாடு எது ?

3.விஷ்ணுவின் வாகனத்தை அந்தநாட்டு ஏர்லைன் ஸுக்குப்  பெயர் சூட்டிய நாடுஎது?

4. ஈரான் நாடு ஏர்லைன்ஸில் உள்ள பறவை என்ன ?

5. இந்தியாவுக்கு வெளியே வேறு எந்த நாட்டில் அயோத்யாவை ராமன்

ஆண்டான்?

6. இந்தியாவுக்கு வெளியே திருவெம்பாவை எந்த நாட்டில் பாடப்படுகிறது?

7.பூமிபுத்ரா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது ?

8.ஸ்ரீ என்ற பெயரை எந்தெந்த நாடு எப்படி பயன்படுத்துகின்றன?

9.அங்கோர்வாட் எங்கே இருக்கிறது ? அதன் சிறப்பு என்ன?

10.பிரம்ம தேசத்தின் தற்காலப்பெயர் என்ன?

xxxxx

விடைகள்

1. நேபாளம்

2இந்தோநேஷியா

3. கருடா ஏர்வேஸ் , இந்தோனேசியா

4. வேதத்தில் சொல்லப்படும் மர்ம ஹோமா பறவை

5. தாய்லாந்து நாட்டில்

6. தாய்லாந்து நாட்டில்

7.மலேசியாவில்

8.இலங்கையில் ‘சிறி’ என்றும் மலேசியாவில் ‘செரி’ என்றும் பிரிட்டனில் ‘ஸர்’ என்றும் பயன்படுத்துகின்றன. இதுவே தமிழில் ‘திரு’ என்று மருவியது.

9.கம்போடியாவில் இருக்கிறது.அது உலகிலேமிகப்பெரிய இந்துக் கோவில் ; ஆனால் இப்போது சம்பிரதாய வழிபாடு இல்லை.

10.மியன்மார்; பிரம்மா என்பது பர்மா ஆனது; இப்போது மியன்மார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுவிட்டது .

—subham—

tags —இந்து மதம், வெளிநாட்டில், கேள்வி பதில் , க்விஸ் 

More Information about Plants in Hinduism- Part 3 (Post No.12,150)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,150

Date uploaded in London – –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Paarijaatam

Nyctanthes arbor tristis

This is the fragrant flowered tree which Krishna brought down from heaven and gave his wife Sathyabhama ( bhaamaa).

Xxxx

Plantain – Banana

Musa paradisiaca

Some people claim that this is the wish granting tree (Kalpaka Vrksha or Kalpa taru) and not coconut. But both the trees are fully used. No part is wasted.

In many pujas, bowers made up of four plantain trees are used as pillars. They are considered auspicious. Tamils use them in all the wedding halls. During Ganesh Chaturthi and Sarasvati Puja, little plants are used to decorate prayer place. There is no Puja without bananas in South India. Women are advised to worship this tree on the fourth of Kartik month . it is also worshipped on third of Shravan.

Fourth- Chaturthi

Third – Trtyai

When placed near the entrances of wedding halls and Puja halls along with its long leaves and laden with fruits, this tree forms an emblem of plenty and prosperity. Tamils eat on the plantain leaves. They are used as plates. They are environmentally friendly and the leaves are eaten by cattle.

Xxxx

Rui

Calotropis gigantia (Giant Milkweed) –Erukku in Tamil.

It is seen as bushes all over India . The leaves are offered to Mangal Gauri. A wreath of the same is put around Hanuman’s neck in North India. In Tamil Nadu, the garlands of this flower are sold in street corners during Ganesh Chaturthi. Every idol will have the Erukam Pu garland.

In some parts of India , the bride garlands the bridegroom with this Maalaa/garland.

If a man loses two wives and goes for the third wife, then he is married to this plant first and then the plant is destroyed. It means the third wife will live longer and avoid early death.

This plant represents Sun (surya) according to Puranas. The twigs are used as fire wood in Havans (fire ceremonies).

On Ratha Saptami day, Hindus put the leaves on their shoulders with rice and take bath.

Xxx

Shami

Prosopis spicigera (Vanni in Tamil)

This is the tree on which the Pandavas deposited their arms, while they were serving King Viraat. It is worshipped on Dsara day and its leaves are said to be dear to Lord Ganesh. In Tamil Nadu, several Ganesh statues are installed under this tree. Madurai Meenkashi temple Vaani Mara (Shami Tree ) Pillaiyar/Ganesh is famous. Dried twigs of Shami Tree are used in Havans, Yagas and Yajnas.

xxx

Til

Sesamum indicum (El in Tamil)

Detailed article is in this blog. (Read ‘Use of water sesamum gives severe blow to Max Muller Gangs’)

Xxx

Tulsi

Ocimum sanctum

Most favourite plant of Vishnu and all his avatars. Tulsi leaves are given in all Vishnu temples as Prasad. It is eaten with devotion. It has very good medicinal properties.  South Indian Vishnu temples put them in water and distribute it to devotees. The plant purifies the atmosphere and destroys mosquitoes. Tulsi marriage (Wedding of Tulsi Plant) is celebrated in North India. The wooden seeds are used as garland.

Xxxx

Umbar

Ficus glomerata (aththi in Tamil)

It is the seat of Tri Murti Dattatreya  (already discussed in this blog)

The three Ficus plants that are praised in Vishnu Sahsranama as Vishnu are  (Vata/Nyagrodha, Pipal/Asvatta and Udumbara/Ficus glomerata . (Please read articles already posted here)

They are all found in Rig Veda, later Indus-Sarasvati Civilization and in all the later and modern temples.

The amazing role of plants in Hinduism shows that they cared for nature, environment and at the same time stressed their importance as medicines. They played a great psychological role as well. All mentally sick patients in Western countries are given lithium tablets which damage their general health; where as in India they are asked to go round temples with trees or groves and they become normal within a year.

Every Tamil temple in South India has a Nandavana (garden) attached to it. Tamils worship specific trees in different temples, known as Sthala Vrksha. Seven holy forests are also popular in Hindu scriptures.

Tulsi and Vilva (Bilva) play a big role in Vishnu and Shiva temples. No culture in the world gives such respect to hundreds of trees. The Kurukshetra Banyan (Vata) tree stands as a monument where from Krishna gave Bhagavad Gita.

Long live trees and forests

—subham—

Tags- trees, plants, role, in Hinduism, worship, banana