
Professor So.So.Mee. Sundaram speaking in London Temple
Post No. 12,250
Date uploaded in London – – 9 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இன்று லண்டன் ஈலிங் பேட்டையில் இருக்கும் கனக துர்க்கை அம்மன் கோவிலில்( KANAGA THURKAI AMMAN TEMPLE, CHAPEL ROAD, EALING, LONDON ) மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ .சொ .மீ . சுந்தரம் அவர்கள் திருமீயச்சூர் லலிதாம்பிகை பற்றி சொற்பொழிவாற்றுகையில் கேட்ட செய்தி:—

காசியின் 5 சிறப்புகள்
காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்பதில்லை; எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை..
அவர் காலை மாலை சொற்பொழிவுகளை கோவிலுக்குள் நடத்துகிறார் சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே ; காலி 11 மணி; மாலை 7 மணி
அனைவரும் வருக ; இறை அருள் பெறுக
ALL ARE WELCOME; TAMIL TALK; DONT MISS IT ; UNTIL 18TH JULY 2023 AT EALING KANAGA DURGA TEMPLE IN LONDON. 11 AM AND 7 PM; TWICE A DAY FOR JUST ONE HOUR.
அவர் காலை மாலை சொற்பொழிவுகளை கோவிலுக்குள் நடத்துகிறார் சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே ; காலி 11 மணி; மாலை 7 மணி
அனைவரும் வருக ; இறை அருள் பெறுக
XXXXX
சொ .சொ .மீ . மேலும் கூறியதாவது
திருமீயச்சூர் அதிசயங்கள்
தாமரை இலையில் வைக்கப்பட்ட பிரண்டை பிரசாதம் ; பிரண்டைஅல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) பல அபூர்வ மருத்துவ குணங்கள் உள்ள தாவரம்/ மூலிகை .
இங்குள்ள ஸ்படிக லிங்கத்தில் ஒரு கோடு/ ஸ்வர்ண ரேகை இருக்கிறது.
சம் பந்தரால் பாடல் பெற்ற தலம் ( ஆகையால் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முந்தியது
பெயர் காரணம்


சூரியனுடைய தேர் டிரைவர் DRIVER அருணனுக்கு கால் நொண்டி. அவனை சூரியன் கிண்டல் செய்யவே சூரியனுக்கு கருமை நிறம் ஏற்பட வேண்டும் என்று சிவன் சாபமிட்டார். பின்னர் அந்த சாபம் நிறைவேற இறைவனும் இறைவியும் உதவினர். கருப்புப் புள்ளிகளால் ஒளி இழந்த சூரியன் மீண்டும் ஒளிபெற்றதால் மீயச் சூர் ஆனது
வலது காலை மடித்து மேலே வைத்துக்கொண்டு இடது காலைத் தொங்கவிடும் அபய ஹஸ்த தேவியை வேறு எங்கும் காண முடியாது .
திருவாரூர் அல்லது கும்பகோணத்திலிருந்து செல்லலாம்.
இன்னும் ஒரு அதிசயம் சூரியன் ஒளி கிரணங்கள் ஆண்டுதோறும் சித்திரை மாத 21ம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு சிவலிங்கம் மீது படுகிறது..
சூரியனுக்கு தனி சந்நிதி உள்ளது.
இறைவி பெயர்- லலிதாம்பிகை, மேகலாம்பிகை
சிவா பெயர் – மேகநாத சுவாமி, முயற்சிநாதர்
கோவில் இளங்கோயில், திருக்கோயில் என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது. சுவாமி சந்நிதிக்கு வலது புறம் லலிதாம்பிகை சந்ந்நிதி இருக்கிறது
அபூர்வ சிற்பங்கள் நிறைந்த கோவில் . லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய கோவில்

சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணின் கனவில், அம்பிகை தோன்றி கொலுசு சார்த்தும் படி சொல்லவே அவரும் வெள்ளிக் கொலுசுடன் கோவிலுக்கு வந்தார்.ஆனால் அங்குள்ள பட்டரோ கொலுசை நுழைக்க அந்த விக்ரகத்தில் துவாரம்/ இடைவெளி இல்லையே என்று சொல்லி அனுப்பிவிட்டார். பின்னர் அடித்த மழை ஒன்றில் தொங்கும் காலிலே வெள்ளம் செல்ல, ஒரு இடைவெளி இருப்பது தெரிந்ததாம்.அடடா, இந்தக் காலில் கொலுசை நுழைத்து இருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு, மடித்து வைக்கப்பட்ட காலை நோக்கியபோது அங்கும் கொலுசை போடுவதற்கு வசதியாக இடைவெளி இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த அம்மையார் வந்து கொலுசுகளை லலிதாம்பிகைக்கு சாத்தினார். இப்பொழு கொலுசு சார்த்துவது ஒரு காணிக்கையாக அமைந்து எல்லோரும் சாத்துகின்றனர்
( இது பற்றி, நான் சென்று வந்த பின்னர் எழுதிய கட்டுரையில் முழு விவரம் கொடுத்துள்ளேன். அந்த விதிகளின் படியுள்ள கொலுசுகளை மட்டுமே கோவில் நிர்வாகம் ஏற்கும் ).
கொல்லூரிலும் சோட்டாணிக்கரையிலும் கோவில் ஏற்பட்ட வரலாறுகளையும், லலிதா சஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதிய பாஸ்கர ராயர் வாழ்வில் ஏற்பட்ட அதிசயங்களையும் சொ .சொ .மீ . விரிவாக எடுத்துரைத்தார்.
—-TAGS—-
TAGS- சொ .சொ .மீ . திருமீயச்சூர் அதிசயங்கள் , கொலுசு அதிசயம் , காசியின் 5 சிறப்புகள், சூரியன்