QUIZ பகவத் கீதை பத்து QUIZ (Post No.12,349)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,349

Date uploaded in London – –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Series No.55

QUIZ பகவத் கீதை பத்து QUIZ

1.எந்த பகவத் கீதை வாசகத்தை இந்திய அரசு தபால் தலையில் வெளியிட்டது ?

xxxxx

2.உடலுக்கு அழிவு உண்டு; ஆனால் ஆத்துமாவுக்கு அழிவில்லை என்பதை கிருஷ்ணர் எங்கே சொல்கிறார் ?

xxxx

3.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரி எது?

xxx

4.நல்லோரைக் காப்பேன்; தீயோரை அழிப்பேன் என்று எந்த அத்தியாயத்தில் சொல்கிறார்?

xxxx

5.பகவத் கீதையில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? எத்தனை ஸ்லோகங்கள் இருக்கின்றன   ?

xxxx

6.உன்னையே நீ அறிவாய் KNOW THYSELF என்று கிரேக்கர்கள் சொன்னதாக கலைக் களஞ்சியங்கள் சொல்லும். ஆனால் அதற்கு முன்னரே கிருஷ்ணர் எங்கு சொன்னார் ?

Xxxx

7.கடவுளை நாடி வருவோர் 4 வகையாம். அவர்கள் யார்?

xxx

8.நரகத்துக்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார் ?

xxx

9.”ஓடும் இருநிதியு மொன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே” என்ற தாயுமானவர் “

கூற்று பகவத் கீதையில் எப்படி உள்ளது ?

xxxx

10.முருகன், அரச மரம் பற்றி கிருஷ்ணர் சொல்வது என்ன ?

XXXX

விடைகள்

1.நீ செய்யும் செயல்களை பற்றில்லாமல் செய்

கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை

xxx

2.இரண்டாம் அத்தியாயத்தில்;

ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:

(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது.

xxxx

3.க்லைப்யம் மாஸ்ம கம: ந ஏதத் த்வயீ உபபத்யதே( 2-3) :

பேடித்தனத்தை அடையாதே.இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது.

இதுதான் கீதையின்  முக்கிய மெஸேஜ்MESSAGE என்று அவர் பேசியுள்ளார்.

xxxx

4.நாலாவது அத்தியாயத்தில்

பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (4-8) :

சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.- கிருஷ்ணர்

xxx

5.பதினெட்டு அத்தியாயங்கள்; 700 ஸ்லோகங்கள்

XXXXX

6.ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய்

xxx

7.நாலு பேர் என்னைத் தேடி வருகிறார்கள்  (7-16) -சதுர்விதா ஜனாஹா பஜந்தே மாம் – 1.துயரம் உள்ளவன், 2.ஞானத்தை நாடுபவன், 3.பணம் வேண்டியவன்,  4.ஞானி

xxx

8.நரகத்தின் மூன்று வாசல்கள் -(16-21) – காமம், கோபம், லோபம்/ (பேராசை)

XXX

9.சம லோஷ்ட்டாச்ம காஞ்சனஹ

ஓடு , பொன்  ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் குணக் குன்று/ யோகி  ஆவான் 14-24; 6-8

XXXXXX

10.சேனாதிபதிகளில் நான் முருகன் – 10-24

மரங்களுள் நான் அரச மரம் என்று அழைக்கப்படும் அஸ்வத்த மரம் ஆவேன் 10-28

—-SUBHAM—-

TAGS- பகவத் கீதை, க்விஸ், கேள்வி பதில்

Leave a comment

Leave a comment