பிசாசு ரௌடி கார்! (Post No.12,271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,271

Date uploaded in London –  14 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

பிசாசு ரௌடி கார்!

ச.நாகராஜன்

ஶ்ரீ கிருஷ்ண பிரபன்ன ராமானுஜ்தாஸ் (Sri Krishna Prapanna Ramanujdas) அவர்கள் SCIENCE FAILS TO ANSWER என்ற தலைப்பில் பல அரிய பிரமிக்க வைக்கும் சம்பவங்களை கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான TRUTH பத்திரிகையில் தந்து வருகிறார்.

தொகுதி 91 – (9-7-23 தேதியிட்ட) இதழ் 8 இல் அவரது கட்டுரையில் ஒரு பகுதி இது:

மோரிஸ் ஓனர் (MORRIS OWNER – June 1941) 1941 ஜூன் இதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தி அறிக்கை இது:

யூகோஸ்லேவியாவில் ப்ரிக் ரெட் ஃபேன்ஸி (Brick Red Fancy) கார் ஒன்றை ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் (ARCHDUKE FERDINAND) வாங்கினார்.

ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்டும் ஆர்ச் ட்யூகெஸ் சோபியாவும் (ARCHIDUKE FERDINAND, ARCHDUCHESS SOPHICA)  அந்தக் காரில் 29-6-1914 அன்று பயணம் செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டனர்.

இந்த அரசரும் அரசியும் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்தக் காரை சரஜீவோவின் (Sarajevo) கவர்னர் வாங்கினார். அந்தக் கார் அவரது கார் ஷெட்டில் இருந்தது. அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். காரில் ரத்தக் கறை இருந்தது.

மூன்றாவதாக அதை ஆறாவது ஆஸ்ட்ரியன் ஆர்மியைச் சேர்ந்த ஜெனரல் போடியுரெக் (General Potiurek) வாங்கினார். அவருக்கு அந்தக் கார் மிகவும் பிடித்திருந்தது. வாலிவா யுத்தத்தில் (Vallevar War) அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருக்குப் பைத்தியம் பிடித்தது.

அடுத்து அந்தக் காரை ஆஸ்ட்ரியன் படைத் தலைவர் வாங்கினார். ஆனால் அவரது திறமைசாலியான டிரைவர் தன்னையும் சாகடித்துக் கொண்டு இரு பாதசாரிகளையும் சாக அடித்தார்.

யூகோஸ்லேவியாவின் கவர்னர் அதை வாங்கினார். அதை ஓட்டும் பொது அவரது வலது கையை அவர் இழந்தார்.

ஒரு டாக்டர் அந்தக் காரை கவர்னரிடமிருந்து வாங்கினார். கார் தறி கெட்டு ஓட அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.

அந்த அழகிய சிவப்பு வண்ணக் காரை வாங்கிய ஒரு மனிதர் அதை வேண்டுமென்றே மலை ஒன்றில் செலுத்தினார். ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

கடைசியாக மிஸ்டர் ஹார்ஷ்ஃபோல்ட் (Mr Harshfold)  என்பவர் அந்தக் காரை வாங்கினார். அவரது திருமண ஊர்வலத்தின் போது அவர் அந்தக் காரை ஓட்ட, ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு நான்கு நண்பர்களுடன் அவரும் இறந்தார்.

13 வருடங்கள் கழிந்து 1927ஆம் ஆண்டு அந்தக் கார் சுக்கு நூறாக்கப்பட்டது.

பிசாசு ரௌடி கார் அதன் உரிமையாளர்களைப் படுத்திய பாடு கொஞ்சமா, நஞ்சமா என்ன?

***

Sanskrit in Thailand –2 (Post No.12,270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,270

Date uploaded in London – –  13 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 First part was posted yesterday.

Gods for directions (dik-palas) are also in Sanskrit. 

Sanskrit –Thai

Purva – buurafaa- east

Aagneya – aakhane – south east

Dakshina – thakshin- south

Nairrti – hawradii- south west

Pascima – pracim- west

Vaayavya – phaayap – north west

Uttara – udorn — north

Iisaana – isaan- north east

It is interesting to see the same linguistic changes in Tamil, Avestan and Thai

P=V

This change is found in all ancient languages and followed until today in Bengali in full swing

Tamil and Thai follow same rules

All Sanskrit D sound becomes T in Tamil

In London Tamils write Durga as Turkai

In Malaysia, all Tamils write Damayanti as Tamayanti

In Thai , Dakshina becomes Takshin

In Thai , Aagneya, becomes Akhneya

Tamils do the same; they write Agni as Akkini.

This confirms my pet theory or hypothesis that Sanskrit and Tamil are the basis for aall ancient languages in the world. Sanskrit and Tamil came from the kettle drum sounds of Lord Shiva, according to ancient scholars. I have given proofs in Avestan too.

Xxx

Four Castes

Braahmana- Phraam in Thai

Kshatriya –  kasat in Thai

Vaisya – Phait  (V=P)

Suudra—Suud

Xxxx

Of the four stages in Sanskrit Brahmachari and Grahastha exist in Thai with phonetic variations.

Brahmacharya- Phrommachan in Thai (Tamils also write Pirammachaari) , meaning student stage/ bachelor

Grhastha- Grhat , meaning householder

Xxxxx

Orthodox Hindus have 40 samskaras/ rituals from Birth to death. Since Buddhism is more prevalent in Thailand we see only few from the list of 40 with corrupted Sanskrit names

Naamakarana – Naamkorn in Thai (Baby Naming Ceremony)

Name is derived from Sanskrit Naama.

Vivaaha/Marriage – Vivaaha and Monkhon somrot(Mangala Samarasa in Sanskrit)

Tangan is also used in Thai for marriage.

Xxxx

For gods, most of the languages in the word use only Sanskrit word Deva (deodivine etc in other languages)

Thais also used Deva and Devi like Tamils, i.e. Theva and Thevi

Not only Tamils but also Mitannis In Turkey – Syira did the sme in 1400 BCE.

They wrote Tushratta for Dasaratha like Tamils and Thais.

Brahma becomes Phrom in Thai .

Ganesa –Khanesa

Rsi – rasi

Taapasa – daaba (In Tamil it changes to Tava) P=V

Xxxx

Departments in Universities

In the department of education most of the words are of Sanskrit origin.

Here is a list provided by Sanskrit Professor Satyavrat Sastri of Delhi University.

Thai words are given in the first column

Manushyavidyaa – Anthropology

Sethsaat – Sreshta sastra (Economics)

Takavidyaa (tarka vidyaa)- Logic

Cittavidyaa- Psychology

Cariyaasaat – Ethics (Caryaasaastra)

Manusaasaat – Humnaities

(Manushya is the Sanskrit word for Man; English word Man came from Manu, Manushya; in the same way Tamil word Aan= Man becomes Anthro in Greek.

Sankhomvidyaa (sociology)- Sangama Vidyaa

Bhaasaasaat (Linguistics)- Bhaasaa Saastra

Pravattisaat (History)- Pravrtti Saastra

Rathasaat (Political science)- Raashtra Saastra

Khanitasaat (mathematics)- Ganita Saastra

(In Tamil also it is Kanakku=Maths)

Prajnaa (Philosophy)- Prajnaa in Sanskrit

Sattvavidyaa (zoology)—Sattva Vidyaa

Kharusaat (Teaching) — Guru Saastra

Jiivavidyaa (Biology)—Jiiva Vidyaa

Siksaasaat (Sikshaa Saastra) is also used by Thais.

Niitisaat (law)—Niitisaastra

Chaativavidyaa (Ethnology)—Jaati Varna Vidyaa

(My research shows that in the ancient languages “J” existed only in the Sanskrit in the whole wide world. It is found in the oldest Rig Veda. If one follows the migration of the sound “J” , one can easily find out the Hindu Migration Route. Even Greek Jason was pronlunced Eson like  Jesus- Yesu. Tamils also used Saathi, because J, SH, S, KSHA, F did not exist in 2000 year old Tamil; here we see Thai also follows Tamil in saying ‘Chaati’= Jaathi in Sanskrit).

Visvakammasaat (Engineering) Visva Karma Sasstra.

Phaitya saat (Medical Science)—Vaidya Saastra (P=V)

Sallayasaat (Surgery)—Salya sastra

Aayur saat  (Pathology/ Science of Life) – Aayus sastra.

Xxx

Vidyaalaya in Thai = colleges

Mahaavidyaalaya in Thai= universities

To be continued………………………

Tags- Sanskrit, Thai language, Thailand

சிவபெருமான் நேரில் வந்தபோது நடந்தது என்ன? (Post N.12,269)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,269

Date uploaded in London – –  13 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சிவபெருமான் கோவிலுக்குள் நேரில் வந்து தரிசனம் கொடுத்தபோது மக்கள் என்ன செய்தார்கள் என்பது வியப்பான செய்தியாகும்.

லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் 18-7-2023 வரை தொடர் சொற்பொழிவாற்றிவரும் மதுரைத் தமிழ் அறிஞர், பேராசிரியர் சொ .சொ  மீ. சுந்தரம் அவர்கள் சொன்ன கதை :

ஒரு கோவிலுக்குள் பட்டர் மட்டும் தனித்திருந்த பொழுது சிவபெருமானே நேரில் வந்துவிட்டார்.தலையில் ஜடாமுடி; நெற்றியில் பட்டை; இடுப்பில் பாம்பு. ஆனால் பட்டருக்கோ  சிவ பெருமான் நேரில் வரமாட்டார் என்ற நம்பிக்கை.

எந்த டிராமா கம்பெனியிலிருந்து  வேஷத்தைக் கலைக்காமல் அப்படியே வந்து விட்டீர்கள்? என்று பட்டர் வினவினார்.

இல்லை, இல்லை; நான் வேஷம் போடவில்லை ; சிவ பெருமானே நான்தான் என்றார் ; அப்படியா நான் நம்ப வேண்டுமானால் இதோ இந்த பித்தளை மணியைத் தங்க மணி ஆக்கிக் காட்டுங்கள் என்றார் . சிவன் அதைக் கையில் வாங்கிவிட்டு பட்டரிடம் திருப்பிக் கொடுத்தார். அது தங்க மணி ஆனது..

சந்தேகமே இல்லை. அது தங்க மணிதான்.; மணி பள பளத்தது . உடனே  சிவனை அங்கே  இருக்கச் சொல்லிவிட்டு, வெளியே சென்றார் .

எல்லோரும் வாருங்கள் கோவிலுக்குள் சிவ பெருமானே வந்துவிட்டார்; சீக்கிரம் வாருங்கள், .சீக்கிரம் வாருங்கள், என்று கூவி அழைத்தார் .

எல்லோரும் கிசு கிசுத்தனர் ; என்னடா இது; பட்டர் சற்று முன்னர் கூட நன்றாகத்தானே இருந்தார்.எப்படிக் கிறுக்குப் பிடித்தது? என்றனர் . பட்டர் தங்க மணியை எல்லோருக்கும் காட்டி நீங்கள் தினசரி பார்த்த பித்தளை மணியைப் பாருங்கள். இது தங்கம் ஆகிவிட்டது என்று அடித்துக் கூறவே அனைவரும் ஓடிவிட்டனர்..

பட்டருக்கு ஒன்றும் விலங்காவில்லை; சற்று நேரத்தில் காட்சி மாறியது. கோவில் வாசலில் பெரிய கூட்டம்; எல்லோரும் வீட்டில் இருந்த மிகப்பெரிய சட்டி , பானை , அண்டா, குண்டாக்களுடன் வந்திருந்தனர் . இவ்வளவும் எளிதில் தங்கம் ஆகும் என்றால் சும்மாவா இருப்பார்கள்.

எல்லோருக்கும் சிவனிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேட்கத் தெரியவில்லை. அருட் செல்வத்துக்குப் பதில் பொருட் செல்வமே எல்லோர் மனதிலும் இருந்தது .

காரைக்கால் அம்மையோர் போன்றோர் பிறவாமை வேண்டும். பிறப்பு உண்டேல் உன்னை மறவாமை வேண்டும் என்று வேண்டினர் .

–சுபம்—-

tags — கோவில், நேரில், சிவ பெருமான் , தங்க ,மணி

எட்டு ‘தை’ களைக் கண்டுபிடியுங்கள் (Post No.12,268)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,268

Date uploaded in London – –  13 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

எட்டு ‘தை’  சொற்களைக் கண்டுபிடியுங்கள்: எட்டாவது சொல்லையும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் உண்மையிலேயே தமிழ் அறிஞர்தான்

xxxxx

1.இரவு நேரத்தில் இந்தப்பறவை அலறினால் கெட்ட சகுனம் .

2. மனதில் இது நல்லதாக இருக்கவேண்டும் என்பர் ஆன்றோர் .

3.கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இவை நிறைய உண்டு .

 4.அந்தக் காலத்தில் காய்கறி வாங்க இங்கே போவார்கள். ஆங்கிலத்தில் மார்க்கெட் .

5.பாரதியார் எழுதியவை .

 6.கூழானாலும் குளித்துக் குடி ; —- ஆனாலும் கசக்கிக் கட்டு என்பர் சா ன்றோர் .

 7. சலவைத் தொழிலாளருக்கு மட்டும் பிடித்த பிராணி

8. சேரநாட்டுக் கடற்கரை நகரங்களுள் ஒன்று., இப்போது பழையங்காடி என்ற புகைவண்டி நிலையத்துக்கு அண்மையில் உள்ளது.

xxxx

1 2 3
     
8 தை 4
     
7 6 5

Xxxxx

பழமொழிச் சதுரத்தில் உள்ள பழமொழியைக் கண்டுபிடியுங்கள்

றியும்
ட்ம்வீட்டு
டுவிக்பா
த்xxxxxன்xxxxx

 Answers

ஆ1 சி2 3வி
 ந்ந்ந் 
மா8ந்தைந்ச4
 ழுந்வி 
க7 க6 க5

Answer

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

றியும்
ட்ம்வீட்டு
டுவிக்பா
த்xxxxxன்xxxxx

 —subham—

QUIZ தஞ்சைப் பத்து QUIZ (Post No.12,267)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,267

Date uploaded in London – –  13 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.தஞ்சாவூர் என்று சொன்னவுடன் எந்த இரண்டு கட்டிடங்கள் உங்கள் நினைவுக்கு வரும்?

XXXXX

2.தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள இரண்டு பெரிய சிலை அதிசயங்கள் என்ன?

XXXXX

3. தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் சிறப்பு என்ன ?

XXXXX

4.பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு பழமையான ஓவியங்கள் உள்ளன அவைகளில் உள்ள இரண்டு முக்கிய மனிதர்கள் யார்?

XXXXX

XXXXX

5.தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலை உருவாக்கியவர் யார் ? அங்கு என்ன அபூர்வ விஷயங்கள் உள்ளன?

XXXXX

6. தஞ்சாவூரில் உள்ள  காமாட்சி அம்மன்  யார்?

XXXXX

7.சங்கீத மும்மூர்த்திகளில்  தஞ்சாவூருக்கு  நெருக்கமானவர் யார்?

XXXXX

8.தஞ்சாவூரில் இப்போது அரண்மனை இருக்கிறதா?

XXXXX

9. தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் எப்போது துவங்கப்பட்டது ?

XXXXX

10.இலக்கியத்தில் தஞ்சாவூர் பற்றிய முதல் குறிப்பு எங்கே கிடைக்கிறது?

XXXXXX

விடைகள்

1.தஞ்சாவூர் பெரிய கோவில் எனப்படும் பிரஹதீஸ்வரர் ஆலயமும் சரஸ்வதி மஹால் நூலகமும் நினைவுக்கு வரும்.

XXXXX

2.பெரிய நந்தியும் பெரியலிங்கமும் இரண்டு பெரிய சிலை அதிசயங்கள்:

லிங்கத்தின் அளவு  –13 அடி உயரம்!

நந்தியின் அளவு — 12 அடி உயரம். எடை 12 டன்!

XXXXX

3..வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்! கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!

XXXXX

4.கோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் ; அவனுக்கு ராஜ குருவாக விளங்கிய கருவூர் சித்தர் .

XXXXX

5. தஞ்சாவூரின் மராத்திய மன்னா் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). முன்னர் இருந்த புஸ்தகங்களை அவர் ஒன்று திரட்டி நூலகத்தை சிறப்பாக அமைத்தார் . இதன் முழுப்பெயர்  சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம்.

இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.

XXXXXX

6.தஞ்சாவூரில் புகழ் பெற்ற கோவில்கள் பல உண்டு. அவைகளில்

சுவர்ண பங்காரு காமாட்சி அம்மன் கோவில் மிகவும் புகழபடைத்தது சம்ஸ்க்ருதத்தில் சுவர்ண என்றால் தங்கம். தெலுங்கில் பங்காரு. இந்த தங்க காமாட்சி முதலில் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தது. துலுக்கப்படைகளும் ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளும் இந்துக் கோவில்களை கொள்ளையடித்து வந்தனர் அப்போது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746 – 1783) இந்த விக்ரகத்தை பாதுகாப்பாக இங்கே கொண்டு வந்து நிறுவினார். விஜய நகர, நாயக்க, மராத்திய மன்னர்களுக்கு அருள்மழை பொழிந்தவள் இந்தக் காமாட்சிதான்

XXXXX

7.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இந்தக் காமாட்சி அம்மன் சந்நிதியில் அமர்ந்து பல கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். காமா ட்சியால் அவர் பிரபலமானது போல, அவர் மூலம் சுவர்ண / பங்காரு காமாட்சியும் பிரபலம் அடைந்தாள் என்று சொன்னால் மிகையாகாது .

XXXXX

8.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இருக்கிறது பிறகு தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களால் மேலும் அது விரிவுபடுத்தப்பட்டது. . மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள்  இன்னும்  உள்ளன.அரண்மனை வளாகம், மொத்தம் 110 ஏக்கர்.

XXXXX

இது 1981, செப்டம்பர் 15ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில்  இப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் தமிழ் மொழியும் பண்பாடும் கண்ட வளர்ச்சியை ஆராய்ந்து ஆவணப்படுத்தி வருகிறது தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010

+91 4362 226720

tamilunivc@gmail.com

XXXXX

 1O.அப்பர் பாடிய தேவாரத்திலும்  (600 CE ), பின்னர் பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களிலும் தஞ்சை பற்றிய குறிப்பு வருகிறது. ராஜ ராஜ சோழனால் உலகப் புகழ் பெற்றது .

XXXXX

—SUBHAM—–

TAGS- தஞ்சாவூர், பெரிய கோவில் , பிரஹதீஸ்வரர் ஆலயம் ,சரஸ்வதி மஹால் நூலகம் , சியாமா சாத்திரிகள், சுவர்ண பங்காரு, தஞ்சை , தமிழ் பல்கலைக் கழகம், Thanjavur Quiz

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 7 (Post No.12,266)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,266

Date uploaded in London –  13 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 7 

ச.நாகராஜன்

இரண்டு நிமிட தாமதம்!

க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்டோனிஸ் மாவ்ரொபுலுஸ்

(Antonis Mavropulus of Greece) எதியோப்பியன் ஏர்லைன்ஸ் ET302 விமானத்தைப் பிடிக்க எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் அவசரம் அவசரமாக ஓடினார். அவர் இண்டர்நேஷனல் சாலிட் வேஸ்ட் அசோஸியேஷனின் (International Sold Waste Association)  தலைவர். நைரோபியில் ஒரு முக்கியமான கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இரண்டே இரண்டு நிமிடம் தாமதமாக அவர் விமான நிலையத்திற்கு வந்தார். விமானம் புறப்பட்டிருந்தது.

மிகுந்த ஏமாற்றம் அடைந்த அவருக்கு சற்று நேரம் கழித்து ஒரு பெரிய அற்புதமான பிரமிக்கும் வைக்கும் செய்தி கிடைத்தது.

அவர் ஏறிப் போக வேண்டியிருந்த விமானம் ET302 புறப்பட்ட ஆறு நிமிட நேரத்திலேயே கிழே விழுந்து நொறுங்கியிருந்தது.

இரண்டு நிமிட தாமதம் அவர் உயிரைக் காப்பாற்றி விட்டது.

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

குடிதண்ணீர்க் குழாய்!

2019 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி. சிபிஆர் எஃப் (CPRF) ஜவான்கள் ஒரு ராணுவ வண்டியில் காஷீமிரில் அனந்தநாக் பிரிவில் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்தனர். 30 ராணுவ வண்டிகள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டியிலும் 45 ஜவான்கள் இருந்தனர்.

மித்நாபூரைச் சேர்ந்த பப்லு தாஸ் தனது குழுவினருடன் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று வண்டியிலிருந்து அவர் கீழே குதித்தார் – சாலை ஓரம் இருந்த ஒரு குழாயிலிருந்து குடிதண்ணீரைப் பிடிப்பதற்காக.

அதே சமயம் ஜவான்களை ஏற்றி வந்து கொண்டிருந்த இன்னொரு வண்டி   அவர் குழாய் இருந்த இடத்திற்கு வர, பப்லு அந்த வண்டிக்குள் ஏறிக் கொண்டார்.

திடீரென்று பப்லு முதலில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதில் பயணம் செய்து வந்த 45 ஜவான்களும் கொல்லப்பட்டனர்.

பப்லு அதிர்ஷ்டவசமாக குடிதண்ணீர்க் குழாயால் உயிர் பிழைத்தார்!

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

 நன்றி : கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் –

TRUTH Vol 91 Issue 8 dated 9th June 2023

 —subham—

Sanskrit in Thailand (Post No.12,265)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,265

Date uploaded in London – –  12 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In the previous three articles on Thailand, I pointed out the Hindu influence on Thai culture. Now I give some more information about the contact between India and Thailand

We know about the Thai Ramayana called Ramakien composed during 1781-1798.

Thai people were familiar with Hindu puranas too. The Siamese works called Naaraai – Sibpaan, deal with the ten incarnations of Vishnu.

A bronze statue of Ganesa is in the Bangkok Hindu temple. He is holding a manuscript in his hand which confirms Ganesa’s help to Veda Vyasa in writing Mahabharata.

Agastya cult is also very popular in Thailand. The legal system of Siam is based on the Manu smriti which is evident from a legal work Phra Dharmasastra.

The vocabulary of the Thai language contains a large number of pure Sanskrit words or derivatives from Sanskrit.

Vivaha , Velaa are some examples for pure Sanskrit words.

XXX

Following are some derivatives

Sanskrit –  Thai

Grantha – khantha

Samgha – samkha

Candra – jhanthara

Sukhi bhavatu – sukhi hotu

Vihaara – vihana

Nagara – Nakhon

Vrsa – phruk phuk

Xxxx

Names of months like Hindu Malayalis

Like Kerala Malayali Hindus , Thai people also used zodiac signs to name the months

Thai – Sanskrit

Mesaayon –  Mesaayana

Phra phaakom – Vrsabhaagama

Mithunaayon – Mithunaayana

Karakadaakhom – Karkataagana

Simhaakom – Simhaagama

Kanyayon – Kanyaayana

Tulaakhom- Tulaagama

Phrscikaayon – Vrscikaayana

Dhanvaakhom – Dhanvaagama

Makaraakhom  –Makaraagama

Kumphaphan – Kumbhabhandha

Miinaakhom – Miinaagama

Buddhists used lot of Pali words

Xxx

Names of days are also of Sanskrit origin:

Thai – Sanskrit

Van – adi –Aaditya vaara

Van – can – Candra vaara

Van – ankhaan – angaara vaara

Van – phut – Budha vaara

Van – phrhatsabody- Brhaspati vaara

Van – suk – Sukra vaara

Van – Sao – sani vaara

Thai word for calendar is Pratidinam

Xxxx

Old articles in the blog

in Thailand | Tamil and Vedas

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › in-thailand

7 May 2018 — Thailand has got lot of Hindu sculptures from Ganesh to Kubera. Vedic gods Indra, Yama, Vishnu, Shiva and Brahma are also found in different …


Thailand | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › thailand

Thailand and Laos have different stories associated with it. In Thailand there lived a wise man who can speak with birds. His name was Dharmabarn (Dharma …

RAMA IS GREEN, LAKSHMANA IS GOLDEN & HANUMAN …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2018/05/06 › rama-is-gre…

6 May 2018 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. RAMA IS GREEN, LAKSHMANA IS GOLDEN & …

To be continued………………………

Hinduism Crossword 12 7 2023 (Post No.12,264)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,264

Date uploaded in London – –  12 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Find out 11 words using clues and colour.

Across

1.Race descending from Kashyapa and his wife Danu

4.Hand in Sanskrit; Greek word Chiro is derived from it

5.Liquid, Fluid, Running, Oozing

7. devotion with an aim to achieve one’s wishes.

8.Pandava’s eldest brother, but joined Kauravas because his mother abandoned him

9.Enemy in Sanskrit

10.Vedic Text, Trade, Market town in Sanskrit; corporation, guild

xxxxxxxx

Down

1Stick, Punishment, Punctuation mark eual to full stop in Devanagari

2. a symbol of absolute chastity; wife of sage Mudagalya

3. “the tract between the Himalaya and the Vindhya ranges, from the Eastern Sea (Bay of Bengal) to the Western Sea according to Manu Smriti. Meaning is where cultured people well versed in Vedas lived

6.Coir, Banyan tree

 1 2  3
4      
       
  5  6  
7      
       
89     
       
10      

Across

1.Danaava ;4.Kara ;5.Drava ;7.Kamya ;8.Karna ; 9.Ari ;10.Nigama

xxxxxxxx

Down

1.Danda ;2.Nalayani ;3.Aryavarta ;6.Vata

 D1AN2AVA3
K4ARA  R
 N L  Y
 D 5RAV6AA
K7AMYA V
   AT A
K8A9RNA R
 R I  T
N10IGAMAA

Xxxxxxxxxxxsubhamxxxxxxx

 Tags- CW, 1272023

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 5 (Post No.12,263)


UGRA NARASIMHA SWAI TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,263

Date uploaded in London – –  12 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 5

SANGAMESWARA TEMPLE

28.கோரவனஹள்ளி  மகாலெட்சுமி கோவில் GORAVANAHALLI MAHALAKSHMI TEMPLE

1900ம் ஆண்டில் எழுந்த புதிய கோவில் எனினும் மஹாலெட்சுமியை தரிசிக்க செவ்வாய்  வெள்ளிக்கிழமைகளில் நல்ல கூட்டம் வருகிறது. 1900ம் ஆண்டில்  அப்பையா என்பவர் கண்ட்டெடுத்த சிலை இது. அவர் வீட்டிலேயே வைத்து வழிபட்டார். 1925க்குப்பின்னர் வேறு ஒருவர் வந்து கோபுரத்துடன் பெரிய கோவிலை எழுப்பினார். இந்தக் கோவில் துமக்கூருக்கு அருகில் கோரவனஹள்ளி  கிராமத்தில் இருக்கிறது.

XXXX

29.ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில் SRI REVANNA SIDDHESWARA TEMPLE

பெங்களூர் நகரிலிருந்து சுமார் 33 மைல்  தொலைவில் ராம நகரம் அருகில் குன்றின் மீது அமைந்த சிவன் கோவில் இது.. SRS ஹில்ஸ் (SRS Hills) SRS Hills அல்லது SRS Betta பேட்டா  என்னும் இடத்தில் 3 கோவில்கள் உள்ளன குன்றின் உயரம் 3066 அடி. குன்றின் உச்சியில் ரேவண சித்தேஸ்வர சுவாமி கோவில்., குன்றின் நடுப்பகுதியில்  பீமேஸ்வரி கோவில், அடிவாரத்தில் ரேணுகாம்பா கோவில் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்

ரேவண்ண சித்தர் என்பவர் புகழ்பெற்ற வீர சைவத் துறவி ஆவார் .

XXXXX

30. மாகதி ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவில் , சோமேஸ்வரர் கோவில்  Magadi Someshwara Temple , Magadi RanganathaSwamy Temple

மாகதி சோழர் காலம் முதல் புகழ்பெற்று விளங்குகிறது. பெங்களூரை நிறுவிய விஜய நகர சாம்ராஜ்ய சிற்றரசர் கெம்பகவுடா  பிறந்த இடம் இது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுப்பிய சோமேஸ்வரர் சிவன் கோவிலும் திருமல ரெங்கநாத சுவாமி விஷ்ணு கோவிலும் இ ப்போது  தொல்பொருட் துறை பராமரிப்பில் உள்ளன இரண்டிலும் தினசரி வழிபாடு உண்டு ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவிலில்  திருப்பதி பாணியில் நின்ற திருக்கோலத்தில் வெங்கடாசலபதி காட்சி தருகிறார்.

சோமேஸ்வரர் கோவிலில் சிவன் உருவமும் , கலை வேலைப்பாடுகள் மிகுந்த சிற்பங்களும், தூண்களும் இருக்கின்றன.

XXXXXX

31.மேக தாது சங்கமேஸ்வர கோவில் MEKA DATU (GOAT’S LEAP )

ஆடு தாண்டும் அளவே இடைவெளியுள்ள குன்று  இருக்கும் மேகதாட்டு சர்ச்சைக்குரிய காவிரி அணை அமையும் இடம் ஆகும் . இங்கு காவிரியும் அர்காவதி நதியும் சங்கமம் ஆகும் இடத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. பெங்களூரிலிருந்து சுமார் 100 கி.மீ . தொலைவு

தத்தாத்ரேயரை  வழிபடுவோர் இதை முக்கிய தலமாக கருதுவதால் தத்த பீடம் அண்மைக்காலத்தில் திருப்பணி செய்தது

XXXX

32.கோவில்கள் நிறைந்த மட்டூர்

பெங்களூரு நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மட்டூர் , வடைக்கும் கடவுளுக்கும் தேங்காய்க்கும் பிரபலமான ஊர்.  மாண்ட்யா அருகிலுள்ள இந்த ஊரிலிருந்து தினமும்  300 லாரிகளில் தேங்காய் செல்கிறது. இந்த ஊர் வடையும் ருசி மிக்கது .

சிம்சா நதிக்கரையில் அமைந்த ஊர்

மட்டூர் வட்டாரத்தில் சுமார் 20 கோவில்கள் இருந்தாலும் ஆயிரம் ஆண்டு பழமை  உடைய (TEMPLE No.32) உக்ர நரசிம்ம சுவாமி கோவில், சமணர் கோவில்கள் குறிப்பிடத் தக்கவை. இந்த ஊரின் பெயர் நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்றும் மருதூர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. நான் மறைகளில் வல்ல வேத பண்டிதர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊர்.. தென் இந்தியாவில் மங்கலம் என்று முடியும் ஊர்கள் அனைத்தும் பிராமணர்களுக்கு மன்னர்கள் தானம் அளித்த ஊர்கள் ஆகும்.

உக்ர நரசிம்ம சுவாமி கோவில், ஹொய்சாளர் காலம் முதல் வணங்கப்படுகிறது. 7 அடி உரமுள்ள அழகான கருங்கல் நரசிம்மரை இங்கே தரிசிக்கலாம். நரசிம்ம மூர்த்தி எட்டு கைகள், மூன்று கைகளுடன் தோற்றம் அளிக்கிறார்

XXXX

(TEMPLE No.33) வரதராஜ (அல்லால நாதன் என்ற பெயரும் உண்டு) சுவாமி கோவில் அங்குள்ள 12 அடி உயரமுள்ள அல்லாலனாதனால் பிரபலமடைந்தது. அதிக வேலைப்பாடுமிக்க சிலை ;கன்னடத்தில் இதன் காரணமாக ஒரு பழ மொழியும் இருக்கிறது ‘Ella Devara Munde Nodu Allalanathana hinde nodu’ – ‘All other idols are to be seen from the front but Allalanatha is to be seen from the back’.

எல்லா தேவரே முந்தே  நோடு அல்லால நாதன ஹிந்தே நோடு= எல்லா கடவுளரையும் முன் புறமாக தரிசிக்கலாம்; அல்லால நாதனையோ பின்பக்கமாக தரிசிக்கவேண்டும் . இது விஷ்ணுவர்தன மன்னர் கட்டிய கோவில் .

விஷ்ணு வர்தனர் , ஸ்ரீ ராமானுஜ பக்தர். அவருடைய தாயாருக்கு கண் பார்வை போனபோது, அவர் கனவில் காஞ்சீபுரம் சென்று வரதராஜரை தரிசிக்கும்படி ஸ்ரீ ராமானுஜர் சொன்னதாகவும் தாயாரின் முதிய வயது காரணமாக அவர் காஞ்சீபுரம் வரை செல்லமுடியாதென்பதால் விஷ்ணுர்த்தனர் காஞ்சீபுரம் சென்று சிற்பிகளை அழைத்து வந்து மூர்த்தியை உருவாக்கியதாகவும்  தல புராணம் கூறும் . இங்கு தமிழ்க் கல்வெட்டுகள் உண்டு

XXXXX

மட்டூர் வட்டாரத்திலுள்ள கோவில்கள் ; அந்தந்த ஊரிலிருந்து எத்தனை கி.மீ. தூரம் என்பதும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

shatakoti sreerama mandira; and satyanarayana devaalaya.

Old SBM Road; Jyothi Nagar; Nelamangala; Karnataka 562123; I

சதகோடி ஸ்ரீ ராமர் கோவில்

1.2 KM distance

 XXXX

Sri Madduramma Temple

SH17; Madduru; Karnataka 571428;

ஸ்ரீ மத்தூரம்மா கோவில்

1.3 KM distance

XXXXX

Maruthi – Mahadeshwara Temple

மாருதி மஹாதீஸ்வர கோவில்

Mandya; Karnataka 571428; India

1.4 KM distance

XXX

Rama Mandira Temple

In Park; 1st cross; Leelavathi Extention 1st Cross Rd; Madduru; Karnataka 571428;

ராமாமந்திர கோவில்

1.4 KM distance

XXXX

Sri Pattabiramar Temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ பட்டாபிராம கோவில்

1.4 KM distance

XXXX

Sri Varadaraja Swamy Temple/Nethra Narayanan

ஸ்ரீ வரதராஜ சுவரை கோவில்

NH275; Madduru; Karnataka 571428;

1.5 KM distance Details

XXXX

Hanuman Temple

Mallayandodi; Karnataka 571428;

ஹனுமான் கோவில்

1.5 KM distance

XXXX

shri rama samudaya bhavana

Kowdle; Madduru; Karnataka 571428;

1.5 KM distance Details

ஸ்ரீ ராம சமுதாய பவன்

ಶ್ರೀ ಹೊಳೆ ಆಂಜನೇಯ ಸ್ವಾಮಿ ದೇವಸ್ಥಾನ

Madduru; Karnataka 571428;

XXXX

Sri Ugra Narasimha Swamy Temple

Banglore-Mysore Highway; Fort Maddur; Mandya; Karnataka 571428;

1.5 KM distance

ஸ்ரீ உக்ர நரசிம்ம கோவில்

XXXXX

Sri Raghavendra Swamy Temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவில்

1.5 KM distance Details

XXXX

Sri Chamundeswari Temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில்

1.7 KM distance Details

XXXX

Siddapaji Temple

Vaidyanathapura; Karnataka 571428;

சித்த பாஜி கோவில்

1.8 KM distance Details

XXXX

shree vishweshwara swamy temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில்

1.8 KM distance Details

XXXX

Om Sri Mutthumaari Amman Temple

Chaamanahalli; Tamil Colony; Karnataka; I

1.9 KM distance Details

ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவில்

XXXX

Sri Muneshwara – Sri Shaneshwara Temple

ஸ்ரீ முனீஸ்வர- சனீஸ்வர கோவில்

Nagarakere Rd; 8th cross; channegwoda badavane; Madduru;

1.9 KM distance

XXXX

Sri Anjaneya temple

Madduru; Karnataka 571428;

ஸ்ரீ ஆஞ்சனேய கோவில்

1.9 KM distance Details

XXX

Holley Anjaneya Swami Sanidhi

ஹாலி ஆஞ்சனேய சுவாமி சந்நிதி

Koli circle; Madduru; Karnataka;

2.0 KM distance

XXX

மட்டூரிலிருந்து 3 கி.மீ .தூரத்திலுள்ள சிவபுரம், சுதந்திரப் போராட்டம் காரணமாக பிரபலம் அடைந்தது. பிரிட்டிஷாரின் தடை உத்தரவை மீறி 1938 ஏப்ரல் 12-ம் தேதி ஆயிரக்கணக்கான சுதந்திரத் தொண்டர்கள் கொடி ஏற்றிய ஊர் ; அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது .

XXXX

SRS HILLS

34. வைத்யானாதீஸ்வர சுவாமி கோவில் Vaidyanatheswara Temple

சிம்சா நதிக்கரையில் அமைந்த இந்தக் கோவில் சிவன் கோவில் ஆகும். கோவில் சிறியதுதான் . நவரங்க, சபா, முக்த மண்டபங்களைத் தாண்டி கர்ப்பக்கிரகத்தை அடைந்தால் ஏழுதலை பாம்பின் கீழ் அமர்ந்த சிவ லிங்கத்தை தரிசிக்கலாம்.Vaidyanatheshwara Temple,Vaidyanathapura,Mandya District,K arnataka,Pincode – 571 433.

ஹொய்சாள மன்னர் காலத்திலிருந்து பல வம்ச மன்னர்கள் வழிபட்டதால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு உடையது. நவரங்க மண்டபத்தில் இருக்கும் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

TO BE CONTINUED……TAGS – கர்நாடக மாநிலம் , 108 புகழ் பெற்ற, கோவில்கள், , பகுதி 5

QUIZ கல்கத்தா பத்து QUIZ (Post No.12,262)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,262

Date uploaded in London – –  12 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.கொல்கத்தா KOLKATA என்று இப்போது அழைக்கப்படும் கல்கத்தா எப்போது வரை இந்தியாவின் தலைநகராக இருந்தது?

XXXX

2.கொல்கத்தா ஆலமரம் புகழ் பெறக்காரணம் என்ன?

XXXXXX

3.கொல்கத்தா என்ற பெயர் எப்படி வந்தது?

Xxxxx

4.இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கே இருக்கிறது?

xxxxx

5.ஹூக்ளி நதிக்கரையின் மீதுள்ள ஹெளரா பாலம் Howrah Bridge ஏன் சிறப்பு வாய்ந்தது?

xxxx

6.கல்கத்தாவின் மற்றோர் சின்னமான Fort William வில்லியம் போர்ட் என்னும் கோட்டையின் முக்கியத்துவம் என்ன ?

Xxxxx

7.விக்டோரியா மெமோரியல் என்னும் கட்டிடம் ஏன் புகழ்பெற்றது?

Xxxx

8.கல்கதத்தாவில் பிர்லா பெயரைச் சொன்னால் இரண்டு கட்டிடங்கள் நினைவுக்கு வரும்.. அவை யாவை?

Xxxx

9.பேலூர் மடம் எங்கே இருக்கிறது?

xxxx

10.கல்கத்தாவுக்கு பெயர் தந்த காளி கோவில்கள் எவை ?

xxxxxx

KALI TEMPLE, KALI GHAT

VICTORIA MEMORIAL, KOLKATA 

விடைகள்

1.மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகராக இப்போது இருக்கும் கொல்கத்தா, 1911 ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது .

XXXX

2.இந்த ஊர் தாவரவியல் பூங்காவிலுள்ள ஆலமரம்தான் உலகிலேயே பெ ரிய ஆலமரம். . அதன் பரப்பளவு 4.67 ஏக்கர். குறைந்தது 250 ஆண்டு பழமையானது இந்த தாவரவியல் பூங்காவுக்கு ஜெகதீஷ் சந்திரபோஸ் என்னும் விஞ்ஞா னியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு புயல் வரும்போதும் பல விழுதுகளை இழந்தாலும்  3772 விழுதுகளை இப்போது காணலாம் .

XXXX

3.இங்குள்ள காளி கோவில் பிரசித்தமானது; காளி கட் அல்லது காளி க்ஷேத்ர என்பதை வெள்ளைக்காரர்கள் கல்கத்தா என்று உச்சரித்தனர்.

xxxxx

4.கொல்கத்தாவின் அலிப்பூர் பேட்டையில் உள்ள நேஷனல் லைப்ரரி — இந்திய தேசீய நூலகம்–தான்— National Library of India– இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம். இதில் 25 லட்சம் புஸ்தகங்களும் ஆவணங்களும் இருக்கின்றன.

Xxxxxxx

5.இது தொங்கும் பாலம் என்னும் வகையைச்  balanced cantilever bridge சேர்ந்தது. கல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சின்னம் போல்  திகழ்கிறது ; பாரிஸ் என்றால் ஐபல் டவர், லண்டன் என்றால் பிக் பென் கடிகாரம்; கல்கத்தா என்றால் ஹெளரா பாலம் .

xxxxx

6.பிரிட்டிஷாரின் 300 ஆண்டுக்கு கால ஆட்சிக்கு முதல் படியாக அமைந்தது போர் வில்லியம். 1696ல் அவங்க சீப் அனுமதியுடன் கட்டிய கட்டிடம் இப்போது இந்திய ராணுவத்தின் கிழக்கத்திய கமாண்டின் தலைமையகம் ஆகும்..

xxxxxx

7.மத்திய கல்கத்தாவிலுள்ள 64 ஏக்கர் பரப்பை வியாபிக்கும் விக்டோரியா மெமோரியல்தான், உலகிலேயே ஒரு ராஜா அல்லது ராணிக்குக்  கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடம் ஆகும். இது பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இப்போது பண்பாட்டுத் துறை அலுவலகம் இருக்கிறது.

xxxxx

8.பிர்லா பிளானட்டோரியம் என்னும் வான ஆராய்ச் சிக்கூடம் ; பிர்லா மந்திர் என்னும் கோவில்.

xxxxx

9.சுவாமி விவேகானந்தர் துவங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ண  மடம் , ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைமையகம் பேலூர் மடம் ; ஹூக்ளி நதியின் மேற்குக்கரையில் ஹெளரா பேட்டையில் அமைந்த இந்த மடம் , உலகெங்கிலும் பரவிய கிளைகள் மூலம் சேவை செய்து வருகிறது .

Xxxx

10.ஸ்ரீ ராமகிருஷ்ணபரம ஹம்சர் வழிபட்ட, அர்ச்சகராக இருந்த, தட்சிணேஸ் வர் காளி கோவிலும் , ஆதி கங்கா என்று அழைக்கப்படும் காளி காட் துறையில் உள்ள காளி கோவிலும் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள் ஆகும் ஹூக்ளி நதி கங்கையின் உப நதி. அந்தக் காலத்தில் ஊட்டிய வழித்தடத்தில் அமைந்த காளி கேட் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

—Subham —-

Tags-  கல்கத்தா, கொல்கத்தா, காளி , பெயர் , ஹூக்ளி , ஹெளரா , தேசீய நூலகம் , ஆலமரம்