புத்தக அறிமுகம் :ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய அயோத்தியா காண்டம் (Post No.12,448)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,448

Date uploaded in London –  21 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

புத்தக அறிமுகம்

திரு ஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதியுள்ள

இராமாயணம்

அயோத்தியா காண்டம் –கம்பர்

முதல் பாகம்

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை டிஜிடல் வடிவிலும்அச்சுப் பதிப்பாகவும் வெளியிட்டுள்ளார்.

நூலின் பொருளடக்கம் இது:

என்னுரை

அணிந்துரை

அத்தியாயங்கள்

1. மந்திரப் படலம்

2.   மந்தரை சூழ்ச்சிப் படலம்

3. கைகேயி சூழ்வினைப் படலம்

4.  நகர் நீங்கு படலம்

பிற்சேர்க்கை

1. அயோத்தியா காண்டம் கம்ப ராமாயணம் படலங்கள்

2. உதவிய ராமாயண நூல்களின் பட்டியல்

*

திரு R.சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதியுள்ள இராமாயண ஆய்வு நூல் வரிசையில் இரண்டாவது வெளியீடாக அமைகிறது இது.

இந்த நூலுக்கு அவர் வழங்கியுள்ள முன்னுரையின் ஒரு பகுதி:- 

கம்பர் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் கூழாங்கற்களோடு  விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் நான். அந்த சமுத்திரத்தில் இறங்கி எளிதாக முத்தெடுக்க முடியாது. அதற்கு அனுபவம் நிறைந்தோர் உதவி தேவை. அந்த வரிசையில் நாமக்கல் கவிஞர். ஐயா கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், அ.ச.ஞானசம்பந்தன், சுந்தரசண்முகனார் கணபதிப் பிள்ளை போன்ற சான்றோர்களின் உதவியோடும் நலுங்கு மெட்டு இராமாயணம், வீரபத்திர இராமாயணக் கும்மி, இராமாயண அம்மானை,  அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள் போன்ற நூல்களின் துணையோடும் கம்பன் என்னும் கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன்

*

இந்த நூலுக்கு திரு ச.நாகராஜன் வழங்கியுள்ள அணிந்துரையில் ஒரு பகுதி:

உலகில் தோன்றிய ஆகப் பெரும் கவிஞர்களில் முன்னணியில் உள்ளோரில் முதல் வரிசையில் இடம் பெறுபவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

கம்பனைப் பல்வேறு இடங்களில் பாராட்டி வியக்கும் மஹாகவி பாரதியார் அதற்கான காரணத்தையும் தமிழச் சாதி என்ற கவிதையில்

 அருமையாகக் கூறி விடுகிறார் : –

“எல்லையொன்றின்மை’ எனும் பொருள் அதனைக்

கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்”

தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

பல்வேறு அறிஞர்களும் கம்பனைக் கற்க முயன்று அவனது ‘எல்லையொன்றின்மை’ (Infinity) என்ற மாபெரும் தன்மையால் தம் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனால் இந்த வேக யுகத்தில் நமக்கு கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே!

இந்த வகையில் தான், இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு, அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார்.

திரு ஆர். சேஷாத்ரிநாதன்.

இந்த முதல் பாகத்தில் மந்திரப் படலம்,  மந்தரை சூழ்ச்சிப் படலம்.

கைகேயி சூழ்வினைப் படலம், நகர் நீங்கு படலம் ஆகிய நான்கு படலங்கள் இடம் பெறுகின்றன.

தசரதன், கூனி மந்தரை, கைகேயி, கோசலை, சுமத்திரை, இராமன், இலக்ஷ்மணன் உள்ளிட்டோர் பற்றி வேறெங்கும் காண முடியாத பல சுவையான விஷயங்களை ஒருங்கு சேர ஒரே இடத்தில் படித்து மகிழும்படி இந்த நூல் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் கவியரசர் கண்ணதாசன் ஈறாக பல நூல்கள் மற்றும் அறிஞர்கள் தம் மேற்கோள்களை சரளமாக நூலாசிரியர் எடுத்துத் தருகிறார். வியக்கிறோம், மகிழ்கிறோம்.

அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம்.

***

Leave a comment

1 Comment

  1. rithvikseshadri's avatar

    எனது புத்தகத்திற்கு சிறப்பான இடம் கொடுத்து முன்னிலைப் படுத்தியதற்கு மிக்க நன்றி. அதற்கு இடம் அளித்த தளத்திற்கும் நன்றி

Leave a comment