சோட்டாணிக்கரை பகவதி அம்மன்! – Part 1 (Post No.12,452)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,452

Date uploaded in London –  22 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

15-8-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

சோட்டாணிக்கரை பகவதி அம்மன்!

(முதல் பகுதி)

ச. நாகராஜன்

புகழ் பெற்ற பகவதி அம்மன்

கேரளத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் மிக முக்கியமான ஒன்றாகத் திகழ்வது சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயம்.

எர்ணாகுளத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது

ஆயிரக்கணக்கான மக்கள் அம்மன் அருளைப் பெற வேண்டி இங்கு வருவதால் இங்கு பல தங்குமிடங்கள் சிறப்பாக உள்ளன.

ஜோதியாக நின்ற கரை அம்மன் – ஜோதின்னக்கரை அம்மன் – என்பது நாளடைவில் மருவி சோட்டாணிக்கரை அம்மன் என்று இப்போது வழக்கில் கூறப்படுகிறது..

அடர்ந்த காட்டுப் பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்த இடத்தில் பராசக்தி ஜோதி வடிவமாக மும்மூர்த்திகளுக்கும் முக்கோடி தேவர்களுக்கும் காட்சி அளித்த இடம் இது.

ஒரே நாளில் சரஸ்வதிலட்சுமிதுர்க்கை அருள்!

ராஜராஜேஸ்வரி, மஹாலட்சுமி, துர்க்கை, பகவதி அம்மன், ஆதி பராசக்தி, மஹா சரஸ்வதி என்று பல பெயர்களுடன் அம்பிகை இங்கு அருள் பாலிக்கிறாள்

அதுமட்டுமல்ல, ஒரே நாளில் மூன்று உருவங்களில் பகவதி அம்மன் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.

காலையில் வெண்ணிறப் புடவை உடுத்தி சரஸ்வதியாகவும் பகலில் இளநீலம் கலந்த சிவப்பு வண்ண ஆடையில் மகாலட்சுமியாகவும், இரவில் நீல வண்ண உடையில் துர்க்கையாகவும் அன்னை காட்சி தருகிறாள்.

பொதுவாக அம்மன் விக்ரகங்கள் அனைத்தும் இடது  கை பாதத்தைச் சுட்டிக் காட்டி இருக்க வலது கை அருள் பாலிக்கும். ஆனால் இங்கு அனைத்துப் பாவங்களையும் போக்க வல்ல அம்மன் வலது கை பாதத்தைச் சுட்டிக் காட்ட இடது கையால் அருள் பாலிக்கிறாள்.  வலது புறம் மஹாவிஷ்ணு இருந்து அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்மனை அம்மே நாராயணா என்று கூறி வழிபடுகின்றனர். நாராயணன் இதயத்தில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியே அருள் புரிவாயாக என்பதே இதன் அர்த்தம்.

கோவிலில் சிவன், கணபதி, தர்மசாஸ்தா உள்ளிட்ட சந்நிதிகளும் அமைந்துள்ளன.

இந்தத் தலம் 1500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தலமாகக் கருதப்படுகிறது.

மிகப் பண்டைய காலத்தில் விஸ்வகர்மா ஸ்தபதிகளால் அழகிய மர வேலைப்பாடுகளுடனும் தெய்வீக ஆற்றல் தொடர்ந்து இருக்கும் வகையிலும் அமைக்கப்பட்ட கோவில் இது. கோவிலின் கிழக்கே கொடிக்கம்பம் உள்ளது.  இதன் எதிரில் சுமார் இருநூறு அடி தூரத்தில் திருக்குளமும் அமைந்துள்ளது. குளத்தின் மறுகரையில் கொலுவீற்றிருக்கும் உக்ர காளியின் சந்நிதியே கீழ்க்காவு அம்மனாகும்.

இங்குள்ள பலா மரம் ஒன்றில் தங்கள் நோய்களைத் தீர்க்க விரும்புவோர் ஆணி அடிப்பது வழக்கம்.

தல வரலாறு

இந்தத் திருத்தலத்தைப் பற்றிய தல வரலாறுகள் பல உண்டு.

முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாகத் திகழ்ந்த இந்தப் பகுதியில் கண்ணப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மகாகாளியின் பரம பக்தர்.

காளிக்குத் தினமும் ஒரு எருமையைப் பலியாகத் தருவது அவர் வழக்கம். ஒரு நாள் காட்டில் கன்று ஒன்றைக் கண்ட அவர் அதைப் பலி கொடுக்க எடுத்து வந்தார். ஆனால் அவரது மகள் பவளம் அதைத் தடுத்து பலி கொடுக்க வேண்டாம் என்று தந்தையை வேண்டினாள். மகள் மீது அளவற்ற பாசம் கொண்ட கண்ணப்பன் கன்றைப் பலியாகக் கொடுக்கவில்லை. ஆனால் சில நாட்களிலேயே அவரது அன்பு மகள் இறந்தாள். அழுது புலம்பிய கண்ணப்பன் மகளது சவத்தை எரியூட்ட நினைத்த போது அந்த உடல் திடீரென மறைந்து விட்டது. அப்போது ஒரு பெரியவர் கண்ணப்பனிடம் கன்றுகளைத் தாயிடமிருந்து வலியப் பிரித்த பாவத்தால் மகளைப் பிரியும் இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். தன்னிடமிருந்த கன்றைப் பார்க்க கண்ணப்பன் விழைந்த போது அது கர்பக்ருஹத்தில் மறைந்து ஒளிர்ந்தது. பெரியவர் அந்தக் கன்றே விஷ்ணுவும் லக்ஷ்மியும் என்று விளக்கியதோடு தினமும் விஷ்ணுவையும் லட்சுமியையும் வழிபட்டு இதுவரை அவர் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு அன்புரை கூறினார்.

பின்னோரு காலத்தில் அந்த இடத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி ஒரு கல்லைத் தெரியாமல் வெட்ட அந்த கல்லிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. இதைக் கண்டு அவள் அலறி ஓட அங்கிருந்த மக்கள் அங்கு கூடினர். ஒரு அர்ச்சகர் தேவப்ரஸ்னம் செய்து பார்த்து அது தெய்வீகச் சிலை என்றார். அங்கிருந்த முதிய அந்தணர் ஒருவர் ஒரு தேங்காய் ஓட்டில் அரிசிப் பொரியை நிவேதனமாக அர்ப்பணித்தார். இந்த நிவேதன முறை இன்றும் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த அந்தணர் பரம்பரை வழி வந்தோரே இதை இன்றும் செய்வது மரபாகியுள்ளது. 

–    தொடரும்

N for Nagpur– Know Your India Puzzle (Post No.12,451)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,451

Date uploaded in London – –  21 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.Andhra city on the banks of Penna river; Renganatha temple and Panchalokana temple are famous.

2.Gujarat town; Parsis live more here; famous for embroider work. weaving work was praised by foreign traders .

3.Utta Pradesh city known as New Okhla Industrial Development Authority

4.Maharashtra city famous for  its Gurudwara, ancient forts, street food. Takhat Sachkhand Shri Hazur Abchalnagar Sahib is the main Gurudwara and is one of the five High seats of Authority of the Sikhs. This is the place where Shri Guru Gobind Singhji breathed his last.

5.This Tamil Nadu town has the famous and big Anjaneya temple.It is called Egg City because of egg production. Goddess of this town inspired world famous mathematician Ramanujam.

6. The Godavari river originates from Trimbakeshwar in this town. One of the 12 Jyotirlingas also at Triambakeshwar. Panchavati is very nearby.

7. Head quarters of the world’s largest voluntary organisation R S S. Maharashtra city.

8.World famous ancient university in Bihar. Muslim invaders burnt down its library.

ANSWERS

1.Nellore, 2.Navsari  3.Noida, , 4.Nanded ,5.Namakkal, 6.Nashik, 7.Nagpur , 8.Nalanda

—-SUBHAM—

QUIZ பகவத்கீதை பத்து (Part 2) QUIZ (Post No.12,450)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,450

Date uploaded in London – –  21 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 பகவத் கீதை பத்து

Quiz Series No.69

1.முதல் அணுகுண்டு சோதனையை தொலைவிலிருந்து பார்த்த அணு விஞ்ஞானி யார் அவர்க்கு நினைவில் வந்த பகவத் கீதை ஸ்லோகம் என்ன?

xxx

2. உலகிலேயே பெரிய பகவத் கீதை புஸ்தகம்  எங்கே இருக்கிறது?

xxx

3.கல்கி அவதாரம் வரும் என்பதை கிருஷ்ணன் எப்படி கோடி காட்டுகிறார் ?

xxx

4.பக்தர்களுக்கு கீதையில் என்ன PROMISE ப்ராமிஸ் செய்கிறார் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார் ?

xxx

5.தோன்றிற் புகழொடு தோன்றுக என்றான் வள்ளுவன்கீதையில் கண்ணன் இதைச் சொன்னானா ?

xxxx

6.எல்லாஉயிர்க்கும் இன்பம் என்று தொல்காப்பியன் சொன்னான் . பகவத் கீதையில் இக்கருத்து உளதா ?

xxx

7.உள்ளதனையது உயர்வு என்கிறான் வள்ளுவன்மனம் போல மாங்கல்யம் – என்கிறது தமிழ்ப் பழமொழி கீதையில் இதைக் கண்ணன் சொன்னானா ?

xxx

8.சாக்ரடீஸும் கிருஷ்ணரும் சொல்லிய ஒரே விஷயம் என்ன?

Xxx

9.ஞானிகளுக்கு தங்கமும் தெருவில் கிடக்கும் ஓடுகளும் ஒன்றுதான் என்று கண்ணன் சொன்னதை சேக்கிழார் எப்படிச் சொல்கிறார்?

10.கீதையின் முக்கிய அறிவுரை – பலனை எதிர்பார்த்து கடமையை செய்யாதே- வள்ளுவர் இதை எப்படிச் சொன்னார் ?

xxxx

விடைகள்

1.ராபர்ட் ஓப்பன்ஹீமர் J.Robert Oppenheimer 

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார்

दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता |

यदि भा: सदृशी सा स्याद्भासस्तस्य महात्मन: || 12||

divi sūrya-sahasrasya bhaved yugapad utthitā

yadi bhāḥ sadṛiśhī sā syād bhāsas tasya mahātmanaḥ

BG 11.12: If a thousand suns were to blaze forth together in the sky, they would not match the splendor of that great form.

தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |

யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||

தி³வி = வானத்தில்

ஸூர்யஸஹஸ்ரஸ்ய = ஆயிரம் சூரியன்கள்

யுக³பத் = ஒரே நேரத்தில்

உத்தி²தா = உதயமானால்

பா⁴: யதி³ ப⁴வேத் = பிரகாசம் எப்படி இருக்குமோ

ஸா = அந்த பிரகாசம்

தஸ்ய மஹாத்மந: = அந்த மகாத்மாவின்

பா⁴ஸ = ஒளிக்கு

ஸத்³ருஸீ² = நிகராக

ஸ்யாத் = இருக்கிறது

வானத்தில் ஒருங்கே ஆயிரம் சூரியன்கள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளி அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராக இருக்கிறது

xxxx

2.உலகிலேயே பெரிய பகவத் கீதை புஸ்தகம்  புது டில்லியில் ஹரே கிருஷ்ணா கோவிலில் இருக்கிறது .  இதை 2019 ஆம் ஆண்டு பிப் ரவரி மாதம்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 சுமார் 670 பக்கங்களுடன், 800 கிலோ எடைக் கொண்டதாக பகவத் கீதை புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த புத்தத்தில் 18 வகையான அற்புத ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.  இந்த பிரமாண்ட புத்தகம் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் அச்சிடப்பட்டது. . அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்கம் கொண்ட “இஸ்கான்” ISKCON கோவில் உலகின் பிரமாண்ட பகவத் கீதை கொண்ட கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Xxxx

3.பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (பகவத் கீதை 4-8) :

சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.

XXX

4. ந மே பக்த ப்ரணச்யதி (9-31): என் பக்தன் அழியவே மாட்டான்

பாரதியும் இதைச் சொல்கிறார்

நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு – பாரதி

XXX

5.ஆமாம்; சொன்னான் .உத்திஷ்ட, யசோ லபஸ்வ ( கீதை 11-33): எழுந்திரு, புகழ் அடை.!

XXX

6.உளது .சர்வ பூத ஹிதே ரதா (12-4, 11-55): தே மாம் ஏவ ப்ராப்னுவந்தி: எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள் என்னையே வந்து அடைகிறார்கள்.

XXX

7.ஆமாம்; அழகாக செப்புகிறான் :

உத்தரேத் ஆத்மநாத்மானம்: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன் (Bhagavad Gita 6-5).

XXX

8.ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய் Know Thyself (Socrates)

“Know thyself” (Greek: Γνῶθι σαυτόν, gnōthi sauton)[a] is a philosophical maxim which was inscribed upon the Temple of Apollo in the ancient Greek precinct of Delphi. சாக்ரடீஸ் இந்த வாசகத்தை அடிக்கடி சொல்லி ,அதுவே விவேகம் தரும் என்றார்

XXX

9.ஓடு , பொன்  ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் குணக் குன்று ஆவான் –பகவத் கீதை 7-8 மற்றும் 14-21

சாமலோஷ்டாம்ச் ம – காஞ்சனநஹ  (7-8).

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் – பெரிய புராணத்தில் சேக்கிழார்.

ஓடும் இருநிதியு மொன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே — தாயுமானவர்

XXXX

10.கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை.

மழை , எதையாவது திரும்ப எதிர்பார்க்கிறதா? அது போல நீயும் கடமையை செய் என்கிறார் வள்ளுவர்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு-குறள் 211

XXXxx 

Tags- பகவத்கீதை, குய்ஸ், பத்து, பெரிய, அணுகுண்டு சோதனை, .ராபர்ட் ஓப்பன்ஹீமர் ,கைம்மாறு வேண்டா கடப்பாடு

அனுமன் பிறந்த கிஷ்கிந்தா :கர்நாடக மாநிலத்தில் 108…..– Part 25 (Post.12,449)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,449

Date uploaded in London – –  21 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25 

தாவண்கரே DAVANAGERE வட்டார கோவில்கள்

சூலகரே / சாந்திசாகர அருகில் வீரபத்ரேஸ்வரா, காளி , சித்தேஸ்வர் , கிருஷ்ணன் கோவில்கள் உள்ளன ( Veerabhadreshwara Temple, Kali Temple, Sri Siddheshwara Temple and Sri Krishna temple ).

Belagutti: பெலகுட்டி என்னும் இடத்தில் பழைய (old Siddeshwara temple ) சித்தேஸ்வர் கோவில் இருக்கிறது

Chennagiri: சென்னகிரியில் மலைமீதுள்ள கோட்டையில்  பேட்டே ரெங்கநாதசுவாமி கோவில் Bete Ranganathaswami இருக்கிறது

Honnali:ஹொன்னலியில் மல்லிகார்ஜுன கோவில் ;(Mallikarjuna Temple)

Kuruva Island:10 kms south-east of Honnali, துங்கபத்ரா ஆற்றின் தீவில் ராமேஸ்வர கோவில்; Rameshwara temple

சாந்த பென்ணுர் புஷ்கரணி

Santhebennur:சாந்த பென்ணுர் புஷ்கரணியில் நடுவில் உள்ள வசந்த மண்டபம் காண வேண்டிய இடங்கள் .

சாந்தபென்னூர்புஷ்காரணியையும் ராமர் கோவிலையும் 16-ஆம் நூற்றாண்டில் கங்க ஹனுமந்தப்ப நாயக்கர் கட்டினார்

அவர் அமைத்த புஷ்கரணி / குளம் 250 அடி நீளம், 240 அடி அகலம், 30 அடி ஆழம் உடையது  250 feet (76 m) and width of 240 feet (73 m),depth is over 30 feet (9.1 m). முன்னர் எட்டு கோபுரங்கள் குளத்தைச் சுற்றி இருந்தன. இப்போது 6 மட்டுமே எஞ்சியுள்ளன இது தண்ணீரில் மிதப்பது போல காட்சிதரும்

தாவண்கரேயில் துர்கம்மா, வீரபத்ர கோவில்கள் அமைந்துள்ளன (

Durgamma and Veerabhadra Temples: Two old temples in Davanagere town.)

ஹரிஹரிலிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ள ரஜனஹல்லி யில் வன்னி மஹாகாளி, அம்பா பவானி ,வால்மீகி குருபீடம், தீர்த்தமேஸ்வர் கோவில் பார்க்கவேண்டிய இடங்கள்

 தீர்த்தமேஸ்வர கோவிலின் இரண்டு சிறப்பு அம்ஸங்கள்

பிரம்மாவுக்கு கோவில் , இயற்கை நீரூற்று

Brahma Temple

Bannimahakali Temple, Amba Bhavani temple and Valmiki Gurupeetha

Thirtharameswara: Thirtharameswara temple in Honnali taluk is popular for its natural spring of holy water. Thirtharameshwara is one of the few temples with a shrine dedicated to Lord Brahma.

ஆன கொண்ட சித்தேஸ்வர கோவில் ( Anekonda:Known for a beautiful Hoysala style Eshwara temple)

Balleshwara: (Hoysala era Ballala Lingeshwara temple ) பல்லேஸ்வரத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் வல்லாள லிங்கேஸ்வர் கோவில் இருக்கிறது இது ஹொய்சாளர் கால கோவில்.

Hodigere: சத்ரபதி சிவாஜி மஹாஜின் தந்தை ஷாஜி பான்ஸ்லேயின்  சமாதி கோடிக்கரேயில் இருக்கிறது Known for Tomb of Shahji Bhonsale, father of Chatrapati Shivaji.

Joladhalu: ஜோலதளுவில் அம்பா பவானி/ குக்குடமம்மா ரேணுகா தேவி கோவிலில் சிங்கம் மீது அமர்ந்து த்ரி சூலம், டமருகம் ஏந்திய நிலையில் காட்சி தரும் அம்மனைத் தரிசிக்கலாம் Amba Bhavani temple (also known as Kukkvadamma Renuka). The deity is seated on a lion with a trishula and drum in her hands.

Kalkere:கல்கரே என்னும் இடம் குதிரை லாட வடிவில் அமைந்த மலைப் பள்ளத்தாக்கு. அங்குள்ள கோவில்கள் பல்லேஸ்வர, கல்லேஸ்வர , ஹனுமந்தராய கோவில்கள் ( Balleshwara, Kalleshwara and Hanumantharaya temples)

Mayakonda: மாயகொண்டா என்னும் இடத்திலுள்ள கோவில்கள் (Obala Narasimha temple and Keshava temple )ஒப்பிலா நரசிம்மர், கேசவர்

Nanditavare: நந்தித்தவரேயில ஹொய்சாளர் கால அமிர்த

மாணிக்கேஸ்வர கோவில் Amrita Manikyeshwara temple built in Hoysala style

Shankaranahalli: சங்கரன ஹல்லியில் ரெங்கநாத சுவாமி கோவில்; இது மயக்கொண்டா போல விஜயநகர பாணியில் சமைக்கப்பட்ட கோவில்

XXXX

114.Sri Eshwara Temple, Anekonda, Davangere

தாவணகரே அருகிலுள்ள ஆன கொண்ட ஈஸ்வரன் சிவன் கோவில் குறிப்பிட்டத்தக்கது . இங்குள்ள சிற்பங்கள் ஹோய்சாள, சாளுக்கிய பாணியில் அமைந்துள்ளன; ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் இது. அதற்குப்பின்னர் வந்த பல வம்ச அரசர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர். அவர்களுடைய கல்வெட்டுகளும் உள.

கல்லேஸ்வர கோவில் கூரையில் கஜ சம்ஹார மூர்த்தி, மற்ற கடவுளர் புடை சூழ காட்சி தருகிறார்..முக்கிய கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் இருக்கிறது. ஏனையன காலியாக உள்ளன.

12 ஆதித்யர்கள் உள்ள கூரையும் பார்க்க வேண்டிய ஒன்று; கோவில் தூண்கள் மிகவும் கலை வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.

xxx

115.ஆன குண்ட் ; கிஷ்கிந்தா Anegundi, also known as Anegondi

ஹம்பி நகரம் போலவே முஸ்லீம் படைகளால் நாசமாக்கப்பட்ட அருமையான இடம் ஆன குண்ட்; விஜய நகர மன்னர்கள் யானைகளை பராமரித்த இடம்  இது ; கிஷ்கிந்தா என்ற ராமாயண பிரதேசமே இதுவும் ஹம்பி நகரமும் என்று கருதப்படுகிறது அருகில் காணப்படும்  ரிஷ்ய முக பர்வதம்பம்பா நதி தீரமும்  அதை உறுதி செய்கின்றன. புவி கர்ப்ப இயல் கணக்குப்படியும் இங்குள்ள பாறைகள் பல கோடி  ஆண்டு பழமையானவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. இப்போது இங்குள்ள கோட்டையில் துர்கா தேவி , கணேசர் சந்நிதிகள் இருக்கின்றன

பம்பா சரோவர் என்னும் குளம் அல்லி மலர்கள் நிறைந்து காணப்படுகிறது சிவன் கோவில், லட்சுமி கோவில்கள் அதை நோக்கி அமைந்துள்ளன

Gagan Mahal, Anegunde

விஜய நகர மன்னர்களுக்கு கட்டப்பட்ட ககன் மஹால் இன்னும் அப்படியே உள்ளது. இது 500 ஆண்டு பழமையான கட்டிடம்.

Anjanadri Hill: Climb 570 steps to visit Anjaneya Temple, said to be the birthplace of Lord Hanuman.

இங்கு அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி குன்றும் இருக்கிறது 570 படிகள் ஏறிச் சென்றால் கோவிலில் ஆஞ்ச நேயரை தரிசிக்கலாம். மற்ற இடங்களில் ஹனுமார் கோவிலுக்குப் போவதைவிட இங்கு ஹனுமார் கோவிலுக்குப் போனால் ராமாயண நினைவுகளும் கிஷ்கிந்தா தரிசனமும் கிடைக்கும்.

இங்குள்ள பம்பா ஏரிக்கு மறு புறம் ஹம்பி இடிபாடுகள் இருக்கின்றன

TO BE CONTINUED……………………………………………..

Tags- அனுமன் , கிஷ்கிந்தா , கர்நாடகம், மாநிலம்,  கோவில்கள் ,Part 25 , தாவண்கரே , பிரம்மா கோவில்,

புத்தக அறிமுகம் :ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய அயோத்தியா காண்டம் (Post No.12,448)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,448

Date uploaded in London –  21 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

புத்தக அறிமுகம்

திரு ஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதியுள்ள

இராமாயணம்

அயோத்தியா காண்டம் –கம்பர்

முதல் பாகம்

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை டிஜிடல் வடிவிலும்அச்சுப் பதிப்பாகவும் வெளியிட்டுள்ளார்.

நூலின் பொருளடக்கம் இது:

என்னுரை

அணிந்துரை

அத்தியாயங்கள்

1. மந்திரப் படலம்

2.   மந்தரை சூழ்ச்சிப் படலம்

3. கைகேயி சூழ்வினைப் படலம்

4.  நகர் நீங்கு படலம்

பிற்சேர்க்கை

1. அயோத்தியா காண்டம் கம்ப ராமாயணம் படலங்கள்

2. உதவிய ராமாயண நூல்களின் பட்டியல்

*

திரு R.சேஷாத்ரிநாதன் அவர்கள் எழுதியுள்ள இராமாயண ஆய்வு நூல் வரிசையில் இரண்டாவது வெளியீடாக அமைகிறது இது.

இந்த நூலுக்கு அவர் வழங்கியுள்ள முன்னுரையின் ஒரு பகுதி:- 

கம்பர் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் கூழாங்கற்களோடு  விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் நான். அந்த சமுத்திரத்தில் இறங்கி எளிதாக முத்தெடுக்க முடியாது. அதற்கு அனுபவம் நிறைந்தோர் உதவி தேவை. அந்த வரிசையில் நாமக்கல் கவிஞர். ஐயா கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், அ.ச.ஞானசம்பந்தன், சுந்தரசண்முகனார் கணபதிப் பிள்ளை போன்ற சான்றோர்களின் உதவியோடும் நலுங்கு மெட்டு இராமாயணம், வீரபத்திர இராமாயணக் கும்மி, இராமாயண அம்மானை,  அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள் போன்ற நூல்களின் துணையோடும் கம்பன் என்னும் கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன்

*

இந்த நூலுக்கு திரு ச.நாகராஜன் வழங்கியுள்ள அணிந்துரையில் ஒரு பகுதி:

உலகில் தோன்றிய ஆகப் பெரும் கவிஞர்களில் முன்னணியில் உள்ளோரில் முதல் வரிசையில் இடம் பெறுபவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

கம்பனைப் பல்வேறு இடங்களில் பாராட்டி வியக்கும் மஹாகவி பாரதியார் அதற்கான காரணத்தையும் தமிழச் சாதி என்ற கவிதையில்

 அருமையாகக் கூறி விடுகிறார் : –

“எல்லையொன்றின்மை’ எனும் பொருள் அதனைக்

கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்”

தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

பல்வேறு அறிஞர்களும் கம்பனைக் கற்க முயன்று அவனது ‘எல்லையொன்றின்மை’ (Infinity) என்ற மாபெரும் தன்மையால் தம் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனால் இந்த வேக யுகத்தில் நமக்கு கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே!

இந்த வகையில் தான், இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு, அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார்.

திரு ஆர். சேஷாத்ரிநாதன்.

இந்த முதல் பாகத்தில் மந்திரப் படலம்,  மந்தரை சூழ்ச்சிப் படலம்.

கைகேயி சூழ்வினைப் படலம், நகர் நீங்கு படலம் ஆகிய நான்கு படலங்கள் இடம் பெறுகின்றன.

தசரதன், கூனி மந்தரை, கைகேயி, கோசலை, சுமத்திரை, இராமன், இலக்ஷ்மணன் உள்ளிட்டோர் பற்றி வேறெங்கும் காண முடியாத பல சுவையான விஷயங்களை ஒருங்கு சேர ஒரே இடத்தில் படித்து மகிழும்படி இந்த நூல் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் கவியரசர் கண்ணதாசன் ஈறாக பல நூல்கள் மற்றும் அறிஞர்கள் தம் மேற்கோள்களை சரளமாக நூலாசிரியர் எடுத்துத் தருகிறார். வியக்கிறோம், மகிழ்கிறோம்.

அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம்.

***

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனித தலங்கள் புஸ்தகம்


WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –  20 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

என்னுடைய 104 ஆவது புஸ்தகம் இப்போது புஸ்தக .காம்

தளத்தில் படிக்கக் கிடைக்கிறது .

இதோ விவரங்கள்

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் (book title)

Contents

1.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 1

2.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 2

3.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 3

4.மஹாராஷ்டிர மாநில108 புனிதத் தலங்கள் – 4

5.அஷ்ட விநாயகர் கோவில்கள்

6.அஷ்ட விநாயகர் கோவில் தொடர்ச்சி

7.துல்ஜாபூர், கோலாப்பூர் தேவி கோவில்கள்

8.ஏழுமலை உச்சியில் ஒரு தேவி

9.யோகேஸ்வரியும் யாமையும்

(10). 22 சிவன் கோவில்கள்

11.எல்லோரா எனும் உலக அதிசயம்

12.ஜோதிர் லிங்க ஸ்தலம் வைத்யநாதம்

13.மேலும் சில சிவன் கோவில்கள்

14.மஹா பலேஸ்வரில் 4 சிவன் கோவில்கள்

15.மும்பை நகர கோவில்கள்

16.வடக்கே ஒரு சிதம்பரம்; 10 லட்சம் பக்தர் வரும் பண்டரீபுரம்

17.ஷீரடியும் பஞ்சவடியும்

18.கண்டோபா, மசோபா கோவில்

19.அம்மனுக்கு கண்ணாடி கோவில்

20.சிவாஜிக்கும் ஒரு கோவில்; 108 மஹாராஷ்டிர புனிதத்தலங்கள்- 20 (நிறைவு)

21.இடையர்கள் கொண்டாடும் வினோத மஞ்சள் திருவிழா

22.தத்தாத்ரேயர் பற்றி 2 சுவையான மராத்தி பழமொழிகள்

23.ஆலந்தியில் ஒரு அற்புத தல விருட்சம்

24.காந்திஜி நிறுவிய இயற்கை மருத்துவ நிலையம்

Xxxx

முன்னுரை

மஹாராஷ்டிர மாநிலம், பல விதங்களில் தமிழ் நாட்டைப் போலவே இருக்கிறது . புகழ் பெற்ற கோவில்கள் , மக்கள் வணங்கும் சாது சந்யாசிகள், அவர்களுடைய ஜாதி, மத, பேதமற்ற அணுகுமுறை ஆகியவற்றில் தமிழ் நாட்டுக் கோவில்களையும் ஆழ்வார்கள் , நாயன்மார்கள் போன்ற  அடியார்களையும் ஒப்பிட முடிகிறது . தமிழ் நாட்டைப் போலவே புகழ் பெற்ற சிவன் தலங்கள் , சக்தி பீடங்கள் ஆகியன அந்த மாநிலத்திலும் இருக்கின்றன . நாம் எப்படி ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்றுசொல்கிறோமோ அதே போல அங்கும் துகாராம் முதலிய அடியார்களால் பாடல் பெற்ற கோவில்கள் இருக்கின்றன .

தமிழ்நாட்டு மக்கள் கேள்விப்படாத கண்டோபா மசோபா கோவில்கள் அங்கே இருக்கின்றன. இவர்களை பைரவர், வீரபத்ரன், அய்யனார் ஆகியோருடன் ப்பிடலாம்  . எல்லோரா, எலிபெண்டா குகைக் கோவில்களும் அஜந்தா குகை சித்திரங்களும் மிகவும் பழமையானவை . இவை தவிர சாது சந்யாசிகள் சமாதிகள் . பிறந்த இடங்கள் ஆகியனவும் பல்லாயிரம் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது. ராமபிரான் சம்பந்தப்பட்ட பஞ்சவடி , கேரள ஐயப்பன் கோவிலைப்போல பல லட்சம் பக்தர்களை ஈர்க்கும்  பண்ட்ரீபுரம் ஆகியவற்றைப் பார்க்காவிடினும் படித்தாவது மகிழலாம். எங்கு போனாலும் சிவாஜி மஹாராஜா அமைத்த கோட்டைகள் , மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வனப்பு மிக்க மலைகள் , வானுயர்ந்த நீர் வீழ்சசிகள், வெண் மணற் கடற்கரைகள் முதலியன பக்தியையும் சுற்றுலாவையும் ஒருங்கே ஊக்குவிக்கிறது

மஹாராஷ்டிர சாது சந்யாசிகள் பற்றி ‘பக்த விஜய’த்தில் நிறைய கதைகள் உள்ளன ; அந்த அளவுக்கு கோவில்கள் பற்றித் தகவல் இல்லை ; ஜோதிர் லிங்க தலங்கள் சக்தி பீடங்கள்விநாயகரின் அஷ்ட சித்தி விநாயகர் கோவில்கள் மட்டுமே பலருக்குத் தெரியும். இந்த நூலில் அவைகளோடு தெரியாத கோவில்களையும் தரிசிக்கலாம். இதை படித்த பின்னர் நாம் அவ்வளவு கோவில்களையும் என்று பார்க்கப்போகிறோம் என்ற ஏக்கம் எழும்.. கட்டுரைக அனைத்தும் அண்மையில் என்னுடைய இரண்டு பிளாக்குகளில் வெளியானதன் தொகுப்புதான்.

கட்டுரைகளின் வரிசை எண்ணையும் , பிளாக்கில் முதலில் வெளியான தேதியையும் அந்தந்தக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

லண்டன் சுவாமிநாதன்

Swami_48@yahoo.com

ஜூன் 2023

xxxxxxx

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – June  2023

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 7000 articles and 104 Tamil and English Books

Visited Countries

India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece

xxxxxxxxxxxxx

How to get it

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—tags- மஹாராஷ்டிர மாநிலம், 108 புனித தலங்கள்,  புஸ்தகம், london swaminathan, new book

M for Madurai –Know Your India Puzzle (Post.12,447)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,447

Date uploaded in London – –  20 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find the eight famous towns  in India beginning with letter M

1.Uttarpradesh temple of Lord Krishna near Brindavan. Capital of Surasena kingdom ruled by Kamsa.

2.Madhya Pradesh town absolutely wonderful architectural heritage. It has nine great monuments of great antiquity including Mitawali circular temple, built by great dynasties like the Gurjara-Pratiharas, the Kachhapaghatas etc.

3.If anyone says Dasara  procession, this Karnataka town name will be named immediately

4.Kerala town in Malappuram district; The remains of pre-historic symbols including Dolmens, Menhirs, and Rock-cut caves that have been found from various parts of  indicates human life at the region in the Stone Age.

5.Capital of Pandya country; now with the world famous Meekashi Sundareswar temple

6. Bihar town famous for its Mithila paintings. These paintings are created mostly by women. Natural colours are used and paintings are done on canvases, walls, floors of sacred places, etc .centre of ‘Maithili’ culture.

7. The hill station is in the foothills of the Garhwal Himalayan range. Uttarakhand has this beautiful place.

8.Andhra Pradesh town renowned for the Chennakesava Swamy temple built here during the reign of the Haihaya Kings.

ANSWERS:–

1.MATHURA; 2.MORENA; 3.MYSURU, 4.MANJERI; 5.MADURAI;6.MADHUBANI; 7.MUSSORIE; 8.MACHERLA

 –subham—

கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 3 (Post No.1,446)

Tallest Confucius Statue in China

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,446

Date uploaded in London – –  20 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Confucius, Valluvar- Part 3

கன்பூசியஸ் Confucius சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 3

உலக மஹா மேதை வள்ளுவர். உலகிலுள்ள பெரிய தத்துவ ஞானிகள் சொன்ன எல்லா விஷயங்களையும் நமக்கு பஞ்சாமிர்தமாக, ரோஜா குல்கந்தாகக் கொடுத்துவிட்டார். இதனால் தமிழ் மொழி உலகின் தலை சிறந்த மொழிகளில் ஓரிடத்தைப் பெற்றது.

யாமறிந்த புலவரிலே

வள்ளுவர் போல் , இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

என்று பாரதி சும்மாவா சொன்னான் ?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே– தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்றும் பாரதி சொன்ன வாக்கு வேத வாக்கு.

உலகம் போற்றும் சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் பொன்மொழிகளுடன்  இதோ மேலும் சில ஒப்பீடுகள்:

மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்- என்று  கன்பூசியஸ்  சொன்னார்.

வள்ளுவர்., மேலும் ஒருபடி சென்று மன்னிப்பதோடு நின்றுவிடாதீர்கள்; அவர்களே வெட்கப்படும்படி நன்மையும் செய்துவிடுங்கள் என்கிறார். ஏனெனில் அவர்கள் அதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்–குறள் 314

[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]

பொருள்

மணக்குடவர் உரை

இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் (தண்டித்தல்) நெறி கூறியது.

பாரதியும் பாடினான்

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்

பூமியில் கண்டோமே – நன்னெஞ்சே

பூமியில் கண்டோமே

பகை நடுவினில் அன்புருவான நம்

பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே

பரமன் வாழ்கின்றான் (பகை)

XXX

உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.– இது  கன்பூசியஸ் சொன்ன பொன்மொழி

வள்ளுவர்.இதையே அழகான உவமையுடன் சொல்கிறார் ,

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு–குறள் 595

[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]

பொருள்

ஒரு தாமரைப்பூவின் தண்டு அந்தக் குளத்தின் நீர்மட்டத்தைப் பொறுத்தது; அது போல மக்களின் ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே அவர்கள் உயர்வு இருக்கும் .

ஆகையால் எதையும் சாதிக்க முடியும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் தேவை

XXX

நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்! — கன்பூசியஸ்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்–குறள் 620

[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

விதியையும் கூட மதியால் வெல்லலாம். நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் , முயற்சி திருவினை ஆக்கும் என்பது வள்ளுவர் வாதம் .மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்- என்பது குறளின் பொருள் ஆகும்

ச்ரத்தாவான் லபதே ஞானம்; முயற்சியுள்ளவன் ஞானத்தை அடைகிறான் — என்பது கண்ணன் வாக்கு (பகவத் கீதை 4-39)

Xxxx

Confucius Temple in Beijing

மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.– கன்பூசியஸ்

வள்ளுவர் இதை இன்னும் அழகாக சொல்கிறார் ,

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு–குறள் 299

[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]

சத்யம் / உண்மை/ வாய்மை என்பதே இந்திய அரசின், தமிழ் நாடு அரசின் சின்னம் ; சத்யமேவ ஜயதே = வாய்மையே  வெல்லும் என்பது முண்டகோபநிஷதத்தில் உள்ள வாக்கியம்

மணக்குடவர் உரை

சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும். இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.

Xxxx

ஒரு உயர்ந்த மனிதர் பேசுவதற்கு முன்பே செயல்படுகிறார், பின்னர் அவரது செயலுக்கு ஏற்ப பேசுகிறார்.— கன்பூசியஸ் பொன் மொழி

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்-குறள் 664

[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

பெரியாருக்கும் சிறியாருக்கும் என்ன வித்தியாசம். சிறியோர் என்பர் வெறும் வாய்ச் சவடாலோடு நிற்பார்கள் . பெரியவர்களோ செயல்களை செய்த பின்னர்தான் அதை வெளியே சொல்லுவார்கள் . இதை வள்ளுவன் தெளிவாக விளம்புகிறான் :

பெரியவர்கள் செயலை முடித்த பின்னர்தான் சொல்லுவார்கள். இடையிலே சொன்னால் துன்பமே விளையும் ; இதோ வள்ளுவர் மொழிவது :

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்— குறள் 663

[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]

—- subham—-

Tags- கன்பூசியஸ் ,வள்ளுவர், Part 3, Confucius

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 8 (Post No.12,445)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,445

Date uploaded in London –  20 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 8 

ச.நாகராஜன்

இரட்டைக் குழந்தைப் பிறப்பில் ஒரு  சோகம்!

ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் இது.

கேட் ஓக் (Kate Ogg) என்ற பெண்மணி சிட்னி மருத்துவமனை ஒன்றில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். 27 வாரங்களிலேயே அந்தக் குழந்தைகள் பிறந்து விட்டன. (ஆறே முக்கால் மாதம் தான் கர்ப்பவாசம்!) ஒவ்வொரு குழந்தையின் எடையும் இரண்டு பவுண்டுகள் தான்!

சின்னக் குழந்தையான எமிலி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் அந்தக் குட்டியின் சகோதரனான ஜேமி (Jamie) மூச்சு விடவில்லை.

20 நிமிடங்கள் கடுமையான முயற்சியை மேற்கொண்ட பின்னர் மருத்துவமனை பணியாளர்கள் தங்கள் முயற்சி தோல்வி அடைந்ததை ஒட்டி கேட்டிடம் ஜேமி பிழைக்கவில்லை என்று கூறினர்.

கேட்டிடம் டாக்டர், ‘உனது பையனுக்கு ஏதாவது பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறாயா’ என்று கேட்ட போது கேட், “ஆம், ஜேமி என்று பெயர் வைத்திருக்கிறேன்” என்றார்.

அந்தக் குழந்தையைக் கையில் அடக்கமாக வைத்திருந்த அந்த டாக்டர், “நாம் ஜேமியை இழந்து விட்டோம். அவனால் பிழைக்க முடியவில்லை. சாரி” என்று கூறினார்.

திடுக்கிட்டு சோகத்தில் ஆழ்ந்த கேட் பிளாங்கட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஜேமியை வெளியே எடுத்துப் பார்த்தார். குழந்தையிடம் அசைவே இல்லை.

கங்காரு கவனிப்பு! (Kangaroo Care)

சேனல் 7இல் ‘Today Tonight’ நிகழ்ச்சியில் “பின்னால் பேசும் போது ஓக் கூறினார்: “என் தோளுடன் குழந்தையை அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். எனது கவுனை எடுத்து விட்டு குழந்தையை எனது மார்போடு அணைத்துக் கொண்டு கையால் அவனைச் சுற்றி வைத்துக் கொண்டேன்.”

ஒரு இயக்கமும் குழந்தையிடம் இல்லை. கேட் குழந்தையிடம் பேச ஆரம்பித்தார். அவனது பெயர் ஜேமி என்றும் அவனுக்கு ஒரு சகோதரி உண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் மட்டுமல்ல தொடர்ந்து அவன் வாழும் போது அவனுடன் தாங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்பினோம் என்பதைக் கூறிக் கொண்டே இருந்தார்.

இரண்டு மணி நேரம் இப்படிக் கழிந்தது.

பிறகு உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் குழந்தையிடம் தோன்ற ஆரம்பித்தன!

மூச்சு விட ஜேமி திணறியது.

அது நிர்பந்தப்படுத்தப்பட்ட ஒரு செயல் என்று டாக்டர்கள் கூறினர்.

ஆனால் கேட் விடவில்லை.

குழந்தையை அங்கும் இங்கும் தாலாட்டி அசைத்துக் கொண்டே இருந்தார். குழந்தை இன்னும் அதிகமாக மூச்சு விட அவஸ்தைப்பட்டுத் திணறுவதைக் காண்பித்தது.

பிறகு சீராக இந்தத் திணறல் தொடர ஆரம்பித்தது. கேட் உடனே ஜேமிக்கு மார்பிலிருந்து பாலை எடுத்து விரலால் கொடுக்க ஆரம்பித்தார். அதை எடுத்துக் கொண்ட குழந்தை இப்போது சீராக மூச்சு விட ஆரம்பித்தது.

கேட்டின் உடலானது ஒரு ‘இன்குபேடர்’(Incubator) போலச் செயல்பட்டு

குழந்தையின் உடலை கதகதப்பாக வைத்து அதன் மூச்சை சீராகச் செயல் பட வைத்தது. இப்படி டாக்டர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

இது கங்காரு கவனிப்பு (Kஎன்ற ஒரு கொள்கையை உறுதிப்படுத்தியது.

கங்காரு தனது குட்டிகளைத் தன் மார்பில் உள்ள பையில் வைத்து மார்போடு அணைத்து வளர்க்கும்.

அது கேட்-ஜேமி விஷயத்தில் நடந்து அந்தக் கொள்கையை உறுதிப்படுத்தியது.

காலம் வரும் முன்னே காலன் வரமாட்டான் – ஒரு போதும்!

இதை மெய்ப்பிக்கும் வகையில் நடக்கும் ஏராளமான அதிசய நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

இந்தச் செய்தி ஆஸ்திரேலியா நாடெங்கும் பரவி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதை லண்டன் செய்தி நிறுவனமான IANS உலகெங்கும் பரப்பியது

நமது நாட்டில் Times of India, இந்தச் செய்தியை 2010, ஆகஸ்ட் 28ஆம் தேதி Kolkata பதிப்பில் வெளியிட்டது.

தகவல், நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில இதழான TRUTH Volume 78 Issue 24 Dated 24-9-2010)

***

L For Lonavala –Know India Crossword Puzzle (Post.12,444)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,444

Date uploaded in London – –  19 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find the eight places beginning with letter L.

Here are the clues for the 8 places:

1.This Punjab city is popular for its textile industry and is often referred as the Manchester of India. Historical attractions include Fort, Maharana Ranjit Singh War Museum, Phillaur Fort etc.

 2. Dudhwa National Park, is here and is the only national park in Uttar Pradesh It is home to a large number of rare and endangered species .

3.This Andhra town isfamous for its sculptures; it is connected with Jatayu of Valmiki Ramayana.

4.This  railway division in Assam is famous for being the biggest divisional headquarters of the Northeast Frontier Railway and the biggest junction in the North-Eastern part of the country. The town is also the gateway to the visually enchanting hill-tract .

5.This village in Haryana is famous for its Surajkund masonry tank of tenth century CE.

 6.Capital of Uttar Pradesh; Bara Imambara – is the architectural marvel

7. It is a beautiful retreat away from the chaos of the city, is one of the most popular tourist destinations in Maharashtra. Often called the ‘Jewel of Sahyadri’ and the ‘City of Caves’, this hill station boasts of a spectacular setting that includes lush green valleys, stunning waterfalls, serene lakes and remarkable caves.

8. traditional boundary between India and Tibet 

 1.LUDHIANA, 2.LAKHIMPUR, 3.LEPAKSHI, 4.LUMDING, 5.LAKHARPUR,6.LUCKNOW,  7.LONAVALA, 8.LANAK LA

–subham—