மாங்காடு காமாட்சியை தரிசித்தேன் (Post No.12,520)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,520

Date uploaded in London – –  24 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

எப்பொழுது இந்தியாவுக்குப் போனாலும் குறைந்தது 30 புதிய கோவில்களுக்காவது செல்வேன். இந்த முறை செப்டம்பரில்  (2023) இலங்கைப் பயணம் சேர்ந்துவிட்டதால் ஒரே ஒரு தமிழக கோவிலைத்தான் தரிசிக்க முடிந்தது. அந்த மாங்காடு காமாட்சி  அம்மன் கோவில்,  சென்னையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து 15 கிலோமீட்டர்தான். காலை 7 மணிக்கே சென்றதால் கூட்டமே இல்லை; நல்ல தரிசனம். கொஞ்சம் தள்ளிப் போனால் திருவேற்காடு அம்மனையும் தரிசிக்கலாம். ஆனால் சென்னை traffic டிராஃபிக்கை கண்டு அஞ்சி  விரைவில் திரும்பிவிட்டோம்.

முதல் நாள் ஆட்டோ டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சார் வாங்க ஸார் , நான் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றார் ; இல்லையப்பா, கார் வருகிறது. வேறு சில வேலைகளுக்கு உன்னை அழைக்கிறேன் என்றேன். அவன் கோவில் பற்றி  சொன்ன விஷயத்துக்காக இதை இழுக்கிறேன். முன்னர் எல்லாம் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான “மாங்காடு சவாரி” வருமாம். 300 ரூபாய்க்குள் போய்விட்டு வருவார்களாம். இப்பொழுது மாங்காட்டுக்கு யாருமே போவதில்லையாம். இவ்வாறு அவன் அலுத்துக் கொண்டவுடன் நான் சொன்னேன். இல்லை; இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் கார் வசதி வந்து விட்டது; மேலும் கணவனும் மனைவியும் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றனர். ஆகையால் அவர்களே போய்விட்டு வந்துவிடுகிறர்கள் போலும் என்று.

xxxx

மாங்காடு காமாட்சியை (10-9-22023) தரிசித்தேன் !

இனி இந்த உரையாடலை நிறுத்திவிட்டு அம்மனைத் தரிசிப்போம்.

சென்னையிலிருந்து போரூரைத்த தாண்டிச் செல்ல வேண்டும்.

மாங்காடு காமாட்சி கோவில் அமைப்பு

உள்ளே நுழைந்தவுடன் விநாயகர் நமக்குத் தரிசனம் அளிக்கிறார். பின்னர் கோவில் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையலாம். மிகப்பெரிய மேரு சக்கரம் இருக்கிறது. அதற்குப் பின்னால் சிறிய , அழகிய விக்ரமாக நின்று நமக்கு காமாட்சி  அருள்பாலிக்கிறாள்.. ஒரு தம்பதியர் புடவை வாங்கி வந்திருந்தார்கள்.

அம்மனுக்கு சார்த்தி விடலாமா ? அல்லது அம்மனிடம் வைத்து………………………………………………

PLEASE CONTINUE IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

Leave a comment

Leave a comment