WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,522
Date uploaded in London – 25 September, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மகான்களின் வாழ்வில்..
பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே!
ச.நாகராஜன்
பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே!
ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தராகத் திகழ்ந்தவர் நானா சாஹிப் சந்தோர்கர்.
அவருக்கு பாபா கற்றுத் தந்த வாழ்வியல் ரகசியங்கள் ஏராளம்.
அவற்றில் ஒன்று இது.
ஒரு சமயம் நானாவைக் கூப்பிட்ட பாபா அவரிடம் பேசலானார்.
பாபா: நானா! யாராவது ஒருவர் உன்னிடம் வந்து பிச்சை கேட்டால் அவருக்கு உன்னால் முடிந்ததைக் கொடு. இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கேட்டால் அவர் மீது கோபப்படாதே. திட்டாதே. உன்னுடைய அதிகார தோரணையைக் காட்டாதே.
நானா அதன்படியே நடப்பதாக உறுதி கூறி விட்டுச் சென்றார்.
ஆறு மாதங்கள் கழிந்தன.
ஒரு நாள் நானா சாஹிப் கல்யாணில் தனது சொந்த வீட்டில் மாடியில் உட்கார்ந்திருந்தார்.
ஒரு பிச்சைக்காரி அவர் வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்டாள்.
நானா சாஹிப்பின் மனைவி வறுத்த பருப்பை அவளுக்கு கொடுத்தார். அந்த பிச்சைக்காரி இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்றாள்.
அதன் படியே நானா சாஹிப்பின் மனைவி இன்னும் கொஞ்சம் போட்டார்.
பிச்சைக்காரியோ விடவில்லை. முழு பருப்பையும் கேட்டாள். முழு பருப்பும் வரும் வரையில் அவள் அங்கிருந்து நகர்வதாயில்லை. பொறுமையிழந்த திருமதி நானா அவரிடம் சென்று நடப்பதைச் சொன்னார்.
நானா சாஹிப்பிற்கு மிகவும் கோபம் வந்து விட்டது. ஒரு பியூனைக்…………………………………………..
Please continue…………………..
swamiindology.blogspot.com