ஶ்ரீ கௌடபாதர் – 2 (Post No.12,561)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,561

Date uploaded in London – –  –  7 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மகான்களின் வாழ்வில் ..

ஶ்ரீ கௌடபாதர் – 2

ச.நாகராஜன்

அரசமரத்தில் அமர்ந்த பிரம்மராக்ஷஸர்

ஶ்ரீ கௌடபாதர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.

வங்காளத்தின் இன்னொரு பெயர் கௌடம்.

ப்ரம்மராக்ஷஸனாக ஆனவுடன் அவர் வானில் பறக்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் நர்மதா நதிக்கரையோரம் இருந்த அரச மரம் ஒன்றில் அவர் உட்கார்ந்து இளைப்பாறினார்.

அந்த அரசமரத்தைக் கடந்து பல பிராமண பண்டிதர்கள் சென்று கொண்டே இருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் ப்ரம்மராக்ஷஸரான கௌடபாதர், ‘பச்’ என்பதுடன் ‘க்ட’ என்பதைச் சேர்த்தால் என்ன வரும் என்று கேட்டார்.

எந்த ஒருவர் சரியான விடையைச் சொல்கிறாரோ அவர் போக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் எவர் ஒருவர் சரியான விடையைச் சொல்லவில்லையோ அவர் ப்ரம்மராக்ஷஸருக்கு ஆகாரம் ஆனார்.

‘பச்’ என்ற வேர் பாணினி சூத்திரத்தின் படி (8/2/52) பக்கா என்பதாகும்.பக்தா என்றால் அது தவறாகும்.

சந்த்ர சர்மா

ஒரு நாள் ஒரு அழகிய பிராமணப் பையன் பதஞ்சலி மஹாபாஷ்யத்தைக் கற்பதற்காக சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

அவன் நர்மதை நதிக்கரையில் இருந்த அந்த அரசமரத்தின் வழியே சென்று கொண்டிருந்தான்.

வழக்கம் போல ப்ரம்மராக்ஷஸர் தனது வழக்கமான கேள்வியைக் கேட்டார்.

உடனடியாக அவருக்குச் சரியான விடை தந்தது.

ப்ரம்மராக்ஷஸருக்குத் தான் விடுதலையாகும் தருணம் வந்து விட்டது என்பது புரிந்தது.

இந்தப் பையன் வடிவத்தில் தனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்.

அந்தப் பையனை மரத்தின் மீது ஏறுமாறு கூறினார். மஹாபாஷ்யத்தின் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

ஆனால் அந்தப் பையனுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

மஹாபாஷ்யத்தின் அனைத்துப் பாடங்களும் கற்று முடியும் வரையில் அந்தப் பையன் அந்த மரத்திலேயே இருக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.

மஹாபாஷ்ய விளக்கவுரை மரத்தின் மீது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பையன் தன் தொடையை அறுத்து அங்கிருந்து பீறிட்டு வரும் இரத்தத்தால் மரத்தின் மீதிருந்த இலைகளில் எல்லாப் பாடங்களையும் எழுதி வரலானான்.

ஒரு விதக் குறுக்கீடுமின்றி ஒன்பது நாட்கள் இந்த விளக்கவுரை தொடர்ந்தது.

ஒன்பது நாட்கள் கழிந்த பின்னர் பத்தாம் நாள் இருவரும் மரத்திலிருந்து இறங்கினர்.

அந்த இலைகளில் எழுதிய மஹாபாஷ்யமே இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மஹாபாஷ்யம் ஆகும்.

அதனுடைய பெயர் பாணிபாஷ்யம் ஆகும்.

அந்தப் பையனின் பெயர் சந்த்ர சர்மா.

கௌடபாதர் விடுதலை அடைவது என்பது முடியவே முடியாது என்று பதஞ்சலி மஹரிஷி உணர்ந்து கொண்டதால், தானே சந்த்ர சர்மாவாக உருவெடுத்தார்.

ப்ரம்மராக்ஷஸரான கௌடபாதரும் விடுதலை அடைந்தார்.

கோவிந்த பகவத்பாதர்

சந்த்ர சர்மா சந்யாச தீக்ஷை பெற்றார்.

கோவிந்த பகவத்பாதர் என்ற புதிய நாமதேயத்தையும் (பெயரையும்)

பெற்றார்.

அவரே ஆதிசங்கரரின் குருவாகவும் ஆனார்.

இறைவனின் தெய்வீகத் திருவிளையாடலில் பதஞ்சலி முனிவர், ஶ்ரீகௌடபாதர், கோவிந்தபகவத்பாதர், ஶ்ரீ சங்கரர் ஆகியோர் முக்கியமான அற்புத பாத்திரங்கள். அதாவது இறைவனின் அம்சங்கள்!

**

Leave a comment

Leave a comment