முட்டாள்களின் உளறல்! (Post  No.12,564)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,564

Date uploaded in London –  8 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

முட்டாள்களின் உளறல்!

ச.நாகராஜன்

சனாதனத்தை ஒழிப்போம் என்று கூக்குரலிடுபவர்களை என்னவென்று சொல்வது?

முட்டாள்கள் என்றா திமிர் பிடித்தவர்கள் என்றா ஒன்றும் அறியா அறிவிலிகள் என்றா?

சனாதனம் என்ற வார்த்தைக்கே என்ன பொருள் என்று அறியாதவர்கள் இவர்கள்.

சனாதனம் என்றால் என்றும் உள்ளது என்று பொருள்.

ஆதி அந்தம் இல்லாமல் நிலைத்து இருப்பது என்று பொருள்.

விநாச காலே விபரீத புத்தி என்பார்கள்.

தனக்கு விநாச காலம் வரும் போது புத்தி விபரீதமாகுமாம்!

இப்படி அரசியல் அரங்கில் ஒரு புறம் கூக்குரலைக் காண்கிறோம்.

இன்னொரு புறம் திவ்யா திரிவேதி என்ற ஒரு அம்மணி எதிர்கால

 இந்தியா இந்துமதம் இல்லாமல் இருக்கும் என்று அண்மையில் கூறி இருக்கிறார்.

இவர் ஒரு உதவிப் பேராசிரியர். ஹ்யூமானிடீஸ் அண்ட் சோஷியல் ஸயின்ஸஸ் துறையில் பணியாற்றுபவர். இவர் டெல்லியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரிபவர்!

இவருடைய அறிவு இப்படி இருந்தால் இவரிடம் பாடம் படிக்கும் மாணவ மாணவியரின் அறிவு எப்படி இருக்கும்! ஊகித்துக் கொள்ளலாம்!!

“இரண்டு இந்தியாக்கள் இருக்கிறது. ஜாதி உள்ள பழைய இந்தியா ஒன்றாம். ஜாதி இல்லாத எதிர்கால இந்தியா இன்னொன்றாம்.”

இது இவரது கண்டுபிடிப்பு (ஆதாரம் : 9-9-2023 டைம்ஸ் நௌ செய்தி)

இந்த புத்திசாலியை மீடியாக்காரர்கள் விடவில்லை.

“அம்மணீ! இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி உயரத்தில் போய்க் கொண்டே இருக்கிறதே” என்று யதார்த்த நிலையை ஒரு ஊடகக்காரர் சொல்லி அதை விளக்கவும் செய்தார்.

ரிக்‌ஷா இழுக்கும் ஒருவர் தொழில்துறை நுட்பத்தின் மேம்பாட்டால் இப்போது மிகவும் பயனடைந்துள்ளதை நாம் பார்க்கவில்லையா என்ன என்றார் அவர்.

உடனே அது “மீடியாத்தனம்” – மீடியாக்காரர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார் அம்மணி.

அனைவரும் சிரித்தனர் அம்மணியின் அறிவைக் கண்டு.

வடமொழியில் வேடிக்கையான அற்புதமான ஸ்லோகம் ஒன்று உண்டு.

வானரஸ்ய சுராபானம் மத்யே வ்ருஷிச்சக்தம்சனம் |

தன்மத்யே பூதசஞ்சார: யத்தா தத்தா பவிஷ்யதி ||

இதன் பொருள்:

ஒரு குரங்கு சாராயத்தை ‘புல்’லாகக் குடித்து விட்டது.

போதை ஏறிய ஒரு குரங்கை நினைத்துப் பார்த்துக் கொள்வோம். அதை ஒரு தேள் கொட்டி விட்டது. சாதாரணமாகவே ஆடும் குரங்கு சாராய ஆட்டத்தோடு தேள் கடியால் வேறு ஆட ஆரம்பித்தது. அப்போது அதில் ஒரு பூதம் வேறு புகுந்து கொண்டது.

இப்போது குரங்கு எப்படி இருக்கும்?

அம்மணியின் ஆட்டம் அப்படி இருக்கிறது!

மக்காலே தனது கல்வித் திட்டத்தை நுழைக்கப் பார்த்தான். கம்யூனிஸ்டுகள் தங்கள் விலை போகாத தங்கள் சித்தாந்தத்தை நுழைக்கப் பார்த்தார்கள்.

முகலாயர்கள் மதம் மாற்றப்பார்த்தார்கள். ஜஸியா விதித்துப் பார்த்தார்கள்.

ஆங்கிலேயர்கள் மதம் மாற்றப் பார்த்தார்கள். பலவித ஆசைகளைக் காட்டினார்கள்.

அசைந்ததா சனாதனம்.

முகலாயர்கள் ஒழிந்தார்கள். அந்த வம்சத்தையே காணோம்.

ஆங்கிலேய அரசு ஒழிந்தது. அதன் கடைசி ஆசையும் அழிந்தது.

இப்போது காசு கொடுத்து விலைக்கு வாங்கிய இந்த அம்மணிகளும் சில ஊடகங்களும் அதிகார வெறி பிடித்த ஏராளமான ஊழல் பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் சனாதனத்தை அழித்து விடுவோம் என்கிறார்கள்.

அழிந்து போகப் போவது  யார்?

விரைவிலேயே பார்க்கப் போகிறோம்!

ஹிந்துக்கள் அனைவரும் எழுந்து ஓரிணையில் இணைந்து இந்த ராவணக் கூட்டத்தைப் பார்க்கும் போதே அது அழிந்து விடும்!

காலம் வேகமாக நகர்ந்து இந்தக் கட்டத்தை அடைந்து விட்டது.

என்றுமுள்ள சனாதனம் தனது வலிமையைக் காட்டப் போகிறது.

சனாதன சேனையில் இணைவோம். சேது பாலம் கட்ட அணில் உதவியது போல நம்மால் முடிந்ததைச் செய்வோம்.

வெல்க இந்து மதம்! வாழ்க பாரதம்! என்றும் இருக்கும் சனாதனம்!!!

****

Leave a comment

Leave a comment