அயல் தேச சொத்து! (Post No.12,601)

Bank of Switzeland 
 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,601

Date uploaded in London –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அயல் தேச சொத்து!

ச.நாகராஜன்

அயல் தேச சொத்தால் என்ன லாபம்?!

அயல் நாட்டில் சொத்து இருக்கிறது – நிறைய! அதனால் என்ன பிரயோஜனம் என்கிறார் கவிஞர்!

கிம் தயா சுமஹத்யாபி ஷ்ரியா தேசாந்ந்தரஸ்தயா |

ரிபவோ யாம் ந பஷ்யந்தி சுஹ்ருபித்ர்யா ந பூஜ்யதே ||

எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, அயல் நாட்டில் அந்த சொத்து இருக்கிறது என்றால் அதைப் பார்க்கவும் முடியாது ஒருவரின் உறவினராலோ. அல்லது அவரது நண்பர்களாலோ அனுபவிக்க முடியாது.

ஆகவே அயல்நாட்டில் சொத்து சேர்ப்பது பயனில்லை.

மனைவியைப் பிரிந்த போது இளமையால் என்ன பயன்?

தேவைப்படுபவருக்குக் கொடுக்காமல் தர்மம் செய்தாயா நீ?

மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் செய்யும் சேவையால் என்ன பிரயோஜனம்?

தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொண்ட தம்பதிக்கு ஒரு மகன் பிறக்காவிடில் அதனால் என்ன பயன்?

ஒருவர் தன் மனைவியை விட்டு இளம் வயதில் பிரிந்து வாழ்ந்தால் அந்த இளமையால் என்ன தான பிரயோஜனம்?

கிம் தே க்ருதம் விதரணம் யதி நாதிர்தாய

    கிம் சேவயா யதி பரோபக்ருதௌ ந யத்ன: |

கிம் சங்கமேன தனயோ யதி நேக்ஷணீய:

    கிம் யௌவனே ந விரஹோ யதி வல்லபாயா: ||

சரியான நான்கு கேள்விகளைக் கேட்கிறார் கவிஞர்.

நமக்குத் தெரிந்த, புரியக் கூடியவை தான் பதில்கள்!

மார்பகத்தைக் கையால் மூடிய காரணம் என்ன?

ஒரு பெண் கைகளால் மார்பகங்களையும் உதடுகளையும் மூடிக் கொள்கிறாள்!

ஏன்? காரணத்தைக் கண்டுபிடித்த கவிஞர் சொல்கிறார்:

கிம் த்வம் நிகூகஸே தூதி ஸ்தனௌ வக்த்ரம் ச பாணினா |

சவ்ரணா ஏவ ஷோபந்தே சூராதரபயோதரா: ||

ஓ! எனது தோழியே! ஏன் உனது மார்பகங்களையும் முகத்தையும் (அதாவது உதடுகளையும்) உனது கைகளால் மூடி மறைக்கிறாய்? போர்வீரர்கள், உதடுகள், மார்பகங்கள் எல்லாம் அவர்களின்/அவற்றின் காயத்தினால் பிரகாசமாக இருப்பர்/இருக்கும் (என்பதாலோ!)

மழை மலையைக் கரைக்கிறது!

அத்வா ஜரா தேஹவதாம் பர்வதானாம் ஜலம் ஜரா |

அசம்போகோ ஜரா ஸ்த்ரீணாம்  வாக்‌ஷல்யம் மனஸோ ஜரா ||

பயணம் உடலைத் தளர்த்துகிறது.

மழை மலையைக் கரைக்கிறது.

தாம்பத்ய (பாலியல்) சுகம் இல்லையெனில் பெண்கள் தளர்கிறார்கள்.

வசவு வார்த்தைகள் மனதைத் தளர வைக்கிறது.

புகழில்லாத வாழ்க்கை வீணே!

அந்த: ச ஏவ ச்ருதவர்ஜிதோ ய:

    ஷட: ச ஏவார்திநிரர்தகோ ய: |

பூத: ச ஏவாஸ்தி யஷோ ந யஸ்ய

    தர்மே ந தீர்யஸ்ய ச ஏவ அ ஷோச்ய: ||

ஆன்மீக கல்வி இல்லாதவனே குருடன்.

கெஞ்சிக் கேட்டால் தான் வேலை செய்வேன் என்பவன் கபடன்.

புகழில்லாத வாழ்க்கையோடு இருப்பவன் இறந்தவன்.

தர்மத்தில் மனதைச் செலுத்தாதவன் இரக்கப்படவேண்டியவன்.

எந்த சாஸ்திரங்கள் வீணானவைஏன்?

அன்யானி சாஸ்த்ராணி விநோதமாத்ரம்

    ப்ராப்தேஷு காலேஷு ந தைஸ்ச கிஞ்சித் |

சிகித்ஸிதஜ்யோதிஷமந்த்ரவாதா:

    பதே பதே ப்ரத்யயமாவஹந்தி ||

மற்ற சாஸ்திரங்கள் எல்லாம் பொழுதுபொக்குக்கு மட்டும் உகந்தவையே. மிக முக்கியமான தேவை உள்ள சமயங்களில் அவை உதவாது.

ஆனால் சிகித்ஸை அதாவது மருத்துவம், ஜோதிடம், மந்திர சாஸ்திரம் ஆகியவை மட்டுமே வாழ்க்கையில் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் நம்பிக்கையைத் தருபவை.

**

Part 2 – Hindu Gods, Flags, Lamps and Instruments in Colombo Museum (Post No.12600)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,600

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 2

–Subham—

Colombo Museum, Hindi Idols, Hindu Flags

Hindu Gods ,Flags, Lamps and Instruments in Colombo Museum (Post No.12599)-1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,599

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I visited Colombo Museum on 8th September, 2023 and spent there three hours. I took lot of pictures. It is good that they allow photography. My purpose of visit was to see Hindu artefacts and study the history of Hinduism in Sri Lanka . I think they have not displayed all the Gods’ statues and other Hindu symbols. But the beautiful Durga and Surya statues of Choza era welcome us. I saw all the lamps, musical instruments, bells, fans etc. But what surprised me was the flags displayed there with Hanuman, Peacock, Swan and Lion or Narasimha.

Though a brief history of Hinduism was displayed there I wish there is a full section for Ramayana Lanka and other Gods. Over 100 important Hindu temples are there in Sri Lanka. Government publication itself shows nearly 4000 Hindu temples ancient and modern.

Another interesting thing, I found in the Museum was impressions or replica of important inscriptions which are over 2000 years old.

There is  good scope for comparative studies in coins of India and Sri Lanka as well as the Brahmi inscriptions of India and Sri Lanka. The amazing thing is Brahmi script has travelled from Asoka’s Mauryan empire to Sri Lanka covering lakhs of square miles of Indian sub-continent. Later we found them all over Southeast Asia. A chronological study of such things will throw more light on History of India. I have already covered the similarities between Mahavamsa and Tamil literature in my research articles posted here.

I have given below some interesting pictures taken by me:-

–Subham–

Tags- Colombo Museum, Hindu Gods, Statues, Flags, Part 1

New Tamil Lesson 2 (Case Suffixes TO and OF)—Post No.12,598

Picture- கட்டபொம்மனுடைய கைகளில் வாள்

Sword in the hands of Kattabomman (Tamil King Kattabomman)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,598

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Yesterday’s summary

We looked at fourth case, which is called Dative case in English. Here is the summary:

You add either Ukku or kku or Vukku for English “To”

Ramanukku= Ukku added with Raman (To Raman)

Marykku = kku added with Mary (To Mary)

Umaavukku= Vukku added with Umaa; This shows all AA sounding words will take Vukku

Kankalukku = Ukku added with Kangal (eyes)

Singaththukku = aththukku added with Singa/lion; This shows , all AM sounding words drop the last dotted consonant and add Aththukku

Singha+ aththukku

Suppose Mr Guna Singham comes to your house and You tell your wife to give him coffee to drink

Here it is

Guna singhaththukku kaappi Kodu

Give coffee to Guna Singham.

You don’t say Gunasungamukku.

Xxx

In Tamil “ I “ becomes En என் or Enn and then take case suffix AKKU அக்கு.

In the same way You becomes UN or UNN and then take case suffix AKKU அக்கு.

எனக்கு Enakku= to me ,

உனக்கு Unakku= to you

அவனுக்கு Avanukku = to him ,

அவளுக்கு Avalukku = to her

அவர்களுக்கு Avarkalukku = to them

நமக்கு Namakku = to us (Here Naam/ WE becomes Nam and then added with Akku)

எங்களுக்கு Engalukku = to us (Naangal/ WE becomes Engal and then added with ukku)

உங்களுக்கு Ungalukku = to you (plural) என் + அக்கு = எனக்கு

உன் + அக்கு = உனக்கு To You

அவன் + உக்கு = அவனுக்கு (ன்+உ=னு ) to him

அவள் + உக்கு = அவளுக்கு (ள் + உ= ளு ) to her

அவர்கள் + உக்கு = அவர்களுக்கு (ள் + உ= ளு ) to them

xxxx

படத்தின் விளக்கம் picture lines

பெண்ணுடைய கையில் குடம்

Pot in the hand of woman

Now let us look at Genitive or Possessive case.

This is Sixth Case in Tamil  “of = உடைய udaiya”

In English we say Rama’s House , or House of Rama.

In Tamil we add udaiya உடைய or in இன் or athu அது

In இன் , athu அது  are not used much.

Some examples

Raamanudaiya veedu ராமனுடைய வீடு Rama’s House or House of Rama   raamanin veedu ராமனின் வீடு, raamanathu veedu ராமனது வீடு .

En veedu என் வீடு, ennudaiya veedu என்னுடைய வீடு , rnathu எனது My House

Un உன் , unnudaiya உன்னுடைய ,unathu  உனது  Your House (House= Veedu)

Nam நம் , nammudaiya நம்முடைய, Namathu நமது Our House

Engal எங்கள், Engaludaiya எங்களுடைய  Emathu எமது Our House

Ungal உங்கள் , Ungaludaiya உங்களுடைய  Umathu உமது Your House (Plural or respectful)

Veetin Kathavu வீட்டின் கதவு Door of the House

Manithanin Uyaram மனிதனின் உயரம் (Man’s Height)

Yaanaiyin Uyaram யானையின் உயரம் (Elephant’s House)

Paambin Visham பாம்பின் விஷம் (Poison of Snake or  Snake’s poison)

Singaththinudaiya Parkal சிங்கத்துடைய பற்கள் (Lion’s Teeth or Teeth of Lion)

Singaththin Parkal சிங்கத்தின்  பற்கள் (Lion’s Teeth or Teeth of Lion)

Note: Am sounded words take Aththin or Aththudaiya)

Raamanathu ராமனது Rama’s , veettathu வீட்டது of House , naattinathu நாட்டினது of the country are not common

நாடு = நாட்  ட்

வீடு = வீட் ட்

oblique  and then doubling

என் = என் ன்

நாட்டினது, நாட்டின், நாட்டுடைய

வீட்டினது , வீட்டின், வீட்டுடைய

என் ன் + உடைய = என்னுடைய

If there is no doubling of N , it will be எனுடைய which is wrong.

What is doubling?

N = ன் is used twice

E.g. உன்  ன் = doubling

Word Meanings

வீடுveedu= house;  யானை yaanai= elephant; பாம்பு paambu= snake, serpent; சிங்கம் Singham/(Simha in Sanskrit)=lion;

பல்Pal= tooth, பற்கள் Parkal= Teeth,  மனிதன் Manithan= man விஷம்visham= poison, நாடுnaadu = country; கதவுkathavu= door

To be continued…………………….

Tags- Possessive, Genitive, Of, Udaiya

நாகபூஷணி அம்பாள் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……..Part 30 (Post No.12,597)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,597

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 30

ஜூன் 19ம் தேதி விழா துவங்கும் முன் அம்மன் வீதியில் 3 பாம்புகள் வந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

61.நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்

உலகில் பாம்பை வழிபடாத பழைய கலாசாரம் ஏதுமில்லை. வேதத்தில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் சிந்து சமவெளியில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். . கிரேக்க நாட்டில் மைசீனிய மினோவன் (Mycenean, Minoan Civilizations)  நாகரீகத்தில் காண்கிறோம். எகிப்து நாட்டிலோ மன்னர்களே சிவ பெருமான் தலையில் நாகம் இருப்பதுபோல மகுடம் வைத்திருப்பதையும் பார்க்கலாம். ஆயினும் இந்தியாவில் உள்ளது போல பாம்பு வழிபாட்டை, நாகர் வழிப்பாட்டினை வேறு எங்கும் காணமுடியாது. இன்றும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் நாக பஞ்சமி விழாக்களில் உயிருள்ள பாம்புகளையே பெண்கள் பூஜிப்பதைக் காணலாம். இந்தியாவில் நாகர்கோவில் முதல் இமயமலை வரை நாகர் பெயரில் தலங்களும் கோவில்களும் இருப்பிடத்தை எல்லோரும் அறிவார்கள்.

SNAKE, SERPENT

ஆங்கிலத்தில் பாம்புக்கு உள்ள இரண்டு பெயர்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்பதை மொழி இயல் வல்லுநர்கள் அறிவார்கள் . ஸ்னேக் SNAKE  என்பது நாகத்திலிருந்து வந்த சொல் ஸ் +நாக = ஸ் நேக ; மற்றும் ஒரு சொல் SERPENT சர்பென்ட்; இது ஸர்ப்ப என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே .

SNAKES NEAR THE TEMPLE

இலங்கைக்கு தனிச் சிறப்பு என்னெவென்றால் நாட்டின் பெயரே நாகத் தீவு; நாக நாடு. ஆதி குடிகள் நாகர்கள்  என்று மஹாவம்சமும் மணி மேகலை  என்னும் தமிழ் மொழிக் காப்பியமும் காட்டுகின்றன ; அதிலும் சிறப்புடைய இடம் நயினாத்தீவு என்னும் தீவாகும். இதுவே மணிமேகலை குறிப்பிடும் நாகத்தீவுநாக நாடு, மணி பல்லவம் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்து.

சங்கத் தமிழ் நூல்களிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் 20 புலவர்களின் பெயர்கள் நாக என்று முடிவடைகிறது இவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருதன் இளநாகன் . இது போன்ற பெயர்கள் மகா வம்சத்திலும் உள்ளது. குப்தர்  கால  கல்வெட்டுகளும் நாகர் பெயர்களைக் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் தினசரி சந்தியா வந்தனத்திலும் பாம்பினை வழிபடுகிறார்கள் (நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில்)..

இந்து தெய்வங்களில் பாம்பினைப் பயன்படுத்தாத தெய்வங்களே இல்லை. இதைப் பார்த்து பெளத்தர்களும் சமணர்களும் கூட தங்கள் தலைவர்களுக்கு  பாம்பினைச் சூட்டியுள்ளனர். இந்துக்கள் பாம்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை மேலை நாட்டு வெள்ளைக்காரர்கள் புஸ்தகத்தில் எழுதிய பின்னர் தான் நம்மவர்களுக்கே தெரிந்தது. நாக பஞ்சமி விழாக்களை படம் எடுத்தது வெளிநாட்டில் காட்டியோர் இதைச் சொல்லி எல்லோரும் பாம்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். பாம்புதான் நம்முடைய வயல்வெளிகளின் காவலர்கள். பாம்பின் எண்ணிக்கை குறைந்தால் அறுவடை குறைந்து விடும்; வயல் வெளிகளில்  தானியங்களை அழி க்கும் எலிகளின், பூச்சிகளின் எண்ணிக்கை பல கோடி ஆகும்; எலிகளின் முதல் எதிரி பாம்பு; மனிதனின் முதல் நண்பன் பாம்பு. இதனால், பெண்கள் பாம்பு இருக்கும் புற்றுகளை வணங்கி  பால் வார்க்கிறார்கள் ( (மதுரையில் பேச்சி அம்மன் கோவிலில் புற்றுக்குப் பால் விடுவதை நான் பள்ளிக்கூட நாட்களில் வேடிக்கை பார்ப்பேன்)

சில அரைவேக்காட்டுப் பேர்வழிகள் நாகர்கள் வழிபாடு தமிழ் நாட்டில் மட்டும் இருப்பதாகக் கதைப்பார்கள். அதுகளுக்கு மஹாபாரதத்தில் ரிக்வேதத்திலும் குப்தர் கல்வெட்டிலும் நாகர்கள் பெயர்கள் வருவது தெரியாது. பரமபத சோபான படத்தில் நவ நாகர்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம். இந்துக்கள் கண்டுபிடித்த இந்த BOARD GAME போர்ட் கேம் ஐ இன்று உலகம் முழுதும் SNAKES AND LADDER ஸ்னேக்ஸ் அண்ட் லேடர் என்று விளையாடுகிறார்கள். தென் அமெரிக்க முழுதும் பரவிய மாயா நாகரீகமே Mayan Civilization அர்ஜுனன் காலத்தில் அங்கு சென்ற நாகர்களின் நாகரீகமே!  இமய மலையில் நிறைய நாகர் தலங்கள் உள்ளன ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஷிர்க்கான் நாகா கோவில் உள்ளது (Temple of Shirgan Naaga., Himachal Pradesh ). காஷ்மீரில் அனந்த நாக , வெரி நாக (Anant nag, Veri nag)  தலங்கள் இருப்பதும் இந்த அசடுகளுக்குத் தெரியாது

எவ்வளவுதான் சொன்னாலும் சிவனுக்கும் அம்பாளுக்கும் மிக நெருக்கமானது பாம்பு. இதை நாகநாதன்நாகேஸ்வரன், நாகாம்பாள், நாகேஸ்வரி  ,நாக பூஷணி என்ற பெயர்களிலிருந்து அறியலாம்.

xxx

இப்பொழுது இலங்கையின் வடபகுதியில் நயினாத் தீவில் இடம்பெற்றுள்ள நாகபூஷணி அம்பாள் கோவிலின் சிறப்புகளைக் காணலாம் .

நாக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பாம்பு என்று பொருள்; பூஷண BHUSHANA  என்ற ஸம்ஸ்ருதச் சொல்லுக்கு ஆபரணம், அலங்காரம் என்று பொருள்  ஐந்து நாகத்தை குடையாக  அணிந்தவள் நாகபூஷணி Bhūṣaṇa (भूषण) refers to “ornament (for the body)” BHUSHANI

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறுகிறது நயினா தீவு.

சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலனின் பெற்றோர்களான மாநாய்க்கன் , மாசாத்தன் பெயர்களை இந்தக் கோவிலின் வரலாற்றில் காணலாம். அவர்கள் கண்ட ஒரு அற்புதக் காட்சியே கோவில் உருவாகக் காரணம் ஆனது . ஒரு பாம்பு,  பூவினை வாயில் ஏந்தி இந்தத் தீவினை நோக்கி நீந்தி வந்தது. அதைத் துரத்திக் கொண்டு ஒரு கருடன் வந்தது. உடனே நாகம், கடல் நடுவில் இருக்கும் இரண்டு கம்பம் போன்ற பாறைகளுக்கு இடையே தஞ்சம்  புகுந்தது .  அப்போது மாநாயக்கன் என்னும் வணிகன் அதை விரட்டவே பாம்பு தனது பயணத்தைக் தொடர்ந்து  நாகபூஷணிக்கு பூவை சமர்ப்பித்தது. இதைக் கண்ட வணிகர் இங்கு கோவிலை எழுப்பினார்.

இந்திரன் சாபம் தீரவும் அர்ஜுனன் சாபம் தீரவும் இங்கு வந்து அம்பாளை வழிபட்டதாகவும் கர்ணன் பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன.

இந்தியா முழுதும் சக்தி பீடங்கள் இருப்பதையும் அவை எல்லாம் தக்ஷ யாகத்தினை சிவன் அழித்த  பின்னர், இறந்த பார்வதியின் உடலை சிவன் கொண்டுவந்தபோது ஒவ்வொரு உறுப்பும் விழுந்த இடமெல்லாம் அருள் மழை பொழியும் தலங்களாக ,மாறின என்றும் அறிவோம். அவ்வாறு சக்தி தேவியின் உடல் உறுப்புகளில் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்றும் பிற்கால சம்ஸ்க்ருத நூல்கள் பகரும்.

எது எப்படியாகிலும் நாக பூஷணியின் அருளுக்காக இங்கு பக்தி சிரத்தையோடு வரும் இந்துக்கள், சிங்கள பெளத்தர்கள் எண்ணிக்கைக்கு குறைவில்லை..

பிற்காலத்தில் வீராசாமி செட்டியார் என்பவர் ஏழு பிரகாரங்கள் சூழ அம்பாளை நிறுத்தி கோவில் கட்டினார் என்று தல வரலாறு செப்புகிறது; செட்டியார் கட்டிய கோவிலை 1620-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் உடைத்தபோதும் அம்பாள் விக்கிரகத்தை மறைத்து வைத்திருந்தனர் 1882-ம் ஆண்டில் அம்பாள் விக்ரகம் நாகபூஷணி என்ற பெயரில் பிரதிஷ்டை ஆனது. ஒவ்வொரு கட்டிடமும், சந்நிதிதியும் உருவாக பல பக்தர்கள் பொருளுதவி செய்தனர் .

1935 ஆம் ஆண்டில் ராஜ கோபுரம் உயர்ந்தது . 1949ம் ஆண்டில் கோவில் நிர்வாகம், தர்மகர்த்தா போர்டின்/ சபையின் கீழ் வந்தது.

அம்பாளுக்காக அழகிய தேர் 1957ல் கட்டப்பட்டது

கிழக்கு நோக்கிய இந்தக்கோவில், ஆர்ப்பரிக்கும் அலை கடலினை நோக்கி அமைத்திருக்கிறது இதனால் படகிலோ, கப்பலிலோ வரும்பக்தர்கள்  தொலைலிருந்தே  இரு  கரங்களையும்  உயர்த்தி வணங்குகிறார்கள் .

கோபுர தரிசனம்  கோடி புண்யம்ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது தமிழ்ச் சான்றோர் செப்பிய நன் மொழிகள் அல்லவா!!

கோவிலின் கருவறையில் 5 தலை நாகத்தின் கீழ் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். பிரகாத்தில் நமக்கு அருள்புரிய சப்த மாதர்களும் துர்கா தேவியும் காத்திருக்கின்றனர்.

உள் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரிய சந்திரர், நவ கிரக சந்நிதிகள் இருக்கின்றன.

தினசரி பூஜைகளோடு ஆண்டுதோறும் நடக்கும் விழாவுக்கும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். விழாக்களுக்கு வருவோர் தங்குவதற்கு வசதிகளையும் அன்னதானத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நைனாத் தீவின் பெயரைச் சொன்னவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது நைனாத் தீவு சாமியார் ஆவார் . முத்துக் குமார சாமி என்ற பெயரில் பிறந்த அவர், பெரிய ஞானியாகி, 1949 ஆம் ஆண்டில் சமாதி ஆனார். தீவுக்கு வருவோர் அந்த சமாதியையும் கும்பிட்டுச் செல்லுவது வழக்கம் .

xxx

இந்த அம்மன் மீது பல புலவர்கள் பாமாலை சூடியுள்ளனர் .

கோவில் பற்றிய நூல்கள்

நயினை நாகேஸ்வரி , குல சபாநாதன், 1962

நயினை நாகபூசணி , என்.கே. சண்முக நாத பிள்ளை, 1981

To be continued………………………………………………

Tags-  நயினை , நாகபூசணி , அம்பாள், நைனா தீவு, நாகத் தீவு,  நாக நாடு, நாகர்கள்  , மணி மேகலை 

ஐந்திணை ஐம்பது : கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,596

Date uploaded in London –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஐந்திணை ஐம்பது

(மாறன் பொறையனார் இயற்றியது)

காலம் – கி.பி. நான்காம் நூற்றாண்டு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

ச.நாகராஜன்

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 27

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் பாயிரம் 1நூல் 50,

 1. பண்புள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய (பாயிரம்)

 2. ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் தெரியாதவர் (பாயிரம்)

 3. அணிநிற மஞ்ஞை அகல இரங்கி (பாடல் எண் 2)

  4.  மணி நிற மாமலை மேல் (2)

  5.  நமர் சென்ற நாட்டுள் (3)

  6.  நல். லார் மனம் கவரத் தோன்றி (4)

  7. யாரும் இல் நெஞ்னினேம் ஆகி (6)

  8. வானம் பொழியவும் வாரார் கொல் (8)

  9.  நூல் நின்ற பாக! (10)

10.  தேன் நின்ற கானத்து எழில் நோக்கி (10)

11.  காவல் இயற்கை ஒழிந்தேம் (12)

 12. பொன் விளையும் பாக்கம் எம் இடம் (12_

 13. மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட! (17)

 14. என்னாவாள் என்னும் என் நெஞ்சு (19)

 15. வியலூரன் வாய்மொழியைத் தேற எமக்குரைப்பாய் நீ (21)

16. அறிவு அயர்ந்து (22)

17. அறிவது அறியும் அறிவினார் கேண்மை (23)

18.  அழல் அவிழ் தாமரை ஆய் வயலூரன் (25)

 19.  நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல் (27)

 20. வெண்மரல் போல திரிந்து (27)

 21. ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு (28)

 22.  வல்லென்று என் நெஞ்சம் (28)

 28.  ஒல்லேன் ஒலி புனல் (29)

 29. தென்றல் வளியெறியின் மெய்யிற்கு இனிதாம் (30)

 30.  ஊடி இருப்பினும் ஊரன் நறுமேனி கூடால் இனிதாம் எமக்கு (30)

31. உதிரம் துவரிய வேங்கை உகிர் போல் (31)

 32. இன்பம் பயந்த இளவேனில் (31)

33. பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளி (33)

34. பால் போலும் ஆய்ந்த மொழியினாள் (33)

35. காதலன் பின் போதல் வல்லவோ மாதர் நடை (37)

36. காதலர் உள்ளம் படர்ந்த நெறி (38)

37. ஆழியால் காணோமா யாம் (43)

38. ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம் (46)

39. எக்கர் இடுமணல் மேல் ஓதம் தரவந்த நித்திலம்

   நின்றிமைக்கும் (48)

40. புடையெலாம் தெய்வம் கமழும் தெளிகடல் தண் சேர்ப்பன் (49)

41. மணி அரவம் என்றெழுந்து போந்தேன் (50)

42. உள்ளுருகு நெஞ்சினேன் ஆய் (50)

***

Rare Pictures from Sri Lanka- Part 2 (Post 12,595)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,595

Date uploaded in London – –  –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

 In the following pictures we see from Tea Plucking to Tea boxing and exporting. These are from 100 year old book by Henry W Cave

xxxxx

Tags — Rare pictures, Sri Lanka, Part 2, Tea plucking, Henry W Cave

New புது Tamil தமிழ்  Lessons பாடங்கள்  – பகுதி 1-Part 1 (Post No.12,594)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,594

Date uploaded in London – –  –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

E mail to me

A J <

To:Santhanam Swaminathan

Sun, Oct 15 at 7:15 PM

Namaskāram sir, please start a series on verbal roots in Tamizh and the upasarga and pratyaya that exist in Tamizh. Also explaining the words in Tamizh formed by those verbal roots. Please do it sir. Unfortunately very few books exist which deal with those topics and all of them are in Tamizh which makes it very difficult for people who cannot read the Tamizh script but are interested in learning them. We very much miss your sessions you took in October 2020. The first thing I checked in the mornings of 2020 was your page dealing with Tamizh words. Please start this. 

🙏🙏🙏🙏🙏

xxxxx

In the last session we saw over 40 lessons. Now I have ben receiving requests to start the lessons again. The reason being no one teaches in four ways. They treat everyone as a Tamil speaking family member and leave many things without explaining.

If some one teaches “I am going home” and translates it as

Naan நான் (I) Veettukku வீட்டுக்கு  (House to) Poykkondu போய்க்கொண்டு Irukkiren இருக்கிறேன் (going) then they have to explain it.

1.Sentence construction is different from English sentence

2. Home is translated as “to home”; strictly speaking “Home to” is there in Tamil. The case suffix “To”  comes after house or home.

3. Am is missing in Tamil, because the present tense end part shows it is First Person Present Tense “Kiren” in Tamil

4. They miss one more point; As a teacher I will explain Going is a compound verb with Kondu= ing.

All these things should be explained to a foreign student.

Reading = Padiththuk Kondu படித்துக் கொண்டு

Writing= Ezuthik Kondu  எழுதிக் கொண்டு

Coming= Vanthu Kondu வந்து கொண்டு

Eating = Sappittuk Kondu சாப்பிட்டுக் கொண்டு

So “ING= KONDU”. கொண்டு PRESENTCONTINUOUS

Xxx

Now let us study case suffix

Tamils and Sanskrit speakers have 8 same case suffixes in the same order. That shows both languages came from the same source. (Usage may be slightly different; but let us not discuss Sanskrit usage here)

First case is same (nominal)

Fourth case is called Dative case

If you want to say To Rama in Tamil you have to say Rama To

To= UKKU உ க்கு

Rama “nukku” = To Rama (Raman + ukku) ராமன்+ உக்கு = ராமனுக்கு  (ன் +உ =னு )

Krishnana “nukku “= To Krishna (Krishnan + ukku) கிருஷ்ணனுக்கு

Seethaa “vukku “= To Sita (sita +v+ ukku) சீதா+வ் +உக்கு = சீதாவுக்கு

Kazuthai “kku” = To Donkey (Kazuthai + kku) கழுதை +க்கு = கழு தை+க்கு

Santhai “kku” = to Market(Santhai+kku) சந்தை+ க்கு

Singaththukku = To Lion (Singha (m) +ththukku சிங்கம் – சிங்கத்துக்கு

Kangalukku = To the eyes (Kangal + ukku)

கண்கள் +உக்கு = கண்களுக்கு

Now I will explain one by one.

First I said in Tamil “Ukku = to” உக்கு comes after Rama, Krishna, Sita, Donkey, Lion.

Second thing is if Tamil has a dotted consonant at the end—Rama+n, Krishna+n, Kanga+l, then it joins smoothly with N or L.

The result is Ramanukku, Krishnanukku, Kangalukku. ராமனுக்கு, கிருஷ்ணனுக்கு,  கண்களுக்கு

But with AA ஆ sounding words the rule is different;

You cant say Seethaa+ kku, (To Sita) சீதாக்கு X wrong

You cant say Kamala+kku கமலாக்கு X wrong

You have to insert V and say Vukku. வுக்கு correct

The result is Seethaa+V+ukku சீதாவுக்கு correct

To Kamala  — Kamalaa+V+ ukku கமலாவுக்கு  correct

Xxx

Now if the noun ends in I , E , sound, then you join “Ikku”க்கு

Kazuthai “kku” = To Donkey (Kazuthai + kku) கழுதை + க்கு =  கழுதைக்கு

Santhai “kku” = to Market(Santhai+kku) சந்தை+ க்கு =சந்தைக்கு

Xxx

All foreign students will write

Singamukku (to lion) சிங்கமுக்கு X Wrong

Padamukku (to picture)படமுக்கு X Wrong

But the Tamil learning  students invariably write Singamukku /Wrong

Padamukku, that is wrong.

All ‘AM’ அம் ending words such as Padam(Picture), Singham (lion) will be changed as

அத்து+க்கு

பட+த்து+க்கு =படத்துக்கு to the picture

சிங்க+த்து+க்கு = சிங்கத்துக்கு to the lion

அம்  = குடம் pot, இடம் place or seat மடம்Mutt , விமானம் Airplane

குடத்துக்கு Kudaththukku – to the  pot

இடத்துக்கு idaththukku – to the place, to the seat

மடத்துக்கு Madaththukku – to the Mutt/AShram

விமானத்துக்கு Vimaanaththukku – to the plane

xxx

We will look at more case suffixes later

Case வேற்றுமை suffixes உருபுகள் :

To (Raman/John/Mary/India) ராமனுக்கு

Of (Raman/Kannan/Mary/John) ராமனுடைய

From(London/Paris/Madras/Colombo) ராமனிடமிருந்து

In/At (London/Raman/John/Newyork) ராமனிடத்தில்

With (Raman/John/Mary/Krishna) ராமனுடன் , ராமனோடு

Me/Him/Her(accusative) ராமனை என்னை, அவனை, அவளை

To be continued……

 tags- New Tamil   Lessons ,Part 1 ,புது தமிழ் பாடங்கள்  ,பகுதி 1

தெஹிவளை விஷ்ணு: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற- 29 (Post.12,593)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,593

Date uploaded in London – –  –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Tags– இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 29

59.தெஹிவளை விஷ்ணு ஆலயம், கொழும்பு

கொழும்பு தெஹிவளை பகுதியில் உள்ள முக்கிய இந்து சமயக் கோவில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா மஹாவிஷ்ணு மூர்த்தி கோவில் ஆகும். இந்தக் கோவிலின் பின்னணியில் சுவையான வரலாறு ஒன்று உள்ளது.

டச்சுக்கார (HOLLAND)ஆட்சியின்போது கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வைணவ பக்தருக்கு கனவு ஒன்று வந்தது  அவர் அப்பணியில் சூப்பர்வைசர் ஆக இருந்தவர். விஷ்ணுவைக் கும்பிடும் இடத்தைத் தேடும்படி அவர்க்கு கனவில் கட்டளை பிறந்தது. அவரும் அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் ஏதேனும் வைணவ சின்னங்கள் இருக்குமோ என்று தேடிப்பார்த்தார் . மொத்தத்தில் ஏமாற்றமே மிஞ்சியது; மீண்டும் கனவு வந்தது . அதே உத்தரவு. சரி, இந்த முறை வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் விக்ரமாதித்த மன்னன் போல முயற்சியைத் தொடர்ந்தார். நல்லவேளை இந்த முறை வேதாளம் முருங்கை மரத்தில் ஏறவில்லை. ஒரு அற்புதக் காட்சியைக் கண்டார். ஒரு பசு மாடு அவர்க்கு முன்னர் நடந்து சென்று வழிகாட்டியது திடீரென்று அது ஒரு பாம்புப் புற்றின் மீது நின்று பாலைச் சொரிந்தது . அதிசயித்துப்போன அவர் அந்த இடத்தில் தேடியபோது  ஒரு விஷ்ணு கோவிலின் இடிபாடுகளைக் கண்டார்..

அந்த இடத்தில் விஷ்ணுவுக்குப் பிரியமான துளசிச் செடிகளும் செழித்து வளர்ந்தன ; அவர் கோவில் கட்ட முயன்றபோது பலரும் கைகொடுத்து உதவினார்கள் அங்கு எழுந்ததுதான் தெஹிவளை நெடுமால் விஷ்ணு ஆலயம். அங்கே விஷ்ணுவை வழிபடத்துவங்கினர். பிள்ளை வரம் வேண்டிப் பலரும் வலம் வந்தனர்

அந்தக் காலத்தில் ஆறுமுகம் என்பவருக்கு ஒரு மகன் பிறந்தான். நீண்டகாலம் இறைவனை வேண்டிப் பெற்ற மகனை இறைவன் பணியில் ஈடுபடுத்த ஆசை கொண்டார். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல ஒரு குருவும் வந்து சேர்ந்தார். ஆறுமுகம் மகனுக்கு அவர் தீரன் என்று நாமகரணம் செய்தார்.. அவனும் காலப்போக்கில் கடவுள் நூல்கள்  அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவுடன் தீரன் சுவாமி என்று அழைக்கப்பட்டார். தென் இந்தியாவுக்குச் சென்று பல இடங்களில் யாத்திரை செய்யும்போது ஒரு வேல் கிடைத்தது. அதை தெஹிவலைக்குக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். வேலை வணங்குவதே நமக்கு வேலை என்று மகா கவி பாரதியார் பாடியது போல வேலை வணங்கினார்.

அந்த வேலை இன்றும் காணலாம். அதை ரத்தத்தில் ஏற்றி கொழும்பு நகர் வரை பவனியும் வந் தார். .

இதற்குப்பின்னர் 1971ம் ஆண்டில் புத்துணர்ச்சி பிறந்தது நிறைய சந்நிதிகள் எழுந்தன. 1975ம் ஆண்டில் கண்ணன் பிறந்த கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது  மோ கன்  என்ற வணிகர் ஒருவர் கோவில் நிர்வாகிகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அறிமுகப் படுத்தினார். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருப்பதி- திருமலை தேவஸ்தானமும் விக்ரகங்களை அனுப்பி உதவினர்  1983 ஐனவரி முதல் தேதியில் வேங்கடேச  பெருமாள் -பத்மாவதி தாயார் கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ தேவி , பூ தேவி  சகிதம் நின்று காட்சி தருகிறார் .

தென்னந்தோப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தை ஈழத்துத் திருப்பதி என்று பக்தர்கள் போற்றினார்கள். ருக்மிணி சத்யபாமா உடனுறை கிருஷ்ணர் , விஷ்ணு பாதம், பள்ளி கொண்ட பெருமாள், , சனைச்சரன் , நாக தம்பிரான் , பிள்ளையார், வேல் சந்நிதிகள் பக்தர் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது .

மேல் விவரம் வேண்டுவோர் 1979ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் பெறலாம் .

Xxxx

60. இலங்கையில் அழிந்துபோன விஷ்ணு கோவில்கள்

சோழர்கள்  இலங்கையை ஆண்ட காலத்தில் (1017-1070) இந்துக்களுக்காக பல சிவன் கோவில்களையும், விஷ்ணு கோவில்களையும் கட்டினார்கள். அவர்கள் பொலன்னறுவையில், புலஸ்திபுரம் என்ற இடத்திலிருந்து ஆட்சி புரிந்தனர். அந்த ஊருக்கு ஜனநாத மங்கலம் என்ற புதுப்பெயரையும் சூட்டினார்கள். அங்கே தோண்டி எடுக்கப்பட்ட விஷ்ணு சிலை தொல்பொருட்  துறையினரின் பாதுகாப்பில் உள்ளது .

1901ம் ஆண்டிலிருந்து தொல்பொருட் துறை கமிஷனர் வெளியிட்டு வரும் ஆண்டு அறிக்கைகளில் பல அரிய விஷயங்கள் கிடைக்கின்றன. ஆறு விஷ்ணு ஆலயங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்திருக்கின்றன.

வடக்கு நுழைவாயிலில் இருந்த கோவில்

ஜனநாதபுரத்தின் வடக்கு வாசலில் இடிந்த சிவன் கோவில்,  விநாயகர் கோவில்கள் உள்ளன . 1886-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு சிலை இடிந்த கோவிலில் பீடத்தில் நிற்கிறது. அர்த்த மண்டபம், மஹா மண்டபம் முதியன கருங்கற்களால்  கட்டப்பட்டிருந்ததும் தெரிகிறது 1907ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணுவின் சிலை மூன்றேகால் அடி உயரம் உடையது.

அதற்கு முன்னர் 1887ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்சசியில் விநாயகர், சுப்பிரமணியர், ஈஸ்வரன் முதலிய மூர்த்திகள் கிடைத்தன.

1902- ஆம் ஆண்டில் நத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சிவ தேவாலய எண் -4 க்கு எதிரே கண்டுபிடிக்கப்பட்ட 3 அடி 9 அங்குல உயர விஷ்ணு சிலை பற்றிய தகவல் கிடைக்கிறது. அங்கும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் இருந்தன.

மிகப்பெரிய விஷ்ணு ஆலயத்தின் தகவல்கள் 1913-ம் ஆண்டு அறிக்கையில் கிடைக்கின்றன.  இந்த ஆய்வு 1908ம் ஆண்டில் நடந்தது இதுதான் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம்.. மண்டபங்களின் அஸ்திவாரத்தை அளவு எடுத்தபொழுது இது தெரிய வந்தது.

சிவ தேவாலய- 6 என்று Report ரிப்போர்ட் கூறும் இடத்தில் விஷ்ணுவுக்கும் கோவில் இருந்தது. இங்கு கிடத்த விஷ்ணு ஸ்ரீ தேவி , பூதேவி ஆகியோருடன் நிற்கிறார். ஏனைய இடங்களில் கிடைத்த விக்ரகங்களில் அவர் மட்டும் சங்கு சக்கரத்துடன் நிற்கிறார் .

Picture from Dehivala Vishnu Temple

இலங்கையில் சிவன் கோவில்கள் பற்றி நிறைய புஸ்தகங்கள் பேசுகின்றன. ஆனால் பெருமாள் கோவில்கள் பற்றி அதிக விவரம் கிடைப்பதில்லை.

தொடரும்……………………………

Tags- தெஹிவளை,  நெடுமால் , விஷ்ணு ஆலயம், கொழும்பு, இலங்கை, 108 ,  Part 29 , வேங்கடேசப் பெருமாள்

வியாஸர் யார்? (Post No.12,592)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,592

Date uploaded in London –  16 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

வியாஸர் யார்? 

ச.நாகராஜன்

வியாஸரே பிரம்மாவிஷ்ணுசிவன்!

அசதுர்வதனோ ப்ரஹ்மா த்விபாஹுரபரோ ஹரி: |

அபாலலோசன: சம்புர் பகவான் பாதராயண: ||

புனிதரான வியாஸ மஹரிஷி பிரம்மாவே தான் ஆனால் அவருக்கு நான்கு முகங்கள் இல்லை.

அவர் விஷ்ணுவே தான். ஆனால் அவருக்கு இரண்டு கைகள் தான் உண்டு.

அவர் சிவனே தான். ஆனால் அவருக்கு மூன்றாவது கண் கிடையாது.

ஆக வியாஸர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று இப்படி போற்றப்படுகிறார்.

நிரந்தரமான உடலைக் கொண்டவர் யார்?

அசலா கமலா கஸ்ய கஸ்ய மித்ரம் மஹீபதி: |

சரீரம் ச ஸ்திரம் கஸ்ய கஸ்ய வஷ்யா வராங்கனா ||

எவருடைய செழிப்பான வளம் நிரந்தரமானது?

யாருடைய நண்பன் அரசன்?

எவருடைய உடல் நிரந்தரமானது?

வேசியின் காதலைக் கொண்டவர் யார்?

விடை இது தான்; செல்வம் வரும் போகும். எவருக்கும் அது நிரந்தரமல்ல!

அரசனுடன் பழகுபவர் குளிர்காலத்தில் நெருப்பில் குளிர் காய்பவர் போல விலகாமலும் கிட்ட நெருங்காமலும் இருக்க வேண்டும்.

அரசனுக்கு யார் தான் நண்பர்? ஒருவருமில்லை!

யாருக்கு உடல் நிரந்தரம். பிறந்தவர் இறக்க வேண்டும். இது நியதி; விதி.

காசுக்கு உடலை விற்கும் வேசி காதலிப்பது போலப் பேசினாலும் அவளது காதலைக் கொண்டவர் யார்? யாருமில்லை!

எட்டு சித்திகள்

அணிமா மஹிமா சைவ லகிமா கரிமா ததா |

ப்ராப்தி: ப்ராகாம்யமீஷித்வம் வசிஷ்த்வம் சாஷ்ட சித்தய: ||

யோகிகள் அடையும் சித்திகள் எட்டு.

அவையானவன:

அணிமா – அணுவைப் போல மிகச் சிறியதாக ஆதல்

மஹிமா – மலையை விடப் பெரியதாக ஆதல்

லகிமா – காற்றைப் போல லேசாக ஆதல்

கரிமா – மலை, வாயு போன்ற எதாலும் அசைக்க முடியாதபடி கனமாக ஆதல்

ப்ராப்தி – அனைத்தையும் தன்வயப்படுத்தல், மனதில் நினைத்த அனைத்தையும் அடைதல், பெறுதல்

ப்ராகாம்யம் – தனது உடலை விட்டு இன்னொரு உடலில் புகுதல் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்

ஈசத்வம் – பிரம்மா போன்ற தேவர்களிடத்திலும் கூட தனது ஆணையைச் செலுத்தி அவர்களைக் கட்டுப்படுத்தல்

வசித்வம் – அனைத்தையும் வசப்படுத்தல்

இவையே அஷ்டமாசித்திகள் – எட்டு சித்திகள் எனப்படும்!

படைத்தவனின் மூன்று மாபெரும் தவறுகள்!

நம்மைப் படைத்தவன் மூன்று மாபெரும் தவறுகளைச் செய்து விட்டான்.

அவை என்னென்ன?

இந்த ஸ்லோகம் சொல்கிறது:

அத்யல்பசம்பத: சந்த: புமானிஷ்டஸ்ச துர்குலே |

லக்ஷ்மீரனபிஜாதஸ்ய வேதஸ: ஸ்வலிதத்ரயம் ||

படைத்தவனின் மூன்று தவறுகள்:-

1) அருமையான மனிதர்கள் செல்வமின்றி ஏழ்மையில் இருப்பது.

2) தாழ்ந்தகுலத்தில் பிறந்தாலும் அருமையான மனிதர்களாய் இருப்பது.

3) மோசமான கெட்டவர்களிடம் ஏராளமான பணம் இருப்பது.

தனது இடத்தில் இருப்பதே பலம்!

ஒருவன் தனது சொந்த இடத்தில், சொந்த நாட்டில் இருப்பதே அவனுக்கு பலம். இல்லை என்றால் என்ன ஆகும்?

இதோ ஸ்லோகத்தைப் பார்ப்போம்:

அதேஷஸ்யோ ஹி ரிபுணா ஸ்வல்பகேநாபி ஹன்யதே |

ப்ராஹோல்ப்யானபி ஜலே கஜேந்த்ரமபி கர்ஷதி ||

ஒருவன் தனது சொந்த இடத்தில் இல்லையெனில் சிறிய எதிரியால் கூட வீழ்த்தப்படுவான். முதலை ஒன்று மிகச் சிறியதாக இருந்தாலும் கூட ஜலத்தில் இருக்கும் போது யானைகளின் அரசனான கஜேந்திரனைக் கூட இழுத்துச் சென்று விடும்.

அஞ்ஞானமே வாழ்க்கையில் வியாதி

அஞ்ஞானமிஹ நிதானம் ப்ராப்யூபம் ஜனனமேவ பவரோகே |

பரிபாக: சம்சரணம் பைஷஜ்யம் நைஷ்டிகீ சாந்தி : ||

உலக வாழ்க்கையின் வியாதிக்கான முதல் காரணம் அஞ்ஞானமே.

அதனுடைய முதல் அறிகுறி இந்த உலகில் பிறப்பது – ஜனனம் தான்!

உலகியல் வாழ்க்கை அதன் அபிவிருத்தியாகும்.

இதற்கான பரிகாரம் அல்லது தீர்வு நிரந்தரமான சாந்தி தான்!

***